என் மலர்

    நீங்கள் தேடியது "O Panneerselvam"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தி.மு.க. அரசின் அலட்சியப் போக்கினால் சிறுவனின் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கிறது.
    • அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சென்னை மதுரவாயல், பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த அய்யனார் மகன் ரக்சன் டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழந்த தகவல் மிகுந்த மன வேதனை அளித்துள்ளது. மதுரவாயல் பகுதியில் ஆங்காங்கே கழிவுநீர் தேங்கியுள்ளதன் காரணமாக கொசு உற்பத்தி பெருகியுள்ளதால் இப்பகுதியில் டெங்கு உள்ளிட்ட தொற்று நோய்கள் அதிகமாக பரவி வருவதாகவும், சென்னை மாநகராட்சியிடம் இதுகுறித்து புகார் அளித்தும் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை என்றும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

    இது கடும் கண்டனத்திற்குரியது. தி.மு.க. அரசின் அலட்சியப் போக்கினால் சிறுவனின் உயிரிழப்பு ஏற்பட்டி ருப்பதால், உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கு நிவாரண உதவி அளிக்க வேண்டும். டெங்கு காய்ச்சலால் உயிரிழப்பு என்ற நிலை உருவாவதை தடுக்க அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டு மென்று கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் காஞ்சிபுரத்தில் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
    • ஓ.பி.எஸ். புரட்சி பயணத்தின் தொடக்கமாக இந்த பொதுக்கூட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது.

    அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளராக இருந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கடந்தாண்டு ஜூலை மாதம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானத்தை அங்கீகரித்து சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கி விட்டது.

    இதைத் தொடர்ந்து தன் ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்களை சந்திக்க மாவட்டம்தோறும் சென்று பொதுக்கூட்டம் நடத்த ஓ.பன்னீர்செல்வம் முடிவு செய்து, இந்த சந்திப்புக்கு 'புரட்சி பயணம்' என்று பெயரிட்டார். இதன் துவக்கமாக இன்று காஞ்சிபுரம் அருகே கலியனூர் பொதுக்கூட்டத்தில் பேச திட்டமிட்டு இருந்தார்.

    இந்த நிலையில் இன்று நடைபெற இருந்த பொதுக்கூட்டம் மழை காரணமாக நிறுத்தப்பட்டு விட்டது. இன்றைய பொதுக்கூட்டம் திடீரென நிறுத்தப்பட்ட நிலையில், வேறொரு நாளில் இந்த பொதுக்கூட்டம் நடைபெறும் என்று ஓ.பி.எஸ். அணியில் இடம்பெற்று இருக்கும் பண்ரூட்டி ராமச்சந்திரன் அறிவித்து இருக்கிறார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அ.தி.மு.க. சார்பில் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன.
    • ரஜினிகாந்தை ஓ.பி.எஸ். சந்தித்த உடனே, ஊடகங்களில் அவை மிகப்பெரிய செய்தி ஆகி உள்ளன.

    காஞ்சிபுரத்தில் இன்று மாலை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க. கொடி மற்றும் சின்னத்தை ஓ.பன்னீர்செல்வமும் அவரது அணியினரும் பயன்படுத்தி வருவது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பாராளுமன்ற வடிவில் அமைக்கப்பட்டுள்ள மேடையில் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போட்டோக்களுடன் ஓ.பன்னீர்செல்வத்தின் புகைப்படமும் இடம் பெற்றுள்ளது.

    அ.தி.மு.க.வில் இருந்து ஓரம் கட்டப்பட்ட பின்னரும் ஓ.பன்னீர்செல்வமும் அவரது ஆதரவாளர்களும் அ.தி.மு.க. பெயர், கொடி, சின்னம் ஆகியவற்றை தொடர்ச்சியாக பயன்படுத்தி வருகின்றனர்.

    இதற்கு அ.தி.மு.க. சார்பில் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் ஓ.பி.எஸ். அணியினர் அதனை கண்டு கொள்ளாமல் அ.தி.மு.க. பெயரையும் கட்சி கொடியையும் பயன்படுத்தி வருவது வாடிக்கையாகவே இருந்து வருகிறது.

    அந்த வகையில் காஞ்சிபுரத்தில் இன்று மாலை நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் அ.தி.மு.க. கொடி மற்றும் சின்னத்தை ஓ.பன்னீர்செல்வமும் அவரது அணியினரும் பயன்படுத்தி வருகிறார்கள். அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலையில் ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டது செல்லும் என்றும் தீர்ப்பு வெளியாகி இருக்கிறது.

