என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "jayalalithaa"

    • ஜெயலலிதா படத்துக்கு பூ போட்டு வைக்கப்பட்டு இருந்தது.
    • இது மற்ற நிர்வாகிகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.

    போடியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்துக் கொண்டு இருந்தபோது அவருக்கு அருகில் ஜெயலலிதா படத்துக்கு பூ போட்டு வைக்கப்பட்டு இருந்தது.

    படத்திற்கு கீழே இருந்த ரோஜாபூவை ஓ.பி.எஸ். ஆதரவாளரும் முன்னாள் மாவட்ட செயலாளருமான சையது கான் எடுத்து வாயில் போட்டு சாப்பிட்டபடி இருந்தார்.

    ஓ.பன்னீர்செல்வம் உருக்கமாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை பற்றி பேசிக் கொண்டு இருந்தபோது அதை பொருட்படுத்தாமல் இவர் ரோஜாபூவை ஸ்நாக்ஸ் சாப்பிடுவதைப்போல ஒவ்வொன்றாக எடுத்து சுவைத்துக் கொண்டு இருந்தார். இது மற்ற நிர்வாகிகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.

    • ஜெயலலிதா கட்டளையை ஏற்று முதலமைச்சராக பொறுப்பேற்றேன்.
    • முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. பல்வேறு சோதனைகளை சந்தித்து வருகிறது.

    தேனி மாவட்டம் போடியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * ஜெயலலிதா கட்டளையை ஏற்று முதலமைச்சராக பொறுப்பேற்றேன்.

    * 6 மாத கால முதலமைச்சராக இருந்த நான் ஜெயலலிதா கேட்டதும் பதவியை ஒப்படைத்தேன்.

    * ஜெயலலிதா இல்லாதபோது நான் முதலமைச்சராக இருக்க விரும்பவில்லை.

    * என்னை கட்டாயப்படுத்தி தான் முதலமைச்சராக அமர வைத்தனர்.

    * 3-வது முறையாக கட்டாயத்தின் அடிப்படையில்தான் முதலமைச்சராக பொறுப்பேற்றேன்.

    * முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. பல்வேறு சோதனைகளை சந்தித்து வருகிறது.

    * அனைவரும் ஒற்றுமையுடன் இருந்தால் மட்டுமே சோதனைகளை எதிர்கொள்ள முடியும் என வலியுறுத்தி வந்தேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழக வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் அவர் ஆற்றிய பங்களிப்பையும், இந்நாளில் நினைவு கூர்கிறேன்.
    • தமிழக வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் அவர் ஆற்றிய பங்களிப்பையும், இந்நாளில் நினைவு கூர்கிறேன்.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான மறைந்த ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாளில் அவருக்கு எனது அஞ்சலி.

    பெண்கள் முன்னேற்றம், ஏழை எளிய மக்களின் நலன், சமூக நீதியை நிலை நாட்டிட பல முக்கிய நலத்திட்டங்களை முன்னெடுத்து, தமிழக மக்களின் இதயங்களில் அழியாத தடம் பதித்தவர்.

    துணிவு, தெளிவு, தீர்மானமான முடிவு மற்றும் பொதுச்சேவைக்கான அர்ப்பணிப்பு என தனித்துவமிக்க தலைவராக திகழ்ந்த, அவரது சீரிய பணிகளையும் தமிழக வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் அவர் ஆற்றிய பங்களிப்பையும், இந்நாளில் நினைவு கூர்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. கொடியை ஏற்றி வைத்தார்.
    • சமூக நீதியை காத்த காவலர் எடப்பாடியார் என்ற அ.தி.மு.க. ஆண்டு மலரை வெளியிட்டார்.

    மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது.

    ராயப்பேட்டை அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் உள்ள மறைந்த தலைவர்களான எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார். இதையடுத்து அ.தி.மு.க. கொடியையும் ஏற்றி வைத்தார்.

    கட்சி கொடியை ஏற்றி வைத்த அவர், சமூக நீதியை காத்த காவலர் எடப்பாடியார் என்ற பெயரிலான அ.தி.மு.க. ஆண்டு மலரை வெளியிட்டார்.

    ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாள் என்பதால் 78 கிலோ கேக் வெட்டப்பட்டது. இதன் பின்னர் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. 

    • துணிச்சலின் உருவமாகத் திகழ்ந்த அவர், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பில் அக்கறை கொண்டிருந்தார்.
    • முன்னாள் முதலமைச்சரின் துணிச்சலையும், சமூகநீதி சிந்தனையையும் அவரது பிறந்தநாளில் ஒட்டுமொத்த தமிழ்நாடும் போற்றும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில் கூறி இருப்பதாவது:-

    அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், மறைந்த முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதாவின் 78-ம் ஆண்டு பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், முதலமைச்சராக தமிழ்நாட்டுக்கு அவர் ஆற்றிய பணிகளை நான் நினைவு கூர்கிறேன்.

    துணிச்சலின் உருவமாகத் திகழ்ந்த அவர், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பில் அக்கறை கொண்டிருந்தார். சட்டம்-ஒழுங்கை கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். 69 சதவீதம் இட ஒதுக்கீட்டுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்ட போது அதை சட்டரீதியாக முறியடித்து சமூகநீதியின் மீது தாம் கொண்டிருந்த அக்கறையை நிரூபித்தார். முன்னாள் முதலமைச்சரின் துணிச்சலையும், சமூகநீதி சிந்தனையையும் அவரது பிறந்தநாளில் ஒட்டுமொத்த தமிழ்நாடும் போற்றும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • நினைவுகளாலும் நம்மை இயக்கிக் கொண்டிருக்கும் இதயதெய்வம்.
    • திசையெங்கும் சூழ்ந்து நின்ற சூழ்ச்சிகளைச் சுக்கு நூறாக்கிய இரும்புப் பெண்மணி.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான மறைந்த ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    தமிழகத்தையும், தமிழக மக்களையும் அரண்போல காத்திட்ட அன்புத் தாய், சிந்தனைகளாலும், நினைவுகளாலும் நம்மை இயக்கிக் கொண்டிருக்கும் இதயதெய்வம், திசையெங்கும் சூழ்ந்து நின்ற சூழ்ச்சிகளைச் சுக்கு நூறாக்கிய இரும்புப் பெண்மணி, ஏழை, எளிய மக்களுக்கு எண்ணற்ற நலத்திட்டங்களைச் செயல்படுத்தி நீங்கா புகழோடு எந்நாளும் நிலைத்து நிற்கும் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிறந்த தினம் இன்று.

    இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளை அதிகரித்திட, உழவர்களுக்கான வேளாண் உற்பத்தியைப் பன்மடங்கு பெருக்கிட, தொழில்துறையில் முதலிடத்தை அடைந்திட, தமிழகத்தை இந்திய தேசத்தின் அறிவுசார் தலைநகரமாக உயர்த்திட தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்திட்ட இதயதெய்வம் அம்மா அவர்களையும், மக்கள் நலனுக்காக அவர் நிகழ்த்திட்ட அற்புதங்களையும் எந்நாளும் போற்றிக் கொண்டாடுவோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சோதனைகள் சூழ்ந்த தருணங்களிலும் அசைக்க முடியாத மனவலிமையுடன் தமிழகம் காக்க போராடிய தலைவர்.
    • "நமது வெற்றியை நாளைய சரித்திரம் சொல்லும் இப்படை தோற்கின் எப்படை வெல்லும்”

    சென்னை :

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    இதயதெய்வம் புரட்சித் தலைவி "அம்மா" அவர்களின் 78வது பிறந்த நாளில், அம்மாவின் நெடும் புகழை போற்றுகிறோம்,

    "அம்மா" எங்களின் அடையாளம் … ஏழைகளின் நம்பிக்கை,

    பெண்களின் தைரியம்,

    தாய்மையின் உருவம்.

    அதிகாரம் அவரை உயர்த்தவில்லை;

    மக்கள் மீது கொண்ட அன்பே அவரை உயர்த்தியது.

