என் மலர்

    நீங்கள் தேடியது "Prime Minister Modi"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மக்கள் நலனில் அக்கறையில்லாத பிரதமர் மோடிஎன்று உள்துறை மந்திரி தி.மு.க.வை விமர்சிக்கின்றனர்.
    • ராமநாதபுரம் பயிற்சி பாசறை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் ஆேவசமாக பேசினார்.

    மண்டபம்

    ராமநாதபுரத்தை அடுத்த பேராவூரில் தி.மு.க. தென் மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான பயிற்சி பாசறை கூட்டம் நடைபெற்றது. இதில் தி.மு.க. நிர்வாக ரீதியிலான 19 மாவட்டங்களை சேர்ந்த 16,928 பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

    கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதா வது:-

    வறட்சியான மாவட்டம் என்று கூறப்பட்ட ராமநாதபு ரத்திற்கு நாள் உள்ளாட் சித்துறை அமைச்சராக இருந்த போது போதிய தண்ணீர் கொண்டு வர ஏற்பாடு செய்தேன். அப் பேற்பட்ட ராமநாதபுரம் மண்ணில் இன்று கழக வீரர்களாக கூடியுள்ளோம். சேது மன்னர்கள் தமிழ் வளர்ச்சிக்கும், தேச வளர்ச் சிக்கும் ஆற்றிய பங்கு மறைக்க முடியாதது.

    தாய் மண்ணை காக்கும் போரில் இருந்த மன்னர் ராமநாதசேதுபதி கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தபடி மக்களை எழுச் சியை ஊட்டினார். மன்ன–ரின் கட்டளையை மனதில் வைத்து 42 நாட்கள் பெரும் போரை மக்கள் செய்தனர். சென்னையில் உள்ள செயிண்ட் ஜார்ஜ் கோட்டை–யில் உள்ள தனிமை சிறை–யில் அவரை பிரிட்டீஷ் அரசு அடைத்தது. நாட்டுக் காக அவர் ஆற்றிய தியா கத்தை நினைவுகூர, ராமநா தபுரம் கலெக்டர் அலுவல கத்துக்கு சேதுபதி மன்னர் பெயரை வைத்தவர், தலை வர் கருணாநிதி.

    அண்ணா அரசு என்ஜினீ யரிங் கல்லூரி, ஆரம்ப சுகாதார நிலையங்கள், சுனாமியால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு 5 ஆயிரம் சுனாமி குடியிருப்புகள், மேல்மட்ட பாலங்கள் என திட்டங்களை தந்தோம். பின்தங்கிய மாவட்டமான ராமநாதபுரம் முன்னுக்கு கொண்டு வரப்பட்டது. ராமநாதசுவாமி கோவிலின் தங்கத்தேரை ஓடவைத்தது இந்த ஆட்சிதான்.

    தென்மண்டல முகவர் கூட்டம் என்றவுடன் ராமநாதபுரத்தில் நடத்தலாம் என்று ஒட்டுமொத்தமாக தீர்மானிக்கப்பட்டது. இந்த நிகழ்ச் சியை மிகுந்த எழுச்சி யோடு ஏற்பாடு செய்துள்ளனர். அமைச்சர் ராஜகண்ணப் பன், காதர்பாட்சா முத்து ராமலிங்கம் எம்.எல்.ஏ. ஆகி யோர் போட்டி போட்டு இந்த மாவட்டத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல் கின்றனர்.

    தமிழகத்தை தி.மு.க.தான் நிரந்தரமாக ஆள வேண்டும் என்ற தலைவர் கலைஞரின் கனவை நிறைவேற்றுவோம். அதற்கான தளபதிகள்தான் நீங்கள். தென்மாவட்ட பொறுப்பாளர்களுக்கு முதல் கட்ட பயிற்சி தற் போது வழங்கப்பட்டது. வாக்குச்சாவடியின் முகவர் கள்தான் வாக்காளர்களுக்கு முழுப்பொறுப்பு. நாடாளு மன்ற தேர்தலில் 40 தொகு திகளிலும் வெற்றி ஒன் றையே இலக்காக கொண்டு இன்று முதல் பணியாற்ற வேண்டும். வாக்காளர்களி டம் நமது சாதனைகளை தொடர்ந்து எடுத்துச் சொல்ல வேண்டும்.

