என் மலர்
நீங்கள் தேடியது "Conflict"
- ஈரான் மீது ஒரு பெரிய புதிய தாக்குதலை நடத்த டிரம்ப் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
- அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த ஈரான் தயாராக உள்ளது.
ஈரானில் அரசு மற்றும் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமெனிக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருகிறது. இதில் போராட்டக்காரர்களுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்தது.
போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினால் ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ஈரான் அரசை அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்தார்.
மேலும் ஈரானை நோக்கி அமெரிக்காவின் மிகப்பெரிய கடற்படை செல்வதாக அறிவித்தார். அதன்படி யு.எஸ்.எஸ் ஆபிரகாம் லிங்கன் விமா னம் தாங்கி கப்பல் படைப்பிரிவு ஈரானை நெருங்கி உள்ளது. இதற்கிடையே டிரம்ப் அணு ஆயுதங்கள் இல்லாத ஒப்பந்தம் தொடர்பாக ஈரான் பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டும்.
ஈரானின் அணுசக்தித் திட்டம் குறித்த ஒப்பந்தத்தை பேச்சுவார்த்தை மூலம் எட்டுவதற்கு காலம் கடந்து கொண்டிருக்கிறது. இல்லையென்றால் முன்பை விட ஈரான் மீது மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்படும் என்றார். ஆனால் டிரம்பின் மிரட்டலுக்கு ஈரான் பதிலடி கொடுத்தது.
அந்நாட்டு வெளியுறவு மந்திரி அப்பாஸ் அராக்சி கூறும் போது,"எங்கள் துணிச்சலான ஆயுதப் படைகள், எங்களது நிலம், வான் மற்றும் கடலுக்கு எதிரான எந்த வொரு ஆக்கிரமிப்புக்கும் உடனடியாகவும் சக்திவாய்ந்ததாகவும் பதிலடி கொடுக்கத் தயாராக உள்ளன" என்றார்.
இந்த நிலையில் ஈரானின் அணுசக்தி திட்டம் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணை உற்பத்தியைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே நடந்த ஆரம்பகட்ட பேச்சுவார்த்தைகளில் எந்த முன்னேற்றமும் ஏற்பட வில்லை. இதனால் ஈரான் மீது ஒரு பெரிய புதிய தாக்குதலை நடத்த டிரம்ப் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
ஈரானின் பாதுகாப்பு அதிகாரிகளை இலக்காகக் கொண்ட அமெரிக்க ராணுவ வான்வழித் தாக்குதல்கள் மற்றும் ஈரான் அணுசக்தி தளங்கள், அரசாங்க நிறுவனங்கள் மீது தாக்குதல்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே ஈரான் பாராளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப் கூறும்போது, அணு ஆயுதங்கள் குறித்த ஒப்பந்தத்தை எட்டுவதில் பேச்சுவார்த்தைகள் உண்மையானவையாக இருந்தால் மட்டுமே அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த ஈரான் தயாராக உள்ளது.
அதேநேரத்தில் ஈரான் மீது தாக்குதல் நடத்தினால் அமெரிக்க வீரர்களுக்குத் தீங்கு விளை விக்கப்படும் என்றார். அமெரிக்கா-ஈரான் இடையேயான எந்த நேரத்தி லும் மோதல் ஏற்படும் சூழல் நிலவி வருகிறது. இதனால் மத்திய கிழக்கில் பதற்றம் நீடித்து வருகிறது.
- சம்பவத்தன்று சுனாமி நகரில் புறம்போக்கு இடத்தில் ஒரு சிலர் வேலி அமைத்து ஆக்கிரமிப்பில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
- பக்கிரி மனைவி உஷா என்பவரை சங்கர்தாஸ் மற்றும் ஒரு சில சேர்ந்து நெட்டி தள்ளினர்.
கடலூர்:
கடலூர் முதுநகர் செல்லங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சங்கரதாஸ் (வயது 46). இவரது மனைவி ராஜலக்ஷ்மி. இவர் 36- வது வார்டு மாநகராட்சி கவுன்சிலராக உள்ளார். சம்பவத்தன்று சுனாமி நகரில் புறம்போக்கு இடத்தில் ஒரு சிலர் வேலி அமைத்து ஆக்கிரமிப்பில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனை சங்கரதாஸ் அகற்றும் போது அதே பகுதியை சேர்ந்த பக்கிரி என்பவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் பக்கிரி உள்ளிட்ட சிலர் சங்கர் தாஸை அடித்து கொலை மிரட்டல் விடுத்தனர். மேலும் பக்கிரி மனைவி உஷா என்பவரை சங்கர்தாஸ் மற்றும் ஒரு சில சேர்ந்து நெட்டி தள்ளினர்.
