search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Video"

    • கத்தியால் குத்திவிட்டு இருவரும் சாவகாசமாக சாலையை கடந்து செல்வதை மக்கள் வேடிக்கை பார்த்து நின்றனர்.
    • இதனால் ஆத்திரமடைந்த தம்பி ராகேஷ், உறவினர் லக்ஷ்மணன் உடன் சேர்ந்து அண்ணனை தாக்க முயன்றார்.

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இளைஞர் ஒருவர் பட்டப்பகலில் நடுரோட்டில் வைத்து கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட பதறவைக்கும் வீடியோ வெளியாகி உள்ளது.

    நேற்று பிப்ரவரி பிப்ரவரி 16 (ஞாயிற்றுக்கிழமை) ஐதராபாத்தின் மேட்சல் (medchal) பகுதியில் உள்ள பரபரப்பான NH 44 தேசிய நெடுஞ்சாலையில் வைத்து இந்த கோர சம்பவம் நடந்துள்ளது. அவ்வழியாக பல வானங்கள் அவ்வேளையில் சென்றும் யாரும் கொலையை தடுக்க முன்வரவில்லை. கத்தியால் குத்திவிட்டு இருவரும் கத்தியுடன் சாவகாசமாக சாலையை கடந்து செல்வதை மக்கள் வேடிக்கை பார்த்து நின்றனர்.

    போலீசார் கூற்றுப்படி உயிரிழந்தவர் 25 வயதான உமேஷ். கத்தியால் குத்தியவர்கள் உமேஷின் சொந்த தம்பி ராகேஷ், மற்றும் உறவினர் லக்ஷ்மணன் என்று தெரியவந்துள்ளது. உமேஷ் குடித்துவிட்டு அடிக்கடி தனது குடும்பத்தினருடன் சண்டை பிடிப்பார் என்று கூறப்படுகிறது.

    இதுகுறித்து தம்பி ராகேஷ் அண்ணனிடம் கேட்டுள்ளார். இதனால் சம்பவம் நடந்த நேற்று, உமேஷ் குடித்துவிட்டு தம்பியுடன் வாக்குவாதம் செய்துள்ளார். கட்டை ஒன்றை எடுத்து தம்பியை உமேஷ் தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தம்பி ராகேஷ், உறவினர் லக்ஷ்மணன் உடன் சேர்ந்து அண்ணனை தாக்க முயன்றார்.

    அச்சமடைந்த உமேஷ் அவர்களிடம் இருந்து தப்பி வீட்டை விட்டு ஓடியுள்ளார். உமேஷை துரத்திச் சென்ற இருவரும் வீட்டில் இருந்து 150 மீட்டர் தொலைவில் உள்ள சாலையில் வைத்து அவரை கத்தியால் குத்தி கொன்றுள்ளனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பியோடிய தம்பியையும் உறவினரையும் தேடி வருகின்றனர்.

    • நாட்டுப்புற கலைஞர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் என 700 காசிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்
    • ஆத்திரமடைந்த வடமாநில பயணிகள் ரெயில் கதவு கண்ணாடியை உடைத்து அதன் வழியாக கதவை திறந்து உள்ளே வர முயன்றனர்

    தமிழ்நாடு - காசி இடையேயான உறவை பலப்படுத்தும் வகையில், காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. மூன்றாவது வருடமாக தமிழ்நாட்டில் இருந்து நாட்டுப்புற கலைஞர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் என 700 காசிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதற்காக சென்னையில் இருந்து உத்தரப்பிரதேச மாநிலம் பனாரசுக்கு சிறப்பு ரெயில் புறப்பட்டது.

    இந்த ரெயில் மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் அருகே வந்த போது, முன்பதிவில்லாத டிக்கெட் வைத்திருந்த வடமாநில பயணிகள் சிலர் ரெயிலில் ஏற முயன்றனர். சிறப்பு ரெயில் என்பதால் தமிழக பயணிகள் பெட்டிகளின் கதவுகளை பூட்டி வைத்திருந்தனர்.

