search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "trucks"

    • வேலை நிறுத்த போராட்டத்திற்கு தமிழ்நாடு லாரி உரிமையாளர் சம்மேளனம் அழைப்பு விடுத்துள்ளது.
    • போராட்டத்திற்கு தென் மாநில லாரி உரிமையாளர்கள் சங்கமும் ஆதரவு தெரிவித்துள்ளது.

    தருமபுரி:

    மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலை உயர்வு, காப்பீட்டு கட்டணம் உயர்வு, சுங்க கட்டணம் உயர்வு, காலாண்டு வரி உயர்வு, ஆன்லைன் அபராதம் ஆகியவற்றை உயர்த்தி உள்ளதால் இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை லாரிகள் வேலை நிறுத்த போராட்டத்திற்கு தமிழ்நாடு லாரி உரிமையாளர் சம்மேளனம் அழைப்பு விடுத்துள்ளது.

    இந்த போராட்டத்திற்கு தென் மாநில லாரி உரிமையாளர்கள் சங்கமும் ஆதரவு தெரிவித்துள்ளது. இந்த போராட்டத்தில் தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த 3,500 லாரிகள் பங்கேற்கிறது. எனவே தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த லாரி உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்கள் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அந்தந்த பகுதிகளில் பாதுகாப்பாக லாரிகளை நிறுத்தி கொள்ளுமாறு தருமபுரி மாவட்ட லாரி உரிமையாளர் சங்க தலைவரும், தமிழ்நாடு லாரி உரிமையாளர் சம்மேளன மாநில துணைத் தலைவருமான நாட் டான் மாது தெரிவித்தார்.

    இந்நிலையில் தருமபுரி மாவட்டத்தில் குறிப்பிட்ட லாரிகளை தவிர மற்ற லாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடாமல் செயல்பட்டது குறிப்பிடத்தக்கது. 

    • 2 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.
    • புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் திருச்சோற்றுத்துறை கீழத்தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 45).

    இவர் நேற்று இரவு தனது மினிலாரியில் அதே பகுதியை சேர்ந்த தமிழ்செல்வனுடன் (50) தஞ்சாவூருக்கு வந்தார்.

    பின்னர் தஞ்சாவூர் மார்க்கெட்டில் காய்கறி லோடை ஏற்றி கொண்டு மீண்டும் அதே மினிலாரியில் திருவையாறு நோக்கி புறப்பட்டார்.

    அந்த மினி லாரி திருவையாறு அருகே கண்டியூர் பகுதியில் வந்து கொண்டிருந்தது.

    அப்போது எதிரே மற்றொரு லாரி வந்தது.

    கண்ணிமைக்கும் நேரத்தில் இரண்டு லாரிகளும் நேருக்கு நேர் எதிர்பாராத விதமாக மோதிக்கொண்டன.

    இந்த கோர விபத்தில் மினி லாரியில் இருந்த ஆறுமுகம், தமிழ்ச்செல்வன் ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.

    இது குறித்து தகவல் அறிந்த நடுக்காவேரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவையாறு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது பற்றிய புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தரை வழியாக மின்கம்பி கேபிள் கொண்டுசெல்லும் பணி தொடங்கி நடை பெறுகிறது.
    • லாரிகளை மாற்று பாதையில் இயக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    சீர்காழி:

    வைத்தீஸ்வரன்கோயில் துணை மின்நிலையத்தி லிருந்து ஆச்சாள்புரம் துணை மின்நிலையத்திற்கு புதைவ டைமின்கம்பி கொண்டு செல்வதற்காக வைத்தீஸ்வ ரன் கோயிலிருந்து சீர்காழி நகர் பகுதி வழியாக ஆச்சாள்புரம் துணை மின்நிலை யத்திற்கு பூமிக்கு அடியில் தரை வழியாக மின்கம்பி கேபிள் கொண்டுசெல்லும் பணி தொடங்கி நடை பெறுகிறது.

    இந்த பணிக்காக சாலை யோரம் ஜெசிபி இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டும் பணி நடை பெறுகிறது.

    இந்த பணியில் தோண்டப்படும் மண் சாலை யோரம் கொட்டி வைத்து நடைபெறுவதால் சாலை குறுகி பெரும் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.

