search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Amma Unavagam"

    • அம்மா உணவகத்திற்கு நிதி ஒதுக்காமல் இருப்பது கண்டிக்கத்தக்கது
    • மழை பாதிப்புகளை சரி செய்ய அரசு பணம் செலவிடப்பட்டால் அதை வரவேற்கலாம்.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூரில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * ஒருநாள் மழைக்கேசென்னை தத்தளிக்கும் சூழலை பார்த்தோம். மழையால் பல்வேறு பகுதிகளில் மக்கள் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். முறையாக வடிகால் பணிகளை மேற்கொண்டிருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது.

    * கார் பந்தயத்திற்காக 42 கோடி ரூபாய் அரசு செலவு செய்வது கண்டித்தக்கது. சென்னை தீவுத்திடலை சுற்றி கார் பந்தயம் நடத்தப்படும் என்ற அறிவிப்பு வேடிக்கையாக உள்ளது. இருங்காட்டுக்கோட்டையில் கார் பந்தயம் நடத்த இடம் இருக்கும் போது சென்னையில் நடத்துவதா?

    * மழை பாதிப்புகளுக்கு இடையே சென்னையில் கார் பந்தயம் நடத்துவது ஏன்? சென்னையில் கார் பந்தயம் நடத்துவதால் யாருக்கு லாபம்?

    * கார் பந்தயம் நடத்துவதால் மக்களுக்கு எந்த பயனும் கிடையாது.

    * அம்மா உணவகத்திற்கு நிதி ஒதுக்காமல் இருப்பது கண்டிக்கத்தக்கது

    * மழை பாதிப்புகளை சரி செய்ய அரசு பணம் செலவிடப்பட்டால் அதை வரவேற்கலாம்.

    * கவர்னர் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பே இறுதியானது.

    * தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு என்ன மெச்சூரிட்டி உள்ளது?

    * சபாநாயகர் ஜனநாயக முறைப்படி செயல்படுகிறாரா? சபை தலைவர் பொதுவாக பேசாமல் கட்சி தலைவர் போல் பேசுகிறார்.

    * பாராளுமன்ற தேர்தலுக்கான 90 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளன.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சென்னையில் இதுவரை 14 அம்மா உணவகங்கள் மூடப்பட்டதால் 393 அம்மா உணவகங்கள்தான் இப்போது செயல்பட்டு வருகிறது.
    • தி.நகரில் வார்டு 117-ல் தியாகராய ரோட்டில் உள்ள அம்மா உணவகத்தை இடிக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

    சென்னை:

    ஏழை-எளிய மக்கள் பசியால் வாடிவிடக் கூடாது என்பதற்காக மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் கடந்த 2013-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட திட்டம் தான் அம்மா உணவகம்.

    காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் மிகக்குறைந்த விலையில் இங்கு உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது.

    சென்னையில் முதன் முதலில் தொடங்கப்பட்ட இத்திட்டம் மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்ததையடுத்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் விரிவுபடுத்தப்பட்டது.

    சென்னையில் மட்டும் வார்டுக்கு இரண்டு என மொத்தம் 407 அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டது. பொது மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்த இந்த அம்மா உணவகங்கள் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு லாப-நஷ்டம் பார்க்கப்படுவதால் இப்போது நஷ்டம் ஏற்படும் அம்மா உணவகங்கள் மூடப்பட்டு வருகின்றன.

    அந்த வகையில் சென்னையில் இதுவரை 14 அம்மா உணவகங்கள் மூடப்பட்டதால் 393 அம்மா உணவகங்கள்தான் இப்போது செயல்பட்டு வருகிறது.

    தி.நகரில் வார்டு 117-ல் தியாகராய ரோட்டில் உள்ள அம்மா உணவகத்தை இடிக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

    அவ்வாறு இடிக்கப்படும் பட்சத்தில் அருகில் உள்ள மாநகராட்சி கட்டிடத்தில் அம்மா உணவகம் செயல்பட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஏழை-எளிய மக்கள் பயனடைந்து வந்த அம்மா உணவகங்கள் திறம்பட நடத்த முடியாமல் போனதற்கு என்ன காரணம் என்பதை அறிந்து அதை அரசு சரி செய்ய வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    • அம்மா உணவகத்தை மேம்படுத்த மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.
    • பழுதடைந்த அம்மா உணவக கட்டிடங்களை சரி பார்க்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னை மாநகராட்சி மூலம் 393 அம்மா உணவகங்கள் தற்போது செயல்பட்டு வருகின்றன. இவை 10 ஆண்டுக்கு மேலாக இயங்கி வருவதால் அங்குள்ள பொருட்கள் பழுதடைந்தும் உடைந்தும் உள்ளன. கிரைண்டர், மிக்சி, பாத்திரங்கள் உள்ளிட்டவை பழுதாகி அதனை சரி செய்து இயக்கி வருகின்றனர்.

