என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருவனந்தபுரம்"

    • திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வினயா சேர்க்கப்பட்டார்.
    • வினயாவுக்கு தொற்று பரவியதற்கான மூலக்காரணம் தெரியவில்லை.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் கோழிக்கோடு உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமீபிக் மூளைக்காய்ச்சல் பரவ தொடங்கியது. தேங்கியிருக்கும் அசுத்தமான தண்ணீரில் குளிக்கும் நபர்களுக்கு, அதில் இருக்கக்கூடிய அமீபா நாசி மற்றும் காது துவாரம் வழியாக சென்று மூளையை தாக்குவதால் அமீபிக் மூளைக்காய்ச்சல் வருகிறது.

    இதனால் தேங்கியிருக்கும் அசுத்தமான தண்ணீரின் குளிப்பதை தவிர்க்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தியது. மேலும் நோய் தடுப்பு நடவடிக்கைகளில் சுகாதாரத்துறை தீவிரமாக ஈடுபட்டது. இருந்தபோதிலும் அமீபிக் மூளைக்காய்ச்சல் பரவல் கட்டுக்குள் வரவில்லை.

    இந்த நோய் தொற்றுக்கு உயிர்பலியும் ஏற்பட்டதால் மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டது. இந்தநிலையில் அமீபிக் மூளைக்காய்ச்சலுக்கு மாநில தலைநகரான திருவனந்தபுரத்தில் இளம்பெண் ஒருவர் பலியாகி விட்டார்.

    திருவனந்தபுரம் நெடுமங்காடு பகுதியை சேர்ந்தவர் வினயா (வயது26). இவருக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற அவர், சில நாட்களில் குணமடைந்து வீடு திரும்பினார்.

    அப்போது அவருக்கு வலிப்பு ஏற்பட்டது. இதையடுத்து திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வினயா சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு அமீபிக் மூளைக் காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

    இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. வென்டிலேட்டர் சிகிச்சையில் இருந்து வந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக இறந்தார். திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரியில் தொடர்ந்து 40 நாட்கள் சிகிச்சையில் இருந்தநிலையில், சிகிச்சை பலனின்றி வினயா இறந்து விட்டார்.

    வினயாவுக்கு தொற்று பரவியதற்கான மூலக்காரணம் தெரியவில்லை. அவர் அவருடைய வீட்டில் இருந்த கிணற்று தண்ணீரையே பயன்படுத்தி இருக்கிறார். இதனால் அவரது வீட்டின் கிணற்று நீர் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளது.

    கேரள மாநி லத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலுக்கு இந்த ஆண்டு இதுவரை 170 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 40 பேர் பலியாகி விட்டனர். மாநிலத்தில் இந்த மாதத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்ற 17 பேரில் 7 பேர் இறந்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பலரை திருமண ஆசை காட்டி பாலியல் பலாத்காரம் செய்து ஏமாற்றிய மாடலிங் நடன இயக்குனர் கைது செய்யப் பட்டுள்ளார்.
    • கூடரஞ்சி சந்தை அருகே உள்ள பாலகன்னி பகுதியை சேர்ந்த அஜிஸ் என்பவரின் மகன் பஹிதி(வயது27).

    கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இன்ஸ்டாகிராமில் பழகிய இளம்பெண்கள் மற்றும் சிறுமிகள் பலரை திருமண ஆசை காட்டி பாலியல் பலாத்காரம் செய்து ஏமாற்றிய மாடலிங் நடன இயக்குனர் கைது செய்யப் பட்டுள்ளார்.

    கேரள மாநிலம் கோழிக் கோடு கூடரஞ்சி சந்தை அருகே உள்ள பாலகன்னி பகுதியை சேர்ந்த அஜிஸ் என்பவரின் மகன் பஹிதி(வயது27). இவர் மாடலிங் துறையில் நடன இயக்குனராக உள்ளார். வாலிபர் பஹிதி இன்ஸ்டாகிராமில் கணக்கு வைத்துள்ளார்.

    அதில் அவருக்கு ஏராளமானோர் நண்பர்களாக உள்ளனர். மாடலிங் துறையில் நடன இயக்குனராக இருப்பதால் அவருடன் ஏராளமான இளம்பெண்களும் இன்ஸ்டாகிராமில் பழகி வந்திருக்கின்றனர். இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட பஹிதி, இளம்பெண்கள் மற்றும் சிறுமிகளை தனது ஆசை வலையில் வீழ்த்தியுள்ளார்.

