search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "MeToo"

    தெலுங்கு சினிமாவின் முன்னணி பாடகிகளில் ஒருவராக இருக்கும் பிரணவி, பிரபல இயக்குனர் ஒருவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறியிருக்கிறார்.
    தெலுங்கு சினிமாவின் முன்னணி பாடகிகளில் ஒருவர் பிரணவி. இவர் ஸ்ரீ ராமதாசு, ஹேப்பி டேஸ், எமதொங்கா, லயன் உள்ளிட்ட படங்களில் பாடி புகழ் பெற்றவர். சில ஆண்டுகளுக்கு முன்பு நடன இயக்குனர் ரகு மாஸ்டரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

    சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் சினிமாவில் பாட வாய்ப்பு தேடிய சமயத்தில் பலர் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரிவித்துள்ளார். அதற்கு சம்மதித்தால் மட்டுமே பாட வாய்ப்பு அளிக்கப்படும் என சில பிரபலங்கள் தன்னை வற்புறுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார். அப்படி நடந்த சம்பவம் ஒன்று பற்றியும் அவர் கூறியுள்ளார்.



    ‘நான் சினிமாவில் பாட பலரிடம் வாய்ப்பு கேட்டேன். அப்போது பிரபல இயக்குனர் ஒருவர் தனக்கு பாட வாய்ப்பு தருவதாக தெரிவித்தார். ஸ்டூடியோவுக்கு வருமாறு அழைத்தார். அங்கு சென்றதும் பாலியல் தொந்தரவு கொடுத்தார். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. நான் சின்ன பொண்ணு இப்போதுதான் பள்ளி படிப்பை முடித்து இருக்கிறேன் என்று கூறினேன்.

    ஆனால் அதை அவர் பொருட்படுத்தவில்லை. ஆபாசமாகவும் பேசினார். எனக்கு கோபம் வந்தது. அவரை பார்த்து செருப்பால் அடிப்பேன் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பி வந்து விட்டேன்’.

    இவ்வாறு பிரணவி கூறியுள்ளார்.
    தன்னுடைய சினிமா வாழ்க்கை மோசமாக இருந்ததாக கூறிய நடிகை ரிச்சா, நடிக்க வாய்ப்பு கேட்கும்போதெல்லாம் படுக்கைக்கு அழைத்ததாலேயே தான் சினிமாவை விட்டு விலகியதாக கூறியுள்ளார். #MeToo #RichaBhadra
    சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடி வரும் பெண்களை நடிகர்களும், இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் படுக்கைக்கு அழைப்பதாக பரவலாக குற்றச்சாட்டுகள் கிளம்பி உள்ளன. 

    இந்தி திரையுலகில் பிரபலமாக இருக்கும் பலர் இந்த புகாரில் சிக்கி உள்ளனர். நடிகை தனுஸ்ரீ தத்தா நடிகர்கள், இயக்குனர்கள் மீது பாலியல் புகார் சொல்லி பரபரப்பு ஏற்படுத்தினார்.

    தமிழ், தெலுங்கு பட உலகிலும் நடிகர்கள், இயக்குனர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. இந்த நிலையில் பிரபல இந்தி நடிகை ரிச்சா பத்ராவும் பாலியல் தொல்லையில் சிக்கியதாக பரபரப்பு தகவலை வெளியிட்டு உள்ளார். இவர் 2002-ல் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் முன்னணி நடிகையாக உயர்ந்தார்.



    அதிக படங்களில் நடித்துக்கொண்டு இருந்தபோதே திடீரென சினிமாவை விட்டு விலகினார். அதன்பிறகு திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டார். சினிமா வாழ்க்கை குறித்து ரிச்சா கூறியதாவது:-

    “என் சினிமா வாழ்க்கை மோசமாக இருந்தது. நடிக்க வாய்ப்பு கேட்கும்போதெல்லாம் படுக்கைக்கு அழைத்தனர். இதனால்தான் சினிமாவே வேண்டாம் என்று ஒதுங்கிவிட்டேன். திருமணம் செய்துகொண்ட பிறகு நடிக்க ஆர்வம் ஏற்பட்டது. எனவே மீண்டும் நடிக்க வாய்ப்பு தேடினேன்.