    வாக்குச்சாவடிக்கு உள்பட்ட குடும்பங்களின் உறுப்பினர்களாக நீங்கள் மாற வேண்டும். இதற்காக தினமும் ஒரு மணி நேரம் ஒதுக்க வேண்டும். அரசின் திட்டங்களை முழுமையாக தெரிந்து கொள்ள வேண் டும். விடியல் பயணம் என பெண்களுக்கான இலவச பயணத்துக்கு பெயர் வைக் கப்பட்டுள்ளது. அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ந்தேதி முதல் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட உள்ளது. நமக்கு எதிராக அவதூறு, பொய் பிரசாரம் செய்யும் சிறுநரிக்கூட்டம் ஒன்று செயல்பட்டு வருகி றது.

    அ.தி.மு.க., பா.ஜ.க. செய்வதை போல பொய் பிரசாரம் செய்ய வேண்டாம். நமது சாதனைகளை மட்டும் சொன்னால் போதும். நடக்க உள்ள நாடாளுமன்ற தேர்தலில் நமது கூட்டணி முழுமையாக வெற்றி பெற வேண்டும். தற்போது ஆட்சி–யில் உள்ள பா.ஜ.க. நாட்டை சின்னாபின்னமாக்கி விட் டது. மீண்டும் ஒரு முறை பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் இந்தியாவை யாராலும் காப்பாற்ற முடியாது.

    பதவிக்கு வரும் முன் மோடி பல வாக்குறுதிகளை கொடுத்தார். ராமநாதபுரத் திலும் கூட்டம் நடத்தி வாக் குறுதிகள் கொடுத்தார். அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றினாரா? நாட்டு மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியின்படி கருப்பு பணத்தை ஒழித்து ஆளுக்கு ரூ.15 லட்சம் கொடுத்தார் களா? ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை கொடுத் தாரா?

    இதில் ராமநாதபுரத்தில் அவர் போட்டியிட போகி றார் என்கின்றனர். ராமேசு வரத்தை சர்வதேச சுற்றுலா தலமாக மாற்று வோம் என்றார். பாதாள சாக்கடை பணிகளை தவிர எதுவும் நடக்கவில்லை. அதையும் அ.தி.மு.க. ஆட்சியில் முழுமையாக செய்ய வில்லை. புயலால் அழிந்து போன ராமேசுவரம்-தனுஷ்கோடி ரெயில் பாதை திட்டத்தை கொண்டு வரு வோம் என்றார். இது வரை எதுவும் நடக்கவில்லை. மோடி சுட்ட பல வடைகளில் இந்த வடையும் ஒன்று.

    மீனவர்களுக்கான வாக்கு றுதியையாவது நிறை வேற்றினாரா? இலங்கை கடற்படையின் அராஜ கத்தை போக்குவோம் என் றார். தற்போது அந்த நிலை மாறிவிட்டதா நாளை (இன்று) நடக்கும் மீனவர்கள் மாநாட்டில் இது குறித்து விரிவாக பேசப்படும்.

    மத்திய அமைச்சராக அருண்ஜெட்லி இருந்த போது சொன்ன மதுரை எய்ம்ஸ் திட்டம் செங்கலுடன் நின்றுவிட்டது. 9 வருடங்கள் கழித்து தற்போதுதான் டெண்டர் விட்டுள்ளனர். இதுவும் நாடாளுமன்ற தேர்தலுக்கான நாடகமா? என்பது தெரியவில்லை. பல ஆயிரம் கோடி ஜி.எஸ்.டி. வரியை தமிழகத்திடம் இருந்து பெறும் மத்திய அரசுக்கு தனது நிதியில் இருந்து, மதுரையில் எய்ம்ஸ் கட்டித்தர மனமில்லை.

