search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TanuShree Dutta"

    • தனுஸ்ரீ தத்தா தமிழில் ‘தீராத விளையாட்டு பிள்ளை’ படத்தில் நடித்துள்ளார்.
    • இவரின் சமூக வலைதளப் பதிவு வைரலாகி வருகிறது.

    தமிழில் 'தீராத விளையாட்டு பிள்ளை' படத்தில் நடித்துள்ள இந்தி நடிகையான தனுஸ்ரீ தத்தா, தமிழில் பொம்மலாட்டம், காலா படங்களில் நடித்துள்ள பிரபல இந்தி நடிகர் நானா படேகர் மீது பாலியல் புகார் கூறினார். "2008-ம் ஆண்டு ஹார்ன் ஓகே ப்ளஸ் என்ற இந்தி படத்தின் படப்பிடிப்பில் நானா படேகர் பாலியல் தொல்லை கொடுத்தார் என்று மும்பை போலீசில் புகார் அளித்தார்.

    தனுஸ்ரீ தத்தா பதிவு

    இந்நிலையில், நடிகை தனுஸ்ரீ தத்தா தனது சமூக வலைதளப் பக்கத்தில், "தனக்கு ஏதாவது ஆனால், மீடூ விவகாரத்தில் தான் குற்றம் சாட்டிய நடிகர் நானா படேகர், அவரின் வழக்கறிஞர் மற்றும் அவரது பாலிவுட் மாஃபியா நண்பர்கள்தான் அதற்கு காரணம்.

    இந்த பாலிவுட் மாஃபியா என்பது சுஷாந்த் சிங் ராஜ்புத் (SSR) மரண வழக்கில் அடிக்கடி அடிபட்டு வந்த அதே நபர்கள்தான் அவர்களின் திரைப்படங்களைப் பார்க்காதீர்கள். சட்டமும் நீதியும் என்னை தோற்கடித்திருக்கலாம். ஆனால் இந்த தேசத்தின் மக்கள் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது" என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது

    ‘மிஸ் இந்தியா’ பட்டத்துக்காக நடிகை தனுஸ்ரீ படுக்கையை பகிர்ந்தார் என்று நடிகை ராக்கிசாவந்த் பரபரப்பு புகார் கூறியிருக்கிறார். #MeToo #Tanushree #RakhiSawant
    பிரபல இந்தி நடிகர் நானா படேகர் மீது முன்னாள் இந்திய அழகியும், நடிகையுமான தனுஸ்ரீ தத்தா பாலியல் புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இது மீடூ இயக்கம் மூலம் வெளிவந்த முதல் குற்றச்சாட்டு ஆகும்.

    அதன்பிறகு மீடூ இயக்கத்தில் நடிகர்கள், டைரக்டர்கள் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த பாலியல் குற்றச்சாட்டின்போது நானாபடேகருக்கு ஆதரவாக நடிகை ராக்கி சாவந்த் செயல்பட்டார்.

    இந்த நிலையில் நடிகை தனுஸ்ரீ தத்தாவுக்கும், பாலிவுட் நடிகை ராக்கி சாவந்துக்கும் இடையே மோதல் உருவாகியுள்ளது. தனுஸ்ரீ தத்தா பற்றி ராக்கி சாவந்த் அதிர்ச்சி அளிக்கும் தகவல்களை வெளியிட்டுள்ளார். இது குறித்து ராக்கி சாவந்த் கூறியதாவது:-

    தனுஸ்ரீ தத்தா 10 ஆண்டுகளுக்கு முன்பு என்னுடன் லெஸ்பியன் உறவு கொண்டார். அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. தனுஸ்ரீ ஆண்கள் மற்றும் பெண்களுடன் உறவு கொள்ளும் குணம் உள்ளவர். பல பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அனைவரும் தங்களின் மீடூ கதைகளுடன் விரைவில் வெளியே வருவார்கள்.



    நான் அப்படிப்பட்டவள் இல்லை. ஆனால் தனுஸ்ரீ தான் என்னை ஓரினச் சேர்க்கையாளராக மாற்றினார். நான் பெரிய ஆளாக வர மாட்டேன் என்று நினைத்து அவர் என்னை பயன்படுத்திக் கொண்டார். அவர் செய்ததை எல்லாம் நான் வெளியே சொல்ல மாட்டேன் என்று நினைத்து விட்டார். அவர் நினைத்தது தவறு.

