search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "labourer"

    • அய்யூர் அகரம் கிராமத்தை சேர்ந்தவர் காத்தவராயன் மகன் அரிதாஸ்
    • உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னை

    விழுப்புரம்:

    விக்கிரவாண்டி அடுத்த அய்யூர் அகரம் கிராமத்தை சேர்ந்தவர் காத்தவராயன் மகன் அரிதாஸ் (வயது 25). இவர் பேக்கரியில் கூலி தொழிலாளியாக பணி செய்து வந்தார். அடிக்கடி மது சாப்பிட்டதால் தீராத வயிற்று வலி ஏற்பட்டு மன உளைச்சலில் இருந்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று காலை 9 மணிக்கு வீட்டில் இருந்து சென்றவர் மதிய சாப்பாட்டிற்கு வீட்டுக்கு வராததால், அவரது உறவினர்கள் தேடி வந்தனர். முண்டியம்பாக்கம் அருகே உள்ள ஒரத்தூர் ஏரிக்கரையில் உள்ள புளிய மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் தெரிய வந்தது. தகவல் அறிந்து. விக்கிரவாண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அரிதாசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக முண்டியம் பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக விக்கிரவாண்டி சப்-இன்ஸ்பெக்டர் காத்தமுத்து மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

    • கூலித்தொழிலாளர்களை ஏற்றி வந்த வேன் பனை மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
    • நரிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகேயுள்ள உலக் குடி பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளர்கள் மதுரை சிலைமான் பகுதி யில் இயங்கி வரும் தனியா ருக்கு சொந்தமான பந்து தயாரிக்கும் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார் கள். தினமும் கம்பெ னிக்கு சொந்தமான வேலைக்கு செல்வது வழக்கம்.

    இந்த நிலையில் உலக்குடி யில் இருந்து நேற்று காலை வேலைக்கு சென்ற உமா, முத்துமாரி, அனிதா, மல் லிகா, தமிழரசி, செல்வி, முருகேஸ்வரி மற்றும் பாண் டீஸ்வரி உள்பட 12 பேரும் வழக்கம் போல இரவு வேலைக்கு சென்று விட்டு வேனில் இன்று அதிகாலை யில் வீடு திரும்பி கொண்டி ருந்தனர்.

    அந்த வேனை சிவகங்கை மாவட்டம் திருப்பாசேத்தி பகுதியை சேர்ந்த முத்துப் பாண்டி (23) என்பவர் ஓட்டி வந்தார். அதிகாலை 2.45 மணியளவில் சாலை இலுப்பைகுளம் அருகே யுள்ள மாணிக்கனேந்தல் பேருந்து நிறுத்தம் அருகே வேன் வந்து கொண்டிருந்த போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த பனை மரத்தில் பயங்கர சத்தத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

    இதில் டிரைவர் முத்துப் பாண்டி மற்றும் தொழிலா–ளர்கள் உள்பட வேனில் பய ணம் செய்த 13 பேரும் படுகாயமடைந்தனர். மேலும் இந்த விபத்தில் உலக்குடி பகுதியை சேர்ந்த பாண்டீஸ்வரி (28) என்பவருக்கு கால் முறிந்தது.

    இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவம் இடத் திற்கு விரைந்து சென்ற போலீசார் மற்றும் தீய ணைப்புத்துறையினர் படு காயமடைந்த அனைவரை யும் மீட்டு உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலமாக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச் சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் நரிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • மின்சாரம் தாக்கியதில் செல்வம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
    • உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கும்பகோணம்:

    கும்பகோணம் அருகே கரிக்குளம் எம்.ஆர்.எம் காலனி பகுதியை சேர்ந்தவர் செல்வம் (வயது 55).

    தொழிலாளி. சம்பவத்தன்று இவர் தனது வீட்டில் உள்ள மின்விசிறியை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.

    அப்போது திடீரென செல்வத்தை மின்சாரம் தாக்கியது.

    இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த திருவிடைமருதூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து செல்வத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும், இதுகுறித்து திருவி டைமருதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • மேட்டூர் 4 ரோடு பஸ் நிறுத்தம் அருகே முதியவர் முரு கேசன் (60) கழுத்த றுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
    • சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் முதியவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

    மேட்டூர்:

    மேட்டூர் 4 ரோடு பஸ் நிறுத்தம் அருகே முதியவர் முரு கேசன் (60) கழுத்த றுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

    சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் முதியவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் மேட்டூர் சங்கிலி முனியப்பன் கோவில் பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி கார்த்திக் (38) முதியவரை கொலை செய்தது தெரிய வந்தது.

    போலீசார் தேடுவதை அறிந்த கார்த்திக் நேற்று இரவு பி.என்.பட்டி, கிராம நிர்வாக அலுவலர் கலையரசனிடம் சரணடைந்தார். கலை யரசன் மேட்டூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியத்திடம் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கார்த்திக்கை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தனர்.

    அப்போது குடி போதையில் ஏற்பட்ட தகராறில் தான் வைத்திருந்த கொடுவாளால் முதியவரின் கழுத்தை அறுத்து கொலை செய்ததாக வாக்குமூலம் கொடுத்தார். இதனை அடுத்து கார்த்திகை கைது செய்த போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    • நேற்று இரவு குடிப்பதற்காக அவரது மனைவியிடம் பணம் கேட்டுள்ளார்.
    • மணிகண்டன் இறந்த நிலையில் தொங்கியபடி இருந்தார்.

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் அடுத்த டி.புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 40). கூலித் தொழிலாளியான இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. இவர் நேற்று இரவு குடிப்பதற்காக அவரது மனைவியிடம் பணம் கேட்டுள்ளார். அவர் பணம் தர மறுத்ததால், அனைவரையும் வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டு, வீட்டிற்குள் சென்று விட்டார். சிறிது நேரம் கழித்து மணிகண்டனின் மனைவி வீட்டிற்குள் சென்று பார்த்தார். வீட்டிலிருந்த மின் விசிறியில் தூக்கு போட்டு கொண்ட மணிகண்டன் இறந்த நிலையில் தொங்கியபடி இருந்தார். இது தொடர்பான புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற திருவெண்ணைநல்லூர் போலீசார், மணிகண்டனின் உடலை கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ராமு வேலையை முடித்துவிட்டு கிழக்கு கடற்கரை சாலையில் நடந்து சென்றார்.
    • தூக்கி வீசப்பட்ட ராமு, சம்பவ இடத்திலேயே பலியானார்.

    விழுப்புரம்:

    மரக்காணம் அடுத்த பனிச்சமேடு கிராமத்தை சேர்ந்தவர் ராமு (வயது 46). கூலித் தொழிலாளி. இவர் வேலையை முடித்துவிட்டு கிழக்கு கடற்கரை சாலையில் நடந்து சென்றார். அப்போது இவரது பின்னால் வந்த கார், ராமு மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ராமு, சம்பவ இடத்திலேயே பலியானார்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மரக்காணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபு தலைமையிலான போலீசார், ராமுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு தனியார் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து மரக்காணம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • பரமத்தி அருகே உள்ள வெள்ளாளபாளையத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி (வயது 55), கூலி தொழிலாளி.
    • நாமக்கல்லில் இருந்து மதுரை நோக்கி அதிவேகமாக சென்ற கார், பொன்னுசாமியின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, பரமத்தி அருகே உள்ள வெள்ளாளபாளையத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி (வயது 55), கூலி தொழிலாளி. இவர் தனது மோட்டார் சைக்கிளில் பரமத்தியில் இருந்து வேலூர் நோக்கி சேலம் -கரூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது, இவரது பின்னால் நாமக்கல்லில் இருந்து மதுரை நோக்கி அதிவேகமாக சென்ற கார், பொன்னுசாமியின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதையடுத்து கார் டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

    கார் மோதியதில் பொன்னுசாமி மோட்டார் சைக்கிளுடன் கீழே விழுந்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவரை அங்கிருந்தவர்கள் பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி பொன்னுசாமி உயிரிழந்தார். இது குறித்து பரமத்திவேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, தலை மறைவான கார் டிரைவரை தேடி வருகின்றனர்.

    • ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்தவர் சாதிக் (வயது 42), கூலி தொழிலாளி குடிப்பழக்கம் கொண்டவர்.
    • சாதிக் வேலைக்கு சென்று விட்டு வரும்போது குடித்துவிட்டு வருவதால் கணவன்-மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    சேலம்:

    சேலம் கிச்சிப்பாளையம் நாராயண நகர் குறிஞ்சி நகர் ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்தவர் சாதிக் (வயது 42), கூலி தொழிலாளி குடிப்பழக்கம் கொண்டவர். இவரது மனைவி ஹசினா (37), இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

    சாதிக் வேலைக்கு சென்று விட்டு வரும்போது குடித்துவிட்டு வருவதால் கணவன்-மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மணமுடைந்த ஹசினா குழந்தைகளுடன் வெளியே சென்று விட்டு சிறிது நேரத்தில் பிறகு வீட்டிற்கு வந்தார்.

    அப்போது சாதிக் துணியால் அவரது கழுத்தை நெறித்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனைப் பார்த்த ஹசினா, சாதிக்கை சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். ஆனால் மருத்துவமனையில் பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதையடுத்து, தகவல் அறிந்த கிச்சிபாளையம் போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். பிரேத பரிசோதனைக்கு பிறகு உடல் உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் சாதிக் அவரே கழுத்தை நெரித்து தற்கொலை செய்தாரா? அல்லது யாராவது கழுத்தை நெறித்து கொன்றார்களா? இந்த சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மேலும் பிரேத பரிசோதனை முழு அறிக்கை வந்தால் தான் அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்தாரா? என்ற விவரம் தெரியவரும்.

    • அம்மாப்பேட்டை முருகன் கோவில் அருகே ெவட்டிக்கொலை செய்யப்பட்டாா்.
    • முன்விரோதத்தில் இளங்கோ கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

    அம்மாபேட்டை:

    தஞ்சை மாவட்டம், அம்மாப்பேட்டை அருகே உள்ள மெலட்டூர் பகுதி, வெண்ணுக்குடியை சேர்ந்தவர் தனபால். இவருடைய மகன் கோபி என்ற இளங்கோ(வயது31).

    கூலித்தொழிலாளி.

    இவர் கடந்த சில நாட்களாக, அம்மாப்பேட்டை மேட்டுத் தெருவிலுள்ள தனது உறவினர் வீட்டில் வசித்து வந்தார்.

    இந்தநிலையில் இளங்கோ நேற்றுமுன்தினம் அம்மாப்பேட்டை முருகன் கோவில் அருகே ெவட்டிக்கொலை செய்யப்பட்டாா்.

    இது குறித்து அம்மாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து இளங்கோ கொலை தொடர்பாக அம்மாப்பேட்டையை சேர்ந்த பாபு என்ற ஆனந்தபாபு(வயது30), பிரவீன்(24), திருவாரூர் மாவட்டம் மணக்கால் பகுதியை சேர்ந்த மதன்(24) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

    அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் இளங்கோ ஒரு கொலை வழக்கில் சம்பந்தப்பட்டிருந்ததாவும் இதனால் ஏற்பட்ட முன்விரோதத்தில் இளங்கோ கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது.

    மேலும், இளங்கோ கொலை வழக்கில், தப்பிஓடிய சேர்மாநல்லூர் பகுதியை சேர்ந்த பாபு, தினேஷ், வடபாதி உடையார்கோவில் பகுதியை சேர்ந்த அனீஸ் உள்ளிட்டோரை போலீசார் தேடி வருகின்றனர்.

    • மர்ம நபர்கள் கொடூரமாக ெகாலை செய்துள்ளது என்பது தெரியவந்தது. உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
    • கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டு விசார ணையை தொடங்கினர்.

