என் மலர்
நீங்கள் தேடியது "விழிஞ்சம் துறைமுகம்"
- கேரளாவில் பிறந்த ஆதி சங்கராச்சாரியாருக்கு எனது மரியாதையை செலுத்துகிறேன்.
- இந்தியா கூட்டணியின் வலுவான தூணாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உள்ளார்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள விழிஞ்சம் பகுதியில் ரூ.8ஆயிரத்து 900 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச ஆழ்கடல் பல்நோக்கு துறைமுக திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது. பிரதமர் மோடி துறைமுக திறப்பு விழாவில் பங்கேற்று விழிஞ்சம் துறைமுகத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
பிரமாண்ட சரக்கு கப்பலான எம்.எஸ்.டி. செலஸ்ட்னோ மரேஸ்காவை வரவேற்று விழிஞ்சம் துறைமுகத்தின் செயல்பாட்டை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்.
இதைத்தொடர்ந்து விழிஞ்சம் துறைமுக திறப்பு விழாவில் பிரதமர் மோடி கூறியதாவது:
* கேரளாவில் பிறந்த ஆதி சங்கராச்சாரியாருக்கு எனது மரியாதையை செலுத்துகிறேன்.
* கேரளாவில் ஒருபுறம் வாய்ப்புகளை அள்ளித்தரும் பெரிய கடலும் மறுபுறம் இயற்கை அழகும் உள்ளது.
* புதிய யுகத்தின் வளர்ச்சியாக கேரளாவின் விழிஞ்சம் சர்வதேச ஆழ்கடல் பல்நோக்கு துறைமுகம் அமையும்.
* விழிஞ்சம் துறைமுகம் கேரள மக்களுக்கு புதிய பொருளதார வாய்ப்புகளை உருவாக்கும். இந்தியாவில் கடலோர மாநிலங்கள், துறைமுக நகரங்கள் முக்கிய வளர்ச்சி மையமாக மாறும்.
* பெரிய சரக்கு கப்பல் களை நிறுத்த இடமளிக்கும் வகையில் துறைமுகம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
* இந்தியா கூட்டணியின் வலுவான தூணாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உள்ளார்.
* விழா மேடையில் பினராயி விஜயன், காங்கிரசின் சசிதரூர் உள்ளதால் இன்று பலரின் தூக்கம் பறிபோகும்.
* இந்தியா கூட்டணியின் முக்கிய தலைவர்கள் தன்னுடன் மேடையை பகிர்வதால் பலரின் தூக்கம் பறிபோகும்.
* கேரளா வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தை நோக்கி நகர்வதற்கு விழிஞ்சம் துறைமுகம் ஒரு உதாரணம். தானியங்கி துறைமுகமான விழிஞ்சம் ஆண்டுக்கு 1.5 மில்லியன் டிகியு கொள் கலன்களை கையாளும் திறன் கொண்டது.
* விழிஞ்சம் துறைமுகம் கேரள மக்களுக்கு புதிய பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கும். இந்தியாவின் கடலோர மாநிலங்கள், துறைமுக நகரங்கள் முக்கிய வளர்ச்சி மையமாக மாறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சர்வதேச கப்பல் பாதையில் இருந்து விழிஞ்சம் துறைமுகம் 10 கடல் மைல்கள் தொலையில் தான் இருக்கிறது.
- விழிஞ்சம் துறைமுகத்தின் செயல்பாட்டு வசதிகளை பிரதமர் ஆய்வு செய்தார்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள விழிஞ்சம் பகுதியில் சர்வதேச ஆழ்கடல் பல்நோக்கு துறைமுகம் ரூ.8ஆயிரத்து 900 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படுகிறது. மூன்று கட்டங்களாக மேற்கொள்ள திட்டமிடப்பட்ட துறைமுகத்தின் கட்டுமான பணிகள் கடந்த 2015-ம் ஆண்டு தொடங்கியது.
