என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kn nehru"

    • ஆள்தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது.
    • எந்தத் தவறும் செய்யவில்லை என அந்த துறையின் அமைச்சர் கே.என்.நேரு விளக்கம் அளித்தார்.

    தமிழ்நாடு அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறைக்கு 2,538 பணியாளர்கள் நியமன ஆள்தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது.

    ஒவ்வொரு பணிக்கும் ரூ.35 லட்சம் வரை லஞ்சம் பெறப்பட்டிருப்பதற்கான ஆதாரங்கள் சிக்கியுள்ளதாகவும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தும்படி தமிழக காவல்துறைக்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதியது.

    அரசு வேலை பணி நியமனத்தில் முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் புகாரில், எந்தத் தவறும் செய்யவில்லை என அந்த துறையின் அமைச்சர் கே.என்.நேரு விளக்கம் அளித்தார்.

    இந்நிலையில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறைக்கு ஆள்தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றது தொடர்பான வழக்கில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய தமிழக காவல்துறைக்கு உத்தரவிடக் கோரி அமலாக்கத் துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

    • தேர்தல் ஆணையம் தன் நடுநிலை தன்மையை இழந்துவிட்டதற்குத் தொடர்ச்சியாக நிறைய நிகழ்வுகள் நடந்து வருகின்றன.
    • பா.ஜ.க.வின் நடவடிக்கைகளுக்குத் துணை போவதாகத் தேர்தல் ஆணையம் மாறிவிடக் கூடாது.

    தி.மு.க. முதன்மை செயலாளரும் அமைச்சருமான கே.என்.நேரு வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    எஸ்.ஐ.ஆர். என்ற வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் அனைத்து மாநிலங்களிலும் விரைவில் செயல்படுத்தப்படும் எனத் தலைமைத் தேர்தல் ஆணையர் தெரிவித்திருக்கிறார்.

    இந்தியா கூட்டணி சார்பில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வாக்காளர் பட்டியல் முறைகேடு தொடர்பாக ஆதாரங்களோடு தொடர்ந்து எழுப் பிய கேள்விகளுக்குத் தேர் தல் ஆணையம் இதுவரை உரிய பதிலை அளிக்க வில்லை.

    ஆட்சிகளை மாற்றி அமைப்பது ஜனநாயகத்தின் இறுதி எஜமானர்களான வாக்காளர்களின் உரிமை. அதனைத் தேர்தல் ஆணையம் கையில் எடுப்பது, ஒன்றிய அரசுக்கு ஆதரவாகச் செயல்படுவது ஜனநாயகத்தைக் குழி தோண்டிப் புதைப்பதற்குச் சமம். அந்தச் செயலைத் தமிழ்நாடு நிச்சயம் அனுமதிக்காது.

    பீகாரைப் போலத் தற்போது எஸ்.ஐ.ஆர். என்ற பெயரில் தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் சதித் திட்டம் ஏதேனும் செயல்படுத்த ஒன்றிய பா.ஜ.க. அரசு முயன்றால், அதற்கு எதிராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு ஒன்று சேர்ந்து போராடும். தமிழ்நாட்டு மக்களை நேர் நின்று வீழ்த்த முடியாத எதிரிகளும் துரோகிகளும் குறுக்கு வழியைக் கையாண்டு வென்றிடலாம் எனப் பகல் கனவு காண்கிறார்கள். அதற்குத் தமிழர்கள் தக்கப் பதிலடி கொடுப்பார்கள். எஸ்.ஐ.ஆர். என்ற அநீதிக்கு எதிராகத் தமிழ்நாடு போராடும். தமிழ்நாடு வெல்லும்.

    மோடி அரசு அமைந்த பிறகு தன்னாட்சி அதிகா ரங்கள் கொண்ட சி.பி.ஐ, ஆர்.பி.ஐ, சி.ஏ.ஜி, என்.ஐ.ஏ, வருமானவரித் துறை, அமலாக்கத் துறை, நிதி ஆயோக் அமைப்புகள் ஒன்றிய அரசின் கைப்பா வையாக மாறின.