    இதன் பிறகும் அ.தி.மு.க. கொடி மற்றும் சின்னத்தை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்தி வருவது அ.தி.மு.க. நிர்வாகிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக அ.தி.மு.க. மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் தலைமையில் அ.தி.மு.க.வினர் ஒன்று திரண்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகரை சந்தித்து மனு அளித்தனர். அதில் அ.தி.மு.க.வுக்கு தொடர்பில்லாத நபர்கள் கட்சியின் கொடி மற்றும் சின்னத்தை பயன்படுத்த தடைவிதிக்க வேண்டும். அதை மீறி செயல்பட்டால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இந்த புகார் மனுவை அ.தி.மு.க.வினர் கடந்த 31-ந் தேதி அளித்திருந்தனர். ஆனால் அது தொடர்பாக போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் அணியினர் அ.தி.மு.க. கொடிகள் மற்றும் சின்னத்தை காஞ்சிபுரம் முழுவதும் கட்டியுள்ளனர். இது தொடர்பாக ஓ.பி.எஸ். அணியின் துணை ஒருங்கிணைப்பாளரான ஜே.சி.டி.பிரபாகர் பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தில் அளித்த பேட்டி வருமாறு:-

    ரஜினிகாந்தை ஓ.பி.எஸ். சந்தித்த உடனே, ஊடகங்களில் அவை மிகப்பெரிய செய்தி ஆகி உள்ளன. தமிழகத்தில் ஒரு மாற்றம் வரப்போகிறது, ஒரு ஏற்றம் வரப்போகிறது. நாளை இந்த தமிழகம் எதிர்பார்க்கும் மாற்றமும், ஏற்றமும் அளிக்கும் கூட்டமாக இது அமையும்.

    ரஜினிகாந்துடன் நடைபெற்ற சந்திப்பு ஒரு மணி நேரத்திற்கு மேலாக நீடித்தது. அந்த சந்திப்பில் என்ன நடந்தது என்பது குறித்து ஓ.பி.எஸ். அறிவிப்பார். ஒரு மணி நேரம், தமிழகத்தில் மக்கள் விரும்பும் இரு பெரும் தலைவர்கள் சந்திக்கும் பொழுது, எல்லாவற்றையும் பேசியிருப்பார்கள் அதில் 'அரசியலுக்கு பஞ்சம் இருக்காது' என கருதுகின்றேன்.

    டி.டி.வி.தினகரன் மற்றும் சசிகலா கலந்து கொள்வார்களா என்கிற கேள்விக்கு பதில் அளிக்கையில், அவர்கள் மட்டுமல்ல இன்னும் பலரும் கலந்து கொள்வார்கள். இதுதான் உண்மையான அ.தி.மு.க. நாங்கள்தான் உண்மையான அ.தி.மு.க. தனிக்கட்சி துவங்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த புரட்சி பயணம் முடியும் பொழுது, மக்கள் யாரை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள், யார் பக்கம் இந்த கட்சி இருக்கிறது என்பதை இந்த நாடு பார்க்கப்போகிறது.

    தி.மு.க.வுக்கு சரியான பதிலடியை, கொடுக்கும் கூட்டமாக நாளை நடைபெற உள்ள கூட்டம் அமையும். தி.மு.க.வுக்கு எதிராக தொடுக்கப்பட்டு உள்ள அம்புகள் எல்லாம் நிச்சயமாக தெரிய வரும். 40 தொகுதிகளிலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தான் போட்டியிடும். ஓ.பி.எஸ். தொண்டர்களின் தலைவராக நிச்சயமாக அவர் தலைமை ஏற்பார்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பாரதிய ஜனதா கட்சியை நாங்கள் எதிர்ப்பது கிடையாது
    • பாரதிய ஜனதாவுக்கு எதிராக எங்கள் அரசியல் பயணம் இருக்காது.

    சென்னை:

    அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளராக இருந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கடந்தாண்டு ஜூலை மாதம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.

    இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானத்தை அங்கீகரித்து சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கி விட்டது. ஆனாலும் 'மெயின் வழக்கு' இன்னும் நிலுவையில் உள்ளது.