    தனுஸ்ரீ தத்தா படுக்கையை பகிர்ந்து தான் மிஸ் இந்தியா அழகிப்பட்டத்தை வென்றார். தனுஸ்ரீயால் என் பெயர் கெடுகிறது. எனக்கு இந்தியாவில் நல்ல பெயர் உள்ளது.

    எனக்கு என்று ஒரு மரியாதை இருக்கிறது. இந்தியர்கள் என் மீது மதிப்பு வைத்துள்ளனர். ஆனால் தனுஸ்ரீ என் இமேஜை டேமேஜ் செய்கிறார். அவர் அமெரிக்காவில் இருந்து போலியான மீடூ இயக்கத்தை கொண்டு வந்து என் இமேஜை கெடுக்கிறார். அவருக்கு இந்தியாவை பிடிக்காது. அமெரிக்கா தான் பிடிக்கும்.

    தனுஸ்ரீ தத்தா நன்றாக சாப்பிட்டு குண்டாகி அசிங்கமாக உடலுடன் இருக்கிறார். அவருக்கு போதைப் பொருள் பயன்படுத்தும் பழக்கம் உள்ளது. அவரிடம் பணம் இல்லாததால் அனைத்தும் இலவசமாக கிடைக்க வேண்டும் என்று நினைக்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    தனுஸ்ரீ தத்தாவிடம் “25 பைசா” இழப்பீடு கேட்டு நடிகை ராக்கி சாவந்த் மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார். #MeToo #RakhiSawant #TanushreeDutta
    காலா படத்தில் நடித்தவரும், பிரபல இந்தி நடிகருமான நானா படேகர் 2008-ம் ஆண்டு நடந்த ஒரு படப்பிடிப்பில் தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாக, பாலியல் புகார் கூறி இந்தி திரையுலகில் நடிகை தனுஸ்ரீதத்தா பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

    இந்தப் புகாருக்கு நானா படேகர் மறுப்பு தெரிவித்தார். மேலும் தனது வக்கீல் மூலம் தன்னை பற்றி தவறாக பேசியதற்கு மன்னிப்பு கேட்க வலியுறுத்தி நடிகைக்கு நோட்டீஸ் அனுப்பினார். ஆனால், தனுஸ்ரீதத்தா நானா படேகருக்கு எதிராக மும்பை போலீசில் புகார் அளித்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே நடிகர் நானா படேகருக்கு ஆதரவாக நடிகை ராக்கி சாவந்த் களம் இறங்கினார். இவர் ‘தனுஸ்ரீதத்தா ஒரு பொய்யர்' எனக் கூறியதுடன், அவர் போதைக்கு அடிமையானவர். ஓரின சேர்க்கையாளர். என்னிடம் தவறாக நடந்துகொண்டார் என பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கி பரபரப்பை ஏற்படுத்தினார். இது தொடர்பாக ராக்கி சாவந்துக்கு எதிராக ரூ.10 கோடி கேட்டு ஒரு அவதூறு வழக்கை தனுஸ்ரீதத்தா தொடர்ந்து உள்ளார்.



    மேலும் சமீபத்தில் தனுஸ்ரீ தத்தா அளித்த பேட்டியிலும் ராக்கி சாவந்தை கடுமையாக தாக்கி பேசியதாக தெரிகிறது. இந்த நிலையில் தனுஸ்ரீ தத்தாவிடம் “25 பைசா” இழப்பீடு கேட்டு ராக்கி சாவந்த் வழக்கு தொடர்ந்துள்ளார்.

    இதில் “ நான் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் பணியாற்றி நல்லபெயரை சம்பாதித்து வைத்திருக்கிறேன். சமீப காலமாக தனுஸ்ரீ தத்தா கூறிவரும் மோசமான மற்றும் இழிவுபடுத்தும் பேச்சுகளால் எனது பெயருக்கு களங்கம் ஏற்பட்டதுடன், பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளேன். இதை மீண்டும் ஈடுசெய்ய பல ஆண்டுகள் ஆகும்.

    எனவே எனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்திய தனுஸ்ரீ தத்தா “25 பைசா” இழப்பீடு வழங்கவேண்டும். மேலும் ஊடகங்கள் முன் பகிரங்கமாக மன்னிப்பு கோர கோர்ட்டு உத்தரவிடவேண்டும்” என கூறியுள்ளார். #MeToo #RakhiSawant #TanushreeDutta

    லெஸ்பியன் என்று கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த்துக்கு கூறியதற்கு நடிகை தனுஸ்ரீ தத்தா பதிலடி கொடுத்துள்ளார். #TanushreeDutta #RakhiSawant
    தனுஸ்ரீ தத்தா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், பிரபல நடிகர் நானா படேகர் 10 ஆண்டுகளுக்கு முன்பு படப்பிடிப்பு ஒன்றில் பாலியல் ரீதியாக தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக குற்றம் சாட்டினார்.