    இந்த வரிசையில் தேர்தல் ஆணையமும் ஒன்றிய அரசின் கண் அசைவுக்கு ஏற்ப நடக்க ஆரம்பித்தி ருக்கிறது. தேர்தல் ஆணையம் தன் நடுநிலை தன்மையை இழந்துவிட்டதற்குத் தொடர்ச்சியாக நிறைய நிகழ்வுகள் நடந்து வருகின்றன.

    உதாரணமாக ஒன்றைச் சொல்ல வேண்டுமென்றால், கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தல் தேதி முன்கூட்டியே பிரதமர் மோடிக்குத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதனால்தான் முதல் கட்ட தேர்தல் நடந்த தமிழ்நாட்டில் பல்லடம், மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, சென்னை, கன்னியாகுமரி ஆகிய இடங்களில் முன் னரே பிரச்சாரக் கூட்டங் களை நடத்தி விட்டு போனார் பிரதமர் மோடி. இதன் மூலம் தேர்தல் தேதி ரகசியத்தைத் தேர்தல் ஆணையம் காக்கத் தவறியது அப்பட்டமாகவே வெளிப் பட்டது.

    பீகாரில் பல லட்சக்க ணக்கானவர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து ஏன் நீக்கினார்கள்? அதி லிருந்து சில லட்சக்க ணக்கானோரை மீண்டும் ஏன் சேர்த்தார்கள்? என்பதற்குத் தேர்தல் ஆணையம் தெளிவான பதில் அளிக்க வில்லை.

    ஜனநாயகத்தின் ஆணிவே ரான தேர்தலை நேர்மை யோடு நடத்துவதே தேர்தல் ஆணையத்தின் தலையாய பணி. ஆனால், தேர்தல்களில் தில்லுமுல்லு செய்து வெற்றியை ஈட்ட முனையும் பா.ஜ.க.வின் நடவடிக்கைகளுக்குத் துணை போவதாகத் தேர்தல் ஆணையம் மாறிவிடக் கூடாது.

    பீகாரில் கடைப்பிடிக் கப்பட்ட தில்லு முல்லுகளை போல தமிழ்நாட்டிலும் செயல்படுத்தத் திட்ட மிட்டிருக்கிறார்கள். கள ஆய்வு மேற்கொள்ளப்படா மலேயே நமது வாக்கா ளர்களை நீக்கவும் வெளி வாக்காளர்களைச் சேர்க்க வும் முயற்சிகள் நடக்கலாம். இந்தச் சதியைத் தமிழ்நாடு ஒன்று திரண்டு போராடும்.

    இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

    • போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்களை இதுவரை 4 முறை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ளேன்.
    • எந்த தூய்மை பணியாளரையும் பணியை விட்டு நீக்கவில்லை.

    தூய்மை பணிகள் தனியார் மயமாக்கப்பட்டதை கண்டித்து சென்னை மாநகராட்சி முன்பு கடந்த 1-ந் தேதி முதல் தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    தூய்மை பணியில் ஈடுபட்டு வந்த பணியாளர்கள் அனைவரும் சென்னை மாநகராட்சி முன்பு உள்ள நடைபாதையில் தற்காலிக பந்தல்களை அமைத்து இரவு பகலாக அங்கேயே தங்கியிருந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தூய்மை பணியாளர்கள் போராட்டம் இன்று 12-வது நாளை எட்டி உள்ளது.

    போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்கள் உடனடியாக பணிக்கு திரும்புமாறு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.

    பொதுநலம் கருதி, பணி பாதுகாப்பு குறித்த உண்மை நிலையை அறிந்து பணிக்கு திரும்புமாறு தூய்மை பணியாளர்களுக்கு சென்னை மாநாகராட்சியும் வலியுறுத்தி உள்ளது.

