என் மலர்
நீங்கள் தேடியது "O Panneerselvam"
- ஜெயலலிதா என்ன சொல்வாரோ அதை மட்டும்தான் பேசி இருக்கிறேன்.
- நான் பதில் கூற வேண்டும் என வைகோ விரும்பினால் அதற்கு பதில் கூறுவேன்.
2011-ம் ஆண்டில் அதிமுக கூட்டணியில் மதிமுக-வுக்கு 12 இடங்கள் தான் தருவோம் என கூறினார்கள். ஓ. பன்னீர்செல்வம், செங்கோட்டையன், ஜெயக்குமார் ஆகியோர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
நான் அதிமுக கூட்டணியில் நீடிக்க விரும்பவில்லை என ஜெயலலிதாவிடம் கூறியிருக்கிறார்கள். கூட்டணிக்கு மதிமுக வர தயாராகவில்லை என ஜெயலலிதாவிடம் தவறாக கூறியுள்ளார் ஓ.பன்னீர்செல்வம்.
ஜெயலலிதா 15 தொகுதி, ஒரு ராஜ்யசபா சீட் தர தயாராக இருந்தது பின்னர்தான் எனக்கு தெரியவந்தது. அப்போது ஓ.பி.எஸ். செய்த தவறுக்காகத்தான் அதன் பலனை தற்போது அனுபவித்து கொண்டு இருக்கிறார் என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டியிருந்தார்.
இது தொடர்பாக ஓ. பன்னீர் செல்வத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ஓ. பன்னீர் செல்வம் "ஜெயலலிதா என்ன சொல்வாரோ அதை மட்டும்தான் பேசி இருக்கிறேன். நான் பதில் கூற வேண்டும் என வைகோ விரும்பினால் அதற்கு பதில் கூறுவேன். வை.கோ.வின் மனம் புண்படும் என்பதால் அதுகுறித்து கருத்து கூற விரும்பவில்லை. 14 ஆண்டுகளுக்குப் பிறகு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இதை பேசுவது ஏன்?" எனப் பதில் அளித்தார்.
- தனது எம்எல்ஏ பதவியையும் மனோஜ் பாண்டியன் ராஜினாமா செய்தார்.
- பாஜக கட்சியின் கிளை கழகம் போல் அ.தி.மு.க. செயல்படுகிறது என்று தெரிவித்தார்.
முன்னாள் சபாநாயகர் பி.எச். பாண்டியனின் மகன் மனோஜ் பாண்டியன் கடந்த சட்டசபை தேர்தலின்போது ஆலங்குளம் தொகுதியில் இருந்து அ.தி.மு.க. சார்பில் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஓ.பன்னீர்செல்வம் அணியில் இணைந்து செயல்பட்டு வந்தார்.
இந்த நிலையில் மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. நேற்று காலை அண்ணா அறிவாலயம் சென்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து தி.மு.க.வில் சேர்ந்தார். அவருக்கு சால்வை அணிவித்து முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். இதைத்தொடர்ந்து மாலையில் தனது எம்எல்ஏ பதவியையும் மனோஜ் பாண்டியன் ராஜினாமா செய்தார்.
மனோஜ் பாண்டியன் அதிமுகவை விட்டு நீங்கியது குறித்து பேசிய அதிமுக முன்னாள் எம்எல்ஏ வைகைச்செல்வன், தன்மானத்தை அடகு வைத்துவிட்டு திமுக-வில் மனோஜ் பாண்டியன் இணைந்துவிட்டார் என்று விமர்சித்தார்.
திமுகவில் இணைந்தது குறித்து பேசிய மனோஜ் பாண்டியன், பாஜக கட்சியின் கிளை கழகம் போல் அதிமுக செயல்படுகிறது. அ.தி.மு.க.வை அடகு வைத்து விட்டு செயல்படும் நிலை இன்று ஏற்பட்டுள்ளதால் அதில் இருந்து விலகி திமுகவில் தொண்டனாக பணியாற்ற வந்துள்ளேன்.
திராவிட கொள்கைகளை பின்பற்றும் இயக்கமாக தி.மு.க. விளங்குகிறது. வலிமையான தமிழகத்தை உருவாக்க கூடிய தலைவராக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் செயல்படுகிறார் என்று தெரிவித்தார்.
இந்நிலையில் மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்தது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஓ.பன்னீர் செல்வம் "எல்லாம் நன்மைக்கே" என்று மட்டும் பதிலளித்துவிட்டு நகர்ந்தார்.