    இது இந்தி திரையுலகில் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த புகாருக்கு நானா படேகர் மறுப்பு தெரிவித்தார். மேலும் தனது வக்கீல் மூலம் தன்னை பற்றி தவறாக பேசியதற்கு மன்னிப்பு கேட்க வலியுறுத்தி நடிகைக்கு நோட்டீஸ் அனுப்பினார். இந்த பரபரப்பான நிலையில் நானா படேகர் மீது நடிகை தனுஸ்ரீ தத்தா மும்பை போலீசில் புகார் அளித்தார். இந்த புகார் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவத்தில் பல நடிகர்-நடிகைகள் அவருக்கு ஆதரவு அளித்தனர். ஆனால் அந்த படத்தில் அந்த பாடலில் தனுஸ்ரீக்கு பதில் நடித்த நடிகை ராக்கி சாவந்த், தனுஸ்ரீ தத்தா ஒரு பொய்யர் என கூறினார். மேலும் அவர் தொடர்பாக பல்வேறு கருத்துக்களை தெரிவித்து இருந்தார்.

    இந்த நிலையில் இது தொடர்பாக ராக்கி சாவந்து எதிராக ரூ 10 கோடி கேட்டு ஒரு அவதூறு வழக்கை தனுஸ்ரீ தத்தா தொடர்ந்து உள்ளார்.

    இந்த நிலையில் இதற்கு பதில் அளித்துள்ள ராக்கி சாவந்த் ரூ. 50 கோடி கேட்டு வழக்கு தொடரப் போவதாக தனுஸ்ரீ தத்தாவுக்கு இன்ஸ்டாகிராம் வீடியோ மூலம் மிரட்டல் விடுத்து இருந்தார்.



    மேலும் ராக்கி ஷாவந்த் சீ டூ என்ற ஒரு இயக்கத்தை தொடங்கி உள்ளார். இது குறித்து அவர் பேட்டி அளிக்கும் போது கூறியதாவது:- தனுஸ்ரீ தத்தா ஒரு லெஸ்பியன். அதை அவரே என்னிடம் தெரிவித்தார். அவர் ஒரு போதை அடிமை. ஒரு முறை அவர் என்னை ரேவ் பார்ட்டிக்கு அழைத்தார். அங்கு அவர் என்னுடன் லெஸ்பியன் உறவு கொள்ள முயன்றார். அவர் மட்டுமல்ல அவரது தோழிகளும் என்னை லெஸ்பியன் உறவுக்கு அழைத்தார்கள். இப்படிப்பட்ட தனுஸ்ரீ தத்தா என் மீது வழக்கு போட்டு உள்ளார் என கூறினார்.

    இது குறித்து பதில் அளித்துள்ள தனுஸ்ரீ தத்தா, ‘நான் ஒரு போதை மருந்து அடிமையாக இல்லை, நான் புகைபிடிப்பதில்லை அல்லது குடிக்க மாட்டேன், லெஸ்பியன் அல்ல. எனவே என்னை வக்கிரமாக சித்தரித்து என் வாயை மூட முயற்சிக்கிறது. இது தெளிவாக வேலை செய்யவில்லை. நமது சமுதாயத்தில் நல்ல மாற்றங்களை கொண்டு வரும். இத்தகைய தீவிர இயக்கத்தில் நகைச்சுவையை உருவாக்காதே என கூறி உள்ளார்.
    பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா கூறிவந்த பாலியல் புகாருக்கு நடிகர் நானா படேகர் பதிலளித்துள்ளார். #TanuShreeDutta #NanaPatekar #Harassment
    பாலிவுட்டின் மூத்த நடிகர் நானாபடேகர். இவர் தமிழில் பொம்மலாட்டம், காலா ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் நடிகர் இவர் மீது இந்தி நடிகை தனுஸ்ரீ தத்தா பாலியல் குற்றச்சாட்டை கூறி இருந்தார்.

    2008-ம் ஆண்டு ஹார்ன் ஒகே பிளீஸ் என்ற இந்தி படத்தின் பாடல் காட்சிகள் படமாக்கப்படும் போது அவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறினார். அவரது ஆதரவாளர்களால் தாக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டினார். இது பாலிவுட் வரலாற்றில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தனுஸ்ரீ தத்தா தமிழில் விஷாலுடன் தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் நடித்துள்ளார்.

