என் மலர்
நீங்கள் தேடியது "மீடூ"
- பாலிவுட் நடிகையான தனுஸ்ரீ தத்தா, தமிழில் தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் நடித்துள்ளார்.
- இந்தி நடிகர் நானா படேகர் மீது தனுஸ்ரீ தத்தா பாலியல் புகார் கூறினார்.
தமிழில் 'தீராத விளையாட்டு பிள்ளை' படத்தில் நடித்துள்ள பாலிவுட் நடிகையான தனுஸ்ரீ தத்தா, தமிழில் பொம்மலாட்டம், காலா படங்களில் நடித்துள்ள பிரபல இந்தி நடிகர் நானா படேகர் மீது பாலியல் புகார் கூறினார்.
2018-ம் ஆண்டு ஹார்ன் ஓகே ப்ளஸ் என்ற இந்தி படத்தின் படப்பிடிப்பில் நானா படேகர் பாலியல் தொல்லை கொடுத்தார் என்று மும்பை போலீசில் புகார் அளித்தார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், தனது சொந்த வீட்டிலேயே தம்மை துன்புறுத்துவதாகவும், தமக்கு யாராவது உதவி செய்யும்படியும் சமூக வலைதளத்தில் தனுஸ்ரீ தத்தா வீடியோ வெளியிட்டு கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், அந்த வீடியோவில் metoo புகார் கொடுத்ததில் இருந்து தனது சொந்த வீட்டிலேயே நான் மிகவும் துன்புறுத்தப்பட்டேன். அதனால் மிகவும் சோர்ந்து விட்டேன். இப்போது எனக்கு உடல்நிலை சரியில்லை" என்று தெரிவித்தார்.
பிரபல பின்னணி பாடகி சின்மயி. இவர் ‘மீடூ’வில் கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகார் தெரிவித்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் சின்மயிக்கு திரையுலகில் ஆதரவும், எதிர்ப்பும் இருந்தது. சின்மயி படங்களில் கதாநாயகிகளுக்கு டப்பிங் குரலும் கொடுத்து வந்தார்.
இதற்கிடையே டப்பிங் யூனியனில் இருந்து திடீரென்று நீக்கப்பட்டார். அவர் உறுப்பினர் சந்தாவை 2 ஆண்டாக செலுத்த தவறியதால் நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதுபற்றி சின்மயி கூறும்போது, டப்பிங் யூனியன் தலைவர் நடிகர் ராதாரவி தூண்டுதலின் பேரில்தான் நீக்கம் செய்யப்பட்டு உள்ளதாக குற்றம்சாட்டினார். இந்த நிலையில் டப்பிங் யூனியனில் இருந்து தன்னை நீக்க முடியாது என்று சின்மயி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
டப்பிங் யூனியனில் இருந்து என்னை அவர்கள் நீக்கம் செய்ய வேண்டுமென்றால் எனக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருக்க வேண்டும். அப்போதுதான் நான் விளக்கம் அளிக்க முடியும். ஆனால் இது அவர்களது சொந்த விதிமுறைபடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

நான் ஏற்கனவே வாழ்நாள் உறுப்பினர் சந்தாவை செலுத்தி உள்ளேன். அதற்கான வங்கி விவரங்கள் என்னிடம் உள்ளன. இதனால் சந்தா தொகை செலுத்தாததால் என்னை நீக்கியதாக கூறுவது தவறு. டப்பிங் யூனியனில் இருந்து என்னை நீக்கியது செல்லாது. ‘மீடு’ விவகாரத்தில் பாலியல் புகார்களை நான் கூறியதால் ராதாரவி என்னை நீக்கி உள்ளார்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொந்தரவு தொடர்பான தகவல்களை “மீ டூ” என்ற பெயரில் டுவிட்டர் இணைய தளத்தில் பகிர்ந்து வருகிறார்கள். அவ்வகையில், மத்திய மந்திரி எம்.ஜே.அக்பர் மீது பிரியாரமணி, கசாலா வகாப், ஷிமா ரகா, அஞ்சுபாரதி உள்ளிட்ட பிரபல பெண் பத்திரிகையாளர்கள் பாலியல் புகார்களை தெரிவித்தனர். இதையடுத்து எழுந்த கடும் விமர்சனங்களைத் தொடர்ந்து மந்திரி பதவியை ராஜினாமா செய்தார் அக்பர்.
அதேசமயம், தன்மீது பாலியல் புகாரை முதலில் கூறிய பிரியா ரமணி என்ற பெண் பத்திரிகையாளர் மீது எம்.ஜே.அக்பர் கிரிமினல் அவதூறு வழக்கு தொடர்ந்தார். டெல்லி பாட்டியாலா ஹவுஸ் கோர்ட்டில் கிரிமினல் இதற்கான மனுவை அளித்தார்.
“பிரியா ரமணி வேண்டுமென்றே தீய நோக்கத்துடனும், உள்நோக்கத்துடனும் புகார் கூறியுள்ளார். அவர் மீது உரிய அவதூறு சட்டப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது, எம்.ஜே.அக்பர் தரப்பு வாதத்தைக் கேட்ட நீதிமன்றம், அவதூறு வழக்கை விசாரணைக்கு ஏற்றது. அத்துடன் விசாரணை 31-ம் தேதி தொடங்கும் என்றும் தெரிவித்தது.
31-ம்தேதி எம்.ஜே.அக்பர் மற்றும் பிற சாட்சியங்கள் நேரில் ஆஜராகி தங்கள் சாட்சியம் அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
‘பத்திரிகையாளர் பிரியா ரமணியின் பாலியல் புகார் தொடர்பான டுவிட்டர் பதிவால் நான் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன். பிரியா ரமணி சொல்வது போன்ற எந்த தவறையும் நான் செய்யவில்லை. என் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டதால் பதவி விலகினேன்’ என எம்.ஜே.அக்பர் கூறினார். #MJAkbar #MeToo #JournalistPriyaRamani
பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொந்தரவு தொடர்பான தகவல்களை “மீ டூ” என்ற பெயரில் டுவிட்டர் இணைய தளத்தில் பகிர்ந்து வருகிறார்கள். அவ்வகையில், மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி எம்.ஜே.அக்பரும் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கிறார். அவர் மீது பெண் பத்திரிகையாளர்கள் பாலியல் புகார்களை தெரிவித்துள்ளனர்.
மத்திய மந்திரி எம்.ஜே.அக்பர் பத்திரிகையாளராக இருந்தபோது பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக சில பெண்கள் புகார் செய்தனர். ‘இது பொய்யானது, கற்பனையானது’ என அவர் மறுத்துள்ளார். புகார் பற்றி மத்திய மந்திரி ராமதாஸ் அதவாலேவிடம் கருத்து கேட்டபோது அவர் கூறியதாவது:-

பெண்களை துன்புறுத்தும் தனிநபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அவர்கள் நானா படேகர், எம்.ஜே.அக்பர் போன்று பிரபலமானவர்களாக இருந்தாலும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அக்பர் மீதான புகார் நிரூபிக்கப்பட்டால் அவர் ராஜினாமா செய்ய வேண்டும். ஆனால், ‘மீ டூ’ சிலரை பொய் புகாரில் சிக்கவைக்கும் தலமாக மாறிவிட வாய்ப்பு உள்ளது என்பது எனது கருத்து. அதுபோன்ற புகார்கள் குறித்து போலீசார் உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு ராமதாஸ் அதவாலே கூறினார். #RamdasAthawale #MeToo #MJAkbar






