search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "conference"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கன்னியாகுமரியில் மாநாட்டு பிரசார மோட்டார் சைக்கிள் வாகன பேரணியை தொடங்கி வைத்தார்.
    • வழிநெடுகிலும் மேளதாளங்கள் முழங்க, பட்டாசு வெடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

    வேதாரண்யம்:

    அடுத்த மாதம் (டிசம்பர்) 17-ந்தேதி சேலத்தில் தி.மு.க. இளைஞரணி மாநாடு இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது.

    இதனையொட்டி, அவர் கன்னியாகுமரியில் மாநாட்டு பிரசார மோட்டார் சைக்கிள் வாகன பேரணியை கடந்த வாரம் தொடங்கி வைத்தார்.

    வேதாரண்யம் பகுதிக்கு வந்த தி.மு.க. இளைஞரணி மோட்டார் சைக்கிள் பிரசார குழுவினருக்கு நாகை மாவட்ட செயலாளரும், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவருான கவுதமன் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இந்நிகழ்வில் வேதாரண்யம் நகர்மன்ற தலைவரும், தி.மு.க. நகர செயலாளருமான புகழேந்தி, மேற்கு ஒன்றிய செயலாளர் உதயம் முருகையன், கிழக்கு ஒன்றிய செயலாளர் சதாசிவம், பொதுக்குழு உறுப்பினர் பழனியப்பன், தலைஞாயிறு பேரூர் செயலாளர் சுப்ரமணியன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் துரை ராசு, மாவட்ட இளை ஞரணி அமைப்பாளர் அசோக்குமார், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் தாமோதரன், மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் ரவிச்சந்திரன், தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் தமிழரசி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், சார்பு அணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். பேரணி குழுவினருக்கு வழிநெடுகிலும் மேளதா ளங்கள் முழங்க, பட்டாசு வெடிக்கப்பட்டும், இனிப்பு வழங்கியும், மலர் தூவி உற்சாக வரவேற்பு அளிக்க ப்பட்டது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அடுத்த மாதம் 17 ம் தேதி சேலத்தில் தி.மு.க. இளைஞர் அணி மாநில மாநாடு நடைபெற உள்ளது.
    • வானவேடிக்கை, கிராமிய இசையுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    அடுத்த மாதம் 17 ம் தேதி சேலத்தில் தி.மு.க. இளைஞர் அணி மாநில மாநாடு நடைபெற உள்ளது.

    இந்த மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுக்கும் வகையில், கன்னியாகுமரியில் இருந்து இளைஞர் அணி சார்பில் இருசக்கர வாகன பேரணி தொடங்கப்பட்டது.

    இந்த வாகன பேரணி பல்வேறு மாவட்டங்கள் வழியாக சென்று நேற்று தஞ்சாவூர் மாவட்டம் கல்லணையை வந்தடைந்தது.

    பின்னர் அங்கிருந்து திருவையாறு, கும்பகோணம், பாபநாசம், வழியாக இரவு தஞ்சை புன்னை நல்லூர் மாரியம்மன் கோவில் பகுதிக்கு வந்தடைந்தது.

    தொடர்ந்து தொம்பன் குடிசை பகுதிக்கு வருகை தந்த இருசக்கர வாகன பேரணியை தஞ்சை மத்திய மாவட்ட தி.மு.க செயலாளர் துரை. சந்திரசேகரன் எம்.எல்.ஏ., எஸ். எஸ்.பழநிமாணிக்கம் எம்.பி, டி.கே.ஜி.நீலமேகம் எம்.எல்.ஏ., மாநகராட்சி மேயர் சண்.இராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    இந்நிகழ்ச்சியில் வான வேடிக்கை, கிராமிய இசையுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    அதனை தொடர்ந்து புதிய பஸ் நிலையம் சென்ற இரு சக்கர வாகன பேரணிக்கு தி.மு.க.வினர் மலர் தூவி உற்சாக வரவேற்பளித்தனர்.