    இந்த தீர்ப்பு எப்போது வெளிவரும் என்று தெரியாத நிலையில், தன் ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்களை சந்திக்க மாவட்டம்தோறும் சென்று பொதுக்கூட்டம் நடத்த உள்ள ஓ.பன்னீர்செல்வம், இதற்கு 'புரட்சி பயணம்' என்று பெயரிட்டுள்ளார்.

    இதன் துவக்கமாக இன்று காஞ்சிபுரம் அருகே கலியனூர் பொதுக்கூட்டத்தில் பேச உள்ளார். இந்த நிலையில் நேற்று காலை 9 மணியளவில் சென்னை போயஸ்கார்டனில் உள்ள நடிகர் ரஜினி வீட்டுக்கு ஓ.பன்னீர்செல்வம் சென்றார். இருவரும் ஒரு மணி நேரம் தனியாக பேசினர்.

    இந்த சந்திப்பின்போது ஓ.பன்னீர்செல்வம் தன் ஆதரவாளர்கள் யாரையும் உடன் அழைத்துச் செல்லவில்லை. இருவர் மட்டும் அமர்ந்து தற்போதைய அரசியல் சூழ்நிலை, லோக்சபா தேர்தல் உள்பட பல விஷயங்கள் குறித்து பேசியதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

    பாரதிய ஜனதா தலைமை இப்போது எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக நடந்து வரும் சூழலில் தனித்து விடப்பட்டுள்ள ஓ.பன்னீர்செல்வம் தனது நிலைப்பாட்டை விளக்குவதற்காக ரஜினியை சந்தித்து பேசி இருக்கிறார்.

    பாரதிய ஜனதா கட்சியை நாங்கள் எதிர்ப்பது கிடையாது. எடப்பாடியை தான் எதிர்க்கிறோம். அதற்கேற்ப எங்களது அரசியல் வியூகம் அமையும்.

    பாரதிய ஜனதா மேலிடத்தில் பேசி எங்கள் நிலைமையை புரிய வையுங்கள். நாங்கள் எப்போதும் மோடி, அமித்ஷாவுக்கு துணை நிற்போம். பாரதிய ஜனதாவுக்கு எதிராக எங்கள் அரசியல் பயணம் இருக்காது. இது பற்றி நீங்கள் சொல்ல வேண்டிய இடத்தில் சொல்லுங்கள் என்று ரஜினியிடம் கேட்டுக்கொண்டதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

    ரஜினிக்கு பாரதிய ஜனதா தலைவர்களுடன் நல்ல நட்பு உள்ளதால், அவர் வாயிலாக பாரதிய ஜனதா தலைமைக்கு தூது அனுப்பவே இந்த சந்திப்பு நடந்துள்ளதாக அவரது ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • காஞ்சிபுரம் களியனூரில் அருகே பிரமாண்ட பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
    • காஞ்சிபுரம் செல்லும் பன்னீர்செல்வம் அங்குள்ள அண்ணா நினைவு இல்லத்துக்கு சென்று மாலை அணிவித்து வணங்குகிறார்.

    காஞ்சிபுரம்:

    அ.தி.மு.க.வில் தலைமை பதவி யாருக்கு என்கிற போட்டியில் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்று அ.தி.மு.க. பொதுச் செயலாளராக அங்கீகரிக்கப்பட்டு உள்ளார்.

    இதைத் தொடர்ந்து தனி அணியாக செயல்பட்டு வரும் பன்னீர்செல்வம் அடுத்து என்ன செய்யப் போகிறார்? என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. இது தொடர்பாக அவர் விரைவில் அடுத்தடுத்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது.

    ஓ.பி.எஸ். தொடங்கப்போகும் புதிய கட்சிக்கு அம்மா தி.மு.க. புரட்சித் தலைவி அ.தி.மு.க. உள்ளிட்ட பெயர்களை வைப்பதற்காக பரிசீலனை செய்யப்பட்டு வருவதாகவும் தெரிகிறது. இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் தனது பிரசார பயணத்தை காஞ்சிபுரத்தில் இன்று மாலை தொடங்குகிறார்.

    இதற்காக காஞ்சிபுரம் களியனூரில் அருகே பிரமாண்ட பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த கூட்டத்தில் பன்னீர்செல்வம் கலந்துகொண்டு பேசுகிறார். 20 ஆயிரம் பேர் அமரும் வகையில் பொதுக்கூட்ட மேடை முன்பு இருக்கைகள் போடப்பட்டுள்ளன.