    தினமும் 3 வேளையும் உணவு தயாரிப்பதற்கு தேவையான உபகரணங்கள் பயன்படுத்த முடியாமல் உள்ளன. இதனால் அங்குள்ள ஊழியர்கள் சிரமப்படுகிறார்கள்.

    ஒவ்வொரு நாளும் உணவு தயாரிப்பதில் தாமதமும் ஏற்படுகிறது. இவற்றை சரி செய்து அம்மா உணவகத்தை மேம்படுத்த மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.

    அம்மா உணவகங்களில் பயன்படுத்தப்பட்டு வரும் பொருட்கள் எவை எவை தொடர்ந்து பயன்படுத்தலாம், அவற்றில் சரி செய்யக்கூடியது எது, பயன்படுத்த தகுதியற்ற பொருட்கள் எவை என கண்டறிய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

    மண்டல தலைவர், சுகாதார அதிகாரிகள், உதவி பொறியாளர்கள் இக்குழுவில் இடம் பெற்றுள்ளனர். இக்குழு ஒவ்வொரு அம்மா உணவகத்திற்கும் சென்று பொருட்களை ஆய்வு செய்து ஓட்டை உடைசலானதை ஏலத்திற்கு விடவும் அதற்கு பதில் புதிய பொருட்கள் வாங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    பழுது பார்த்து பயன்படுத்தக் கூடியவற்றை சரி செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பணி 2 வாரத்தில் முடிக்கப்பட்டு புதிய பொருட்கள் வாங்க ஏற்பாடு செய்யப்படுகிறது.

    இதே போல பழுதடைந்த அம்மா உணவக கட்டிடங்களை சரி பார்க்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. எந்தந்த கட்டிடங்களில் கூரை ஒழுகுகிறது, பொதுமக்கள் சாப்பிட முடியாமல் பாதிப்பு உள்ளதா? என ஆய்வு செய்து அற்றை சரி பார்க்கும் நடவடிக்கையும் மாநகராட்சி மண்டல அலுவலர் மூலம் மேற்கொள்ளப்படுகிறது.

    • தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றதற்குப் பிறகு, அம்மா உணவகங்கள் கேட்பாரற்று கிடக்கின்றன.
    • அம்மா உணவகங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி மடை மாற்றி விடப்பட்டிருக்கிறதோ என்ற எண்ணம் மக்களிடையே எழுந்துள்ளது.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    மக்களை அரவணைத்துப் பேணிக் காக்கும் அரசனை உலகம் வணங்கும் என்ற வள்ளுவரின் வாக்கிற்கிணங்க, தமிழ்நாட்டின் தேவைகளை அறிந்து, தமிழக மக்களின் நாடித் துடிப்பினை உணர்ந்து, அதற்கேற்ப பல திட்டங்களைத் தீட்டி செயல்படுத்திய மாண்புமிகு இதய தெய்வம் அம்மா அவர்கள், விலைவாசி உயர்வு என்னும் கொடூரத் தாக்குதலிலிருந்து தமிழக மக்களை, குறிப்பாக ஏழை மக்களை, உழைக்கும் மக்களை, தினக்கூலி அடிப்படையில் பணிபுரியும் தொழிலாளர் வர்க்கத்தினரை காப்பதற்காக, மலிவு விலையில் தரமான உணவினை வழங்கும் வண்ணம் நகர்ப்புறங்களில், குறிப்பாக சென்னை மாநகரத்தில் அம்மா உணவகங்களை உருவாக்கினார்கள். சென்னையில் மட்டும் கிட்டத்தட்ட 300-க்கும் மேற்பட்ட அம்மா உணவகங்கள் சிறப்பாக இயங்கி வந்தன.

    தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றதற்குப் பிறகு, அம்மா உணவகங்கள் கேட்பாரற்று கிடக்கின்றன. அம்மா உணவகங்கள் இயங்குவதற்கு நிதி அளிக்காதது, அங்குள்ள பணியாளர்களை பணியிலிருந்து நீக்குவது, வசதிகளை ஏற்படுத்தித் தராதது போன்ற பல காரணங்களால் அவற்றின் செயல்பாடு வெகுவாக குறைந்துவிட்டது. அம்மா உணவகங்களின் செயல்பாட்டினை நீர்த்துப் போகச் செய்த பெருமை தி.மு.க.வையேச் சாரும். அம்மா உணவகங்களில் விற்பனை செய்யப்படும் உணவு தரமானதாகவும், சுவையானதாகவும், சுகாதாரமானதாகவும் இல்லை என்பதோடு, குறைந்த அளவு உணவே தயார் செய்யப்படுகிற நிலை நிலவுகிறது. இதன் காரணமாக, உணவருந்த வருவோரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துவிட்டது. பல இடங்களில் பல உணவுப் பொருட்கள் இல்லை என்ற நிலை நிலவுகிறது. பெரும்பாலான இடங்களில் சுகாதாரமற்ற சூழ்நிலை நிலவுகிறது.

    உதாரணமாக, சென்னை ராயப்பேட்டை பாரதி சாலையில் உள்ள அம்மா உணவகத்தில் குடிநீர்த் தொட்டி கடந்த இரண்டு ஆண்டுகளாக பழுதடைந்து இருப்பதாகவும், உணவகத்திற்கு வழங்கப்படும் குடிநீர் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், மது பாட்டில்கள் குவிந்து கிடப்பதாகவும் பத்திரிகையில் செய்திகள் வந்துள்ளன.

    இதேபோன்று, ஐஸ்ஹவுஸ் பகுதியில் உள்ள அம்மா உணவகத்தில் குளிர்சாதனப் பெட்டி பழுதடைந்து பயனற்று இருப்பதாகவும், மின் விளக்குகள் மற்றும் மின் விசிறிகள் இயங்காததன் காரணமாக இரவு நேரங்களில் இருள்சூழ்ந்து கிடப்பதாகவும், நாய்களின் உறைவிடமாக காட்சியளிப்பதாகவும் கூறப்படுகிறது.

    திருவல்லிக்கேணி வெங்கட்ரங்கம் தெருவில் உள்ள அம்மா உணவகம் கழிவுநீர் மையமாக காட்சி அளிப்பதாகவும், மோட்டார் பழுதடைந்து இருப்பதாகவும், கஸ்தூரிபாய் மருத்துவமனையில் உள்ள அம்மா உணவகத்திலும் இதே நிலை இருப்பதாகவும் செய்திகள் வருகின்றன.

    இந்தப் பகுதிகள் அனைத்துமே அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொகுதியான சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதிக்கு உட்பட்டவை. இந்த நிலைமைதான் அனைத்து அம்மா உணவகங்களிலும் நிலவுகிறது. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், அம்மா உணவகங்கள் கேட்பாரற்று, கவனிப்பாரற்று அனாதையாக காட்சி அளிக்கின்றன.

    சென்னை மாநகராட்சியின் நிதிநிலை அறிக்கையில் அம்மா உணவகங்களுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டு இருப்பதாக பத்திரிகையில் செய்திகள் வந்தன. ஆனால், தற்போதைய அம்மா உணவகங்களைப் பார்க்கும்போது, அம்மா உணவகங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி மடை மாற்றி விடப்பட்டிருக்கிறதோ என்ற எண்ணம் மக்களிடையே எழுந்துள்ளது.

    இதுகுறித்து அதிகாரிகள் கருத்து தெரிவிக்கையில், 2021 ஆம் ஆண்டிற்கு முன்பே இதுபோன்ற நிலைமை நிலவுவதாகவும், இதுகுறித்து அறிக்கை பெறப்பட்டு, அதற்கான நிதி ஒதுக்கப்படும் என்று கூறுகின்றனர். தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில், இதுபோன்ற பதிலை அதிகாரிகள் தெரிவிப்பதைப் பார்க்கும்போது தமிழ்நாட்டில் ஒரு திறமையற்ற ஆட்சி நடக்கிறது என்பது தெளிவாகிறது.