    இதற்கிடையே, சென்னை மாநகராட்சியின் அழைப்பை தூய்மை பணியாளர்கள் புறக்கணித்து உள்ளனர்.

    போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்கள், எங்கள் துறை அமைச்சரான கே.என்.நேரு எங்கே? என்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை துறை அமைச்சரான நேரு சந்திக்காதது ஏன்? என்று கேள்வி எழுப்பி இருந்தனர்.

    இந்நிலையில், தூய்மை பணியாளர்களின் குற்றச்சாட்டை மறுத்த அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களிடம் கூறுகையில்,

    போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்களை இதுவரை 4 முறை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ளேன். 4 நாட்களாக நான்தான் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறேன்.

    எந்த தூய்மை பணியாளரையும் பணியை விட்டு நீக்கவில்லை. சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் விவகாரத்தில் முதலமைச்சர் விரைவில் நல்ல முடிவு எடுப்பார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பாளையங்கோட்டை காந்தி மார்க்கெட் கடைகள் ஒதுக்கீடு தொடர்பாக ஏற்கனவே வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி முடிக்கப்பட்டது.
    • சிறப்பான முறையில் இந்த ஆண்டு தேரோட்டம் நடத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் முகாம் பாளையங்கோட்டை முருகன்குறிச்சியில் உள்ள நூற்றாண்டு மண்டபத்தில் இன்று காலை நடைபெற்றது.

    இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சரும், நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சருமான கே.என்.நேரு கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.

    தொடர்ந்து நிருபர்களிடம் அமைச்சர் கே.என்.நேரு கூறியதாவது:-

    தி.மு.க.வை ஆட்சியில் இருந்து அகற்றுவேன் என சொல்லித்தான் நயினார் நாகேந்திரன் மாநில தலைவராகி உள்ளார். அவர் தலைவராக வருவதற்கு முன் எங்களிடம் என்ன பேசினார் என்பதை பொது வெளியில் சொல்ல முடியாது.

    அவர்கள் முதலில் அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணிக்குள் இருக்கும் பிரச்சனையை சரி செய்துவிட்டு கூட்டணி ஆட்சியா? தனித்து ஆட்சி அமைப்பார்களா? என்பதை முடிவு செய்துவிட்டு எங்களை பற்றி பேசட்டும்.

    பாளையங்கோட்டை காந்தி மார்க்கெட் கடைகள் ஒதுக்கீடு தொடர்பாக ஏற்கனவே வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி முடிக்கப்பட்டது. பொதுப்பணித்துறையால் நிர்ணயம் செய்யப்பட்ட வாடகையை வழங்கி அவர்கள் கடையை எடுத்துக் கொள்ளலாம் என தெரிவித்து விட்டோம். ஆனால் தனிநபர் ஒருவர் தொடர்ந்து நீதிமன்ற வழக்கு காரணமாக இந்த பிரச்சனை எழுந்துள்ளது. தற்போது அந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி சார்பில் மேல்முறையீடு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. போராட்டத்தை கைவிடுவது தொடர்பாக வியாபாரிகளிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

    வருகிற 8-ந்தேதி நடைபெறும் நெல்லையப்பர் கோவில் தேரோட்டத்திற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. சிதலமடைந்த சாலைகளை செப்பனிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சிறப்பான முறையில் இந்த ஆண்டு தேரோட்டம் நடத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கே.என். ரவிச்சந்திரனை நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் அலுவலகம் அழைத்து சென்று விசாரித்தனர்.
    • 5 கிரவுண்ட் நிலம் வாங்கியது தொடர்பான ஆவணங்களை வைத்து நேற்று விசாரணை நடந்தது.

    தமிழக அமைச்சர் கே.என்.நேருவின் மகனும் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி எம்.பி.யுமான அருண் நேரு மற்றும் அமைச்சரின் சகோதரர் ரவிச்சந்திரனுக்கு தொடர்புடைய 4 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள கே.என்.ரவிச்சந்திரன் வீட்டில் 3 நாளாக நடைபெற்று வந்த அமலாக்கத்துறை சோதனை நிறைவு பெற்றுள்ளது.

