search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sexual complaint"

    • புகார் கூறிய நடிகையிடம் வாக்கு மூலம் பெறப்பட்டது.
    • சிறப்பு புலனாய்வு குழுவினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவனந்தபுரம்:

    மலையாள திரையுலகில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்களுக்கு நடந்த பாலியல் துன்புறுத்தல்கள் ஓய்வுபெற்ற நீதிபதி ஹேமா கமிட்டியின் விசாரணை அறிக்கையில் அம்பலமானது. இதையடுத்து குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களின் மீது நடவடிக்கை எடுக்க சிறப்பு புலனாய்வு குழுவை கேரள அரசு அமைத்தது.

    அந்த குழுவினர் பாதிக்கப்பட்ட நடிகை களிடம் விசாரணை நடத்தினர். அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் முகேஷ் எம்.எல்.ஏ., சித்திக், ஜெயபிரகாஷ் உள்ளிட்ட மலையாள திரையுலக பிரபல நடிகர்கள் மீது பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    மேலும் பிரபல இயக்குனர்களான ரஞ்சித், வி.கே.பிரகாஷ் உள்ளிட்டோர் மீதும் வழக்கு பதியப்பட்டது. பாலியல் குற்றச்சாட்டு கூறியிருக்கும் நடிகை களிடம் சிறப்பு புலனாய்வு குழுவினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் பாலியல் குற்றச்சாட்டு கூறிய நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு வாக்குமூலம் பெறும் நடவடிக்கை தொடங்கப்பட்டு இருக்கிறது.

    அதன்படி பிரபல நடிகர் ஜெயசூர்யா மீது பாலியல் புகார் கூறிய நடிகையிடம் வாக்கு மூலம் பெறப்பட்டது.

    அவர் கோளஞ்சேரி முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வாக்குமூலம்அளித்தார். காலை 11.30 மணி முதல் மதியம் வரை அவரிடம் விசாரித்து வாக்குமூலம் பதிவு செய்யப் பட்டிருக் கிறது. நடிகையிடம் பூட்டிய அறையில் வைத்து மாஜிஸ் திரேட்டு வாக்குமூலம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சிறப்பு புலனாய்வு குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
    • சாட்சியங்கள் விசாரணை குழுவிற்கு கிடைத்துள்ளது.

    திருவனந்தபுரம்:

    மலையாள திரையுலகில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் பிரபல நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் பலர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

    நடிகர் சித்திக் மீது நடிகை கூறிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கற்பழிப்பு வழக்கு பதியப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட வர்களின் மீதான குற்றச் சாட்டுகளை நிரூபிக்கும் வகையில் ஆதாரங்களை சேகரிக்கும் பணியில் சிறப்பு புலனாய்வு குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் நடிகர் சித்திக் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தும் வகையில் பல ஆதாரங்கள் மற்றும் சாட்சியங்கள் விசாரணை குழுவிற்கு கிடைத்துள்ளது. சம்பவம் நடந்ததாக கூறப்படும் நாளில் குறிப்பிட்ட அறையில் நடிகர் சித்திக் தங்கியிருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்தி ருக்கிறது.

    மேலும் நடிகையின் நண்பர் அளித்துள்ள வாக்கு மூலம், சம்பவத்திற்கு பிறகு நடிகை மனநல மருத்துவ ரிடம் சிகிச்சை பெற்றது உள்ளிட்ட சம்பவங்கள் உண்மை என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளது.அதனடிப்படையில் நடிகர் சித்திக்கிற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப் படலாம் என்று தெரிகிறது.

    • பெண் நடன கலைஞர் பாலியல் புகார்.
    • வழக்கு பதிவு செய்து விசாரணை.

    திருப்பதி:

    ஆந்திர மாநில திரைப்பட நடன கலைஞராக இருப்பவர் 21 வயது இளம்பெண். இவர் திரைப்பட நடன இயக்குனர் ஜானி மாஸ்டர் என்று அழைக்கப்படும் ஷேக் ஜானி பாஷா மீது சைதராபாத், ராய்துருக்கம் போலீசில் புகார் செய்தார்.

    அதில் நடன இயக்குனர் ஜானி பாஷாவிடம் நான் நடன கலைஞராக வேலை செய்து வந்தேன். அப்போது சென்னை, மும்பை, ஐதராபாத் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் நடந்த படப்பிடிப்பின் போது என்னை ஓட்டல்களில் வைத்து பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தார்.