    ஏழை எளிய மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அம்மா உணவகங்களில் நிலவும் ஊழியர் பற்றாக்குறை, நிதிப் பற்றாக்குறை, பொருட்கள் பற்றாக்குறை ஆகியவற்றை போக்கி அவை நன்கு செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தி.மு.க. அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • 2 ஊழியர்கள் வழக்கம் போல் டோக்கன் வழங்கும் வேலை மட்டும் செய்து வந்துள்ளனர்.
    • சுமார் 2 மணி நேர தாமதத்திற்கு பிறகு காலை உணவு பொதுமக்களுக்கு பரிமாறப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு அகில் மேடை வீதியில் உள்ள சின்ன மார்க்கெட் வளாகத்தில் அம்மா உணவகம் கடந்த 11 வருடமாக செயல்பட்டு வருகிறது. இங்கு 10 சுய உதவி குழுவை சேர்ந்த பெண் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

    இந்த ஊழியர்கள் டோக்கன் வழங்குதல், சமையல் செய்வது, உணவு பரிமாறுதல் என தங்களுக்குள் வேலைகள் அனைத்தையும் பகிர்ந்து வேலை செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் கடந்த மாதம் இந்த அம்மா உணவகத்தில் மேலும் 2 பெண் ஊழியர்கள் கூடுதலாக பணியில் அமர்த்தபட்டனர். அவர்கள் வேலைக்கு சேர்ந்த நாள் முதல் டோக்கன் மட்டுமே வழங்கி வந்துள்ளனர். மற்ற வேலைகளை செய்யவில்லை என கூறப்படுகிறது.

    இதனால் மற்ற ஊழியர்கள் அவர்களிடம் நீங்களும் இங்கு மற்றவர்கள் போல அனைத்து வேலைகளை செய்ய வேண்டும். டோக்கன் போடும் வேலை மட்டும் செய்யக்கூடாது என்று கூறியுள்ளனர்.

    ஆனால் அந்த 2 ஊழியர்கள் வழக்கம் போல் டோக்கன் வழங்கும் வேலை மட்டும் செய்து வந்துள்ளனர். இதனால் அவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது.

    இந்நிலையில் இன்று காலை மற்ற 10 ஊழியர்கள் உணவை பரிமாறாமல் இதனை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் காலை உணவு சாப்பிட வந்த பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

    இது குறித்து தகவல் கிடைத்ததும் சுகாதார ஆய்வாளர் மணிவேல் மற்றும் அதிகாரிகள் சம்பவயிடத்திற்கு விரைந்து வந்து ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் இந்த 2 ஊழியர்களும் மற்றவர்கள் போல் அனைத்து வேலைகளையும் செய்ய வேண்டும் என்று கூறினர்.

    அதற்கு அதிகாரிகள் முதலில் பொதுமக்களுக்கு உணவை பரிமாறுங்கள். பின்னர் பிரச்சினைகளை பேசி தீர்த்துக்கொள்ளலாம் என்றனர்.

    இதனை ஏற்று அம்மா உணவக ஊழியர்கள் பணிக்கு திரும்பினர். சுமார் 2 மணி நேர தாமதத்திற்கு பிறகு காலை உணவு பொதுமக்களுக்கு பரிமாறப்பட்டது. 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அம்மா உணவகங்களில் உணவு வகைகளை ருசியாக தரவேண்டும் என்ற கருத்தை பெரும்பாலானவர்கள் தெரிவித்துள்ளனர்.
    • காலையில் இட்லியுடன் கூடுதலாக சட்னி, வடை தர வேண்டும் என்கின்றனர்.

    சென்னை:

    சென்னை மாநகராட்சியில் 402 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு காலையில் இட்லி, மதியம் கலவை சாதம், இரவில் சப்பாத்தி என மலிவு விலையில் உணவுகள் விற்கப்படுகின்றன.

    அம்மா உணவகங்கள் தொடங்கியபோது இருந்த வரவேற்பு தற்போது குறைந்து வருகிறது. எனவே அம்மா உணவகத்தில் உணவில் மாற்றம் தேவையா என்ற வகையில் பொதுமக்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வில் 2.13 லட்சம் பேர் தங்களது கருத்தை தெரிவித்து உள்ளனர்.