    பின்னர் தஞ்சை பெரிய கோவிலில் இருந்து வாகன பேரணி புறப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. மகேஷ் கிருஷ்ணசாமி, மாவட்ட பொருளாளர் எல்.ஜி. அண்ணா , ஒன்றிய செயலாளர் முரசொலி, மாவட்ட துணை செயலாளர் கனகவல்லி பாலாஜி, மண்டலக்குழு தலைவர் மேத்தா, பகுதி செயலாளர்கள் கார்த்திகேயன், சதாசிவம், நீலகண்டன், கோட்டை பகுதி சுரேஷ், வார்டு கவுன்சிலர்கள், நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தி.மு.க. இளைஞரணி மாநாடு இந்தியாவை திரும்பி பார்க்க வைக்கும் மாநாடாக அமையும்.
    • மேலூரில் நடந்த இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் மூர்த்தி பேசினார்.

    மேலூர்

    மதுரை வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மேலூர் நகர், கிழக்கு ஒன்றியம், வடக்கு ஒன்றியம், தெற்கு ஒன்றியம், கொட்டாம்பட்டி கிழக்கு ஒன்றியம், தெற்கு ஒன்றியம், மேற்கு ஒன்றியம், அ.வல்லாளபட்டி பேரூ ராட்சி சார்பில் பூத் கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் இளைஞர் அணி செயல்வீ ரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு மதுரை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளரும், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சருமான பி.மூர்த்தி தலைமை தாங்கினார். அப் போது அவர் வருகிற டிசம்பர் 17-ந்தேதி சேலத் தில் நடைபெறவுள்ள தி.மு.க. இளைஞரணி மாநில மாநாடு குறித்து மேலூர் தொகுதி தி.மு.க. இளைஞரணி நிர்வாகிகளி டம் இந்த ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.

    மேலும் இந்த கூட்டத்தில், இளைஞர் அணி பூத் கமிட்டி பொறுப்பாளர்களை நேரி டையாக அழைத்து சரி பார்ப்பு நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து, அமைச்சர் மூர்த்தி பேசியதா வது:-

    சேலத்தில் நடைபெற உள்ள இளைஞர் அணி மாநாட்டிற்கு, மதுரை மாவட்டத்தில் இருந்து அதிகப்படியான இளைஞர் கள் கலந்து கொள்ள வேண் டும். அதற்காக மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளி லும் செயல்வீரர்கள் கூட்டம் நடத்தப்பட்டு பொறுப்பா ளர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். சேலத்தில் நடைபெற உள்ள இளைஞர் அணி மாநாடு இந்தியாவை திருப்பி வைக்கின்ற மாநாடாக அமையும்.

    இந்தியா கூட்டணி அமைந்ததற்கு முக்கிய காரணம் நமது தமிழக முதலமைச்சர். அதனால் தான் அதில் பங்கேற்று உள் ளார். வருகின்ற நாடாளு மன்ற தேர்தல் வெற்றி, வரும் சட்டமன்ற தேர்தலுக்கு முன்னோடியாக அமையும். அதனால் கழக நிர்வாகிகள் துடிப்புடன் பணியாற்ற வேண்டும் என்றார்.

    இந்நிகழ்ச்சியில் சோழ வந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், மாநில விவசாய தொழிலாளர் அணி துணைச் செயலாள ரும், மேலூர் பொறுப்பாளர் வ.து.ந.ஆனந்த், மாவட்ட அவைத் தலைவர் பால சுப்பிரமணியன், மாவட்ட கழக பொருளாளர் சோம சுந்தரம், மேலூர் நகர செய லாளரும், நகர்மன்ற தலைவ ருமான முகமது யாசின், மேலூர் வல்லாளபட்டி பேரூராட்சி சேர்மன் குமரன்,

    ஒன்றிய செயலாளர்கள் ராஜேந்திர பிரபு, பால கிருஷ்ணன், ராஜராஜன், கிருஷ்ணமூர்த்தி, பழனி, வல்லாளப்பட்டி கார்த்தி கேயன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் செல்வராஜ், சுபைதா அப்பாஸ், முன் னாள் ஒன்றிய செயலாளர் புகழேந்தி, மாவட்ட தொண் டரணி அமைப்பாளர் நாவி னிபட்டி வேலாயுதம், மாவட்ட கவுன்சிலர் நேரு பாண்டியன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அமைப்பாளர் அழகு பாண்டி, கவுன்சிலர் அலாவு தீன், முருகானந்தம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. முன்னிலை வகிக்கிறார்.
    • மாநாட்டில் நிறைவாக சோனியா காந்தி விழா பேரூரையாற்றுகிறார்.

