என் மலர்
நீங்கள் தேடியது "Amma Unavagam"
- அம்மா உணவகத்தின் செயல்பாடுகளில் மாற்றம் கொண்டு வருவது தொடர்பாக ஆய்வு செய்ய சென்னை மாநகராட்சி சார்பில் ஒரு குழு அமைக்கப்பட்டது.
- சென்னை மாநகராட்சியில் செயல்படும் அம்மா உணவகங்களை மேம்படுத்துவதற்கு நிதி திரட்ட ஒரு அறக்கட்டளை அமைக்கலாம் என்று அந்த குழு பரிந்துரை அளித்தது.
சென்னை:
அ.தி.மு.க. ஆட்சியின் போது சென்னையில் ஏழைகளுக்கு குறைந்த விலையில் உணவு வழங்குவதற்காக அம்மா உணவகம் தொடங்கப்பட்டது. இதை சென்னை மாநகராட்சி செயல்படுத்தியது. இந்த திட்டத்துக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.
இதையடுத்து சென்னை முழுவதும் 407 அம்மா உணவகங்கள் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இங்கு 3 வேளையும் மலிவு விலையில் உணவு கிடைக்கிறது.
இந்த அம்மா உணவகங்கள் மூலம் ஆண்டுக்கு ரூ.140 கோடி செலவாகிறது. ஆனால் வருவாயாக ரூ.20 கோடி மட்டுமே கிடைக்கிறது. மீதம் ரூ.120 கோடி நஷ்டம் ஏற்படுகிறது. எனவே அம்மா உணவகத்தின் செயல்பாடுகளில் மாற்றம் கொண்டு வருவது தொடர்பாக ஆய்வு செய்ய சென்னை மாநகராட்சி சார்பில் ஒரு குழு அமைக்கப்பட்டது.
சென்னை மாநகராட்சியில் செயல்படும் அம்மா உணவகங்களை மேம்படுத்துவதற்கு நிதி திரட்ட ஒரு அறக்கட்டளை அமைக்கலாம் என்று அந்த குழு பரிந்துரை அளித்தது. பல்வேறு அமைப்புகளிடம் நிதி பெற்று அம்மா உணவகத்தை நடத்தினால் நஷ்டத்தை தவிர்க்கலாம் என்று கூறப்பட்டது.
அம்மா உணவக அறக்கட்டளை அமைக்க ஏற்கனவே அ.தி.மு.க. ஆட்சியில் அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி அம்மா உணவக அறக்கட்டளையை தொடங்க தி.மு.க. அரசு முடிவு செய்துள்ளது.
இந்த நிலையில் அம்மா உணவகத்தை தொடர்ந்து செயல்படுத்துவது தொடர்பாக தமிழக அரசுக்கு சென்னை மாநகராட்சி கடிதம் ஒன்றை எழுதி உள்ளது. அதில், 'அறக்கட்டளை தொடங்கிய பிறகு போதிய நிதி கிடைக்காத பட்சத்தில் அந்த நிதியை தமிழக அரசு முழுமையாக அளிக்குமா? நிதியே கிடைக்காவிட்டால் தொடர்ந்து அம்மா உணவகத்தை செயல்படுத்த அரசு நிதி அளிக்குமா?' என கேள்வி எழுப்பி உள்ளது.
இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-
அம்மா உணவகத்தை தொடர்ந்து நடத்த தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் இணைந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. நஷ்டம் ஏற்படாமல் அம்மா உணவகத்தை நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. அறக்கட்டளைக்கு சமூக பங்களிப்பு நிதி மற்றும் பொதுமக்கள் விரும்பி நிதி அளிக்கும் பட்சத்தில் அவற்றை ஏற்பது குறித்து அரசிடம் கேட்கப்பட்டுள்ளது.
அறக்கட்டளைக்கு அளிக்கப்பட்ட நிதி, அம்மா உணவகத்தை செயல்படுத்த செலவான நிதி ஆகியவை பற்றி ஒவ்வொரு ஆண்டும் நிதிநிலை அறிக்கை கவுன்சில் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
- ஒவ்வொரு அம்மா உணவகத்திற்கும் விற்பனை இலக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நிர்ணயிக்கப்பட்டது.