    இப்போதுதான் சகோதரி கனிமொழி கூறிய சிலப்பதி காரத்தின் முன்னுரையை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் படிக்க தொடங்கி இருப்பார் என்று தெரிகிறது. ஒன்றும் அவச ரமில்லை. முழுமை யாக படிக்க கால அவகாசம் உண்டு. மத்திய நிதி மந்திரி யின் கணவர் எழுதிய புத்த கத்தை மத்திய மந்திரிகள் அனைவரும் படிக்க வேண் டும். அந்த புத்தகத்தில், மீண்டும் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் இந்தியாவை காப் பாற்ற முடியாது என கூறப்பட்டுள்ளது. ஜெயலலி தாவின் சட்டமன்ற நாட கத்துக்கு நீலிக்கண்ணீர் வடிக்கும் மத்திய நிதி மந்திரி, மணிப்பூர் சம்பவத்துக்கு ஏன் பதிலளிக்க மறுக்கிறார்?

    மக்கள் நலனில் அக்கறை யில்லாத பிரதமர், உள்துறை மந்திரி தி.மு.க.வை விமர் சிக்கின்றனர். தமிழகத்தில் பா.ஜ.க.வின் அடிமையாக இருப்பது எடப்பாடி பழனி சாமிதான். நாங்கள் மாநில கட்சி தான். ஆனால் அனைத்து மாநில மக்களின் நலனுக்காக குரல் கொடுக் கும் ஒரே கட்சி தி.மு.க. தான். மக்கள் உரிமைகளை ஓங்கி ஒலித்து, நாடாளுமன் றத்தில் தி.மு.க. எம்.பி.க்கள் குரல் கொடுத்து வருகின்ற–னர். நம்மை பின்பற்றி பிற மாநில எம்.பி.க்களும் தைரி–யமாக பேசுவது மத்திய அரசுக்கு கோபத்தை உண்டு பண்ணுகிறது. மக்களாட் சிக்கு தமிழகம் முன்னோடி யாக இருந்து 40 தொகுதி களிலும் தி.மு.க. வெற்றி பெறும்.

    இதற்காகத்தான் இந்தியா கூட்டணி உருவாக்கப்பட் டுள்ளது. பா.ஜ.க.வின் அடக்கு முறைகளை பார்த்து பயப்படும் கட்சி தி.மு.க. அல்ல. தேர்தல் வெற்றிக் கான களப்பணியை நீங்கள் முன்னெடுக்க வேண்டும். உங்களை நம்பி நாடாளு மன்ற தேர்தல் களத்தை ஒப்படைத்துள் ளேன். உங்களது உழைப்புக் கான அங்கீகாரம் நிச்சயம் உண்டு என்று கலைஞரின் வழித் தோன்றலாக, உங்க ளில் ஒருவனாக நான் உறுதி கூறு கிறேன். நாற்பதும் நமதே, நாடும் நமதே. நன்றி.

    இவ்வாறு அவர் பேசி னார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • எதிர்க்கட்சிகளின் 'இந்தியா' என்ற புதிய கூட்டணியை பிரதமர் மோடி குற்றம் சாட்டி பேசியிருப்பது குறித்து கேள்வி எழுப்பினர்.
    • மோடி தனக்கு பிடித்த இடத்தை தேடிக்கொண்டு இருக்கிறார்.

