என் மலர்
நீங்கள் தேடியது "எம்ஜிஆர்"
- த.வெ.க. அலுவலகத்திற்கு வருகை தந்த செங்கோட்டையன் ஆதரவாளர்களை புஸ்சி ஆனந்தன் வரவேற்றார்.
- விஜய் முன்னிலையில் செங்கோட்டையன் த.வெ.க.வில் இணைந்தார்.
அ.தி.மு.க.-வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நேற்று தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த நிலையில் இன்று தமிழக வெற்றிக்கழக அலுவலகத்தில் நடைபெறும் விழாவில் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் இணைவதாக கூறப்பட்டது. செங்கோட்டையனை தொடர்ந்து அவரது ஆதரவாளர்களும் இணைவதாக நேற்று முதல் தகவல் வெளியாகி வந்தது.
இந்த நிலையில், கோபிசெட்டிபாளையத்தில் இருந்து பேருந்தில் த.வெ.க. அலுவலகத்திற்கு வருகை தந்த செங்கோட்டையன் ஆதரவாளர்களை புஸ்சி ஆனந்தன் வரவேற்றார்.
தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவதற்காக அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. சத்தியபாமா, அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஹசானா, புதுச்சேரி பாஜக முன்னாள் தலைவர் சாமிநாதன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய பனையூர் அலுவலகம் வந்தார். இதற்கிடையே, செங்கோட்டையனும் த.வெ.க. அலுவலகத்திற்கு வருகை தந்தார். அவரை புஸ்சி ஆனந்த் வரவேற்று அழைத்து சென்றார்.
இதனை தொடர்ந்து, த.வெ.க. அலுவலகத்திற்கு தலைவர் விஜய், தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதர் அர்ஜூனா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் வருகை தந்தனர்.
இதன்பின் நடைபெற்ற இணைப்பு விழாவில் விஜய் முன்னிலையில் செங்கோட்டையன் த.வெ.க.வில் இணைந்தார். அவருடன் அவரது ஆதரவாளர்களும் இணைந்தனர்.
இந்நிலையில், த.வெ.க.வில் இணைந்த செங்கோட்டையன், மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, எம்ஜிஆர் நினைவிடத்திற்கும், ஜெயலலிதா நினைவிடத்திற்கும் சென்ற செங்கோட்டையன் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
அப்போது, புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண் ராஜ், சத்தியபாமா ஆகியோரும் உடன் மரியாதை செலுத்தினர்.
- சிலை சேதம் அடைந்தது குறித்து அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- புரட்சித்தலைவரின் புகழையும் அவரது கொள்கைகளையும் நேருக்கு நேர் எதிர்கொள்ள முடியாத கோழைகள் செய்த இழிசெயலாகவே இதை கருதுகிறேன்.
சென்னை:
மதுரை மாவட்டம் அவனியாபுரம் திருப்பரங்குன்றம் சாலையில் உள்ள எம்.ஜி.ஆர் சிலையை நேற்று நள்ளிரவு மர்மநபர்கள் சேதப்படுத்தி உள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து அ.தி.மு.க.வினர் 100-க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே சிலை சேதம் அடைந்தது குறித்து அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், எம்.ஜி.ஆர் சிலையை சேதப்படுத்தப்பட்ட சம்பவத்திற்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
மதுரை , திருப்பரங்குன்றம், அவனியாபுரம் பகுதி, வாடிவாசல் அருகே அமைந்துள்ள இதயதெய்வம் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களின் திருவுருவச் சிலையை சேதப்படுத்திய சம்பவம் பெரும் கண்டத்துக்குரியது.
புரட்சித்தலைவரின் புகழையும் அவரது கொள்கைகளையும் நேருக்கு நேர் எதிர்கொள்ள முடியாத கோழைகள் செய்த இழிசெயலாகவே இதை கருதுகிறேன்.
சிலையை சேதப்படுத்துவதன் மூலம் பொன்மனச் செம்மல் செய்த சாதனைகளையும் அவரது புகழையும்,
அவர் தனது திட்டங்கள் மூலமாக மக்களிடையே ஏற்படுத்திய புரட்சியையும் சிறிதளவு கூட மக்கள் மனதில் இருந்து குறைக்கவோ மாற்றவோ முடியாது.
இச்செயலை செய்து, பொது அமைதியை சீர்குலைக்க நினைக்கும் சமூக விரோதிகளை உடனடியாக கைது செய்து கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசை வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.
- ஒவ்வொரு கூட்டத்திலும் எம்.ஜி.ஆர். கூட்ட நெரிசலை குறைக்கும் விதத்தில் புதிய யுக்திகளை பயன்படுத்தி உள்ளார்.