    சேலம்:

    சேலம் பெரிய கொல்லப்பட்டியை சேர்ந்தவர் அருள். இவர் கோரிமேட்டில் இருந்து கன்னங்குறிச்சி செல்லும் பாதையில் மரம் அறுக்கும் மில் நடத்தி வருகிறார். நேற்று இரவு 8 மணி அளவில் மில்லில் விளக்கு போடுவதற்காக அருள் அங்கு வந்தார்.

    இந்த நிலையில் செட்டிச்சாவடி பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி ரஞ்சித்குமார் (வயது 45) தலையில் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் அங்கு பிண மாக கிடந்தார். இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த அருள் கன்னங்குறிச்சி போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார்.

    போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். போலீசார் நடத்திய விசாரணையில் ரஞ்சித்குமார் தனது மனைவி, குழந்தைகளை பிரிந்து கோரிமேடு பகுதியில் வசித்து வந்துள்ளார். அவரை மர்ம நபர்கள் கொடூரமாக ெகாலை செய்துள்ளது என்பது தெரியவந்தது. உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

    கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டு விசார ணையை தொடங்கினர்.

    விசாரணையில் ரஞ்சித்குமார், அவரது நண்பர் கொல்லப்பட்டியை சேர்ந்த கோகுல்நாத் (30), கோபிநாதன் ( 33) ஒன்றாக சேர்ந்து மது அருந்துவதும்அ வர்கள் தான் ரஞ்சித்குமாரை கொலை செய்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து தலைமறை வான 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.அவர்களிடம் விசாரணை நடத்தியதில் கோகுல்நாத் மாமியார் ரஞ்சித்குமாரிடம் பணம் வாங்கியதாக கூறப் படுகிறது. அந்த பணத்தை கோகுல் நாத்திடம் உடன டியாக வாங்கி கொடுக்க தருமாறு மாமியார் கூறி உள்ளார்.

    இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த கோகுல்நாத் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடியது தெரியவந்துள்ளது. கோகுல்நாத் மீது போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்கு உள்ளது என்பது குறிப்பிடதக்கது.

    • பாம்பன்ரெயில் நிலையத்தில் தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்டார்.
    • பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    ராமேசுவரம்

    ராமேசுவரம் பாம்பன் ரெயில் நிலையத்தில் இன்று அதிகாலை 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ரத்தக்காயங்களுடன் பிணமாக கிடந்தார். அதை பார்த்த பொதுமக்கள், அதுபற்றி பாம்பன் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

    அதன் பேரில் அங்கு வந்த போலீசார், அடை யாளம் தெரியாமல் இறந்து கிடந்தவரின் உடலை கைப்பற்றி ராமேசுவரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை யாரோ மர்மநபர்கள் அடித்துக்கெலை செ்யதிருப்பது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    அவர் பார்ப்பதற்கு தொழிலாளி போன்று இருக்கிறார். அவரை கொன்றது யார்? எதற்காக கொலை செய்தனர்? என்று போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பரமத்திவேலூர் பகு தியில் வேலையை முடித்து விட்டு தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார்.
    • பரமத்தி வேலூர்- ஜேடர்பாளையம் சாலை யில் அண்ணாநகர் பகுதியில் சென்ற போது, பின்னால் வேகமாக வந்த மோட்டார் சைக்கிள், அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பிலிக்கல்பாளையம் அருகே கரட்டூர் பகுதியை சேர்ந்த வர் வெள்ளைச்சாமி (வயது 58). கூலி தொழிலாளியான இவர், பரமத்திவேலூர் பகு தியில் வேலையை முடித்து விட்டு தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார்.

    பரமத்தி வேலூர்- ஜேடர்பாளையம் சாலை யில் அண்ணாநகர் பகுதியில் சென்ற போது, பின்னால் வேகமாக வந்த மோட்டார் சைக்கிள், அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.

    இதில் வெள்ளைச்சாமி நிலைத்தடுமாறி மோட்டார் சைக்கிளுடன் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். இது குறித்து பரமத்தி வேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, விபத்து ஏற்படுத்தி நிற்கா மல் சென்ற வாகன ஓட்டு னர் குறித்து தீவிர விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    ×