    சென்னையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மகளிரணி நடத்தும் மகளிர் உரிமை மாநாடு தொடங்கியது. இதில், தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. முன்னிலை வகிக்கிறார்.

    இந்த மாநாட்டில் "இந்தியா" கூட்டணியை சேர்ந்த முன்னணி தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். குறிப்பாக, இந்த மாநாட்டில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியும் மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான மெகபூபா முப்தி, ஐக்கிய ஜனதாதள தேசிய நிர்வாக குழு உறுப்பினரும் பீகார் மாநில மந்திரியுமான லெஷிசிங், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினர் சுபாஷினி அலி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நிர்வாக குழு உறுப்பினர் ஆனிராஜா, ஆம் ஆத்மி கட்சி தேசிய நிர்வாக குழு உறுப்பினர் ராக்கி பிட்லன், திரிணாமுல் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுஷ்மிதா தேவ், சமாஜ்வாடி எம்.பி. டிம்பிள் யாதவ், தேசியவாத காங்கிரஸ் கட்சி செயல் தலைவர் சுப்ரியா சுலே ஆகியோர் பங்கேற்று உரையாற்ற உள்ளனர்.

    மாநாட்டில் நிறைவாக சோனியா காந்தி விழா பேரூரையாற்றுகிறார்.

    இந்நிலையில், மாநாட்டில் மகளிர் உரிமை மாநாட்டில் தேசியநாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் சுப்ரியா சுலே உரையாற்றினார்.

    அப்போது அவர் கூறுகையில்," மொழிக்கும், சமூக நீதிக்கும் பிரச்சினை என்றால் திமுக குரல் கொடுக்கும். மக்கள் பிரச்சினைக்காக முதலில் போராடும் கட்சி திமுக. பிரச்சினைகளுக்காக பாராளுமன்றத்திலும் திமுகவின் குரல் ஒலிக்கும். மொழியால் ஒன்றிணைந்தவர்கள் தமிழர்கள்" என்று குறிப்பிட்டார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • புதுவை சிந்தனையாளர் பேரவை தலைவர் கோ.செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-
    • கடந்த 29-ம் தேதி முதல்-அமைச்சர் தலைமையில் மாநாடு சம்பந்தமாக ஆலோசனை நடந்தது.

    புதுச்சேரி*

    புதுவை சிந்தனையாளர் பேரவை தலைவர் கோ.செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுச்சேரி அரசு சார்பில் உலகத்தமிழ் மாநாடு நடத் தப்படும் என கடந்த பட் ஜெட்டில் அறிவிக்கப்பட் டது. 6 மாதம் கழித்து, கலை பண்பாட்டு துறைமூலம், கடந்த 29-ம் தேதி முதல்-அமைச்சர் தலைமையில் மாநாடு சம்பந்தமாக ஆலோசனை நடந்தது.

    புதுச்சேரியின் இலக்கிய ஆளுமை உலகம் அறிந்து கொள்ள செய்யும் இந்த முன்னெடுப்பை வரவேற் கிறோம். புதுச்சேரியில் தலைசிறந்த தமிழ் அறிஞர்கள் மற்றும் தமிழ் வளர்ச்சிக்கு பாடுபடும் இயக்கங்களை கூட்டத்திற்கு அழைக்கா மல் புறக்கணிப்பு செய்தது கண்டனத்திற்கு உரியது.