முதற்கட்ட பணிகள் கடந்த 2023-ம் ஆண்டு முடிவுக்கு வந்தநிலையில், சோதனை ஓட்டங்கள் கடந்தஆண்டு (2024) ஜூலை மாதத்தில் நடைபெற்றது. மிகப்பெரிய சரக்கு கப்பல்கள் இயக்கப்பட்டு சோதனைஓட்டம் நடத்தப்பட்டது. முதற்கட்ட கட்டுமான பணிகள் முடிவடைந்த நிலையில், அடுத்த இரண்டு கட்ட பணிகள் 2018-ம் ஆண்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சர்வதேச கப்பல் பாதையில் இருந்து விழிஞ்சம் துறைமுகம் 10 கடல் மைல்கள் தொலையில் தான் இருக்கிறது. மேலும் இயற்கையாகவே 20 மீட்டர் ஆழம் கொண்ட கடல் பகுதியாகும். இதனால் பல்வேறு நாடுகளுக்கான பயண தூரம் விழிஞ்சம் துறைமுகத்தில் இருந்து பெரிதளவில் குறைவாகவே இருக்கும்.
விழிஞ்சம் துறைமுகத்தில் முதற்கட்ட பணிகள் முடிவுற்ற நிலையில் ஆண்டுக்கு 10லட்சம் கொள்கலன்கள் கொள்ளளவு கொண்டதாக இருக்கிறது. மூன்று கட்ட பணிகளும் முடிவடையும் பட்சத்தில் 45லட்சம் கொள்கலன்களாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் விழிஞ்சம் துறைமுக திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று திருவனந்தபுரத்திற்கு விமானத்தில் வந்தார். அவரை விமான நிலையத்தில் முதல்-மந்திரி பினராயி விஜயன் உள்ளிட்டோர் பூச்செண்டு கொடுத்து வரவேற்றனர்.
இதையடுத்து பிரதமர் மோடி ராஜ்பவனுக்கு சென்று இரவில் தங்கினார்.
இந்தநிலையில் விழிஞ்சம் சர்வதேச துறைமுக திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது. அதில் கலந்துகொள்ள பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் விழிஞ்சம் துறைமுகத்துக்கு சென்றார். பின்பு துறைமுக திறப்பு விழாவில் பங்கேற்று விழிஞ்சம் துறைமுகத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
பிரமாண்ட சரக்கு கப்பலான எம்.எஸ்.டி. செலஸ்ட்னோ மரேஸ்காவை வரவேற்று விழிஞ்சம் துறைமுகத்தின் செயல்பாட்டை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். பின்பு விழிஞ்சம் துறைமுகத்தின் செயல்பாட்டு வசதிகளை பிரதமர் ஆய்வு செய்தார்.
இந்த விழாவில் கேரள மாநில கவர்னர் ராஜேந்திர அர்லேகர், முதல்-மந்திரி பினராயி விஜயன், மத்திய கப்பல் போக்குவரத்து துறை மந்திரி சர்பானந்த சோனோவால், மத்திய மந்திரிகள் சுரேஷ் கோபி, ஜார்ஜ் குரியன், கேரள துறைமுக மந்திரி வி.என். வாசவன், மாநில மந்திரிகள் சிவன்குட்டி, அனில், சாஜி செரியன், முன்னாள் மத்திய மந்திரிகள் ராஜீவ் சந்திரசேகர், எதிர்க்கட்சி தலைவர் வி.டி.சதீசன், சசிதரூர் எம்.பி., அதானி குழும தலைவர் கவுதம் அதானி, திருவனந்தபுரம் மேயர் ஆர்யா ராஜேந்திரன், துறைமுக நிர்வாக இயக்குனர் கரண் அதானி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- விழாவிற்கு 10 ஆயிரம் பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- பிரதமர் வருகையை முன்னிட்டு மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அரபிக்கடல் ஓரத்தில் புதிதாக கட்டப்பட்டு வருகிறது விழிஞ்சம் துறைமுகம். இந்த துறைமுக பணிகள் பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பீட்டில் 3 கட்டங்களாக மேற்கொள்ளப்பட உள்ளன.
