என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொழிலாளி"

    • இருவரையும் நிர்வாணமாக்கி, நகங்களை பிடுங்கி, மின்சாரத்தை உடம்பில் செலுத்தி கொடூரமான முறையில்
    • “எனது வாகனத்திற்கான EMI கட்ட ரூ .20,000 சம்பள முன்பணம் கேட்டேன்.

    சத்தீஸ்ரில் ஐஸ்கிரீம் தொழிற்சாலையில் வேலை பார்த்த இருவர் உரிமையாளரால் கொடூரமாக நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    ராஜஸ்தானை அபிஷேக் பாம்பி மற்றும் வினோத் பாம்பி என்ற இருவர் ஒப்பந்த அடிப்படையில் சத்தீஸ்கரின் காப்ரபட்டியில் சோட்டு குர்ஜார் என்பவரின் ஐஸ்கிரீம் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தனர்.

    இந்நிலையில் கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி சோட்டு குர்ஜார் மற்றும் அவரது உதவியாளர் முகேஷ் சர்மா ஆகியோர், அபிஷேக் மற்றும் வினோத் திருட்டில் ஈடுபட்டதாகக் கூறி தாக்கினர்.

    இருவரையும் நிர்வாணமாக்கி, நகங்களை பிடுங்கி, மின்சாரத்தை உடம்பில் செலுத்தி கொடூரமான முறையில் அவர்கள் சித்ரவதை செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக வெளியான வீடியோவில், அரைநிர்வாண நிலையில் ஒருவர் மீது மின்சாரம் பாய்ச்சப்படுவது பதிவாகியுள்ளது.

    தாக்குதலிலிருந்து இருவரும் ராஜஸ்தானில் தங்கள் சொந்த ஊருக்கு தப்பிச் சென்று, அங்குள்ள போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    பாதிக்கப்பட்ட வினோத் கூறுகையில், "எனது வாகனத்திற்கான EMI கட்ட ரூ .20,000 சம்பள முன்பணம் கேட்டேன். அதை அவர் மறுத்ததால், நான் வேலையை விட்டு நிற்கேன் என்றதும், அவர் என்னை தாக்கத் தொடங்கினார்.என்னுடன் சேர்த்து வினோத்தையும் தாக்கினர்" என கூறினார்.

    இந்த சம்பவம்தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்றும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.   

    • பாம்புகள் விரட்டி விரட்டி கடிப்பதால் தனக்கு நாகதோஷம் இருக்கலாம் என நினைத்தார்.
    • ராகு, கேது மற்றும் பரிகார பூஜைகளை செய்தார். இருப்பினும் பாம்புகள் அவரை விடவில்லை.

    ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், கும்மரகுண்டாவை சேர்ந்தவர் சுப்ரமணியம் (வயது 50). இவரது மனைவி சாரதா.

    சுப்பிரமணியத்திற்கு 20 வயதாக இருந்தபோது முதல் முறையாக பாம்பு கடித்தது. அதன் பிறகு கூலி வேலைக்கு செல்லும் போதெல்லாம் வருடத்திற்கு 4 முதல் 5 தடவை பாம்புகள் கடித்தன.

    ஒவ்வொரு முறையும் பாம்பு கடிக்கும் போதும் உயிர் பிழைப்போமா என்று கவலையடைந்தார். ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்று வீடு திரும்பி வருவதை வழக்கமாகக் கொண்டு இருந்தார்.

    பாம்பு கடிக்கு பயந்து சுப்பிரமணியம் தனது குடும்பத்தினருடன் பெங்களூருக்கு குடிபெயர்ந்தார். அங்கு கட்டிட வேலை செய்தார். பெங்களூரில் கட்டிட வேலை செய்யும் போதும் சுப்பிரமணியத்தை பாம்புகள் கடித்தன.

    இதனால் விரத்தி அடைந்த சுப்பிரமணியம் மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பினார்.

    பாம்புகள் விரட்டி விரட்டி கடிப்பதால் தனக்கு நாகதோஷம் இருக்கலாம் என நினைத்தார். இதனால் ராகு, கேது மற்றும் பரிகார பூஜைகளை செய்தார். இருப்பினும் பாம்புகள் அவரை விடவில்லை.

