search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "K.S.Alagiri"

    • காங்கிரஸ் கூட்டணி மூலமே பா.ஜ.கவை எதிர் கொள்ள முடியும் என்று முதலமைச்சர் கூறியுள்ளார்.
    • ராகுல்காந்தியின் பயணத்தை, முதலமைச்சர் மனதார பாராட்டியிருக்கிறார்.

    தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    இந்திய தேசிய காங்கிரஸ் பேரியக்கத்தின் 138-வது ஆண்டு நிறுவன நாளை, கொண்டாடிக் கொண்டிருக்கிற வேளையில், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  மிகுந்த நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் தருகிற வகையில் காங்கிரஸ் கட்சி குறித்து பேட்டி அளித்திருக்கிறார்.

    இதில், இந்தியாவின் பழமை வாய்ந்த இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி தேசிய அளவில் தன்னுடைய முக்கியத்துவத்தை இழந்துவிடவில்லை என்று கூறியதோடு, காங்கிரஸ் கட்சி உள்ளடக்கிய தேசிய கூட்டணியை உருவாக்குவதன் மூலம் பா.ஜ.க. கட்சியை 2024 இல் எதிர்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தியிருக்கிறார்.

    இது மதச்சார்பற்ற, ஜனநாயக சக்திகளுக்கு மிகுந்த நம்பிக்கையை அளிப்பதாக உள்ளது. அதற்காக தமிழக முதல்வரை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக மனதார பாராட்டுகிறேன், நன்றி கூறுகிறேன்.

    இந்திய ஒற்றுமைப் பயணத்தின் மூலம் இந்திய தேசிய காங்கிரசை ராகுல்காந்தி சரியான பாதையில் வழிநடத்தி செல்கிறார் என்று கூறியதோடு, வகுப்புவாத பா.ஜ.க.வுக்கு பொருத்தமான மாற்று மருந்தாக அவர் திகழ்கிறார் என்றும் மு.க. ஸ்டாலின் கூறியிருக்கிறார்.

    தேசிய அளவிலான கூட்டணி அமைத்து பா.ஜ.க.வை எதிர்ப்பதன் மூலமே அரசமைப்புச் சட்டம் உருவாக்கிய நிறுவனங்களை பாதுகாக்க முடியும் என்று கூறியதன் மூலம் அவரது தெளிவான அணுகுமுறை வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.

    கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி கன்னியாகுமரியில் ராகுல்காந்தி நடைபயணத்தை மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தது முதல் 110 நாட்களை கடந்து மக்கள் பேராதரவோடு எழுச்சிமிக்க பயணமாக நடைபெற்று வருகிறது.

    மக்கள் பேராதரவு குவிந்து வருவது அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் ஏற்படுத்துகிறது. இதுகுறித்து கருத்து கூறிய மு.க. ஸ்டாலின் ராகுல்காந்தி இந்திய ஒற்றுமைப் பயணம் நாட்டு மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாக கூறி அவரை மனதார பாராட்டியிருக்கிறார்.

    2003 இல் சோனியா காந்தியும், கருணாநிதியும் இணைந்து உருவாக்கிய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை மேலும் வலிமைப்படுத்தி, வழிநடத்துகிற வகையில் அதே கொள்கை பாதையில் மு.க. ஸ்டாலின் செயல்படுவது தமிழகத்தில் மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளுக்கு அரசியல் எதிர்காலம் குறித்து மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

    • நடந்த உண்மைகளை சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. தெளிவாக பதில் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
    • தொண்டர்களை தாக்கிய கே.எஸ்.அழகிரியை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

    நெல்லை:

    அம்பை வட்டார முன்னாள் காங்கிரஸ் தலைவர் சங்கரநாராயணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி தன் பதவி போய்விடும் என்று பதறி தொண்டர்களை அடித்தது வீடியோக்கள் மூலம் ஆதாரத்துடன் தெரிகிறது. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் மாவட்ட தலைவர் அனைவரையும் கூட்டம் போட்டு தன்னை எப்படியாவது காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று நினைத்து இதற்கு யார் மீதாவது பழி போட வேண்டும் என்று கருதி ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. மீது பழி சுமத்தி உள்ளார்.

    நடந்த உண்மைகளை சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வப் பெரு ந்தகை எம்.எல்.ஏ. தெளிவாக பதில் அளித்துள்ளார். ஒவ்வொரு வட்டாரத் தலைவர்களும் தங்களை தாக்கியது கே.எஸ்.அழகிரி தான் என்று ஆதாரத்துடன் கூறி உள்ளார்கள். எந்தெந்த தொகுதியில் பிரச்சனைகள் இருக்கிறதோ அந்த தொகுதி எம்.எல்.ஏ.விடம் கூறுவார்கள். ஆனால் ரூபி மனோகரன் 5 நாட்களாகவே நாங்குநேரி–யில் இல்லை, சென்னையில் இருந்தார்.

