என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Video"

    • இந்த 2 வினாடி வீடியோ இணையத்தில் வைரலாகி 100 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.
    • இளம் பெண், ஆட்டோ ரிக்ஷாவில் பயணிக்கும்போது கேமராவைப் பார்க்கிறாள்.

    இளம்பெண் ஒருவரின் 2 வினாடி வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    அந்த வீடியோவில், வெள்ளை நிற உடையணிந்து, வெள்ளி நகைகள் மற்றும் அச்சிடப்பட்ட பந்தனா அணிந்த இளம் பெண், ஆட்டோ ரிக்ஷாவில் பயணிக்கும்போது கேமராவைப் பார்க்கிறாள்.

    இந்த 2 வினாடி வீடியோ இணையத்தில் வைரலாகி 100 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. இதன்மூலம் ரூ. 5 லட்சம் வருவாயை அப்பெண் ஈட்டியது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.

    • நள்ளிரவில் நடுரோட்டில் அரங்கேறிய இந்த சம்பவம் அங்கிருந்தவர்களை முகம் சுழிக்க வைத்தது.
    • வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    நள்ளிரவு நேரத்தில் நடந்து சென்ற வாலிபர்களை விரட்டி பிடித்து நடுரோட்டில் இளம்பெண்கள் முத்தமழை பொழிந்த சம்பவம் அரங்கேறி உள்ளது. இது ஏதோ வெளிநாடு அல்லது வெளிமாநிலங்களில் நடக்கவில்லை. திருப்பூரில் தான் இந்த கூத்து நடந்துள்ளது.

    இதுபற்றிய விவரம் வருமாறு:-

    கடந்த சில தினங்களுக்கு முன்பு திருப்பூர் பழைய பஸ்நிலையம் அருகே 2 வாலிபர்களும், இளம்பெண்களும் நள்ளிரவில் நடந்து சென்றனர்.

    அப்போது திடீரென ஒரு இளம்பெண் சத்தமாய் 'ஏய்... ஓடாத... ஒரு நிமிஷம் நில்லு.. ஒரு முத்தம் தாரேண்டா வாங்கிக்கோ!' என்று தன்னுடன் வந்த வாலிபரை கட்டி அணைத்து முத்தமழை பொழிந்தார். இதனை சற்றும் எதிர்பார்க்காத அந்த வாலிபர் இளம்பெண்ணுக்கு பயந்து அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். ஆனால் அவரை அந்த இளம்பெண் விடவில்லை. விரட்டி, விரட்டி அவரை மடக்கி பிடித்து காதல் வசனம் பேசி மயக்கினார். இதேபோல் இன்னொரு இளம்பெண்ணும், வாலிபரை நெருங்கி வந்தார்.

    நள்ளிரவில் நடுரோட்டில் அரங்கேறிய இந்த சம்பவம் அங்கிருந்தவர்களை முகம் சுழிக்க வைத்தது. அந்த காட்சியை சிலர் பார்த்த போதிலும், மூன்றாவது கண் என்று அழைக்கப்படுகிற கண்காணிப்பு கேமராவிலும் அந்த காட்சி பதிவானது. தற்போது அந்த வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதற்கிடையே இந்த அத்துமீறலில் ஈடுபட்டது காதல் ஜோடியா? அல்லது அழகிகளின் அட்டூழியமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    வேலை விஷயமாக திருப்பூருக்கு படையெடுத்து வரும் இளைஞர்களை குறிவைத்து இளம்பெண் கூட்டம் ஒன்று பணம் பறிக்கும் நோக்கத்தில் இரவு நேரங்களில் சுற்றி வருவதாக புகார் கூறப்படுகிறது. விபசார அழகிகள் சிலர் நள்ளிரவு நேரத்தில் பஸ் நிலையத்தில் டிப்டாப் உடை, மேக்அப்புடன் வலம் வந்து இளைஞர்களை தங்களது முத்த வலையில் சிக்க வைக்கின்றனர். ஜீன்ஸ் பேன்ட், டிசர்ட், சுடிதார் என விதவிதமான உடையுடன் காட்சியளிக்கும் இவர்கள் பஸ்நிலையத்தை ஒட்டியுள்ள சாலைகளில் ஆங்காங்கே நிற்கின்றனர். வேலைதேடிவரும் இளைஞர்களை குறி வைத்து நிற்கும் இவர்கள் புதியதாக வரும் இளைஞர்களை மடக்கி பேச்சுக்கொடுக்கின்றனர்.

