என் மலர்
நீங்கள் தேடியது "anna memorial"
- த.வெ.க. அலுவலகத்திற்கு வருகை தந்த செங்கோட்டையன் ஆதரவாளர்களை புஸ்சி ஆனந்தன் வரவேற்றார்.
- விஜய் முன்னிலையில் செங்கோட்டையன் த.வெ.க.வில் இணைந்தார்.
அ.தி.மு.க.-வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நேற்று தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த நிலையில் இன்று தமிழக வெற்றிக்கழக அலுவலகத்தில் நடைபெறும் விழாவில் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் இணைவதாக கூறப்பட்டது. செங்கோட்டையனை தொடர்ந்து அவரது ஆதரவாளர்களும் இணைவதாக நேற்று முதல் தகவல் வெளியாகி வந்தது.
இந்த நிலையில், கோபிசெட்டிபாளையத்தில் இருந்து பேருந்தில் த.வெ.க. அலுவலகத்திற்கு வருகை தந்த செங்கோட்டையன் ஆதரவாளர்களை புஸ்சி ஆனந்தன் வரவேற்றார்.
தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவதற்காக அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. சத்தியபாமா, அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஹசானா, புதுச்சேரி பாஜக முன்னாள் தலைவர் சாமிநாதன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய பனையூர் அலுவலகம் வந்தார். இதற்கிடையே, செங்கோட்டையனும் த.வெ.க. அலுவலகத்திற்கு வருகை தந்தார். அவரை புஸ்சி ஆனந்த் வரவேற்று அழைத்து சென்றார்.
இதனை தொடர்ந்து, த.வெ.க. அலுவலகத்திற்கு தலைவர் விஜய், தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதர் அர்ஜூனா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் வருகை தந்தனர்.
இதன்பின் நடைபெற்ற இணைப்பு விழாவில் விஜய் முன்னிலையில் செங்கோட்டையன் த.வெ.க.வில் இணைந்தார். அவருடன் அவரது ஆதரவாளர்களும் இணைந்தனர்.
இந்நிலையில், த.வெ.க.வில் இணைந்த செங்கோட்டையன், மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, எம்ஜிஆர் நினைவிடத்திற்கும், ஜெயலலிதா நினைவிடத்திற்கும் சென்ற செங்கோட்டையன் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
அப்போது, புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண் ராஜ், சத்தியபாமா ஆகியோரும் உடன் மரியாதை செலுத்தினர்.
தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான கருணாநிதி கடந்த 7-ந் தேதி உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அவரது உடலை அடக்கம் செய்ய மெரினா கடற்கரை அண்ணா நினைவிடம் அருகே இடம் ஒதுக்க தி.மு.க. சார்பில் தமிழக அரசிடம் கேட்கப்பட்டது. ஆனால், சட்ட சிக்கல் காரணமாக கருணாநிதிக்கு கிண்டி காந்தி மண்டபம் அருகில் 2 ஏக்கர் நிலம் ஒதுக்குவதாகவும், மெரினாவில் இடம் அளிக்க முடியாது என்றும் தமிழக அரசு திட்ட வட்டமாக அறிவித்தது.
இதைத்தொடர்ந்து தி.மு.க. சார்பில் ஐகோர்ட்டில் அவசர வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கருணாநிதிக்கு மெரினா கடற்கரையில் இடம் ஒதுக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவை ஏற்றுக்கொண்ட தமிழக அரசு மேல் முறையீட்டுக்கு செல்லாமல், அண்ணா நினைவிடம் அருகே கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய 1.75 ஏக்கர் நிலத்தை ஒதுக்கி கொடுத்தது. அந்த இடத்தில் கருணாநிதியின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
மெரினா கடற்கரை அண்ணா நினைவிடம் அருகே கருணாநிதியை அடக்கம் செய்ய 1.75 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டதற்கான அரசாணை நேற்று மாலை வெளியிடப்பட்டது.
இந்த தகவலை தி.மு.க. வக்கீல் ஒருவரும் உறுதிப்படுத்தினார். இது குறித்து அவர் கூறும்போது, ‘மெரினா கடற்கரை அண்ணா நினைவிடத்தில் கருணாநிதியை அடக்கம் செய்ய 1.75 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டு இருக்கிறது. இதை என்னிடம் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்’ என்றார். #Karunanidhi







