என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "conflict"
- முருகன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- கைது செய்யப்பட்ட மனோஜ் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே உள்ள பெத்தையகவுண்டன் பட்டியைச் சேர்ந்தவர் முருகன் (வயது 55) கொத்தனார் வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று இரவு அதிகாரிபட்டியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்றார். அங்கு மதுபானம் வாங்கி டாஸ்மாக் அருகிலேயே அமர்ந்து மது குடித்துக் கொண்டிருந்தார்.
அப்போது தேத்தாம்பட்டியைச் சேர்ந்த மனோஜ் (28), காம்பார்பட்டியை சேர்ந்த ரஜினி (42) ஆகியோரும் அதே இடத்தில் மது குடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்கிடையே திடீரென தகராறு ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் மனோஜ், ரஜினி ஆகிய 2 பேரும் சேர்ந்து முருகனை தாக்கி கீழே தள்ளினர். நிலை தடுமாறிய முருகன் கீழே விழுந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த சாணார்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் முருகன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதையடுத்து திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி. பிரதீப் கொலையாளிகளை விரைந்து கைது செய்ய தனிப்படை போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன் பேரில் புறநகர் போலீஸ் டி.எஸ்.பி. உதயகுமார் மேற்பார்வையில், நத்தம் இன்ஸ்பெக்டர் தங்க முனியசாமி, சாணார்பட்டி சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜேந்திரன், சிவராஜ் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படையினர் தீவிரமாக கொலையாளிகளை தேடி வந்தனர்.
பின்னர் உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த அவர்கள் 2 பேரையும் பிடித்து கைது செய்தனர். கொத்தனாரை கொலை செய்த குற்றவாளிகளை சில மணி நேரத்திலேயே கைது செய்த தனிப்படை போலீசாரை எஸ்.பி. பிரதீப் பாராட்டினார்.
கைது செய்யப்பட்ட மனோஜ் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்பகுதியில் சட்டவிரோதமாக பார் செயல்பட்டு வந்ததும், இதன் காரணமாக அடிக்கடி மோதல் சம்பவம் நடந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இதேபோல் சட்ட விரோதமாக செயல்படும் மதுபான பார்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
- போலி இன்ஸ்டாகிராம் முகவரியில் பெண் போல பேசி துன்புறுத்தினால் அப்படித்தான் அடிப்போம் என கோபி மற்றும் நண்பர்கள் கூறியுள்ளனர்.
- அவிநாசி போலீசார் கொலை முயற்சி வழக்காக பதிவு செய்து, ஜெயராம், பாஸ்கர் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அவிநாசி:
திருப்பூர் வாஷிங்டன் பகுதியை சேர்ந்தவர் மோகன். இவரது மகன் கோபி (வயது 24). இவர் தனது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த சிவா (24) மற்றும் நான்கு நண்பர்களுடன் அவிநாசியை அடுத்து பழங்கரை அருகே உள்ள கள்ளுமடை குட்டை பகுதியில் புத்தாண்டு தினத்தன்று மது அருந்தி புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, இவர்களின் நண்பர்களான திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரை அடுத்துள்ள ஈட்டிவீரம்பாளையம் பகுதியை சேர்ந்த ஜெயராம் (22), பாஸ்கரன் (22) மற்றும் லட்சுமி கார்டன் பகுதியை சேர்ந்த 18 வயது சிறுவன் ஆகிய மூவரும் அங்கு வந்து மது அருந்தியுள்ளனர்.