    இந்த பாலியல் புகார் தொடர்பாக நானா படேகர், நடன இயக்குனர் கணேஷ் ஆச்சார்யா, உள்பட 4 பேர் மீது மும்பை ஒஹிவாரா போலீசில் புகார் அளித்தார். இது தொடர்பாக நானா படேகர் உள்ளிட்டோர் மீது போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தன் மீதான பாலியல் புகாரை அவர் தொடர்ந்து மறுத்து வந்தார்.



    இதற்கிடையே தனுஸ்ரீ தத்தா புகார் தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு நானா படேகருக்கு சினிமா மற்றும் டி.வி. நடிகர்கள் சங்கம் நோட்டீஸ் அனுப்பி இருந்தது.

    இதற்கு நானா படேகர் பதில் அனுப்பி உள்ளார். அவர் கொடுத்த விளக்கத்தில் கூறி இருப்பதாவது:-

    என் மீதான பாலியல் குற்றச்சாட்டு பொய்யானது. ஆதாரமற்றது. தவறானது. தனுஸ்ரீ தத்தாவுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறேன்.

    இவ்வாறு அந்த பதிலில் நானா படேகர் தெரிவித்துள்ளார்.

    மாநில மனித உரிமை ஆணையமும் நானா படேகருக்கு இந்த விவகாரத்தில் நோட்டீஸ் அனுப்பி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
    நானா படேகரிடம் உண்மை கண்டறியும் சோதனை செய்ய வேண்டும் என்று பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா வேண்டுகோள் விடுத்துள்ளார். #TanushreeDutta
    பிரபல பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா. இவர் தமிழில் நடிகர் விஷாலுடன் ‘தீராத விளையாட்டு பிள்ளை’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் பாலிவுட்டின் மூத்த நடிகரான நானா படேகர் மீது நடிகை தனுஸ்ரீதத்தா பாலியல் புகார் கூறியுள்ளார்.

    2008-ம் ஆண்டு ‘ஹார்ன் ஒகே பிளீஸ்’ என்ற இந்தி படத்தின் பாடல் காட்சி படமாக்கப்படும் போது அவர் பாலியல் தொல்லை கொடுத்தார் என்று குற்றம் சாட்டி இருந்தார்.

    தன் மீதான பாலியல் குற்றச்சாட்டை நானா படேகர் மறுத்து வந்தார். தனு ஸ்ரீதத்தா பொய் கூறுவதாக தெரிவித்தார். இந்த நிலையில் நானா படேகர், நடன இயக்குனர் கணேஷ் ஆச்சார்யா, தயாரிப்பாளர் சமீர்சித்திக், இயக்குனர் ராகேஷ் சாரங் ஆகிய 4 பேர் மீது தனுஸ்ரீ தத்தா மும்பை ஒஹிவாரா போலீசில் புகார் அளித்தார்.

    இந்த புகாரை தொடர்ந்து நானா படேகர் உள்பட 4 பேர் மீது போலீசார் 354 மற்றும் 509 ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதற்கிடையே நானா படேகரை உடனே கைது செய்ய வேண்டும். அவரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த வேண்டும் என்று ஒஹிவாரா போலீசில் நடிகை தனுஸ்ரீதத்தா வலியுறுத்தி உள்ளார்.

    இது தொடர்பாக அவர் சார்பில் வக்கீல் நிதின் அளித்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:-

    பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்கள் மிகுந்த செல்வாக்கு உள்ளவர்கள். அவர்கள் நெருக்கடி கொடுத்து சாட்சிகளை கலைத்து வெளியே வரக் கூடியவர்கள். இதனால் நானாபடேகர் உள்பட 4 பேரை உடனே கைது செய்ய வேண்டும். மேலும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது உண்மை கண்டறியும் சோதனை நடத்த வேண்டும்.

    இவ்வாறு ஒஹிவாரா போலீசில் அளித்துள்ள மனுவில் தனு ஸ்ரீதத்தா தெரிவித்துள்ளார்.

    பாலிவுட் நடிகர் நானா படேகர் மீது போலீசில் புகார் அளித்துள்ள தனுஸ்ரீ தத்தா, கொடுத்த வாக்குமூலத்தை அடுத்து 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து மும்பை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #TanusreeDutta #NanaPatekar
    பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா. தமிழில் நடிகர் விஷாலுடன் ‘தீராத விளையாட்டு பிள்ளை’ என்ற படத்தில் நடித்துள்ளார்.