    ஓ.பன்னீர்செல்வத்தை வரவேற்பதற்காக பிரமாண்டமான முறையில் ஏற்பாடுகளை செய்துள்ளனர். இதன் காரணமாக வழிநெடுக ஓ.பி.எஸ்.சை வரவேற்று பேனர்கள் வைக்கப்பட்டு உள்ளன. காஞ்சிபுரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.

    இன்று பிற்பகலில் காஞ்சிபுரம் செல்லும் பன்னீர்செல்வம் அங்குள்ள அண்ணா நினைவு இல்லத்துக்கு சென்று மாலை அணிவித்து வணங்குகிறார்.

    பின்னர் பொதுக்கூட்ட மேடைக்கு சென்று சிறப்புரையாற்றுகிறார். இந்த கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் அணியில் உள்ள முன்னணி நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொள்கிறார்கள். இன்றைய பிரசார பயண பொதுக்கூட்டத்தின்போது ஓ.பன்னீர்செல்வம் தனது எதிர்கால திட்டங்கள் தொடர்பாக முக்கிய அறிவிப்புகளை வெளியிட இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

    இதுதொடர்பாக ஓ.பி.எஸ். அணியின் முன்னணி நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-

    அ.தி.மு.க.வில் உள்ள உண்மை தொண்டர்கள் எங்கள் பக்கமே உள்ளனர். அவர்களை வழிநடத்துவதற்காக தனி அமைப்பை உருவாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

    அதற்கான தொடக்கமாகவே இன்றைய பொதுக்கூட்டம் அமையும். இந்த கூட்டத்தில் பன்னீர்செல்வம் என்ன பேசப் போகிறார் என்பதை அரசியல் களமே எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் அரசியல் மாற்றத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் முக்கிய காரணமாக இருப்பார்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    காஞ்சிபுரத்தில் இன்று பிரசார பயணத்தை தொடங்க உள்ள ஓ.பன்னீர்செல்வம் அடுத்த வாரம் முதல் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று இதே போன்று பிரசார பயண பொதுக்கூட்டங்களில் பங்கேற்க இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    அதற்கான பயணத்திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது. வருகிற 9-ந் தேதி பன்னீர்செல்வத்தின் மனைவி 2-வது ஆண்டு நினைவு நாளாகும். அது முடிந்த பிறகு பன்னீர்செல்வம் பிரசார பயணத்தில் தீவிரம் காட்ட உள்ளார்.

    அப்போது தமிழகம் முழுவதும் உள்ள ஆதரவாளர்களை திரட்டி தனது பலம் என்ன என்பதையும் அவர் காட்ட இருக்கிறார்.

    இந்த பொதுக்கூட்டத்துக்கான ஏற்பாடுகளை காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் ஆர்.வி.ரஞ்சித்குமார் செய்துள்ளார்.

    இதன் காரணமாக காஞ்சிபுரத்தில் இன்று நடைபெற உள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் பொதுக்கூட்டம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 2001 முதல் 2006 வரையில் ஆட்சியில் ஓ.பி.எஸ். வருவாய்த்துறை மந்திரியாக இருந்தார்
    • 1.76 கோடி ரூபாய் அதிகமாக சொத்து குவித்ததாக குற்றச்சாட்டு

    தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், ஜெயலிதாவின் 2001-2006 ஆட்சிக் காலத்தில் வருவாய்த்துறை மந்திரியாக இருந்தார்.

    2006-ம் ஆண்டு ஆட்சி மாறியபோது, ஓ. பன்னீர் செல்வம் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, அவர் மீது தமிழக அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் 374 சதவீதம் அதிகமாக 1.76 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக ஓ.பன்னீர் செல்வம், அவரது மனைவி மற்றும் மகன் மீது வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கு முதலில் மதுரை உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. பின்னர் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி சிவகங்கை நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

    2011-ல் மீண்டும் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சி அமைந்தது, அப்போது, வழக்கை திரும்ப பெற்றுக் கொள்ள தமிழக அரசு முடிவு செய்தது. 2012-ல் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், போதிய ஆதாரங்கள் இல்லாத அடிப்படையில் வழக்கு திரும்பப்பெற முடிவு செய்து மனுதாக்கதல் செய்யப்பட்டது.