    இதோடு புறவழிச்சாலை பணிக்காக அதே வழிதடத்தில் லாரிகளில் மண் ஏற்றி செல்லும் லாரிகளும் சென்று வருவதால் பள்ளி நேரங்களில் வாகனஓட்டிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.

    ஆகையால் போக்குவரத்து காவல் துறை யினர் மின் புதைகம்பி பணிகள் நிறைவ டையும் வரை கனரக வாகனங்கள், லாரிகளை மாற்று பாதையில் இயக்கிட பொது மக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • லாரி உரிமையாளர்கள் நலச்சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு உண்ணாவிரத போராட்டம் எழும்பூரில் இன்று நடந்தது.
    • அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் தலைவர் ஜி.ஆர்.சண்முகப்பா போராட்டத்தை தொடங்கி வைத்தார்.

    சென்னை:

    மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் மற்றும் அமைந்தகரை லாரி உரிமையாளர்கள் நலச்சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு உண்ணாவிரத போராட்டம் எழும்பூரில் இன்று நடந்தது.

    ஆன்லைனில் வழக்கு போடுவதை ரத்து செய்ய வேண்டும், காலாவதியான சுங்கச் சாவடிகளை நீக்க வேண்டும், 21 இடங்களில் உள்ள பார்டர் சோதனை சாவடிகளை அகற்ற வேண்டும், மணல், சவுடு ஆகியவற்றை ஒழுங்குப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.

    மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் சி.தனராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் பி.ராமசாமி, பொருளாளர் தாமோதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் தலைவர் ஜி.ஆர்.சண்முகப்பா போராட்டத்தை தொடங்கி வைத்தார்.

    தலைவர் பி.கோபால் நாயுடு, அமைந்தகரை லாரி உரிமையாளர்கள் நலச்சங்க தலைவர் எஸ்.யுவராஜ், நிர்வாகிகள் அரவிந்த் அப்பாஜி, சுந்தரராஜன், வேலு, செந்தில்குமார், சுப்பு, வி.ஆறுமுகம், என்.முருகேசன், வி.பி. செல்வ ராஜா, கே.சின்னுசாமி, டி.சுப்பிரமணி, நாராயணன், ஜெயக்குமார், எம்.மாது, ராஜேஷ், சாத்தையா, நிஜாத் ரகுமான் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

    நிர்வாகிகள் துரைலிங்கம், கமலக்கண்ணன், ஜானகி ராமன், மயிலை செல்வம், டி.சேகர், ஏ.மணி, ரெட்டி, ரமேஷ்குமார், குணசேகரன், தரணிபதி, செல்வகுமார், எம்.சங்கர், பாஸ்கர், ஏகாம் பரம், முருகன், பிரான்சிஸ் சேவியர், பாரதிராஜா, அண்ணாதுரை உள்ளிட்ட ஏராளமான லாரி உரிமையாளர்கள் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

    போராட்டம் குறித்து அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் சேர்மன் சண்முகப்பா, மாநில லாரி உரிமையா ளர்கள் சங்க தலைவர் தனராஜ் ஆகியோர் நிருபர்க ளிடம் கூறுகையில், "லாரி உரிமையாளர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு ஏற்காவிட்டால் 30-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளோம். தமிழகத்தில் லாரிகள் ஓடாது, பிற மாநில லாரிகளும் வராது" என்றனர்.

    • மதுரையில் ரேசன் பொருட்கள் ஏற்றி வந்த லாரிகள் சகதியில் சிக்கி தவித்தன.
    • ரேசன் கடைகளுக்கு பொருட்கள் சப்ளை செய்வதில் பிரச்சினை ஏற்பட்டது.

    மதுரை

    மதுரை மாவட்டத்தில் 1200-க்கும் மேற்பட்ட ரேசன் கடைகள் உள்ளன. இந்த கடைகளுக்கு தேவையான அரிசி, பருப்பு, சமையல் எண்ணை, சர்க்கரை உள்ளிட்ட உணவு பொருட்கள் சுந்தரராஜபுரம் பகுதியில் உள்ள குடோனுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.