    இதனால் ஆத்திரமடைந்த வடமாநில பயணிகள் ரெயில் கதவு கண்ணாடியை உடைத்து அதன் வழியாக கதவை திறந்து உள்ளே வர முயன்றனர். இதனால் வெளியில் இருந்த பயணிகளுக்கும், உள்ளே இருந்த தமிழக பயணிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    எனவே அங்கு பதற்றமான சூழல் நிலவியது. இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சிறுவனின் தந்தை ராகுல் குப்தா குவாலியரை சேர்ந்த தொழிலதிபர் ஆவார்.
    • இந்த சம்பவம் தொடர்பாக ஆளும் பாஜக அரசை எதிர்க்கட்சிகள் விமர்சித்தன

    மத்தியப் பிரதேசத்தின் குவாலியரில் நேற்று [வியாழக்கிழமை] காலை பள்ளிக்குச் செல்லும் வழியில் தாயின் முகத்தில் மிளகாய்ப் பொடி தூவி சிறுவன் கடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    கடத்தப்பட்ட சிறுவன் 7 வயதான ஷிவாய் குப்தா. சிறுவனின் தந்தை ராகுல் குப்தா குவாலியரை சேர்ந்த தொழிலதிபர் ஆவார். குவாலியரில் முரான் பகுதியில் நேற்று சிறுவனை தாய் பள்ளிக்கு அழைத்துச் சென்றபோது இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் சிறுவனை கடத்திக்கொண்டு செல்வது சிசிடிவியில் பதிவாகி உள்ளது. தாயின் கண்களில் அவர்கள் மிளகாய்ப் பொடியை வீசியதால் அவர் நிலை தடுமாறி சுதாரிப்பதற்குள் அவர்கள் சிறுவனை கடத்திச் சென்றனர்.

    அவர் தனது கணவரிடம் விரைந்து சென்று நடந்த முழு சம்பவத்தையும் கூறினார்.  தொடர்ந்து இருவரும் உடனே காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    காட்சிகளின் அடிப்படையில் கடத்தல்காரர்களைத் தேடும் பணியை போலீசார் தொடங்கினர். இந்த சம்பவம் தொடர்பாக ஆளும் பாஜக அரசை எதிர்க்கட்சிகள் விமர்சித்தன. இதற்கிடையில் நேற்று மாலை கடத்தப்பட்ட 7 மணி நேரம் கழித்து சிறுவன் மீட்கப்பட்டதாக அம்மாநில  முதலமைச்சர் மோகன் யாதவ் தெரிவித்தார். சிறுவன் பத்திரமாக பெற்றோரிடம் ஒப்படைக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

    கடத்தல்காரர்கள் பற்றிய விவரங்களைத் தெரிவிக்காமல், குற்றம் சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், குற்றத்திற்காக அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என்றும் மோகன் யாதவ் கூறினார். 

    • சுதந்திரா சேனானி எக்ஸ்பிரஸில் ஏற முண்டியடித்தனர்.
    • இதனால் பயணிகள் அச்சமும் கோபமும் அடைந்தனர்.

    உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா மிகவும் கோலாகலமாக நடந்து வருகிறது. கடந்த மாதம் 13-ந் தேதி தொடங்கிய இந்த நிகழ்வில் இதுவரை 40 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடி உள்ளனர்.

    மகா சிவராத்திரி நாளான பிப்ரவரி 26 ஆம் தேதி வரை இந்த நிகழ்வு நடைபெற இருக்கிறது. எனவே பல்வேறு இடங்களில் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் பிரயாக்ராஜுக்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர். இதற்காக பிரயாக்ராஜுக்கு சிறப்பு ரெயில்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

    இந்நிலையில் ரெயிலில் இடம் கிடைக்காமல் மக்கள் ஏசி பெட்டிகளை கபளீகரம் செய்த வீடியோ வைரலாகி வருகிறது.

    பீகாரில் உள்ள மதுபனி ரெயில் நிலையத்தில் நேற்று, மகா கும்பமேளா புறப்பட்ட பக்தர்கள் சுதந்திரா சேனானி எக்ஸ்பிரஸில் ஏற முண்டியடித்தனர்.

