என் மலர்
நீங்கள் தேடியது "பறிமுதல்"
- பீடி இலைகள் இலங்கைக்கு படகுமூலம் கடத்தப்பட இருப்பதாக கடலோர பாதுகாப்பு குழுமம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- கடற்கரைபகுதி வழியாக சந்தேகத்திற்கு இடமாக வந்த கண்டெய்னர் வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் கடற்கரை வழியாக பீடி இலை, மஞ்சள் உள்ளிட்ட கோடிக்கணக்கான மதிப்பிலான ஏராளமான பொருட்கள் படகுமூலம் இலங்கைக்கு கடத்தப்படும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதில் ஈடுபடக் கூடியவர்களை கைது செயயப்படுவதும், பொருட்கள் மற்றும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது, இதனை தடுக்க காவல்துறையும் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது, இந்த நிலையில் குலசேகரப்பட்டினம் கடற்கரை காவல் நிலைய எல்கைக்கு உட்பட்ட பகுதி வழியாக பீடி இலைகள் இலங்கைக்கு படகுமூலம் கடத்தப்பட இருப்பதாக கடலோர பாதுகாப்பு குழுமம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது,
இதனைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து மேற்பார்வையில், சப்-இன்ஸ்பெக்டர் ரவிசங்கர், மற்றும் குலசேகரப்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையிலான போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது மனப்பாடு வடக்கு கடற்கரைபகுதி வழியாக சந்தேகத்திற்கு இடமாக வந்த கண்டெய்னர் வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அதில் இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டு செல்லப்பட்ட 35 கிலோ எடை கொண்ட பீடி இலை பண்டல்கள் 85 மூட்டைகளில் இருந்தது தெரிய வந்தது இதன் சர்வதேச மதிப்பு ரூ.1 கோடி என்று கூறப்படுகிறது. அதனை வாகனத்துடன் பறிமுதல் செய்த போலீசார் தப்பி ஓடியவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடற்கரையில் கழிவு பிளாஸ்டிக்கை சேகரிக்கும் போது கோகைன் கிடைத்ததாக வாக்குமூலத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கைப்பற்றப்பட்ட 2 கிலோ கோகைனின் சந்தை மதிப்பு ரூ.6 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
சென்னை பரங்கிமலையில் இன்று மேற்கொண்ட சோதனையில் ஒரு கிலோ கோகைன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பரங்கிமலையில் நடைபெற்ற சோதனையில் கோகைன் பறிமுதல் செய்யப்பட்டு 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், 5 பேர் அறித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டு ஒரு கிலோ கோகைன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட 2 கிலோ கோகைனின் சந்தை மதிப்பு ரூ.6 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. கடற்கரையில் கழிவு பிளாஸ்டிக்கை சேகரிக்கும் போது கோகைன் கிடைத்ததாக வாக்குமூலத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில், பழனீஸ்வரன் என்பவரும் கடற்கரையோரத்தில் இருந்து 1 கிலோ கோகைன் கிடைத்ததாக கூறியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
சாயல்குடி வனக்காப்பாளராக பணிபுரியும் மகேந்திரன் என்பவர் ஏ1 குற்றவாளி என போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- ஆபரேசன் ‘டி’ என்ற பெயரில் மாநிலம் முழுவதும் அதிரடி சோதனை.
- தலைமறைவான குற்றவாளிகள் 1501 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்.
திருவனந்தபுரம்:
கேரளாவில் போதைப் பொருள் பயன்படுத்து பவர்கள் சம்பந்தப்பட்ட குற்ற வழக்குகள் அதிகரித்து வரும் நிலையில் போலீசார் அதனை கட்டுப்படுத்த அதிரடி வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக ஆபரேசன் 'டி' என்ற பெயரில் மாநிலம் முழு வதும் கடந்த மாதம் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.
இந்த சோதனையில் மாநிலத்தின் பல பகுதிகளிலும் போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன. எம்.டி.எம்.ஏ., ஹெராயின், மெத்தம்பேட்டமைன், பிரவுன் சுகர், நைட்ரஸெபம் மாத்திரைகள், கஞ்சா, கஞ்சா சாக்லெட்டுகள், எரிசாராயம் என பல்வேறு வகையிலான போதை வஸ்துகள் போலீசாரின் வேட்டையில் சிக்கின.
