search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "inquiry"

    • வாக்காளர்களுக்கு பணம் சப்ளை செய்ய பணம் பதுக்கி வைத்திருப்பதாக பறக்கும் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • நடராஜன் வீட்டில் பணம் பதுக்கியது யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அருகே உள்ளது காங்குப்பம் கிராமம். இது அமைச்சர் துரைமுருகனின் சொந்த ஊர் ஆகும். இந்த கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன். விவசாயி.

    வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலும் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இவருடைய வீட்டில் வாக்காளர்களுக்கு பணம் சப்ளை செய்ய பணம் பதுக்கி வைத்திருப்பதாக பறக்கும் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. பறக்கும் படையினர் மற்றும் போலீசார் நேற்று இரவு அவரது வீட்டை சோதனையிட சென்றனர்.

    இதனை அறிந்ததும் நடராஜன் மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டை உள் பக்கமாக பூட்டி கொண்டனர். மேலும் வீட்டில் உள்ள அனைத்து மின்விளக்குகளையும் அணைத்துவிட்டனர்.

    இது பற்றிய தகவலறிந்த கே.வி.குப்பம் தாசில்தார் சந்தோஷ், இன்ஸ்பெக்டர் ஆதர்ஷ் மற்றும் போலீசார் அங்கு வந்து வீட்டின் கதவை பலமுறை கைகளால் தட்டினர். உடனடியாக கதவை திறக்கும்படி கூறினர்.

    ஆனாலும் நடராஜன் குடும்பத்தினர் கதவை திறக்கவே இல்லை. இது பற்றிய கே.வி.குப்பம் தாசில்தார் சந்தோஷ் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.

    அதன் பேரில் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மற்றும் குடியாத்தம் டி.எஸ்.பி. ரவிச்சந்திரன் உட்பட 100-க்கும் அதிகமான போலீசார் அங்கு விரைந்து வந்தனர். வீட்டின் மொட்டை மாடி வழியாக சென்று கதவை உடைத்து வீட்டுக்குள் புகுந்தனர்.

    மொட்டை மாடியில் கட்டு கட்டாக ரூ.2.5 லட்சம் மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் சிதறி கிடந்தன அவற்றை பறிமுதல் செய்தனர்.

    வீட்டுக்குள் சென்று அதிரடியாக சோதனை நடத்தினர். அங்கு பதுக்கி வைத்திருந்த ரூ.5 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர்.

    போலீசாரை கண்டதும் நடராஜன் மற்றும் அவருடைய மனைவி பதட்டமான நிலையில் காணப்பட்டனர். மேலும் எப்படி வீட்டுக்குள் வரலாம் என அதிகாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    ஆனாலும் அதிகாரிகள் அதைக் கண்டு கொள்ளாமல் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டனர்.

    நடராஜன் வீட்டில் பணம் பதுக்கியது யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அமைச்சர் துரைமுருகன் சொந்த கிராமத்தில் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. *** பணம் பதுக்கிய வீடு. 

    • பயணிகள் அனைவரும் முண்டியடித்து இறங்கி வேறு பெட்டியில் இடம் பிடிக்க ஓடினார்கள்.
    • பெட்டியில் என்ன பொருட்களை ஏற்றி அனுப்பினார்கள் என்று தெரியவில்லை. அப்போது அங்கு போலீசார் யாரும் இல்லை.

    சென்னை:

    தமிழ்நாடு லஞ்ச ஊழல் தடுப்பு விழிப்புணர்வு சங்க மாநிலத் தலைவர் புதூர் எஸ்.பி.முத்து இந்திய தலைமை தேர்தல் ஆணையாளருக்கு அனுப்பி உள்ள புகாரில் கூறி இருப்பதாவது:-

    தூத்துக்குடியில் இருந்து சென்னை எழும்பூர் செல்லும் முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன்பதிவு இல்லா பெட்டியில் கடநத 26-ந்தேதி இரவு 7.30 மணி யளவில் பயணிகள் ஏறி அமர்ந்திருந்தார்கள். அப்போது ரெயில் இரவு 8.25 மணிக்கு புறப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

    ஆனால் திடீரென 8 மணியளவில் ரெயிலின் கடைசி முன்பதிவில்லா பெட்டியில் அமர்ந்திருந்த பயணிகள் அனைவரையும் அடுத்த பெட்டியில் ஏறுங்கள். இதில் பார்சல்கள் ஏற்ற வேண்டும் என ரெயில்வே ஊழியர்கள் கூறி உள்ளனர்.

    இதனால் பயணிகள் அனைவரும் முண்டியடித்து இறங்கி வேறு பெட்டியில் இடம் பிடிக்க ஓடினார்கள். அதன் பின்னர் அந்தப் பெட்டியில் என்ன பார்சல் கள் ஏற்றப்பட்டது என்று தெரியவில்லை.