    இந்த நிலையில் பாலிவுட்டின் மூத்த நடிகரான நானா படேகர் மீது நடிகை தனுஸ்ரீ தத்தா பாலியல் புகார் கூறியுள்ளார்.

    2008-ம் ஆண்டு ‘ஹார்ன் ஒகே பிளீஸ்’ என்ற இந்தி படத்தில் பாடல் காட்சிகள் படமாக்கப்படும் போது அவர் பாலியல் தொல்லை கொடுத்தார் என்று குற்றம்சாட்டி இருந்தார். தனுஸ்ரீயின் இந்த குற்றச்சாட்டு பாலிவுட் உலகில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த பாலியல் புகாரை நானா படேகர் தொடர்ந்து மறுத்து வருகிறார். தனுஸ்ரீ பொய் சொல்வதாக தெரிவித்தார்.

    இந்த நிலையில் நானா படேகர், நடன இயக்குனர் கணேஷ் ஆச்சார்யா, தயாரிப்பாளர் சமீர்சித்திக், இயக்குனர் ராகேஷ் சாரங் ஆகிய 4 பேர் மீது தனுஸ்ரீ தத்தா மும்பை ஒஹிவாரா போலீசில் புகார் அளித்தார். தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நானா படேகர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்ய வேண்டும் என்று அவர் புகார் மனுவில் தெரிவித்து இருந்தார்.



    இதற்கிடையே தனுஸ்ரீ தத்தா ஒஹிவாரா போலீஸ் நிலையத்துக்கு சென்று நானா படேகருக்கு எதிராக வாக்குமூலம் கொடுத்தார். ஏற்கனவே கொடுத்த புகாரை தொடர்ந்து போலீசார் அவரிடம் வாக்குமூலம் பெற்றனர்.

    தனுஸ்ரீ அளித்த புகாரை தொடர்ந்து நானாபடேகர் உள்ளிட்ட 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதுகுறித்து மும்பை மேற்கு மண்டல கூடுதல் போலீஸ் கமி‌ஷனர் மனோஜ் குமார் சர்மா கூறும் போது, “நானா படேகர் உள்ளிட்டோர் மீது 354 மற்றும் 509 ஆகிய சட்ட பிரிவுகளின் கீழ் நாங்கள் வழக்குபதிவு செய்துள்ளோம்“ என்றார்.

    இதை தொடர்ந்து நானா படேகர் மீது மும்பை போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள். அவரை போலீசார் விரைவில் கைது செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #TanusreeDutta #NanaPatekar

    நடிகை தனுஸ்ரீதத்தா, பாலிவுட் நடிகர் நானா படேகர் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறியிருக்கும் நிலையில், அவர் பொய் சொல்வதாக நானா படேகர் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளார். #TanushreeDutta #NanaPatekar
    பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா. 2005-ம் ஆண்டு வெளியான ‘ஆசிக் பனாயா ஆப்னே’ என்ற இந்தி படத்தின் மூலம் அறிமுகம் ஆனார்.

    பல்வேறு படங்களில் கவர்ச்சியான வேடங்களில் நடித்து தனுஸ்ரீதத்தா பிரபலம் ஆனார். தமிழில் நடிகர் விஷாலுடன் இணைந்து தீராத விளையாட்டு பிள்ளை என்ற படத்தில் நடித்துள்ளார்.

    இந்த நிலையில் பாலிவுட்டின் மூத்த நடிகரான நானா படேகர் மீது தனுஸ்ரீதத்தா கூறிய பாலியல் குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    2008-ம் ஆண்டு “ஹார்ன் ஒகே பிளீஸ்” என்ற இந்தி படத்தின் பாடல் காட்சிகள் படமாக்கப்படும் போது நானா படேகர் பாலியல் தொல்லை கொடுத்தார் என்று புகார் கூறி இருந்தார். மேலும் அவரது ஆதரவாளர்களால் தாக்கப்பட்டேன் என்றும் குற்றம்சாட்டி இருந்தார்.

    அதோடு நானா படேகர், நடன இயக்குனர் கணேஷ் ஆச்சார்யா, தயாரிப்பாளர் சமீர் சித்திக், இயக்குனர் ராகேஷ் சாரங்க் ஆகியோர் மீது மும்பை ஓகீவாரா போலீஸ் நிலையத்தில் கடந்த சனிக்கிழமை புகார் கொடுத்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தனுஸ்ரீதத்தா கூறிய பாலியல் குற்றச்சாட்டுக்கு நானா படேகர் ஏற்கனவே மறுத்து இருந்தார்.