அதேபோல ஓபிஎஸ், டிடிவி ஆகியோரைச் சந்தித்துப் பேசியதாலேயே செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து நீக்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் குறிப்பிட்டது குறித்த கேள்விக்கு பதிலளித்த ஓபிஎஸ், "செங்கோட்டையனை நீக்கியது அதிகாரத்தின் உச்ச நிலை. இது அழிவுக்குத் தான் வழிவகுக்கும்" என்று தெரிவித்தார்.
- டி.டி.வி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன் மூவரும் ஒன்றிணைந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
- ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன் இருவரும் சிறிதுநேரம் காத்திருந்து சசிகலாவை சந்தித்தனர்.
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் 118-வது ஜெயந்தி மற்றும் 63-வது குருபூஜை விழாவையொட்டி பசும்பொன் தேவர் நினைவிடத்தில் அரசியல் தலைவர்கள், பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தேவர் நினைவிடத்தில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன் மூவரும் ஒன்றிணைந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதைத்தொடர்ந்து டி.டி.வி., ஓ.பி.எஸ்., செங்கோட்டையன் ஒன்றாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது, அ.தி.மு.க. எங்களுக்கு எதிரி இல்லை. இ.பி.எஸ். மட்டும் தான் எங்களது எதிரி. இ.பி.எஸ்.-ஐ வீழ்த்தும் வரை ஓய மாட்டோம் என்று டி.டி.வி.தினகரன் கூறினார்.

இதையடுத்து டி.டி.வி.தினகரன் புறப்பட்டுச் சென்ற நிலையில் ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன் இருவரும் சிறிதுநேரம் காத்திருந்து சசிகலாவை சந்தித்தனர்.
அப்போது ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன் இருவரும் சசிகலாவிடம் பரஸ்பரம் நலம் விசாரித்தனர். பின்னர் அவர்களுடன் சசிகலா சிறிது நேரம் பேசினார்.
பின்னர் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய வி.கே.சசிகலா தரையில் அமர்ந்து வழிபாடு செய்தார்.
- எடப்பாடி பழனிசாமியை வீழ்த்துவதற்காகவே ஒன்றிணைந்து உள்ளோம்.
- அ.தி.மு.க. எங்களுக்கு எதிரி இல்லை. இ.பி.எஸ். மட்டும் தான் எங்களது எதிரி.
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் 118-வது ஜெயந்தி மற்றும் 63-வது குருபூஜை விழாவையொட்டி பசும்பொன் தேவர் நினைவிடத்தில் அரசியல் தலைவர்கள், பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தேவர் நினைவிடத்தில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன் மூவரும் ஒன்றிணைந்து மரியாதை செலுத்தினர்.

இதையடுத்து டி.டி.வி., ஓ.பி.எஸ்., செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு கூட்டாக பேட்டி அளித்தனர். அப்போது டி.டி.வி.தினகரன் கூறியதாவது:
* துரோகத்தின் முகவரியான எடப்பாடி பழனிசாமி மட்டும் தான் எங்கள் எதிரி.
* துரோகத்தை வீழ்த்தும் வரை அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் என்றும் ஓயாது.
* எடப்பாடி பழனிசாமியை வீழ்த்துவதற்காகவே ஒன்றிணைந்து உள்ளோம்.
* காலதாமதம் காரணமாக சசிகலாவால் எங்களுடன் இணைந்து இன்று வர முடியவில்லை.
* சசிகலா எங்கு இருந்தாலும் மனதால் என்றும் எங்களுடன் இணைந்து உள்ளார்.
* அ.தி.மு.க.வில் பிரிந்தவர்களை ஒருங்கிணைக்கும் முயற்சி தொடரும்.
* ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையனுடன் கைகோர்த்து தேர்தலை எதிர்கொண்டு வெற்றி பெறுவோம்.
* அ.தி.மு.க. எங்களுக்கு எதிரி இல்லை. இ.பி.எஸ். மட்டும் தான் எங்களது எதிரி. இ.பி.எஸ்.-ஐ வீழ்த்தும் வரை ஓய மாட்டோம்.
* தொடர்ந்து ஒருங்கிணைந்து பயணிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைக்க வேண்டும் என செங்கோட்டையன் கெடு விதித்தார்
- செங்கோட்டையனை கட்சிப் பதவிகளில் இருந்து நீக்கி பழனிசாமி உத்தரவிட்டார்
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கட்சி ஒன்றிணைப்பு குறித்து குரலெழுப்பி பரபரப்பை ஏற்படுத்தினார். அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்று கட்சித் தலைமைக்கு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் 10 நாள் கெடு விதித்தார்
இதைதொடர்ந்து, செங்கோட்டையனை கட்சிப் பதவிகளில் இருந்து நீக்கி பொதுச் செயலாளர் பழனிசாமி உத்தரவிட்டார்.