    லக்கேஜ் ஏற்றுவதற்கு என்று தனி பெட்டி இருந்தும் பயணிகள் பெட்டியில் ரெயில் புறப்படும் போது பயணிகளை இறங்க சொல்லி அந்த பெட்டியில் என்ன பொருட்களை ஏற்றி அனுப்பினார்கள் என்று தெரியவில்லை. அப்போது அங்கு போலீசார் யாரும் இல்லை.

    தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள சூழலில் இது போன்ற சம்பவங்களில் பணம் அல்லது போதை பொருள் ரெயிலில் கடத்தப்படுகிறதா என்று சந்தேகம் ஏற்படுகிறது.

    எனவே இது குறித்து ரெயில்வே ஆர்.பி.எப். அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி உண்மை நிலையை மக்களுக்கு விளக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் எஸ்.பி. முத்து கூறி உள்ளார். இதன் மீது விசாரணை நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • பலியானவர்களின் 5 பேரின் உடல்களை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மஞ்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
    • விபத்தில் பலியான தஸ்னிமா ஐக்கிய அரபு நாட்டில் இருந்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு தான் சொந்த ஊருக்கு வந்திருக்கிறார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் மஞ்சேரி அருகே உள்ள குட்டிப்பாறை பகுதியை சேர்ந்த 7 பேர் நேற்று மாலை ஆட்டோவில் சென்று கொண்டிருந்தனர். அந்த ஆட்டோவை அப்துல் மஜித்(வயது55) என்பவர் ஓட்டிச்சென்றார்.

    அவர்களது ஆட்டோ செட்டியங்காடு என்ற பகுதியில் சென்ற போது, எதிரே கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் வந்த பஸ் மோதியது. இந்த விபத்தில் ஆட்டோ முற்றிலுமாக நொறுங்கியது.

    இந்த விபத்தில் ஆட்டோ டிரைவர் அப்துல் மஜித், தஸ்னிமா(33), அவரது குழந்தைகள் ரின்ஷா பாத்திமா(12), ரைஹா பாத்திமா(4), சகோதரி முஹ்சினா(35) ஆகிய 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள்.

    ஆட்டோவில் இருந்த மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்கள் உதவியுடன் மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஆட்டோவில் சிக்கிக் கிடந்தவர்களை மீட்டனர்.

    பின்பு படுகாயம் அடைந்தவர்கள் கோழிக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பலியானவர்களின் 5 பேரின் உடல்களை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மஞ்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக பஸ்சில் வந்த ஐயப்ப பக்தர்கள் யாரும் காயம் அடையவில்லை. சாலை திருப்பத்தில் பஸ் வேகமாக திரும்பிய போது தவறுதலாக ஆட்டோ மீது மோதியதாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

    இந்நிலையில் விபத்தில் பலியானவர்கள் பற்றி உருக்கமான தகவல்கள் கிடைத்துள்ளன. பலியான ஆட்டோ டிரைவர் அப்துல் மஜித் தனது மகளுக்கு திருமணத்திற்கான ஏற்பாடுகளை செய்து வந்தார். அதற்கான வேலைகளில் ஈடுபட்டிருந்த நிலையில், மகள் திருமணத்திற்கு சில நாட்களே உள்ள நிலையில் அவர் பரிதாபமாக இறந்துவிட்டார்.

    இதே போல் விபத்தில் பலியான தஸ்னிமா ஐக்கிய அரபு நாட்டில் இருந்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு தான் சொந்த ஊருக்கு வந்திருக்கிறார். அப்போது புல்லூரில் உள்ள உறவினர்களை பார்ப்பதற்காக சென்ற போது தனது 2 குழந்தைகள் மற்றும் சகோதரியுடன் பலியாகிவிட்டார்.