- 10 ஆண்டுகளுக்கு முன்பு வைகோ பேசிய ஒரு வீடியோவும் தற்போது வைரலாகிறது.
கரூரில் நடிகர் விஜய் நடத்திய பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலால் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. கூட்டம் கட்டுக்கடங்காமல் போனது ஒரு காரணமாக கூறப்பட்டாலும், திட்டமிடுதலில் பிழை ஏற்பட்டதே இதற்கான பிரதான காரணம் என்று நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
எந்தவொரு கூட்டத்திலும் மக்கள் பங்கேற்றாலும் அதில் அவர்களின் உயிர்களுக்கு பொறுப்பு அரசு என்றாலும், அதில் சரியான ஏற்பாடுகளை செய்யாவிட்டால் அதற்கு பொறுப்பு கூட்டம் நடத்துபவர்கள்தான் என்று கோர்ட்டு பல்வேறு தீர்ப்புகளில் கூறியிருக்கிறது.
போலீசார் தரப்பில், விஜய் கூட்டத்தில் சுமார் 25 ஆயிரம் பேர் வந்திருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அதைவிட பல மடங்கு மக்கள் கூடிய எம்.ஜி.ஆர். பொதுக்கூட்டங்களில், அசம்பாவிதம் நிகழாமல் நடந்திருக்கிறது என்பதுதான் முக்கியமானது.
அந்தக் காலத்தில் தொழில்நுட்ப வசதிகள் இல்லாமல் இருந்தாலும், மக்கள் எம்.ஜி.ஆரை பார்க்க ஒரு நாள் முன்பே கூட்டம் நடக்கும் இடத்திற்கு வந்து கூடிவிடுவார்கள். அவர் மேடைக்கு வரும்போது கூட்டம் ஆவலுடன் முன்னே அலைமோதி வந்தாலும், அதில் ஒரு ஒழுங்கு இருந்தது. அதற்கு காரணம் எம்.ஜி.ஆர். கையாண்ட நுணுக்கமான தந்திரங்கள்தான்.
ஒரு கூட்டத்தில் பெண்களும், குழந்தைகளும் அதிகளவில் இருந்தால், கூட்டம் முடிந்ததும் எம்.ஜி.ஆர். ''முதலில் பெண்களும், குழந்தைகளும் வெளியேறட்டும். ஆண்கள் அப்படியே நிற்கவும். உங்களுக்கு ஒரு தகவல் இருக்கிறது'' என்று அறிவித்தார். பெண்கள் வெளியேறியதும், ''உங்களிடம் சொல்ல எதுவும் இல்லை. பெண்களும் குழந்தைகளும் நெரிசலில் சிக்காமல் இருக்கத்தான் அப்படி சொன்னேன்'' என்று சிரித்தபடி கூட்டத்தை நிறைவு செய்தார். இதுபோன்று ஒவ்வொரு கூட்டத்திலும் எம்.ஜி.ஆர். கூட்ட நெரிசலை குறைக்கும் விதத்தில் புதிய யுக்திகளை பயன்படுத்தி உள்ளார்.
அதுபோல் 10 ஆண்டுகளுக்கு முன்பு வைகோ பேசிய ஒரு வீடியோவும் தற்போது வைரலாகிறது. அதில் அவர், "50 ஆயிரம் பேர் கூடிய இடத்தில் ஒருவன் விழுந்தாலே, 20 பேருக்கு உயிரிழப்பு நேரலாம். அதனால்தான் நான் கூட்டத்தில் கட்டுப்பாட்டுடன் இருக்கச் சொல்கிறேன்'' என்று எச்சரித்துள்ளார். அவர் சொன்னதுபோல், சிறிய தவறே பெரும் விபத்துக்கு வழிவகுக்கும் என்பதை விஜய் கூட்டம் அரங்கேற்றி இருக்கிறது.
அதேபோல் கூட்டத்தினர் பாதுகாப்பு குறித்து விஜயகாந்த் பேசிய ஒரு வீடியோவும் வைரலாகி வருகிறது. இன்று அரசியல் கூட்டங்களில் பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாடு என்பது மிக அவசியமானது. தொழில்நுட்ப வசதிகள், காவல்துறை கண்காணிப்பு, டிரோன் கேமரா, இரும்பு தடுப்புகள் என அனைத்தும் இருந்தாலும், தலைவரின் செயல்திறன், தந்திரம், மக்களிடம் நேரடியாக கூறும் கட்டுப்பாட்டு அறிவுறுத்தலே கூட்டத்தை பாதுகாப்பாக வைத்திருக்கிறது.