    உலகத் தமிழ் மாநாடு கலை பண்பாட்டு துறை சார்பில் அல்லாமல் புதி தாக தமிழ் வளர்ச்சி துறையை உருவாக்கி அதன் மூலம் நடத்தினால் உலகம் முழுதும் பாராட் டும். தமிழ் வளர்ச்சித் துறையை தொடங்கும் ஆணையை உடனடியாக வெளியிட வேண்டும்.

    இதனை மறுக்கும் பட்சத்தில் சிந்தனை யாளர்கள்பேரவை போராட்டங்களை நடத்தும். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சர்வதேச தரத்தில் 100 கட்டுரைகள் எதிர்வரும் டிசம்பரில் உள்ளீடு செய்யப்படும்.
    • அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 28-ந் தேதி மாநாடு நடத்தப்படும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக அறிவியல் தமிழ் மற்றும் தமிழ்வளர்ச்சித்துறையும் தமிழ் விக்கிப்பீடியாவும் இணைந்து கல்வியாளர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி ஒருநாள் பயிலரங்கு நடைபெற்றது.

    தமிழ் மற்றும் தமிழ் வளர்ச்சித்துறைப் பேராசிரியர் முனைவர் இந்து வரவேற்றார்.

    வளர்தமிழ்ப்புல முதன்மையர் குறிஞ்சிவேந்தன் முன்னிலை வகித்தார்.

    இந்த பயிலரங்கை துணைவேந்தர் திருவள்ளுவன் தலைமை தாங்கி தொடங்கி வைத்து பேசியதாவது;-

    விக்கிப்பீடியா என்னும் இணையப்பக்கத்தில் பொதிந்துள்ள தமிழ்க் கருத்து கருவூலங்களை இன்றைக்கு உலகின் எந்த மூலையில் வாழும் தமிழரும் வாசித்தறியும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

    இருபதாண்டுகளுக்கு முன்புவரை இத்தகைய வசதிகள் இல்லாத நாட்களில், ஒரு சிறு தகவலுக்காகக் கூட நூலகங்களைத் தேடி ஓடிக் கொண்டிருந்தோம். ஆனால் இன்றைக்கு உள்ளங்கையில் தகவல்கள் வந்து அமரும் சூழலை விக்கிப்பீடியா தமிழ்ப்பக்கம் உருவாக்கியுள்ளது.

    நாம் இத்தனை முன்னேற்றங்களைக் கொண்டிருந்தாலும், விக்கிப்பீடியாவின் ஆங்கிலப்பக்கத்துக்கு இணையாக, தமிழையும் கொண்டுச் செல்ல வேண்டிய கடமை உள்ளது.

    அதனை மேம்படுத்தும் வகையில், தமிழ்ப்பல்கலைக்கழக ஆய்வாளர்களைக் கொண்டு.

    தமிழில் இதுவரை வெளிவராத தகவல்களை மையப்படுத்தி, சர்வதேசத் தரத்தில் 100 கட்டுரைகள் எதிர்வரும் டிசம்பரில் உள்ளீடு செய்யப்படும்.

    விக்கிப்பீடியா தமிழ்த்தளத்தை வலிமையுடன் கட்டமைக்கும் வகையில், முதலாவது உலகத் தமிழ் விக்கிப்பீடியா மாநாட்டினை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 28-ந் தேதி தமிழ்ப் பல்கலைக்கழக அறிவியல் தமிழ் மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை ஆகியவை இணைந்து தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக, அறிவியல் தமிழ் விக்கிப்பீடியா நிர்வாகப் பொறுப்பாளர் மூர்த்தி நோக்கவுரையையும், அறிவியல் தமிழ் மற்றும் தமிழ் வளர்ச்சித்துறைத் தலைவரும் பதிவாளருமான பேராசிரியர் தியாகராஜன் வாழ்த்துரையும் வழங்கினர்.