இந்நிலையில், கோபியின் வேறொரு நண்பரான வசந்தகுமார் என்பவருக்கு, அவர்களோடு மது அருந்திக் கொண்டிருந்த 18 வயது சிறுவன் கடந்த சில நாட்களாக இன்ஸ்டாகிராமில் போலியாக பெண் போன்ற முகவரியில் இருந்து பேசி துன்புறுத்தி வந்தது குறித்து தெரியவந்தது. முன்னதாக வசந்த குமாரும் அவரது மற்றொரு நண்பரான ஜெகதீஸ் என்பவரும் சேர்ந்து புத்தாண்டிற்கு முந்தைய நாள் லட்சுமி கார்டன் பகுதியில் உள்ள 18 வயது சிறுவன் வீட்டிற்கு சென்று சிறுவனின் கன்னத்தில் அறைந்துள்ளனர். இது குறித்து 18 வயது சிறுவனும் அவருடன் வந்த ஜெயராம் மற்றும் பாஸ்கரும், கோபி மற்றும் நண்பர்களிடம் கேட்டுள்ளனர். அதற்கு போலி இன்ஸ்டாகிராம் முகவரியில் பெண் போல பேசி துன்புறுத்தினால் அப்படித்தான் அடிப்போம் என கோபி மற்றும் நண்பர்கள் கூறியுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த ஜெயராம், அதற்கு தான் கொல்ல வந்துள்ளோம் என சொல்லிக்கொண்டே, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கோபியின் இடது மார்புக்கு மேல் குத்தியுள்ளார். அதே சமயத்தில், பாஸ்கர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சிவாவின் முதுகில் வலது பக்கமும், 18 வயது சிறுவன் சிவாவின் வலது பின் தோள்பட்டையிலும் குத்தியுள்ளனர். இதனால், வலி தாங்க முடியாமல் அவர்கள் கூச்சலிட்டதை அடுத்து 18 வயது சிறுவன் உட்பட மூவரும் தப்பியோடியுள்ளனர்.
காயம்பட்ட கோபி மற்றும் சிவாவை அவர்களது நண்பர்கள் உடனடியாக மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் குறித்து அவிநாசி போலீசார் கொலை முயற்சி வழக்காக பதிவு செய்து, ஜெயராம், பாஸ்கர் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் 18 வயது சிறுவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை சிறுவர் சீர்திருத்த ப்பள்ளியில் சேர்த்தனர். அவர்களிடமிருந்து கத்திகளையும் பறிமுதல் செய்தனர்.
- பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டதால் ராஜகோபுரம் வழியாக மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
- பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் பக்தர்களை விலக்கிவிட்டு சமாதானம் செய்து அனுப்பினர்.
வேங்கிக்கால்:
ஆங்கில புத்தாண்டையொட்டி நேற்று திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி, வெளி மாநிலம், மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்தனர்.
இதனால் கோவிலில் கூட்டம் அலைமோதியது.
நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டதால் ராஜகோபுரம் வழியாக மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
புத்தாண்டு தினத்தில் 3 முதல் 4 மணி நேரம் காத்திருந்த பக்தர்கள் தரிசனம் செய்து சென்றனர். அம்மணி அம்மன் கோபுரம் வழியாக வருவாய் துறை, காவல்துறை, அறநிலையத்துறை உள்ளிட்ட துறையினரால் அழைத்து வரப்படும் வி.ஐ.பி.க்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
அம்மணி அம்மன் கோபுரம் வழியாகவும் பக்தர்கள் அனுமதிக்கப்படுவதை பார்த்த வெளிமாநில பக்தர்கள் அங்கு காத்திருந்தனர்.
நேற்று காலை சுமார் 11 மணியளவில் அம்மணி அம்மன் கோபுர கதவு பூட்டப்பட்டிருந்து. இந்நிலையில் அரசு துறையினரால் அழைத்து வரப்படும் வி.ஐ.பி.க்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்காக கோபுர வாசல் கதவுகள் திறக்கப்பட்டது. அப்போது அங்கு காத்திருந்த பக்தர்கள் முண்டி அடித்துக்கொண்டு கோவிலுக்குள் நுழைந்ததால் பக்தர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் பக்தர்களை விலக்கிவிட்டு சமாதானம் செய்து அனுப்பினர்.
இது குறித்து பக்தர்கள் கூறுகையில் அருணாசலேசுவரர் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு எந்த கோபுர வாசல் வழியாக தரிசனத்திற்கு செல்வது என்பது குறித்து முறையான அறிவிப்பு பலகையோ, வழிகாட்டி பதாகைகளோ வைக்கப்படுவதில்லை. நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்ப வேண்டியுள்ளது. 5-ம் பிரகாரத்தில் திருப்பதியில் உள்ளதைப்போல் பக்தர்கள் அமர்ந்து காத்திருக்கும் அறைகள் அமைக்க வேண்டும். இந்த அறைகளில் கழிவறை வசதிகள் செய்யப்பட வேண்டும்.
அதிக அளவில் வரும் பக்தர்களின் நலன் கருதி தரிசன முறையில் உரிய மாற்றம் கொண்டு வர இந்து சமய அறநிலையத்துறை முன்வர வேண்டும் என வலியுறுத்தினர்.
- ஓட்டல் ஊழியர்கள் உருட்டு கட்டைகளை எடுத்துக்கொண்டு வாடிக்கையாளர்களை தாக்கினர்.
