என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    எம்.ஜி.ஆர். - ஜெயலலிதாவை ஏற்றுக்கொண்டது எப்படி என்பதை விஜய் தெளிவுப்படுத்த வேண்டும்: சீமான்
    X

    எம்.ஜி.ஆர். - ஜெயலலிதாவை ஏற்றுக்கொண்டது எப்படி என்பதை விஜய் தெளிவுப்படுத்த வேண்டும்: சீமான்

    • ஒரு நாட்டின் எதிர்காலம் வகுப்பறையில் தீர்மானிக்கப்படுகிறது.
    • திராவிடம் செத்துப் போய் ரொம்ப நாள் ஆகி விட்டது.

    சென்னை:

    சென்னை கோயம்பேட்டில் நாம் தமிழர் கட்சியின் வக்கீல்கள் பிரிவு ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட சீமான் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சட்டமன்ற தேர்தலையொட்டி பிப்ரவரி 21-ந் தேதி திருச்சி மாநாட்டில் வேட்பாளர்களை அறிவிக்க உள்ளேன். யாரை சேர்ப்பது, யாருடன் செல்வது என்ற எந்தவித குழப்பமும் இன்றி நாங்கள் தனியாக பயணிக்க உள்ளோம்.

    பொங்கலுக்கு ரூ.6800 கோடி இனாம் கொடுத்து உள்ளார்கள். இது ஓட்டுக்கு கொடுக்கப்பட்ட காசுதான். குடும்ப தலைவிகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.1000 வேண்டும் என்று யாரும் கேட்கவில்லை. ஆனால் ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் கொடுக்கிறார்கள். ஆனால் ஆசிரியர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

    ஒரு நாட்டின் எதிர்காலம் வகுப்பறையில் தீர்மானிக்கப்படுகிறது. படிப்பு சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர்கள் நடுரோட்டில் நின்று போராடிக் கொண்டிருக்கிறார்கள். மருத்துவர்கள், செவிலியர்களும், துப்புரவு பணியாளர்கள் என எல்லோரும் வீதியில் நிற்கிறார்கள். ஆனால் நல்லாட்சி நடப்பதாக கூறுகிறார்கள்.

    போக்குவரத்து துறையில் 1 லட்சம் கோடி கடன் இருக்கும் நிலையில் பேருந்துகளில் இலவச பயணம் எதற்கு? மத்திய- மாநில அரசுகள் கடன் வாங்கி அரசை 3 நடத்தியும் எந்த பயனும் இல்லை. ஆசிரியர்களை கண்டு கொள்ளாமல் இருக் கும் அரசு இருப்பதை அவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

    எங்கள் கொள்கைக்கு யாரும் போட்டி இல்லை. திராவிடம் என்பது எந்த மொழிச் சொல் என்று யாருக்கும் தெரியாது. மாநில உரிமையில் இருந்து கல்வி பறிக்கப்பட்டது தி.மு.க., காங்கிரஸ் ஆட்சியில் தான்.

    இது பிரபாகரன் பிள்ளைகளின் காலம். தமிழ் தேசியம் எழுச்சி பெற்றுள்ளது. குரு மூர்த்திக்கு பிறந்தவன் என்று ஒருவன் என்னைப் பற்றி குறிப்பிடுகிறான். இதுதான் பெரியார் சொல்லி கொடுத்த பண்பாடா? பெரியாரை சீமான் எதிர்த்து பேசி விட்டார். அவருக்கு ஓட்டு போடாதீர்கள் என்று தேர்தல் காலத்தில் ஒருத்தனாவது பேச முடியுமா? பெரியாரை நாங்கள் போற்றுகிறார். எங்களுக்கு ஓட்டு போடுங்கள் என்று உங்களால் கேட்க முடியுமா? எந்த தலைவனுக்கு இங்கு ஓட்டு உள்ளது.

    எனக்கு விழுந்த ஓட்டு எனது கொள்கைக்காக விழுந்த ஓட்டாகும். பணம் கொடுக்காமல் எனக்கு மக்கள் ஓட்டு போட்டுள்ளனர். தேர்தலில் ஓட்டுக்கு பணம் கொடுக்காமல் போட்டியிட்டு என்னை வெல்ல முடியுமா? திராவிடம் செத்துப் போய் ரொம்ப நாள் ஆகி விட்டது.

    பெரியாரை நாங்கள் பேசும் முன்னே திருமாவளவன் கடுமையாக பேசி உள்ளார். அண்ணா, கலைஞருமே பெரியாரைப் பற்றி பேசி உள்ளார்கள்.

    எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, ஆகியோர் எனது ரோல் மாடல் என்று விஜய் கூறி இருப்பது பற்றி கேட்கிறீர்கள். அது தம்பியின் விருப்பம். அவர்களை ஏற்றுக்கொண்டது எப்படி? என்பதை தெளிவுப்படுத்த வேண்டும். நான் எல்லா இடத்திலும் உங்களை (பத்திரிகையாளர்களை) சந்தித்து பேசுகிறேன். ஆனால் விஜய் உங்களையெல்லாம் சந்திக்கவே மாட்டார்.

    ஆனால் அவரைப் பற்றி நீங்கள் பேசிக் கொண்டே இருக்கிறீர்கள். இதுவும் ஒரு கொடுமைதானே.

    இவ்வாறு சீமான் கூறினார்.

    Next Story
    ×