    கே.என்.ரவிச்சந்திரன் வீட்டில் சோதனை செய்த அமலாக்கத்துறை அதிகாரிகள் அனைவரும் புறப்பட்டு சென்றனர்.

    அவரது வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட சில முக்கிய ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் எடுத்து சென்றனர்.

    கே.என். ரவிச்சந்திரனை நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் அலுவலகம் அழைத்து சென்று விசாரித்தனர்.

    5 கிரவுண்ட் நிலம் வாங்கியது தொடர்பான ஆவணங்களை வைத்து நேற்று விசாரணை நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    • நகராட்சிகளில் ரூ.142.68 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையங்கள் கட்டப்படும் என்று தெரிவித்தார்.
    • 11 பேரூராட்சிகளிலும் ரூ.49 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்கப்படும் என்றார்.

    நகராட்சி நிர்வாகத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு உரையாற்றினார்.

    அப்போது அவர், 19 புதிய பேருந்து நிலையங்கள் அமைக்கப்படும் என அறிவித்தார்.

    விவாதங்கள் மீது பதிலுரை வழங்கி அமைச்சர் இதுகுறித்து மேலும் கூறியதாவது:-

    கும்பகோணம் மாநகராட்சி, அம்பாசமுத்திரம், ஆம்பூர், கள்ளக்குறிச்சி, சாத்தூர், செங்கல்பட்டு, திருக்கோவிலூர், திருச்செந்தூர் ஆகிய நகராட்சிகளில் ரூ.142.68 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையங்கள் கட்டப்படும் என்று தெரிவித்தார்.

    மேலும், பாலப்பள்ளம், நாட்டரசன்கோட்டை, புதுப்பாளையம், ஆரணி, குன்னத்தூர், உடன்குடி, ஏர்வாடி, கும்மிடிப்பூண்டி, பரமத்தி, திருபுவனம், பருகூர் ஆகிய 11 பேரூராட்சிகளிலும் ரூ.49 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அம்மா உணவகத்தில் போதிய வருவாய் இல்லை.
    • சேலம் மாநகரில் எங்கும் குப்பை இல்லாத நிலை ஏற்படுத்தப்படும்.

    சேலம் :

    சேலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்த அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மாநகராட்சியில் குப்பை உற்பத்தியாகும் இடத்திலேயே மக்கும் குப்பை மக்காத குப்பையாக தரம் பிரித்து தரப்படுகிறது. மக்காத குப்பைகள் தொழிற்சாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. மக்கும் குப்பைகள் உரமாக மாற்றி விவசாயிகளுக்கு வழங்கப்படும். பாதாள சாக்கடை திட்டத்தின் கழிவுநீரை மறுசுழற்சி செய்து நிலத்தடி நீர்மட்டத்தை பெருக்கும் வகையில் மாற்றப்படும். சேலம் மாநகராட்சிக்கு தேவையான குப்பை எடுக்கும் வாகனங்கள் மற்றும் குப்பை தொட்டிகள் வழங்கப்பட்டுள்ளது. எனவே, சேலம் மாநகரை குப்பையில்லா நகரமாக மாற்றும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இந்தூர், சத்தீஸ்கார் ஆகிய இடங்களுக்கு மேயர், நகராட்சி தலைவர்களை அழைத்து சென்று அங்கு பின்பற்றப்படும் தூய்மை நடவடிக்கைகளை இங்கு செயல்படுத்த உள்ளோம். இதன்மூலம் அடுத்த ஓராண்டில் சேலம் மாநகரில் எங்கும் குப்பை இல்லாத நிலை ஏற்படுத்தப்படும்.