மக்களை ஈர்ப்பதற்கும் மேலாக, அவர்களின் பாதுகாப்பை முன்னிலைப்படுத்தும் தலைவர் மட்டுமே உண்மையான மக்கள் தலைவராக இருப்பார் என்று சமூக வலைதளங்களில் கருத்துகள் பரிமாற்றப்பட்டு வருகிறது.
- பெரியார் பேருந்து நிலையத்தில் காம்ப்ளக்ஸ் கட்டி 4 வருடமாகி விட்டது. அதனை திறக்க முடியவில்லை.
- ஆளுங்கட்சி எதிர்க்கட்சிகளை முடக்க பார்க்கிறார்கள். அது முடியாது.
மதுரை:
மதுரை விளாங்குடி பகுதியில் உள்ள சொக்கநாதபுரம் காளியம்மன் கோவிலுக்கு ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் மேற்கூரை அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் நடைபெற்றது.
திறப்பு விழாவிற்கு பின்பு செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியதாவது:-
நான் அமைச்சராக இருக்கும்போது மக்களுக்கு தேவையான திட்டங்களை கொண்டு வந்தேன். தி.மு.க. அமைச்சர்கள் டிபன் பாக்ஸ்களை கொடுத்து வருகிறார்கள். பத்திரபதிவுத்துறை அமைச்சரின் தொகுதிக்கும் பாதாள சாக்கடை திட்டத்தை நாங்கள் கொண்டு வந்தோம். மதுரையில் உள்ள இரண்டு அமைச்சர்கள் திட்டங்களை எதுவும் கொண்டு வரவில்லை. ஆனாலும் எங்களது ஆட்சியிலே கொண்டு வந்த திட்டங்களையும் செயல்படுத்தவில்லை.
புதிதாக மண்டல தலைவர் யாராக இருந்தாலும் மக்கள் பணத்தை சூறையாடாமல் இருந்தால் சரி. முன்னால் இருந்தவர்கள் ரூ.250 கோடியை சுவாகா செய்து விட்டார்கள்.
பொற்கைப் பாண்டியன் வாழ்ந்த மதுரையில் மன்னராட்சி நடக்கிறது. ஒரு திருடனும் வரமாட்டான். குற்றம் செய்தவர்களே மாமன்றத்தை நடத்துவது சரியா?.
எம்.ஜி.ஆர். உருவாக்கிய கட்சி அ.தி.மு.க. விஜயினால் படம் தான் காட்ட முடியும். புயல் மையம் கொண்டுள்ளது என சொல்வார்களே அதே போல எடப்பாடி பழனிசாமி சென்ற இடங்களில் எல்லாம் மக்கள் மையம் கொண்டுள்ளனர்.
பெரியார் பேருந்து நிலையத்தில் காம்ப்ளக்ஸ் கட்டி 4 வருடமாகி விட்டது. அதனை திறக்க முடியவில்லை. ஆட்சியில் இருப்பவர்கள் எல்லோருக்கும் மரியாதை கொடுக்க வேண்டும். ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும். ஆளுங்கட்சி எதிர்க்கட்சிகளை முடக்க பார்க்கிறார்கள். அது முடியாது.
கலைஞர் ஆட்சி அமைப்போம் என்று யாரும் சொல்வதில்லை. எம்.ஜி.ஆர். ஆட்சி தான் வேண்டும் என அ.தி.மு.க. பற்றிதான் பேசுகிறார்களே தவிர தி.மு.க. பற்றி பேசுவதில்லை. எடப்பாடியார் பொதுச்செயலாளராக இருக்கும் வரை தி.மு.க.வு க்கு வெற்றி எளிது என உதயநிதிக்கு எழுதிக் கொடுத்தவர்கள் தப்பாக எழுதி கொடுத்திருக்கிறார் என்றார்.
- எல்லோராலும் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் ஆகிட முடியாது.
- எல்லோராலும் புரட்சித் தலைவி அம்மா ஆகிட முடியாது.
சென்னையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது, மதுரையில் இன்று நடைபெற்ற தவெகவின் 2வது மாநாட்டில் அக்கட்சி தலைவர் விஜய், எம்ஜிஆர் குறித்தும், அதிமுக குறித்தும் பேசினார்.
இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஜெயக்குமார் கூறியதாவது:-
எல்லோராலும் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் ஆகிட முடியாது. எல்லோராலும் புரட்சித் தலைவி அம்மா ஆகிட முடியாது. உலகத்திற்கே ஒரு புரட்சித் தலைவர். உலகத்திற்கே ஒரு புரட்சித் தலைவி அம்மா.