    ஆனால் ரெயிலில் ஏசி பெட்டிகள் உட்பட கூட்டத்தால் நிரம்பி வழிந்த நிலையில் பலருக்கு நிற்கக்கூட இடம்கிடைக்கவில்லை . பெட்டிகளின் கதவுகளையும் திறக்கமுடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பக்தர்கள், ஏசி பெட்டிகள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.

    கல் வீச்சு காரணமாக ஏசி பெட்டிகளின் கண்ணாடிகள் உடைந்து உள்ளே அமர்ந்திருந்தவர்கள் மீது விழுந்தன. இதனால் பயணிகள் அச்சமும் கோபமும் அடைந்தனர்.

    தொடர்ந்து ரெயிலில் அமர்ந்திருந்தவர்களுக்கும் பிளாட்பாரத்தில் நின்றவர்களுக்கும் இடையே வாக்குவாதம் தொடங்கியது. இதனால் அங்கு பதட்டமான சூழல் நிலவியது. நிலைமையை பாதுகாப்பு அதிகாரிகள் பெரும் போராட்டத்துக்கு பின் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

    • குழந்தைகள், முதியவர்கள் மற்றும் பெண்கள் மணிக்கணக்கில் பசியையும் தாகத்தையும் எதிர்கொள்கின்றனர்.
    • அனைவரையும் திருப்ப செல்லும்படி அவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.

    மகா கும்பமேளா

    உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா மிகவும் கோலாகலமாக நடந்து வருகிறது. கடந்த மாதம் 13-ந் தேதி தொடங்கிய இந்த நிகழ்வில் இதுவரை 40 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடி உள்ளனர். மகா சிவராத்திரி நாளான பிப்ரவரி 26 ஆம் தேதி வரை இந்நிகழ்வு நடைபெறும்.

    உலகின் மிகப்பெரிய இந்த கலாசார, ஆன்மிக நிகழ்வான மகா கும்பமேளாவுக்கு ரெயில் மற்றும் சாலை மார்கமாக பலவேறு இடங்களில் இருந்து மக்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

    இந்நிலையில் மகா கும்பமேளா நடைபெறும் பிரயாக்ராஜுக்கு வரும் வழியில் 300 கிலோமீட்டர் தூரத்துக்கு டிராபிக் ஜாம் ஏற்பட்டுள்ளது.

    இதை உலகின் மிகப்பெரிய டிராபிக் ஜாம் என பலரும் குறிப்பிடுகின்றனர். 48 மணி நேரமாக வாகனங்கள் காத்துக்கிடக்கும் சூழல் உருவாகியுள்ளது. சனி, ஞாயிறுகளில் அதிகப்படியான மக்கள் மகா கும்பமேளாவை நோக்கிப் படையெடுக்கின்றனர்.

    டிராபிக் ஜாம் 

    இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறையை ஒட்டி லட்சக்கணக்கானோர் ஒரே நேரத்தில் பிரயாக்ராஜ் நோக்கி படையெடுத்தனர்.

    இதனால் உத்தரப் பிரதேச எல்லை வரை சுமார் 200 முதல் 300 கிலோமீட்டருக்கு வரலாறு காணாத போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் யாரும் பிரயாக்ராஜுக்குள் சாலை மார்க்கமாக வர வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

    பிரயாக்ராஜை இணைக்கும் வாரணாசி, ஜான்பூர், மிர்சாபூர், கௌசாம்பி, பிரதாப்கர், ரேவா மற்றும் கான்பூர் ஆகிய அனைத்து முக்கிய வழித்தடங்களிலும் வாகனங்களின் நீண்ட வரிசை மட்டுமே தென்படுகிறது.

     

    மக்கள் அவதி

    குழந்தைகள், முதியவர்கள் மற்றும் பெண்கள் மணிக்கணக்கில் பசியையும் தாகத்தையும் எதிர்கொள்கின்றனர். நகரத்திற்கு வெளியே உள்ள நெடுஞ்சாலையில் தனித்தனி வாகன நிறுத்துமிடங்களை நிர்வாகம் உருவாக்கியுள்ளது.