    சொந்த ஊருக்கு திரும்பிய சுப்பிரமணியம் அங்குள்ள கோழிப்பண்ணையில் வேலைக்கு சேர்ந்தார். நேற்று முன் தினம் கோழி பண்ணையில் வேலை செய்து கொண்டு இருந்தபோது மீண்டும் ஒரு பாம்பு வந்து சுப்பிரமணியத்தை கடித்தது. அவரை மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சிகிச்சைக்கு பிறகு சுப்பிரமணியம் தற்போது குணம் அடைந்து வருகிறார்.

    இதுகுறித்து அவரது மனைவி சாரதா கூறுகையில்:-

    எனது கணவரை டஜன் கணக்கில் பாம்புகள் கடித்துள்ளன. ஒவ்வொரு தடவை பாம்பு கடிக்கும் போதும் வெளியில் கடன் வாங்கி சிகிச்சை பெறுவதும் மீண்டும் கூலி வேலை செய்து கடனை அடைப்பதே எங்கள் வாழ்க்கையில் சுமையாக மாறிவிட்டது என கண்ணீர் மல்க தெரிவித்தார்.

    இனியாவது பாம்பு கடியில் இருந்து தப்பிக்க முடியுமா? என்ற கலக்கத்தில் சுப்பிரமணியின் குடும்பத்தினர் உள்ளனர்.

    • ஜெயக்குமார் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த இரண்டு நாட்களுக்கு முன் திட்டக்குடியில் உள்ள தனது வீட்டிற்கு வந்ததாக கூறப்படுகிறது.
    • நேற்று இரவு வெளியில் சென்ற ஜெயக்குமார் மீண்டும் வீடு திரும்பவில்லை.

    பெரம்பலூர்

    கடலூர் மாவட்டம் திட்டக்குடிக்கு உட்பட்ட வதிஷ்டபுரம் பாட்டை தெருவைச் சேர்ந்த ஜெயக்குமார் (வயது 45). இவர் சென்னையில் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ராஜாமணி என்ற மனைவியும், ரேவதி என்ற மகளும், குணா என்ற மகனும் உள்ளனர்.

    இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த இரண்டு நாட்களுக்கு முன் திட்டக்குடியில் உள்ள தனது வீட்டிற்கு வந்ததாக கூறப்படுகிறது. பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூர் வெள்ளாற்றில் கடந்த வாரம் பெய்த கனமழையின் காரணமாக வெள்ளாற்றில் இடுப்பளவு தண்ணீர் ஓடுகின்றது. இந்நிலையில் நேற்று இரவு வெளியில் சென்ற ஜெயக்குமார் மீண்டும் வீடு திரும்பவில்லை.

    இதையடுத்து அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர். இதற்கிடையே அவர் வெள்ளாற்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த வந்த குன்னம் காவல்துறையினர் இறந்தவரின் உடலை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பிரேத பரிசோதனைக்கு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து இறந்து போன வாலிபர் குடிபோதையில் இருந்தாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

    • மது குடிப்பதற்காக மனைவியிடம் பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். பணம் தர மறுக்கவே ஆத்திரமடைந்த பழனிச்சாமி, தனது இருசக்கர வாகனத்தில் இருந்த பெட்ரோலை ஒரு சிறிய பாட்டிலில் பிடித்து உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
    • அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தீயை அணைத்து அவரை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தார்.

    சேலம்:

    சேலம் வீராணம் அருகே உள்ள சுக்கம்பட்டி காந்தி நகர் காலனி பகுதியை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் பழனிச்சாமி (வயது 38). கூலி தொழிலாளியான இவருக்கு சரஸ்வதி (35) என்ற மனைவியும், 2 பெண், 1 ஆண் குழந்தைகள் உள்ளனர்.