    புரட்சித் தலைவி அம்மா அவர்களின் ஒவ்வொரு திட்டமும், ஒவ்வொரு தீர்மானமும், "Poverty Alleviation" -க்கான Global standards -சை நிறுவி ஏழை எளிய மக்களின் வாழ்க்கையில் ஒளி ஏற்றியது.

    சோதனைகள் சூழ்ந்த தருணங்களிலும் அசைக்க முடியாத மனவலிமையுடன் தமிழகம் காக்க போராடிய தலைவர்.

    We Take a leaf out of your book in all

    of our actions for the people Amma

    'மக்களால் நான், மக்களுக்காகவே நான்' என்று புரட்சித் தலைவி அம்மா அவர்கள் சொன்னதைப் போல, அ.தி.மு.க. என்றென்றும் மக்கள் இயக்கமாகவே திகழ்கிறது.

    "எனக்குப் பின்னாலும், இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மக்களுக்காகவே இயங்கும்" என்று நம் இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் சூளுரைத்தார்கள்.

    அந்த வெற்றி முழக்கத்தை, கொள்கைப் பிரகடனத்தை செயல்படுத்திட நாம் அனைவரும் உறுதி ஏற்க வேண்டிய நாள்தான் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் பிறந்த நாள்.

    அ.இ.அ.தி.மு.க. அரசின் சாதனைகளையெல்லாம், தி.மு.க. அரசு தங்களது சாதனைகளாக பொய்ப் பிரச்சாரம் செய்து வரும் தி.மு.க-வினரின் பிரச்சாரங்களை முறியடித்து,

    கழகத்தின் தலைமையிலான பொற்கால ஆட்சியில் செய்திட்ட சாதனைகளையெல்லாம் எடுத்துக் கூறி, தேர்தல் களத்திலே மாபெரும் வெற்றியைப் பெறுவதற்கு அயராது உழைப்போம்! அம்மாவின் உண்மைத் தொண்டர்களாகப் பணியாற்றுவோம்! என்று அம்மா அவர்களின் பிறந்த நாளில் வீரசபதம் ஏற்போம்.

    "நமது வெற்றியை நாளைய சரித்திரம் சொல்லும் இப்படை தோற்கின் எப்படை வெல்லும்"

    வாழ்க புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் புகழ்!

    வளர்க புரட்சித் தலைவி அம்மாவின் பெரும் புகழ்!

    வெல்க அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்! என்று கூறியுள்ளார். 



    • அவரது வாழ்க்கைப் பயணம் மன உறுதி மற்றும் தீர்மானத்துடன் இருந்தது.
    • அவருடனான எனது கலந்துரையாடல்களை மிகுந்த மகிழ்ச்சியோடு நான் நினைவுகூர்கிறேன்.

    புதுடெல்லி:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான மறைந்த ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பிரதமர் மோடி எக்ஸ் தள பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிந்து வெளியிட்டுள்ள பதிவில்,

    ஜெயலலிதா அவர்களை அவரது பிறந்த நாளில் நினைவுகூர்கிறேன். மனம் கவர்ந்த தலைவர் மற்றும் தலைசிறந்த நிர்வாகியாக எண்ணற்ற மக்களின் இதயங்களிலும், மனங்களிலும் அவர் இடம் பிடித்துள்ளார். அவரது வாழ்க்கைப் பயணம் மன உறுதி மற்றும் தீர்மானத்துடன் இருந்தது.

    தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற முறையில், பெண்களுக்கு அதிகாரமளித்தல் குறித்து வலுவான நோக்கத்துடனும், சமூக நீதி மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய நலத்திட்டங்களாலும் இயக்கப்பட்ட நிர்வாகத்தில் சிறந்த ஆட்சியாளராக திகழ்ந்தார். கருணை, உறுதி என்ற இரண்டு பண்புகளையும் அவர் கொண்டிருந்தார். அவருடனான எனது கலந்துரையாடல்களை மிகுந்த மகிழ்ச்சியோடு நான் நினைவுகூர்கிறேன்.