    சேலத்தில் அம்மா உணவகத்தை மூடும் திட்டம் அரசுக்கு எதுவும் இல்லை. அங்கு கூடுதல் பணியாளர்களை பணியில் அமர்த்தியதால் சம்பளம் வழங்குவதில் சிக்கல் உள்ளது. அம்மா உணவகத்தில் போதிய வருவாய் இல்லை. இதனால் சுழற்சி முறையில் அம்மா உணவகங்களில் பெண்கள் பணியாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. யாரையும் பணி நீக்கம் செய்யவில்லை. அம்மா உணவகம் தொடர்ந்து செயல்படும் என்று ஏற்கனவே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துவிட்டார். சேலம் மாநகராட்சிக்கு போதுமான நிதி உள்ளது. தேவையான நிதியை முதல்-அமைச்சர் வழங்கி வருகிறார்.

    இவ்வாறு அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.

    • எங்களுக்கு அதை பற்றி எதுவும் கவலையில்லை.
    • நாங்கள் தேர்தல் வேலையை ஆரம்பித்து விட்டோம்.

    ஈரோடு :

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். கூட்டணி கட்சிகளில் ஒன்றான மனிதநேய மக்கள் கட்சி சார்பில் தேர்தல் பணிமனை திறப்பு விழா ஈரோடு திருநகர் காலனியில் நேற்று நடைபெற்றது. விழாவில் தேர்தல் பணிமனையை திறந்து வைத்த தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தி.மு.க. கூட்டணி கட்சிகளை எந்த நிலையிலும், எந்த இடத்திலும் தலைவர் மு.க.ஸ்டாலினை விட்டு கொடுத்தது கிடையாது. கூட்டணி கட்சிகள் தி.மு.க.வின் முழு ஒத்துழைப்போடு பணியாற்றி வருகிறது.

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெற்றி பெறுவதற்கு பணியாற்ற கூட்டணி கட்சிகள் உறுதி அளித்து உள்ளார்கள். இதனால் இந்த தேர்தலில் தி.மு.க. வெற்றியடையும் என முழு நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.

    அ.தி.மு.க. ரகசிய கூட்டம் ஈரோட்டில் நடந்து வருகிறது. ஏனென்றால் அவர்களால் வெளிப்படையாக கூட்டம் போட முடியவில்லை. இருந்தாலும் வெளியில் வந்து தானே ஆக வேண்டும். கத்தரி முத்தினால் சந்தைக்கு வந்து தானே ஆக வேண்டும். ரகசிய கூட்டம் போட்டுவிட்டு எங்களிடம் வரட்டுமே. நாங்கள் தேர்தல் வேலையை ஆரம்பித்து விட்டோம். எங்களுக்கு அதை பற்றி எதுவும் கவலையில்லை.

    இவ்வாறு அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.

    • காவல் நிலையத்துக்குள் அத்துமீறி நுழைந்து பெண் போலீஸ் சாந்தியை தள்ளிவிட்டு சிவா ஆதரவாளர்களை நாற்காலிகளை தூக்கி அடித்து தாக்கியதாக கூறப்பட்டது.
    • போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்தல், அரசு சொத்துக்களை சேதப்படுத்துதல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

    திருச்சி:

    திருச்சி மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று அரசு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் பிராட் டியூர் நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு திருச்சி கண்டோன்மென்ட் எஸ்.பி.ஐ. காலனி பகுதியில் நமக்கு நாமே திட்டத்தில் அமைக்கப்பட்ட இறகு பந்து மைதானத்தை திறந்து வைக்க அமைச்சர் கே.என்.நேரு புறப்பட்டு சென்றார்.

    இந்த விழாவில் அப்பகுதியில் வசிக்கும் மேல் சபை எம்.பி. திருச்சி சிவாவின் பெயர் இடம்பெறவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அவரது ஆதரவாளர்கள் அவரின் வீட்டு முன்பு அமைச்சர் கே.என்.நேரு காரை வழிமறித்து கறுப்பு கொடி காட்டினர்.