    அவர் இன்ஸ்டாகிராமில் தன்னுடன் பழகிய இளம் பெண்கள் மற்றும் சிறுமிகள் பலரை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அவர்களை பல இடங்களுக்கு அழைத்து சென்று அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.

    பின்பு அதனை கூறி மிரட்டி அவர்களிடமிருந்து பணம் மற்றும் தங்க நகைகளை பறித்துக் கொள்வதை வாடிக்கையாக வைத்துள்ளார். இவரது ஆசை வலையில் ஏராளமான இளம்பெண்கள் சிக்கி ஏமாந்துள்ளதாக தெரிகிறது.

    அவர்களில் ஒருவரான திருவனந்தபுரம் டெக்னோ பார்க்கில் பணிபுரியக்கூடிய ஐ.டி. ஊழியர், பஹிதி மீது போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசாரித்த போது பஹிதி பல இளம்பெண்கள் மட்டும் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த அதிர்ச்சி தகவல் வெளியானது.

    இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிந்து அவரை போலீசார் கைது செய்தனர். அவர் எத்தனை பெண்களை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்தார்? எத்தனை பேரிடம் நகை-பணத்தை அபகரித்தார்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இன்ஸ்டாகிராமில் பழகிய இளம்பெண்கள் மற்றும் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த மாடலிங் நடன இயக்குனர் கைது செய்யப்பட்ட சம்பவம் திருவனந்தபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கேரளாவில் பிறந்த ஆதி சங்கராச்சாரியாருக்கு எனது மரியாதையை செலுத்துகிறேன்.
    • இந்தியா கூட்டணியின் வலுவான தூணாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உள்ளார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள விழிஞ்சம் பகுதியில் ரூ.8ஆயிரத்து 900 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச ஆழ்கடல் பல்நோக்கு துறைமுக திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது. பிரதமர் மோடி துறைமுக திறப்பு விழாவில் பங்கேற்று விழிஞ்சம் துறைமுகத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

    பிரமாண்ட சரக்கு கப்பலான எம்.எஸ்.டி. செலஸ்ட்னோ மரேஸ்காவை வரவேற்று விழிஞ்சம் துறைமுகத்தின் செயல்பாட்டை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்.

    இதைத்தொடர்ந்து விழிஞ்சம் துறைமுக திறப்பு விழாவில் பிரதமர் மோடி கூறியதாவது:

    * கேரளாவில் பிறந்த ஆதி சங்கராச்சாரியாருக்கு எனது மரியாதையை செலுத்துகிறேன்.

    * கேரளாவில் ஒருபுறம் வாய்ப்புகளை அள்ளித்தரும் பெரிய கடலும் மறுபுறம் இயற்கை அழகும் உள்ளது.

    * புதிய யுகத்தின் வளர்ச்சியாக கேரளாவின் விழிஞ்சம் சர்வதேச ஆழ்கடல் பல்நோக்கு துறைமுகம் அமையும்.

    * விழிஞ்சம் துறைமுகம் கேரள மக்களுக்கு புதிய பொருளதார வாய்ப்புகளை உருவாக்கும். இந்தியாவில் கடலோர மாநிலங்கள், துறைமுக நகரங்கள் முக்கிய வளர்ச்சி மையமாக மாறும்.

    * பெரிய சரக்கு கப்பல் களை நிறுத்த இடமளிக்கும் வகையில் துறைமுகம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

    * இந்தியா கூட்டணியின் வலுவான தூணாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உள்ளார்.

    * விழா மேடையில் பினராயி விஜயன், காங்கிரசின் சசிதரூர் உள்ளதால் இன்று பலரின் தூக்கம் பறிபோகும்.

    * இந்தியா கூட்டணியின் முக்கிய தலைவர்கள் தன்னுடன் மேடையை பகிர்வதால் பலரின் தூக்கம் பறிபோகும்.

    * கேரளா வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தை நோக்கி நகர்வதற்கு விழிஞ்சம் துறைமுகம் ஒரு உதாரணம். தானியங்கி துறைமுகமான விழிஞ்சம் ஆண்டுக்கு 1.5 மில்லியன் டிகியு கொள் கலன்களை கையாளும் திறன் கொண்டது.