    பாட்னா:

    ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி தலைவர் லாலுபிரசாத் யாதவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுநீரக பாதிப்பு காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து சிங்கப்பூர் சென்று சிகிச்சை பெற்று வந்தார். அதன்பிறகு மீண்டும் பல்வேறு கூட்டங்கள், நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் அவர் நேற்று அவரது மூத்த மகனும், பீகார் மந்திரியுமான தேஜ் பிரதாப் யாதவ் ஏற்பாடு செய்திருந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

    அப்போது அவரிடம், எதிர்க்கட்சிகளின் 'இந்தியா' என்ற புதிய கூட்டணியை பிரதமர் மோடி குற்றம் சாட்டி பேசியிருப்பது குறித்து கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்து லாலுபிரசாத் கூறுகையில், மோடி பாராளுமன்ற தேர்தலில் தோல்வி அடைந்த பிறகு வெளிநாட்டில் குடியேறுவார்.

    அவர் தான் விலகுவதற்கு திட்டமிட்டு இருக்கிறார். இதுவே அவர் பல நாடுகளுக்கு செல்வதற்கு காரணம். அவர் தனக்கு பிடித்த இடத்தை தேடிக்கொண்டு இருக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.

    அவரது இந்த கிண்டல் பேச்சு அங்கு தொண்டர்கள் மத்தியில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • முன்னதாக இன்று காலை புதிய பாராளுமன்றத்தில் சிறப்பு ஹோமம் செய்து வழிபாடுகள் நடத்த ஏற்பாடு.
    • இன்று பிற்பகல் நடக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி புதிய பாராளுமன்றத்தை திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணிப்பார்.

    டெல்லியில் தற்போதைய பாராளுமன்ற வளாகத்தில் இரு அவைகளிலும் எம்.பி.க்கள் செயல்படுவதற்கு கடுமையான இட பற்றாக்குறை நிலவுகிறது. மேலும் அந்த பாராளுமன்றம் கட்டப்பட்டு 100 ஆண்டுகள் நெருங்கும் நிலையில் அதில் புதிய நவீன வசதிகள் எதையும் செய்யமுடியாத நிலை காணப்பட்டது.

    இதனால் பாராளுமன்றத்துக்கு புதிய கட்டிடம் கட்ட பிரதமர் மோடி முடிவு செய்தார். அதன்படி தற்போதைய பாராளுமன்ற கட்டிடம் அருகிலேயே புதிய பாராளுமன்றம் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டது.

    அந்த இடத்தில் கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கட்டுமான பணிகள் தொடங்கின. 64 ஆயிரத்து 500 சதுர அடி பரப்பளவில் புதிய பாராளுமன்றம் கட்டப்பட்டுள்ளது. 4 அடுக்கு மாடிகளை கொண்ட புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் மக்களவை , மாநிலங்களவை கூடுவதற்காக தனித்தனி அரங்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

    2 மிகப்பெரிய ஆலோசனை கூடங்களும் கட்டப்பட்டுள்ளன. மக்களவையில் 888 எம்.பி.க்களும், மாநிலங்களவையில் 384 எம்.பி.க்களும் அமரும் வகையில் புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் நவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மொத்தத்தில் ஒரே நேரத்தில் 1,272 எம்.பி.க்கள் அமர்ந்து தங்களது பணிகளை மேற்கொள்ள முடியும்.

    புதிய பாராளுமன்ற கட்டிடம் 2 ஆண்டுகள் 5 மாதத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதை கட்டுவதற்கு சுமார் 1,200 கோடி செலவிடப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. உலகின் மிகப்பெரிய பாராளுமன்றங்களில் ஒன்றாக இந்த பாராளுமன்றம் கருதப்படுகிறது. பழைய பாராளுமன்றம் வட்ட வடிவில் அமைந்திருந்தது. ஆங்கிலேயர்களின் கட்டிட கலை பாணி அதில் காணப்படுகிறது. ஆனால் புதிய பாராளுமன்ற கட்டிடம் முக்கோண வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது.