மாநிலம் முழுவதும் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.7 கோடியே 9 லட்சம் ஆகும். இது தொடர்பாக 114 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 149 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுதவிர கலால் துறை தொடர்பான வழக்குகளில் தலைமறைவான குற்றவாளிகள் உள்பட1501 பேரும் கைது செய்யப்பட்டு உள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- சாராயம் விற்றவர் கைது செய்யப்பட்டார்.
- 10 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்தனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி தலைமையிலான போலீசார் குளத்தூர் பகுதியில் ரோந்துபணி ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள ஒரு வீட்டின் பின்புறம் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த அதேஊரை சேர்ந்த சுரேந்திரன்(27) என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 10 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்தனர்.
- உளுந்தூர்பேட்டை அருகே ரேஷன் அரிசி கடத்திய வேன் பறிமுதல் செய்யப்பட்டது.
- தனிப்பிரிவு காவலர் சரவணன் மற்றும் போலீசார் விரைந்து சென்று பார்த்தனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள குணமங்கலம் கிராமத்தில் ரேஷன் அரிசி ஏற்றிக் வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் உளுந்தூர்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் அருள் செல்வம தனிப்பிரிவு காவலர் சரவணன் மற்றும் போலீசார் விரைந்து சென்று பார்த்தனர்.
அப்போது அரிசி ஏற்றுக் கொண்டிருந்த மினி வேன் 840 கிலோ ரேசன் அரிசி பறிமுதல் செய்து கடலூர் மாவட்டம் வேப்பூர் பகுதியைச் சேர்ந்த டிரைவர் தனபால் (27 ) உரிமையாளர் சின்னதுரை (43) ஆகிய 2 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்து வரப்பட்டு விழுப்புரம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு வசம் ஒப்படைக்க உள்ளனர்.
- அரசு அனுமதியோ, உரிமமோ இல்லாமல் களிமண் கடத்துவது கண்டுபிடிக்கப்பட்டது.
- கடத்தியவர்கள் போலிசை கண்டதும் தப்பி ஓடியுள்ளனர்.
கன்னியாகுமரி:
புதுக்கடை அருகே ஓச்சவிளை பகுதியில் இருந்து அனுமதியின்றி களிமண் கடத்துவதாக புதுக்கடை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து சிறப்புக்காவல் ஆய்வாளர் ரெத்தினதாஸ் தலைமையில் போலீசார் அந்த பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது இரண்டு டெம்போக்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது அவற்றில் அரசு அனுமதியோ, உரிமமோ இல்லாமல் இரண்டு டன் வீதம் 4 டன் களிமண் கடத்துவது கண்டுபிடிக்கப்பட்டது. கடத்தியவர்கள் போலிசை கண்டதும் தப்பி ஓடியுள்ளனர்.
போலீசார் இரண்டு வாகனங்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்தனர்.
- ரேஷன் அரிசி மூட்டைகளை பதுக்கி வைத்திருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.
- அங்கு சென்ற போலீசார் 44 மூட்டைகளில் இருந்த 2200 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.
நாமக்கல்:
நாமக்கல் அடுத்த நல்லிபாளையம் மாரியம்மன் கோவில் பின்புறம் ரேஷன் அரிசி மூட்டைகளை பதுக்கி வைத்திருப்பதாக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அங்கு சென்ற போலீசார் 44 மூட்டைகளில் இருந்த 2200 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். மேலும் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்த நாமக்கல் ராமாவரம் புதூரைச் சேர்ந்த செல்வராஜ் (வயது 49), அண்ணா நகர் காலனியை சேர்ந்த தமிழ்செல்வன் (41) ஆகியோரை கைது செய்தனர்.
விசாரணையில் நாமக்கல், நல்லிபாளையம், ராமாவரம் புதூர் பகுதியில் பொதுமக்களிடமிருந்து ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி வட மாநிலத்திற்கு விற்பனைக்கு அனுப்பி வந்தது தெரியவந்தது. போலீசார் அந்த பகுதியில் தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
- சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த மேச்சேரி அருகே உள்ள பொம்மயம்பட்டி பகுதியில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைத்து இருப்பதாக மேட்டூர் போலீஸ் துணை சூப்பிரண்டு ரகசிய தகவல் கிடைத்தது.