    * விழிஞ்சம் துறைமுகம் கேரள மக்களுக்கு புதிய பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கும். இந்தியாவின் கடலோர மாநிலங்கள், துறைமுக நகரங்கள் முக்கிய வளர்ச்சி மையமாக மாறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சர்வதேச கப்பல் பாதையில் இருந்து விழிஞ்சம் துறைமுகம் 10 கடல் மைல்கள் தொலையில் தான் இருக்கிறது.
    • விழிஞ்சம் துறைமுகத்தின் செயல்பாட்டு வசதிகளை பிரதமர் ஆய்வு செய்தார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள விழிஞ்சம் பகுதியில் சர்வதேச ஆழ்கடல் பல்நோக்கு துறைமுகம் ரூ.8ஆயிரத்து 900 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படுகிறது. மூன்று கட்டங்களாக மேற்கொள்ள திட்டமிடப்பட்ட துறைமுகத்தின் கட்டுமான பணிகள் கடந்த 2015-ம் ஆண்டு தொடங்கியது.

    முதற்கட்ட பணிகள் கடந்த 2023-ம் ஆண்டு முடிவுக்கு வந்தநிலையில், சோதனை ஓட்டங்கள் கடந்தஆண்டு (2024) ஜூலை மாதத்தில் நடைபெற்றது. மிகப்பெரிய சரக்கு கப்பல்கள் இயக்கப்பட்டு சோதனைஓட்டம் நடத்தப்பட்டது. முதற்கட்ட கட்டுமான பணிகள் முடிவடைந்த நிலையில், அடுத்த இரண்டு கட்ட பணிகள் 2018-ம் ஆண்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    சர்வதேச கப்பல் பாதையில் இருந்து விழிஞ்சம் துறைமுகம் 10 கடல் மைல்கள் தொலையில் தான் இருக்கிறது. மேலும் இயற்கையாகவே 20 மீட்டர் ஆழம் கொண்ட கடல் பகுதியாகும். இதனால் பல்வேறு நாடுகளுக்கான பயண தூரம் விழிஞ்சம் துறைமுகத்தில் இருந்து பெரிதளவில் குறைவாகவே இருக்கும்.

    விழிஞ்சம் துறைமுகத்தில் முதற்கட்ட பணிகள் முடிவுற்ற நிலையில் ஆண்டுக்கு 10லட்சம் கொள்கலன்கள் கொள்ளளவு கொண்டதாக இருக்கிறது. மூன்று கட்ட பணிகளும் முடிவடையும் பட்சத்தில் 45லட்சம் கொள்கலன்களாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் விழிஞ்சம் துறைமுக திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று திருவனந்தபுரத்திற்கு விமானத்தில் வந்தார். அவரை விமான நிலையத்தில் முதல்-மந்திரி பினராயி விஜயன் உள்ளிட்டோர் பூச்செண்டு கொடுத்து வரவேற்றனர்.

    இதையடுத்து பிரதமர் மோடி ராஜ்பவனுக்கு சென்று இரவில் தங்கினார்.

    இந்தநிலையில் விழிஞ்சம் சர்வதேச துறைமுக திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது. அதில் கலந்துகொள்ள பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் விழிஞ்சம் துறைமுகத்துக்கு சென்றார். பின்பு துறைமுக திறப்பு விழாவில் பங்கேற்று விழிஞ்சம் துறைமுகத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

    பிரமாண்ட சரக்கு கப்பலான எம்.எஸ்.டி. செலஸ்ட்னோ மரேஸ்காவை வரவேற்று விழிஞ்சம் துறைமுகத்தின் செயல்பாட்டை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். பின்பு விழிஞ்சம் துறைமுகத்தின் செயல்பாட்டு வசதிகளை பிரதமர் ஆய்வு செய்தார்.

    இந்த விழாவில் கேரள மாநில கவர்னர் ராஜேந்திர அர்லேகர், முதல்-மந்திரி பினராயி விஜயன், மத்திய கப்பல் போக்குவரத்து துறை மந்திரி சர்பானந்த சோனோவால், மத்திய மந்திரிகள் சுரேஷ் கோபி, ஜார்ஜ் குரியன், கேரள துறைமுக மந்திரி வி.என். வாசவன், மாநில மந்திரிகள் சிவன்குட்டி, அனில், சாஜி செரியன், முன்னாள் மத்திய மந்திரிகள் ராஜீவ் சந்திரசேகர், எதிர்க்கட்சி தலைவர் வி.டி.சதீசன், சசிதரூர் எம்.பி., அதானி குழும தலைவர் கவுதம் அதானி, திருவனந்தபுரம் மேயர் ஆர்யா ராஜேந்திரன், துறைமுக நிர்வாக இயக்குனர் கரண் அதானி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • ஷவர்மா வாங்கி சாப்பிட்டதால் தான் உடல் நலபாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
    • உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் குறிப்பிட்ட உணவகம் சென்று சோதனை நடத்தினர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் ஷவர்மா சாப்பிட்ட பலருக்கும் உடல் நலக்குறைவும், உயிர்ப்பலியும் ஏற்பட்டது.

