என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    கேரவன்களில் ரகசிய கேமரா- ராதிகா
    X

    கேரவன்களில் ரகசிய கேமரா- ராதிகா

    • கேரவன் செல்ல அச்சப்பட்டு ஓட்டல் அறைக்கு சென்று உடை மாற்றினேன்.
    • ஆண்கள் யாரும் நடிகைகளுக்கு ஆதரவாக பேசவில்லை.

    பாலியல் குற்றச்சாட்டுகளால் மலையாள திரைப்பட உலகம் தற்போது பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறது.

    நடிகைகள் கொடுத்த பாலியல் புகாரின் அடிப்படையில் நடிகர்கள் முகேஷ் எம்.எல்.ஏ., ஜெயசூர்யா, இடைவேள பாபு, மணியன் பிள்ளை ராஜு, இயக்குனர்கள் ரஞ்சித், பிரகாஷ் ஆகியோர் மீது பாலியல் பலாத்காரம், கொலை மிரட்டல் உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த நடிகை ராதிகா சரத்குமார் கூறியதாவது:

    * மலையாள திரையுலகில் நடிகைகளின் கேரவன்களில் ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

    * கேரவனில் கேமரா பொருத்தி நடிகைகள் உடை மாற்றும் வீடியோவை ஆண்கள் ரசித்ததை பார்த்தேன்.

    * கேரவன் செல்ல அச்சப்பட்டு ஓட்டல் அறைக்கு சென்று உடை மாற்றினேன்.

    * திரையுலக சிஸ்டமே சரியாக இல்லை.

    *ஆண்கள் யாரும் நடிகைகளுக்கு ஆதரவாக பேசவில்லை

    * நடிகைகளின் அறை கதவை தட்டும் நிலை பல திரையுலகிலும் உள்ளதாக அவர் குற்றம்சாட்டி உள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    Next Story
    ×