search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பரமத்திவேலூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து கூலித் தொழிலாளி சாவு
    X

    பரமத்திவேலூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து கூலித் தொழிலாளி சாவு

    • நேற்று முன்தினம், வழக்கம்போல் தண்ணீர் பாய்ச்ச சென்றவர் ‌இரவு வரை‌ வீடு திரும்பாததால்,
    • சுமார் 4 மணிநேர தேடுதலுக்கு பிறகு, செல்லமுத்து உடலை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் செல்லமுத்து (வயது 65). இவர் குப்புச்சிபாளையம் அருகே உள்ள கோவில்காடு ராஜா நகர் பகுதியில் தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சும் வேலை பார்த்து வந்தார்.

    நேற்று முன்தினம், வழக்கம்போல் தண்ணீர் பாய்ச்ச சென்றவர் இரவு வரை வீடு திரும்பாததால், அவரது குடும்பத்தினர் செல்லமுத்துவை பல்வேறு இடங்களில் தேடினர். அப்போது, அங்குள்ள கிணற்றுக்கு அருகே செல்லமுத்துவின் துண்டு கிடந்துள்ளது.

    இதை பார்த்து செல்லமுத்து கிணற்றில் தவறி விழுந்து இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் நிலைய அலுவலர் கோமதி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று கிணற்றில் தேடினர்.

    சுமார் 4 மணிநேர தேடுதலுக்கு பிறகு, செல்லமுத்து உடலை தீயணைப்பு துறையினர் மீட்டனர். இதனையடுத்து போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து பரமத்திவேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×