- வாடிக்கையாளர்களை ஓட்டல் ஊழியர்கள் தாக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
ஐதராபாத் அமிட்சில் பழமை வாய்ந்த பிரபல ஓட்டல் இயங்கி வருகிறது. இந்த ஓட்டலில் ஐதராபாத் பிரியாணி மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.
புத்தாண்டு தினத்தையொட்டி ஓட்டலில் கூட்டம் நிரம்பி வழிந்தது. அப்போது வாடிக்கையாளர்கள் கும்பலாக பிரியாணி சாப்பிட வந்தனர்.
அவர்களுக்கு பிரியாணி பரிமாறப்பட்டது. அந்த பிரியாணி சூடாக இல்லை. மேலும் ருசியாகவும் இல்லை என வாடிக்கையாளர் ஒருவர் குற்றம் சாட்டினார்.
இது தொடர்பாக வாடிக்கையாளர்களுக்கும் ஓட்டல் ஊழியர்களுக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.
திடீரென அவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். அப்போது ஓட்டல் ஊழியர்கள் உருட்டு கட்டைகளை எடுத்துக்கொண்டு வாடிக்கையாளர்களை தாக்கினர்.
#Hyderabad police booked a case against the Grand Hotel in #Abids and staff arrested, after brawl over #Biryani and waiters allegedly attacked customers with sticks at #NewYear midnight
— Surya Reddy (@jsuryareddy) January 1, 2024
Following the incident MLA Raja Singh was spoke to the @shoabids police demands FIR, arrests. pic.twitter.com/8PSPeSPasL
மேலும் சேர்களை தூக்கி அவர்கள் மீது வீசினர். இதனைக் கண்ட பொதுமக்கள் ஓட்டலில் இருந்து அலறியடித்துக் கொண்டு ஓடினர்.
இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் இருதரப்பினரையும் போலீஸ் நிலையம் அனைத்து சென்று விசாரித்தனர்.
ஓட்டலில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.அதில் ஓட்டல் ஊழியர்கள் வாடிக்கையாளர்கள் மீது கட்டை மற்றும் சேர்களை கொண்டு தாக்குவது பதிவாகி இருந்தது.
இது தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில்:
பிரியாணி சூடாக இல்லை என்றதால் இந்த பிரச்சனை நடந்துள்ளது.முதலில் வாடிக்கையாளர் வாக்குவாதம் செய்துள்ளார். அப்போது திடீரென இந்த வாடிக்கையாளர் ஓட்டல் ஊழியரை தாக்கியதால் நிலைமை மோசமாகியுள்ளது.
இது தொடர்பாக 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
வாடிக்கையாளர்களை ஓட்டல் ஊழியர்கள் தாக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
- இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே இதில் முரண்பட்டுள்ளார்.
- சிவசேனா போல ஆம் ஆத்மி கட்சியும் காஷ்மீர் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பை வரவேற்கும் வகையில் உள்ளது.
புதுடெல்லி:
காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த 370-வது சட்டப்பிரிவை மத்திய அரசு கடந்த 2019-ம் ஆண்டு ரத்து செய்தது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கை செல்லும் என்று சுப்ரீம் கோர்ட்டு நேற்று பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. பாரதிய ஜனதா கட்சி இந்த தீர்ப்பை வரவேற்றுள்ளது.
ஆனால் காங்கிஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி தலைவர்களில் பலர் காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்ததற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குறிப்பாக காங்கிரஸ், தி.மு.க. தலைவர்கள் கூறுகையில், 'இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் காஷ்மீரில் 370-வது சட்டப்பிரிவை மீண்டும் கொண்டு வருவோம்' என்று கூறி உள்ளனர்.
இந்நிலையில் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே இதில் முரண்பட்டுள்ளார். அவர் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், 'காஷ்மீரில் அமல்படுத்தப்பட்டிருந்த 370-வது சட்டப்பிரிவை நீக்கியதை வரவேற்கிறோம். விரைவில் காஷ்மீரில் தேர்தல் வைக்க வேண்டும்' என்று கூறியுள்ளார்.
சிவசேனா போல ஆம் ஆத்மி கட்சியும் காஷ்மீர் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பை வரவேற்கும் வகையில் உள்ளது. அந்த கட்சி சார்பில் இதுவரை எந்த எதிர்ப்பு கருத்துக்களும் வெளியிடப்படவில்லை.