    இருப்பினும், பெரும்பாலான பார்க்கிங் இடங்கள் நிரம்பியதால், வாகனங்கள் சாலைகளில் சிக்கித் தவிக்கின்றன. போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய சிவில் மற்றும் போக்குவரத்து போலீசாரைத் தவிர, துணை ராணுவப் படையினரும் நிறுத்தப்பட்டுள்ளனர். 

    போலீஸ் அறிவுரை 

    மத்தியப் பிரதேசத்தின் கட்னி, ஜபல்பூர், மைஹார் மற்றும் ரேவா மாவட்டங்களில் சாலைகளில் பல ஆயிரம் கார்கள் மற்றும் டிரக்குகள் நிற்கும்  வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    ரேவா மாவட்டத்தில் உள்ள சக்காட்டில் கட்னி பகுதியில் இருந்து மத்தியப் பிரதேச- உத்தரப் பிரதேச எல்லை வரை 250 கிமீ தூரத்திற்கு மோசனமான டிராபிக் நிலவுகிறது.

    சூழலை கட்டுப்படுத்த போலீசார் திணறி வருகின்றனர். அனைவரையும் திருப்ப செல்லும்படி அவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். இதற்கிடையே இன்று ஜனாதிபதி திரவுபதி முர்மு விமானம் மூலம் பிரயாக்ராஜ் வந்து மகா கும்பமேளாவின் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வழிபாடு செய்தது குறிப்பிடத்தக்கது. 

    அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு 

    போக்குவரத்து நெரிசல் குறித்து ஆளும் பாஜக அரசை சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், 

    "நெரிசலில் சிக்கிக் கொண்ட மக்கள் மணிக்கணக்கில் தங்கள் வாகனங்களிலேயே அடைந்து கிடக்க நேர்கிறது. பெண்கள் தங்கள் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்யக் கூட இடமில்லை. சாலைகளில் மயங்கி விழுபவர்களைக் கவனித்துக் கொள்ள எந்த ஏற்பாடும் இல்லை. பக்தர்களின் மொபைல் போன்களில் பேட்டரி தீர்ந்து போனதால், அவர்கள் யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை.

    தொடர்பு மற்றும் தகவல் இல்லாததால், மக்களிடையே பதட்டம் அதிகரித்துள்ளது. நிலைமையைக் கட்டுப்படுத்த எந்தப் பொறுப்பான அமைச்சரோ அல்லது அதிகாரியோ இருப்பதாகத் தெரியவில்லை. முதலமைச்சர் முழுமையான தோல்வியடைந்துவிட்டார்.  துணை முதலமைச்சர் மற்றும் பிரயாக்ராஜைச் சேர்ந்த பல முக்கிய அமைச்சர்களும் காணவில்லை.

    பொதுமக்களிடையே இருந்திருக்க வேண்டியவர்கள் வீட்டிலேயே அமர்ந்திருக்கிறார்கள். இரவும் பகலும் பசியும் தாகமும் தாங்காமல் களத்தில் நிற்கும் காவலர்களுக்கும், ஊழியர்களுக்கும், துப்புரவுப் பணியாளர்களுக்கும் உணவு மற்றும் தண்ணீருக்கு எந்த ஏற்பாடும் இல்லை என்று தெரிகிறது. அதிகாரிகள் அறைகளில் அமர்ந்து உத்தரவுகளை வழங்குகிறார்கள், ஆனால் களத்தில் இறங்குவதில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இதுவரை 40 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடி உள்ளனர்.
    • சுமார் 20 ஆண்களும் பெண்களும் என்ஜின் பெட்டியை ஆக்கிரமித்திருப்பது கேமராவில் பதிவாகி உள்ளது.

    உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா மிகவும் கோலாகலமாக நடந்து வருகிறது. கடந்த மாதம் 13-ந் தேதி தொடங்கிய இந்த நிகழ்வில் இதுவரை 40 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடி உள்ளனர்.