    அப்போதும் என்னை படுக்கைக்கு வரும்படி கட்டாயப்படுத்தினர். இதனால் சினிமா துறையே வேண்டாம் என்று முடிவு கட்டி இப்போது முழுமையாக ஒதுங்கி விட்டேன்.”

    இவ்வாறு ரிச்சா கூறியுள்ளார். #MeToo #RichaBhadra

    தென்னிந்திய நடிகர் நடிகைகளின் சுயமரியாதை, பொது வாழ்வு மதிப்பீடு மற்றும் சுயகவுரவம் இவற்றின் பாதுகாப்பு கருதி தென்னிந்திய நடிகர் சங்கம் சிறப்புக் குழு ஒன்றை அமைத்துள்ளது. #MeToo #NadigarSangam
    பெண்கள் தங்கள் துறைகளில் தங்களுக்கு நடக்கும் பாலியல் அத்துமீறல்களை வெளிப்படுத்த சர்வதேச அளவில் உருவான இயக்கம் மீடூ.

    இந்த இயக்கம் சார்பில் தமிழ் சினிமாவில் நடிகைகள், பாடகிகள் என சில பெண்கள் தங்களுக்கு நேர்ந்த அத்துமீறல்களை வெளிக்கொண்டு வந்தனர். அப்போதே நடிகர் சங்கம் சார்பில் இந்த பிரச்சினைகளை கையாள ஒரு குழு அமைக்கப்படும் என்று நடிகர் சங்க பொதுசெயலாளர் விஷால் அறிவித்தார்.

    கடந்த மாதம் நயன்தாராவை ராதாரவி மேடையில் விமர்சித்த சம்பவம் பரபரப்பானது. அப்போது நயன்தாரா வெளியிட்ட அறிக்கையில் நடிகர் சங்கம் சார்பில் விஷாகா கமிட்டி அமைப்பதன் அவசியத்தை வலியுறுத்தி இருந்தார்.

    இந்நிலையில் நடிகர் சங்கம் சார்பில் இது போல பாதிக்கப்படும் பெண்களுக்கு நியாயம் வழங்க ஒரு சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.



    இதுகுறித்து நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தென்னிந்திய நடிகர் நடிகைகளின் சுயமரியாதை, பொது வாழ்வு மதிப்பீடு மற்றும் சுயகவுரவம் இவற்றின் பாதுகாப்பு கருதி தென்னிந்திய நடிகர் சங்கம் சிறப்புக் குழு ஒன்றை அமைத்துள்ளது.

    இந்த குழுவின் ஆலோசனைக் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. அதில், குழு அமைப்பாளர்கள் நடிகர் சங்க செயற்குழு உறுப்பினர்கள் பூச்சி முருகன், லலிதாகுமாரி, நடிகைகள் சுகாசினி, ரோகிணி, நடிகர் கிட்டி, பொருளாளர் கார்த்தி மற்றும் வழக்கறிஞர் கிருஷ்ணா ரவீந்திரன் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்’ என்று கூறப்பட்டுள்ளது.

    இந்த சிறப்புக் குழு மூலம் நடிகர், நடிகைகளின் சுயமரியாதைக்கு மதிப்பளிக்கும் வகையிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #MeToo #NadigarSangam

    தென்னிந்திய சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வரும் ரகுல் ப்ரீத் சிங் இந்தியில் நடித்திருக்கும் படத்தில் மீடூ புகாரில் சிக்கிய நடிகர் அலோக் நாத் நடித்திருப்பதால் ரசிகர்கள் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். #DeDePyaarDe
    ரகுல் பிரீத்தி சிங் தமிழில் சூர்யா ஜோடியாக என்.ஜி.கே படத்திலும், சிவகார்த்திகேயன் ஜோடியாக ஒரு படத்திலும் நடித்து வருகிறார். இந்தியில் டெ டெ பியார் டெ படத்தில் அஜய் தேவ்கன் ஜோடியாக நடித்துள்ளார்.

    இந்த படம் முடிந்து திரைக்கு வரும் நிலையில் உள்ளது. ஆனால் அந்த படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று வலைதளங்களில் ரசிகர்கள் பலரும் கமென்ட் பகிர்ந்து வருகின்றனர். இது ரகுலை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. ஆனால் ரகுலால் படத்துக்கு எந்த பிரச்சினையும் இல்லை.



