search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேச்சேரி அருகே 12 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்
    X

    மேச்சேரி போலீசார் பறிமுதல் செய்த ரேஷன் அரிசி மூட்டைகளை படத்தில் காணலாம்.  

    மேச்சேரி அருகே 12 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்

    • சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த மேச்சேரி அருகே உள்ள பொம்மயம்பட்டி பகுதியில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைத்து இருப்பதாக மேட்டூர் போலீஸ் துணை சூப்பிரண்டு ரகசிய தகவல் கிடைத்தது.
    • ஆய்வு செய்தபோது அந்த பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 12 மூட்டை ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து மேச்சேரி காவல் நிலையத்திற்கு எடுத்து வந்தனர்.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த மேச்சேரி அருகே உள்ள பொம்மயம்பட்டி பகுதியில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைத்து இருப்பதாக மேட்டூர் போலீஸ் துணை சூப்பிரண்டு விஜயகுமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து மேச்சேரி இன்ஸ்பெக்டர் சண்முகம், சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் பொம்மியம்பட்டி மாரியம்மன் கோவில் அருகே ஆய்வு செய்தபோது அந்த பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 12 மூட்டை ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து மேச்சேரி காவல் நிலையத்திற்கு எடுத்து வந்தனர். இந்த மூட்டைகளை பதுக்கியது யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×