அதனால், வாக்குகள் வாங்க வேண்டும் என்பதற்காக அண்ணா பெயரை பயன்படுத்துறது, அண்ணா புகைப்படம் பயன்படுத்துறது, எம்ஜிஆர் புகைப்படத்தை பயன்படுத்துறது, நான் தான் புரட்சித் தலைவர் மாதிரி சொல்வது எல்லாம் தேர்தல் யுக்தி.
இதெல்லாம் எப்படி சொன்னாலும் சரி, புரட்சித் தலைவர் எம்ஜிஆர் ஆரம்பித்த இயக்கம் அதிமுக. அவர்தான் கட்சிக்கே முழுமையான சொந்தக்காரர்.
அதனால், அதிமுகவின் இரட்டை இலைக்கு வாக்களித்த கை, வேறு எந்த கட்சிக்கும் வாக்குகள் போடாது. எங்கள் தலைவரின் பெயர் கூறாமல் யாரும் அரசியல் செய்ய முடியாது.
எங்கள் தலைவரை ஏற்றுக்கொண்டது என்பது எங்களுக்கு மகிழ்ச்சி. ஆனால், அது உங்களுக்கு வாக்குகளாக வருமா என்றால் நிச்சயமாக வராது. அதை மட்டும் உறுதியாக கூறிக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- புரட்சித் தலைவரின் மக்கள் செல்வாக்கு தான் தி.மு.க.வை ஆட்சிக் கட்டிலில் அமர வைத்தது.
- புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் புரட்சித் தலைவி அம்மா ஆகியோரை விமர்சிப்பது நியாயமற்ற செயல்.
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
"உன் முகத்தைக் காட்டினால் முப்பது இலட்சம் வாக்குகள் நிச்சயம்" என்று பேரறிஞர் அண்ணா அவர்களே பாராட்டும் அளவுக்கு மக்கள் செல்வாக்கைப் பெற்றத் தலைவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள். புரட்சித் தலைவரின் மக்கள் செல்வாக்கு தான் தி.மு.க.வை ஆட்சிக் கட்டிலில் அமர வைத்தது.
பேரறிஞர் அண்ணா அவர்களின் மறைவிற்குப் பிறகு, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் மாபெரும் இயக்கத்தைத் தோற்றுவித்து, முதல் இடைத் தேர்தலிலேயே தனக்குள்ள மக்கள் செல்வாக்கை நிருபித்தவர். 1977 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று முதலமைச்சராக பொறுப்பேற்றதுடன், தொடர்ந்து மூன்று முறை ஆட்சியை அமைத்து முதலமைச்சராகவே மண்ணுலகை விட்டு விண்ணுலகிற்குச் சென்றவர் புரட்சித் தலைவர் அவர்கள். சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டவர் புரட்சித் தலைவர். அவர் தோற்றுவித்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் மாபெரும் இயக்கமும் அனைவருக்குமான ஒரு மாபெரும் மக்கள் இயக்கம். இந்தக் கொள்கை தான், மொத்தமுள்ள 58 ஆண்டு கால திராவிட ஆட்சியில், 30 ஆண்டு காலம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமைய வழிவகுத்தது.
இப்படிப்பட்ட மக்கள் தலைவரை, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களை, திராவிட இயக்கத்தில் பார்ப்பனியத்தை ஊடுருவச் செய்தவர் என்றும், ஒரு பார்ப்பனிய பெண் திராவிட இயக்கத்தின் தலைவராக மாற பாதை வகுத்து தந்தவர் என்றும் தொல் திருமாவளவன் பேசி இருப்பது கடும் கண்டனத்திற்குரியது. பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை 30 விழுக்காட்டிலிருந்து 50 விழுக்காடாக உயர்த்திய பெருமைக்குரியவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள். 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டிற்கு சட்டப் பாதுகாப்பு வாங்கிக் கொடுத்தவர் சமூக நீதிகாத்த வீராங்கணை புரட்சித் தலைவி அம்மா அவர்கள்.
"எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும், இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்" என்று அனைத்துத் தரப்பு மக்களுக்காகவும் பாடுபட்ட புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் புரட்சித் தலைவி அம்மா ஆகியோரை விமர்சிப்பது நியாயமற்ற செயல். வருகின்ற தேர்தலில், கூடுதல் தொகுதிகள் வாங்க வேண்டும் என்பதற்காகவோ அல்லது கூட்டணி அமைச்சரவையில் இடம் பெற வேண்டும் என்பதற்காகவோ தி.மு.க.வையோ அல்லது தி.மு.க. தலைவரையோ திருமாவளவன் அவர்கள் புகழ்ந்து பேசுவதில் யாருக்கும் எவ்வித மாறுபட்ட கருத்தும் இருக்க முடியாது. அதே சமயத்தில், மக்கள் செல்வாக்கு பெற்ற, சாதி மதங்களைக் கடந்த மறைந்த தலைவர்களை விமர்சிப்பது என்பது நாகரிகமற்ற செயல். "எங்கிருந்தாலும் வாழ்க" என்று வாழ்த்திய அம்மா அவர்களை சாதியின் பெயரால் விமர்சிப்பது நியாயமா என்பதை தொல் திருமாவளவன் அவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
"வறியவர்களுக்கு வழங்கிய வள்ளல்களின் புகழைப் பற்றித்தான் உலகம் எப்போதும் சிறப்பாகப் பேசும்" என்ற வள்ளுவரின் வாக்கிற்கு முற்றிலும் முரணாக தொல் திருமாவளவன் அவர்கள் பேசியிருப்பது அவருக்கு நல்லதல்ல. அது அவரின் அரசியல் மேம்பாட்டிற்கு வழிவகுக்காது. எனவே, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் புரட்சித் தலைவி அம்மா ஆகியோர் குறித்த விமர்சனத்தை தொல் திருமாவளவன் அவர்கள் உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- திராவிடத்திற்குள் பார்ப்பனியம் ஊடுருவ வழிவகை செய்தவர் எம்.ஜி.ஆர்.என திருமாவளவன் பேச்சு
- எம்.ஜி.ஆர். குறித்து பேசிய திருமாவளவன் அரசியலில் காணாமல் போய்விடுவார் என இபிஎஸ் விமர்சனம்
திராவிடத்திற்குள் பார்ப்பனியம் ஊடுருவ வழிவகை செய்தவர் எம்.ஜி.ஆர்.என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதுகுறித்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, "எம்.ஜி.ஆரை பொதுமக்கள் தெய்வமாக கருதுகிறார்கள். எம்.ஜி.ஆர். குறித்து பேசிய திருமாவளவன் அரசியலில் காணாமல் போய்விடுவார். வெறுப்பை வெளிப்படுத்தும் விதமாக திருமாவளவன் இதுபோல் பேசிக்கொண்டிருக்கிறார்" என்று காட்டமாக தெரிவித்தார்.
இந்நிலையில், எடப்பாடி பழனிச்சாமியின் விமர்சனத்துக்கு பதில் அளித்த திருமாவளவன், "எம்.ஜி.ஆர். மீதும், ஜெயலலிதா மீதும் எனக்கு அதீதமான மதிப்பு உண்டு. அவர்களை நான் பலமுறை பாராட்டியுள்ளேன்.
தமிழ்நாடு அரசியல் கலைஞரை மையப்படுத்தி, எப்படி கலைஞர் எதிர்ப்பு அரசியலாக மாறியது என கலைஞர் நினைவு நிகழ்ச்சியில் பேசினேன். அதில், எம்ஜிஆரை அவமதிக்கும் நோக்கம் எனக்கு இல்லை. எம்ஜிஆர், ஜெயலலிதாவை ஒரு சாதிக்குள் சுருக்க முடியாது. எம்ஜிஆரை ஒரு சாதிக்குள் நான் சுருக்கவில்லை. அது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.
- தி.மு.க. கூட்டணி நிலைக்குமா? நிலைக்காதா? என்பது 8 மாதத்தில் தெரியும்.
- 8 மாத காலத்தில் அ.தி.மு.க. சிறப்பான கூட்டணியை அமைக்கும்.
ஓமலூர்:
சேலம் மாவட்டம் ஓமலூரில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* விவசாய தொழிலாளர்களுக்கும் நன்மை பயக்கும் திட்டத்தை அ.தி.மு.க. அரசு செயல்படுத்தியது.
* எம்.ஜி.ஆரை பொதுமக்கள் தெய்வமாக கருதுகிறார்கள்.
* எம்.ஜி.ஆர். குறித்து பேசிய திருமாவளவன் அரசியலில் காணாமல் போய்விடுவார்.
* வெறுப்பை வெளிப்படுத்தும் விதமாக திருமாவளவன் இதுபோல் பேசிக்கொண்டிருக்கிறார்.
* சாதிக்கும் மதத்திற்கும் அப்பாற்பட்ட கட்சி அ.தி.மு.க.
* தி.மு.க. கூட்டணி நிலைக்குமா? நிலைக்காதா? என்பது 8 மாதத்தில் தெரியும்.