    இதே படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் குணசித்திர நடிகர் அலோக் நாத் நடித்திருக்கிறார். சமீபத்தில் அவர் மீது நடிகை வின்டா நந்தா மீடூ இயக்கம் சார்பாக புகார் கூறினார். தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக அவர் தெரிவித்திருந்தார். அலோக் நாத் நடித்த படம் என்பதால் இந்த படத்தை வெளியிடக்கூடாது என்று இணையதளங்களில் கமென்ட் பகிர்ந்து வருகின்றனர். #DeDePyaarDe #RakulPreetSingh #AlokNath #MeToo

    மீடூ விவகாரத்தில் கவிஞர் வைரமுத்து மீது புகார் அளித்து எந்த பயனும் இல்லாததால், மத்திய மந்திரி மேனகா காந்தியிடம் சின்மயி புகார் அளித்துள்ளார். #MeToo #Chinmayi #ManekaGandhi
    பெண்கள் தங்கள் துறைகளில் இருக்கும் ஆண்கள் மூலம் பாலியல் தொல்லைகளுக்கு ஆளானதை சமூக வலைதளங்களில் வெளிப்படுத்த தொடங்கப்பட்டது மீடூ இயக்கம். சர்வதேச அளவில் பிரபலமான இந்த இயக்கம் மூலம் தமிழ் சினிமாவின் பிரபல பாடகியும் டப்பிங் கலைஞருமான சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது பாலியல் புகார் கூறினார்.

    சின்மயி புகாரின் மீது எந்த நடவடிக்கையும் இல்லாததால் இந்த விவகாரம் குறித்து அவர் மத்திய மந்திரி மேனகா காந்தியிடம் புகார் அளித்துள்ளார். மத்திய மகளிர் மற்றும் குழந்தை மேம்பாட்டுத்துறை மந்திரியான மேனகா காந்தியை குறிப்பிட்டு சின்மயி ட்விட்டரில் பதிவிட்டுள்ள பதிவில், “வைரமுத்து மீது நான் புகார் அளித்து நான்கு மாதங்கள் ஆகிவிட்டன. அதன் பிறகு தமிழ் சினிமா துறையிலிருந்து (டப்பிங் யூனியன்) நான் விலக்கப்பட்டுள்ளேன். வழக்கு பதிவு செய்வதற்கு இன்றைய சட்டம் எனக்கு அனுமதி அளிப்பது இல்லை. எனக்கு ஒரு தீர்வு அளியுங்கள்” என்று கோரிக்கை விடுத்துள்ளார்.



    சின்மயி பதிவுக்கு மத்திய மந்திரி மேனகா காந்தி அளித்த பதில் ட்விட்டில், “உங்களது புகாரை தேசிய மகளிர் ஆணையத்திடம் எடுத்துச் சென்றுள்ளேன். உங்களது விவரங்களை செய்தியில் அனுப்பவும்” என்று தெரிவித்துள்ளார்.

    அமைச்சரின் ட்விட்டுக்குப் பதிலளித்த சின்மயி, “என்னைப் போலவே பல பெண்கள் தங்களது பாதுகாப்புக்காகவும், தொழிலுக்காகவும் பயப்படுகின்றனர். வைரமுத்து மட்டும் அல்லாமல் சினிமா துறையில் பல ஆண்களால் பெண்கள் அஞ்சுகின்றனர். எங்கள் அனைவருக்குமே தீர்வு வேண்டும். உங்களது பதில் ட்விட்டைப் பாராட்டுகிறேன்” என்று தெரிவித்துள்ளார். #MeToo
    தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னட மொழி படங்களில் அதிகமான பாடல்கள் பாடிய கார்த்திக், முதல் முறையாக மீடூ புகாருக்கு விளக்கம் அளித்துள்ளார். #MeToo #SingerKarthik
    தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னட மொழி படங்களில் அதிகமான பாடல்கள் பாடி உள்ள பிரபல பாடகர் கார்த்திக் மீது ‘மீ டூ’வில் சில மாதங்களுக்கு முன்பு பாலியல் புகார் கூறப்பட்டது. வெளிநாட்டு தமிழ் பாடகி இந்த புகாரை கூறியிருந்தார். இதனை பாடகி சின்மயி வெளியிட்டார். இதற்கு தற்போது தனது டுவிட்டர் பக்கத்தில் கார்த்திக் விளக்கம் அளித்து கூறியிருப்பதாவது:-

    “புல்வாமாவில் பயங்கரவாத தாக்குதலில் உயிர் துறந்த வீரர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். என்மீது கூறப்படும் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்க விரும்புகிறேன். என்னை சுற்றி எப்போதும் மகிழ்ச்சி பரவ வேண்டும் என்று விரும்புபவன் நான்.

