என் மலர்
நீங்கள் தேடியது "MK Staliln"
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் ப்ரோமோ வெளியிட்டுள்ளார்.
- Young Champions-கூட Passion, Pressure, Perseverance பற்றி என்னோட உரையாடல்
தமிழ்நாட்டின் இளம் சாம்பியன்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாடியுள்ளார்.
இளம் தலைமுறை சாம்பியன்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடும் VIBE WITH MKS நிகழ்ச்சி நாளை மாலை 4 மணிக்கு வெளியாகிறது.
இந்நிலையில், இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ வீடியோவை வெளியிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதனை அறிவித்தார்.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் ப்ரோமோ வெளியிட்டுள்ளார்.
- Young Champions-கூட Passion, Pressure, Perseverance பற்றி என்னோட உரையாடல்..
தமிழ்நாட்டின் இளம் சாம்பியன்களுடன் உரையாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் ப்ரோமோ வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில்," Discipline, Confidence மற்றும் Character-ஐ உருவாக்குவது Sports! அப்படிப்பட்ட Young Champions-கூட Passion, Pressure, Perseverance பற்றி என்னோட உரையாடல்...
நான் ரெடி! நீங்க ரெடியா! " என குறிப்பிட்டுள்ளார்.
- இங்கிலாந்து பயணத்தின் மிக முக்கிய முன்னெடுப்பாக இந்துஜா குழுமத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தம் உள்ளது.
- இதன்மூலம் 1,000-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.
சென்னை:
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு ரைசிங் ஐரோப்பா முதலீட்டு சந்திப்புகளின்போது, இந்துஜா குழுமம், தமிழ்நாடு அரசுடன் மின்சார வாகனம், பேட்டரி தொழில்நுட்பம் மற்றும் உதிரி பாகங்கள் உற்பத்தியில் ரூ.5 ஆயிரம் கோடி முதலீடு செய்திட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதன்மூலம் 1,000-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.
மேலும், அஸ்ட்ராஜெனகா நிறுவனம் 2 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் 3-வது தொழில் முதலீட்டை அறிவித்துள்ளது. சென்னையில் உள்ள அதன் உலகளாவிய கண்டுபிடிப்பு மற்றும் தொழில்நுட்ப மையத்தை (ஜி.ஐ.டி.சி.) 176 கோடி ரூபாய் முதலீட்டில் விரிவாக்கம் செய்திடவுள்ளது.
இந்நிலையில், தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி நாடுகளுக்கான பயணத்தால் தமிழ்நாடு பெற்ற மொத்த முதலீடு ரூ.13 ஆயிரத்து 16 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதன்மூலம் 17 ஆயிரத்து 813 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் இங்கிலாந்து பயணத்தின் மிக முக்கியமான முன்னெடுப்பாக இந்துஜா குழுமத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தம் உள்ளது.
தமிழ்நாட்டில் மின்சார வாகன சுற்றுச்சூழல் அமைப்புகளை நிறுவிட அதன் பல்வேறு நிறுவனங்கள் மூலம் முதலீடுகள் மேற்கொள்ள இந்தக் குழுமம் திட்டமிட்டுள்ளது, இது, நிலையான இயக்கம் மற்றும் பேட்டரி தொழில்நுட் பங்களுக்கான உலகளாவிய தலைநகராக தமிழ்நாட்டை உருவாக்குவதற்கான தொலைநோக்கு பார்வையை முன்னிறுத்துகிறது.
அஸ்ட்ரா ஜெனகாவின் ஜி.ஐ.டி.சி., அஸ்ட்ரா ஜெனகாவின் உலகளாவிய செயல்பாடுகளில் முக்கிய பங்கு வகிக்கிறது, அதிநவீன ஆராய்ச்சி, செயற்கை நுண்ணறிவால் இயக்கப்படும் கண்டுபிடிப்பு மற்றும் மருத்துவ சேவைகள் வழங்குவதில் தொழில்நுட்ப மாற்றத்தை செயல்படுத்துகிறது. இந்நிறுவனம் 2 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் அதன் 3-வது முதலீட்டினை செய்துள்ளது. இது மாநிலத்தின் திறன் வளர்ச்சி மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான நிர்வாகத்தின் மீதுள்ள வலுவான நம்பிக்கையை எடுத்துக்காட்டுகிறது.
