search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மார்த்தாண்டம் அருகே தென்னை மரத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி
    X

    கோப்பு படம் 

    மார்த்தாண்டம் அருகே தென்னை மரத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி

    • அவரை மீட்டு மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
    • மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பாகோடு கடமக்கோடு மடத்துடத்துவிளையை சேர்ந்தவர் ராஜஜெயசிங் (வயது 36).

    இவருக்கு கிரிஸ்டல் பியூலா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உண்டு. இவர் தென்னை மரம் ஏறும் தொழிலில் ஈடுபட்டு வந்தார். சம்பவத்தன்று அருகாமையில் ஒருவருக்கு தென்னை மரத்தில் தேங்காய் பறிக்க சென்றுள்ளார். அப்போது தென்னை மரத்தில் இருந்து தவறி விழுந்துள்ளார். அவரை மீட்டு மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக பலியானார்.இது குறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×