    சமீபகாலமாக என் மீது வதந்திகள் வருகின்றன. நான் இதுவரை யாரையும் புண்படுத்தியது இல்லை. யாருக்கும் தொல்லையோ, அசவுகரியமோ கொடுத்ததும் இல்லை. கடந்த காலங்களில் எனது செயலால் யாராவது சங்கடப்பட்டு இருந்தால் அந்த தவறுக்கான விளைவுகளை சந்திக்க தயாராக இருக்கிறேன்.



    ‘மீ டூ’ இயக்கத்தை நான் ஆதரிக்கிறேன். எனக்கு எதிரான புகாரில் உண்மை இருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்கவும் சட்ட நடவடிக்கைக்கு உட்படவும் தயாராக இருக்கிறேன்.”

    இவ்வாறு பாடகர் கார்த்திக் கூறியுள்ளார்.
    மீடு இயக்கத்தில் தன் பெயர் வராதது அதிர்ஷ்டம் தான் என இந்தி நடிகரும் லோக்சபா எம்.பியுமான சத்ருகன் சின்கா பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. #ShatrughanSinha #MeToo
    மும்பை:

    பிரபலங்கள் மீது பெண்கள் பாலியல் புகார் கூறும் மீடூ இயக்கம் கடந்த சில மாதங்களாக நாடு முழுக்க பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தி நடிகர் நானா படேகர் மீது நடிகை தனுஸ்ரீ தத்தா இந்த இயக்கத்தின் மூலம் பாலியல் புகார் கூறினார். அவருக்கு ஆதரவும் எதிர்ப்பும் எழுந்தன.

    இந்நிலையில் மீடூ இயக்கம் பற்றி இந்தி நடிகரும் லோக்சபா எம்.பியுமான சத்ருகன் சின்கா கூறியது சர்ச்சையாகி இருக்கிறது. அவர் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது கூறியதாவது:-

    ‘இது மீடூ காலம். ஒரு வெற்றிகரமான ஆணின் தோல்விக்கு பின்னால் ஒரு பெண் இருக்கிறார் என்பதை வெட்கப்படாமல் சொல்லலாம். இந்த இயக்கத்தால் வெற்றிகரமான ஆண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு பின்னால் பெரும்பாலும் பெண்கள் உள்ளனர். நான் எவ்வளவோ செய்து இருக்கிறேன். ஆனால் செய்ததை எல்லாம் தாண்டி என் பெயர் மீடூ இயக்கத்தில் வெளியே வரவில்லை. அதனால் என்னை அதிர்ஷ்டசாலி என்றே கூற வேண்டும்.



    நான் என் மனைவி சொல்வதை கேட்கிறேன். எந்த புகாரும் இல்லை என்றாலும் என் மனைவியை பல நேரம் உடன் அழைத்துச் செல்கிறேன். மற்றவர்களிடம் நான் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று காட்ட முடியும் என்பதுதான் அதன் காரணம். என் மனைவி பூனம் ஒரு பெண் கடவுள். அவர் தான் எனக்கு எல்லாமே. யாராவது என்னைப் பற்றி எதையாவது தெரிவிக்க விரும்பினாலும் தயவு செய்து சொல்லிவிடாதீர்கள்.’

    இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

    இந்த கருத்துக்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பை உருவாகியுள்ளது. சத்ருகன் சின்கா மகள் சோனாக்‌ஷி சின்கா இந்தி சினிமாவில் கதாநாயகியாக இருப்பவர்.