    இதனை தொடர்ந்து கேரளாவில் துரித உணவகங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஓட்டல் ஊழியர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் வகுக்கப்பட்டன.

    இந்நிலையில்  திருவனந்தபுரம் கிளிப்பாலம், கரமன், அட்டுக்கல், மணக்காடு, கமலேஸ்வரம், ஸ்ரீவராகம் மற்றும் பேட்டா பகுதிகளை சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோருக்கு திடீர் வாந்தி-பேதி ஏற்பட்டது. அவர்கள் உடனடியாக தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.

    இவர்கள் அட்டக்குளங்கரா பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் இருந்து ஷவர்மா வாங்கி சாப்பிட்டதால் தான் உடல் நலபாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    இதனை தொடர்ந்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் குறிப்பிட்ட உணவகம் சென்று சோதனை நடத்தினர். அங்கிருந்த உணவுகளின் மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

    • ரூ.8 ஆயிரத்து 867 கோடி மதிப்பீட்டில் துறைமுகம் கட்டப்பட்டுள்ளது.
    • தெற்காசியாவின் முதல் அரை தானியங்கி துறைமுகம்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருவனந்தபுரம் விழிஞ்சத்தில் பொது-தனியார் கூட்டாண்மை மாதிரியின் கீழ் ரூ.8 ஆயிரத்து 867 கோடி மதிப்பீட்டில் துறைமுகம் கட்டப்பட்டுள்ளது. தெற்காசியாவின் முதல் அரை தானியங்கி துறைமுகமான இதனை வருகிற 2-ந் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார்.

    இதனை கேரள மாநில துறைமுகத்துறை அமைச்சர் வாசவன் உறுதிப்படுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், விழிஞ்சம் துறைமுகத்தை மே 2-ந் தேதி பகல் 11 மணிக்கு பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

    இந்த துறைமுகம் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படு வதன் மூலம் கேரளா, உலகின் கடல்சார் வர்த்தக துறையில் முன்னணியில் இருக்கும்.

    • பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதாக கோர்ட்டில் சிறுமி புகார்.
    • விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு கோர்ட் உத்தரவு.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருவனந்தபுரம் போத்தன்கோடு பகுதியை சேர்ந்த ஒரு தம்பதிக்குள் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது. இதனால் அவர்கள் இருவரும் பிரிந்து வாழ்ந்தனர்.

    11 வயதில் மகள் இருக்கும் நிலையில், அவர்கள் இருவரும் விவாகரத்து கேட்டு குடும்பநல கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். அவர்களது விவாகரத்து தொடர்பான ஆலோசனை குடும்ப நல கோர்ட்டில் நடந்தது. மனுதாக்கல் செய்த தம்பதியிடம் குடும்பநல கோர்ட்டு உறுப்பினர்கள் தனித்தனியாக விசாரண நடத்தினர்.

    மேலும் அவர்களுக்கு ஆலோசனைகளும் வழங்கினர். அது மட்டுமின்றி அந்த தம்பதியின் மகளான 11 வயது சிறுமியிடமும் வாக்கு மூலம் பெறப்பட்டது. அப்போது தனது தாய்க்கு ஆண் நண்பர் ஒருவர் இருப்பதாவும், தனது தந்தை இல்லாத நேரத்தில் தாயை பார்க்க வீட்டிற்கு வந்து சென்ற அவர் தன்னிடம் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதாகவும் கோர்ட்டில் சிறுமி தெரிவித்தார்.

    அதுகுறித்து தனது தாயிடம் தெரிவித்ததாகவும், ஆனால் அதுபற்றி யாரிடமும் கூறக்கூடாது என்று தாய் கூறிவிட்டதாகவும் கோர்ட்டில் அந்த சிறுமி கூறியிருக்கிறார். அதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த குடும்பநல கோர்ட்டு உறுப்பினர்கள், அதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட்டனர்.