    மது குடிக்கும் பழக்கம் உள்ள பழனிச்சாமி வழக்கம்போல் நேற்று இரவு மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார்.மீண்டும் மது குடிப்பதற்காக மனைவியிடம் பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். சரஸ்வதி பணம் தர மறுக்கவே ஆத்திரமடைந்த பழனிச்சாமி, தனது இருசக்கர வாகனத்தில் இருந்த பெட்ரோலை ஒரு சிறிய பாட்டிலில் பிடித்து உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

    வீட்டின் வெளியே பழனிச்சாமியின் அலறல் சத்தத்தை கேட்டு ஓடிவந்த சரஸ்வதி, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தீயை அணைத்து அவரை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தார்.

    அங்கு பழனிச்சாமி சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இது குறித்த தகவலின் பேரில் வீராணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதி
    • புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    புதுக்கடை அருகே கீழ்குளம் பகுதியை சேர்ந்தவர் செல்லப்பன் மகன் சிவா (வயது 37). கூலித்தொழில் செய்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த போனிபாஸ் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

    சம்பவதினம் சிவா செந்தறை பஸ் நிறுத்தத்தில் நிற்கும் போது அங்கு வந்த போனிபாஸ் தகாத வார்த்தைகள் பேசி கம்பால் அடித்து சிவாவை காயப்படுத்தியுள்ளார். இதில் காயமடைந்த சிவா குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    இது தொடர்பான புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • அவரை மீட்டு மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
    • மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பாகோடு கடமக்கோடு மடத்துடத்துவிளையை சேர்ந்தவர் ராஜஜெயசிங் (வயது 36).

    இவருக்கு கிரிஸ்டல் பியூலா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உண்டு. இவர் தென்னை மரம் ஏறும் தொழிலில் ஈடுபட்டு வந்தார். சம்பவத்தன்று அருகாமையில் ஒருவருக்கு தென்னை மரத்தில் தேங்காய் பறிக்க சென்றுள்ளார். அப்போது தென்னை மரத்தில் இருந்து தவறி விழுந்துள்ளார். அவரை மீட்டு மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக பலியானார்.இது குறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கானாகுளத்தில் குளிக்க செல்வதாக கூறிவிட்டு சென்றவர் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை
    • மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட மருதன்கோடு செம்மாங்காலை பகுதியை சேர்ந்தவர் தாசையன் (வயது 65) கூலிதொழிலாளி.

    இவருக்கு சுசீலா என்ற மனைவியும், 3 பெண் பிள்ளைகளும் உண்டு அவர்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. சம்பவத்தன்று அவரது மனைவியிடம் பக்கத்தில் உள்ள கானாகுளத்தில் குளிக்க செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார்.

    குளிக்க சென்றவர் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை, இதை அடுத்து சுசீலா அவரது உறவுக்காரர் ஒருவரிடம் சம்பவத்தை கூறி குளத்தில் சென்று பார்க்கக் கூறியுள்ளார். அப்போது குளத்தின் கரையில் தாசையனுடைய துணி மற்றும் செருப்பு இருந்துள்ளது. சந்தேகம் அடைந்த அவர் குளத்தில் இறங்கி தேடிப் பார்த்துள்ளார். அப்போது தாசையன் குளத்தில் மூழ்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.

    அவரை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் தாசையன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நடந்து சென்று கொண்டிருந்தவர் மீது மோதாமல் இருப்பதற்காக மோட்டார் சைக்கிளை நிறுத்த முயன்றபோது தூக்கி வீசப்பட்டார்.
    • மணவாளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    மணவாளக்குறிச்சி அருகே உள்ள சேரமங்கலத்தைச் சேர்ந்தவர் ஜோசு (வயது 32), தொழிலாளி.

    இவர் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் பிள்ளையார் கோவிலில் இருந்து சேரமங்கலம் நோக்கி சென்றார். பெரிய குளத்தங்கரை பகுதியில் சென்ற போது, அங்கு ஓருவர் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அவர் மீது மோதாமல் இருப்பதற்காக மோட்டார் சைக்கிளை ஜோசு நிறுத்த முயன்றார். ஆனால் அதற்கு பலன் கிடைக்கவில்லை. மோட்டார் சைக்கிளில் இருந்து ஜோசுவும் தூக்கி வீசப்பட்டார்.