இதன் காரணமாக இந்தியா கூட்டணி தலைவர்கள் இடையே மீண்டும் கருத்து வேறுபாடுகள் உருவாகி உள்ளன. முக்கிய கொள்கை விஷயங்களில் இந்தியா கூட்டணி தலைவர்கள் ஒருமித்த கருத்துக்கு வர முடியாமல் திணறுவதை இது காட்டுவதாக அமைந்துள்ளது.
இந்நிலையில் வருகிற 19-ந் தேதி டெல்லியில் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள 26 கட்சிகளின் தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. அதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது.
குறிப்பாக காஷ்மீருக்கு விரைவில் மாநில அந்தஸ்து வழங்கவேண்டும் என்று இந்தியா கூட்டணி சார்பில் ஒருமித்த கருத்துடன் தீர்மானம் நிறை வேற்றப்பட்டு தலைவர்களின் கூட்டறிக்கையாக வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.
மேலும் பாராளுமன்ற தேர்தலுக்கு தொகுதி பங்கீட்டை ஆரம்பிக்கவும் 19-ந் தேதி கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது.
- மதுரை நோக்கி வந்த கார் மின் கம்பத்தில் மோதி விபத்து ஏற்பட்டது.
- இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சுமார் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
திருப்பத்தூர்
மதுரையில் இருந்து பொன்னமராவதிக்கு பயணிகளுடன் வாடகை கார் ஒன்று புறப்பட்டது. இந்த காரை லியாகத் அலி என்பவர் ஓட்டி வந்தார். பயணிகளை இறக்கி விட்டு மீண்டும் அந்த கார் மதுரையை நோக்கி செல்லும்போது சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள ஆ.தெக்கூருக்கு வரும்போது திடீரென்று அந்த கார் கட்டுப் பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த மின் கம்பத்தில் மோதியது.
இதில் கார் தலை குப்புற கவிழ்ந்தது. டிரைவர் எந்தவித காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இருப்பினும் அந்த மின்கம்பம் சேதமானதால் அந்த பகுதி களில் மின்தடை ஏற்பட்டது. இதனால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் சத்தம் கேட்டு உடனடியாக நெற்குப்பை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் ஆய்வாளர் சுந்தர பாண்டி யன் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சுமார் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
- வாக்குவாதம் முற்றியதில் 2 பேரின் ஆதரவாளர்களும் கைகலப்பில் ஈடுபட்டனர்.
- ஒரு கட்டத்தில் போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.
நெல்லை:
சுதந்திர போராட்ட தியாகி வ.உ.சிதம்பரனாரின் 87-வது குருபூஜை விழா நேற்று நடைபெற்றது. இதனையொட்டி நெல்லை மாநகராட்சி அலுவலகம் எதிரே அமைந்துள்ள மணி மண்டபத்தில் அமைந்துள்ள அவரது முழு உருவச்சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதன் ஒரு பகுதியாக நேற்று மாலை 7 மணியளவில் ஒரு அமைப்பின் மகளிர் அணியின் மாநில நிர்வாகிகளான மதுரையை சேர்ந்த 2 பெண்கள் தங்களது ஆதரவா ளர்களுடன் மாலை அணிவிக்க வந்திருந்தனர். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதில் 2 பேரின் ஆதரவாளர்களும் கைகலப்பில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் ஒருவரையொருவர் தாக்கி கொண்டதோடு அங்கிருந்த கார்களை அடித்து நொறுக்கினர்.
இதனால் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை சமாதானம் செய்ய முயன்றனர். ஒரு கட்டத்தில் மாநகர போலீஸ் துணை கமிஷனர் சரவணக்குமார் தலைமையிலான போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இந்த சம்பவத்தில் குமரி மாவட்டத்தை சேர்ந்த ஒரு பட்டாலியன் போலீசுக்கு காயம் ஏற்பட்டதாகவும், அவர் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. பின்னர் 2 தரப்பினரும் சந்திப்பு போலீஸ் நிலையத்தில் மாறி மாறி புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வடகலை, தென்கலை பிரிவை சேர்ந்த ஏராளமானவர்கள் பிரபந்தம் பாடுவதற்காக குவிந்தனர்.