இதில் சங்கரதாஸ், உஷா ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. இது குறித்து கடலூர் முதுநகர் போலீஸ் நிலையத்தில் சங்கர்தாஸ் கொடுத்த புகாரின் பேரில் கவியரசன், பக்கிரி, குப்புராஜ், வினோ, ரவீந்திரன் உள்ளிட்ட 8 பேர் மீதும், உஷா கொடுத்த புகாரின் பேரில் சங்கரதாஸ், வெள்ளையன், கபிலன் உள்ளிட்ட 6 பேர் மீதும் என மொத்தம் 14 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.
- கல்லூரியில் 2-ம் ஆண்டு என்ஜினீயர் படிக்கும் மாணவி ஒருவரை, இருவரும் காதலித்து வந்தனர்.
- நடுரோட்டில் உருட்டு கட்டை கொண்டு தாக்கி கொண்ட, வீடியோ வெளியானது.
கடலூர்:
விருத்தாசலம் அருகே மேலப்பாளையூர் கிராமத்தை சேர்ந்தவர் ரவிக்குமார் . அவரது மகன் வருண்குமார் இவரும், கீழப்பாளையூர் கிராமத்தை சேர்ந்த சுதாகரன் என்பவரும், பெரம்பலூரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகின்றனர். இவர்கள் அதே கல்லூரியில் 2-ம் ஆண்டு என்ஜினீ யர் படிக்கும் மாணவி ஒருவரை, இருவரும் காதலித்து வந்தனர். . இவர்கள் இருவரும் ஒரே பெண்ணை காதலிப்பதால், 2பேருக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்தது. சம்பவத்தன்று கல்லூரி செல்வதற்காக சுதாகரனும், வருண்குமாரும், கல்லூரி பஸ்சுக்காக கருவேப்பி லங்குறிச்சி பஸ் நிறுத்தத்தில் காத்துக் கொண்டிருந்தனர்.
அப்போது கல்லூரி மாணவியியை காதலிப்பது குறித்து ஏற்பட்ட பிரச்சினையால் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் ஒரு கட்டத்தில், 2 மாணவர்களும் மற்றும் அவர்கள் சக கல்லூரி மாணவருடன் ஒன்றிணைந்து, ஒருவரு க்கொருவர் உருட்டு கட்டை கொண்டு கொடூரமாக தாக்கிக் கொண்டனர். தகவல் அறிந்து அங்கு வந்த கருவேப்பிலங்குறிச்சி போலீசார் நடுரோட்டில் சண்டை போட்டுக் கொண்டிருந்த 6 கல்லூரி மாணவ ர்களையும் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் காவல்துறையினர் இதுபோல் சம்பவத்தில் ஈடுபடக் கூடாது என எச்சரிக்கை விடுத்து, வழக்கு எதுவும் பதியாமல் வீட்டுக்கு, அனுப்பி வைத்தனர். கல்லூரி மாணவி காதலிப்பது குறித்து ஏற்பட்ட பிரச்சனையால், கல்லூரி மாணவர்கள் நடுரோட்டில் உருட்டு கட்டை கொண்டு தாக்கி கொண்ட, வீடியோ வெளியாகி விருத்தாசலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- சங்கராபுரம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ 2-ம் ஆண்டு படித்து வருகிறார்கள்.
- மாணவர் ஆபாசமாக திட்டி, கையில் அணிந்திருந்த சில்வர் வளையத்தால் தாக்கியதாக கூறப்படுகிறது
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் மற்றும் ஆலத்தூரை சேர்ந்த 17 வயது மாணவர்கள் இருவர் சங்கராபுரம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ 2-ம் ஆண்டு படித்து வருகிறார்கள். சங்கராபுரம் பஸ் நிலையத்திற்கு வந்த சங்கராபுரம் மாணவரின் பையை, ஆலத்தூர் மாணவர் பிடுங்கியதாக தெரிகிறது. இதனால் அவர்களுக்கிடையே சண்டை ஏற்பட்டது.