    இதில் 80 சதவீதத்துக்கும் அதிகமானோர் மதிய உணவு வகையில் மாற்றம் செய்ய வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

    அதற்கு ஏற்ப அம்மா உணவகங்களில் உணவில் மாற்றம் செய்யப்பட்ட புதிய வகை உணவுகள் வழங்கப்பட உள்ளன. இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-

    அம்மா உணவகங்களில் உணவு வகைகளை ருசியாக தரவேண்டும் என்ற கருத்தை பெரும்பாலானவர்கள் தெரிவித்துள்ளனர். காலையில் இட்லியுடன் கூடுதலாக சட்னி, வடை தர வேண்டும் என்கின்றனர்.

    மதியம் வெள்ளை சாதம், ரசம், அப்பளம் அல்லது வடை, ஊறுகாய் வழங்க வேண்டும் என்கிறார்கள். இரவில் சப்பாத்தி மட்டுமின்றி இட்லி போன்றவற்றையும் வழங்கலாம் என்று கருத்து தெரிவித்துள்ளனர். கலவை சாதத்துக்கு மாற்றாக தனிச்சுவை கொண்ட சாத வகைகளை வழங்கலாம் என்றும் கூறினர்.

    பொதுமக்களின் கருத்தின் படியே இவற்றை வழங்கலாமா என்று ஆலோசித்து வருகிறோம். கலவை சாதம் இல்லாத ஒருவேளை உணவு வகைக்கு ரூ.10 முதல் ரூ.15 வரை செலவிட பலர் தயாராக உள்ளனர். ஒரே விதமான உணவுக்கு பதிலாக சில மாற்றங்களை செய்து வழங்கும் நிலையில் பொதுமக்கள் ஓரிரு ரூபாய் கூடுதலாக கொடுக்கவும் தயாராக உள்ளனர்.

    இந்த ஆய்வு குறித்து அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த அறிக்கை விரைவில் அரசுக்கு அனுப்பி வைக்கப்படும்.

    தமிழக அரசின் முடிவை பொறுத்து அம்மா உணவங்களின் உணவு வகைகளிலும், விலையிலும் மாற்றம் கொண்டு வரப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தினசரி வருவாய் ரூ.2000 முதல் ரூ.2500 வரை இருக்க வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகள் இலக்கு நிர்ணயித்துள்ளனர்.
    • மாநகராட்சி அதிகாரிகள் அம்மா உணவகத்தின் நஷ்டத்தை தவிர்க்க புதிய திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.

    சென்னை:

    சென்னை மாநகராட்சியில் ஏழை மக்களுக்கு மலிவு விலையில் தரமான உணவு வழங்க கடந்த 2013-ம் ஆண்டு ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது அம்மா உணவகங்கள் தொடங்கப்பட்டன. சென்னையில் தற்போது 402 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன.

    அம்மா உணவகங்களில் ஆண்டுக்கு ரூ.20 கோடி வருமானம் கிடைக்கிறது. ரூ.140 கோடி செலவு ஏற்படுகிறது. இதனால் ஆண்டுக்கு ரூ.120 கோடி நஷ்டம் ஏற்படுகிறது. 10 ஆண்டுகளில் மாநகராட்சிக்கு ரூ.1200 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

    இதனால் நஷ்டத்தை தவிர்க்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி எடுத்து வருகிறது.

    இதுகுறித்து அம்மா உணவக ஊழியர்கள் கூறியதாவது:-

    ஒரு அம்மா உணவகத்தில் இதுவரை 10 முதல் 12 பேர் வரை பணியாற்றினோம். தற்போது ஊழியர்களின் எண்ணிக்கை 8 ஆக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் எங்களுக்கு மாத சம்பளம் ரூ.9000 வழங்கப்பட்டு வந்தது. அது தற்போது ரூ.6000 ஆக குறைக்கப்பட்டு உள்ளது.

    தினசரி வருவாய் ரூ.2000 முதல் ரூ.2500 வரை இருக்க வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகள் இலக்கு நிர்ணயித்துள்ளனர். போதிய வருமானம் கிடைக்காத நேரத்தில் எங்களது சொந்த பணத்தை கொடுத்து இலக்கை அடைந்து வருகிறோம். இதனால் பலர் வேலையைவிட்டு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

    எனவே மாநகராட்சி அதிகாரிகள் அம்மா உணவகத்தின் நஷ்டத்தை தவிர்க்க புதிய திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • அ.தி.மு.க. ஆட்சியில் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது அம்மா உணவகம் கொண்டு வரப்பட்டது.
    • ஒரு நாள் கூட அம்மா உணவகத்தை நிறுத்த எண்ணவில்லை.