- அம்மா உணவகங்களை நடத்துவதன் மூலம் மாநகராட்சிக்கு ஆண்டுக்கு ரூ.100 கோடி இழப்பு ஏற்பட்டு வருகிறது.
சென்னை:
சென்னை மாநகராட்சி மூலம் 200 வார்டுகளில் 400 அம்மா உணவகங்களும், அரசு ஆஸ்பத்திரிகளில் 3 உணவகங்களும் செயல்பட்டு வந்தன. இதில் வார்டுகளில் செயல்பட்ட 3 உணவகங்கள் மூடப்பட்டன.
இதையடுத்து தற்போது 400 அம்மா உணவகங்கள் மட்டுமே செயல்பட்டு வருகின்றன.
இந்த அம்மா உணவகங்களில் கடந்த சில வருடங்களாக விற்பனை சரிந்தது. இதனால் வருவாய் இழப்பை அதிகம் சந்திக்க நேரிட்டது. இதையடுத்து ஊழியர்களின் வேலை நாட்கள் குறைக்கப்பட்டன.
ஒரு சில அம்மா உணவகங்களில் ஊழியர்களின் சம்பளத்திற்கு கூட விற்பனை நடைபெறாத நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில் அம்மா உணவகங்களில் விற்பனையை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அங்குள்ள பொருட்கள் சேதம் அடைந்து செயல்படாமல் இருந்தது. அதனை பழுது நீக்கம் செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டன.
மேலும் ஒவ்வொரு அம்மா உணவகத்திற்கும் விற்பனை இலக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நிர்ணயிக்கப்பட்டது.
அம்மா உணவகங்களை கண்காணித்து நிர்வகித்து வரும் 15 மண்டலங்களுக்கும் இலக்கு முடிவு செய்யப்பட்டது. மண்டலத்தின் கீழ் இயங்கும் ஒவ்வொரு உணவகத்திற்கும் வாரத்திற்கு ரூ.1.5 லட்சம், ரூ. 2 லட்சம், ரூ. 3 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டது. அதையடுத்து அதற்கேற்ப விற்பனையை ஊழியர்கள் செய்ய தொடங்கினர்.
ஒவ்வொரு கடையிலும் தினமும் குறிப்பிட்ட அளவு விற்பனை செய்ய வேண்டும் என்று ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இதனால் தற்போது அம்மா உணவகங்களில் விற்பனை அதிகரித்துள்ளது. கடந்த மாதம் 27-ந்தேதியில் இருந்து இந்த மாதம் 3-ந்தேதி வரை ஒரு வாரத்தில் 400 அம்மா உணவகங்களில் மொத்தம் ரூ.27 லட்சத்து 34 ஆயிரத்து 460-க்கு விற்பனை நடந்துள்ளது.
சராசரியாக நாள் ஒன்றுக்கு 3 லட்சத்து 90 ஆயிரத்திற்கு உணவு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டன.
இந்த மாதம் 4-ந்தேதி முதல் 11-ந்தேதி வரையிலான ஒரு வார காலத்தில் ரூ.37 லட்சத்து 3 ஆயிரத்திற்கு விற்பனை ஆகியுள்ளது. நாள் ஒன்றுக்கு சராசரி விற்பனை 5 லட்சத்து 33 ஆயிரமாகும். ஒரு வாரத்தில் ரூ.10 லட்சம் அளவிற்கு விற்பனை உயர்ந்துள்ளது.
இதற்கிடையில் அம்மா உணவகங்களை நடத்துவதன் மூலம் மாநகராட்சிக்கு ஆண்டுக்கு ரூ.100 கோடி இழப்பு ஏற்பட்டு வருகிறது. இதனை ஈடுசெய்ய அரசிடம் இருந்து நிதி கேட்டுள்ளது. 2021-22-ம் ஆண்டிற்கு ரூ.98 கோடி செலவிடப்பட்டு இருப்பதாக அரசுக்கு தெரிவித்துள்ளது.
- சென்னையில் செயல்படும் 400 அம்மா உணவகங்களிலும் வழக்கம்போல் உணவுகள் தயாரிக்கப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
- அம்மா உணவங்களில் சப்பாத்தியை நிறுத்தும் எண்ணம் எதுவும் இல்லை.