    இப்பயிலரங்கில் தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, நாமக்கல் மற்றும் கர்நாடக மாநில மைசூர் ஆகிய இடங்களில் உள்ள நிறுவனங்களில் இருந்து வந்திருந்த 80 கல்வியாளர்கள் மற்றும் 20 மாணவர்கள் உள்ளிட்டோருக்கு விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் உள்ளீடு செய்தல், புதிய தலைப்புகளில் வெளிவராக தரவுகளைச் சேர்த்தல் ஆகியவை குறித்துப் பயிற்சிகள் வழங்கப்பட்டன.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைப் பல்கலைக்கழக மக்கள் தொடர்பு அலுவலர் முருகன் செய்திருந்தார்.

    விக்கிப்பீடியா சார்பில் பயிலரங்கினை முனைவர் மாரியப்பன் ஒருங்கிணைத்தார்.

    நிகழ்ச்சியின் நன்றியுரையை விக்கிப்பீடியா குழுமத்தைச் சேர்ந்த ஸ்ரீ பாலசுப்ரமணியன் கூறினார். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அண்ணா நூற்றாண்டு அரங்கில் வருகிற 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் மாநாடு நடக்கிறது.
    • மாநாட்டில் 10 அறிஞர்களுக்கு உலக பெருந்தமிழர் விருது வழங்கப்படுகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் உலகத்தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :-

    உலகத்தமிழர் பேரமை ப்பின் 10-ம் ஆண்டு மாநாடு தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணா நூற்றாண்டு அரங்கில் வருகிற 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் நடக்கிறது.

    2 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் தமிழ் அறிஞர்களும், தொல்லாய்வு அறிஞர்களும் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.

    முதல் நாள் மாநாட்டுக்கு அரசு தலைமை தாங்குகிறார்.

    சிவசுப்பிரமணியன் தொடக்க உரை ஆற்றுகிறார். 2-ம் நாள் கருத்தரங்கிற்கு தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பால சுப்பிரமணியம் தலைமை தாங்குகிறார்.

    வக்கீல் பானுமதி தொடக்க உரை ஆற்றுகிறார். இதில் பல்வேறு அறிஞர்கள் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.

    மாநாட்டில் தமிழுக்கு அயராது தொண்டாற்றி வரும் 10 அறிஞர்களுக்கு உலக பெருந்தமிழர் விருது வழங்கப்படுகிறது.

    முதல்நாள் விருந்தளிப்பு விழாவிற்கு கவிஞர் காசி ஆனந்தன், 2-ம் நாள் நடைபெறும் விழாவிற்கு சு.வெங்கடேசன் எம்.பி. ஆகியோர் தலைமை தாங்குகிறார்கள்.

    விருதுகளை நான் வழங்குகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ம.தி.மு.க. மாநாட்டு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
    • மாநாடு நடைபெற உள்ள இடத்தை பூமிநாதன் எம்.எல்.ஏ. இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மதுரை

    மதுரை வலையங் குளத்தில் வருகிற 15-ந்தேதி அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு ம.தி.மு.க. சார்பில் மாநில மாநாடு நடைபெற உள்ளது. இதில் அந்த கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ மற்றும் எம்.எல்.ஏ.க்கள், முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசுகின்றனர்.

    மாநிலம் முழுவதும் இருந்து திரளான ம.தி.மு.க. தொண்டர்கள் பங்கேற்க உள்ளனர். இதையொட்டி வலையங்குளத்தில் பிரமாண்ட மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளது. இதனை பூமிநாதன் எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ஆய்வின்போது மாநகர் மாவட்ட செயலாளர் முனியசாமி, புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் மார்நாடு, தெற்கு மாவட்ட செயலாளர் ஜெயராமன் பொருளாளர் சுருதி ரமேஷ்.பார்வையிட்டடனர். இதில் நிர்வாகிகள் சுப்பையா, கீரைத்துரைபாண்டியன் பாஸ்கரசேதுபதி, பச்சமுத்து. புகழ்முருகன், மாயழகு., அய்யனார். காளிமுத்து முத்துலெ ட்சுமி.. கரு.சுந்தர், அன்னமுகமது, கவுரி மகேஷ், திருப்பரங்குன்றம் முருகேசன் ஆகியோர் உடனிருந்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மாலையில் அய்யா நாராயணசுவாமியின் வாகன பவனி இடம்பெற்றது
    • ஸ்ரீகுரு சிவசந்திரர் வாகன பவனியை தொடங்கி வைத்தார்.