    கோர்ட்டு உத்தரவின் பேரில் சிறுமி பாலியல் தொல்லைக்கு உள்ளான விவகாரம் தொடர்பாக வஞ்சியூர் போலீசார் வழக்கு பதிந்தனர். இந்த வழக்கில் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தாயின் ஆண் நண்பர் முதல் குற்றவாளியாகவும், சிறுமியின் தாய் இரண்டாவது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    சிறுமி பாலியல் தொல்லைக்கு உள்ளான சம்பவம் போத்தன்கோடு பகுதியில் நடந்திருப்பதால், அந்த வழக்கு போத்தன்கோடு போலீஸ் நிலையத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    போத்தன் கோடு போலீசார் வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டபிறகு, இந்த சம்பவத்தில் அதிரடி நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • கடந்த 5 ஆண்டுகளாக கேரள பாஜக மாநிலத் தலைவராக இருந்த கே. சுரேந்திரன் பதவிக் காலம் நிறைவடைந்தது.
    • சசி தரூரை எதிர்த்து போட்டியிட்ட ராஜீவ் சந்திரசேகர் 16,077 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார்.

    பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ராஜீவ் சந்திரசேகா், அக்கட்சியின் கேரள மாநிலத் தலைவராக அதிகாரப்பூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

    கடந்த 5 ஆண்டுகளாக கேரள பாஜக மாநிலத் தலைவராக இருந்த கே.சுரேந்திரன் பதவிக் காலம் நிறைவடைந்ததை அடுத்து புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தோ்தல் அறிவிக்கப்பட்டது.

    இதன்படி நேற்று திருவனந்தபுரத்தில் உள்ள பாஜக மாநிலத் தலைமை அலுவலகத்தில் ராஜீவ் சந்திரசேகா் வேட்புமனுத் தாக்கல் செய்தாா்.

    இப்பதவிக்கு ராஜீவ் சந்திரசேகா் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் இன்று காலை திருவனந்தபுரத்தில் கட்சியின் கவுன்சில் கூட்ட நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் பங்கேற்ற கேரள பாஜகவின் மேலிடப் பாா்வையாளர் மற்றும் மத்திய அமைச்சா் பிரஹலாத் ஜோஷி, கேரள மாநில பாஜக தலைவராக ராஜீவ் சந்திரசேகரன் ஒருமனதாகத் தேர்தெடுக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

    கா்நாடகத்தில் இருந்து மூன்று முறை மாநிலங்களவைக்குத் தோ்வான ராஜீவ் சந்திரசேகா், மத்திய பாஜக கூட்டணி அரசில், மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம், திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோா், நீா் வளம் ஆகிய துறைகளின் இணை அமைச்சராக பொறுப்பு வகித்துள்ளாா்.

    பாஜகவின் தேசிய செய்தித் தொடா்பாளராகவும் பணியாற்றியுள்ள ராஜீவ் சந்திரசேகா் பணியாற்றி உள்ளார். கடந்த மக்களவைத் தோ்தலில் திருவனந்தபுரம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சசி தரூரை எதிர்த்து போட்டியிட்ட ராஜீவ் சந்திரசேகர் 16,077 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது குறிப்பிடத்தக்கது. 

     

    • குருவாயூர் மற்றும் திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே ரெயில் இயக்கப்படாது.
    • தெற்கு ரெயில்வே தகவல்

    நாகர்கோவில்:

    தெற்கு ரெயில்வே திருவனந்தபுரம் கோட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கொல்லம் கோட்டயம்- ஏற்றுமானூர் மற்றும் எர்ணாகுளம்-திருச்சூர் ஆகிய பிரிவுகளில் ரெயில் நிலையங்களில் திட்ட மிடப்பட்டுள்ள பாதை பராமரிப்பு பணிகளுக்காக ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ரெயில் எண்: 16127 சென்னை எழும்பூர் - குருவாயூர் தினசரி எக்ஸ்பிரஸ் நவம்பர் 2 முதல் 19 வரை (18 நாட்கள்) சென்னை எழும்பூரில் இருந்து புறப்படுவது திருவனந்தபுரம் சென்ட்ரலில் நிறுத்தப்படும். அதாவது திருவனந்தபுரம் சென்ட்ரல் மற்றும் குருவாயூர் இடையே இந்த ரெயில் இயக்கப்படாது.

