search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "drugs seized"

    • 12 கிலோ ஹெராயின் மற்றும் பிரவுன் சுகர் பறிமுதல் செய்யப்பட்டது.
    • முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    ஆசாம் மாநிலம், தோலாய் பகுதியில் உள்ள லோக்நாத்பூரில் போதைப் பொருள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து, அங்கு சென்ற போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்நிலையில், மர்ம நபர்களிடம் இருந்து 110 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக, ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.

    சம்பவ இடத்தில் இருந்து,12 கிலோ ஹெராயின் மற்றும் பிரவுன் சுகர் பறிமுதல் செய்யப்பட்டது.

    இதுதொடர்பாக முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    இந்த கடத்தல் போதைப் பொருட்கள் தோல் பைகள் மற்றும் சோப்பு பெட்டிகளில் வைக்கப்பட்டு அண்டை மாநிலத்தில் இருந்து கொண்டு செல்லப்பட்டபோது பிடிபட்டது.

    அசாம் போலீசார் கைது செய்யப்பட்டுள்ள நபரிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

    • போதைப் பொருளை அதிகாரிகளுக்கு காட்டிக் கொடுத்த நாய்.
    • போதை பவுடர் கடத்தலில் ஈடுபட்ட உகாண்டா நாட்டு பெண் கைது,

    வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு விமானங்கள் மூலம் வரும் பயணிகளிடம் சுங்கத்துறை மற்றும் போதை பொருள் தடுப்பு துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கடந்த 18ந் தேதி எத்தியோப்பியாவில் இருந்து சென்னை வந்த உகாண்டா நாடு பெண் பயணி வைத்திருந்த பொருட்களை அதிகாரிகள் சோதனையிட்டனர். 

    அப்போது மோப்ப நாய் ஓரியோ, பெட்டி ஒன்றில் மறைத்து வைத்திருந்த போதை பொருளை அதிகாரிகளுக்கு காட்டிக் கொடுத்தது. இதையடுத்து அந்த பெட்டியை பிரித்து சோதனையிட்ட அதிகாரிகள் அதில் இருந்து 1,542 கிராம் எடையுள்ள மெத்தகுலோன் மற்றும் 644 கிராம் ஹெராயின் போதை பொருளை பறிமுதல் செய்தனர்.அதன் மதிப்பு ரூ.5.35 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. இதையடுத்து போதை பவுடரை கடத்தியதாக உகாண்டா நாட்டு பெண் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 15 பேர் கைது செய்யப்பட்டனர்.

    மதுரை:

    மதுரை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்கப்படுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன.

    இதனை தடுக்கும் வகையில் தீவிர நடவடிக்கை எடுக்கும்படி மாநகர போலீஸ் கமி‌ஷனர் டேவிட்சன் ஆசீர்வாதம் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து மாநகர பகுதிகளில் போலீசார் அதிரடி ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அண்ணாநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திலீபன் தலைமையில் போலீசார் மாட்டுத்தாவணி பழ மார்க்கெட்டில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு 2 பேர் சந்தேகப்படும்படி நின்றனர். அவர்களை விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணாக பேசினர்.

    இதனை தொடர்ந்து அவர்கள் வைத்திருந்த பைகளை போலீசார் சோதனையிட்டனர். அதில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் 55 கிலோ அளவில் இருந்தது. அதனையும், அவர்களிடம் இருந்த ரூ.1 லட்சத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    மேலும் போதை பொருட்கள் வைத்திருந்ததாக விளாத்திக்குளத்தைச் சேர்ந்த ஜான்சன் (வயது 27), ஜெயராஜ் (40) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் வேறு எங்காவது போதை பொருட்கள் விநியோகம் செய்துள்ளார்களா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல் விளக்குத் தூண், ஜெய்ஹிந்துபுரம், தெற்குவாசல், புதூர், அவனியாபுரம், திருநகர், கூடல்புதூர் பகுதிகளிலும் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் 2 ஆயிரம் போதை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்து 13 பேரையும் கைது செய்தனர்.

    திருப்பூரில் காரில் கடத்தப்பட்ட ரூ. 2.50 லட்சம் மதிப்புள்ள போதை பொருட்களை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    திருப்பூர்:

    கோவை - திருப்பூர் சாலையில் தெக்கலூர் அருகே உள்ள வஞ்சிப்பாளையத்தில் இன்று காலை திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி தமிழ் செல்வன் மற்றும் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் சந்தேகத்திற்கிடமான வகையில் பொருட்கள் இருப்பதை அதிகாரிகள் கண்டு பிடித்தனர். காரில் இருந்த மூட்டையை பிரித்து பார்த்த போது அதில் 500 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது. அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    இதன் மதிப்பு ரூ. 2.50 லட்சம் ஆகும். காரை ஒட்டி வந்தது வட மாநிலத்தை சேர்ந்த சோபாராம் (29) என்பவர் என்பது தெரியவந்தது. அவரிடம் விசாரித்த போது கோவையில் இருந்து கடத்தி வந்ததாக தெரிவித்தார். பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் திருப்பூருக்கு கொண்டு செல்லப்பட்டது. 

    கோவையில் யாரிடம் இருந்து புகையிலை பொருட்களை சோபாராம் வாங்கி வந்தார் என்பது தொடர்பாக அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    சென்னை துரைப்பாக்கத்தில் வீட்டில் பதுக்கி விற்ற போதை பாக்குகள், குட்கா, புகையிலை உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 2 பேரை கைது செய்தனர்.
    சோழிங்கநல்லூர்:

    சென்னை துரைப்பாக்கம், கண்ணகிநகர், மேட்டுக்குப்பம், பெருங்குடி, கந்தன் சாவடி, சோழிங்கநல்லூர் போன்ற பகுதியில் குட்கா உள்ளிட்ட போதை பொருள் விற்பனை அதிகமாக நடைபெறுவதாக துரைப்பாக்கம் உதவி ஆணையாளர் லோகநாதனுக்கு தகவல் வந்தது.

    இதைத்தொடர்ந்து உதவி ஆணையாளர் லோகநாதன் தலைமையில் தனிப்படையினர் துரைப்பாக்கம், பெருங்குடி, சோழிங்க நல்லூர் சுற்று வட்டார பகுதியில் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

    தனிப்படை போலீசாருக்கு துரைப்பாக்கம் அடுத்த மேட்டுக்குப்பம் வி.ஜி.பி. அவென்யூவில் ஒரு வீட்டில் குட்கா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற தனிப்படை போலீசார் அந்த வீட்டில் இருந்து 300 கிலோ போதை பாக்குகள், குட்கா, புகையிலை உள்ளிட்ட போதை பொருட்களை பறிமுதல் செய்தனர். இங்கு போதை பொருட்களை தயார் செய்து கடைகளுக்கு விநியோகம் செய்து வந்த நித்யானந்தம், சரவணன் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

    அதேபோல் நீலாங்கரையிலும் சந்தேகத்தின் அடிப்படையில் ஆட்டோ ஒன்றை சோதனையிட்டதில் 2 குட்கா மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    ஆட்டோவில் இருந்த அய்யனார் என்பவரிடம் விசாரித்த போது அனுமன் காலனி ஈஞ்சம்பாக்கத்தில் ஒரு வீட்டில் பதுக்கிவைத்திருந்த 6 மூட்டை குட்கா, புகையிலை உள்ளிட்ட போதை பொருட்களை பறிமுதல் செய்து அய்யனார் கைது செய்யப்பட்டார். சுமார் 80 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. #Tamilnews
    ×