    சத்ருகன் சின்கா ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பர். சோனாக்‌ஷி ரஜினிக்கு ஜோடியாக லிங்கா படத்தில் நடித்து இருந்தார். #ShatrughanSinha #MeToo
    மத்திய முன்னாள் மந்திரி எம்.ஜே. அக்பருக்கு எதிராக பாலியல் புகார் தெரிவித்த பெண் பத்திரிகையாளர் பிரியா ரமணிக்கு டெல்லி கோர்ட் சம்மன் அனுப்பியுள்ளது. #metoo #MJAkbar #MJAkbardefamationsuit #journalistPriyaRamani
    புதுடெல்லி:

    பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொந்தரவு தொடர்பான தகவல்களை “மீடூ” என்ற பெயரில் டுவிட்டர் இணைய தளத்தில் பகிர்ந்து வருகிறார்கள். அரசியல்வாதிகள், சினிமா துறை பிரபலங்கள் என பலரும் இந்த “மீடூ” இந்தியா ஹேஷ்டேக் தகவல் பகிர்வுகளால் பாதிப்பு அடைந்தனர்.
     
    அவ்வகையில், மீடூ பாலியல் குற்றச்சாட்டுக்கு மத்திய மந்திரி எம்.ஜே.அக்பரும் ஆளானார். பிரபல பத்திரிகையாளராக இருந்து பா.ஜனதாவில் இணைந்து மாநிலங்களவை எம்.பி. மற்றும் இந்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி  பொறுப்பில் இருந்த எம்.ஜே.அக்பர் மீது பெண் பத்திரிகையாளர்கள் பாலியல் புகார்களை தெரிவித்தனர். இதனால் தனது மந்திரி பதவியை அவர் ராஜினாமா செய்ய நேரிட்டது.

    இதைதொடர்ந்து, அக்பரின் சட்ட ஆலோசனை நிறுவனமான கரன்ஜாவாலா குழுமத்தை சேர்ந்த வழக்கறிஞர்கள் எம்.ஜே.அக்பர் மீது பாலியல் புகார் கூறிய பெண் பத்திரிகையாளர்களில் ஒருவரான பிரியா ரமணி மீது டெல்லி கூடுதல் அமர்வு மாஜிஸ்திரேட் கோர்ட்டில் கிரிமினல் சட்டப்பிரிவுகளின்கீழ் மானநஷ்ட வழக்கு தொடர்ந்தனர்.


    இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது எம்.ஜே.அக்பர் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். மாஜிஸ்திரேட் சமர் விஷாலிடம் தனது வாக்குமூலத்தை அவர் பதிவு செய்தார். தன்னை அவமானப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் பிரியா ரமணி சமூக வலைத்தளங்களின் மூலம் அவதூறான குற்றச்சாட்டுகளை பரவ விட்டதாக அவர் தெரிவித்தார்.

    எம்.ஜே.அக்பரின் வாக்குமூலத்தை பதிவு செய்துகொண்ட மாஜிஸ்திரேட் இவ்வழக்கின் மறுவிசாரணையை ஒத்திவைத்தார்.

    இந்நிலையில், இவ்வழக்கில் பிப்ரவரி மாதம் 25-ம் தேதி நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்குமாறு எம்.ஜே. அக்பருக்கு எதிராக பாலியல் புகார் தெரிவித்த பெண் பத்திரிகையாளர் பிரியா ரமணிக்கு டெல்லி கோர்ட் இன்று சம்மன் அனுப்பியுள்ளது. #metoo #MJAkbar #MJAkbardefamationsuit #journalistPriyaRamani 
    மீடூ புகார்கள் மீது அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டிய சின்மயி, உண்மை கண்டறியும் சோதனைக்கு தான் தயாராக இருப்பதாக கூறினார். #MeToo #Chinmayi
    இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் பெசண்ட் நகர் கடற்கரையில் கேஸ்டலெஸ் கலெக்டிவ் என்னும் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. பறை இசையோடு தொடங்கிய இந்த நிகழ்வில் சினிமா, கலையுலக பிரபலங்கள் கலந்துகொண்டனர். பாடகி சின்மயி பாடல்கள் பாடினார்.

    நிகழ்ச்சிக்கு பின்னர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    இந்த விழாவில் பங்கேற்று பாடல்களை பாடியது மிகுந்த மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உள்ளது. இந்த விழாவின் நோக்கமே சமத்துவம் தான். இன்றைய சூழ்நிலையில் இதுபோன்ற விழாக்கள் அவசியம்.