    இதனால் ஆத்திரமடைந்த நேரு ஆதரவாளர்கள் திருச்சி சிவாவின் வீடு புகுந்து போர்டிகோவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மற்றும் காம்பவுண்டு சுவர்களில் பொருத்தப்பட்டிருந்த விளக்குகளை அடித்து நொறுக்கினர்.

    இந்நிலையில் கருப்புக்கொடி காட்டிய சிலரை திருச்சி செசன்ஸ் கோர்ட் போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இது பற்றி தகவல் அறிந்த நேரு ஆதரவாளர்கள் காவல் நிலையம் முன்பு திரண்டனர். பின்னர் சிலர் காவல் நிலையத்துக்குள் அத்துமீறி நுழைந்து பெண் போலீஸ் சாந்தியை தள்ளிவிட்டு சிவா ஆதரவாளர்களை நாற்காலிகளை தூக்கி அடித்து தாக்கியதாக கூறப்பட்டது. இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களிலும் பரவியது.

    இந்நிலையில் அமைச்சர் கே.என்.நேருவுக்கு கருப்புக்கொடி காட்டியதாக சிலர் மீது ஒரு வழக்கும், சிவா வீடு மீது தாக்குதல் நடத்தியதாக சிலர் மீது இன்னொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டது. ஆனால் போலீஸ் நிலையத்திற்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதாக பெண் போலீஸ் சாந்தி கொடுத்த புகாரின் பேரில் போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தல், அரசு சொத்துக்களை சேதப் படுத்துதல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

    இதில் திருச்சி மாநகராட்சி கவுன்சிலர்களான மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் முத்துச்செல்வம், தலைமை செயற்குழு உறுப்பினர் காஜாமலை விஜய், ராமதாஸ், அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவரும், மாவட்ட தி.மு.க. பொருளாளருமான துரைராஜ், மாநகராட்சி வார்டு பகுதி துணை செயலாளர் திருப்பதி ஆகிய 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

    பின்னர் திருச்சி காஜாமலை நீதிபதிகள் குடியிருப்பில் திருச்சி நீதிமன்ற குற்றவியல் எண் 2 நீதிபதி பாலாஜி முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அதைத் தொடர்ந்து நீதிபதி வருகிற மார்ச் 29-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து 5 பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    • நடந்த சம்பவத்திற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என நேரு கூறினார்.
    • திருச்சி சிவாவை சமாதானப்படுத்திவிட்டு வருமாறு முதல் அமைச்சர் அறிவுறுத்தினார்.

    திருச்சி:

    திருச்சியில் அமைச்சா் கே.என். நேருவுக்கு, கருப்புக் கொடி காட்டியதாகக் கூறி அமைச்சரின் ஆதரவாளா்கள் திருச்சி சிவா எம்.பி.யின் வீட்டில் புதன்கிழமை தாக்குதல் நடத்தினா். திருச்சி சிவாவின் கார், வீட்டு வாசலில் இருந்த பொருட்களை நேருவின் ஆதரவாளர்கள் சேதப்படுத்தினர். இருதரப்பு ஆதரவாளர்களும் மோதிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், எம்.பி. திருச்சி சிவாவை அமைச்சர் கே.என்.நேரு இன்று சந்தித்து பேசினார். திருச்சி எஸ்.பி.ஐ காலணியில் உள்ள இல்லத்தில் திருச்சி சிவாவை அமைச்சர் சந்தித்து பேசினார்.

    இந்த சந்திப்புக்கு பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது திருச்சி சிவா கூறியதாவது:

    நடந்தது நடந்ததாக இருக்கட்டும், இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும். முதல் அமைச்சரின் மனம் சங்கடப்பட்டுவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறோம். நடந்த சம்பவத்திற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என நேரு கூறினார். இவ்வாறு திருச்சி சிவா தெரிவித்தார்.