- ஆய்வு செய்தபோது அந்த பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 12 மூட்டை ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து மேச்சேரி காவல் நிலையத்திற்கு எடுத்து வந்தனர்.
மேட்டூர்:
சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த மேச்சேரி அருகே உள்ள பொம்மயம்பட்டி பகுதியில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைத்து இருப்பதாக மேட்டூர் போலீஸ் துணை சூப்பிரண்டு விஜயகுமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து மேச்சேரி இன்ஸ்பெக்டர் சண்முகம், சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் பொம்மியம்பட்டி மாரியம்மன் கோவில் அருகே ஆய்வு செய்தபோது அந்த பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 12 மூட்டை ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து மேச்சேரி காவல் நிலையத்திற்கு எடுத்து வந்தனர். இந்த மூட்டைகளை பதுக்கியது யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- திருப்பூரில் பல்வேறு இடங்கள் மற்றும் இருசக்கர வாகன நிறுத்துமிடங்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
- கேட்பாரற்று இருக்கும் மோட்டார் சைக்கிள்களை கைப்பற்றி அதன் மீது வழக்குப்பதிவு செய்ய திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரபாகரன் உத்தரவிட்டார்.
திருப்பூர்:
திருப்பூர் மாநகரத்தில் நீண்ட நாட்களாக உரிமை கோரப்படாமல் கேட்பாரற்று இருக்கும் மோட்டார் சைக்கிள்களை கைப்பற்றி அதன் மீது வழக்குப்பதிவு செய்ய திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரபாகரன் உத்தரவிட்டார். அதன் பேரில் திருப்பூரில் பல்வேறு இடங்கள் மற்றும் இருசக்கர வாகன நிறுத்துமிடங்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
தீவிர சோதனை மேற்கொண்டதில் திருப்பூர் மாநகர வடக்கு போலீஸ் நிலைய சரகத்தில் 68 மோட்டார் சைக்கிள்களும், அனுப்பர்பாளையம் போலீஸ் நிலைய சரகத்தில் 30 மோட்டார்சைக்கிள்களும், திருமுருகன்பூண்டி போலீஸ் நிலைய சரகத்தில் 60 மோட்டார்சைக்கிள்களும், தெற்கு காவல் நிலைய சரகத்தில் 294 மோட்டார்சைக்கிள்களும், மத்திய போலீஸ் நிலைய சரகத்தில் 12 மோட்டார் சைக்கிள்களும், நல்லூர் போலீஸ் நிலைய சரகத்தில் 37 மோட்டார்சைக்கிள்களும் வீரபாண்டி போலீஸ் நிலைய சரகத்தில் 57 மோட்டார்சைக்கிள்களும் என மொத்தம் 564 மோட்டார்சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
- கண்டெய்னர் லாரியை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை.
- 2078 கிலோ குட்கா மற்றும் கண்டெய்னர் லாரியை போலீசார் பறிமுதல்.
