என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சேந்தமங்கலம்"

    • கழிவறை, சமையல் கூடம், ஆய்வுக்கூடம் டாக்டர்கள் அறை, செவிலியர்கள் அறை மற்றும் பிற பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
    • தங்குதடையின்றி பாதுகாப்பான சுகாதாரமான சேவைகளை பொது மக்களுக்கு வழங்க டாக்டர்களுக்கு அறிவுறுத்தினார்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் வருகை தந்தார்.

    அமைச்சர் மா.சுப்பிரமணியம் இன்று கொல்லிமலையில் இருந்து காரவள்ளி வரை சுமார் 25 கிலோ மீட்டர் நடப்போம் நலம் பெறுவோம் திட்டத்தின் கீழ் நடைபயணம் மேற்கொண்டார். இதையடுத்து அவர் சேர்ந்தமங்கலம் அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது சிகிச்சை பெற்று வரும் பயனாளிகளிடம் மருத்துவமனையின் சிகிச்சை முறைகள் டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் பணியாளர்கள் ஆகியோர் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.

    மேலும் கழிவறை, சமையல் கூடம், ஆய்வுக்கூடம் டாக்டர்கள் அறை, செவிலியர்கள் அறை மற்றும் பிற பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    மேலும் தங்குதடையின்றி பாதுகாப்பான சுகாதாரமான சேவைகளை பொது மக்களுக்கு வழங்க டாக்டர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது மருத்துவ பணிகள் இணை இயக்குனர் டாக்டர் ராஜ்மோகன் உட்பட பலர் உடன் இருந்தனர்.

    இதை தொடர்ந்து நாமக்கல் மாநகராட்சியில் உள்ள பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ. 1 கோடி மதிப்பீட்டில் புதிய சித்த மருத்துவமனையை திறந்து வைத்தார். ரூ.2.28 கோடி மதிப்பில் புதுச்சத்திரம், பரமத்தி வேலூர், திருச்செங்கோடு வட்டாரங்களில் 3 புதிய பொது சுகாதார வளாகம், 2 துணை சுகாதார நிலையங்கள் மற்றும் ரூ.6 லட்சம் மதிப்பில் ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்ட நபர்களுக்கான அவசர சிகிச்சை மற்றும் மீட்பு மையத்தையும் திறந்து வைத்து பேசினார்.

    • குடும்ப தகராறில் மனைவியின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.
    • கொலை பேளுக் குறிச்சி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கொல்லிமலை:

    நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ள பேளுக்குறிச்சி தேவேந்திர தெரு மேற்கு வீதியைச் சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 61). இவரது மனைவி சின்ன பொண்ணு (வயது 88). இவர்களுக்கு சின்ராசு கோபால் ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

    மாரியப்பனும், சின்ன பொண்ணுவும் கூலி வேலை செய்து வந்தனர். மாரியப்பனுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. இதனால் அடிக்கடி குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்வது வழக்கம். நேற்று இரவு குடித்துவிட்டு வந்த மாரியப்பன் மனைவியிடம் தகராறு செய்தார்.

    பின்பு இருவரும் தூங்க சென்றுவிட்டனர். இன்று அதிகாலை திடீரென்று எழுந்த மாரியப்பன் வீட்டுக்கு வெளியே கிடந்த கல்லை எடுத்து வந்து வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த சின்னப்பொண்ணுவின் தலையில் போட்டார்.

    இதில் சின்னப்பொண்ணு தலை நசுங்கி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். உடனே மாரியப்பன் பேளூக்குறிச்சி போலீஸ் நிலையத்திற்கு சென்று கொலை பற்றிய விவரத்தை கூறி சரண் அடைந்தார்.

    உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கொலை செய்யப்பட்ட சின்ன பொண்ணு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தடயவியல் நிபுணர்கள் விரைந்து வந்து தடயங்களை சேகரித்தனர்.

    சேந்தமங்கலம் டி.எஸ்.பி. செந்தில்குமார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். இந்த கொலை தொடர்பாக மாரியப்பனை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    இந்த கொலை பேளுக் குறிச்சி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×