    பின்பு அங்கிருந்து மாவட்டத்தில் உள்ள ரேசன் கடைகளுக்கு லாரிகள் மூலம் எடுத்துச் செல்லப்படுகிறது. அதேபோல் ரேசன் பொருட்கள் இந்த குடோனுக்கு கொண்டு வரப்படுகின்றன.

    மதுரையில் தொடர்ந்து 10நாட்களுக்கு மேலாக மழை பெய்ததன் காரணமாக பல்வேறு பகுதிகளில் சாலைகள் ேசதமடைந்து கிடக்கிறது. சுந்தரராஜபுரம் குடோன் பகுதியில் சாலை குண்டும் குழியுமாக மாறி சகதிக்காடாக இருக்கிறது.

    இதனால் குடோனில் இருந்து ரேசன் பொருட்களை எடுத்துச் சென்ற லாரிகள் சகதியில் சிக்கின. அதிலிருந்து லாரிகளை வெளியே எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்த குடோனில் இருந்து தினமும் 20லாரிகளில் 300-க்கும் மேற்பட்ட ரேசன் கடைகளுக்கு பொருட்களை எடுத்துச் செல்லப்படுகிறது.

    சகதியில் லாரிகள் சிக்கி தவித்ததால் ரேசன் கடைகளுக்கு பொருட்கள் சப்ளை செய்வதில் பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து சகதியில் சிக்கிய லாரிகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    • ரோடுகளுக்கு தண்ணீர் விட்டு வந்ததாக கூறப்படுகிறது.
    • மண்புழுதி பறக்காமல் இருப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள சுக்கம்பாளையம் பகுதியில் கைவிடப்பட்ட பழைய கல்குவாரி உள்ளது. இதில் உள்ள தண்ணீரை கல்குவாரி லாரிகள் மூலம் எடுத்துச் சென்று கோடங்கிபாளையம் பகுதியில் உள்ள கல்குவாரி செயல்படும் பகுதிகளில் உள்ள ரோடுகளுக்கு தண்ணீர் விட்டு வந்ததாக கூறப்படுகிறது. அந்த ரோடுகளில் கல்குவாரி லாரிகள் செல்லும் போது மண்புழுதி பறக்காமல் இருப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று வழக்கம்போல சுக்கம்பாளையம் பகுதியில் தண்ணீர் எடுக்கச் சென்ற 2 லாரிகளை விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சிறை பிடித்தனர். இது குறித்து தகவல் அறிந்து சென்ற பல்லடம் போலீசார் மற்றும் வருவாய் துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். லாரிகள் மூலம் தண்ணீர் விற்பனை நடைபெறு வதாகவும், இதனால் நிலத்தடி நீர் வெகுவாக உறிஞ்சப்பட்டு இங்குள்ள விவசாய கிணறுகள் வற்றி விடுவதாகவும், பொதுமக்கள், விவசாயிகள் குற்றம் சாட்டினர்.

    இதையடுத்து வரும் 10-ந் தேதி (திங்கட்கிழமை) பல்லடம் தாலுகா அலுவ லகத்தில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்படும் என அறிவித்ததை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    • ரெடிமிக்ஸ் சிமெண்டு கான்கிரீட் கலவை தயாரிக்கும் தொழிற்சாலைகள் உள்ளது.
    • விபத்துகள் ஏற்படுவதாக அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் குற்றம் சாட்டி வந்தனர்.

    பல்லடம் :