    விபத்தை கண்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முயன்றனர். ஆனால் பலத்த காயம் அடைந்த ஜோசு சம்பவ இடத்திலேயே பலியானார்.

    மோட்டார் சைக்கிள் மோதியதில் காயம் அடைந்தவர் பறையங்கோட்டையைச் சேர்ந்த பாலையன் (51) என தெரியவந்தது. அவர் சிகிச்சைக்காக திங்கள் நகரில் உள்ள தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்ப ட்டு உள்ளார். விபத்து குறித்து மணவாளக்குறிச்சி போலீ சார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பூவன்கோடு பகுதியில் செல்லும்போது எதிரே மற்றொரு மோட்டார் சைக்கிள் வந்தது. எதிர்பாராதவிதமாக 2 மோட்டார் சைக்கிள்களும் மோதிக் கொண்டன.
    • விபத்து குறித்து ராஜாக்கமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கன்னியாகுமரி :

    திருவட்டார் அருகே உள்ள அருவிக்கரை பகுதியை சேர்ந்தவர் விஜய் (வயது 25), தொழிலாளி.

    இவர் மோட்டார் சைக்கி ளில் ஆற்றூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். பூவன்கோடு பகுதியில் செல்லும்போது எதிரே மற்றொரு மோட்டார் சைக்கிள் வந்தது. எதிர்பாராதவிதமாக 2 மோட்டார் சைக்கிள்களும் மோதிக் கொண்டன.

    இந்த விபத்தில் விஜய் மற்றும் எதிரே வந்த மோட்டார் சைக்கிளில் வந்த செந்தறவிளை, ஆற்றூர் பகுதியை சேர்ந்த ஜாண் சாலமோன் (35), அவரது மனைவி ருயா, 5 வயது மகள் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர்.

    அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து ஜான் சாலமோன் குடும்பத்தி னரை மீட்டு தனியார் ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் தலையில் காயம் அடைந்த விஜய் ஆசாரி ப்பள்ளம் ஆஸ்பத்திரியில் அனுமதி க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பல னின்றி இன்று காலை விஜய் பரிதாபமாக இறந்தார்.

    அவரது உடலை இன்று பிரேத பரிசோதனை செய்கி றார்கள். இது சம்மந்தமாக ஜாண்சாலமோன் கொடுத்த புகாரின்பேரில் திருவட்டார் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகி றார்கள்.

    நாகர்கோவில் கீழ ஆசாரி பள்ளம் பகுதியை சேர்ந்தவர் அந்தோணி குமார் ராஜ், டெய்லர். இவரது மகன் ஜெர்வின் ஸ்டார் (15). நாகர்கோவிலில் உள்ள ஒரு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்த இவன், நேற்று விடுமுறை என்பதால் தனது தாயார் வேலை பார்த்து வரும் பழவிளை அருகே உள்ள கிளவுஸ் கம்பெனிக்கு தாயாரை மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றான்.

    தாயாரை அங்கு இறக்கி விட்டு அவன் நாகர்கோவில் ராஜாக்கமங்கலம் ரோட்டை கடந்து செல்லும் போது பருத்தி விளையில் இருந்து எறும்பு காடு நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் ஜெர்வின் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தி னர் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஜெர்வின் ஸ்டார் பரிதாபமாக உயிரிழந்தான்.

    மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த வேம்ப னூர் புளியடி காலனி பகுதியை சேர்ந்த மணி மகன் காட்வின் (20) அவரது நண்பர் புளியடி காலனியை சேர்ந்த ஆகாஷ் (16) ஆகியோர் முகம் மற்றும் கைகளில் லேசான காயங்களுடன் தப்பினர்.அவர்கள் இருவரும் ராஜாக்கமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து ராஜாக்கமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருமணம் மற்றும் விசேஷ விழாக்களுக்கு பந்தல் போடும் தொழில் செய்து வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் உண்டு.
    • பாத்ரூம் சென்றவர் பாத்ரூமிலும் வழுக்கி விழுந்துள்ளார். அப்போதும் தலையில் காயம் ஏற்பட்டுள்ளது

    கன்னியாகுமரி :

    கருங்கல் அருகே உள்ள தொலையாவட்டம் ஆப்பிகோடு பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (வயது 35). இவர் திருமணம் மற்றும் விசேஷ விழாக்களுக்கு பந்தல் போடும் தொழில் செய்து வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் உண்டு. 