இந்த நிலையில் கல்லூரி அருகே நின்று கொண்டிருந்த சங்கராபுரம் மாணவரை, ஆலத்தூர் மாணவர் ஆபாசமாக திட்டி, கையில் அணிந்திருந்த சில்வர் வளையத்தால் தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து சங்கராபுரம் போலீஸ் நிலையத்தில் மாணவர் கொடுத்த புகாரின் பேரில் ஆலத்தூர் மாணவர் மீது சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- இதனை பார்த்த அருண்குமாரின் தாய் இளவரசி தடுக்க முயன்ற போது அவரையும் அடித்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
- அருண்குமார், இளவரசி மற்றும் குணசங்கர் ஆகிய 3 பேரும் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
கடலூர்:
கடலூர் பெரியகாரைக்காடு பகுதியை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 26). இவரது பெரியப்பா காசிநாதனுக்கும், அதே பகுதியை சேர்ந்த ரவிக்குமார் என்பவருக்கும் முன் விரோத தகராறு இருந்து வந்தது. சம்பவத்தன்று அருண்குமாரை , குணசங்கர், ரவிக்குமார் மற்றும் ஒரு சிலர் சேர்ந்து தாக்கினார்கள். அப்போது இதனை பார்த்த அருண்குமாரின் தாய் இளவரசி தடுக்க முயன்ற போது அவரையும் அடித்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் இந்த தகராறில் குணசங்கர் என்பவரை தாக்கியதால் அவருக்கும் காயம் ஏற்பட்டது.
இதன் காரணமாக அருண்குமார், இளவரசி மற்றும் குணசங்கர் ஆகிய 3 பேரும் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இது குறித்து அருண்குமார் கொடுத்த புகாரின் பேரில் குணசங்கர், ரவிக்குமார் உள்பட 6 பேர் மீதும், குணசங்கர் கொடுத்த புகாரின் பேரில் அருண்குமார் உள்பட 4 பேர் மீதும் என 10 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கார் மீது வேன் மோதியதில் அ.தி.மு.க. பிரமுகர் பலியானார்.
- மேலும் கொரியர் வேன் டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதி வேடர்புளியங்குளம் வி.பி.சிந்தன் நகர் அ.தி.மு.க. கிளைச் செயலாளராக பணியாற்றி வந்தவர் முனியாண்டி (வயது56). இவரது மனைவி முத்துப்பிள்ளை. இவர்களுக்கு 1 மகள், 2 மகன்கள் உள்ளனர். முனியாண்டி தனக்கன்குளம் பகுதியில் இருந்து நான்கு வழிச்சாலையை கடந்து வேடர் புளியங்குளத்திற்கு காரில் சென்றார்.
அப்போது ஆவியூரில் இருந்து பெரியகுளம் நோக்கி சென்ற கொரியர் வேன், கார் மீது மோதியது. இதில் கார் கவிழ்ந்து முனியாண்டி படுகாயமடைந்து பரிதாபமாக இறந்தார்.
இது பற்றி தகவல் கிடைத்ததும் ஆஸ்டின்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முனியாண்டி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொரியர் வேன் டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நடந்த உண்மைகளை சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. தெளிவாக பதில் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
- தொண்டர்களை தாக்கிய கே.எஸ்.அழகிரியை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
நெல்லை:
அம்பை வட்டார முன்னாள் காங்கிரஸ் தலைவர் சங்கரநாராயணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி தன் பதவி போய்விடும் என்று பதறி தொண்டர்களை அடித்தது வீடியோக்கள் மூலம் ஆதாரத்துடன் தெரிகிறது. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் மாவட்ட தலைவர் அனைவரையும் கூட்டம் போட்டு தன்னை எப்படியாவது காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று நினைத்து இதற்கு யார் மீதாவது பழி போட வேண்டும் என்று கருதி ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. மீது பழி சுமத்தி உள்ளார்.
நடந்த உண்மைகளை சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வப் பெரு ந்தகை எம்.எல்.ஏ. தெளிவாக பதில் அளித்துள்ளார். ஒவ்வொரு வட்டாரத் தலைவர்களும் தங்களை தாக்கியது கே.எஸ்.அழகிரி தான் என்று ஆதாரத்துடன் கூறி உள்ளார்கள். எந்தெந்த தொகுதியில் பிரச்சனைகள் இருக்கிறதோ அந்த தொகுதி எம்.எல்.ஏ.விடம் கூறுவார்கள். ஆனால் ரூபி மனோகரன் 5 நாட்களாகவே நாங்குநேரி–யில் இல்லை, சென்னையில் இருந்தார்.