    பறை, மேளம், நாதஸ்வரம், தவில் போன்ற பாரம்பர்ய இசையை அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டும். அப்போதுதான் இந்த கலைகள் அழியாமல் இருக்கும்.

    இந்த விழாவில் மோடி என்ற பெயரை பயன்படுத்த காவல்துறை அனுமதிக்கவில்லை. நாங்கள் லலித் மோடி பற்றி பாடுகிறோம் என்றாலும் விடவில்லை.



    மீடூ விவகாரத்தில் சட்டத்தில் மாற்றம் வேண்டும். அரசு சார்பில் குழு அமைக்கப்படும் என்றார்கள். இதுவரை அமைக்கப்படவில்லை. அரசிடம் இருந்து எந்த ஒரு பதிலும் இல்லை. பாதிக்கப்பட்டோர் பலர் வழக்குபதிவு செய்தும் நடவடிக்கை இல்லை. ‘‘சட்டம் எங்களை கைவிட்டுவிட்ட நிலையில் தான் இருக்கிறோம். டப்பிங் யூனியனில் இருந்து நீக்கப்பட்டதற்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளேன்’. இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக சின்மயி கூறும் புகார்கள் உண்மையாக இருந்தால் ஏன் சட்டப்படி புகார் அளிக்கவில்லை என டுவிட்டரில் சிலர் விமர்சித்தனர். வழக்கறிஞர் ஒருவர் ’உண்மை கண்டறியும் சோதனை தான் ஒரே வழி’ என்று கூற ஆத்திரமடைந்த சின்மயி, ’நான் தயார். மீடியாவை வர சொல்லுங்கள்.

    ஒரே நேரத்தில் இருவருக்கும் நடக்கட்டும். அப்போது உண்மை தெரியும். கணவரை தவிர நீ யாரிடம் செல்கிறாய் என என்னை கேள்வி கேட்பதை விட்டுவிட்டு, ஆம்பளையாக இருந்தால் ‘உண்மை கண்டறியும் சோதனைக்கு ஏற்பாடு செய்துவிட்டு கால் செய்யுங்கள்’.

    இவ்வாறு அவர் கூறினார். #MeToo #Chinmayi

    பிரபல பாலிவுட் நடிகை ராணி முகர்ஜி, மீடூவை பற்றி விமர்சித்து பேட்டியளித்ததற்கு அங்கு அவருக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. #RaniMukherjee #MeToo
    இந்தி பட உலகின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் ராணி முகர்ஜி. தமிழில் கமல்ஹாசனுடன் ‘ஹேராம்’ படத்தில் நடித்துள்ளார். விழாவொன்றில் அவர் பேசும்போது, “ஹேராம் எனக்கு திருப்புமுனையாக அமைந்தது. முழு மேக்கப்புடன் சென்ற என்னை, முகத்தை கழுவி விட்டு வரச்சொல்லி நடிக்க வைத்து என்னாலும் நடிக்க முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தினார் கமல்ஹாசன்” என்றார்.

    நடிகை தனுஸ்ரீ தத்தா பாலியல் புகாருக்கு பிறகு இந்தி பட உலகில் ‘மீ டூ’ இயக்கம் விவாதமாக மாறி இருக்கிறது. டெலிவிஷன்களிலும் மீ டூ கலந்துரையாடல்கள் நடத்துகிறார்கள். டி.வி. நிகழ்ச்சியொன்றில் நடிகைகள் தீபிகா படுகோனே, அனுஷ்கா சர்மா, அலியாபட் ஆகியோர் மீ டூவுக்கு ஆதரவாக கருத்து சொல்லி பாலியல் தொல்லை கொடுப்பவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்றனர்.