    முழுக்க முழுக்க இந்திய கட்டிட கலை பாணியில் கட்டப்பட்டுள்ளது. புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இன்று சாவர்க்கரின் பிறந்தநாள் என்பதால் அன்றைய தினம் புதிய பாராளுமன்ற கட்டிடத்தை திறப்பது ஏற்புடையது அல்ல என்று எதிர்க்கட்சிகள் சர்ச்சையை கிளப்பின. மேலும் புதிய பாராளுமன்ற கட்டிடத்தை ஜனாதிபதி திறக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.

    ஆனால் இதை மத்திய அரசு ஏற்கவில்லை. இதையடுத்து புதிய பாராளுமன்ற கட்டிட திறப்புவிழாவை காங்கிரஸ், தி.மு.க., கம்யூனிஸ்டுகள் உள்பட 19 கட்சிகள் புறக்கணிக்கப் போவதாக கூட்டாக அறிவித்துள்ளன. என்றாலும், திட்டமிட்டபடி திறப்பு விழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. புதிய பாராளுமன்றம் திறக்கப்படும்போது மக்களவை சபாநாயகர் இருக்கை அருகே தமிழகத்தை சேர்ந்த திருவாவடுதுறை ஆதீனம் வழங்கிய செங்கோல் நிறுவப்பட உள்ளது.

    அந்த செங்கோல் ஆங்கிலேயர்களிடம் இருந்து ஆட்சி அதிகாரம் இந்தியர்களுக்கு பரிமாற்றம் செய்யப்பட்டதன் அடையாளமாக முதல் பிரதமர் நேருவுக்கு வழங்கப்பட்டதாகும். அந்த செங்கோல் புனித நீரால் சுத்தம் செய்யப்பட்டு ஆங்கிலேயர்களிடம் வழங்கப்பட்டு, பிறகு ஆதீனம் மூலம் நேருவின் கைக்கு வந்தது. அப்போது கோளறு பதிகம் பாடப்பட்டது. இத்தகைய சிறப்புடைய அந்த செங்கோல் அலகாபாத்தில் உள்ள நேரு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டு இருந்தது. ஆட்சி அதிகாரத்தின் மாற்றத்துக்கு அடையாளமாக கருதப்படும் அந்த செங்கோலை புதிய பாராளுமன்றத்தில் வைப்பதுதான் பொறுத்தமாக இருக்கும் என்று பிரதமர் மோடி முடிவு செய்து உத்தரவிட்டார்.

    முன்னதாக இன்று காலை புதிய பாராளுமன்றத்தில் சிறப்பு ஹோமம் செய்து வழிபாடுகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அவை முடிந்ததும் திறப்பு விழா நிகழ்ச்சிகள் நடைபெறும். இன்று பிற்பகல் நடக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி புதிய பாராளுமன்றத்தை திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணிப்பார்.

    இந்த விழாவில் பா.ஜ.க. மூத்த தலைவர்கள் அனைவரும் பங்கேற்கிறார்கள். பா.ஜ.க. வின் தோழமை கட்சிகளான அ.தி.மு.க., பா.ம.க., த.மா.கா., சிவசேனா கட்சிகள் பங்கேற்கின்றன. எதிர்க்கட்சிகளில் பிஜூ ஜனதாதளம், தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், அகாலிதளம் உள்பட பல்வேறு கட்சிகள் கலந்துகொள்ள வருகின்றன.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இந்தியா-ஆஸ்திரேலியாவுக்கு இடையே உறவு டி20 கிரிக்கெட் போல அடுத்தக்கட்டத்துக்கு சென்றுள்ளது.
    • அந்த நேரத்தில் இந்தியாவில் நடக்கும் பிரமாண்டமான தீபாவளி கொண்டாட்டத்தையும் நீங்கள் பார்க்கலாம்.

    சிட்னி:

    10 அணிகள் பங்கேற்கும் 13-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) அக்டோபர் 5-ந் தேதி முதல் நவம்பர் 19-ந் தேதி வரை இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடக்கிறது.