* 8 மாத காலத்தில் அ.தி.மு.க. சிறப்பான கூட்டணியை அமைக்கும் என்றார்.
திராவிடத்திற்குள் பார்ப்பனியம் ஊடுருவ வழிவகை செய்தவர் எம்.ஜி.ஆர்.என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பேசியது சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.
- 2 தேர்தலிலும் இருக்கும் ஒற்றுமை என்றால், பலமான ஆளும் கட்சியை வீழ்த்தி புதிய சக்தி ஆட்சி பீடத்தில் அமர்ந்தது.
- தி.மு.க.வில் இருந்து வெளியேறிய எம்.ஜி.ஆர்., அ.தி.மு.க.வை 1972-ம் ஆண்டு தொடங்கினார்.
சென்னை:
விஜய் சொல்லும் 1967, 1977-ம் ஆண்டு தேர்தல்களில் என்ன நடந்தது? த.வெ.க. கனவு, நனவாகுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
த.வெ.க. தலைவர் விஜய், உறுப்பினர் சேர்க்கைக்கான புதிய செயலி வெளியிடும் கூட்டத்தில் நேற்று பேசும் 1967 மற்றும் 1977 சட்டமன்ற தேர்தல்களை போல, வருகிற 2026 தேர்தலும் அமைய போகிறது என்று பேசினார். அவரது பேச்சால் அந்த தேர்தல்களில் எந்த நடந்தது என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது. அதில் 1967-ம் ஆண்டு தி.மு.க. முதல் முறையாக வெற்றி பெற்று அண்ணா முதலமைச்சர் ஆனார். 1977-ம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.க. முதல் முறையாக வெற்றி பெற்று எம்.ஜி.ஆர். முதலமைச்சர் ஆனார். இந்த 2 தேர்தலிலும் இருக்கும் ஒற்றுமை என்றால், பலமான ஆளும் கட்சியை வீழ்த்தி புதிய சக்தி ஆட்சி பீடத்தில் அமர்ந்தது. அந்த அடிப்படையில் தான் விஜய், 2026-ம் ஆண்டு தேர்தலில் த.வெ.க. ஆட்சி அமைக்கும் என்பதை அவர் கூறியிருக்கிறார். அவரது இந்த கருத்து குறித்து அரசியல் நோக்கர்கள் கூறியதாவது:- ஒரு கட்சி தலைவர், தங்களது கட்சி தான் ஆட்சி அமைக்கும் என்று சொல்வது முதலில் தொண்டர்களுக்கு நம்பிக்கை கொடுக்க தான். அந்த வகையில் தான் விஜய்யும் பேசி இருக்கிறார். எனவே அவரது பேச்சினை வைத்து த.வெ.க. ஆட்சியை பிடிக்குமா? என்று கேட்டால், அதனை மக்கள் தான் முடிவு செய்ய முடியும்.
விஜய் சொன்ன, இந்த தேர்தல்களையும், 2026-ம் ஆண்டு தேர்தலுடன் ஒப்பிட முடியாது. ஏனென்றால் 1967-ம் ஆண்டு தேர்தல் மூலம் முதலமைச்சர் ஆன அண்ணா, ஒரு பழுத்த அரசியல்வாதி. அவர் 1909-ம் ஆண்டு பிறந்து 1935-ம் ஆண்டு அதாவது தனது 26-வது வயதில் நீதி கட்சியில் இணைந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். பின்னர் திராவிடர் கழகத்தில் பயணித்து 1949-ம் ஆண்டு, அதாவது தனது 40 வயதில் தி.மு.க.வை தொடங்கினார். தி.மு.க. 1952-ம் ஆண்டு நடந்த முதல் பாராளுமன்றம், சட்டசபை தேர்தலில் பங்கேற்கவில்லை. 1957-ம் ஆண்டு தேர்தலில் தான் பங்கேற்றது. முதல் முறை போட்டி என்பதால் அவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை. இருப்பினும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு 15 இடங்களில் வெற்றி பெற்றனர். பின்னர் 1962-ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு பாராளுமன்றத்தில் 7 தொகுதிகளிலும், சட்டசபையில் 50 தொகுதிகளிலும் வெற்றி பெற்றனர். 1967-ம் ஆண்டு தேர்தலில் பாராளுமன்றத்தில் 25 தொகுதிகளிலும், சட்டசபையில் 234 தொகுதிகளில் 137 தொகுதிகளிலும் வெற்றி பெற்றனர். அண்ணா, முதலமைச்சர் ஆனார். அவர் தனது 58 வயதில் ஆட்சியை பிடித்தார்.