சென்னை:
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா, ஏழை-எளிய மக்கள் பசியாற கடந்த 2013-ம் ஆண்டு சென்னை மாநகராட்சி பகுதியில் அம்மா உணவகங்களை திறந்தார்.
இங்கு குறைந்த விலையில் இட்லி, சப்பாத்தி, பொங்கல், கலவை சாதம் உள்ளிட்ட உணவு வகைகள் விற்பனை செய்யப்பட்டன.
ஆரம்பத்தில் அம்மா உணவகத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனால் சென்னையில் அம்மா உணவகங்கள் பல இடங்களில் தொடங்கப்பட்டது. இப்போது 400 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் 700-க்கும் மேற்பட்ட அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகிறது.
இவற்றால் சில இடங்களில் பராமரிப்பு பணிகள் முறையாக நடைபெறவில்லை என்றும் உணவின் தரம் குறைவாக உள்ளதாகவும் பலர் குறைகூறி வருகின்றனர்.
இந்த நிலையில் சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் சப்பாத்தி வழங்குவது நிறுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இதுபற்றி மாநகராட்சி அதிகாரியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
சென்னையில் செயல்படும் 400 அம்மா உணவகங்களிலும் வழக்கம்போல் உணவுகள் தயாரிக்கப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு கோதுமை கொள்முதல் செய்வதில் சில இடர்பாடுகள் இருந்ததால் சப்பாத்தி தயாரிப்பது தடைபட்டது. அதன் பிறகு அதனை சரி செய்து மீண்டும் சப்பாத்தி வழங்கினோம்.
சில நாட்களுக்கு முன்பு சப்பாத்தி மாவு மிஷின் ரிப்பேர் ஆனது. அதையும் சரிசெய்து தடையின்றி சப்பாத்தி தயாரித்து வழங்குகிறோம். எனவே அம்மா உணவங்களில் சப்பாத்தியை நிறுத்தும் எண்ணம் எதுவும் இல்லை. சிலர் வதந்தியை கிளப்பி வருகிறார்கள்.
அம்மா உணவகங்களை கண்காணிக்கவும், தரமான உணவு வழங்குவதற்காகவும் மாநகராட்சியில் தனியாக ஒரு அதிகாரி நியமிக்கப்பட்டு உள்ளார். அவர் அம்மா உணவகங்களின் செயல்பாடுகளை கண்காணித்து வருகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தாமரைச்செல்வி. சாலிகிராமம் வி.வி கோவில் தெருவில் உள்ள அம்மா உணவகத்தில் தாமரைச்செல்வி வேலை பார்த்து வருகிறார்.
- இவர் சமையல் செய்யும் பணியில் ஈடுபட்டபோது அங்கு வந்த சூப்பர்வைசர் ராதிகா என்பவர், “இட்லி துணியை ஏன் சரியாக சுத்தம் செய்யவில்லை” என்று கூறி கண்டித்தார்.
போரூர்:
விருகம்பாக்கம் பச்சையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தாமரைச்செல்வி. சாலிகிராமம் வி.வி கோவில் தெருவில் உள்ள அம்மா உணவகத்தில் வேலை பார்த்து வருகிறார்.
இவர் சமையல் செய்யும் பணியில் ஈடுபட்டபோது அங்கு வந்த சூப்பர்வைசர் ராதிகா என்பவர், "இட்லி துணியை ஏன் சரியாக சுத்தம் செய்யவில்லை" என்று கூறி கண்டித்தார். இதில் தாமரைச்செல்விக்கும், ராதிகாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதில் தாமரைச்செல்வியின் காதில் காயம் ஏற்பட்டது. இதுகுறித்து விருகம்பாக்கம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
இந்தியாவில் மாதிரி சமுதாய சமையல் கூடம் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து நேற்று புதுடெல்லியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய உணவுத்துறை அமைச்சர் வருங்காலத்தில் 500 சமுதாய உணவகங்கள் “கலைஞர் உணவகம்” என்ற பெயரில் அமைக்கப்பட உள்ளதாக கூறி உள்ளார். இது அம்மா உணவகம் என்ற பெயரை இருட்டடிப்பு செய்யும் நோக்கம் கொண்டதாக, அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டதாக உள்ளது. இதற்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
சென்னை மாநகரில் வாழும் ஏழை எளிய மக்கள், அன்றாட கூலி வேலை செய்பவர்கள், ஓட்டுநர்கள், பாரம் தூக்குபவர்கள் என குறைந்த ஊதியத்தில் பணிபுரிபவர்களும், பணி நிமித்தமாக பிற மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு வந்து செல்லும் ஏழை எளிய மக்களும் பயன்பெறும் வகையில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மட்டும் 2013-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட அம்மா உணவகங்கள் படிப்படியாக பிற மாவட்டங்களுக்கும் நீட்டிக்கப்பட்டன.