- இருதரப்பு அர்ச்சகர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. மோதல் ஏற்படும் சூழல் உருவானது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம், விளக்கொளி கோவில் தெருவில் வேதாந்த தேசிகர் கோவில் உள்ளது. இங்கு பிரபந்தம் பாடுவதில் வடகலை, தென்கலை பிரிவினர் இடையே தொடர்ந்து மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த கோவிலில் ஸ்ரணவ நட்சத்திரத்தை ஒட்டி வேதாந்த தேசிகர், வரதராஜ பெருமாள் கோவில் அருகே எழுந்தருளி மாட வீதிகளில் உலா வருவது வழக்கம்.
அன்படி இன்று காலை வேதாந்த தேசிகர் சுவாமி வீதி உலா வந்து வரதராஜ பெருமாள் கோவில் அருகே சன்னதி வீதியில் நடை பெற்றது. அப்போது வடகலை, தென்கலை பிரிவை சேர்ந்த ஏராளமானவர்கள் பிரபந்தம் பாடுவதற்காக குவிந்தனர்.
அப்போது, தென்கலை பிரிவினர் பிரபந்தம் பாடுவதற்க்கு நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதாக கூறி வடகலை பிரிவினர் வேதாந்த தேசிகர் முன்பு பிரபந்தம் பாட எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் வடகலை பிரிவினர் பிரபந்தம் பாடத்தொடங்கினர். இதனால் இருதரப்பு அர்ச்சகர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. மோதல் ஏற்படும் சூழல் உருவானது.
இதனால் அங்கிருந்த பக்தர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்ததும் விஷ்ணு காஞ்சி போலீசார் மற்றும் கோவில் செயல் அலுவலர் பூவழகி ஆகியோர் விரைந்து வந்து இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினர்.
இருதரப்பினரையும் சுவாமி ஊர்வலம் முன்பு பாடுவதற்கு போலீசாரும, இந்து சமய அறநிலைத்துறையினரும் அனுமதி அளித்த பின்பு தேசிகர் சுவாமி விதி உலா போலீசாரின் பாதுகாப்புடன் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து சன்னதி வீதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். பிரபந்தம் பாடுவதில் அர்ச்சகர்கள் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டதால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
விழுப்பரம்:
திருவெண்ணை நல்லூர் அருகே உள்ள டி. கொளத்தூரை சேர்ந்தவர் முருகன். விவசாயி.இவரது உறவினர் நாராயணன் (40). இருவரது வீடும் அருகருகே உள்ளது. இவர்கள் இருவருக்கும் வீட்டு மனை சம்பந்தமாக முன் விரோதம் இருந்து வந்தது. முருகன் வீட்டில் வளர்த்து வந்த கோழிகள் அடுத்தடுத்து காணாமல் போனது. இதனால் அதிர்ச்சி அடைந்த முருகன் மனைவி மான்விழி வீட்டின் வெளியே வந்து திட்டியதாக கூறப்படுகிறது.அப்போது அங்கு வந்த நாராயணன் எங்கள் வீட்டை பார்த்து ஏன் திட்டுகிறீர்கள் என கேட்டுள்ளார். இதனால் இரு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு அடிதடியாக மாறியது. இதில் முருகன், அவரது மனைவி மான்விழி, நாராயணன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்க ப்பட்டுள்ளனர்.
இது முருகன் அளித்த புகாரின் பேரில நாராயணன், வீரன், பிரபு (32)மற்றும் சிலர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். நாராயணன் அளித்த புகாரின் பேரில் முருகன், மான்விழி ஆகியோர் மீது திருவெண்ணை நல்லூர் சப்- இன்ஸ்பெக்டர் மணிகண்டன் வழக்கு பதிவு செய்தார். இதில் பிரபுவை போலீசார் கைது செய்தனர்.
- வீரபாபு சிறையில் தாக்கப்பட்ட சம்பவம் அறிந்ததும் அவரது உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து கைதிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் தாலுகா அலுவலக சாலையில் கிளைச் சிறைச்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு திண்டுக்கல் மற்றும் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
வடமதுரை திடீர் நகரைச் சேர்ந்த முருகன் மகன் வீரபாபு என்ற குட்டி (வயது 35) என்பவர் பைக் திருட்டு வழக்கில் திண்டுக்கல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். நேற்று இரவு இவருக்கும், மதுரையைச் சேர்ந்த மற்றொரு கைதிக்கும் எங்கே தூங்குவது என்ற பிரச்சினையில் வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்னர் இது கைகலப்பாக மாறி இரு தரப்பினரும் மோதிக் கொண்டனர். வீர பாபுவை மற்றொரு தரப்பினர் கடுமையாக தாக்கியதில் அவர் பலத்த காயமடைந்தார். இதனையடுத்து சிறைக்காவலர்கள் அவரை ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர்.