    கே.என்.நேரு கூறுகையில், 'திருச்சி சிவாவை சமாதானப்படுத்திவிட்டு வருமாறு முதல் அமைச்சர் அறிவுறுத்தினார். திருச்சி சிவா வீட்டில் எனக்கு தெரியாமல் நடக்கக் கூடாத சம்பவங்கள் நடந்துவிட்டது. இருவரும் மனம் விட்டு பேசிவிட்டோம். இனி இதுபோன்று நடக்காது' என தெரிவித்துள்ளார்.

    • நகராட்சிகளை மாநகராட்சிகளாகவும், பேரூராட்சிகளை நகராட்சிகளாகவும் தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.
    • சில ஊராட்சிகளை பேரூராட்சிகளாக தரம் உயர்த்துவதற்கான கோரிக்கைகளும் பரிசீலனையில் உள்ளன.

    தமிழக சட்டசபையில் மானியக் கோரிக்கை விவாத பதிலுரையில் இன்று தமிழக நகராட்சி நிர்வாகம், நகர்ப்புற மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது:-

    நகராட்சிகளை மாநகராட்சிகளாகவும், பேரூராட்சிகளை நகராட்சிகளாகவும் தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.

    ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருவண்ணாமலை, நாமக்கல், காரைக்குடி ஆகிய நகராட்சிகளை, மாநகராட்சிகளாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவை அனைத்தும் முதலமைச்சரின் அனுமதி பெற்று, முயற்சிகள மேற்கொள்ளப்படும்.

    இதேபோல், ஸ்ரீபெரும்புதூர், மாமல்லபுரம், அவிநாசி, பெருந்துறை, கோத்தகிரி, சங்ககிரி, திருவையாறு ஆகிய பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.

    சில ஊராட்சிகளை பேரூராட்சிகளாக தரம் உயர்த்துவதற்கான கோரிக்கைகளும் பரிசீலனையில் உள்ளன.

    2024ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கு பிறகு எந்தெந்த உள்ளாட்சி அமைப்புகளை எங்கு இணைக்கலாம் என முடிவெடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • காவிரி கூட்டுகுடிநீர் திட்டத்தில் உள்ள பழைய மோட்டார்கள் அகற்றப்பட்டு புதிதாக 268 மோட்டார்கள் அமைக்கப்பட உள்ளன.
    • வைகை அணையில் இருந்து நிலக்கோட்டை, திண்டுக்கல், ஆத்தூர் பகுதிகளுக்கு நேரடியாக குடிநீர் வினியோகம் செய்ய ரூ.680 கோடி மதிப்பில் திட்டமிடப்பட்டுள்ளது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல்லில் பல்வேறு திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவிழா இன்று நடைபெற்றது. அதில் கலந்து கொள்ள வந்த அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

    திண்டுக்கல்லில் விடுபட்ட பகுதிகளுக்கான பாதாள சாக்கடை திட்டத்திற்கு ரூ.206 கோடி நிதிஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் திண்டுக்கல் நகருக்கு கூடுதலாக 18 எம்.எல்.டி தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காவிரி கூட்டுகுடிநீர் திட்டத்தில் உள்ள பழைய மோட்டார்கள் அகற்றப்பட்டு புதிதாக 268 மோட்டார்கள் அமைக்கப்பட உள்ளன. ரூ.131 கோடி மதிப்பில் பழைய பைப் லைன்கள் அகற்றப்பட்டு புதிய பைப்லைன்கள் அமைக்கப்பட உள்ளது.

    இதன்மூலம் 20 எம்.எல்.டி தண்ணீர் கூடுதலாக கிடைக்கும். வைகை அணையில் இருந்து நிலக்கோட்டை, திண்டுக்கல், ஆத்தூர் பகுதிகளுக்கு நேரடியாக குடிநீர் வினியோகம் செய்ய ரூ.680 கோடி மதிப்பில் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஆய்வுப்பணிகள் நடைபெற்று வருகிறது. திண்டுக்கல், தேனி மாவட்ட குடிநீர் பிரச்சினையை நிரந்தரமாக தீர்க்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி நிதிஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

    ×