    மேலும் நர்சிங்கியில் உள்ள அவரது வீட்டிற்கு வரவழைத்து பலாத்காரம் செய்தார் என கூறியிருந்தார்.

    இளம்பெண் நர்சிங்கி பகுதியில் வசிப்பதால் புகாரை நர்சிங்கி போலீசாருக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடன இயக்குனர் ஜானி மாஸ்டர் மீது கற்பழிப்பு, கொலை மிரட்டல் மற்றும் தானாக முன்வந்து காயப்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நடன இயக்குனர் மீது அவரிடம் வேலை செய்யும் பெண் நடன கலைஞர் பலாத்கார புகார் அளித்துள்ள சம்பவம் தெலுங்கு திரைப்பட துறையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • துபாய் ஓட்டலில் வைத்து தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த பெண் புகார் தெரிவித்தார்.
    • பாலியல் புகார் கூறிய பெண் மற்றும் அவரது கணவரிடம் சிறப்பு புலனாய்வு குழு நேற்று விசாரணை நடத்தியது.

    திருவனந்தபுரம்:

    மலையாள திரையுலகில் நடிகைகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான விவரங்களை ஓய்வுபெற்ற நீதிபதி ஹேமா கமிட்டியின் அறிக்கை அம்பலமாக்கியது. அதன் தொடர்ச்சியாக பல நடிகைகள் முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை கூறினர்.

    அதன் அடிப்படையில் மலையாள திரையுலக நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் மீது பாலியல் வழக்கு பதியப்பட்டது. பெண் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் நடிகர் நிவின் பாலி மீதும் வழக்கு பதியப்பட்டது.

    சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி துபாய் ஓட்டலில் வைத்து தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த பெண் புகார் தெரிவித்தார். அதனடிப்படையில் நடிகர் நிவின் பாலி உள்பட 6 பேர் மீது வழக்கு பதியப்பட்டது.

    தன் மீது புகார் கூறிய அந்த பெண் யார் என்பது தனக்கு தெரியாது என்றும், அந்த பெண்ணை தான் சந்தித்ததே இல்லை என்றும் நடிகர் நிவின் பாலி கூறினார். மேலும் தன் மீதான குற்றச்சாட்டில் சதி இருப்பதாகவும் அவர் கூறியிருந்தார்.

    அது மட்டுமின்றி புகார் கூறிய பெண் தனது குற்றச்சாட்டில், குறிப்பிடப்பட்டிருந்த நாளில் தான் துபாயில் இல்லை எனவும், கேரளாவில் இருந்ததாகவும் நடிகர் நிவின் பாலி தெரிவித்தார். மேலும் கேரளாவில் இருந்ததற்கான ஆதாரங்களையும் அவர் வெளியிட்டார்.

    இதையடுத்து அந்த பெண், தூக்க கலக்கத்தில் சம்பவம் நடந்த தேதியை மாற்றி கூறிவிட்டதாகவும், சம்பவம் நடந்தது வேறுநாள் என்றும் கூறி மற்றொரு நாளில் துபாயில் தங்கியிருந்ததற்கான ஆதாரத்தை வெளியிட்டார்.

    இதனைத்தொடர்ந்து பாலியல் புகார் கூறிய பெண் மற்றும் அவரது கணவரிடம் சிறப்பு புலனாய்வு குழு நேற்று விசாரணை நடத்தியது. அவர்கள் 2 பேரிடம் கொச்சியில் வைத்து விசாரணை நடத்தப்பட்டது. இருவரிடமும் சிறப்பு புலனாய்வு குழுவினர் வாக்குமூலம் பெற்றனர்.

    மேலும் இந்த விவகாரத்தில் மேல் விசாரணைக்காக சிறப்பு புலனாய்வு குழுவினர் துபாய் செல்ல உள்ளனர். பெண் புகாரின்படி சம்பவம் துபாயில் நடந்திருப்பதாக கூறப்பட்டிருப்பதால், அதன் உண்மை நிலையை கண்டறிய விசாரணை குழு துபாய் செல்ல முடிவு செய்துள்ளது.

    • ஆலோசனைக் கூட்டம் சென்னை தியாகராய நகரில் நேற்று நடந்தது.
    • நடிகைகள் தொடர்ந்து பாலியல் புகார்களை தெரிவித்து வருகின்றனர்.

    சென்னை:

    நடிகைகளுக்கு ஏற்படும் பாலியல் அத்துமீறல் தொடர்பாக வெளியான ஹேமா கமிஷன் அறிக்கை மலையாள திரை உலகை, புரட்டிப்போட்டு உள்ளது.