    இந்த விபத்து பலியானவர்களின் குடும்பத்தினர் மட்டுமின்றி, விபத்து நடந்த பகுதியைச் சேர்ந்தவர்களையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • இறந்து போன சுப்பிரமணியன் பெயரில் அதே ஊரில் உள்ள 13 ஆர் நிலம் இருந்தது.
    • உயிரோடு இருப்பது போல போலி ஆதாரம் தயார் செய்து பத்திரப்பதிவு செய்து இருக்கின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    திருக்கோவிலூர் அருகே உள்ள மேமாலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை (வயது 37). இவரது தந்தை சுப்பிரமணியன் கடந்த 2009-ம் ஆண்டு ஜூலை மாதம் 11-ந் தேதி இறந்து விட்டார். இறந்து போன சுப்பிரமணியன் பெயரில் அதே ஊரில் உள்ள 13 ஆர் நிலம் இருந்தது. இதனை சங்கராபுரம் தாலுக்கா அலியாபாத் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை மனைவி மலர் மற்றும் வக்கீல் கார்த்திகேயன் ஆகியோர் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 17-ந் தேதி திருக்கோவிலூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் சுப்பிரமணியன் உயிரோடு இருப்பது போல போலி ஆதாரம் தயார் செய்து பத்திரப்பதிவு செய்து இருக்கின்றனர். இதனை தெரிந்து கொண்ட ஏழுமலை கொடுத்த புகாரின் பேரில் திருக்கோவிலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் அலியாபாத் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை மனைவி மலர் மற்றும் வக்கீல் கார்த்திகேயன் ஆகிய இரண்டு பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • உளுந்தூர்பேட்டை அருகே இரும்பு கம்பி திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரம் வைக்கப்பட்டிருந்த இரவிலும் ஒளிரும் ஸ்டிக்கர் பைப்புகளை போதையில் திருடி விற்றனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள கருவேப்பிலைபாளையத்தைச் சேர்ந்தவர்கள் ஏழுமலை (வயது 48),ஆறுமுகம் (32),வெங்கடேசன் (35) மற்றொரு ஏழுமலை (35) ஆகியோர் கடலூர் சித்தூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரம் வைக்கப்பட்டிருந்த இரவிலும் ஒளிரும் ஸ்டிக்கர் பைப்புகளை போதையில் திருடி விற்றனர். இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை கண்கானிப்பாளார் முகேஷ் திருநாவலூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் ராமதாஸ் விசாரணை நடத்தி ஏழுமலை, மற்றொரு ஏழுமலை ஆகியோரை கைது செய்தார். ஆறுமுகம்,வெங்கடேசன் ஆகியோரை தேடி வருகிறார்.

    • புதுப்பேட்டையில் புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • பண்ருட்டிபோலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரசன்னா தீவிர ரோந்து பணியில் இருந்தார்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே புதுப்பேட்டை போலீஸ் சரகத்தில் கடைவீதியில் புகையிலை பொருட்கள் விற்ற சண்முகநாடார் நகரை சேர்ந்த வெங்கடேசன் (வயது38) என்பவரிடம் இருந்து ரூ.210 பணம் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். அங்குசெட்டிப்பாளையம் மெயின்ரோட்டில் புகையிலை பொருட்கள் விற்ற பூபாலன் (வயது35) கைது செய்தனர். இதுகுறித்து புதுப்பேட்டை போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.

    இதே போல் பண்ருட்டிபோலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரசன்னா தீவிர ரோந்து பணியில் இருந்தார். அப்போது பண்ருட்டி எழில் நகரில் மளிகை கடை நடத்தி வரும் அருள் ஜோதி நகரை சேர்ந்த ஜெயச்சந்திரன்(52) தனது மளிகை கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. போலீசார் இவர் மீத வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 8மணி அளவில் கடைக்கு சென்று வருவதாக கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை.
    • விழுப்புரத்தை சேர்ந்த வாலிபருடன் அடிக்கடி பேசி வந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    கடலூர்:

    பண்ருட்டி திருவதிகை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் குமார் இவரது மகள் மகாலட்சுமி (17). பிளஸ்-2மாணவி.இவர்நேற்றிரவு 8மணி அளவில் கடைக்கு சென்று வருவதாக கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து மாணவியின் தாய் மகாலட்சுமியின் தாய் சரளாதேவி கொடுத்த புகாரின் பேரில் பண்ரு ட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர். காணாமல் போன மகாலட்சுமி விழுப்புரத்தை சேர்ந்த வாலிபருடன் அடிக்கடி பேசி வந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    • ரேவதி பண்ருட்டியில் உள்ள தனியார் ஐ.ஏ.எஸ். அகாட மியில் படித்து வந்தார்.
    • இரவு வெகுநேரமாகியும் ரேவதி வீடு திரும்பவில்லை.

    கடலூர்:

    குறிஞ்சிப்பாடியை அடுத்த மதனகோபால புரத்தில் உள்ள கோ.சத்தி ரத்தை சேர்ந்தவர் பழனி மகள் ரேவதி (வயது 22). இவர் பண்ருட்டியில் உள்ள தனியார் ஐ.ஏ.எஸ். அகாட மியில் படித்து வந்தார். ரேவதியின் உறவினர், மோட்டார் சைக்கிளில் அழைத்துவந்து பண்ருட்டி யில் உள்ள தனியார் ஐ.ஏ.எஸ். அகாடமியில் நேற்று காலை விட்டுச் சென்றார். இரவு வெகுநேரமாகியும் ரேவதி வீடு திரும்பவில்லை.

