என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சென்னையில் ரூ.6 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்
- கடற்கரையில் கழிவு பிளாஸ்டிக்கை சேகரிக்கும் போது கோகைன் கிடைத்ததாக வாக்குமூலத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கைப்பற்றப்பட்ட 2 கிலோ கோகைனின் சந்தை மதிப்பு ரூ.6 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
சென்னை பரங்கிமலையில் இன்று மேற்கொண்ட சோதனையில் ஒரு கிலோ கோகைன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பரங்கிமலையில் நடைபெற்ற சோதனையில் கோகைன் பறிமுதல் செய்யப்பட்டு 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், 5 பேர் அறித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டு ஒரு கிலோ கோகைன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட 2 கிலோ கோகைனின் சந்தை மதிப்பு ரூ.6 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. கடற்கரையில் கழிவு பிளாஸ்டிக்கை சேகரிக்கும் போது கோகைன் கிடைத்ததாக வாக்குமூலத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில், பழனீஸ்வரன் என்பவரும் கடற்கரையோரத்தில் இருந்து 1 கிலோ கோகைன் கிடைத்ததாக கூறியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
சாயல்குடி வனக்காப்பாளராக பணிபுரியும் மகேந்திரன் என்பவர் ஏ1 குற்றவாளி என போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Next Story