    அவரைப் பற்றி இந்த மாத மன் கி பாத் நிகழ்ச்சியில் நான் என்ன கூறினேன் என்பது இங்கு இடம் பெற்றுள்ளது என்று கூறியுள்ளார். 



    • முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆற்றிய மக்கள் பணி என்றும் என் மனதில் நிற்கும்.
    • தமிழக மக்கள் ஜெயலலிதா மீது எவ்வளவு மரியாதை வைத்திருக்கிறார்கள் என்பதை பார்த்திருக்கிறேன்.

    பிரதமர் மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை ரேடியோ மூலம் மனதின் குரல் (மன் கி பாத்) நிகழ்ச்சியில் நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். அந்த நிகழ்ச்சியில் மக்கள் போற்றும் மகத்தான தலைவர் ஜெயலலிதா என பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார். மேலும் அவர் கூறியதாவது:

    மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் வருகிற 24-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மன் கி பாத் உரையில் ஜெயலலிதாவை பிரதமர் மோடி பாராட்டியுள்ளார். பெண்களின் நலனுக்காக அவர் பாடுபட்டார் என்று புகழ்ந்துள்ளார். இது தொடர்பாக மோடி தனது உரையில் கூறி இருப்பதாவது:-

    பெண்கள் சக்தியின் ஒரு வெளிப்பாடாகவே ஜெயலலிதா இருந்தார். அவரின் தேசப்பக்தி மிகப்பெரியது. மாநிலத்தின் சட்டம், ஒழுங்கை பாதுகாக்க ஜெயலலிதா கடுமையான நடவடிக்கைகளை எடுத்தார்.

    சமூக நலனுக்காக பாடுபட்டவர்கள், பொதுமக்களுக்கு முன்னுரிமை அளித்தவர்கள் எப்போதும் மக்களின் இதயங்களில் நிலைத்திருக்கிறார்கள். ஜெயலலிதா அத்தகைய பிரபலமான தலைவர்களில் ஒருவர். பிப்ரவரி 24-ந் தேதி அவரது பிறந்தநாள் விழா. இன்றும் கூட தமிழகத்துக்கு செல்லும்போது மக்கள் அவர் மீது கொண்டிருந்த ஆழ்ந்த பாசத்தை நான் உணர்கிறேன். அம்மா ஜெயலலிதாவைப் பற்றி குறிப்பிடுவது தமிழக மக்களின் முகங்களில் ஒரு பிரகாசத்தைக் கொண்டு வருகிறது. குஜராத்தில் எனது பதவியேற்பு விழாவில் அவர் கலந்து கொண்டார். அவரது சிந்தனை மிகவும் தெளிவாக இருந்தது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பசும்பொன்னில் சசிகலா பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடு செய்துள்ளார்.
    • சசிகலா உசிலம்பட்டி தொகுதியில் போட்டியிட வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் சமீபத்தில் உசிலம்பட்டி பகுதிகளில் போஸ்டர் ஒட்டினார்கள்.

    மதுரை:

    தமிழகத்தில் இன்னும் 2 மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து அனைத்து கட்சிகளும் சட்டசபை தேர்தலை சந்திப்பதற்கான பணிகளை தீவிரப்படுத்தி உள்ளன.

    தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணி கட்சிகள், அ.தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் சீமானின் நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன.

    தே.மு.தி.க. மற்றும் ராமதாஸ் தலைமையிலான பா.ம.க. ஆகியவை இன்னும் கூட்டணி முடிவுகளை அறிவிக்காமல் மவுனம் காட்டி வருகின்றன.

    இந்த நிலையில் சசிகலாவும் புதிய கட்சி தொடங்கி சட்டசபை தேர்தலில் குதிக்க முடிவு செய்துள்ளார். சசிகலா சமீபத்தில் தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மக்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.

    கடந்த 3-ந்தேதி அண்ணா நினைவு நாளில் மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்திய சசிகலா நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், 'எதிரிகள் யார்? துரோகிகள் யார் என்பது தமிழக மக்களுக்கு தெரியும். இதுபற்றி நான் தெளிவாக சொல்ல வேண்டியதில்லை. வருகிற சட்டமன்ற தேர்தலில் நிச்சயம் அம்மா ஆட்சி அமைப்போம். வருகிற சட்டசபை தேர்தலில் எனது ஆதரவாளர்கள் களமிறக்கப்படுவார்கள்' என்று கூறினார்.