    பொங்கலூர் அருகே பெருந்தொழுவு பகுதியில் ரெடிமிக்ஸ் சிமெண்டு கான்கிரீட் கலவை தயாரிக்கும் தொழிற்சாலைகள் உள்ளது. இங்கிருந்து புதிய கட்டிடங்களுக்கு லாரிகள் மூலம் ரெடி மிக்ஸ் கொண்டு செல்லப்படுகிறது. அவ்வாறு கொண்டு செல்லப்படும் போது அந்த லாரிகள் அதிவேகமாக செல்வதாகவும், சாலைகள் அடிக்கடி பழுதாவதாகவும், விபத்துகள் அடிக்கடி ஏற்படுவதாகவும் அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் குற்றம் சாட்டி வந்தனர். இந்த நிலையில் நேற்று ராமலிங்கபுரம் பகுதியில் வந்த 2 லாரிகளை அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தடுத்து நிறுத்தி சிறைபிடித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ரெடிமிக்ஸ் தயாரிப்பு நிறுவன உரிமையாளர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    அப்போது லாரிகளை மெதுவாக இயக்குவதாகவும், சேதம் அடைந்த சாலைகளை செப்பனிட்டு தருவதாகவும் உறுதியளித்தார். இதனை தொடர்ந்து பொதுமக்கள் லாரிகளை விடுவித்து அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    காட்டுமன்னார்கோவிலில்செம்மண் ஏற்றிச் செல்லும் லாரிகளால் போக்குவரத்து நெரிசல்:பள்ளி, கல்லூரி மாணவர்கள் அவதி

    கடலூர்:

    காட்டுமன்னார் கோவி லில் அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகள் உள்ளன. சுற்றுவட்டார கிரா மத்திலிருந்து ஏராளமான மாணவர்கள் தினமும் இங்கு வந்து செல்வர், இது தவிர வட்டாட்சியர் அலு வலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு பொது மக்கள் வந்து செல்வர். இதனால் காட்டுமன்னார் கோவில் நகரப்பகுதி அதி காலை முதல் இரவுவரை பரபரப்பாக காணப்படும்இங்குள்ள முக்கிய வீதிகளில் சாலைகளை ஆக்கிரமித்து ஏராளமான கடைகள் உள்ளன.

    கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வரும் நிலையில் காட்டுமன்னார் கோவில் கடைவீதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை. இதனால் பள்ளி, கல்லூரி தொடங்கும் மற்றும் முடியும் நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.மேலும், சிதம்பரம்-திருச்சி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகள் நடந்து வருகிறது. இப்பணிக்காக காட்டுமன்னார்கோவில் அருகேயுள்ள வீரநல்லூர், மாமங்கலம் போன்ற பகுதிகளில் இருந்து கிராவல் செம்மண் எடுக்கப்படுகிறது. இந்த கிராவல் செம்மண் டாரஸ் எனப்படும் பெரிய டிப்பர் லாரிகளில் இரவு பகலாக கொண்டு செல்லப்படுகிறது. குறிப்பாக நிடத்திற்கு ஒரு லாரி சாலையை கடந்து செல்கிறது.க்ஷஇதனால் ஏற்கனவே இருந்ததை விட போக்கு வரத்து நெரிசல் அதிகமாகி விட்டது. இது தொடர்பாக நாளேடுகளில் செய்தி வரும் போது போலீ சார் ஒப்பந்ததாரரை அழைத்து பேசுகின்றனர். ஒரிரு தினங்கள் பள்ளி, கல்லூரி நேரங்களில் லாரிகள் இயக்கப்படாது. பின்னர் தொடர்ந்து இரவு பகலாக லாரிகள் இயக்கப்படும்.

    எனவே, இதற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், காட்டுமன்னார்கோவில் சாலைகளில் உள்ள ஆக்கிர மிப்புகள் அகற்றப்பட வேண்டும். பள்ளி, கல்லூரி நேரங்களில் கிராவல் மண் ஏற்றி செல்லும் லாரிகளுக்கு அபராதம் விதித்து பறிமுதல் செய்ய வேண்டுமென காட்டுமன்னார்கோவில் பொது மக்கள் மற்றும் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • லாரியின் ஓட்டுநர் மனோகரன்(55) படுகாயம் அடைந்தார்.
    • விபத்தால் அந்தப் பகுதியில் சுமார் 20 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.