    ஹேமா கமிஷன் அறிக்கைக்கு பின்னர் முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள் உள்ளிட்டோர் மீது நடிகைகள் தொடர்ந்து பாலியல் புகார்களை தெரிவித்து வருகின்றனர்.

    இதையடுத்து நடிகர்கள் முகேஷ், ஜெயசூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகிறார்கள். மலையாள நடிகர் சங்கமே ஒட்டு மொத்தமாக கலைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வரும் புகார்களால் மலையாளத் திரை உலகமே கலகலத்துப்போய் உள்ளது.

    இதனிடையே தமிழ்த்திரை உலகிலும் இதுபோன்ற குற்றங்கள் நடக்கிறது என்று நடிகைகள் ஊர்வசி உள்ளிட்டோர் பரபரப்பு குற்றச்சாட்டுகளை தெரிவித்தனர். இதற்கு பதில் அளித்த நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால், தமிழ்த்திரை உலகில் அவ்வாறான புகார்கள் இதுவரை வரவில்லை. அவ்வாறு வந்தால் அதுபற்றி விசாரிக்க தனி குழு அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.

    இதுபோன்ற பரபரப்புகள் ஒருபுறம் இருக்க, விசாகா கமிட்டி பரிந்துரையின் அடிப்படையில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பெண் கலைஞர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், பாலியல் புகார்களை விசாரிப்பதற்காக, கடந்த 22.4.2019 அன்று தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் பாலின உணர்வு மற்றும் உள் புகார்கள் குழு (ஜெண்டர் சென்சேஷன் அண்ட் இண்டர்னல் கம்ப்ளயிண்ட் கமிட்டி) உருவாக்கப்பட்டது.

    இந்த கமிட்டியின் ஆலோசனைக் கூட்டம் சென்னை தியாகராய நகரில் நேற்று நடந்தது. இதில் நடிகர் சங்கத் தலைவர் நாசர், துணைத் தலைவர் பூச்சி முருகன், பொருளாளர் கார்த்தி மற்றும் கமிட்டி தலைவர் ரோகிணி, உறுப்பினர்கள் சுஹாசினி, குஷ்பு, லலிதா குமாரி, கோவை சரளா மற்றும் சமூக செயற்பாட்டாளர் ராஜி கோபி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் பாலியல் குற்றங்களுக்கு உள்ளாகும் நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்ட திரைத்துறையினர் 5 வருடம் சினிமாவில் பணியாற்ற தடை விதிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

    இதுகுறித்து கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:-

    * பாலியல் புகார்களில் பாதிக்கப்பட்டவர்களின் புகார்களின் அடிப்படையில் குற்றம் புரிந்தவர்களை விசாரித்து புகாரில் உண்மை இருக்கும் பட்சத்தில் அவர்கள் 5 ஆண்டுகள் திரைத் துறையில் பணியாற்றுவதில் இருந்து தடை விதிக்க தயாரிப்பாளர் சங்கத்துக்கு பரிந்துரைக்கப்படும். கமிட்டியில் ஒரு வழக்கறிஞரும் நியமிக்கப்படுவார்.

    * பாதிக்கப்பட்டவர்கள் காவல் துறையில் புகார் தருவதில் இருந்து அவர்களுக்கு சட்டரீதியாக தேவைப்படும் அனைத்து உதவிகளையும் கமிட்டி செய்யும்.

    * பாலியல் குற்றங்களில் புகார் கூறப்படும் நபர்கள் மீது முதலில் எச்சரிக்கை விடப்படும். பின்னர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

    * பாலியல் தொல்லைக்குள்ளானவர்கள், தங்கள் புகார்களை தெரிவிக்க வசதியாக தனி தொலைபேசி எண் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ளது. தற்போது இ-மெயில் மூலமாக புகார் அளிக்கும் வசதியும் அளிக்கப்பட்டுள்ளது.

    * பாதிக்கப்பட்டவர்கள் இந்த கமிட்டி மூலம் தங்கள் புகார்களை அளிக்கவும் அதை விடுத்து நேரடியாக மீடியாக்களில் பேசவேண்டாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    * யூடியூபில் திரைத் துறையினர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பற்றி அவதூறாக பதிவிடப்படுவதால், பாதிக்கப்படுபவர்கள் சைபர் கிரைம் பிரிவு போலீசின் புகார் அளித்தால் கமிட்டி அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கும்.