அங்கு அவருக்கு போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மீண்டும் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதனிடையே வீரபாபு சிறையில் தாக்கப்பட்ட சம்பவம் அறிந்ததும் அவரது உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இது குறித்து நகர் மேற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து கைதிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் சிறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- பெரம்பலூரில் நடந்த கல்குவாரி ஏலத்தில் பயங்கர மோதல் நடைபெற்றது
- அமைச்சர் உதவியாளர் உள்பட தி.மு.க.வினர் 10 பேர் மீது 8 பிரிவுகளில் வழக்கு
பெரம்பலுார், அக்.31-
பெரம்பலுார் மாவட்டத்தில், பெரம்பலுார் மற்றும் ஆலத்துார் யூனியனில் உள்ள, 31 கல் குவாரிகளை, இன்று (செவ்வாய் கிழமை) ஏலம் விடுவதாக, பெரம்பலுார் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை அறிவிப்பு வெளியிட்டது.அதன்படி, ஏற்கனவே செயல்படும், 19 பழைய பிட் கல் குவாரிகளுக்கு, ஒரு குவாரிக்கு தலா, 1.36 கோடி ரூபாயும், 12 புது பிட் கல் குவாரிகளுக்கு, ஒரு குவாரிக்கு தலா 2 கோடி ரூபாயும் என டெண்டர் தொகை நிர்ணயிக்கப்பட்ட டது.
இதற்கான விண்ணப்பங்களை பெறுவதற்காக கலெக்டர் அலுவலக வளாகத்தில் முதல் தளத்தில் உள்ள புவியியல் மற்றும் சுரங்கத்துறை அலுவலகத்தில் பெட்டி வைக்கப்பட்டது.டெண்டர் பெறும் பணியில் கரூர் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை துணை இயக்குனர் மற்றும் பெரம்பலூர் மாவட்ட உதவி இயக்குனர் ஜெயபால் மற்றும் துறை ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர்.
இதனால் அந்த அலுவல கத்தில் ஏராளமானவர்கள் கூடியிருந்தனர். அதில் தி.மு.க.வினர் பெரும்பான் மையாக திரண்டிருந்தனர்.
இதில் தி.மு.க.வினர் வேறு எவரையும் டெண்டர் சமர்ப்பிக்க அனுமதிக்க வில்லை என்று கூறப்படு கிறது. போலீசாரும் அங்கு பாதுகாப்புக்காக குவிக்க ப்பட்டு இருந்தனர். இந்நிலையில், பா.ஜ.க. வைச் சேர்ந்த, பெரம்பலுார் மாவட்டம், கவுல்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் கலைச்செல்வன் (வயது 48) என்பவர், தன் தம்பி முரு கேசன் என்பவருக்கு, கல் குவாரி டெண்டருக்கு விண்ணப்பிப்பதற்காக, பா.ஜ.க தொழில் துறை பிரிவு மாவட்ட தலைவர் முருகேசனுடன் பெரம்ப லுார் கலெக்டர் அலுவல கத்துக்கு வந்தார்.அங்குள்ள புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள பெட்டி யில் விண்ணப்பத்தை போடுவதற்காக, விண்ணப்பம் மற்றும் 50 ஆயிரத்திற்கான 2 வங்கி வரைவோலையுடன் சென்றார்.
அப்போது அங்கு நின்று கொண்டிருந்த தி.மு.க.வினர் அவர்களை தடுத்தனர். இதனால் கலெக்டர் அலுவ லகத்தின் முதல் தளத்தி லேயே பா.ஜ.க. மற்றும் தி.மு.க.வினர் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.இதில் கலைச் செல்வன் கட்டையால் தாக்கப்பட்டார். விண்ணப்பங்கள் கிழித்தெ றியப்பட்டது. டெண்டர் செலுத்து வதற்காக வைக்கப் பட்டிருந்த மரத்தடுப்புகள் உடைத்து சேதப்படுத் தப்பட்டன. இதனை தடுக்க வந்த அரசு அலுவலர்கள், பாது காப்பிற்காக நிறுத்தப்ப ட்டிருந்த போலீஸ் அதிகாரி கள் உள்ளிட்டோர் தாக்கப் பட்டனர்.