அம்மா உணவகம் என்று நடைமுறையில் இருக்கின்ற ஒரு திட்டத்தை அந்தப் பெயரிலேயே விரிவுபடுத்தாமல் புதிதாக அதற்கு “கலைஞர் உணவகம்” என்று பெயர் வைப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டதாகும். காலப்போக்கில், அம்மா உணவகம் என்ற திட்டத்தையே கலைஞர் உணவகம் என்று மாற்றுவதற்கான ஒரு முயற்சியாக அமைச்சரின் பேச்சு அமைந்து இருக்கிறது.
தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்று சில மாதங்களே ஆகியுள்ள நிலையில், புதிதாக திட்டங்களை தீட்டுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது.
எனவே, புதிதாக தீட்டப்படும் இதுபோன்ற திட்டங்களுக்கு கலைஞர் பெயரை வைப்பதில் அ.தி.மு.க.வுக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை.
அதே சமயத்தில் நடைமுறையில் இருக்கின்ற ஒரு திட்டத்தை இரு பெயர்களில் செயல்படுத்துவது என்பது இதுவரை நடைமுறையில் இல்லாத வினோதமான ஒன்று. இது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல என்றே நான் கருதுகிறேன்.
ஏழை எளிய மக்களுக்காக குறைந்த விலையில் உணவகங்களை அமைப்பது என்பது அம்மாவின் சிந்தனையில் உதித்த ஓர் அற்புதமான திட்டம். எனவே, இந்த திட்டம் “அம்மா உணவகம்” என்ற பெயரிலேயே தொடர்ந்து செயல்பட வேண்டும் என்பது தான் பொதுமக்களின் விருப்பம் ஆகும்.
எனவே முதல்-அமைச்சர் இதில் உடனடியாக தலையிட்டு, பொதுமக்களின் விருப்பத்தினை நிறைவேற்றும் வகையில், புதிதாக எத்தனை உணவகங்கள் அமைக்கப்பட்டாலும், அவை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் “அம்மா உணவகம்” என்ற பெயரிலே தொடர்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னையில் 403 அம்மா உணவகங்கள் மாநகராட்சி மூலம் நடத்தப்படுகின்றன. கடந்த சில வருடமாக அம்மா உணவகங்களில் விற்பனை சரிந்தது.
இதனால் மாநகராட்சிக்கு கடுமையான வருவாய் இழப்பு ஏற்பட்டது. இதனை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். தனி அதிகாரி நியமிக்கப்பட்டு அதன் செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டன.
அம்மா உணவகங்களில் ஊழியர்கள் அதிகளவு இருப்பதால் அதனை சரிசெய்யும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. 4355 ஊழியர்கள் தற்போது பணியாற்றி வருகிறார்கள்.
இதில் 170 அம்மா உணவகங்களில் சரியான அளவு ஊழியர்கள் உள்ளனர். 171 உணவகங்களில் 2 முதல் 5 பேர் வரை அதிகமாகவும் 60 அம்மா உணவகங்களில் 5 பேர் முதல் 10 பேர் வரை அதிகம் இருப்பதும் தெரிய வந்தது.
இவர்கள் யாரையும் பணியில் இருந்து நீக்காமல் அனைவருக்கும் வேலை கொடுக்கும் வகையில் சுழற்சி முறையில் ஊழியர்கள் நிர்ணயிக்கப்பட்டனர். கூடுதலாக இருந்த உணவகங்களில் ஊழியர்களுக்கு பணிகள் பரவலாக்கப்பட்டு விடுப்பு அளிக்கப்பட்டு உள்ளது.