    ரெயில் எண்: 16128 குருவாயூர் - சென்னை எழும்பூர் தினசரி எக்ஸ்பிரஸ் நவம்பர் 2 முதல் 19 வரை (18 நாட்கள்) குருவாயூருக்குப் பதிலாக திருவனந்தபுரம் சென்ட்ரலில் இருந்து சேவையைத் தொடங்கும். அதா வது குருவாயூர் மற்றும் திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே ரெயில் இயக்கப்படாது.

    ரெயில் எண்: 16382 கன்னியாகுமரி - புனே சந்திப்பு தினசரி எக்ஸ்பிரஸ் நவம்பர் 2, 5 மற்றும் 8 ஆகிய தேதிகளில் கன்னியாகுமரியில் இருந்து புறப்படும் (3 நாட்கள் காயங்குளம் சந்திப்பு மற்றும் எர்ணாகுளம் டவுன், ஆலப்புழா வழியாக இயக்கப்படும். இந்த ரெயில் மாவேலிக்கரா, செங்கனூர், திருவல்லா, சங்கனாச்சேரி மற்றும் கோட்டயம் ஆகிய இடங்களில் செல்லாது. அம்பலப்புழா, ஹரிபாட், ஆலப்புழா, சேர்த்தலா மற் றும் எர்ணாகுளம் சந்திப்பு ஆகிய இடங்களில் கூடுதல் தற்காலிக நிறுத்தம் வழங்கப்படும்.

    • கன்னியாகுமரி யாத்திரை என பெயரிடப்பட்டுள்ளது.
    • இதற்காக ரூ.600 கட்டணமாக வசூலிக்கிறார்கள்.

    கன்னியாகுமரி:

    நெய்யாற்றின்கரை பணிமனையில் இருந்து கேரள அரசு போக்குவரத்து கழக பட்ஜெட் டூரிசம் செல் மூலமாக கன்னியாகுமரி யாத்திரை என பெயரிடப்பட்டுள்ள இந்த யாத்திரை திருவனந்தபுரம் பஸ் நிலையத்தில் இருந்து தொடங்கியது. தினமும் காலையில் திருவனந்தபுரத்தில் இருந்து புறப்படும் பஸ் திற்பரப்பு வருகிறது.

    அங்கு திற்பரப்பு மகாதேவர் ஆலய தரிசனம் முடித்து விட்டு குமார கோவில் தரிசனத்துக்காக செல்கிறது. அங்கிருந்து நேராக வட்டக்கோட்டைக்கு செல்லும் பஸ் மாலையில் கன்னியாகுமரி திருப்பதி கோவில், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் தரிசனம் முடிந்த பின்னர் திருவனந்தபுரத்துக்கு செல்கிறது.

    இதற்காக ரூ.600 கட்டண மாக வசூலிக்கிறார்கள். குழுக்களாக சேர்ந்து முன் பதிவு செய்து ஒரு முறை 50 பேர் வரை அழைத்துச்செல்கிறார்கள். திருவனந்தபுரம் பகுதியில் இருந்து கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கோவில்களுக்கு வர விரும்புபவர்களுக்கு இந்த பயண திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

    நேற்று முதல் பஸ் திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டு திற்பரப்புக்கு வந்தது. அங்குள்ள மகாதேவர் ஆலயத்தில் தரிசனம் செய்த பின்னர் பஸ்சில் வந்தவர்கள் கோவிலை சுற்றி பார்த்துவிட்டு நேராக குமாரகோவில் சென்றார்கள். அதன் பிறகு மற்ற ஆன்மீக சுற்றுலா தலங்களுக்கும் சென்று மாலையில் திருவனந்தபுரம் புறப்பட்டு சென்றது.

    • கோவாக்சின் தடுப்பூசி மட்டுமே இருப்பு உள்ளது.
    • ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டு திறக்கப்பட்டு உள்ளது.

    நாகர்கோவில்:

    சீனாவில் மீண்டும் கொேரானா பரவல் அதிக ரித்து உள்ள நிலையில் தமிழ கத்தில் முன்னெச்ச ரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    குமரி மாவட்டத்திலும் முன்னெச்சரிக்கை நடவ டிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டு திறக்கப்பட்டு உள்ளது. மேலும் வெளிநாடு களில் இருந்து வருபவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகி றார்கள். குமரி மாவட்டத்தை ஓட்டியுள்ள கேரளாவில் முக கவசம் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் திருவ னந்தபுரத்தில் இருந்து குமரி மாவட்டத்திற்கு வரும் அனைத்து பஸ்களிலும் டிரைவர் கண்டக்டர்கள் முககவசம் அணிந்து பஸ் களை இயக்கி வருகிறார்கள். பஸ் பயணி களும் கட்டா யம் முககவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளனர். இதையடுத்து திருவனந்த புரத்திலிருந்து நாகர்கோவி லுக்கு வந்த அனைத்து பஸ் களிலும் பயணிகள் முக கவசம் அணிந்து இருந்தனர்.