    பல்லடம்:

    பல்லடம் பனப்பாளையம் பகுதியில் பாண்டிச்சேரியில் இருந்து பிளாஸ்டிக் துகள்கள் மூட்டைகளை ஏற்றிக் கொண்டு சரக்கு லாரி ஒன்று பல்லடம் நோக்கி கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கிழக்கிலிருந்து மேற்காக வந்து கொண்டிருந்தது. அப்போது பனப்பாளையம் பெட்ரோல் பங்கில் இருந்து வெளியே வந்த லாரி மேற்கிலிருந்து கிழக்காகச் செல்ல முற்பட்டது. எதிர்பாராத விதமாக இரண்டு லாரிகளும் நேருக்கு நேர் மோதியது. இதில் பிளாஸ்டிக் துகள்கள் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் லாரியின் ஓட்டுநர் மனோகரன்(55) படுகாயம் அடைந்தார்.மேலும் அந்த பகுதியில் போக்குவரத்து பாதித்தது தகவல் அறிந்து சம்பவ இடம் சென்ற பல்லடம் போலீசார் காயம் அடைந்த பிளாஸ்டிக் லோடு லாரியின் ஓட்டுனர் மனோகரனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் அந்த வழித்தடத்தில் பாதிப்ப டைந்த போக்குவரத்தையும் சீர் செய்தனர். இந்த விபத்தால் அந்தப் பகுதியில் சுமார் 20 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.

    • திருமங்கலம் அருகே லாரிகள் மோதியதில் டிரைவர் படுகாயம் அடைந்தார்.
    • இதனால் சிறிது நேரம் திருமங்கலம் - விருதுநகர் நான்கு வழி சாலையில் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டது.

    திருமங்கலம்

    கடலூர் மாவட்டத்தி லிருந்து நெல் மூைடகளை ஏற்றிக்கொண்டு நெல்லை மாவட்டம் ஆலங்குளத்திற்கு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இன்று காலை மதுரை மாவட்டம் திருமங்கலம்-விருதுநகர் 4 வழிச்சாலையில் சென்று கொண்டிருந்தது.

    ராஜபாளையம் சாலை பிரியும் இடத்திற்கு அருகே உள்ள பாலத்தில் சென்றபோது ஓசூரில் இருந்து காய்கறிகளை ஏற்றிக்கொண்டு நெல்லைக்கு சென்ற லாரி முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது பயங்கரமாக மோதியது. இதில் காய்கறி லாரியின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. அதனை ஓட்டி வந்த டிரைவர் நெல்லையைச் சேர்ந்த பொன்ராஜ் (வயது 25) என்பவர் படுகா யமடைந்தார்.

    உடனே அந்த வழியாக வந்தவர்கள் விபத்தில் சிக்கிய அவரை மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    விபத்து குறித்து திருமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் நெடுஞ்சாலை உதவி வாகனத்திற்கு தகவல் அளித்து கிரேன் வரவழைக்கப்பட்டு லாரியில் சிக்கிய வேன் மீட்கப்பட்டது. இதனால் சிறிது நேரம் திருமங்கலம் - விருதுநகர் நான்கு வழி சாலையில் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டது.

    திருவையாறில் குவாரியில் இருந்து மணல் ஏற்றி செல்லும் லாரிகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
    திருவையாறு:

    திருவையாறு நகரம் சாலையோர கடை ஆக்கிரமிப்புகளினாலும், வாகனங்கள் சாலையோரம் நிறுத்தப்படுவதாலும், நகரக் கடைவீதிகளில் வாகனங்கள் ஒன்றை–யொன்று முந்திக் கொண்டு செல்ல முற்படுவ–தாலும், பஸ் ஸ்டாண்டுக்குள் செல்லாமல் பஸ்கள் வெளியில் நின்று பயணி–களை இறக்கி ஏற்றுவதாலும் அடிக்கடி திருவையாறு நகரக் கடைவீதிகள் போக்கு–வரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக உள்ளது.

    இதனால் திருவையாறு தேரடியிலிருந்து, காவிரிப் பாலம் வரையில் சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு பஸ், லாரி முதலிய வாகனங்கள் நீண்ட நேரம் வரிசையாக நிறுத்தப்படும் சூழல் நிலவுகிறது. 