    களக்காடு:

    களக்காட்டில் வட்டார அய்யாவழி மக்கள் மாநாட்டுக்குழு சார்பில் அய்யா வழி 8-வது மாநாடு நடந்தது. இதையொட்டி மதியம் 12 மணிக்கு உச்சிப்படிப்பும், அதனைதொடர்ந்து அன்ன தானமும் வழங்கப்பட்டது.

    திருஏடு வாசிப்பு

    தொடர்ந்து திருஏடு வாசித்து விளக்கம் கொடுக்கப்பட்டது. அதன் பின் மாலையில் அய்யா நாராயணசுவாமியின் வாகன பவனி இடம்பெற்றது. சிறப்பு பணிவிடைகளுக்கு பின் அய்யா நாராயணசுவாமி வாகனத்திற்கு எழுந்தருளினார். ஸ்ரீகுரு சிவசந்திரர் வாகன பவனியை தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க அய்யா நாராயண சுவாமி களக்காடு ரதவீதிகளில் உலா வந்தார். இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

    பின்னர் மாநாடு நடைபெற்றது. முன்னள் எம்.பி. ஜெயத்துரை தலைமை தாங்கினார். வள்ளியூர் அய்யாவழி அகில திருக்குடும்ப மக்கள் சபை தலைவர் தர்மர், முன்னாள் காங்கிரஸ் மாவட்ட தலைவர் தமிழ்செல்வன், அரிசிவராமன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். பணகுடி சுரேஷ் நாரணமே வைகுண்டம் என்ற தலைப்பிலும், சிறயன்விளை சாந்தகுமாரி, அகிலத் திரட்டில் வாழ்வியல் கருத்து என்ற தலைப்பிலும் பேசினர்.

    அருள் இசை வழிபாடு

    தொடர்ந்து ஸ்ரீகுருசிவசந்திரரின் அருள் இசை வழிபாடும் நடந்தது. ஏற்பாடுகளை அய்யாவழி மாநாட்டு குழு தலைவர் சங்கரன், துணை தலைவர் ராமலிங்கம், ஒருங்கிணைப்பா ளர் பால்சாமி, செயலாளர் சுப்பிரமணியன், பொருளாளர் சண்முகநாதன், இணை செயலாளர்கள் முத்துப்பாண்டி, சொர்ணலிங்கம், முத்துராஜ், கார்த்திக் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • எழுச்சி மாநாடு அ.தி.மு.க. தொண்டர்கள் குடும்பமாக திரண்டு வர வேண்டும்.
    • செல்லூர் ராஜூ அழைப்பு விடுத்துள்ளார்.

    மதுரை

    மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது-

    கழகத்தின் பொது செயலாளர் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடியாரின் தலை மையில் கழகத்தின் வீர வரலாற்றின் எழுச்சி மாநாடு மதுரை வளையங் குளம் பகுதியில் நாளை காலை மிகப் பிரமாண்டமாக நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதும் இருந்து கழக கண்மணிகள் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி அம்மாவின் உண்மை விசுவாசிகள், தலைமைக் கழக நிர்வாகிகள், கடைகோடி தொண்டர்கள் அனைவரும் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி யாரின் சீரிய தலைமையில் பங்கேற்கிறார்கள்.

    இந்த எழுச்சிமிகு மாநாட்டில் மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகி கள் அனைவரும் குடும்பம் குடும்பமாக பங்கேற்று சிறப்பிக்க வேண்டுகிறேன். மேலும் மாநாட்டின் காலை முதல் மாலை வரை அனைத்து நிகழ்ச்சிகளையும் கண்டு கழித்து மாநாட்டின் இறுதி வரை பங்கேற்கும் வகையில் மாநகர் மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் கட்டுக்கோப்போடு எடப்பாடியாரின் ஆணை யை நிறைவேற்றும் சிப்பாய் களாக கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.