    இந்த நிலையில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை காண இந்தியா வருமாறு ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானிசுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

    ஆஸ்திரேலியா சென்றுள்ள அவர் இது தொடர்பாக சிட்னியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்தியா-ஆஸ்திரேலியாவுக்கு இடையே உறவு டி20 கிரிக்கெட் போல அடுத்தக்கட்டத்துக்கு சென்றுள்ளது. ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானீஸ் மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் ரசிகர்களை அக்டோபர்-நவம்பர் மாதங்களில் நடைபெறும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை காண வருமாறு இந்தியாவுக்கு அழைக்கிறேன்.

    அந்த நேரத்தில் இந்தியாவில் நடக்கும் பிரமாண்டமான தீபாவளி கொண்டாட்டத்தையும் நீங்கள் பார்க்கலாம்.

    இவ்வாறு மோடி கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • புதிய கட்டிடம் கட்ட மத்திய அரசு முடிவு செய்து கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது.
    • பாராளுமன்ற கட்டிடத்தை திறந்து வைப்பதற்கு பல எதிர்க்கட்சி தலைவர்கள் ஆட்சேபனை தெரிவித்து உள்ளனர்.

    புதுடெல்லி:

    தற்போதுள்ள பாராளுமன்ற கட்டிடத்துக்கு பதிலாக புதிய கட்டிடம் கட்ட மத்திய அரசு முடிவு செய்து கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது.

    சென்ட்ரல் விஸ்டா என்ற பெயரில் கட்டப்பட்ட புதிய பாராளுமன்ற கட்டிட பணிகள் முடிவடைந்தது.

    இதையடுத்து புதிய கட்டிடத்தை வருகிற 28-ந்தேதி பிரதமர் மோடி திறந்து வைப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் புதிய பாராளுமன்ற கட்டிடத்தை மோடி திறந்து வைக்க காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் டுவிட்டரில் கூறும்போது, "புதிய பாராளுமன்ற கட்டிடத்தை ஜனாதிபதிதான் திறந்து வைக்க வேண்டும். பிரதமர் அல்ல" என்று கூறியுள்ளார்.

    பாராளுமன்ற கட்டிடத்தை திறந்து வைப்பதற்கு பல எதிர்க்கட்சி தலைவர்கள் ஆட்சேபனை தெரிவித்து உள்ளனர். "பிரதமர் மோடி, அரசு நிர்வாகத்தில் உள்ளார். ஜனாதிபதி, இந்தியாவின் தலைவராக உள்ளார். அவர்தான் பாராளுமன்ற கட்டிடத்தை திறந்து வைக்க வேண்டும்" என்று கருத்து கூறி உள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கப்பலில் 40 பேர் பயணம் செய்த நிலையில், இதுவரை 22 பேரின் உடல்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளன.
    • உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி நிவாரணம் அறிவிப்பு.

    கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் தனூர்- பரப்பனங்காடி கடற்கரையில் சுற்றுலா பயணிகள் சென்ற சொகுசு படகு எதிர்பாராதவிதமாக கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இந்தக் கப்பலில் 40க்கும் மேற்பட்டோர் பயணம் செய்த நிலையில், இதுவரை 22 பேரின் உடல்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளன. மேலும், கடலில் 30க்கும் மேற்பட்டோர் மூழ்கியுள்ளதாக அஞ்சப்படுகிறது. அவர்களை தேடும் பணியில் மீட்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், சொகுசு படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்ததோடு நிவாரணமும் அறிவித்துள்ளார்.

    இதுகுறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    கேரள மாநிலம் மலப்புரத்தில் படகு கவிழ்ந்ததில் ஏற்பட்ட உயிரிழப்புகளால் வேதனை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல். இறந்த ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் பிரதமரின் நிவாரண நிதியில் இருந்து ரூ. 2 லட்சம் வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மாற்றுக் கட்சியினரை கவர்ந்த பிரதமர் மோடியின் மனதின் குரல்.
    • திருமங்கலம் தொகுதி காங்கிரஸ் மாவட்ட நிர்வாகி செல்வேந்திரன் பா.ஜ.க.வில் இணைந்தார்.