    சென்னை:

    சட்டசபையில் அ.தி.மு.க. உறுப்பினர் எஸ்.பி.வேலுமணி (தொண்டாமுத்தூர்) பேசினார். அப்போது நடைபெற்ற விவாதம் வருமாறு:-

    உறுப்பினர் எஸ்.பி.வேலுமணி:- அ.தி.மு.க. ஆட்சியில் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது அம்மா உணவகம் கொண்டு வரப்பட்டது. இது இந்தியாவில் அதிக மாநிலங்களில் வரவேற்பை பெற்றது. ஆனால் 2021-ம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு அம்மா உணவகத்தை நிறுத்தும் வகையில் கலைஞர் உணவகம் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. கடந்த 3 பட்ஜெட்டுகளில் இந்த திட்டத்துக்கு நிதி ஒதுக்கப்படவில்லை.

    அமைச்சர் கே.என்.நேரு:- ஒரு நாள் கூட அம்மா உணவகத்தை நிறுத்த எண்ணவில்லை. அம்மா உணவகத்தில் ஒரு கடையில் ரூ.4 ஆயிரம் வருமானம் வருகிறதென்றால், ரூ.6 ஆயிரம் சம்பளம் கொடுக்க வேண்டிய நிலை உள்ளது. எனவேதான் சீர்செய்ய, பணியாளர்களை மாற்றி மாற்றி வேலை கொடுக்கிறோம். அனைத்து இடத்திலும் உணவு வழங்கப்பட்டு வருகிறது. அம்மா உணவகத்தை மூட முதலமைச்சர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி:- பல்வேறு அம்மா உணவகத்தில் இருந்து எங்களுக்கு புகார் வந்து கொண்டிருக்கிறது. அங்கு தரமான உணவுப்பொருள் வழங்கப்படுவதில்லை. அதனால் ருசியான உணவு கிடைக்காததால், வாடிக்கையாளர்கள் குறைந்து வருகிறார்கள். அங்கு அரசு தரமான பொருட்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்:- எதிர்க்கட்சி தலைவர், ஆதாரத்தோடு சொன்னால் நிச்சயமாக, உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும். எங்கேயாவது தவறு நடக்கலாம், நான் இல்லை என்று மறுக்கவில்லை. எந்த இடத்தில் குறைபாடு இருக்கிறது என்று சொன்னால் அதற்குரிய நடவடிக்கையை இந்த அரசு நிச்சயமாக எடுக்கும்.

    உறுப்பினர் எஸ்.பி.வேலுமணி:- அம்மா உணவகத்தை சிறப்பாக செயல்படுத்த அ.தி.மு.க. அரசு ரூ.100 கோடி நிதியை ஒதுக்கியது. கடந்த 2 ஆண்டுகால தி.மு.க. ஆட்சியில் நிதி ஒதுக்கப்படவில்லை.

    அமைச்சர் கே.என்.நேரு:- மாநகராட்சி மூலம்தான் அம்மா உணவகம் நடத்தப்பட்டு வருகிறது. அம்மா உணவகத்துக்கு சென்னை மாநகராட்சி மூலம் இந்த ஆண்டு ரூ.129 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் வருவாய் என்பது ரூ.15 கோடியாகத்தான் இருக்கிறது.

    இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

    • அம்மா உணவகத்தில் தயாரிக்கப்படும் உணவு பொருட்கள் மொத்தமாக நடைபாதை கடைகளுக்கு விற்பனை செய்வதாகவும் இதனால் பொதுமக்களுக்கு உணவு கிடைக்கவில்லை என்ற புகாரும் எழுந்துள்ளது.
    • அம்மா உணவகத்தில் யார்? யார்? சாப்பிடுகிறார்கள் என்ற விவரத்தை சேகரிக்க ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டது.

    சென்னை:

    சென்னையில் செயல்பட்டு வரும் அம்மா உணவகங்களில் நாளுக்கு நாள் விற்பனை சரிந்து வருகிறது. அதனை மேம்படுத்த தேவையான நிதி இல்லாததால் வியாபாரம் குறைகிறது.

    3 வேளையும் மலிவு விலையில் உணவு விற்பனை செய்யப்படுவதால் ஆண்டுக்கு ரூ.140 கோடி மாநகராட்சிக்கு செலவாகிறது.