    இந்த நிலையில் அவர் மீண்டும் இந்த குற்றச்சாட்டை மறுத்து இருக்கிறார். இது தொடர்பாக நானா படேகர் தனது வீட்டு முன்பு நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்த புகார் தொடர்பாக 10 ஆண்டுகளுக்கு முன்பே நான் விளக்கம் அளித்துவிட்டேன். இந்த புகார்கள் பொய்யானது. தனுஸ்ரீ தத்தா பொய் சொல்கிறார். என்னுடைய வக்கீல்கள் இது குறித்து பேச வேண்டாம் என்று கேட்டுக்கொண்டனர். இதனால் என்னால் அதிகமாக இதுபற்றி பேச இயலாது. இதற்காக மன்னித்து கொள்ளுங்கள்.

    இவ்வாறு நானா படேகர் கூறியுள்ளார்.

    மேலும் அவர் நிருபர்களை சந்தித்து விரிவாக கொடுக்க இருந்த பேட்டியையும் ரத்து செய்தார். #TanushreeDutta #NanaPatekar

    பாலிவுட் நடிகர் நானா படேகர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகை தனுஸ்ரீ தத்தா அளித்த புகாரின் அடிப்படையில் நானா படேகர் மீது மும்பை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். #TanushreeDutta #NanaPatekar
    மும்பை :

    சினிமாவில் நடக்கும் பாலியல் தொல்லைகளை நடிகைகள் உரக்க பேச ஆரம்பித்து உள்ளனர். படுக்கைக்கு அழைத்த நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பெயர்களை வெளியிட்டு ஸ்ரீரெட்டி திரையுலகை கதிகலங்க வைத்தார். இப்போது தனுஸ்ரீதத்தாவும் பாலியல் ஆசாமிகளுக்கு எதிராக மல்லுக்கட்டி இருக்கிறார். இவர் தமிழில் தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் கதாநாயகியாக நடித்தவர்.

    காலா படத்தில் ரஜினிகாந்துக்கு வில்லனாக நடித்தவர் நானா படேகர். பாலிவுட்டில் பிரபலமான நடிகரான இவர் மூன்று முறை தேசிய விருதை வென்றவர் இவர் மீது, பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா பாலியல் குற்றச்சாட்டை கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதுகுறித்து அவர் கூறியதாவது,

    கடந்த 2008-ஆம் ஆண்டு 'ஹார்ன் ஓகே ப்ளீஸ்' என்ற படத்தின் பாடல் காட்சிகள் படமாக்கப்படும் போது, தகாத இடங்களில் கை வைத்து தனக்கு பாலியல் தொந்தரவு அளித்தார்.

    ஹீரோயின் மட்டுமே இடம்பெறக்கூடிய அந்த பாடலில் வலுக்கட்டாயமாக உள்ளே நுழைந்த நானா படேகரை நான் கண்டித்த போது, தனக்கு பிடித்ததை நான் செய்வேன் என்னை யாரும் தட்டிக் கேட்க முடியாது என்று சத்தமாக கூறினார்.
    நானா படேகரின் இந்த செயலுக்கு படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர், நடன இயக்குநர் ஆகிய அனைவரும் ஆதரவாக செயல்பட்டனர் என அவர் தெரிவித்தார். இந்த குற்றச்சாட்டுக்கு பின்னர் பாலிவுட் பிரபலங்கள் பலரும் தனுஸ்ரீ தத்தாவுக்கு ஆதரவு அளித்தனர்.