    மதுரை

    மதுரை மேற்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் சசிகுமாரின் வன்னி வேலம்பட்டி கிராமத்தில் பிரதமர் மோடியின்

    100-வது 'மனதின் குரல்' நிகழ்ச்சி ஒலிபரப்பானது. இதனை அவர் தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் சுப்பலா புரம் சென்றார். அங்கு திருமங்கலம் தொகுதி காங்கிரஸ் மாவட்ட நிர்வாகி செல்வேந்திரன் பா.ஜ.க.வில் இணைந்தார். இதில் ஊடக பிரிவு மாவட்ட தலைவர் காளி தாஸ், மண்டல் தலைவர் சாமி ரங்கையா, துணை தலைவர் அய்யனார் கண்ணன், பொதுச் செயலாளர் கருப்பசாமி, நிர்வாகிகள் செல்வம், திருப்பதி, சோமசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மதுரை மேற்கு மாவட்டம் திருப்பரங்குன்றம், உசிலம்பட்டி, திருமங்கலம் உள்பட 320 இடங்களில் பிரதமரின் 'மனதின் குரல்' நிகழ்ச்சி ஒலிபரப்பானது .

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வரும் 21-ல் டெல்லியில் நடக்கும் விழாவில், பிரதமர் மோடி, காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்திக்கு விருது வழங்குகிறார்.
    • கிராம அளவிலான குடிநீர் மற்றும் சுகாதார கண்காணிப்பு குழுவை மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்தியுள்ளது.

    காஞ்சிபுரம்:

    கிராமப்புறங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு, 100 சதவீதம் வழங்க வேண்டும் என்ற நோக்கில், மத்திய அரசு 'ஜல் ஜீவன்' திட்டத்தை கொண்டு வந்தது.

    ஒவ்வொரு மாவட்டத்திற்கும் இதற்கென சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டு குடிநீர் திட்டப்பணிகள் தொடங்கப்பட்டன. அவ்வாறு காஞ்சிபுரம் மாவட்டத்தில் கிராமப்புற வீடுகளுக்கு இத்திட்டத்தின் கீழ், 100 சதவீதம் குடிநீர் இணைப்பு வழங்கியதற்காக மத்திய அரசின் 'பிரதமர் விருது' காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்திக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 21-ல் டெல்லியில் நடக்கும் விழாவில், பிரதமர் மோடி, காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்திக்கு விருது வழங்குகிறார்.

    காஞ்சிபுரம் மாவட்டத் தில், 'ஜல் ஜீவன்' திட்டம் தொடங்கியபின், புதிதாக 1.16 லட்சம் இணைப்புகள் வழங்கப்பட்டு மொத்தம் உள்ள 2.15 லட்சம் வீடுகளுக்கு முழுவதுமாக குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த 2022 அக்டோபரில் இத்திட்டப்பணிகள் முடிவுற்றன. இதுமட்டுமல்லாமல், குடிநீரின் தரத்தை பரிசோதனை செய்ய, மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது. இவர்கள், அவ்வப்போது குடிநீரின் தரத்தை பரிசோதனை செய்கின்றனர். கிராம அளவிலான குடிநீர் மற்றும் சுகாதார கண்காணிப்பு குழுவை மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்தியுள்ளது. இக்குழு, அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் செல்வதை கண்காணிக்க வேண்டும். 'பைப் லைன்' பழுது, சீரமைத்தல் உள்ளிட்டவற்றை செய்ய இக்குழுவிற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மதுரை பறக்கும் மேம்பாலத்தை பிரதமர் மோடி 8-ந் தேதி திறந்து வைக்கிறார்.
    • இன்று (5-ந் தேதி) பறக்கும் பாலத்தில் சோதனை ஓட்டம் நடந்தது.