அம்பை வட்டாரத்தில் இருந்து நான் 50 காங்கிரஸ் தொண்டர்களை அழைத்து சத்தியமூர்த்தி பவனுக்கு சென்றேன். ரூபி மனோகரன் தான் காரணம் என்றால் எனது தொகுதி எம்.எல்.ஏ. அவர் இல்லை. பிறகு எப்படி அவர் காரணமாவார்.
தொண்டர்களை தாக்கிய காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரியை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- வட மாநிலத்தைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் பணிபுரிந்துகின்றனர்.
- குடிபோதையில்,வடமாநில வாலிபர்களுக்குள் மோதல் ஏற்பட்டு, ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள பெரும்பாலி என்ற இடத்தில் உயர் தொழில் நுட்ப நெசவு பூங்கா செயல்பட்டு வருகிறது. இங்கு வட மாநிலத்தைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் பணிபுரிந்துகின்றனர். இந்த நிலையில், நேற்று இரவு குடிபோதையில்,வடமாநில வாலிபர்களுக்குள் மோதல் ஏற்பட்டு, ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்துஅங்கு சென்ற பல்லடம் போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
- மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக சண்முகம் மீது மோதியதில் படுகாயமடைந்தார்.
- திருவோணம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.
திருவோணம்:
தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே பில்லு வெட்டி விடுதிவிடுதி மூவர் ரோட்டில் வசித்து வருபவர் கூலி விவசாயி சண்முகம் (வயது 46).
இவர் சம்பவத்தன்று விவசாய பணியை முடித்துவிட்டு திருவோணம் மூவர் ரோடு பகுதியில் சின்னங்கோன்விடுதி செல்லும் சாலை அருகே காய்கறி வாங்கிக்கொண்டு நின்று கொண்டிருந்தார்.
அப்போது கந்தர்வகோட்டையில் இருந்து பட்டுக்கோட்டை நோக்கி பட்டுக்கோட்டை பாக்கியம் நகரை சேர்ந்த வீரபாண்டி (வயது 27) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக சண்முகம் மீது மோதியது. இந்த விபத்தில் அவர் படுகாயம் அடைந்தார்.
உடனே அக்கம் பக்கத்தினர் சண்முகத்தை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து திருவோணம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மூலக்குப்பம் கிராம த்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான திரவுபதி அம்மன் கோவில் உள்ளது.
- சூப்பிரண்டு சபியுல்லா சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார் .
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே மூலக்கு ப்பம் கிராம த்தில் இந்து சமய அறநிலை யத்துறைக்கு சொந்த மான திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலு க்கு சொந்த மான 2 ஏக்கர் நிலம் குத்தகை விடுவதில் இருதரப்பினர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதனால்அங்கு பதட்டம் நிலவியது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா சம்பவ இடத்திற்கு விரைந்துசென்று இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி னார் .பேச்சுவார்த்தையில் சமூகத் தீர்வு ஏற்பட்டதால் பதட்டம் தணிந்தது.
- மெலட்டூரில் இருந்து நரியனூர் வந்த கார் குமாரசாமி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
- பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
மெலட்டூர்:
தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, மெலட்டூர் அருகே உள்ள ஏர்வாடி கிராமத்தை சேர்ந்தவர் குமாரசாமி (வயது 40), விவசாயி, இவர் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் அன்னப்பன்பேட்டையில் இருந்து மெலட்டூர் நோக்கி வந்து கொண்டிருந்தார்.
நரியனூர் அருகே வந்தபோது எதிரே மெலட்டூரில் இருந்து நரியனூர் நோக்கி சென்ற கார் குமாரசாமி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த நிலையில் கிடந்த குமாரசாமியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே குமாரசாமி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து மெலட்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- காயமடைந்த இருவரும் திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.
- இருவரும் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த சப்-இன்ஸ்பெக்டர் 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தார்.
திருத்தணி:
திருத்தணி ஒன்றியம் கிருஷ்ணசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சரத்குமார் (வயது 38). இவர் தன் வீட்டின் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, எதிரே அதே கிராமத்தைச் சேர்ந்த தங்கராசு (32) ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளில் மோதி விபத்து ஏற்பட்டு உள்ளது.
இதனால் இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டு பின்னர் உருட்டு கட்டையால் தாக்கி கொண்டனர். காயமடைந்த இருவரும் திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். பின்னர் இது குறித்து இருவரும் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த சப்-இன்ஸ்பெக்டர் ராக்கி குமாரி 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தார்.