    புதியதாக வரும் வாலிபர்கள், மசியாத பட்சத்தில் அதிரடியாக கட்டியணைத்து முகமெங்கும் முத்தம் கொடுக்கிறார்கள். ஒரு கட்டத்தில் இளைஞர்களை மடக்கி விடுதி அறைகளுக்கு அழைத்து சென்று உல்லாசம் அனுபவிக்க செய்து கணிசமான பணத்தை கறந்துவிட்டு வெறுங்கையோடு அனுப்பி வைக்கின்றனர்.

    இத்தகைய அழகிகளின் செயல்களுக்கு மயங்காத இளைஞர்கள் சிலர் அவர்களது பிடியிலிருந்து தப்பி பயந்தும் ஓடுகின்றனர். அவர்களை அழகிகள் விரட்டியும் செல்கின்றனர். இவை திருப்பூர் பழைய பஸ் நிலைய பகுதிகளில் அன்றாடம் அரங்கேறி கொண்டிருக்கும் அவலம் தான் என்றும், இது போலீஸ் துறைக்கு தெரியாமல் இருப்பது வேடிக்கையாக உள்ளது என்றும் உள்ளூர்வாசிகள் புலம்புகின்றனர்.

    • இந்த வீடியோவை அவரது மனைவி யூடியூபில் வெளியிட்டார்.
    • இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

    பஞ்சாப் மாநிலத்தில் அலுவலகத்தில் மனைவியுடன் நடனமாடிய கல்வித்துறை அதிகாரியின் வீடியோ இணையத்தில் வைரலானது.

    தேவி பிரசாத் என்ற கல்வித்துறை அதிகாரி தனது மனைவியுடன் அலுவலகத்தில் ஜாலியாக நடனம் ஆடி அதை வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோவை அவரது மனைவி யூடியூபில் வெளியிட்டார். இதனையடுத்து இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இதனையடுத்து கல்வித்துறை அதிகாரி தேவி பிரசாத் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

    இந்த விவகாரம் குறித்து பேசிய தேவி பிரசாத், "வீடியோ எடுக்கப்பட்ட நாளில் தனது அலுவலகத்தில் தேர்தல் பணியில் இருந்தேன். அன்று எங்கள் திருமண நாள் என்பதால் என் மனைவி என்னுடன் அலுவலகத்திற்கு வந்திருந்தார். இந்த வீடியோ வேடிக்கைக்காக மட்டுமே எடுக்கப்பட்டது" என்று தெரிவித்தார். 

    • நகைகளை எடுத்து தங்கள் பைகளில் நிரப்பியுள்ளனர்.
    • கடையில் இருந்து சுமார் 20 கிலோ வெள்ளி மற்றும் 125 கிராம் தங்கம் திருடப்பட்டுள்ளது.

    உத்தரப் பிரதேசத்தில் நகைக்கடையில் பட்டப்பகலில் நடந்த கொள்ளை சம்பவத்தின் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    காசியாபாத்தில் உள்ள ஒரு நகைக்கடையில் நேற்று (வியாழக்கிழமை) மதியம் 3:30 மணியளவில், உணவு டெலிவரி ஊழியர்கள் போல மாறுவேடத்தில் இரண்டு கொள்ளையர்கள் நுழைந்தனர்.

    வீடியோவில், ஹெல்மெட் அணிந்து, ஸ்விக்கி மற்றும் பிளிங்கிட் டெலிவரி ஊழியகர்கள் போல உடையணிந்த இரண்டு பேரும் நகைகளை எடுத்து தங்கள் பைகளில் நிரப்பினர். பின்னர் அவர்கள் இரு சக்கர வாகனத்தில் தப்பிச் சென்றனர்.

    கடையில் இருந்து சுமார் 20 கிலோ வெள்ளி மற்றும் 125 கிராம் தங்கம் திருடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • அந்த வீடியோவில் தெலுங்கு மற்றும் இந்தி பாடல்களுக்கு ஊழியர்கள் நடனமாடுகின்றனர்.
    • இதை பார்த்து வெளிநாட்டு Client ஈர்க்கப்படுகிறார்.

    வெளிநாட்டு Client தங்கள் அலுவலகத்திற்கு வந்தபோது, அவரை நடனமாடி வரவேற்ற இந்திய ஊழியர்களின் வீடியோ இணையத்தில் வெளியாகி கடும் விமர்சனங்களை பெற்று வருகிறது.