    இந்நிலை–யில், சமீபத்தில் திருவையாறு, கல்லணை சாலையில் உள்ள பூதலூர் தாலுகா திருச்செனம்பூண்டி மற்றும் திருவையாறு தாலுகா வடுகக்குடி கொள்ளிடம் ஆற்று மணல் குவாரிகளிலிருந்தும், திருவையாறு குடந்தை சாலையில் உள்ள பாபநாசம் தாலுகா, கணபதி அக்ரஹாரம் அருகில் உள்ள புத்தூர் கொள்ளிடம் ஆற்று மணல் குவாரியிலிருந்தும் மணல் ஏற்றிய லாரிகள் காலை 8 மணியிலிருந்து இரவு 9 மணி வரையிலும் தொய்வில்லாமல் வரிசையாக தொடர்ந்து கிழக்கு, மேற்கு என 2 திசைகளிலிருந்தும் வந்து திருவையாறு கடைவீதி மையப் பகுதியான தஞ்சாவூர் முக்கத்தில் சங்கமித்து தென்புறம் தஞ்சாவூர் நோக்கிச் செல்கின்றன.

    தஞ்சாவூர் செல்லும் மணல் லோடு ஏற்றிய லாரிகள் தொடர்ந்து திருவை–யாறு வழியாகவே செல்ல வேண்டியிருப்பதால், ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு அடிக்கடி பஸ் முதலிய வாகனங்கள் நீண்ட நேரம் ஸ்தம்பித்து நிற்க வேண்டிய சூழல் உருவாகியிருக்கிறது.

    இதனால் குறிப்பிட்ட நேரத்திற்கு பஸ்கள் செல்ல முடியாமல், அடுத்த ட்ரிப் எடுப்பது பாதிக்கப்பட்டு நஷ்டமடைய வேண்டியிருக்கிறது. 

    ஏற்கனவே தஞ்சாவூர் மாநகராட்சி சாலைப் பணிகள் நடப்பதை முன்னிட்டு கூடுதலாக சில கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்வது குறிப்பிடத்தக்கது. இதனால் பஸ்சில் பயணிக்கும் மாணவர்கள், அரசு அலுவலக ஊழியர்கள். தனியார் நிறுவன ஊழியர்கள், ஆஸ்பத்திரிக்கு செல்பவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாமல் அவதிப்படுகிறார்கள். மேலும், திருவையாறு கடைவீதி பாதசாரிகளும், இருசக்கர வாகனங்களும் சாலையின் எதிரே கடந்து செல்ல முடியாமல் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருக்கிறது.

    எனவே, பூதலூர் தாலுகா திருச்செனம்பூண்டி கொள்ளிடம் மணல் குவாரி லாரிகளையும், வடுகக்குடி கொள்ளிடம் மணல் குவாரி லாரிகளையும் திருக்காட்டு–ப்பள்ளி, பூதலூர் செங்கிப்பட்டி வழியாகவும், பாபநாசம் தாலுகா புத்தூர் கொள்ளிடம் மணல் குவாரி லாரிகளை கணபதி அக்ரஹாரம், மாகாளிபுரம், அய்யம்பேட்டை வழியாகவும் மட்டுமே செல்ல உத்தரவிட்டு, திருவையாறு நகரத்தின் போக்குவரத்து நெரிசலைக் குறைத்து உதவிட ஆவன செய்யுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுககு பயணி–களும், பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    சென்னிமலையில் மணல் கடத்திய 2 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
    சென்னிமலை:

    சென்னிமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரன் மற்றும் போலீசார் சென்னிமலை பஸ் நிலையம் அருகே நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக லாரி ஒன்று வேகமாக வந்தது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்ததோடு, டிரைவரிடம் விசாரணை நடத்தினார்கள்.

    விசாரணையில் கரூரில் இருந்து ஊத்துக்குளிக்கு லாரியில் மணல் கடத்தியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அந்த லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

    இதேபோல் அதே பகுதியில் மற்றொரு லாரி வந்தது. அந்த லாரியை சோதனை செய்ததில் அதிலும் மணல் கடத்தியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மணல் கடத்திய இந்த லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட 2 லாரிகளும் பெருந்துறை தாசில்தார் அலுவலகத்துக்கு கொண்டு சென்று நிறுத்தப்பட்டது.

    துணை தாசில்தார் பாலமுருகாயி, மணல் கடத்திய 2 லாரிகளின் உரிமையாளர்களுக்கும் அபராதம் விதிக்க ஈரோடு ஆர்.டி.ஓ. நர்மதாதேவிக்கு பரிந்துரை செய்து உள்ளார். 
    ×