    * மேலும் கமிட்டியின் நடவடிக்கைகளை தென்னிந்திய நடிகர் சங்கம் நேரடியாக கண்காணிக்கும்.

    இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • 4½ வருடங்களாக அறிக்கையை மறைத்து வைத்தது ஏன்?
    • மலையாள சினிமாவில் பவர் குரூப் இருக்கிறது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானதை தொடர்ந்து பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பல்வேறு நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த கசப்பான அனுபவங்களை தெரிவித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் தமிழில் தவமாய் தவமிகுந்து, மிருகம், பொக்கிஷம், இரும்புக்கோட்டை, முரட்டு சிங்கம் உள்பட ஏராளமான படங்களில் நடித்து இருப்பவர் நடிகை பத்மபிரியா. மலையாளத்தில் மம்முட்டி, மோகன்லால் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

    கடந்த 2017-ம் ஆண்டில் கொச்சியில் பிரபல மலையாள நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவத்திற்கு பின்னர் அமைக்கப்பட்ட சினிமா பெண்கள் கூட்டு அமைப்பை உருவாக்குவதற்கு இவரும் ஒரு காரணமாக இருந்தார்.

    இந்த அமைப்பில் இருந்த பத்மபிரியா, ரேவதி, ரம்யா நம்பீசன், மஞ்சு வாரியர் உள்ளிட்ட நடிகைகள் நேரில் சென்று முதல்-மந்திரி பினராயி விஜயனிடம் அளித்த கோரிக்கையை ஏற்று அப்போது அமைக்கப்பட்டதுதான் இந்த ஹேமா கமிட்டி ஆகும்.

    இந்த நிலையில் நடிகை பத்மபிரியா ஒரு மலையாள தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    கடந்த 4½ வருடங்களுக்கு மேலாக அந்த அறிக்கையை மறைத்து வைத்தது ஏன்? யாருக்காக வெளியிடாமல் மவுனம் காக்கப்பட்டது என்பது குறித்து அரசு விளக்கம் அளிக்க வேண்டும்.

    பாலியல் விவகாரத்தில் நிர்வாகிகள் அனைவரும் கூண்டோடு ராஜினாமா செய்த மலையாள நடிகர்கள் சங்கத்திற்கு தலையும், முதுகெலும்பும் கிடையாது. அனைவரும் பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டு உள்ளனர்.

    மலையாள சினிமாவில் பவர் குரூப் இருக்கிறது. யார் மறுத்தாலும் அதுதான் உண்மை. தங்கள் கைகளில் அதிகாரம் இருப்பதால்தான் அவர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இதுதொடர்பாக யாரும் வாயைத் திறக்க மறுக்கின்றனர்.

    தற்போது ஏற்பட்டுள்ள விவகாரத்தை ஒரு பாலியல் பிரச்சனையாக மட்டுமே சினிமா துறையினர், பொதுமக்கள் பார்க்கின்றனர். அவர்களுக்கு நடிகைகள் அனைவரும் ஒரு சரக்கு மட்டுமே.

    எனக்கு மலையாளத்தில் வாய்ப்புகள் திடீரென குறைந்து விட்டது. அதற்கு என்ன காரணம் என்று எனக்கு நன்றாகவே தெரியும். எனக்கு 26 வயது இருக்கும்போது வயதாகி விட்டதே, நடிப்பதை நிறுத்தக் கூடாதா? என்று ஒரு தயாரிப்பு நிர்வாகி கேட்டது எனக்கு பெரும் அதிர்ச்சியை தந்தது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கல்லூரி விடுதி முன்பு திரண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • இன்று காலை 2-வது நாளாக போராட்டம் நடந்தது.

    திருவெறும்பூர்:

    திருச்சி அருகே உள்ள துவாக்குடியில் மத்திய அரசுக்கு சொந்தமான என்.ஐ.டி. கல்லூரி அமைந்துள்ளது. இது மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.

    இங்கு தமிழகம் மட்டுமல்லாமல் நாட்டின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் தொழிற்கல்வி மற்றும் ஆராய்ச்சி கல்வி பயின்று வருகின்றனர்.

    கல்லூரி வளாகத்தில் மாணவ-மாணவிகளுக்கு தனித்தனி விடுதி வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த கல்லூரி வளாகத்தில் தற்போது பல்வேறு கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன.

    அதன் ஒரு பகுதியாக நேற்று மதியம் மாணவிகள் விடுதியில் வை-பை வசதி ஏற்படுத்துவதற்காக ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரைச் சேர்ந்த ஒப்பந்த தொழிலாளி கதிரேசன் விடுதிக்குள் சென்றார்.