    நேற்று மது போதையில் இரவு 8 மணி அளவில் வீட்டுக்கு வந்தவர் மாடியில் இருந்து கீழே இறங்கி வரும் போது கால் தவறி விழுந்து உள்ளார். இதனை கண்ட அவரது மனைவி சைலஜா அவரை தூக்கி விட்டுள்ளார். இதில் கிருஷ்ணகுமாருக்கு பின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

    அதன் பின் பாத்ரூம் சென்றவர் பாத்ரூமிலும் வழுக்கி விழுந்துள்ளார். அப்போதும் தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரது மனைவி பக்கத்து வீட்டாருடன் கிருஷ்ணகுமாரை அருகில் உள்ள தனியார் கிளினிக் கொண்டு சென்றுள்ளனர்.

    அங்கு அவரை பரிசோ தித்த டாக்டர் வேறு மருத்துவ மனைக்கு கொண்டு செல்ல கூறியுள்ளார். அதன்பின் அவரை மார்த்தாண்டம் தனியார் மருத்துவமனை கொண்டு சென்றனர். தொடர்ந்து குழித்துறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோ தித்த மருத்துவர் கிருஷ்ண குமார் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்த தகவலின் பேரில் கருங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தூக்கில் தொழிலாளி பிணமாக தொங்கினார்
    • குடும்ப பிரச்சனை காரணமாக மன விரக்தியில் இருந்ததாக தெரிகிறது.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூர் அடுத்துள்ள வடக்கலூர் காமராஜர் நகரைச் சேர்ந்தவர் செந்தில் (வயது28) இவரது மனைவி பவானி. இவருக்கு திருமணம் மாகி ஒரு வருடம் ஆகின்றன. இந்நிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக மன விரக்தியில் இருந்ததாக தெரிகிறது.

    இந்நிலையில் செந்தில் சம்பவத்தன்று வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்துள்ளார். இச்சம்பவம் குறித்து வந்த புகாரின் பேரில் மங்களமேடு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துசெந்திலை யாராவது கொலை செய்து தூக்கில் தொங்கவிடடிருப்பார்களா அல்லது தற்கொலை செய்து இருப்பார என்ற கோணத்தில் விசாரணை நடத்திவருகின்றனர்.

    • பிணமாக கிடந்தவர் தக்கலை மேல்பாறையை சேர்ந்த ரவிராஜ் (வயது 29) என்பது தெரியவந்தது.
    • தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரெயில் மோதி அவர் பலியாகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் ரெயில் நிலையத்துக்கும், இரணியல் ரெயில் நிலையத்துக்கும் இடையே உள்ள கண்டன்விளை ரெயில்வே கேட் அருகே நேற்று இரவு ஒரு வாலிபர் பிணம் கிடந்தது. இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் உடனே நாகர்கோவில் ரெயில்வே போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்கு மார் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. அப்போது பிணமாக கிடந்தவர் தக்கலை மேல்பாறையை சேர்ந்த ரவிராஜ் (வயது 29) என்பது தெரியவந்தது. இவருக்கு திருமணம் ஆகவில்லை. கூலி வேலை செய்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் வெளியே சென்று வருவதாக தன் தந்தையிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் வெகுநேரம் ஆகியும் அவர் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் ரவிராஜை பல இடங்களில் தேடி வந்தனர்.

    ஆனால் ரவிராஜ் ரெயில் தண்டவாளத்தில் பிணமாக மீட்கப்பட்டு உள்ளார். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் ரவிராஜ் ரெயிலில் அடிபட்டு இறந்தது தெரியவந்தது. தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரெயில் மோதி அவர் பலியாகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×