    மகா சிவராத்திரி நாளான பிப்ரவரி 26 ஆம் தேதி வரை இந்த நிகழ்வு நடைபெற இருக்கிறது. எனவே பல்வேறு இடங்களில் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் பிரயாக்ராஜுக்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர். இதற்காக பிரயாக்ராஜுக்கு சிறப்பு ரெயில்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

    இந்நிலையில் மகா கும்பமேளாவுக்கு கிளம்பிய பக்தர்கள், ரெயில் பெட்டிகளில் இடம் கிடைக்காமல் ரெயில் என்ஜின் பெட்டிக்குள் பக்தர்கள் ஏறி அமர்ந்துள்ளனர்.

    உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி கான்ட் ரயில் நிலையத்தில் கடந்த சனிக்கிழமை (பிப்ரவரி 8) அதிகாலை 2 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    வாரணாசியில் இருந்து பிரயாக்ராஜ் நோக்கிச் செல்லும் ரெயில் இரண்டாவது பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்தபோது, இருக்கைகள் கிடைக்காத சில பயணிகள் ரயில் என்ஜினுக்குள் நுழைந்து கதவை உள்ளே இருந்து மூடினர். சுமார் 20 ஆண்களும் பெண்களும் என்ஜின் பெட்டியை ஆக்கிரமித்திருப்பது கேமராவில் பதிவாகி உள்ளது.

     ரயில்வே பாதுகாப்புப் படையினர் (RPF) சம்பவ இடத்திற்கு வந்து பயணிகளை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். முக்கியமான செயல்பாட்டுக் கட்டுப்பாடுகள் இருப்பதால், என்ஜின் பெட்டியில் பயணம் செய்வது மிகவும் ஆபத்தானது என்று அதிகாரிகள் அவர்களுக்கு விளக்கினர்.  

    முன்னதாக கடந்த மாதம் 29 [புதன்கிழமை] மவுனி அமாவாசையை முன்னிட்டு அதிக பக்தர்கள் கலந்து கொண்ட போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 30 பேர் உயிரிழந்ததாக அம்மாநில அரசு தெரிவித்தது. 60 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

    • விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே நபர் ஒருவர் தான் வைத்திருந்த துப்பாக்கியை வெளியில் எடுத்தார்.
    • விமானப் பணிப்பெண்கள் துணிச்சலாகச் செயல்பட்டு மடக்கினர்.

    பறக்கும் விமானத்தில் பயணி ஒருவர் துப்பாக்கியைக் காட்டி சக பயணிகளைக் கொலை செய்யப்போவதாக மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பான வீடியோவும் வெளியாகி உள்ளது.

    மத்திய அமெரிக்காவில் உள்ள ஹோண்டுராஸ் நாட்டில் சமீபத்தில் டெகுசிகல்பாவில் உள்ள டோன்காண்டின் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ரோட்டனுக்கு சென்ற விமானத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

    விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே நபர் ஒருவர் தான் வைத்திருந்த துப்பாக்கியை வெளியில் எடுத்து பயணிகளை நோக்கி நீட்டி அவர்களைக் கொலை செய்யப்போவதாக மிரட்டியுள்ளார்.

    இதனால் அனைவரும் அச்சத்தில் உறைந்தனர். இருப்பினும் விமானப் பணிப்பெண்கள் துணிச்சலாகச் செயல்பட்டு அந்த நபரை மடக்கினர்.

    பயணிகளுக்கு எந்தத் தீங்கும் ஏற்படாமல் அவர்கள் தடுத்தனர். விமானி உடனடியாக விமானத்தை மீண்டும் டோன்காண்டின் சர்வதேச விமான நிலையத்திற்குத் திருப்பிவிட்டார்.

    விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியதும் தேசிய காவல்துறை அதிகாரிகள் விமானத்தில் ஏறி, அந்த நபரைக் கைது செய்தனர். பின்னர் பயணிகள் மற்றொரு விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர். அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் யாருக்கும் தீங்கு ஏற்படவில்லை.

    இந்த சம்பவம் விமான நிலைய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த கவலையை ஏற்படுத்தி உள்ளது. பாதுகாப்பு சோதனைகளை மீறி அந்த நபர் எப்படி விமானத்தில் துப்பாக்கியை கொண்டு வந்தார் என்பது குறித்த கேள்விகள் எழுந்துள்ளன.