    அப்போது தன்னந்தனியாக விடுதி அறையில் படித்துக் கொண்டிருந்த மாணவியிடம் அவர் அத்துமீறி பாலியல் தொந்தரவு கொடுத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி கூச்சலிட்டுக் கொண்டு வெளியே ஓடி வந்தார். மேலும் தனக்கு நேர்ந்த அநீதியை வாட்ஸ் அப்பில் பதிவிட்டார்.

    இது விடுதியில் தங்கி பிடிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் வேகமாக பரவியது. இதற்கிடையே விடுதி பெண் வார்டனிடம் பாதிக்கப்பட்ட மாணவி முறையிட்டார்.

    அப்போது அவர், ஆடைகள் சரியாக அணியாத காரணத்தினால் தான் இது போன்ற சம்பவங்கள் நடக்கிறது என அவரை கண்டித்ததாக தெரிகிறது.

    இது மாணவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து மாணவ-மாணவிகள் கல்லூரி விடுதி முன்பு திரண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்த கல்லூரி முதல்வர் அகிலா மாணவ-மாணவிகளிடம் நேற்று இரவு பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

    அதைத் தொடர்ந்து நேற்று இரவு 11:30 மணிக்கு தொடங்கிய போராட்டம் விடிய விடிய நீடித்தது. இன்று காலை 2-வது நாளாக போராட்டம் நடந்தது. இதில் 500-க்கும் மேற்பட்ட விடுதி மாணவ-மாணவிகள் ஈடுபட்டுள்ளனர்.

    இதுபற்றி அறிந்த திருவெறும்பூர் தாசில்தார் ஜெயபிரகாஷ் இன்று காலை அங்கு வந்து மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் மாணவர்கள் சமரசமாகவில்லை.

    பாதிக்கப்பட்ட மாணவியை திட்டிய வார்டன் உள்ளிட்ட 3 பெண் வார்டன்களும் பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினர்.

    அதைத்தொடர்ந்து இன்று காலை ஒரு பெண் வார்டன் பாதிக்கப்பட்ட மாணவியிடம் மன்னிப்பு கேட்டார். மற்ற 2 பேரும் வரவில்லை.

    இதனால் மாணவர்கள் மேலும் 2 பெண் வார்டன்கள் மன்னிப்பு கேட்டால் மட்டுமே போராட்டம் கைவிடப்படும் என கூறினர். இதையடுத்து உதவி கலெக்டர் அருள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    இதுபற்றி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் கூறும்போது, மாணவிகள் தங்கி இருக்கும் விடுதிக்குள் ஒரு ஒப்பந்த தொழிலாளியை எப்படி தன்னந்தனியாக கல்லூரி நிர்வாகம் அனுப்பி வைத்தது?. புகார் அளிக்க சென்ற மாணவிக்கு கல்லூரி நிர்வாகம் சார்பில் முதலில் எந்த உதவியும் செய்யப்படவில்லை.

    மாறாக அந்த மாணவி மீது வார்டன் அபாண்டமாக குற்றம் சுமத்தியுள்ளார். மேலும் காவல்துறையிலும் கல்லூரி நிர்வாகம் சார்பில் புகார் அளிக்க முயற்சிக்கவில்லை.

    பாதிக்கப்பட்ட மாணவி தனது தாய்-தந்தையிடம் பேசி அதன் பின்னரே மாணவர்கள் முன்னெடுத்து சென்று போலீசில் புகார் செய்துள்ளனர்.

    மாணவிகளின் பாதுகாப்பை கல்லூரி நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும். அதுவரை போராட்டம் தொடரும் என்றனர். இதைத் தொடர்ந்து திருச்சி எஸ்.பி.வருண் குமார் விரைந்து வந்து மாணவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.

    இதைத் தொடர்ந்து மற்ற 2 வார்டன்களும் அங்கு வந்து மாணவ-மாணவிகளிடம் மன்னிப்பு கேட்டனர். இதைத் தொடர்ந்து மாணவ-மாணவிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    இந்த போராட்டம் காரணமாக கல்லூரி வளாகம் பரபரப்புடன் காணப்பட்டது. பாதுகாப்புக்கு போலீசாரும் நிறுத்தப்பட்டுள்ளனர். 