    ஆனால் ராணிமுகர்ஜி அந்த கருத்தை எதிர்த்தார். அவர் பேசும்போது, “ஆண்கள் மாற மாட்டார்கள். பெண்கள்தான் மாற வேண்டும். பெண்களே தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். இதற்காக அவர்கள் தற்காப்பு கலைகள் கற்றுக்கொள்வது அவசியம்” என்றார். ராணிமுகர்ஜியின் கருத்துக்கு எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன. அவரை கண்டித்து பேசி வருகிறார்கள். பாலியல் தொல்லை கொடுப்பவனுக்கும் தற்காப்பு கலை தெரிந்து இருந்தால் என்ன செய்வது என்று சமூக வலைத்தளத்தில் விமர்சிக்கின்றனர்.
    பாடகி சின்மயின் கணவரும், நடிகருமான ராகுலை, நடிகை சமந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டி பதிவு செய்திருக்கிறார். #Samantha #Chinmayi
    பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் மீடூ இயக்கத்தை குறை கூறி இருந்தார். அதில் “நான் ஒரு பெண்ணியவாதி. ஆனால் மீ டூவை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். அது குப்பை” எனப் பேசியிருந்தார்.

    இது குறித்து சின்மயியின் கணவர் ராகுல் ரவீந்தர், தனது சமூகவலைதள பக்கத்தில் நீண்ட விளக்கம் ஒன்றை பதிவிட்டார். அதில் தனது மனைவியின் துணிச்சலைப் பாராட்டியதோடு பாலியல் சீண்டல்கள் குறித்து தைரியமாக வெளியில் சொல்ல வேண்டும் எனக் கூறி இருந்தார்.



    இந்நிலையில் இது குறித்து நடிகை சமந்தா ராகுலின் டுவிட்டுக்குப் பதிலளிக்கும் விதமாக தனது டுவிட்டர் பக்கத்தில், “நிறைய பெண்களைவிட உங்களுக்குச் சிறப்பான புரிதல் இருக்கிறது. கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும். உங்களை நினைத்து பெருமைப்படுகிறேன்” எனப் பதிவிட்டு இருக்கிறார்.
    இந்தியாவிலும் ‘மீ டு’ பற்றி பல்வேறு புகார்கள் வெளியாகி வரும் நிலையில், தானும் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்டதாக அதிதி ராவ் கூறியுள்ளார். #AditiRaoHydari #MeToo
    மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை, செக்கச்சிவந்த வானம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் அதிதிராவ் ஹிடாரி. தற்போது உதயநிதியுடன் சைக்கோ படத்திலும், தனுஷ் இயக்கி நடிக்கும் படத்திலும் நடித்து வருகிறார். இந்தி, தெலுங்கிலும் கவனம் செலுத்துகிறார். 

    அதிதி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பிரச்சினை பற்றி வெளிப்படையாக கருத்து கூறியுள்ளார்.

    ’என்னை ரொம்பவே பொத்திப் பொத்தி வளர்த்துவிட்டார்கள். அதனால் சினிமா துறைக்கு வந்தபோது ரொம்ப அப்பாவியாக இருந்தேன். அட்ஜஸ்ட் செய்வது பற்றிய வதந்திகள் எல்லாமே உண்மை என்பது எனக்கு தெரியாது. அது எல்லாம் நடந்து கொண்டிருந்தது. எனக்கு அப்படி ஒன்றும் மோசமாக நடக்கவில்லை. ஒரே ஒரு சம்பவம் நடந்தது. அதனால் நான் பெரிதாக பாதிக்கப்படவில்லை. இருந்தாலும் இது அல்லது அது என்று எனக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. 

    நான் அப்படி ஒன்றும் பட வாய்ப்பு தேவையில்லை என்று நினைத்து நடையை கட்டிவிட்டேன். அதன்பிறகு எனக்கு பட வாய்ப்புகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையை இழந்துவிட்டேன். அந்த சம்பவத்திற்கு பிறகு 8 மாதங்களாக எனக்கு வேலை இல்லை. 
    பாதிக்கப்பட்டவர்கள் அதுகுறித்து தைரியமாக வெளியே பேச வேண்டும். இல்லாவிட்டால் பணம் வாங்கி இருப்பார் என்றோ, மிரட்டி பணியவைத்து இருப்பார்கள் என்றோதான் வெளியே பேசுவார்கள். 

    நமக்கு எது சரியென்று படுகிறதோ அதை செய்ய வேண்டும். இப்போது ‘மீ டு’ இயக்கம் வேறு திசையில் திரும்பி கொண்டிருக்கிறது. இவ்வாறு அதிதிராவ் கூறினார். #AditiRaoHydari #MeToo

    ×