    அந்த வீடியோவில் தெலுங்கு மற்றும் இந்தி பாடல்களுக்கு ஊழியர்கள் நடனமாடுகின்றனர். இதை பார்த்து வெளிநாட்டு Client ஈர்க்கப்படுகிறார்.

    இந்த வீடியோ இணையத்தில் வைரலாக, ஊழியர்கள் அலுவலகத்தில் நடனமாடி வெளிநாட்டு Client -ஐ வரவேற்க கட்டாயப்படுத்தப்படுகிறார்களா? நடனமாடாத ஊழியர்கள் பழிவாங்கப்படுகிறார்களா? என்று நெட்டிசன்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளனர். மேலும் கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்த மோசமான நடைமுறையை நிறுத்த வேண்டும் என்று பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பாலிவுட் நடிகையான தனுஸ்ரீ தத்தா, தமிழில் தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் நடித்துள்ளார்.
    • இந்தி நடிகர் நானா படேகர் மீது தனுஸ்ரீ தத்தா பாலியல் புகார் கூறினார்.

    தமிழில் 'தீராத விளையாட்டு பிள்ளை' படத்தில் நடித்துள்ள பாலிவுட் நடிகையான தனுஸ்ரீ தத்தா, தமிழில் பொம்மலாட்டம், காலா படங்களில் நடித்துள்ள பிரபல இந்தி நடிகர் நானா படேகர் மீது பாலியல் புகார் கூறினார்.

    2018-ம் ஆண்டு ஹார்ன் ஓகே ப்ளஸ் என்ற இந்தி படத்தின் படப்பிடிப்பில் நானா படேகர் பாலியல் தொல்லை கொடுத்தார் என்று மும்பை போலீசில் புகார் அளித்தார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், தனது சொந்த வீட்டிலேயே தம்மை துன்புறுத்துவதாகவும், தமக்கு யாராவது உதவி செய்யும்படியும் சமூக வலைதளத்தில் தனுஸ்ரீ தத்தா வீடியோ வெளியிட்டு கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.

    மேலும், அந்த வீடியோவில் metoo புகார் கொடுத்ததில் இருந்து தனது சொந்த வீட்டிலேயே நான் மிகவும் துன்புறுத்தப்பட்டேன். அதனால் மிகவும் சோர்ந்து விட்டேன். இப்போது எனக்கு உடல்நிலை சரியில்லை" என்று தெரிவித்தார்.

    • அவர்களும் அதே உணர்வை அனுபவிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்
    • போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    உத்தரப் பிரதேசத்தின் குருகிராமை சேர்ந்த ஜோதி ஷர்மா (21 வயது) நொய்டாவில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு பல் மருத்துவம் பயின்று வந்தார்.

    இந்நிலையில் நேற்று இரவு பல்கலைக்கழகத்தின் விடுதி அறையில் அவர் தற்கொலை செய்து கொண்டார்.

    ஜோதி ஷர்மா எழுதி வைத்த தற்கொலைக் குறிப்பில், இரண்டு பேராசிரியர்கள் மற்றும் பல்கலைக்கழக நிர்வாகம் மனரீதியாக தன்னை துன்புறுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார்.

    மேலும், "அவர்கள் சிறைக்குச் செல்ல வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அவர்கள் என்னை மனரீதியாக துன்புறுத்தினர். அவர்கள் என்னை அவமானப்படுத்தினர். நான் நீண்ட காலமாக இந்த மன அழுத்தத்தில் இருக்கிறேன். அவர்களும் அதே உணர்வை அனுபவிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்" என்று ஜோதி தனது தற்கொலைக் குறிப்பில் எழுதியுள்ளார்.

    இதையடுத்து பல்கலைக்கழக நிர்வாகத்தின் அலட்சியத்தை கண்டித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    போராட்டத்தின் போது போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ஜோதியின் பெற்றோர் பல் மருத்துவத்துறை HODயை கன்னத்தில் அறைவது பதிவாகி உள்ளது.

    பின்னர் போலீஸ் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை மூலம் போராட்டம் நிறுத்தப்பட்டது. சம்பவம் தொடர்பாக இரண்டு பல்கலைக்கழக ஊழியர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

    மேலும் பல்கலைக்கழகத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி அஜித் குமார், இரண்டு ஆசிரியர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

    • மற்றொரு தனியார் அசைவ உணவகத்தையும் இந்துத்துவா கும்பல் மூட வைத்துள்ளது.
    • யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.