இதேபோல் தி.மு.க.வில் இருந்து வெளியேறிய எம்.ஜி.ஆர்., அ.தி.மு.க.வை 1972-ம் ஆண்டு தொடங்கினார். தொடர்ந்து 5 ஆண்டுகள் கட்சியை கட்டமைத்தார். 1977-ம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தார். அவர் சட்டசபை தேர்தலில் 130 இடங்களிலும், பாராளுமன்றத்தில் 21 இடங்களில் போட்டியிட்டு 18 இடங்களில் வெற்றி பெற்றார்.
எம்.ஜி.ஆருக்கு அ.தி.மு.க. என்ற சட்டை புதிது என்றாலும், அரசியலில் அவர் பழையவர். காந்தி மீது கொண்ட ஈடுபாட்டால் தனது இளம் வயதிலேயே காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். 1953-ம் ஆண்டு அதாவது தனது 36 வயதில் தி.மு.க.வில் சேர்ந்தார். 1962, 1967 மற்றும் 1971-ம் ஆண்டு தேர்தல்களில் சட்டசபை தேர்தல்களில் போட்டியிட்டு, வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக இருந்தார்.
அண்ணாவும், எம்.ஜி.ஆரும் பல ஆண்டுகள் அரசியலில் இருந்து, பல தேர்தல்களை சந்தித்து ஆட்சியை பிடித்தனர். ஆனால் விஜய், அரசியலுக்கு வந்து 2 ஆண்டுகள் முழுமையாக முடிவடையவில்லை. அவர் சினிமாவின் உச்ச நடிகர். மக்களுக்கு தெரிந்த முகம். ஆனால் தேர்தல் வெற்றிக்கு இது மட்டும் போதாது. கட்சியின் கட்டமைப்பும், தேர்தலை எதிர்கொள்ளும் திறனும் வலுவாக இருக்க வேண்டும். ஆனால் அவற்றை த.வெ.க. இன்னும் முழுமையாக பூர்த்தி செய்ய வில்லை.
தேர்தலின்போது ஆட்சி என்பது அனைவருக்கும் கனவு. அது த.வெ.க.விற்கு நனவாகுமா? என்பதனை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். எனவே விஜய், அந்த தேர்தலைகளை ஒப்பிடும்போது, அந்த தலைவர்கள் வெற்றி எப்படி சாத்தியமானது என்பதனையும், அவர்களது மக்கள் பணியினையும், அரசியல் அனுபவத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
- மக்களுக்கு நன்மை பயக்க வலுவான தலைமை தேவை.
- திராவிட நிலம் பல தனித்துவமான அம்சங்களின் தொகுப்பாகும்.
திருப்பதி:
எம்.ஜி.ஆரின் பேரன் சத்திய ராஜேந்திரன் பல்வேறு பொது அமைப்புகளின் தலைவர்கள் அடங்கிய குழுவினர் ஆந்திர துணை முதல் மந்திரி பவன் கல்யாணை சந்தித்தனர்.
தமிழ்நாட்டின் தற்போதைய அரசியல் மற்றும் நிர்வாக நிலைமை அந்த மாநில மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், அவற்றை தீர்ப்பதற்கான வழிகள், கலாசாரம், மதத்தை பாதுகாத்தல் மற்றும் பிற பிரச்சினைகள் குறித்து அவர்கள் விவாதித்தனர்.
இந்த நிகழ்வில் பவன் கல்யாண் பேசியதாவது;-
தமிழ்நாட்டில் உள்ள பிரச்சினைகள் என் பார்வையில் உள்ளன. அவற்றை தீர்ப்பதில் ஜனசேனா தனது பங்களிப்பை வழங்கும். மக்களுக்கு நன்மை பயக்க வலுவான தலைமை தேவை. அப்போதுதான் மக்கள் பாதுகாப்பாக உணருவார்கள். ஆபரேஷன் சிந்தூர் மூலம் உலகம் நமது திறன்களை அங்கீகரித்துள்ளது. அதற்குக் காரணம் நாட்டின் வலுவான தலைமை. சமூகத்தில் ஒற்றுமை இருக்கும்போதுதான் வளர்ச்சி சாத்தியமாகும். முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் சட்டம் ஒழுங்கு பன்முகத்தன்மையில் ஒற்றுமை மற்றும் சமூக ஒற்றுமைக்கு முன்னுரிமை அளித்தனர்.