    இதே போல் வடசேரி யில் இருந்து திருவனந்த புரத்திற்கு செல்லும் பஸ்களிலும் டிரைவர், கண்டக்டர்கள் முக கவசம் அணிந்து இருந்தனர். களியக்கா விளையை தாண்டி திருவனந்த புரத்திற்கு செல்லும் பயணிகள் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்று போக்குவரத்து கழக அதிகாரி கள் அறிவுறுத்தி உள்ளனர்.

    குமரி மாவட்டத்தை பொருத்தமட்டில் பெரும்பா லான ஆஸ்பத்திரிகளிலும் முககவசம் கட்டாயமாக்கப் பட்டு உள்ளது. ஆஸ்பத்தி ரிக்கு வரும் பொதுமக்கள் ஊழியர்கள் அனைவரும் முக கவசம் அணிய தொடங்கி உள்ளனர்.குமரி மாவட்டத்தை பொறுத்த மட்டில் கடந்த சில நாட்க ளாக கொரோனா பாதிப்பு எதுவும்

    இல்லை. இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு 2 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து அவர்கள் வீட்டுத் தனிமையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சளி தொல்லை, மூச்சு திணறல் இருந்தால் உடனடியாக பக்கத்தில் உள்ள சுகாதார மையத்தில் பரிசோதனை மேற்கொண்டு சிகிச்சை பெற்றுக் கொள்ளுமாறு சுகாதாரத்துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத் துள்ளனர்

    கொரோனாவை கட்டுப் படுத்தும் வகையில் தடுப்பூசி போடப்பட்டது. முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திய பலரும் குறிப் பிட்ட நாட்கள் கழிந்த பிறகும் 2-வது டோஸ் தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர். தடுப்பூசி செலுத்தாதவர்கள் கொரோனா பரவல் அதிக ரிக்க தொடங்கியதை யடுத்து தடுப்பூசி செலுத்துவதற்காக அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலை யங்களுக்கு சென்றனர்.

    ஆனால் கோவிஷீல்டு தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கோவாக்சின் தடுப்பூசி மட்டுமே இருப்பு உள்ளது.

    • கொட்டும் மழையிலும் பக்தர்கள் சாமி தரிசனம்.
    • புரட்டாசி மாத பூஜைக்காக நேற்று முன்தினம் மாலை நடை திறக்கப்பட்டது.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை அய்யப்பன் கோவிலில் கொட்டும் மழையிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    சபரிமலை அய்யப்பன் கோவிலில் புரட்டாசி மாத பூஜைக்காக நேற்று முன்தினம் மாலை நடை திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடையை திறந்து வைத்தார். இரவு வழக்கம் போல் 10.30 மணிக்கு நடை அடைக்கப்பட்டது.

    நேற்று அதிகாலை 5 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டது. வழக்கமான பூஜைகளுடன் நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய்யபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, மாலை 6 மணிக்கு தீபாராதனையை தொடர்ந்து புஷ்பாபிஷேகம் நடைபெற்றது.

    வழக்கம் போல் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையிலேயே பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். ஆன்லைனில் முன்பதிவு செய்யாதவர்களுக்கு, சபரிமலை தரிசனத்திற்கான உடனடி முன்பதிவு செய்ய நிலக்கல், பம்பையில் சிறப்பு வசதி செய்யப்பட்டிருந்தது.

    கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நிபா வைரஸ் பாதிப்பு இருந்த போதிலும் கோவிலில் கட்டுப்பாடு இல்லை. எனவே திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் அய்யப்பனை தரிசனம் செய்ய காத்திருந்தனர். அப்போது பலத்த மழை பெய்தது. எனினும் பக்தர்கள் அதனை பொருட்படுத்தாமல் சரண கோஷம் முழங்க அய்யப்பனை தரிசனம் செய்தனர். புரட்டாசி மாத பூஜைக்காக வருகிற 22-ந் தேதி வரை நடை திறக்கப்பட்டிருக்கும்.

    ×