பாட்டியை கொன்றுவிட்டு மாணவியை கடத்த முயன்ற ரவுடியை அடித்து கொன்ற பொதுமக்கள்

ராசிபுரம் அருகே பெண் மீது ஆசிட் ஊற்றி கொலை செய்துவிட்டு, பதுங்கி இருந்த ரவுடியை பொதுமக்கள் அடித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாமக்கல் மண்டலத்தில் முட்டை ஏற்றுமதி 1.13 கோடியாக அதிகரிப்பு

நாமக்கல் மண்டலத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி 1 கோடியே 13 லட்சமாக அதிகரித்து உள்ளதால், பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
பள்ளிபாளையம் அருகே தறித்தொழிலாளி தற்கொலை

பள்ளிபாளையம் அருகே தறித்தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பஸ் கண்ணாடி உடைப்பு: தமிழ் புலிகள் கட்சி தலைவர் நாமக்கல் கோர்ட்டில் ஆஜர்

பஸ் கண்ணாடி உடைக்கப்பட்ட வழக்கில் நாமக்கல் கோர்ட்டில் தமிழ் புலிகள் கட்சியின் தலைவர் நாகை.திருவள்ளுவனை போலீசார் ஆஜர்படுத்தினர்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு- நாமக்கல் கோர்ட்டில் யுவராஜ் ஆஜர்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் யுவராஜ் நேற்று நாமக்கல் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்திய மாஜிஸ்திரேட்டு ஜெயந்தி இந்த வழக்கை வருகிற ஜனவரி மாதம் 9-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.
நாமகிரிப்பேட்டை பகுதியில் வீடு புகுந்து திருடியவர் கைது

நாமகிரிப்பேட்டை பகுதியில் வீடு புகுந்து நகை திருடியவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 15½ பவுன் நகைகளை மீட்டனர்.
நாமக்கல்லில் அம்பேத்கர் நினைவுநாள் அனுசரிப்பு - அரசியல் கட்சியினர் மலர்தூவி அஞ்சலி

நாமக்கல்லில் நேற்று அம்பேத்கர் நினைவுநாள் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அரசியல் கட்சியினர் அவரது உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
பள்ளிபாளையத்தில் கார் மோதி சாயப்பட்டறை தொழிலாளி பலி

பள்ளிபாளையத்தில் கார் மோதி சாயப்பட்டறை தொழிலாளி அதே இடத்தில் இறந்தார்.
வெண்ணந்தூர் பகுதியில் கனமழை- 300 ஏக்கரில் சின்ன வெங்காயம் அழுகி நாசம்

வெண்ணந்தூர் பகுதியில் கனமழை காரணமாக சுமார் 300 ஏக்கருக்கு மேல் பயிரிடப்பட்டுள்ள சின்ன வெங்காய பயிர்கள் அழுகி நாசம் அடைந்தது. இதற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
நாகர்கோவில் - மும்பை எக்ஸ்பிரஸ் ரெயில் நாமக்கல் வழியாக இயக்கம்

நாகர்கோவில்-மும்பை எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று முதல் முறையாக நாமக்கல் வழியாக இயக்கப்பட்டது. இந்த ரெயிலுக்கு தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
நாமக்கல் மாவட்டத்தில் தொடர் மழை - கொல்லிமலை ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் குளிக்க தடை

நாமக்கல் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் குளிப்பதற்கு தடைவிதித்து வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.
நாமக்கல் அருகே கடன் தொல்லையால் ரிக் வண்டி உரிமையாளர் மனைவியுடன் தற்கொலை

நாமக்கல் அருகே கடன் தொல்லையால் ரிக் வண்டி உரிமையாளர் மனைவியுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல்லில் 3-வது மாடியில் இருந்து குதித்து இளம்பெண் தற்கொலை

நாமக்கல்லில் குடும்ப தகராறில் 3-வது மாடியில் இருந்து குதித்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சூரிய கிரகணம்: நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் 25-ந்தேதி ஜெயந்தி விழா

பஞ்சாங்கக் கணக்குப்படி 26-ந் தேதி தான் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவை கொண்டாட வேண்டிய நாள் என்றும் சூரிய கிரகணத்தால் ஒரு நாள் முன்பாக ஜெயந்தி விழா கொண்டாடுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
நாமக்கல்லில் சத்துணவு ஊழியர்கள் சாலை மறியல் - 44 பேர் கைது

நாமக்கல்லில் நேற்று 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் 44 பேரை போலீசார் கைது செய்தனர்.
பரமத்தி வேலூர் அருகே வெல்லத்தில் கலப்படம்- 2 ஆலைகளுக்கு சீல்

பரமத்தி வேலூர் அருகே பிலிக்கல்பாளையம் பகுதியில் வெல்லத்தில் கலப்படம் செய்த 2 வெல்ல உற்பத்தி ஆலைகளுக்கு அதிகாரிகள் ‘சீல்' வைத்து அதிரடி நட வடிக்கை எடுத்தனர்.
லாரி டிரைவர்களிடம் செல்போன் திருட்டு - சிறுவன் உள்பட 3 பேர் கைது

புதன்சந்தை அருகே, லாரி டிரைவர்களிடம் செல்போன் திருடிய சிறுவன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருச்செங்கோடு அருகே அரசு பஸ்சை மீண்டும் இயக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்

திருச்செங்கோடு அருகே அரசு பஸ்சை மீண்டும் இயக்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
விவசாயிகளை பாதிக்கும் எந்த ஒரு திட்டத்தையும் தமிழக அரசு மேற்கொள்ளாது- தங்கமணி

விவசாயிகளை பாதிக்கும் எந்த ஒரு திட்டத்தையும் தமிழக அரசு மேற்கொள்ளாது என்று அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார்.
ரெயில் சக்கரத்தில் திடீர் சத்தம்: சேலம்-கரூர் ரெயில் நடுவழியில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் தவிப்பு

சேலத்தில் இருந்து ராசிபுரத்திற்கு வந்த ரெயில் சக்கரத்தில் இருந்து திடீரென அதிக சப்தம் எழுந்ததால் ராசிபுரம் ரெயில் நிலையத்திலேயே ரெயில் நிறுத்தப்பட்டது. 51 நிமிடங்களாக நிறுத்தப்பட்ட ரெயிலால் பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகினர்.