இந்த முதலீடுகள் இங்கிலாந்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சந்திப்புகளின் போது வெளியிடப் பட்ட முந்தைய அறிவிப்புகளை அடிப்படையாகக் கொண்டவை ஆகும், இது ஜி.சி.சி.-க்கள், உற்பத்தி, ஜவுளி தொழில்நுட்பம் மற்றும் வடிவமைப்பு கல்வி போன்ற துறைகளில் 1,493 வேலைவாய்ப்புகளை உருவாக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 820 கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்த்துள்ளது.
இங்கிலாந்து பயணத்திற்கு முன்பாக, முதலமைச்சர் மு.கஸ்டாலின் தலைமையிலான குழு 15 ஆயிரத்து 320 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில் 26 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் ஜெர்மனியில் இருந்து ரூ.7 ஆயிரத்து 20 கோடி முதலீட்டுகளை ஈர்த்துள்ளது. இவை விண்வெளி, விரிவான தொழில்நுட்பம், ரெயில்வே, ஆட்டோமொடிவ் மற்றும் மின்னணுவியல் உள்ளிட்ட முக்கிய துறைகளை உள்ளடக்கியது ஆகும்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, முதலமைச்சரின் முதன்மைச் செயலாளர் உமாநாத் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர் என தெரிவித்துள்ளது.
- பல்லடம் அருகே கன்டெய்னர் லாரி சாலையில் நின்றவர்கள் மீது மோதியது.
- இந்த விபத்தில் 2 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
சென்னை:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கட்டுப்பாட்டை இழந்த கன்டெய்னர் லாரி ஒன்று திடீரென சாலையில் நின்றவர்கள் மீது மோதி விபத்து ஏற்படுத்தியது. இதில் 2 பெண்கள் உயிரிழந்துள்ளனர்.
அவர்கள் இருவரும் கன்டெய்னர் லாரியின் அடியில் சிக்கிக்கொண்டனர். இதில் சம்பவ இடத்திலேயே அவர்கள் உயிரிழந்தனர். அவர்களின் உடல்களை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் கன்டெய்னர் லாரி கவிழ்ந்தது. இதனால் அப்பகுதியில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்நிலையில், பல்லடத்தில் கன்டெய்னர் விழுந்த விபத்தில் உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணத் தொகை வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
பல்லடம் விபத்தில் உயிரிழந்த இரு பெண்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.
- மீட்புப் பணிகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
- மீட்பு மற்றும் உதவிப் பணிகளில் அரசு துரிதமாகச் செயல்பட்டு வருகிறது என்றார்.
சென்னை:
மைசூரிலிருந்து தர்பங்கா நோக்கிச் சென்ற பாக்மதி அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் (12578) வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணியளவில் பொன்னேரியை அடுத்த கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகே சென்றுகொண்டிருந்தது. அப்போது சரக்கு ரெயில் மீது மோதியது. சிக்னல் கோளாறு காரணமாக இவ்விபத்து ஏற்பட்டதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியதாவது:
திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டையில் ரெயில் விபத்து நடந்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். தகவல் கிடைக்கப் பெற்றவுடன், அமைச்சர் நாசர் அவர்களையும் மற்றும் மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளையும் விபத்து நடந்த இடத்திற்குச் செல்ல உத்தரவிட்டேன். மீட்பு மற்றும் உதவிப் பணிகளில் அரசு துரிதமாகச் செயல்பட்டு வருகிறது.
இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். மற்ற பயணிகளுக்குத் தேவையான உணவு, அவர்கள் ஊர் திரும்புவதற்கான பயண வசதிகள் ஆகியவற்றை ஏற்பாடு செய்வதற்கென தனியே ஒரு குழு இயங்கிக் கொண்டிருக்கிறது.
விபத்துக்கு உள்ளான ரெயில் பெட்டிகளை அகற்றும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். மீட்புப் பணிகளைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறேன் என பதிவிட்டுள்ளார்.
- இலக்கியங்களில் புதைந்திருந்த வரலாற்றினை மண்ணில் அகழாய்ந்து நிறுவி வருகிறோம்!
- பிறமொழித் துணையின்றித் தனித்து இயங்கும் ஆற்றல்கொண்ட செம்மொழி!
உலகத் தாய்மொழி தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
எம்மொழிக்கும் சளைத்ததல்ல எம் மொழி!
இலக்கியங்களில் புதைந்திருந்த வரலாற்றினை மண்ணில் அகழாய்ந்து நிறுவி வருகிறோம்!