    அம்பை வட்டாரத்தில் இருந்து நான் 50 காங்கிரஸ் தொண்டர்களை அழைத்து சத்தியமூர்த்தி பவனுக்கு சென்றேன். ரூபி மனோகரன் தான் காரணம் என்றால் எனது தொகுதி எம்.எல்.ஏ. அவர் இல்லை. பிறகு எப்படி அவர் காரணமாவார்.

    தொண்டர்களை தாக்கிய காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரியை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடந்த சம்பவத்துக்கு தமிழ்நாடு மாநில தலைவர் கே. எஸ். அழகிரி தான் காரணம். அவர் ஒரு தொண்டனை கன்னத்தில் அடித்ததால் தான் அங்கே மோதல் வெடித்தது.
    • அவர் இந்த பிரச்சினையை சுமூகமாக முடித்திருக்கலாம். இந்த சம்பவத்துக்கும், ரூபி மனோகரன் எம்.எல்.ஏ.வுக்கும் கடுகளவும் சம்பந்தமும், காரணமும் கிடையாது.

    நெல்லை:

    நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் சந்திரசேகர் மற்றும் மாநில பொதுச்செயலாளர் குேளாரிந்தா, நீக்கப்பட்ட வட்டார தலைவர்கள் வாகைதுரை, ராமஜெயம், அலெக்ஸ், காலபெருமாள், நளன், நகர தலைவர் ரீமாபைசல், முத்துகிருஷ்ணன், ஜார்ஜ்வில்சன் ஆகியோர் பாளை கே.டி.சி.நகரில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடந்த சம்பவத்துக்கு தமிழ்நாடு மாநில தலைவர் கே. எஸ். அழகிரி தான் காரணம். அவர் ஒரு தொண்டனை கன்னத்தில் அடித்ததால் தான் அங்கே மோதல் வெடித்தது.

    நாங்கள் நீக்கப்பட்ட வட்டாரத் தலைவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து எங்களது ஆதரவாளர்களை திரட்டி சத்தியமூர்த்தி பவனில் போய் நியாயம் கேட்க சென்றோம். ஆனால் இதற்கு நாங்குநேரி எம்.எல்.ஏ. ரூபிமனோகரன் தான் காரணம் என்று பொய்யான பிரசாரம் செய்கிறார்கள். அது உண்மை கிடையாது. அவருக்கும் இந்தப் பிரச்சனைக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.

    பிரச்சனை நடந்த உடன் ரூபி மனோகரன் எங்களை அழைத்து கண்டித்து நீங்கள் பிரச்சனை செய்தால் எனது தொகுதிக்கு தான் கெட்ட பெயர், எனது பேச்சைக் கேளுங்கள் என்று அனைவரையும் சத்தம் போட்டு கண்டித்து ஒரு இடத்தில் அமைதியாக இருக்க வைத்தார். ஆனால் மாநிலத் தலைவர் எங்களை எந்த ஒரு பேச்சு வார்த்தைக்கும் அழைக்காமல் காரில் ஏறி சென்றார். அப்போது தான் நாங்களெல்லாம் ஓடிப்போய் அவர் சென்ற காரை மறித்தோம். எங்களுக்கு ஒரு பதில் சொல்லி விட்டு போங்கள் என்று கூறினோம்.

    அவர் பதில் கூறியிருக்கலாம். அல்லது 2, 3 நாளைக்கு பிறகு கூறுகிறேன் என்று சொல்லி இருக்கலாம். ஆனால் அவர் எங்களை ஒரு மணி நேரம் காக்க வைத்தார். பின்னர் 4, 5 பேர் அங்கு வந்து கம்பாளும், கம்பியாலும் எங்களை அடித்தார்கள். இந்த பிரச்சனை வளர முழுக்க முழுக்க காரணம் கே.எஸ் அழகிரி தான்.

    அவர் இந்த பிரச்சினையை சுமூகமாக முடித்திருக்கலாம். இந்த சம்பவத்துக்கும், ரூபி மனோகரன் எம்.எல்.ஏ.வுக்கும் கடுகளவும் சம்பந்தமும், காரணமும் கிடையாது.

    நாங்கள் எங்கள் பணத்தை செலவு செய்து வந்துள்ளோம். எங்களது கோரிக்கையை நாங்கள் தான் கேட்போம். ரூபி மனோகரன் ஏன் எங்களுக்கு பணம் தர வேண்டும், அவசியமே இல்லை. ஆகவே காங்கிரஸ் வளர்ச்சி பெற வேண்டுமென்றால் இந்த மாநிலத் தலைவரை மாற்றினால் மட்டுமே நடைபெறும். அவர் முழுக்க முழுக்க மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்களை மட்டும் மாவட்ட தலைவராக போடுகிறார். கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்களை வட்டார தலைவராக போடுகிறார். அதனால்தான் காங்கிரஸ் கட்சி பின்னோக்கி இன்னும் சென்று கொண்டிருக்கிறது. உடனே மாநில தலைவரை மாற்றுவதற்கு இந்திய தேசிய காங்கிரஸ் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×