என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Security measures"

    • மாநிலம் முழுவதும் கண்காணிப்பை மேம்படுத்தவும், பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும் உத்தரவிட்டுள்ளது.
    • பண்ணை வளாகங்களில் கிருமி நாசினி மருந்துகள் தெளிக்கப்படுகிறது.

    சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இறந்த காகங்களை பறவைக் காய்ச்சல் தாக்கியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இது பறவைகளிடையே விரைவாகப் பரவக்கூடியது.பறவைக் காய்ச்சலை உருவாக்கும் எச்5என்1 வைரஸ் கிருமிகள் குறிப்பாக இடம் விட்டு இடம் பறக்கும் புறா, காகம், கொக்கு, நாரை போன்ற பறவைகளால் அதிகமாக பரப்பப்படுகிறது.

    மேலும், அவை வீடுகள் மற்றும் பண்ணைகளில் வளர்க்கப்படும் வாத்துகள் மற்றும் கோழிகளுக்கும் பரவுகிறது. சில நேரங்களில் மனிதர்கள் மற்றும் பிற பாலூட்டிகளிலும் பரவக்கூடும்.

    தொற்றுநோய் பரவலைத் தடுக்க தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறை, மாநிலம் முழுவதும் கண்காணிப்பை மேம்படுத்தவும், பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும் உத்தரவிட்டுள்ளது.

    நாமக்கல், சேலம், ஈரோடு உள்பட நாமக்கல் மண்டலத்தில் சுமார் 1,000 கோழிப்பண்ணைகளில் 6 கோடிக்கும் அதிகமான முட்டை கோழிகள் வளர்க்கப்படுகின்றன. 2 கோடிக்கும் அதிகமான பிராய்லர் கோழிகள் வளர்க்கப்படுகின்றன.

    இந்தநிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோழிப் பண்ணைகளில் வெளியாட்கள் மற்றும் வாகனங்கள் நுழைவதற்கு தடை செய்யப்பட்டு, உயிரி பாதுகாப்பு (பயோ செக்யூரிட்டி) நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். பண்ணை வளாகங்களில் கிருமி நாசினி மருந்துகள் தெளிக்கப்படுகிறது.

    நாமக்கல் மண்டலத்தில் சுகாதாரமான முறையில் கோழிப்பண்ணைகளை அமைத்து நடத்தி வருவதாலும், சென்னையில் இருந்து நாமக்கல்லுக்கோ, நாமக்கல்லில் இருந்து சென்னைக்கோ கோழிப்பண்ணை சம்மந்தமான முட்டை, தீவனம் போன்ற பொருட்கள் போக்குவரத்து நடைபெறுவதில்லை.

    இதனால் நாமக்கல் மண்டலத்தில் பறவைக்காய்ச்சல் தொற்று நோய் பரவ வாய்ப்பில்லை என பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    • குடியாத்தம், பேரணாம்பட்டு பகுதியில் பார்வையிட்டார்
    • சோதனைச்சாவடியில கண்காணிப்பை பலப்படுத்த உத்தரவு

    குடியாத்தம்:

    குடியாத்தம், பேரணாம்பட்டு பகுதியில் விநாயகர் சிலைகள் வைக்கும் இடங்கள், விநா யகர் சிலை ஊர் வலம் நடைபெ றும் இடங்களை வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் நேற்று ஆய்வு செய்தார்.

    விநாயகர் சிலைகள்

    பேரணாம்பட்டு போலீஸ் நிலையத்தில் வரும் 31-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா நடைபெறுவதையொட்டி மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து உள்ளூர் போலீசாருக்கு அவர் ஆலோசனை நடத்தினார்.

    கண்காணிப்பு கேமராக்களை பார்வையிட்டு பேரணாம்பட்டில் விநாயகர் சிலைகள் வைக்கும் இடங்கள், விநா யகர் சிலைகள் ஊர்வலம் நடைபெறும் இடங்களான திரு.விக நகர், நெடுஞ்சாலை, பஸ் நிலையம், நான்கு கம்பம் மற்றும் விநாயகர் சிலைகள் கரைக்கப்படும் பத்தரபல்லி அணைப் பகுதி ஆகிய இடங்களை அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தமிழக எல்லையான பத்தரபல்லியில் போலீஸ் சோதனைச் சாவ டிக்குச் சென்று அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களை சரிபார்த் தார். ஆந்திரத்தில் இருந்து பத்தரபல்லி வழியாக தடை செய்யப்பட்ட கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் வாகனங்களில் கடத்தப்படுகிறதா? என தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என சோதனைச் சாவடியில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்களுக்கு அவர் உத்தரவிட்டார்.

    குடியாத்தத்தை அடுத்த தட்டப்பாறைக்குச் சென்ற அவர் அங்கு விநாயகர் சிலைகள் வைக்கப்படும் இடங்களை பார்வையிட்டார். அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் போதைப் பொருள் தடுப்பு குறித்து மாணவர்களிடையே பேசினார்.

    ×