    இந்நிலையில், மும்பை ஒஷிவாரா காவல் நிலையத்திற்கு இன்று வந்த தனுஸ்ரீ தத்தா,  நடிகர் நான படேகர் மீது புகார் அளித்தார், மேலும் கனேஷ் ஆச்சார்யா என்பவர் மீதும் அவர் புகார் அளித்துள்ளார். அவரது புகாரை ஏற்றுக்கொண்ட போலீசார் நானா படேகர் மற்றும் கனேஷ் ஆச்சார்யா மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். #TanushreeDutta #NanaPatekar
    நானா படேகர் மீது பாலியல் புகார் கொடுத்திருக்கும் நடிகை தனுஸ்ரீ தந்தா, படப்பிடிப்பில் போதையில் இருந்ததாக அவர் மீது ராக்கி சாவந்த் புகார் கூறியுள்ளார். #TanushreeDutta
    சினிமாவில் நடக்கும் பாலியல் தொல்லைகளை நடிகைகள் உரக்க பேச ஆரம்பித்து உள்ளனர். படுக்கைக்கு அழைத்த நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பெயர்களை வெளியிட்டு ஸ்ரீரெட்டி திரையுலகை கதிகலங்க வைத்தார். இப்போது தனுஸ்ரீதத்தாவும் பாலியல் ஆசாமிகளுக்கு எதிராக மல்லுக்கட்டி இருக்கிறார். இவர் தமிழில் தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் கதாநாயகியாக நடித்தவர். தேசிய விருதுகள் பெற்ற பிரபல இந்தி நடிகர் நானா படேகர் படப்பிடிப்பில் பாலியல் தொல்லை கொடுத்ததாக தனுஸ்ரீ புகார் கூறினார். இதனை வெளியில் சொல்லக்கூடாது என்று அவரது ஆட்கள் என்னை மிரட்டினார்கள் என்றும் தெரிவித்தார்.

    தற்போது இந்தி டைரக்டர் விவேக் அக்னிகோத்ரி மீதும் தனுஸ்ரீத்தா புகார் தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, “சாக்லேட் படத்தின் படப்பிடிப்பில் இர்பான் கான் நடித்த காட்சி படமாகிக் கொண்டு இருந்தது. எனக்கும் அந்த காட்சிக்கும் தொடர்பு இல்லை. ஆனால் டைரக்டர் என்னிடம் வந்து இர்பான்கானுக்கு நன்றாக நடிப்பு வர வேண்டும். இதற்காக உனது ஆடைகளை களைந்து விட்டு அவர் முன்னால் போய் நில்லு என்றார். நான் அதிர்ச்சியானேன். இதைக் கேட்டு இர்பான்கானும் அதிர்ச்சியாகி எனக்கு நடிக்க தெரியும். அதற்காக இப்படியெல்லாம் சொல்லாதீர்கள்” என்று கண்டித்ததாக தெரிவித்தார்.

    இந்த நிலையில் தனுஸ்ரீதத்தாவை விமர்சித்து நடிகை ராக்கி சாவந்த் கூறியதாவது:-



    தனுஸ்ரீ குற்றம்சாட்டும் அந்த தேதியில் நானும் படப்பிடிப்பு அரங்கில் இருந்தேன். என்னிடம் ஒரு பாடலுக்கு ஆடவேண்டும் என்று நானா படேகர் கேட்டுக்கொண்டார். நானும் சம்மதித்தேன். அப்போது தனுஸ்ரீதத்தா 4 மணிநேரம் சுயநினைவு இல்லாமல் இருப்பதாக சொன்னார்கள். அவருக்கு பதிலாகத்தான் என்னை ஆட அழைத்து இருந்தார்கள். தனுஸ்ரீ அதிக போதையில் மயக்கத்தில் இருந்தார். அவரைப்பற்றி கவலைப்படாதே நீ நடித்துக்கொடு என்று நானா படேகர் என்னிடம் கூறினார். நான் நடித்து கொடுத்தேன்” என்று அவர் கூறினார்.

    இந்த நிலையில் 2008-ல் படப்பிடிப்பு அரங்குக்கு வெளியே தனுஸ்ரீதத்தா காரை சிலர் கும்பலாக சேர்ந்து உடைத்தும் டயரை கிழித்தும் சேதப்படுத்தும் வீடியோ இணையதளத்தில் இப்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர் மீது பாலியல் புகார் கூறிய தனுஸ்ரீ தத்தா, தற்போது ராஜ்தாக்கரே மீது புகார் கூறியிருக்கிறார். #TanushreeDutta
    பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா. 2005-ம்ஆண்டு வெளியான ‘ஆசிக் பனாயா ஆப்னே’ என்ற இந்தி படத்தின் மூலம் அவர் அறிமுகம் ஆனார்.

    பல்வேறு படங்களில் கவர்ச்சியான வேடங்களில் நடித்து தனுஸ்ரீதத்தா பிரபலம் ஆனார். தமிழில் நடிகர் விஷாலுடன் இணைந்து ‘தீராத விளையாட்டு பிள்ளை’ என்ற படத்தில் நடித்துள்ளார்.

    இந்தநிலையில் பாலிவுட்டின் மூத்த நடிகரான நானாபடேகர் மீது தனுஸ்ரீ தத்தா கூறிய பாலியல் குற்றச்சாட்டு சர்ச்சையை ஏற்படுத்தியது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ‘ஹார்ன் ஒகே பிளீஸ்’ என்ற படப்பிடிப்பின் போது நானா படேகர் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தி தாக்குதலில் ஈடுபட்டார் என்று கூறினார்.