அதிகாலை 5 மணி முதல் பகல் 1 மணி வரை ஒரு ஷிப்டும், பகல் 1 மணி முதல் இரவு 9 மணி வரை மற்றொரு ஷிப்டும் ஒதுக்கப்பட்டு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் காரணமாக தற்போது அம்மா உணவகங்களில் விற்பனை அதிகரித்து உள்ளது.

கடந்த ஆண்டுகளில் தினமும் 1.25 லட்சம் பேர் மட்டுமே உணவு சாப்பிட்டார்கள். ஆனால் தற்போதைய நடவடிக்கையின் மூலம் இது 1.73 லட்சமாக உயர்ந்து உள்ளது.
அம்மா உணவகங்களில் சாப்பிடுவோரின் எண்ணிக்கை 50 ஆயிரம் பேர் அதிகரித்து உள்ளது. இது குறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
கடந்த மாதத்தில் அம்மா உணவகங்களை ஆய்வு செய்து சரி செய்யும் பணி நடந்தது. இதன் மூலம் ஒரே மாதத்தில் விற்பனை அதிகரித்து உள்ளது.
தரமான உணவுகளை தயாரித்து வழங்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அம்மா உணவகங்களில் பணியாற்றிய ஒருவரையும் பணியில் இருந்து நீக்கவில்லை. சம்பளமும் குறைக்கப்படவில்லை.
இன்னும் படிப்படியாக இதன் தரம் உயர்த்தப்படும். சரியான அளவில் பணியாளர்கள் நிர்ணயிக்கப்பட்டதால் செலவினம் குறைந்து உள்ளது. மாதத்திற்கு 1 கோடி ரூபாய் வீதம் ஆண்டுக்கு 12 கோடி செலவினம் குறைக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னையில் கன மழை பெய்து தண்ணீர் சூழ்ந்ததால் ஏழை-எளிய மக்கள் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு மாநகராட்சி சார்பில் 3 வேளையும் உணவு அளிக்கப்பட்டது.
மேலும் 403 அம்மா உணவகங்கள் மூலமும் அந்தந்த பகுதிகளில் உள்ள ஏழைகள், ஆதரவற்றவர்கள், கூலி தொழிலாளர்களுக்கு 3 வேளையும் இலவசமாக உணவு வழங்கப்பட்டு வந்தது.
மழை நிற்கும் வரை இலவசமாக உணவு வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி கடந்த 10-ந்தேதி முதல் அம்மா உணவுகங்களில் உணவு விநியோகிக்கப்பட்டது.
தற்போது மழை முற்றிலுமாக நின்றதால் இன்று முதல் அனைத்து அம்மா உணவங்களிலும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இதுகுறித்து அம்மா உணவக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
சென்னையில் மழை நின்றதோடு பாதிப்பும் குறைந்துள்ளது. இதனால் அம்மா உணவகங்களில் இலவசமாக வழங்கப்பட்ட உணவு நிறுத்தப்பட்டுள்ளது.
இன்று முதல் உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 5 நாட்களில் சுமார் 13 லட்சம் பேர் அம்மா உணவகங்களில் இலவசமாக சாப்பிட்டு உள்ளனர்.

சென்னையில் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாநகராட்சி சார்பில் இலவசமாக 3 வேளையும் உணவு வழங்கப்படுகிறது.
இந்த நிலையில் மழை பாதிப்புகளை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்ட போது அம்மா உணவகத்துக்கு சென்றார். அங்குள்ள உணவை சாப்பிட்டார். உணவு தரமாக இருப்பதாக அவர் ஊழியர்களிடம் தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து அனைத்து அம்மா உணவகங்களிலும் மழை முற்றிலும் நிற்கும் வரை இலவசமாக உணவு வழங்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
இதையடுத்து இன்று முதல் சென்னையில் உள்ள 403 அம்மா உணவகங்களில் 3 வேளையும் உணவு இலவசமாக வழங்கப்படுகிறது. காலையில் இட்லி, மதியம் சாம்பார் சாதம், இரவு சப்பாத்தி போன்றவை அம்மா உணவகங்களில் வழங்கப்பட்டு வருகிறது.