    • நடிகை பீனா ஆன்டனி சித்திக்கை கட்டித்தழுவும் வீடியோ.
    • சித்திக் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    கேரளாவில் நடிகைக்கு வாய்ப்பு ஏற்படுத்தி தருவதாக கூறி பலாத்காரம் செய்ததாக பிரபல நடிகரும், நடிகர் சங்க பொதுச்செயலாளருமான சித்திக் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் நடிகை பீனா ஆன்டனி சித்திக்கை கட்டித்தழுவும் வீடியோ ஒன்று வெளியாகி வைராகி வருகிறது.

    இந்த வீடியோவை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்த நடிகை பீனா ஆன்டனி , `இந்த வீடியோ சில வருடங்களுக்கு முன் சித்திக்கின் மகன் ஷாபி மரணம் அடைந்த போது என்னால் செல்ல முடியவில்லை. அதன்பின் இதனால் ஒரு நிகழ்வின் போது அவரை சந்திக்க நேர்ந்தது.

    அப்போது அவரை ஆறுதல் படுத்துவதற்காக கட்டித்தழுவியதாகவும் சித்திக்கின் மகன் ஷாபி என்மீது அன்பாக இருந்ததால் அவனது இழப்பை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்றும் கூறியுள்ளார்.

    ஆனால் இப்போது அந்த வீடியோவை தவறான கருத்துக்களுடன் நெட்டிசன்கள் பகிர்ந்து தன்னையும், தன்னுடைய குடும்பத்தினரையும் வேதனைப்படுத்தும் வகையில் சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர். இது எனக்கு வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது' என்றும் கூறி உள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • பெண்களே உரையாடல்களையும், விவாதங்களையும் முன்னோக்கி எடுத்துச் செல்லுங்கள்.
    • பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    திருவனந்தபுரம்:

    நீதிபதி ஹேமா கமிஷனின் அறிக்கை வெளியானதை தொடர்ந்து ஏராளமான நடிகைகள் மற்றும் சினிமா பெண் கலைஞர்கள் மலையாள திரையுலகில் தாங்கள் அனுபவித்த பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து வெளிப்படையாக கூறி வருகின்றனர். அவர்கள் பிரபல நடிகர்கள் உள்ளிட்டவர்கள் மீது குற்றம் சுமத்தி வருகின்றனர்.

    ஹேமா கமிஷனின் அறிக்கை மற்றும் நடிகைகளின் பரபரப்பு பாலியல் குற்றச்சாட்டுகள் மலையாள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்டதாக கூறிவரும் நடிகை களுக்கு ஏராளமான நடிகைகள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

    நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கின்றனர்.

    நடிகைகள் தொடர்ச்சியாக பலர் மீது பாலியல் புகார் தெரிவித்து வரும் நிலையில், மலையாள திரைப்பட நடிகர்கள் சங்க தலைவர் நடிகர் மோகன்லால் உள்ளிட்ட நிர்வாகிகள் நேற்று முன்தினம் கூண்டோடு ராஜினாமா செய்தனர்.

    இதற்கு "தங்கலான்" பட நடிகை பார்வதி திருவோத்து கண்டனம் தெரிவித்துள்ளார். நடிகர்கள் சங்க நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்திருப்பது கோழைத்தனமான செயல் என்று அவர் கருத்து தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:-

    மலையாள திரைப்பட சங்கத்தில் சர்வாதிகார ஆட்சி நடக்கிறது. நடிகர்கள் சங்க நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா என்ற செய்தியை கேட்டவுடன் நான் முதலில் இது எவ்வளவு கோழைத்தனம் என்று தான் நினைத்தேன்.

    குற்றச்சாட்டுகளுக்கு பதில் கூறுவதற்கு பொறுப்பேற்க வேண்டிய நிலையில் இருந்து அவர்கள் எவ்வளவு கோழைத்தனமாக விலக்கிச் செல்கிறார்கள்.

    அவர்களின் இந்த செயலால் மீண்டும் நம் மீது பொறுப்பு விழுகிறது. பெண்களே உரையாடல்களையும், விவாதங்களையும் முன்னோக்கி எடுத்துச் செல்லுங்கள்.

    பெண்கள் புகார் அளித்தால் அதன்பேரில் வழக்கு பதிந்து, சம்பந்தப்பட்டவர்களின் பெயர்களை வெளியே கொண்டு வர வேண்டும்.

    ஆனால் இந்த விவகாரத்தில் அரசு கவனக்குறைவாக இருந்தது. பெண்களால் ஏற்படாத பிரச்சனைகளுக்கான பொறுப்பு எப்போதும் பெண்களின் மீதே சுமத்தப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • முகேஷ் எம்.எல்.ஏ. மீது ஜாமீனில் வெளியே வர முடியாத பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
    • இடதுசாரி முன்னணி பெண்களுக்கு ஆதரவாக உள்ளது என்றார்.