பின்னர், டெல்லிக்கு சென்ற எடப்பாடி பழனிசாமி அமித்ஷாவை சந்தித்துப் பேசினார். இதைத் தொடர்ந்து, டெல்லிக்குச் சென்ற செங்கோட்டையன் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை தனியாக சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்புக்குப் பிறகு, செங்கோட்டையன் அமைதி காத்து வந்தார்.
இந்நிலையில், மதுரையில் இருந்து பசும்பொன்னுக்கு, ஒரே காரில் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் செங்கோட்டையன் ஆகியோர் பயணம் செய்தனர்
பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்திற்கு இருவரும் ஒன்றாக வந்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
முத்துராமலிங்க தேவர் நினைவிடத்திற்கு ஓபிஎஸ் - செங்கோட்டையன் ஒரே வேனில் வந்தது குறித்த எடப்பாடி பழனிசாமியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த அவர், "எனக்குத் தெரியவில்லை, வந்தால் பதில் சொல்றேன்" என்று தெரிவித்தார்.
- அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைக்க வேண்டும் என செங்கோட்டையன் கெடு விதித்தார்
- செங்கோட்டையனை கட்சிப் பதவிகளில் இருந்து நீக்கி பழனிசாமி உத்தரவிட்டார்.
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கட்சி ஒன்றிணைப்பு குறித்து குரலெழுப்பி பரபரப்பை ஏற்படுத்தினார். அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்று கட்சித் தலைமைக்கு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் 10 நாள் கெடு விதித்தார்
இதைதொடர்ந்து, செங்கோட்டையனை கட்சிப் பதவிகளில் இருந்து நீக்கி பொதுச் செயலாளர் பழனிசாமி உத்தரவிட்டார்.
பின்னர், டெல்லிக்கு சென்ற எடப்பாடி பழனிசாமி அமித்ஷாவை சந்தித்துப் பேசினார். இதைத் தொடர்ந்து, டெல்லிக்குச் சென்ற செங்கோட்டையன் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை தனியாக சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்புக்குப் பிறகு, செங்கோட்டையன் அமைதி காத்து வந்தார்.
இந்நிலையில், மதுரையில் இருந்து பசும்பொன்னுக்கு, ஒரே காரில் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் செங்கோட்டையன் ஆகியோர் பயணம் செய்தனர்
பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்திற்கு இருவரும் ஒன்றாக வந்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
- அ.தி.மு.க ஒன்றிணைய வேண்டும் என்பதுதான் எங்களது நோக்கமாகும்.
- கரூரில் விஜய் பிரசார கூட்டத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சென்னையில் அழைத்து விஜய் பேசுவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளது.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் உள்ள மருதுபாண்டியர்கள் நினைவாலயத்தில் குருபூஜையை முன்னிட்டு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மரியாதை செலுத்தினர். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மருதுபாண்டியர்களின் வீரம், தியாகம் உலக அளவில் போற்றப்பட்டு மதிக்கப்பட்டு வருகின்றது. எனது சார்பில் மருதுபாண்டியர்கள் சிலைக்கு வெள்ளிக் கவசத்தை அணிவித்து உள்ளேன்.
எதிர்க்கட்சிகளிடம் ஒற்றுமை இல்லாத சூழ்நிலை நீடித்து வருகிறது. இந்த நிலை நீடித்தால் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. மீண்டும் வெற்றி பெற்று ஆட்சிக்கு வரும். கரூரில் விஜய் பிரசார கூட்டத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சென்னையில் அழைத்து விஜய் பேசுவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளது.
அ.தி.மு.க ஒன்றிணைய வேண்டும் என்பதுதான் எங்களது நோக்கமாகும். எம்.ஜி.ஆர். அ.தி.மு.க வை தொடங்கும்போது தொண்டர்களால் பொதுச் செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று சட்டவிதியினை கொண்டு வந்தார். இதை எக்காரணம் கொண்டும் மாற்றக்கூடாது என சட்டவிதியை எம்.ஜி.ஆர். உருவாக்கினார்.
ஆனால் எடப்பாடி பழனிசாமி 10 மாவட்ட செயலாளர்கள் முன்மொழிந்தும், 10 மாவட்ட செயலாளர்கள் வழிமொழிந்தால் போதுமென்று சட்ட திருத்தம் செய்துள்ளார். இதை எதிர்த்து வழக்கு தாக்கல் செய்துள்ளோம். இதனை சென்னை சிவில் நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இறுதி தீர்ப்பை நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது மாவட்ட செயலாளர் அசோகன், வழக்கறிஞர் சுந்தரபாண்டியன் உள்ளனர்.