    உத்தரப் பிரதேசத்தில் அசைவ உணவு விற்கக்கூடாது என்று கூறி கேஎஃப்சி உணவகத்தை இந்து அமைப்பினர் மூட வைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    உத்தரப் பிரதேச மாநிலம் காசியபாத்தில் இந்திராபுரம் பகுதியில் KFC உணவக கிளை இயங்கி வந்தத. இந்நிலையில் நேற்று இந்த கடைக்குள் திடீரென காவிக்கொடியுடன் இந்து ரக்ஷா தளம் கும்பல் புகுந்தது.

    ஷ்ரவன் மாதத்தில் (ஜூலை - ஆகஸ்ட்) அசைவ உணவு விற்கக்கூடாது என அங்குள்ள ஊழியர்களை கும்பல் மிரட்டி ஆர்ப்பாட்டம் செய்துள்ளது.

    சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள இந்தக் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

    சைவம் மட்டுமே என்று வலுக்கட்டாயமாக கடையின் முன் போர்டை நிறுவியுள்ளது. ஆனால் தங்கள் உணவகத்திற்கு அசைவம் சாப்பிடவே மக்கள் வருகிறார்கள் என்றும் இதனால் தங்களுக்கு நஷ்டம் தான் என கடையை மூடுவதாக உணவக மேலாளர் தெரிவித்தார்.

    இதேபோல் மற்றொரு தனியார் அசைவ உணவகத்தையும் இந்துத்துவா கும்பல் மூட வைத்துள்ளது.

    மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கோரியே இந்த ஆர்ப்பாட்டத்தை கும்பல் நடத்தியுள்ளது. அதில் உள்ளே புகுந்து மிரட்டல் விடுத்து கும்பல் அத்துமீறியுள்ளதால் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆனால் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.

    • Astronomer எனும் தரவு மேலாண்மை தொழில்நுட்ப நிறுவனம் இயங்கி வருகிறது.
    • கேமரா ரேண்டம் ஆக பார்வையாளர்களில் அமர்ந்திருக்கும் ஒரு ஜோடியை திரையில் காட்டும். அந்த ஜோடி முத்தம் கொடுத்துக்கொள்ள வேண்டும்.

    அமெரிக்காவில் Astronomer எனும் தரவு மேலாண்மை தொழில்நுட்ப நிறுவனம் இயங்கி வருகிறது. Andy Byron என்பவர் கடந்த 2023 முதல் இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக செயல்பட்டு வருகிறார். Andy Byron, மேகன் கெர்ரிகன் பைரன் என்பவரை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

    இந்நிலையில் அண்மையில் பாஸ்டன் நகரில் கோல்ட் பிளே குழுவின் இசைகச்சேரி நடைபெற்றது. இதில் கிஸ் கேம் என்ற விளையாட்டு நடைபெற்றது. அதாவது, கேமரா ரேண்டம் ஆக பார்வையாளர்களில் அமர்ந்திருக்கும் ஒரு ஜோடியை திரையில் காட்டும். அந்த ஜோடி முத்தம் கொடுத்துக்கொள்ள வேண்டும்.

    இந்த கான்சர்ட்டில் Andy Byron தனது நிறுவனத்தின் மக்கள் தொடர்பு அதிகாரியான Kristin Cabot உடன் கலந்துகொண்டார். கிஸ் கேமில் கேமரா அவர்களை நோக்கி திரும்பியது. திரையில் தங்கள் படம் தெரிவதால் அதிர்ச்சியடைந்த இருவரும் தங்களை மறைத்துக்கொள்ள முயன்றனர்.

    அப்போது பாடகர் கிறிஸ் மார்ட்டின், இதைப் பார்த்து மேடையில், "ஓ..! இவர்கள் இருவரையும் பாருங்கள்.. இது ஒரு காதல் உறவா? வெட்கப்படுகிறார்கள்.." என்று கூறினார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • 5 பேர் கொண்ட கும்பல் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுவிட்டு தப்பினர்.
    • முதல்வர் நிதிஷ் குமாருக்கு நெருக்கடியாக மாறியுள்ளது.

    பீகாரில் பரோல் கைதி ஒருவரை மருத்துவமனைக்குள் புகுந்த கும்பல் ஒன்று சுட்டுக்கொலை செய்த வீடியோ வைரலாகி வருகிறது.