    மதுரை

    தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் மதுரை தல்லாகுளம் - ஐ.ஓ.சி. அலுவலகம் அருகில் இருந்து, நத்தம் வரை 35 கி.மீ. தூரத்துக்கு ரூ.1,028 கோடியில் நான்குவழிச் சாலையாக விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டது. இதற்கான பணிகள் கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கியது.

    இந்த சாலையில் மதுரை தல்லாகுளம் முதல் ஊமச்சிகுளம் வரை சுமார் 7.5 கி.மீ. தொலைவுக்கு ரூ.612 கோடியில் பறக்கும் பாலம் அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளது.

    இந்த பறக்கும் பாலத்தின் அடியில் 150 அடி இடைவெளியில் பலமான அஸ்திவாரத்துடன் 268 தூண்கள் கட்டப்பட்டுள்ளன. தூண்களின் இடையே பாலத்தை இணைக்கும் வகையில் கிடைமட்ட வாக்கில் 'கான்கிரீட் கர்டர்கள்' பொருத்தப்பட்டுள்ளன.மதுரை நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும், மதுரையில் இருந்து திருச்சி மற்றும் சென்னைக்கு செல்லும் பயணத் தொலைவை குறைக்கும் வகையிலும் இந்த பறக்கும் பாலமும், நான்குவழிச் சாலையும் அமைக்கப்படுகிறது.

    இந்த பறக்கும் பாலம் வழியாக திருச்சி செல்வோருக்கு 24 கி.மீ. பயண தூரம் குறையும். இதே போல் இந்த பாலத்தின் வழியாக சென்னை செல்வோர்பயண நேரம் 1 மணி நேரம் குறையும்.

    இந்த நிலையில் வருகிற 8-ந் தேதி சென்னையில் இருந்து பிரதமர் மோடி காணொளி வாயிலாக இந்தப் பாலத்தை திறந்து வைக்கிறார். இதனை முன்னிட்டு இன்று (5-ந் தேதி) பறக்கும் பாலத்தில் சோதனை ஓட்டம் நடந்தது. இதையொட்டி வாகன ஓட்டிகள் பறக்கும் மேம்பாலம் வழியாக ஆர்வமுடன் சென்று வருகின்றனர்். இந்தப் பாலம் தமிழகத் திலேயே மிக நீண்ட பாலமாக கட்டப் பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ராமநாதபுரத்தில் பிரதமர் மோடி போட்டியிட கோரி பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர்.
    • கடலாடி வடக்கு ஒன்றிய பா.ஜ.க. தலைவர் கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

    சாயல்குடி

    கடலாடி பா.ஜ.க. சார்பில் முத்தாலம்மன் கோவிலில் பா.ஜ.க. சார்பில் 3-வது முறையாக 2024-ல் பிரதமர் மோடி தலைமையில் பா.ஜ.க. ஆட்சி அமையவும், ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிட கோரியும் 124 பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். கடலாடி வடக்கு ஒன்றிய பா.ஜ.க. தலைவர் கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட செயலாளர் ராமசாமி, மாவட்ட செயலாளர் வெற்றி மாலை, ஆன்மீக பிரிவு மாவட்ட செயலாளர் கதிர்வேல், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பால்சாமி, ஒன்றிய பொதுச் செயலாளர் மாரிமுத்து முன்னிலை வகித்தனர்.

    இதில் மாணவர்களின் சிலம்பாட்டம் நடந்தது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் முருகன், ஒன்றிய பொருளாளர் ஜெயராமலிங்கம், மாவட்ட தரவு மேலாண்மைச் செயலாளர் ஹரிஹரன், ஒன்றிய செயலாளர்கள் முருகன், மேகஜோதி, மூர்த்தி, ஒன்றிய துணைத் தலைவர்கள் சபரிநாதன், முத்துமாரி, மாணிக்க மீனாள் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.