    அதன் தொடர்ச்சியாக கடந்த 6-ந்தேதி போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டில் ஆதரவாளர்களுடன் புதிய கட்சி தொடங்குவது தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.

    இதையடுத்தே அவர் புதிய கட்சி தொடங்க திட்டமிட்டு உள்ளார். இதனை உறுதிப்படுத்தும் விதமாக சசிகலா உசிலம்பட்டி தொகுதியில் போட்டியிட வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் சமீபத்தில் உசிலம்பட்டி பகுதிகளில் போஸ்டர் ஒட்டினார்கள். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில், வருகிற 24-ந்தேதி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் சசிகலா பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடு செய்துள்ளார்.

    இந்த பொதுக்கூட்டத்திற்கான முகூர்த்த கால் நடும் பணி இன்று காலை பசும்பொன்னில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சசிகலாவின் ஆதரவாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ஜெயலலிதாவின் பிறந்த நாளில் நடைபெற உள்ள இந்த பொதுக்கூட்டத்தில் சசிகலா புதிய கட்சி தொடங்குகிறார். அந்த பொதுக்கூட்டத்தில் கட்சியின் பெயரையும் சசிகலா அறிவிக்க உள்ளார். மேலும் கட்சியின் கொடியையும் அறிமுகப்படுத்த உள்ளார்.

    தமிழக அரசியலில் தன்னை மீண்டும் நிலை நிறுத்த சசிகலா தனிக்கட்சி தொடங்க எடுத்து வரும் முயற்சிகளால் தமிழக அரசியல் களம் மேலும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

    • வருமான வரி பாக்கி, வட்டியுடன் சேர்த்து ரூ.9.17 கோடியாக உள்ளது.
    • ஜெயலலிதா வாரிசாக அறிவிக்கப்பட்டுள்ள தீபக் ரூ.1.12 கோடியை செலுத்தி உள்ளார்.

    மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா செலுத்த வேண்டிய வரியை செலுத்தாவிடில் சொத்துகள் ஏலம் விடப்படும் என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

    சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது வருமான வரித்துறை விளக்கம் அளித்துள்ளது.

    அதில், ஜெயலலிதா வாரிசாக அறிவிக்கப்பட்டுள்ள தீபக் ரூ.1.12 கோடியை செலுத்தி உள்ளார். வருமான வரி பாக்கி, வட்டியுடன் சேர்த்து ரூ.9.17 கோடியாக உள்ளது என்றது.

    ரூ.13 கோடி வரி பாக்கியை செலுத்தக்கூறி வருமான வரித்துறை அனுப்பி நோட்டீசை எதிர்த்து ஜெயலலிதா, தீபக் தொடர்ந்த வழக்கில் உத்தரவிடப்பட்டுள்ளது.

    மேலும், வருமான வரித்துறை தரப்பு வாதத்தை ஏற்ற சென்னை உயர்நீதிமன்றம் விசாரணையை 18ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

    • ஒரு நாட்டின் எதிர்காலம் வகுப்பறையில் தீர்மானிக்கப்படுகிறது.
    • திராவிடம் செத்துப் போய் ரொம்ப நாள் ஆகி விட்டது.

    சென்னை:

    சென்னை கோயம்பேட்டில் நாம் தமிழர் கட்சியின் வக்கீல்கள் பிரிவு ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட சீமான் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சட்டமன்ற தேர்தலையொட்டி பிப்ரவரி 21-ந் தேதி திருச்சி மாநாட்டில் வேட்பாளர்களை அறிவிக்க உள்ளேன். யாரை சேர்ப்பது, யாருடன் செல்வது என்ற எந்தவித குழப்பமும் இன்றி நாங்கள் தனியாக பயணிக்க உள்ளோம்.