விழிஞ்சம் துறைமுக பகுதி பன்னாட்டு கடற்பாதையில் இருந்து 10 கடல்மைல் தொலைவில் இருக்கிறது. மேலும் இந்த துறைமுகத்தில் இயற்கையாகவே 24 மீட்டர் ஆழம் கிடைக்கிறது. இதனால் இங்கு மிகப்பெரிய சரக்கு கப்பல்களையும் எளிதாக நிறுத்த முடியும்.
இந்த துறைமுகத்தின் தற்போதைய கொள்ளளவு 10 லட்சம் கொள்கலன்களாக இருக்கிறது. 2028-ம் ஆண்டு துறைமுக பணி முழுவதுமாக முடிந்தபிறகு விழிஞ்சம் துறைமுகத்தின் திறன் ஆண்டுக்கு 45 லட்சம் கொள்கலன்களாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டு உள்ளது.
முழுவதுமாக கட்டி முடிக்கப்பட்ட பிறகு உலகின் மிகப்பெரிய துறைமுகங்களில் ஒன்றாக விழிஞ்சம் துறைமுகம் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டு இருக்கிறது. கேரள மாநிலத்தின் அடையாளமாக மாற இருக்கும் விழிஞ்சம் துறைமுக திறப்பு விழா வருகிற 2-ந்தேதி நடைபெற உள்ளது.
இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு துறைமுகத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இதற்காக பிரதமர் மோடி வருகிற 1-ந்தேதி கேரளா வருகிறார். அன்று இரவு ராஜ்பவனில் தங்கும் அவர், மறுநாள் காலை 11 மணிக்கு விமானப்படையின் சிறப்பு ஹெலிகாப்டரில் விழிஞ்சம் துறைமுகத்துக்கு செல்கிறார்.
துறைமுகத்தை திறந்து வைத்த பிறகு பிரதமர் மோடி, துறைமுகத்தின் பிரதான வாயிலில் அமைக்கப்பட்டுள்ள மேடையில் உரையாற்றுகிறார். இந்த விழாவிற்கு 10 ஆயிரம் பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் துறைமுக பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட உள்ளது.
பிரதமர் வருகையை முன்னிட்டு மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்ய டெல்லியில் இருந்து பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு குழுவினர் நேற்று கேரளா வந்தது. அவர்கள் விழிஞ்சம் துறைமுகம் உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தனர்.
மர்மநபரின் வெடிகுண்டு மிரட்டலால் கடந்த சில நாட்களாகவே கேரள மாநிலத்தில் கடும் பீதி ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் பிரதமர் மோடி வருவதால் மாநிலம் முழுவதும் உச்சகட்ட பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
- ரூ.8 ஆயிரத்து 867 கோடி மதிப்பீட்டில் துறைமுகம் கட்டப்பட்டுள்ளது.
- தெற்காசியாவின் முதல் அரை தானியங்கி துறைமுகம்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் திருவனந்தபுரம் விழிஞ்சத்தில் பொது-தனியார் கூட்டாண்மை மாதிரியின் கீழ் ரூ.8 ஆயிரத்து 867 கோடி மதிப்பீட்டில் துறைமுகம் கட்டப்பட்டுள்ளது. தெற்காசியாவின் முதல் அரை தானியங்கி துறைமுகமான இதனை வருகிற 2-ந் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார்.
இதனை கேரள மாநில துறைமுகத்துறை அமைச்சர் வாசவன் உறுதிப்படுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், விழிஞ்சம் துறைமுகத்தை மே 2-ந் தேதி பகல் 11 மணிக்கு பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
இந்த துறைமுகம் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படு வதன் மூலம் கேரளா, உலகின் கடல்சார் வர்த்தக துறையில் முன்னணியில் இருக்கும்.