    மேலும் தான் சினிமாவில் அறிமுகமாகும் போது டைரக்டர் விவேக் அக்னி கோத்ரி தன்னை ஆடைகளை களைந்துவிட்டு கதாநாயகன் முன்பு நடனமாட கூறியதாக தனுஸ்ரீதத்தா புகார் தெரிவித்து இருந்தார்.

    இந்தநிலையில் மராட்டிய நவநிர்மான் சேனா (எம்.என்.எஸ்) கட்சி தலைவர் ராஜ் தாக்கரே மீது தனுஸ்ரீ தத்தா பாய்ந்து உள்ளார். குண்டர்களை அனுப்பி தன் மீது தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார்.

    சிவசேனா தலைவர் பால் தாக்கரேவை மாற்ற விரும்பிய ராஜ்தாக்கரே கிரிமினல் மனநிலை கொண்டவர். என்மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு அவர்தான் பின்னணியில் உள்ளார். குண்டர்களை அனுப்பி தாக்குதல் நடத்தியுள்ளார்.

    ராஜ்தாக்கரே ஒரு குண்டர். அவரை போன்ற குண்டர்கள் தான் அந்த கட்சியில் உள்ளனர். பெண்களை தாக்கும் நபர் ஒரு தலைவராக இருக்க முடியாது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    தனுஸ்ரீ தத்தா கார் தாக்கப்படும் வீடியோ வைரலாக பரவி வரும் நிலையில் ராஜ்தாக்கரே மீது அவர் இந்த கடுமையான குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    பாலியல் புகார் தொடர்பாக நடிகை தனுஸ்ரீ தத்தாவுக்கு நடிகைகள் பிரியங்கா சோப்ரா, டுவிங்கிள் கன்னா உள்பட பல பாலிவுட் பிரபலங்கள் ஆதரவு தெரிவித்து உள்ளனர். #TanushreeDutta
    தமிழில் ‘தீராத விளையாட்டு பிள்ளை’ படத்தில் கதாநாயகியாக நடித்தவர் தனுஸ்ரீ தத்தா. இவர் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் பேசும்போது இந்தி நடிகர் நானா படேகர் மற்றும் நடன இயக்குனர் கணேஷ் ஆச்சாரியா ஆகியோர் மீது பாலியல் புகார் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். 

    தொடர்ந்து 2005 ஆம் ஆண்டு தான் சினிமாவில் அறிமுகமாகும் போது இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி தன்னை ஆடையை களைந்து விட்டு ஹீரோ முன் நடனமாட கூறியதாக புகார் தெரிவித்தார்.

    இதனை தொடர்ந்து தனுஸ்ரீ தத்தாவுக்கு பல்வேறு பாலிவுட் நட்சத்திரங்கள் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.

    பர்கான் அக்தர் கூறி இருப்பதாவது:-

    இந்த விவகாரங்கள் குறித்து தற்போது விவாதங்கள் நடைபெறுகிறுது. தனுஸ்ரீ 10 வருடங்கள் அமைதியாக இருந்த போதிலும் அவர் கதை எதையும் மாற்றவில்லை. அவரது தைரியம் பாராட்டப்பட வேண்டும், அவளுடைய எண்ணம் கேள்வி கேட்கப்படவில்லை.

    இந்த துறையில் இருந்த மவுனத்தை உடைத்தற்கு நன்றி தனுஸ்ரீ தத்தா என பர்காத் தத்தா கூறி உள்ளார்.



    ஒப்புக்கொள்கிறேன் .. உலகில் உயிர் பிழைக்க வேண்டும் என பிரியங்கா சோப்ரா கூறி உள்ளார்.

    துன்புறுத்துதல் மற்றும் அச்சுறுத்தல் இல்லாமல் ஒரு வேலை முடிக்க வேண்டும் என்பது ஒரு அடிப்படை உரிமையாகும், இந்த துணிச்சலான பெண்ணைப் பேசுவதன் மூலம் நம் அனைவருக்கும் அந்த இலக்கை நோக்கி வழிநடத்த உதவுகிறது! என நடிகை டுவிங்கிள் கன்னா கூறி உள்ளார்.

    மேலும் பல பாலிவுட் பிரபலங்கள் தனுஸ்ரீ தத்தாவிற்கு ஆதரவு குரல் கொடுத்து வருகிறார்கள். 
    ×