    மலையாள திரையுலகில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்கள் அனுபவித்து வரும் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்த ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா கமிஷனின் அறிக்கை கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது.

    அதில் மலையாள திரை உலகில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்கள் அனுபவித்த பாலியல் துன்புறுத்தல்கள் வெட்டவெளிச்சத்துக்கு வந்தது. மேலும் பல நடிகைகள் தங்களுக்கு நடந்த பாலியல் துன்புறுத்தல்கள் குறித்த தகவல்களை வெளிப்படையாக கூறி வருகின்றனர்.

    அதன்பேரில் விசாரணை நடத்த டி.ஐ.ஜி. அஜிதா பீகம், போலீஸ் சூப்பிரண்டுகள் பூங்குழலி, மெரின், ஐஸ்வர்யா ஆகியோர் அடங்கிய சிறப்பு விசாரணை குழுவை கேரள அரசு நியமித்தது. அந்த குழுவினர் நேரடி விசாரணையை தொடங்கி உள்ளனர். அவர்களிடம் நடிகர்கள் உள்ளிட்டோர் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை கூறிய நடிகைகள் ரகசிய வாக்குமூலம் அளித்து வருகின்றனர்.

    இந்த நிலையில், எம்.எல்.ஏ.வாக இருக்கும் நடிகர் முகேஷ் மீது கொச்சியை சேர்ந்த கவர்ச்சி நடிகை மினு பாலியல் புகார் கூறியிருக்கிறார். இதனால் அவருக்கு எதிராக பெண்கள் அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்கள் எம்.எல்.ஏ. பதவியில் இருந்து முகேஷ் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, அவரது வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து, கவர்ச்சி நடிகை புகாரின் பேரில் முகேஷ் எம்.எல்.ஏ. மீது ஜாமீனில் வெளியே வர முடியாத பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். அவர் மீது பாலியல் பலாத்கார வழக்கு பதியப்பட்டுள்ளது.

    இந்நிலையில், முகேஷ் மீது பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து எம்.எல்.ஏ. பதவியில் நீடிக்க சட்டரீதியாகவோ தார்மீக தகுதியோ அவருக்கு இல்லை என்று சிபிஐ தலைவர் ஆனி ராஜா கூறியுள்ளார்.

    மேலும் ஆனி ராஜா கூறியதாவது:- "ஹேமா கமிஷனின் கண்டுபிடிப்புகள் மற்றும் பரிந்துரைகளை அடுத்து, திரைப்படத்துறையில் பெண்களுக்கு பாதுகாப்பான மற்றும் பாதுகாப்பான பணிச்சூழலை உறுதி செய்வதற்கு மாநில அரசின் முயற்சிகளுக்கு இது துணைபுரியும்".

    தற்போது முகேஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால், அந்தப் பதவியில் நீடிக்க அவருக்கு தார்மீக அல்லது சட்டப்பூர்வ தகுதி இல்லை. எனவே அவர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.

    முகேஷ் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்யாவிட்டால், மாநில அரசின் நேர்மையான முயற்சிகள் தடைபடும். இது மாநில அரசின் இமேஜையும் பாதிக்கும். இடதுசாரி முன்னணி பெண்களுக்கு ஆதரவாக உள்ளது என்றார்.

    • சினிமாவில் நடிக்க வரும் பெண்கள் மிகவும் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும்.
    • தவறான எண்ணத்தில் அழைக்கும் திரைத்துறையினர் யாராக இருந்தாலும் நடிகைகள் செருப்பால் அடிக்க வேண்டும்.

    சென்னை:

    ஹேமா கமிஷன் அறிக்கையால் மலையாள பட உலகில் நடந்த பாலியல் அத்துமீறல்கள் வெளிச்சத்துக்கு வந்து நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்நிலையில் தவறான எண்ணத்தில் அழைக்கும் திரைத்துறையினர் யாராக இருந்தாலும் நடிகைகள் செருப்பால் அடிக்க வேண்டும் என தமிழ் திரைப்பட நடிகர் சங்க செயலாளர் விஷால் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    சினிமாவில் நடிக்க வரும் பெண்கள், மிகவும் கவனமாகவும், உஷாராகவும் இருக்க வேண்டும். தவறான எண்ணத்தில் அழைக்கும் திரைத்துறையினர் யாராக இருந்தாலும் நடிகைகள் செருப்பால் அடிக்க வேண்டும். கேரளாவில் ஹேமா கமிட்டி அமைக்கப்பட்டதை போன்று தமிழ் திரையுலகில் பாலியல் சீண்டலை அறிய கமிட்டி அமைக்கப்படும்.