நாகப்பட்டினம்:
தஞ்சாவூர் சரக டி.ஐ.ஜி கயல்விழி உத்தரவின் பேரில் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் கஞ்சா, குட்கா கடத்தல் மற்றும் விற்பனைகளை தடுக்க தஞ்சாவூர் மாவட்ட காவல் கூடுதல் கண்காணிப்பாளர் ஜெயசந்திரன் மேற்பார்வையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர சோதனை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் கண்டெய்னர் லாரியில் குட்கா கடத்தப்படுவதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து வேளாங்கண்ணி அருகே பாலகுறிச்சியில் இன்ஸ்பெக்டர் அடைக்கல ஆரோக்கியசாமி டேவிட் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர வாகன சோதனை ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக வந்த கண்டெய்னர் லாரியை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் லாரியில் இருந்தவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால் லாரியை சோதனையிட்டனர். அப்போது லாரியில் ரகசிய அறை இருப்பது தெரிய வந்ததை அடுத்து போலீசார் ரகசிய அறையை திறந்து பார்த்தனர். அதில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
குட்காவை கடத்திய பாலகுறிச்சியை சேர்ந்த கவாஸ்கர் மற்றும் கண்டெய்னர் லாரியின் டிரைவர் கர்நாடகா மாநிலம் ஹசன் மாவட்டத்தை சேர்ந்த பிரதீப் ஆகியோரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் கர்நாடகா மாநிலம் பெங்களூரிலிருந்து கண்டெய்னர் லாரி மூலம் குட்காவை கடத்திவந்து தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
பின்னர் கண்டெய்னர் லாரியில் இருந்த 50 லட்ச ரூபாய் மதிப்பிலான 2078 கிலோ குட்காவையும், கண்டெய்னர் லாரியையும் பறிமுதல் செய்தனர். மேலும் கடத்தலில் ஈடுபட்ட 2 நபர்களையும் கைது செய்தனர். சிறப்பாக செயல்பட்டு குட்கா கடத்தலை தடுத்த தஞ்சாவூர் சரக தனிப்படை போலீசாரை டி.ஐ.ஜி கயல்விழி பாராட்டினார்.
- தினசரி நூற்றுக்கணக்கான லாரிகளில் பெரிய பாறைகளை உடைத்து கேரளாவுக்கு கடத்தப்படுகிறது
- அரசியல் கட்சியினர் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்தும், வெளி மாவட்டங்களி லிருந்தும் தினசரி நூற்றுக்கணக்கான லாரிகளில் பெரிய பாறைகளை உடைத்து கேரளாவுக்கு கடத்தப்படு வதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இந்த லாரிகள் இரவு பகலாக சாலையில் செல்வதால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதோடு தொடர் விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது.
இதனால் தினசரி கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுகின்ற லாரிகளால் காலை வேலைகளில் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியாமலும் பணியா ளர்கள் குறித்த நேரத்தில் வேலைக்கு செல்ல முடியாமலும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்ற னர்.
கேரளாவுக்கு கனிம வளங்கள் கொண்டு செல்வதை தடுக்க கோரியும், குமரி மாவட்டத்தில் சட்ட விரோதமாக பாறைகள் உடைத்து கடத்தப்படு வதை தடுத்து நிறுத்த வேண்டுமெனவும் அரசியல் கட்சியினர் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இதையடுத்து இன்று அதிகாலையில் மார்த்தாண்டம் வழியாக அதிக பாரத்துடன் கேரளாவுக்கு கனிமவளம் கொண்டு செல்லப்பட்ட மூன்று கனரக லாரிகளை போலீசார் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். மேலும் இந்த கனிம வளங்கள் எங்கிருந்து கொண்டு வரப்படுகிறது. இதன் உரிமையாளர் யார் என்ற விவரமும் சேகரிக்கப்பட்டிருக்கிறது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
- புகையிலை பொருட்களை ஏற்றி கடைகளுக்கு எடுத்து செல்ல தயார்.
- ரூ. 1.25 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட 14 மூட்டை புகையிலை பொருட்கள் பறிமுதல்.
சீர்காழி:
சீர்காழி அருகே தைக்கால் கிராமம் ஜாகிர்உசேன் தெருவை சேர்ந்தவர் முஹம்மதுயாசின் (வயது 44).
இவர் தைக்காலில் உள்ள அவரின் வீட்டிற்கு அருகே அவருக்கு சொந்தமான காரில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை ஏற்றி கடைகளுக்கு எடுத்துச் செல்ல தயார் நிலையில் இருந்துகொண்டிருந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா உத்தரவின் பேரில், எஸ்.பி.யின் தனி பிரிவு படையினர் மற்றும் கொள்ளிடம் சிறப்பு பிரிவு போலீசார் திலகர் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை காரில் விற்பனைக்கு எடுத்துச் செல்ல தயாராக இருந்த முகமதுயாசினை கைது செய்து, காருக்குள் வைத்திருந்த ரூ. 1.25 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட 14 மூட்டை புகையிலைப் பொருட்களை பறிமுதல்செய்தனர்.