    இதனால் சிவகங்கை நீதிமன்றம் ஓ. பன்னீர் செல்வம் உள்பட்ட வழக்கில் இணைக்கப்பட்ட அனைவரையும் விடுதலை செய்தது.

    இந்த நிலையில்தான் உயர்நீதிமன்றம் இது தொடர்பாக தானாக முன்வந்து விசாரணை நடத்தும் என அறிவித்தது. அதன்படி இன்று விசாரணை நடைபெற்றது. அப்போது இது தொடர்பாக பதில் அளிக்க ஓ. பன்னீர் செல்வம், லஞ்ச ஒழிப்புத்துறை உள்ளிட்டோர் பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    மேலும், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் "குற்ற வழக்கு விசாரணை கேலிக்கூத்தாக்கப்பட்டுள்ளது. சட்டம் எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு பொருந்தாது என அறிவித்து விடலாம். அதிகார வரம்பு இல்லாத தலைமை குற்றவியல் நடுவர் மன்றத்துக்கு வழக்கை உயர்நீதிமன்றம் மாற்றியுள்ளது. எம்.பி., எம்.எல்.ஏ.-க்கள் மீதான வழக்குகளில் பின்பற்றப்படும் நடைமுறையில் பிரச்சனைகள் உள்ளன" என தனது வேதனையை தெரிவித்துள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஆதரவாளர்களின் எண்ண ஓட்டத்தை பிரதிபலிக்கும் வகையில் ஓ.பன்னீர்செல்வம் விரைவில் தனிக்கட்சியை தொடங்க உள்ளார்.
    • எங்கள் வாக்கு வங்கி என்ன என்பதை பாராளுமன்ற தேர்தலில் நிரூபித்துக் காட்டவே களம் இறங்க உள்ளோம்.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் இருந்து ஓரம் கட்டப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் தனிக்கட்சி தொடங்க திட்டமிட்டுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் அவர் 3-வது அணியை அமைப்பதற்கும் ஆயத்தமாகி வருவதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

    தமிழகத்தில் அ.தி.மு.க.-பா.ஜனதா தலைமையில் ஒரு கூட்டணியும், தி.மு.க.-காங்கிரஸ் தலைமையில் இன்னொரு கூட்டணியும் பாராளுமன்ற தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன.

    அ.தி.மு.க. பொதுச் செயலாளராக அங்கீகரிக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமியை டெல்லியில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்துக்கு அழைத்து பிரதமர் அருகில் அமர வைத்து முக்கியத்துவம் கொடுத்ததை ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் ரசிக்கவில்லை.

    அதே நேரத்தில் ஓ.பன்னீர்செல்வத்தை அந்த கூட்டத்துக்கு அழைக்காமல் பா.ஜனதா புறக்கணித்திருப்பதையும் அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்க்கவில்லை. கடைசி நேரத்தில் எப்படியாவது பாரதிய ஜனதா கட்சி சமரசம் பேசி ஓ.பன்னீர்செல்வத்தையும் தங்களையும் அ.தி.மு.க.வில் கொண்டு போய் சேர்த்து விடும் என்றே ஆதரவாளர்கள் நம்பி இருந்தனர்.

    ஆனால் பாரதிய ஜனதா கட்சியோ கடைசி நேரத்தில் காலை வாரியது போல ஓ. பன்னீர்செல்வத்தை கண்டு கொள்ளாமலேயே விட்டு விட்டது. இது ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் மத்தியில் பாரதிய ஜனதா மீது கடுமையான மனக் கசப்பையும் வருத்தத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு பாராளுமன்ற தேர்தலில் தகுந்த பதிலடி கொடுக்க அவர்கள் விரும்புகிறார்கள்.

    பாரதிய ஜனதா கூட்டணி வேண்டாம் என்று முடிவு எடுக்கும்பட்சத்தில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியில் போய் சேர முடியாது என்பதையும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் உணர்ந்துள்ளனர். தங்கள் பலத்தை காட்டுவதற்காக தனிக்கட்சி தொடங்குவதற்கு ஓ.பன்னீர்செல்வத்திடம் ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். ஆதரவாளர்களின் இந்த எண்ண ஓட்டத்தை பிரதிபலிக்கும் வகையில் ஓ.பன்னீர்செல்வம் விரைவில் தனிக்கட்சியை தொடங்க உள்ளார்.

    அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதனை ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு மூத்த தலைவரான பண்ருட்டி ராமச்சந்திரன் உறுதிபடுத்தி உள்ளார்.

    இது தொடர்பாக அவர் அளித்திருக்கும் பேட்டியில் தமிழகத்தில் பாரதிய ஜனதா, காங்கிரஸ் இல்லாத அணியை பாராளுமன்ற தேர்தலில் உருவாக்க திட்டமிட்டிருப்பதாக தெரிவித்துள்ளார். இதற்கான ஆயத்த பணிகள் தொடங்கி இருப்பதாக ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு முக்கிய நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    புரட்சி தலைவர், புரட்சி தலைவி வழியில் தொண்டர்கள் சந்திப்பு புரட்சி பயணத்தை வருகிற 3-ந்தேதி அன்று காஞ்சிபுரத்தில் ஓ.பி.எஸ். தொடங்குகிறார். அன்று அவர் எதிர்கால திட்டங்கள் தொடர்பாக பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட உள்ளார்.

    அ.தி.மு.க. விவகாரத்தில் எங்கள் பக்கம் சாதகமான சூழல் இல்லாத நிலையில் தனிக்கட்சி தொடங்குவது தான் எங்களுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு என்பதை நாங்கள் உணர்ந்துள்ளோம். அப்படி ஒரு நிலை ஏற்பட்ட பிறகு எங்களோடு ஒத்த கட்சிகளாக இருக்கும் பாரதிய ஜனதா மற்றும் காங்கிரசை விரும்பாத கட்சிகளோடு சேர்ந்து பயணிக்க திட்டமிட்டு வருகிறோம். இது நிச்சயம் வலிமையான 3-வது அணி போன்று அமைய வாய்ப்புகள் உள்ளன.

    எல்லாம் முடிந்து விட்டது என்று எங்களைப் பற்றி பலர் கணக்கு போட்டு வைத்துள்ளனர். அதனை பொய்யாக்கும் வகையில் எங்களது அடுத்தகட்ட நடவடிக்கைகள் இருக்கும். எங்கள் வாக்கு வங்கி என்ன என்பதை பாராளுமன்ற தேர்தலில் நிரூபித்துக் காட்டவே களம் இறங்க உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் எஸ்.ஏ. அசோகன் ஓ.பி.எஸ்.சின் தீவிர ஆதரவாளராக இருந்தார்.
    • அடுத்த சில நாட்களில் இருக்கும் ஒரு சிலரும் விலகி எடப்பாடி பக்கம் ஓடி வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

    ஓ.பன்னீர்செல்வம் அணியில் வைத்திலிங்கம் (ஒரத்தநாடு), மனோஜ் பாண்டியன் (ஆலங்குளம்), ஐயப்பன் (உசிலம்பட்டி) ஆகிய 3 எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள். முக்கிய நிர்வாகிகள் விரல்விட்டு எண்ணும் நிலையில் ஓரிருவர்தான் இருக்கிறார்கள்.

    கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் எஸ்.ஏ. அசோகன் ஓ.பி.எஸ்.சின் தீவிர ஆதரவாளராக இருந்தார். இப்போது அங்கிருந்து விலகி எடப்பாடி பழனிசாமியின் 'கிரீன்' சிக்னலுக்காக காத்திருக்கிறார்.

    இப்போது பொதுக்குழு தீர்மானம் தொடர்பான வழக்கும் ஓ.பி.எஸ்.சை கைவிட்டுவிட்டதால் 3 எம்.எல்.ஏ.க்களும் ஊசலாட்டத்தில் இருக்கிறார்கள். பெரும்பாலும் எல்லா நிர்வாகிகளும் திரிசங்கு சொர்க்க நிலையில்தான் இருப்பது போல் முணுமுணுக்கிறார்கள்.