    தமிழ் சினிமாவில் 10 பேர் கொண்ட குழுவுடன் ஒரு கமிட்டி அமைப்பது தொடர்பான பணிகள் நடைபெறுகிறது. தமிழ் திரையுலகில் பாலியல் சீண்டல் நடக்கிறதா இல்லையா என்று என்னால் செல்ல முடியாது.

    சினிமாவில் நடிக்க வரும் பெண்களில் 20% பேருக்கு தான் வாய்ப்பு கிடைக்கிறது. 80% பேருக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை. சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி ஏமாற்றுவோரை, செருப்பால் அடிக்க வேண்டும். எந்த பிரபலமாக இருந்தாலும் தப்பு செய்தவர்கள் தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும்.

    இவ்வாறு விஷால் கூறியுள்ளார்.

    • நடிகைகள் ரகசிய வாக்குமூலம் அளித்து வருகின்றனர்.
    • பெண்கள் அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    திருவனந்தபுரம்:

    மலையாள திரையுலகில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்கள் அனுபவித்து வரும் பாலியல் துன்புறுத் தல்கள் குறித்து விசாரணை நடத்திய ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா கமிஷனின் அறிக்கை கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது.

    அதில் மலையாள திரை உலகில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்கள் அனுபவித்த பாலியல் துன்புறுத்தல்கள் வெட்டவெளிச்சத்துக்கு வந்தது.

    மேலும் பல நடிகைகள் தங்களுக்கு நடந்த பாலியல் துன்புறுத்தல்கள் குறித்த தகவல்களை வெளிப்படையாக கூறி வருகின்றனர்.

    அவர்கள் மலையாள நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் உள்ளிட்டோருக்கு எதிராக பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறினர்.

    அதன்பேரில் விசாரணை நடத்த டி.ஐ.ஜி. அஜிதா பீகம், போலீஸ் சூப்பிரண்டுகள் பூங்குழலி, மெரின், ஐஸ்வர்யா ஆகியோர் அடங்கிய சிறப்பு விசாரணை குழுவை கேரள அரசு நியமித்தது.

    அந்த குழுவினர் நேரடி விசாரணையை தொடங்கி உள்ளனர். அவர்களிடம் நடிகர்கள் உள்ளிட்டோர் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை கூறிய நடிகைகள் ரகசிய வாக்குமூலம் அளித்து வருகின்றனர்.

    அதன்பேரில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பணியில் சிறப்பு விசாரணை குழு ஈடுபட்டு வருகிறது.

    பாலியல் புகார்கள் தொடர்பாக நடிகர் சித்திக், இயக்குனர் ரஞ்சித் உள்ளிட்டோர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. அவர்கள் மேல் மேலும் பல நடிகைகள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

    எம்.எல்.ஏ.வாக இருக்கும் நடிகர் முகேஷ் மீது கொச்சியை சேர்ந்த கவர்ச்சி நடிகை மினு பாலியல் புகார் கூறியிருக்கிறார். இதனால் அவருக்கு எதிராக பெண்கள் அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    அவர்கள் எம்.எல்.ஏ. பதவியில் இருந்து முகேஷ் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, அவரது வீட்டை நேற்று 2-வது நாளாக முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

    மேலும் அந்த கோரிக்கையை வலியுறுத்தி பெண்கள் அமைப்புகளை சேர்ந்த 100 பெண்கள் கூட்டறிக்கை வெளியிட்டிருக்கின்றனர். அவர் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யாவிட்டால், அந்த பதவியில் இருந்து அவரை நீக்கவேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர்.

    இந்நிலையில் கவர்ச்சி நடிகை புகாரின் பேரில் முகேஷ் எம்.எல்.ஏ. மீது ஜாமீனில் வெளியே வர முடியாத பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். அவர் மீது பாலியல் பலாத்கார வழக்கு பதியப்பட்டுள்ளது.

    முகேஷை தவிர நடிகையின் புகாரின் பேரில் நடிகர் மணியன்பிள்ளை ராஜூ, முன்னாள் பொதுச் செயலாளர் ஏவலபாபு ஆகியோர் மீதும் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். 

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×