- நடிகர் ரஜினிகாந்தை முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசினார்.
- மரியாதை நிமித்தமாக ரஜினியைச் சந்தித்து தீபாவளி வாழ்த்து தெரிவித்தார்.
சென்னை:
சென்னையில் நடிகர் ரஜினிகாந்தை அவரது வீட்டிற்குச் சென்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்துப் பேசினார். ஓ.பன்னீர்செல்வத்துடன் அவரது மகன் ஓ.பி.ரவீந்திரநாத்தும் நடிகர் ரஜினிகாந்தைச் சந்தித்தார்.
மரியாதை நிமித்தமாக ரஜினியைச் சந்தித்து தீபாவளி வாழ்த்து தெரிவித்ததாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பான புகைப்படங்களை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள ஓ.பி.ரவீந்திரநாத், இன்று உலகமெங்கும் உள்ள மக்களின் இதயத்தில் நீங்கா இடம் பெற்ற தமிழ்த் திரையுலகின் பெருமைமிகு நாயகன், பத்மவிபூஷண், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் லதா ரஜினிகாந்தை தமிழக முன்னாள் முதலமைச்சரும், கழக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் உடன் இணைந்து, மரியாதை நிமித்தமாக அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து, எனது தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டு, ஆசி பெற்றேன் என பதிவிட்டுள்ளார்.
- முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை கோரிக்கை விடுத்து இருந்தார்.
- தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக, ஓ.பி.எஸ்., டி.டி.வி.தினகரன் அறிவித்திருப்பது, இறுதி முடிவாக இருக்காது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை தொடர்ந்து, அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனும் விலகி உள்ளார்.
இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை கோரிக்கை விடுத்து இருந்தார்.
இதுதொடர்பாக பா.ஜ.க. மூத்த தலைவர் எச்.ராஜா, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக, ஓ.பி.எஸ்., டி.டி.வி.தினகரன் அறிவித்திருப்பது, இறுதி முடிவாக இருக்காது என்று தெரிவித்து உள்ளார்.
இந்நிலையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறுகையில், பா.ஜ.க. கூட்டணியில் மீண்டும் ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி. தினகரன் இணைந்தாலும் அது உடைந்த கண்ணாடி போன்று கீறல்களுடன்தான் இருக்கும் என்று விமர்சனம் செய்துள்ளார்.
- கட்சி நிர்வாகிகளின் கருத்தை கேட்டு அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
- இ.பி.எஸ். கூறியிருப்பதற்கு நல்ல ஒரு விளக்கத்தை அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறி இருக்கிறார்.
சென்னையில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறியதாவது:
* கட்சி நிர்வாகிகளின் கருத்தை கேட்டு அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
* விரைவில் தனது தரப்பு மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்ட உள்ளேன்.
* அ.தி.மு.க. ஆட்சியை காப்பாற்றியதே பா.ஜ.க. தான் என்று இ.பி.எஸ். கூறியிருப்பதற்கு நல்ல ஒரு விளக்கத்தை அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறி இருக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பிரதமர் மோடி இன்று தனது 75வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
- உங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தை வழங்கட்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன்
பிரதமர் நரேந்திர மோடி இன்று (செப்டம்பர் 17) தனது 75வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
பிரதமர் நரேந்திர மோடியின் 75-வது பிறந்தநாளையொட்டி, அவருக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களுக்கு, உங்கள் 75வது பிறந்தநாளின் மகிழ்ச்சியான தருணத்தில், எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். நீங்கள் எப்போதும் செய்து வருவது போல், நாட்டிற்கும் மக்களுக்கும் சேவை செய்ய, எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு இன்னும் பல ஆண்டுகள் நல்ல ஆரோக்கியத்தை வழங்கட்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
- அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்த அனைவரும் ஒன்றிணைந்தால் தான் எம்.ஜி.ஆரின் நோக்கம் நிறைவேறும்.
- பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் என்னுடன் பேசினார். நேரம் கிடைத்தால் சந்திப்பேன்.
சென்னையில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.
* அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்த அனைவரும் ஒன்றிணைந்தால் தான் எம்.ஜி.ஆரின் நோக்கம் நிறைவேறும்.
* செங்கோட்டையனும் நானும் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறோம்.
* தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் என்னுடன் பேசினார். நேரம் கிடைத்தால் சந்திப்பேன்.
* அ.தி.மு.க. சட்டவிதிகளை காற்றில் பறக்க விட்டிருப்பதாக அவர் குற்றம்சாட்டினார்.