    • தோளில் ஒரு பையுடனும் கையில் ரத்த தோய்ந்த கத்தியுடனும் அவர் நடந்து சென்றார்.
    • சக ஊழியர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டு அது தகராறாக முற்றியது.

    மேற்கு வங்கத்தை சேர்ந்த அரசு ஊழியர் ஒருவர் விடுப்பு கிடைக்காததால் சக ஊழியர்கள் 4 பேரை கத்தியால் குத்திய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    குற்றம் சாட்டப்பட்ட நபரின் பெயர் அமித் குமார் சர்க்கார். கொல்கத்தாவின் நியூடவுன் பகுதியில் அமைந்துள்ள கரிகாரி பவனில் தொழில்நுட்பக் கல்வித் துறை அலுவலகத்தில் பணிபுரிந்து வந்தார்.

    அமித் குமார் சர்க்கார் நேற்று தனது சக ஊழியர்களை கத்தியால் குத்திவிட்டு, அதை கையில் ஏந்தியபடி ஊருக்குள் சுற்றித் திரிந்தார். தோளில் ஒரு பையுடனும் கையில் ரத்த தோய்ந்த கத்தியுடனும் அவர் நடந்து செல்வதை அவ்வழியாக சென்றோர் படம்பிடிக்க முயன்றனர்.

    அவர்களையும் தன்னை விட்டு தள்ளி இருக்குமாறு அவர் கத்தியை காட்டி மிரட்டியுள்ளார். இதுதொடர்பான வீடியோ வெளியாகி வேகமாக பரவி வருகிறது. தகவலின்பேரில் போலீசார் அவரை கைது செய்தனர்.

    விடுமுறை எடுப்பது தொடர்பாக தனது சக ஊழியர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டு அது தகராறாக முற்றவே, அமித் குமார் அவர்களை கத்தியால் தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்றார் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

    அவரால் கத்தியால் குத்தப்பட்ட ஜெய்தேப் சக்ரவர்த்தி, சாந்துனு சஹா, சர்தா லேட் மற்றும் ஷேக் சதாபு ஆகியோர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.

    அமித் குமாருக்கு விடுப்பு மறுக்கப்பட்டதற்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை என்றும் அவரிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். அவருக்கு  மனநலப் பிரச்சனைகள் இருப்பதாக போலீஸ் கருதுகிறது. 

    • புலிகள் தங்கள் வேட்டையில் மிகவும் திறமையானவை.
    • புலிகள் தங்கள் வேட்டையில் வெற்றிபெறுவதற்கான வாய்ப்புகளை மதிப்பிடுகின்றன.

    இந்தியாவின் தேசிய விலங்கான புலி அரிதான சமயங்களில் மனிதர்களை வேட்டையாடும். அண்மையில் கூட கேரளாவில் மனிதர்களை வேட்டையாடிய ஆட்கொல்லி புலியை வனத்துறையினர் சடலமாக மீட்டனர்.

    இந்நிலையில், வயல்வெளியில் பதுங்கி உள்ள புலி ஒன்று அவ்வழியே பைக்கில் வந்த இருவரை வேட்டையாட முயற்சி செய்யும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.

    பதுங்கி வரும் புலியை தூரத்தில் இருக்கும்போதே அவர்கள் பார்த்துவிடுகின்றனர். ஆதலால் புலி வேட்டையாடாமல் சாலையில் அமர்ந்து ஓய்வெடுக்க துவங்கி விடுவது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

    புலிகள் தங்கள் வேட்டையில் மிகவும் திறமையானவை, மேலும் அவை தங்கள் வேட்டையைத் தேர்ந்தெடுப்பதில் மிகுந்த கவனம் செலுத்துகின்றன. புலிகள் பொதுவாக தங்களால் எளிதில் வேட்டையாடக்கூடிய விலங்குகளைத் தேர்ந்தெடுக்கின்றன, மேலும் அவை தங்கள் வேட்டையில் வெற்றிபெறுவதற்கான வாய்ப்புகளை மதிப்பிடுகின்றன.