சென்னையில் 200 வார்டுகளில் 396 அம்மா உணவகங்களிலும், அரசு மருத்துவமனைகளில் 7 இடங்களிலும் இன்று காலையில் இருந்து உணவு இலவசமாக வழங்கப்படுகிறது.
குறைந்த விலையில் விற்கப்பட்ட உணவுகள் இன்று முதல் கட்டணமின்றி 3 வேளையும் வழங்கப்படுவதால் கூலித் தொழிலாளர்கள், ஆதரவற்றோர்கள் மற்றும் ஆட்டோ தொழிலாளர்கள் போன்றவர்கள் அம்மா உணவகங்களில் இன்று ஆர்வத்துடன் சாப்பிடுவதை காண முடிந்தது.
கொரோனா பாதிப்பின் காரணமாக அம்மா உணவகங்களில் விற்பனை குறைந்தது. கூட்டம் இல்லாததால் வருவாய் இழப்பு அதிகரித்து அதிக நஷ்டத்தை சந்தித்து வந்தது.
இந்த நிலையில் பருவமழை பாதிப்பின் காரணமாக அம்மா உணவகங்களில் உணவு இலவசமாக வழங்கப்படுவதை அறிந்த அந்தந்த பகுதி மக்கள் காலையிலேயே அங்கு குவியத் தொடங்கினர்.
வயதானவர்கள், கூலித்தொழிலாளர்கள் அம்மா உணவகங்களில் ஆர்வத்தோடு உணவு அருந்தினார்கள். மழை பாதிப்பால் தொழில் இல்லாமல் வருவாய் இழந்தவர்களும் அம்மா உணவகங்களை நாடினார்கள்.
கொரோனா காலத்தில் கடந்த ஆண்டு அம்மா உணவகங்களில் 3 வேளையும் உணவு இலவசமாக வழங்கப்பட்டது. அப்போது கூட்டம் நிரம்பி வழிந்தது. அதேபோல தற்போதும் அம்மா உணவகங்களில் ஏழை மக்கள் சாப்பிடுவதற்காக காத்திருந்தனர்.
உணவிற்காக பணம் செலவழிக்க வேண்டிய நிலை இல்லாததால் ஏராளமான மக்கள் அம்மா உணவகங்களில் கூடினார்கள். இது குறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘அம்மா உணவகங்களில் தேவையான அளவு உணவு தயாரித்து வழங்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
வழக்கமான அளவு தற்போது உணவு தயாரிக்கப்பட்டாலும் மக்கள் கூட்டம் அதிகரித்தால் அதற்கேற்றவாறு கூடுதலாக சமைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது’ என்றார்.
சென்னை:
சென்னையில் பருவமழையின் தாக்கம் அதிகரித்து வருவதால் பாதுகாப்பு முன்னேற்பாடுகளை மாநகராட்சி செய்து வருகிறது.
ஏரிகள் திறக்கப்பட்டு இருப்பதால் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கரையோரத்தில் வசிக்கும் மக்களை வெளியேற்றும் நடவடிக்கையையும் மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது.
அடையார், சைதாப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் வசிக்கும் கரையோர மக்கள் பாதுகாப்பாக தங்கும் முகாமிற்கு அழைத்து வரப்படுகிறார்கள். 200 வார்டுகளில் செயல்படும் 403 அம்மா உணவகங்கள் முழுமையாக செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொது மக்கள் தங்கள் பகுதிகளில் உள்ள அம்மா உணவகங்களில் உணவு அருந்தவும் போதுமான அளவு உணவுப் பொருட்களை இருப்பு வைத்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அம்மா உணவக ஊழியர்கள் 3 வேளையும் தேவைக்கு ஏற்ப உணவுகளை தயாரித்து பொது மக்களுக்கு வழங்க வேண்டும் என்று அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
வெள்ளம் பாதித்த பகுதிகளில் செயல்படும் 2 அம்மா உணவகங்களில் இலவசமாக சாப்பிடவும் மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது. 20 உணவு தயாரிக்கும் கூடங்களில் இருந்து 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் சாப்பிடுவதற்கு உணவு தயாரிக்கப்படுவதாக துணை கமிஷனர் விஷ்ணு மகாஜன் தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்... புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி 11-ந்தேதி சென்னையை நெருங்கும்: மிக மிக பலத்த மழை எச்சரிக்கை