அகத்திலும் புறத்திலும் அன்பும் வீரமும் கொண்டு வாழும் நற்றமிழர் தாய்மொழி, போற்றுதலுக்குரிய பழமை உடைய மொழி மட்டுமல்ல; பிறமொழித் துணையின்றித் தனித்து இயங்கும் ஆற்றல்கொண்ட செம்மொழி!
உலகெங்கும் பரவட்டும் நம் உயர்தனிச் செம்மொழி! என்று தெரிவித்துள்ளார்.
- வடசென்னை மக்களின் உயிர்களை காலங்காலமாய் காக்க பெரியார் அரசு மருத்துவமனை பயன்படும்.
- மாற்றுத்திறனாளிகளின் குரல் அதிகாரம் பொருந்திய அவைகளில் இடம்பெறும்.
சென்னை கொளத்தூரில் அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்ட உயர் சிறப்பு மருத்துவமனையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
பிறகு அவர் உரையாற்றியதாவது:-
நமது கொளத்தூர் தொகுதியில் மாபெரும் மருத்துவமனையை கட்டி எழுப்பி உள்ளோம். ரூ.210 கோடி மதிப்பீட்டில் 6 தளங்களுடன் பெரியார் உயர் சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது.
வடசென்னை மக்களின் உயிர்களை காலங்காலமாய் காக்க பெரியார் அரசு மருத்துவமனை பயன்படும்.
பெரியார் மருத்துவமனையை பொது மக்கள் சுகாதாரத்துடன் பார்த்து கொள்ள வேண்டும். நோயாளிகளை குடும்பத்தில் ஒருவராக நினைத்து சிறப்பாக மருத்துவம் பார்க்கும் மருத்துவர்கள், செவிலியர்களை கேட்டுக் கொள்கிறேன்.
மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரத்தில் பங்களிக்கும் வகையில் எல்லா உள்ளாட்சி அமைப்புகளிலும் உரிய பிரதிநித்துவம் தரப்படும்.
மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன அடிப்படையில் உள்ளாட்சி அமைப்புகளில் பிரதிநிதித்துவம் தரப்படும்.
மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரத்தில் பங்கு அளிக்கும் வகையில் உரிய சட்டத்திருத்தம் செய்யப்படும்.
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம், ஊராட்கள் சட்டத்தில் வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் திருத்தம் செய்யப்படும்.
மாற்றுத்திறநாளிகள் என பெயர் கொடுத்து சுயமரியாதையை காத்தவர் நமது கலைஞர் கருணாநிதி. கலைஞர் வழியில் மாற்றுத்திறனாளிகளின் சுயமரியாதையை காக்கும் வகையில் அதிகாரத்தில் பங்கு.
மாற்றுத்திறனாளிகளின் குரல் அதிகாரம் பொருந்திய அவைகளில் இடம்பெறும். இதுவே உண்மையான சமூக நீதி பெரியார் அரசு. வடசென்னையை வளர்ச்சி அடைந்த சென்னையாக மாற்றுவதில் பெரியார் மருத்துவமனை ஒரு மைல்கல்.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை:
தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகன் முதுமை காரணமாக கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் வீட்டில் ஓய்வெடுத்து வந்தார்.
நேற்று அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. கடுமையான காய்ச்சல் இருந்தது. இதைத் தொடர்ந்து அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
டாக்டர்கள் அவரை பரிசோதனை செய்தபோது சிறுநீரக தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஆஸ்பத்திரிக்கு சென்று அன்பழகன் உடல்நலம் குறித்து விசாரித்தார்.இன்று மு.க.ஸ்டாலின் மீண்டும் ஆஸ்பத்திரிக்கு சென்று அன்பழகன் உடல் நிலை பற்றி விசாரித்தார். பின்னர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
பொதுச்செயலாளர் பேராசிரியர் நேற்றிரவு காய்ச்சல் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர் சிகிச்சை மேற் கொள்ளப்பட்டு வருவதால் உடல்நலம் தேறி நலமுடன் இருக்கிறார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இரண்டொரு நாட்களில் உடல்நலம் தேறி இல்லம் திரும்ப இருப்பதால் கழக நிர்வாகிகள்-தோழர்கள் எவரும் நேரில் வரவேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
தற்போது அன்பழகனின் உடல்நிலை சீராகி வருவதாக டாக்டர்களும் தெரிவித்துள்ளனர். #DMK #Anbazhagan #AppolloHospital #MKStalin