    எனவே, புலிகள் தங்கள் வேட்டையில் வெற்றிபெறுவதற்கான வாய்ப்புகள் குறைவாக இருந்தால், அதை கைவிட்டு வேறு இலக்கைத் தேடும். இது புலிகளின் இயற்கையான நடத்தை மற்றும் உயிர்வாழும் உத்தியின் ஒரு பகுதியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அதிரிபுதிரியாக ரிங்கில் இறங்கிய ஜேசன், ஓடிஸ் - ஐ எலிமினேட் செய்ய பிரோன் பிரேக்கருக்கு உதவிசெய்தார்.
    • இனி தனது வாழ்நாளில் WWE பக்கமே தலைவைத்துப் படுக்கமாட்டேன் என ஜேசன் உறுதி பூண்டுள்ளார்.

    உலகளப் பிரசித்தி பெற்ற யூடியூபர், ஐ ஷோ ஸ்பீட்[IShowSpeed] எனப்படும் டேரன் ஜேசன். இவர் சமீபத்தில் WWE ராயல் ரம்பில் 2025 நிகழ்ச்சியில் பங்கேற்றார். போட்டியாளர் அகிரா டோசாவா கயாத்தால் விளையாடமுடியாமல் இருந்த நிலையில் அவருக்கு பதிலாக யூடியூபர் ஜேசன் ரிங்கில் இறக்கிவிடப்பட்டார்.

     

    அதிரிபுதிரியாக ரிங்கில் இறங்கிய ஜேசன், ஓடிஸ் - ஐ எலிமினேட் செய்ய பிரோன் பிரேக்கருக்கு உதவிசெய்தார். ஓடிஸ் எலிமினேட் ஆன அடுத்த கணமே ஜேசன் பக்கம் திரும்பிய பிரோன் பிரேக்கர் அவரை ஸ்பியர் ஷாட்டை பயன்படுத்தி சில நிமிடங்களில் அல்லோலகல்லோல பட வைத்தார்.

    அந்தரத்தில் ஜேசனை தூக்கி அவர் ஆடிய ருத்ர தாண்டவத்தால் ஜேசன் படுகாயமடைந்தார். இறுதியில் ஜேசன் நிற்பதற்கே ஊன்றுகோலைப் பயன்படுத்த வேண்டிய பரிதாப நிலைமைக்கு ஆளானார். இனி தனது வாழ்நாளில் WWE பக்கமே தலைவைத்துப் படுக்கமாட்டேன் என ஜேசன் உறுதி பூண்டுள்ளார். 

    • F-35 Lightning II போர் விமானம் பயிற்சியின் போது விபத்துக்குள்ளானது.
    • F-35 ஒரே நேரத்தில் 12 மணி நேரத்திற்கும் மேலாகப் பறக்கும் திறனுடையது

    அமெரிக்காவில் விமானப்படை ஜெட் விமானம் ஒன்று பயிற்சியின்போது கீழே விழுந்து விபத்துக்களாகியுள்ளது.

    நேற்று (ஜனவரி 28) மதியம் அலாஸ்காவின் ஃபேர்பேங்க்ஸ் அருகே அமைந்துள்ள எய்ல்சன் விமானப்படைத் தளத்தில் F-35  Lightning II போர் விமானம் பயிற்சியின் போது விபத்துக்குள்ளானது.

    விமானத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    பயிற்சியின் போது தரையிறங்கும் சமயத்தில் விபத்து நேர்ந்ததாக எய்ல்சன் விமானப்படை அறிக்கை கூறுகிறது.

    இதனால் விமானம் கடுமையான சேதத்தைச் சந்தித்துள்ளது. விமானம் கீழே விழுவதற்கு முன் விமானி அதிலிருந்து எட்ஜெக்ட் ஆகி வெளியே வெளியேறிய குதித்ததால் பாதுகாப்பாக இருப்பதாகவும், பாசெட் ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    F-35 ஒரே நேரத்தில் 12 மணி நேரத்திற்கும் மேலாகப் பறக்கும் திறனுடையது என்பது குறிப்பிடத்தக்கது. 