    ஆனால் அம்மா உணவகங்கள் மூலம் ரூ.20 கோடி மட்டுமே வருமானம் வருகிறது. இதனால் பெரும்பாலான அம்மா உணவகங்களில் கோதுமை மாவு வழங்கப்படாததால் இரவில் சப்பாத்தி விற்பனை செய்யப்படவில்லை. அதற்கு பதிலாக தக்காளி சாதம் விற்பனை செய்யப்படுகிறது.

    தற்போதைய ஆய்வின் படி 50 அம்மா உணவகங்கள் மிகவும் மோசமான வருவாயை ஈட்டி வருகின்றன. அங்கு தினமும் ரூ.100, ரூ.150-க்கு மொத்தமே விற்பனை ஆகிறது. மிக குறைந்த அளவில் மக்கள் அங்கு வருவதால் விற்பனை சரிந்து உள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் அம்மா உணவகத்தில் தயாரிக்கப்படும் உணவு பொருட்கள் மொத்தமாக நடைபாதை கடைகளுக்கு விற்பனை செய்வதாகவும் இதனால் பொதுமக்களுக்கு உணவு கிடைக்கவில்லை என்ற புகாரும் எழுந்துள்ளது.

    இதையடுத்து அம்மா உணவகத்தில் யார்? யார்? சாப்பிடுகிறார்கள் என்ற விவரத்தை சேகரிக்க ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டது. இதுதொடர்பாக நடந்த ஆலோசனை கூட்டத்தில், அம்மா உணவகங்களில் சாப்பிட வருவோரிடம் 21 கேள்விகள் கேட்டு அதனை பதிவாக பதிவு செய்து அனுப்ப வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

    கட்டுமான தொழிலாளர்களா? அரசு, தனியார் நிறுவன ஊழியர்களா?, 60 வயதுக்கு மேற்பட்டவரா, சொந்த வீட்டில் வசிப்பவரா, அல்லது வாடகை வீட்டில் வசிப்பவரா, எத்தனை வேளை சாப்பிடுகிறார், என்ன காரணத்திற்காக அங்கு சாப்பிடுகிறார் என்பது போன்ற விவரங்களை சேகரித்து அனுப்புகிறார்கள்.

    தமிழகத்தை சேர்ந்தவரா, பிற மாநிலத்தவரா, என்ன வேலை செய்கிறார் என்ற தகவல் பெறப்படுகிறது. அம்மா உணவகத்தை மேம்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் இந்த புள்ளிவிவரங்கள் சேகரிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

    கட்டுமான தொழிலாளர்கள் சாப்பிட்டால் அதற்கான தொகையை கட்டுமான வாரியத்திடம் வசூலிக்கலாம் என அரசு பரிசீலிக்கிறது.

    அரசு பள்ளியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
    சென்னை:

    சென்னை மாநகராட்சி மூலம் 281 பள்ளிகள் நடத்தப்படுகின்றன. மழலையர் பள்ளி, தொடக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி என நடத்தப்படும் இப்பள்ளிகளில் ஒரு லட்சத்து 7 ஆயிரம் மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

    கொரோனா காலத்தில் மாநகராட்சி பள்ளிகளில் 2 வருடமாக மாணவர் சேர்க்கை அதிகரித்தது. அதனை தக்க வைக்கும் வகையில் வருகிற கல்வி ஆண்டிலும் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. அனைத்து பள்ளிகளும் வருகிற 13-ந்தேதி தொடங்கப்படுகின்றன.

    ஆனாலும் மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவம் மற்றும் விவரங்கள் தற்போது வழங்கப்படுகின்றன. அட்மிஷன் உறுதி செய்யப்படுவதற்கான டோக்கன் வழங்கப்படுகிறது.

    கடந்த ஆண்டை போல இந்த வருடமும் அதிகளவு மாணவர்களை சேர்க்க மாநகராட்சி கல்வித்துறை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. பள்ளிகள் உள்ள பகுதியில் விழிப்புணர்வு பிரசாரம் செய்யவும் திட்டமிடப்பட்டுளது.

    குழந்தைகள் வேலைக்கு செல்வதை தடுக்கும் வகையில் பெற்றோர்களுக்கு கலந்தாய்வு வழங்கப்படுகிறது. மாநகராட்சி பள்ளி குழந்தைகளுக்கு அரசு சார்பில் கிடைக்கும் சலுகைகள், கல்வி உபகரணங்கள் குறித்தும் எடுத்துரைக்கப்படுகின்றன.