    பிகார் மாநிலம் பாட்னாவில் கொலைக் குற்றவாளியாக பரோலில் வெளியே வந்த சந்தன் என்பவர் நேற்று, தனியார் மருத்துவமனைக்கு சென்றிருந்தபோது 5 பேர் கொண்ட கும்பல் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுவிட்டு தப்பினர்.

    காயமடைந்த சந்தன் சிகிச்சை பலனின்றி பலியானார். இதுகுறித்து பாட்னா காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

    பீகாரில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் சூழலில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அதிகரித்து வருவது முதல்வர் நிதிஷ் குமாருக்கு நெருக்கடியாக மாறியுள்ளது.

    இந்த சம்பவத்துக்கு முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், மத்திய அமைச்சர் சிராக் பஸ்வான் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    • கான்பரன்ஸ் விசாரணையில் கழிவறையில் இருந்தபடி பங்கேற்ற நபரின் வீடியோ கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது.
    • கழிப்பறைக்கு சென்று வசதியாக தனது தொலைபேசி கேமராவை வைட் ஆங்கலில் தெரியும்படி வைக்கிறார்.

    குஜராத் உயர்நீதிமன்ற வீடியோ கான்பரன்ஸ் விசாரணையில் கழிவறையில் இருந்தபடி பங்கேற்ற நபரின் வீடியோ கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது.

    வைரலான அந்த வீடியோவில், அந்த நபர் காதில் புளூடூத் ஹெட்போன்களை அணிந்துகொண்டு கழிப்பறைக்கு சென்று வசதியாக தனது தொலைபேசி கேமராவை வைட் ஆங்கலில் தெரியும்படி வைக்கிறார்.

    பின் தன்னைத்தானே அவர் சுத்தம் செய்து கொள்வதை வீடியோ காட்டுகிறது. இது அனைவரையும் முகம் சுழிக்க வைப்பதாக இருந்தது.

    கடந்த ஜூன் 20 ஆம் தேதி தன் மீதான எப்ஐஆர் ஒன்றை ரத்து செய்யக்கோரி அந்த நபர் அளித்த மனு மீது நீதிபதி நிர்சார் தேசாய் அமர்வில் நடந்த விசாரணையின்போது இந்த சம்பவம் நடந்துள்ளது.

    இதை நீதிமன்ற அவமதிப்பாகக் கருதிய குஜராத் உயர்நீதிமன்றம் அவருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

    • காரில் இருந்த 3 பேர் வெளியே வந்து உணவு டெலிவரி ஊழியரை சரமாரியாக தாக்கினர்.
    • இதனால் காயமடைந்து சாலையோரத்தில் ரத்தம் வழிந்தோடியடி டெலிவரி ஊழியர் நின்றார்

    பெங்களூருவில் ஸ்விக்கி நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு டெலிவரி ஊழியர் நேற்று இரவு மருத்துவமனை சந்திப்புக்கு அருகில் உள்ள போக்குவரத்து சிக்னலில் நின்று கொண்டிருந்தார். அவருக்கு பின்னால் வந்த காரில் இருந்தவர்கள் சிக்னல் சிவப்பு நிறத்தில் இருந்தபோதிலும், ஹாரன் அடித்து, அவரை முன்னோக்கி நகர்த்துமாறு கோரினர்.

    அதற்கு அந்த ஊழியர் போக்குவரத்து விதிகளை பின்பற்றுவதாக விளக்கியபோது, கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் காரில் இருந்த 3 பேர் வெளியே வந்து உணவு டெலிவரி ஊழியரை சரமாரியாக தாக்கினர். அந்த நபர்கள், அவரை மீண்டும் மீண்டும் அடித்து உதைத்து வேகமாக ஓடிச் சென்று காரில் ஏறி தப்பி சென்று விட்டனர்.

    இதனால் காயமடைந்து சாலையோரத்தில் ரத்தம் வழிந்தோடியடி டெலிவரி ஊழியர் நின்றார். இந்த காட்சி அங்குள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியது. இந்த தாக்குதல் குறித்து அவர் பசவேஸ்வரா நகர் போலீஸ் நிலையத்தில் தன்மீது தாக்குதல் நடத்தியவர்கள் மது போதையில் இருந்ததாக கூறி புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

    டெலிவரி ஊழியர் தாக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

    ×