    பொங்கலுக்கு ரூ.6800 கோடி இனாம் கொடுத்து உள்ளார்கள். இது ஓட்டுக்கு கொடுக்கப்பட்ட காசுதான். குடும்ப தலைவிகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.1000 வேண்டும் என்று யாரும் கேட்கவில்லை. ஆனால் ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் கொடுக்கிறார்கள். ஆனால் ஆசிரியர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

    ஒரு நாட்டின் எதிர்காலம் வகுப்பறையில் தீர்மானிக்கப்படுகிறது. படிப்பு சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர்கள் நடுரோட்டில் நின்று போராடிக் கொண்டிருக்கிறார்கள். மருத்துவர்கள், செவிலியர்களும், துப்புரவு பணியாளர்கள் என எல்லோரும் வீதியில் நிற்கிறார்கள். ஆனால் நல்லாட்சி நடப்பதாக கூறுகிறார்கள்.

    போக்குவரத்து துறையில் 1 லட்சம் கோடி கடன் இருக்கும் நிலையில் பேருந்துகளில் இலவச பயணம் எதற்கு? மத்திய- மாநில அரசுகள் கடன் வாங்கி அரசை 3 நடத்தியும் எந்த பயனும் இல்லை. ஆசிரியர்களை கண்டு கொள்ளாமல் இருக் கும் அரசு இருப்பதை அவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

    எங்கள் கொள்கைக்கு யாரும் போட்டி இல்லை. திராவிடம் என்பது எந்த மொழிச் சொல் என்று யாருக்கும் தெரியாது. மாநில உரிமையில் இருந்து கல்வி பறிக்கப்பட்டது தி.மு.க., காங்கிரஸ் ஆட்சியில் தான்.

    இது பிரபாகரன் பிள்ளைகளின் காலம். தமிழ் தேசியம் எழுச்சி பெற்றுள்ளது. குரு மூர்த்திக்கு பிறந்தவன் என்று ஒருவன் என்னைப் பற்றி குறிப்பிடுகிறான். இதுதான் பெரியார் சொல்லி கொடுத்த பண்பாடா? பெரியாரை சீமான் எதிர்த்து பேசி விட்டார். அவருக்கு ஓட்டு போடாதீர்கள் என்று தேர்தல் காலத்தில் ஒருத்தனாவது பேச முடியுமா? பெரியாரை நாங்கள் போற்றுகிறார். எங்களுக்கு ஓட்டு போடுங்கள் என்று உங்களால் கேட்க முடியுமா? எந்த தலைவனுக்கு இங்கு ஓட்டு உள்ளது.

    எனக்கு விழுந்த ஓட்டு எனது கொள்கைக்காக விழுந்த ஓட்டாகும். பணம் கொடுக்காமல் எனக்கு மக்கள் ஓட்டு போட்டுள்ளனர். தேர்தலில் ஓட்டுக்கு பணம் கொடுக்காமல் போட்டியிட்டு என்னை வெல்ல முடியுமா? திராவிடம் செத்துப் போய் ரொம்ப நாள் ஆகி விட்டது.

    பெரியாரை நாங்கள் பேசும் முன்னே திருமாவளவன் கடுமையாக பேசி உள்ளார். அண்ணா, கலைஞருமே பெரியாரைப் பற்றி பேசி உள்ளார்கள்.

    எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, ஆகியோர் எனது ரோல் மாடல் என்று விஜய் கூறி இருப்பது பற்றி கேட்கிறீர்கள். அது தம்பியின் விருப்பம். அவர்களை ஏற்றுக்கொண்டது எப்படி? என்பதை தெளிவுப்படுத்த வேண்டும். நான் எல்லா இடத்திலும் உங்களை (பத்திரிகையாளர்களை) சந்தித்து பேசுகிறேன். ஆனால் விஜய் உங்களையெல்லாம் சந்திக்கவே மாட்டார்.

    ஆனால் அவரைப் பற்றி நீங்கள் பேசிக் கொண்டே இருக்கிறீர்கள். இதுவும் ஒரு கொடுமைதானே.

    இவ்வாறு சீமான் கூறினார்.

    ×