    அடுத்த சில நாட்களில் இருக்கும் ஒரு சிலரும் விலகி எடப்பாடி பக்கம் ஓடி வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கட்டிக்காக்க என்ன வழி என்று தெரியாமல் தியானத்தில் அமர்ந்து ஓ.பன்னீர்செல்வம் யோசிக்கிறாராம்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கச்சத்தீவு தாரைவார்ப்பினை தடுத்து நிறுத்த முதலமைச்சர் என்ற முறையில் கருணாநிதி எந்தவிதமான நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
    • கச்சத்தீவு பிரச்சினையில் துரோகத்தின் மறுஉருவம் என்றால் அது தி.மு.க.தான்.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    1974-ம் ஆண்டு, அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசுக்கும், இலங்கை அரசுக்கும் இடையே ஓர் உடன்பாடு ஏற்பட்டது. இந்த உடன்பாட்டின்படி, இரு நாடுகளும் பரம்பரை பரம்பரையாக தங்கள் நாட்டிற்குச் சொந்தமான கடல் எல்லைகளில் எந்தெந்த உரிமைகளை அனுபவித்து வந்தனவோ, அந்தந்த உரிமைகளை தொடர்ந்து அனுபவிக்கலாம் என்று பொதுவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அப்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தவர் மு.கருணாநிதி.

    கச்சத்தீவு தாரைவார்ப்பினை தடுத்து நிறுத்த முதலமைச்சர் என்ற முறையில் கருணாநிதி எந்தவிதமான நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

    இந்த வரலாற்றை படித்துத் தெரிந்து கொள்ளாமல், தி.மு.க. அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்ததாகவும், அதையும்மீறி கச்சத்தீவு தொடர்பான ஒப்பந்தம் போடப்பட்டது என்று கூறுவதும் முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் உள்ளது. இதற்கு அ.தி.மு.க. சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    கச்சத்தீவு பிரச்சினையில் துரோகத்தின் மறுஉருவம் என்றால் அது தி.மு.க.தான். கச்சத்தீவு ஒப்பந்தத்தை முன்கூட்டியே தெரிந்திருந்தும் அதனை எதிர்த்து குரல் கொடுக்காமல் மவுனம் காத்ததுதான் துரோகம்.

    வரவிருக்கும் மக்களவைத் தேர்தலை மனதில் வைத்து மீண்டும் புளுகு மூட்டைகளை அவிழ்த்துவிட ஆரம்பித்து இருக்கிறார் தி.மு.க. தலைவர். இது பலிக்காது. மக்கள் தி.மு.க.வை பற்றி நன்கு புரிந்து கொண்டு விட்டார்கள். வருகின்ற மக்களவைத் தேர்தலில் மிகப் பெரிய வீழ்ச்சியை தி.மு.க. சந்திக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • உயிரிழந்த 11 அரசு மருத்துவர்களில் ஒருவரான மருத்துவர் விவேகானந்தனின் மனைவி கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்குமாறு கோரியிருந்தார்.
    • கொரோனா கால கட்டத்தில் உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்காக விதியை திருத்தம் செய்வதில் எந்தத் தவறும் கிடையாது.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கொரோனா தொற்று உச்சத்தில் இருந்த நேரத்தில், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்பட வேண்டுமென்று கோரியவர் மு.க. ஸ்டாலின்.

    அரசு ஊழியர் பணியில் இருக்கும்போது இறந்தால், அந்த அரசு ஊழியரின் வாரிசுக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று விதி இருக்கிறது.

    அப்படி இருக்கையில், கொரோனா தொற்று உச்சத்தில் இருந்த காலத்தில், தங்கள் உயிரை துச்சமென மதித்து, பொதுமக்களுக்காக சேவை புரிந்து, அதன் காரணமாக தொற்று ஏற்பட்டு உயிரிழந்த மருத்துவர்கள் மற்றும் இதர அரசு ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்குவதில் தாமதம் ஏற்படுகிறது, மறுக்கப்படுகிறது என்பது மிகுந்த மன வேதனை அளிக்கும் செயலாகும்.

    உயிரிழந்த 11 அரசு மருத்துவர்களில் ஒருவரான மருத்துவர் விவேகானந்தனின் மனைவி கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்குமாறு கோரியிருந்தார். அந்தப் பணி இதுநாள் வரை வழங்கப்படவில்லை.

    கொரோனா கால கட்டத்தில் உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்காக விதியை திருத்தம் செய்வதில் எந்தத் தவறும் கிடையாது.

    கொரோனா தொற்று தாக்கி உயிரிழந்த மருத்துவர்கள், மருத்துவம் சார்ந்த பணியாளர்கள், அரசு அலுவலர்கள், காவலர்கள் உள்ளிட்டோரின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணைகளை வழங்குவது குறித்து நல்ல அறிவிப்பினை வரும் சுதந்திர தினத்தன்று வெளியிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.