பொதுப்பிரச்சினைகளை தீர்ப்பதில் அந்த உணர்வு தொடர வேண்டும். திராவிட நிலம் பல தனித்துவமான அம்சங்களின் தொகுப்பாகும். எந்த மாநிலத்திலும் நிலையான தலைமையை நீங்கள் விரும்பினால், தேர்தல்களில் வாக்குகள் சிதறுவதை தடுப்பது முக்கியம். நாட்டின் வளர்ச்சிக்கு எதிர்கால அரசியலில் ஒரு வலுவான கூட்டணி தேவை .
இவ்வாறு அவர் கூறினார்.
- எம்.ஜி.ஆரின் நினைவு நாள் அன்று அவரது சிலைகளுக்கு மாலை அணிவித்தும், உருவப் படங்களை வைத்து மாலை அணிவித்தும், மலர் அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
- ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட மாவட்டக் கழகச் செயலாளர்கள் செய்திட வேண்டும்.
சென்னை:
அ.தி.மு.க. தலைமை கழகம் என்ற பெயரில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அ.தி.மு.க. நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆர். நம்மை ஆற்றொணாத் துயரத்தில் ஆழ்த்தி விட்டு அமரர் ஆகிய நாள் 24.12.1987. எம்.ஜி.ஆரின் 35-வது ஆண்டு நினைவு நாளான 24-ந்தேதி (சனிக்கிழமை) காலை 10.30 மணிக்கு, சென்னை, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அவருடைய நினைவிடத்தில் அ.தி.முக. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்த உள்ளார்.
தொடர்ந்து, தலைமைக் கழகச்செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் மரியாதை செலுத்த உள்ளனர்.
அதனையடுத்து, எம்.ஜி.ஆரின் நினைவிட நுழைவு வாயில் உட்புறத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
நிகழ்ச்சியில் கழக சார்பு அணிகளின் நிர்வாகிகளும், மாவட்டக் கழக நிர்வாகிகளும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மன்றம், புரட்சித் தலைவி அம்மா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப்பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்பப் பிரிவு, வர்த்தக அணி மற்றும்
கலைப் பிரிவு உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
எம்.ஜி.ஆரின் நினைவு நாள் அன்று அவரது சிலைகளுக்கு மாலை அணிவித்தும், உருவப் படங்களை வைத்து மாலை அணிவித்தும், மலர் அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட மாவட்டக் கழகச் செயலாளர்கள் செய்திட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கட்சிக்காக என்ன செய்யப்போற ? கட்சியில தீவிரமாக ஈடுப்படு என்று எம்ஜிஆர் தொடர்ந்து கூறி வந்தார்.
- நாடகத்திற்காக உழைத்தவர்களுக்கு ரூ.5 லட்சம் கொடுத்ததுபோக, ரூ.30 லட்சம் தேர்தல் நிதிக்காக வழங்கினேன்.
பழம்பெரும் நடிகை லதா, மாலைமலர் இணையதளத்திற்கு அளித்த சிறப்பு பேட்டி வருமாறு..
ராமநாதபுரம் ராஜாவின் மகளான நான் சினிமாவுக்குள் நுழைந்தது எனது பாக்கியம் என்றே கூறுவேன். எம்ஜிஆர் இயக்கிய அவருடைய சொந்த படத்தில் நான் அறிமுகமானேன். அந்த காலத்திலேயே வெளிநாட்டில் படப்படிப்பு என்று அடுக்கடுக்கான ஆச்சரியங்கள் என்னை எங்கேயோ கொண்டுபோய்விட்டது. அதே மாதிரி என்னை இதுவரை ராணியாகவே வாழவைத்துள்ளது.
கட்சிக்காக என்ன செய்யப்போற ? கட்சியில தீவிரமா ஈடுப்படு என்று எம்ஜிஆர் தொடர்ந்து கூறி வந்தார். ஆனால் எனக்கு நடிப்பு மீது ஈடுபாடு இருந்தது. எம்ஜிஆர் தலைமையிலேயே நாட்டிய நாடகம் ஏற்பாடு செய்து தமிழகம் முழுவதும் நடத்தினோம். இதில் 35 லட்சம் கிடைத்தது. நாடகத்திற்காக உழைத்தவர்களுக்கு ரூ.5 லட்சம் கொடுத்ததுபோக, ரூ.30 லட்சம் தேர்தல் நிதிக்காக வழங்கினேன்.
நான் எல்லோருக்கும் கொடுத்தேன்.. நீ எனக்கு கொடுத்திருக்கிறாய் என்று எம்ஜிஆர் அடிக்கடி சொல்லுவார். அதன்பிறகு தேர்தலில் மாபெரும் வெற்றிப்பெற்றது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.. என்றார்.