    இந்த நிலையில் அரசு பள்ளியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். ஏழை குழந்தைகள் காலை உணவு அருந்தாமலேயே பள்ளிக்கு வருவதால் சோர்வு அடைவதால் அதனை போக்க காலை சிற்றுண்டி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

    பள்ளி திறந்தவுடன் இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கு கல்வித்துறை பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறது. சென்னை மாநகராட்சி பள்ளி குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி அம்மா உணவகம் மூலம் வழங்க ஏற்பாடு நடந்து வருகிறது. குழந்தைகளுக்கு தரமான உணவாக என்ன வழங்கலாம் என்பது குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது.

    சென்னையில் 407 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றின் மூலம் காலைஒ 8 மணிக்கு சிற்றுண்டி வழங்க ஆலோசிக்கப்படுகிறது. 8.30 மணி முதல் 9 மணிக்குள் காலை உணவை அருந்திவிட்டு வகுப்பிற்கு செல்லவும் முடிவு செய்யப்படுகிறது.

    அம்மா உணவகங்களில் இருந்து விற்பனை குறைந்து வருவாய் இழப்பு ஏற்பட்டு வரும் நிலையில் அதனை மேம்படுத்தும் வகையில் காலை சிற்றுண்டியை அங்கிருந்து குழந்தைகளுக்கு வழங்கிட ஏற்பாடு நடந்து வருவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
    மதுரையில் உள்ள அம்மா உணவகத்தில் அனுமதிக்கப்படாத உணவுகளை விற்பனை செய்த விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
    மதுரை:

    மதுரையில் உள்ள அம்மா உணவகத்தில் பூரி, வடை, ஆம்லேட் உள்ளிட்ட உணவுகள் விற்கப்படுவதாக புகார் எழுந்தது.  இதைத்தொடர்ந்து ஆம்லேட் விற்பனை செய்த வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் மகளிர் குழுவின் ஒப்பந்தத்தை ரத்து செய்து மதுரை மாநகராட்சி உதவி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

    மேலும் விரைவில் புதிய மகளிர் குழுவிற்கு ஒப்பந்தம் வழங்கப்படும் என மதுரை மாநகராட்சி உதவி ஆணையர் தகவல் தெரிவித்துள்ளார்.



    அம்மா உணவகங்களில் விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்படுவதால் வரும் காலங்களில் விற்பனை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    சென்னை:

    சென்னையில் 401 அம்மா உணவகங்கள் மாநகராட்சி மூலம் தற்போது செயல்பட்டு வருகின்றன.

    ஒரு சில அம்மா உணவகங்களில் தினமும் ரூ.300, ரூ.500 என்ற அளவில் விற்பனை நடைபெறுவதால் அங்கு பணிபுரியும் ஊழியர்களின் சம்பளத்திற்கே அவை போதுமானதாக இல்லை.

    இதனை சரி செய்யும் வகையில் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து, நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    அம்மா உணவகங்களில் சரிந்த விற்பனையை அதிகரிக்க விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது. மண்டலம் வாரியாக கடைகளுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட உள்ளது. ஒவ்வொரு கடைகளில் நடைபெறும் 3 மாத விற்பனையின் அடிப்படையில் தினமும் குறிப்பிட்ட அளவுக்கு உணவு தயாரித்து விற்பனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

    இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-

    அம்மா உணவங்களில் கடந்த 7 வருடமாக எவ்வித பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை.

    எடை போடும் எந்திரம், மாவு அரைக்கும் எந்திரங்கள் பழுதாகி உள்ளன. இவற்றையெல்லாம் ஆய்வு செய்து பழுது பார்க்கும் பணி நடக்கிறது. பயன்படுத்த தகுதி இல்லாத எந்திரங்களை மாற்றி புதியதாக வாங்கவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் சிறு சிறு பழுதுகளை சீரமைத்து முறைப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    அம்மா உணவகங்களில் விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்படுவதால் வரும் காலங்களில் விற்பனை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    அம்மா உணவகங்களின் ஊழியர் சம்பளம், உணவு பொருட்கள் வாங்குவது போன்றவற்றிக்காக வருடத்திற்கு ரூ.120 கோடி செலவிடப்படுகிறது. 2013-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இத்திட்டத்தால் ஏழை-எளிய கூலி தொழிலாளர்கள் அதிக அளவில் பயன்பெற்று வருகின்றனர்.

    ×