    • கைவிலங்கிட்டு கீழ்த்தரமாக அமெரிக்கா நடத்தியுள்ளது என அந்நாடு குற்றம் சாட்டியது.
    • கடந்த சில நாட்களில் 956 பேர் வரை கைது செய்துள்ளனர்.

    அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள டொனால்டு டிரம்ப் அந்நாட்டில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை வெளியேற்றத் தீவிரமும் கடுமையும் காட்டி வருகிறார்.

    முதற்கட்டமாக பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டவர்களை அமெரிக்க அதிகாரிகள் கைது செய்து விமானப்படை விமானங்கள் மூலம் அனுப்பி வைத்தனர். மெக்சிகோ, கொலம்பியா, பிரேசில் ஆகிய நாடுகளைச் சேர்த்தவர்கள் இவ்வாறு நாடுகடத்தப்பட்டுள்ளனர்.

    இதற்கு முதலில் எதிர்ப்பு தெரிவித்த தென் அமெரிக்க நாடான கொலம்பியா, டிரம்ப்பின் 25 சதவீத ஏற்றுமதி வரி உயர்வு, விசா ரத்து உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு அஞ்சி தங்கள் நாட்டு அகதிகளை ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்தது.

    மேலும் பிரேசிலுக்கு இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்ட அகதிகளுக்கு குடிக்க தண்ணீர் கொடுக்காமல், விமானத்தில் ஏசி இல்லாமல், கைவிலங்கிட்டு கீழ்த்தரமாக அமெரிக்கா நடத்தியுள்ளது என அந்நாடு குற்றம் சாட்டியது.

     

    ஆனால் எதையும் காதில் வாங்காத அமெரிக்கா, தொடர்ந்து தங்கள் நாட்டில் சட்டவிரோதமாகத் தங்கியுள்ளவர்களைக் கண்டறிவதில் தீவிரம் காட்டி வருகிறது. அமெரிக்க குடிவரவு [கஸ்டம்ஸ்] அதிகாரிகள் கடந்த சில நாட்களில் 956 பேர் வரை கைது செய்துள்ளனர்.

     

    இந்தநிலையில்தான் உலகப் புகழ் பெற்ற பாடகி செலினா கோம்ஸ் தனது இன்ஸ்டாகிராம் சமூக வலைதள பதிவில், "என் மக்கள் அனைவரும் தாக்கப்படுகிறார்கள், குழந்தைகள் உட்பட. எனக்கு எதுவும் புரியவில்லை. இதற்கு நான் ஏதாவது செய்ய விரும்புகிறேன், ஆனால் என்னால் முடியவில்லை. எல்லா வழிகளிலும் நான் முயற்சி செய்வேன் என்று வாக்கு கொடுக்கிறேன் " என்று தேம்பித் தேம்பி அழுதபடி வீடியோ ஒன்றை பதிவிட்டார்.

    நேற்று அவர் வெளியிட்ட இந்த பதிவை சில மணி நேரம் கழித்து அவர் நீக்கிவிட்டார். ஆனால் அவரின் இந்த வீடியோ இணையத்தில் பேசுபொருளாகி வருகிறது. தனது ஆதரவை வெளிப்படையாக கூற கூட உரிமை இல்லாத சூழல் அமெரிக்காவில் வந்துவிட்டது என பலர் கூறி வருகின்றனர்.

    ஆனால் டிரம்ப் ஆதரவாளர்கள் செலினா தேம்பி அழும் வீடியோவை கிண்டலடித்து சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். முந்தைய காலங்களிலும் செலினா கோம்ஸ் அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்தவர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வந்தார்.

    2019 இல் புலம்பெயர்ந்தவர்களின் இன்னல்களை பற்றி பேசும் 'லிவ்விங் அண்டாக்குமெண்டட்' என்ற ஆவணப்படத்தை நெட்பிளிக்ஸ் உடன் இணைந்து தயாரித்தார். அமெரிக்கரான செலினா கோம்ஸ் உடைய தந்தை மெக்சிகோ நாட்டை சேர்த்தவர், தாய் இத்தாலி நாட்டின் வழி வந்தவர் ஆவார்.  

    ×