அலுவலகம் சூறையா டப்பட்டதில் ஆவணங்கள், விண்ணப்பங்கள் கீழே சிதறி கிடந்தன. இதனால் கலெக்டர் அலுவலகம் முதல் தளம் போர்க்களம் போல காட்சி அளித்தது.
இந்த தகராறில் காயம டைந்த ஊராட்சி மன்ற தலைவர் கலைச்செல்வன், பெரம்பலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு பழனி சாமி, நெடுஞ்சாலை போக்கு வரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் சுப்பையன், அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ் பெக்டர் கலா, பெரம்பலூர் சப் இன்ஸ்பெக்டர் சண்மு கம், பெண் போலீஸ் ஏட்டு லட்சுமி மற்றும் மாவட்ட உதவி புவியியலாளர் இளங்கோவன், புவியியல் துறை வருவாய் ஆய்வாளர் குமரி அனந்தன் ஆகியோர் பெரம்பலூர் மருத்துவ மனையில் வெளி நோயாளி களாக சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.இச்சம்பவம் தொடர்பான புகாரின் அடிப்படையில் அமைச்சர் சிவசங்கரின் உதவியாளர் உள்பட தி.மு.க.வினர் 10 பேர் மீது 8 பிரிவின் கீழ் பெரம்பலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே இதைய றிந்து, கனிம வளத்துறை அலுவலகத்திற்கு விரைந்து வந்த கலெக்டர் கற்பகம், சட்டம் ஒழுங்கு பிரச்னையை கருதி கல் குவாரி டெண்டரை தற்காலிகமாக ரத்து செய்து உத்தரவிட்டார்.
- கடந்த ஒரு ஆண்டாக மாணவர்க ளிடையே சிறு, சிறு மோதல் ஏற்பட்டு வருவதும், மாணவர்கள் ஆசிரியர் மீது கல் எரிந்து பிரச்சினையில் ஈடுபடுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது
- ஆசிரியர்கள் தாரமங்கலம் போலீசாருக்கு கொடுத்த தகவலின் பேரில் போலீசார் பள்ளிக்கு விரைந்து வந்தனர். போலீசாரை பார்த்ததும் மாணவர்கள் மற்றும் வெளிநபர்கள் அங்கிருந்து கலைந்து சென்றுவிட்டனர்.
தாரமங்கலம்:
சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள ராமிரெட்டிப்பட்டி ஊராட்சியில் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளி யில் 740 மாண வர்கள் பயின்று வருகின்ற னர். 20 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்தப் பள்ளியில் கடந்த ஒரு ஆண்டாக மாணவர்க ளிடையே சிறு, சிறு மோதல் ஏற்பட்டு வருவதும், மாணவர்கள் ஆசிரியர் மீது கல் எரிந்து பிரச்சினையில் ஈடுபடுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்த நிலையில் சம்பவத் தன்று மாலை மாணவர்கள் 2 பிரிவினர் இடையே வாய் தகராறு ஏற்பட்டு பள்ளி வளாகத்திலேயே ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து மோதலில் ஈடுபட்ட மாணவர்கள் தங்களின் வெளி நண்பர்களுக்கு போன் மூலம் தகவல் தெரிவித்து பள்ளிக்கு வரவழைத்து பெரும் மோதலில் ஈடுபட ஆயத்தமாகினர்.
இந்த தகவல் அறிந்த ஆசிரியர்கள் தாரமங்கலம் போலீசாருக்கு கொடுத்த தகவலின் பேரில் போலீசார் பள்ளிக்கு விரைந்து வந்தனர். போலீசாரை பார்த்ததும் மாணவர்கள் மற்றும் வெளிநபர்கள் அங்கிருந்து கலைந்து சென்றுவிட்டனர்.
இதையடுத்து நேற்று பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் தங்கராஜ், தலைமை ஆசிரியர் உமாராணி ஆகியோர் மோதலில் ஈடுபட்ட மாணவர்களின் பெற்றோரை பள்ளிக்கு வரவழைத்தனர்.
தொடர்ந்து தாரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தொல்காப்பியன், சப்-இன்ஸ்பெக்டர் முரளி தரன் உள்ளிட்டோர் முன்னி லையில் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது தவறான நடவடிக்கையில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தனர். மேலும் இதுபோன்ற மோதல்கள் உருவாகாமல் இருக்க பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கூட்டம் நடத்தி மாணவர்களின் போக்கை கண்காணித்து ஒழுங்கு படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்