    அவரது பெற்றோர் ரேவதியை உறவினர் மற்றும் நண்பர்களின் வீடுகளில் தேடினர். அவர் எங்கும் கிடைக்கவில்லை. இது குறித்து ரேவதியின் பெற்றோர் பண்ருட்டி போலீ சாரிடம் புகாரளித்தனர். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், காணாமல் போன மாணவி யை தேடி வருகின்றனர்.

    • பிரியா நேற்று முன்தினம் இரவு தனது பெற்றோருடன் தூங்கி கொண்டு இருந்தாள்.
    • இது குறித்து திருவெண்ணைநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணை நல்லூர் அருகே உள்ள சாராய மேடு கிராமத்ைத சேர்ந்தவர் அரவிந்த். விவசாய கூலித் தொழிலாளி. இவரது மகள் பிரியா (5). இவள் அதே பகுதியில் உள்ள ஊட்டச்சத்து மையத்தில் படித்து வந்தாள். பிரியா நேற்று முன்தினம் இரவு தனது பெற்றோருடன் தூங்கி கொண்டு இருந்தாள். அதிகாலையில் அவளை பாம்பு கடித்தது. கன்னத்தில் கடித்ததால் சிறுமி கதறினாள்.சத்தம் கேட்டு பெற்றோர் எழுந்தனர். அப்போது சிறுமியை கடித்த பாம்பு அங்கு மயங்கிய நிலையில் கிடந்ததை கண்டு சத்தம் போட்டனர்.

    இதனை கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் சிறுமியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம் பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை 10.30 மணிக்கு இறந்தாள். இது குறித்து திருவெண்ணை நல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கடந்த 29-ந் தேதி 12 மணியளவில் முந்திரி தோப்புக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை.
    • தனது மகள் பிரியா 15 பவுன் நகையுடன் காணாமல் போனதாக கூறியுள்ளார்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்த மேலி ருப்பு தெற்கு தெருவை சேர்ந்த வர் ஞானப்பிரகாசம் மகள் பிரியா (வயது 25). இவர் கடந்த 3 வருடங்க ளுக்கு முன்பு கடலூர் பெண்கள் கல்லூரில் படித்தார். பின்னர் வீட்டிலிருந்து முந்திரி வியாபாரம் செய்து வந்தார். கடந்த 29-ந் தேதி 12 மணியளவில் முந்திரி தோப்புக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை.

    பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், இவரது தந்தை ஞானபிரகாசம் காடாம்புலியூர் போலீசில் புகார் கொடுத்தார். புகாரில், தனது மகள் பிரியா 15 பவுன் நகையுடன் காணாமல் போனதாக கூறி யுள்ளார். இது குறித்து காடாம்புலியூர் இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன் மற்றும் போலீ சார் வழக்கு பதிவு செய்து நகையுடன் காணாமல் போன இளம் பெண்ணை தேடி வருகின்றனர்.

    • உளுந்தூர்பேட்டை அருகே மின்சாரம் தாக்கி கட்டிட மேஸ்திரி பலியானார்.
    • கணபதி பாண்டூர் பகுதியில் உள்ள சக்திவேல் என்பவர் வீட்டில் கட்டிட வேலை பார்த்து வந்தார்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா உ.நெமிலி பகுதியை சேர்ந்தவர் கணபதி (வயது 28)கட்டிட மேஸ்திரி. இவர் நேற்று வழக்கம் போல் நெமிலி அருகே பாண்டூர் பகுதியில் உள்ள சக்திவேல் என்பவர் வீட்டில் கட்டிட வேலை பார்த்து வந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து கொடுத்த புகாரின்பேரில் உளுந்தூர்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் குணபாலன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நேற்று முதலாவது பணி முடித்துவிட்டு தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் திரும்பிக் கொண்டிருந்தார்
    • பழனிவேலுக்கு மீனாட்சி என்ற மனைவியும் ஒரு மகன் ஒரு மகளும் இருக்கின்றனர்.

    கடலூர்:

    நெய்வேலி புதுநகர் 3-வது வட்டம்என்.எல்.சி. குடியிருப்பில் வசித்து வந்தவர் பழனிவேல் (வயது 55). இவர் நெய்வேலி என்.எல்.சி. நிறுவனம் முதலாவது சுரங்கம் 1 ஏ பிரிவில் வேலை பார்த்து வந்தார். நேற்று முதலாவது பணி முடித்துவிட்டு தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் திரும்பிக் கொண்டிருந்தார். 2-வது வட்டம் மாணிக்கவாசகர் சாலை அருகே சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த கார் மீது இவரது மோட்டார் சைக்கிள் மோதியதில் சம்பவ இடத்திலேயே பழனிவேல் இறந்தார். விபத்தில் பலியான பழனிவேலுக்கு மீனாட்சி என்ற மனைவியும் ஒரு மகன் ஒரு மகளும் இருக்கின்றனர். இதுகுறித்து நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் 

    ×