search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Karunanidhi"

    • 2005-ம் ஆண்டு முதல் இதுவரையில் ரூ.6 கோடியே 3 லட்சத்து 90 ஆயிரம் வழங்கப்பட்டு உள்ளது.
    • கன்னியாகுமரி மற்றும் புதுச்சேரியை சேர்ந்த ஏழை குடும்பத்துக்கு இந்த நிதி உதவி காசோலையாக அனுப்பப்பட்டது.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில் ஒவ்வொரு மாதமும் நலிந்தோருக்கு மருத்துவ உதவி நிதியாக வழங்கப்பட்டு வருகிறது. 2005-ம் ஆண்டு முதல் இதுவரையில் ரூ.6 கோடியே 3 லட்சத்து 90 ஆயிரம் வழங்கப்பட்டு உள்ளது.

    இந்த மாதம் நலிந்தோர் மற்றும் மருத்துவ உதவி நிதியாக 8 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.2 லட்சத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார். தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் புதுச்சேரியை சேர்ந்த ஏழை குடும்பத்துக்கு இந்த நிதி உதவி காசோலையாக அனுப்பப்பட்டது.

    • ஒடுக்கப்பட்ட பட்டியலின மக்களை தொடர்ந்து அவர்களது சாதியை இழிவாகவே பேசிவருகின்றார்.
    • சீமான் தன்னுடைய திரைப்படமான ‘தம்பி’ என்ற படத்தில் ஒரு வசனமாக ‘சண்டாளன்’ என்று பேசியதற்கு பகிங்கரமாக மன்னிப்பு கேட்டிருந்தார்.

    சென்னை:

    எழும்பூரைச் சேர்ந்தவர் நடராஜன். ஐகோர்ட்டு வக்கீலான இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

    நாம் தமிழர் நிர்வாகி சாட்டை துரைமுருகனை கைது செய்ததற்கு எதிராக அக்கட்சி தலைவர் சீமான் தனியார் தொலைகாட்சிகளுக்கு அளித்த பேட்டியில் முன்னாள் முதல்வரும் உலக தமிழர்களின் தலைவரும் தி.மு.க. தலைவருமாக இருந்து மறைந்த தமிழினத் தலைவர் முத்தமிழறிஞர் டாக்டர்.கலைஞர் கருணாநிதியை தமிழக மக்களே கொந்தளிக்கும் வகையில் அவதூறாக பேசியுள்ளார்.

    'கள்ளத்தனம் செய்த காதகன், கள்ளத்தனம் கொண்ட சதிகாரன் கருணாநிதி, சண்டாளன், துரோகி, இறை தூதுவரா, இறை மகன் ஏசுவா என்றும், கிருஷ்ண பரமாத்வா' என்றும் பேசி வன்முறையை தூண்டிவிட்டுள்ளதையும் மிகவும் அவதுாறாக பேசியதையும் தமிழக மக்கள் மிகவும் வன்மையாக கண்டித்து வருகின்றனர்.


    மேலும் சீமான் தன்னுடைய திரைப்படமான 'தம்பி' என்ற படத்தில் ஒரு வசனமாக 'சண்டாளன்' என்று பேசியதற்கு பகிங்கரமாக மன்னிப்பு கேட்டிருந்தார். இருந்தபோதிலும் 'சண்டாளன்'என்ற வார்த்தை ஒதுக்கப்பட்ட பட்டியலினத்தை சேர்ந்த ஒரு ஜாதியை சேர்ந்த மக்களை குறிப்பிடுவதாகும். மற்றவர்களை இழிவுப்படுத்தும் நிலையில் அதை தெரிந்தும் இதுபோன்று ஒடுக்கப்பட்ட பட்டியலின மக்களை தொடர்ந்து அவர்களது சாதியை இழிவாகவே பேசிவருகின்றார்.

    அவர் ஏற்கனவே அந்த சமூகத்தினரை பற்றி பேசி பொது மன்னிப்பு கேட்டு விட்டு தற்போதும் அந்த ஒரு குறிப்பிட்ட ஒடுக்கப்பட்ட பட்டியலின சாதியை (சண்டாளர்) சேர்ந்த சமூகத்தினரை தொடர்ந்து இழிவுப்படுத்தி பேசி உள்ளார்.

    எனவே நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் மீது வன்கொடுமை தடுப்பு மற்றும் அவதூறு பேச்சிற்கு எதிரான சட்டப்படியான குண்டர்கள் தடுப்பு சட்டத்தின்படியும் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு துரும்பைக் கூட கிள்ளிப்போடவில்லை.
    • இந்தத் தேர்தலில் திமுகவை வீழ்த்தினால் தான் அடுத்தத் தேர்தலுக்கு முன்பாகவாவது வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க திமுக அரசு முன்வரும்.

    பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

    நமது புனித பூமியான விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதிக்கு அடுத்த மாதம் 10-ஆம் நாள் இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. கடந்த 14&ஆம் தேதி முதல் வேட்பு மனுத் தாக்கல் தொடங்கி உள்ள நிலையில், தேசிய ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளராக தம்பி பனையபுரம் சி.அன்புமணி அறிவிக்கப்பட்டிருக்கிறார். உங்களில் ஒருவராக பல பத்தாண்டுகளாக களமாடி வரும் அவரைப் பற்றி பாட்டாளி சொந்தங்களாகிய உங்களுக்கு எந்த அறிமுகமும் தேவையில்லை.

    விக்கிரவாண்டி என்றதும் எனது நினைவில் மட்டுமின்றி, உனது நினைவிலும் தோன்றுவது தியாகமும், துரோகமும் தான். அவற்றில் தியாகத்தை முதலில் நினைவு கூர்கிறேன். தமிழ்நாட்டில் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் சமூகச் சூழலிலும் மிக மிக பின்தங்கிய நிலையில் கிடக்கும் வன்னியர்களுக்கு தமிழகத்தில் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் 20% தனி இட ஒதுக்கீடு வழங்கக் கோரி, நான் அறிவித்த 7 நாள் தொடர் சாலைமறியல் போராட்டம் 1987-ஆம் ஆண்டு செப்டம்பர் 17-ஆம் நாள் அதிகாலை 12.01 மணிக்கு தமிழ்நாடு முழுவதும் தொடங்கியது. அந்தப் போராட்டத்தை முறியடிக்க முடியாத காவல்துறை, சாலை மறியல் போராட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே என்னையும், என்னுடன் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட வன்னியர் சங்கத்தினரையும் கைது செய்து விட்டு, மனித வேட்டையை தொடங்கியது.

    பாப்பனப்பட்டு என்ற இடத்தில் ரெங்கநாதக் கவுண்டர், வீரப்பக் கவுண்டர் ஆகியோரை சுட்டுக் கொன்ற காவல்துறை அடுத்து சித்தணி என்ற இடத்தில் ஏழுமலை என்ற மாவீரனை தங்களின் குண்டுகளுக்கு இரையாக்கியது. அப்போதும் கொலைப்பசி அடங்காத காவல்துறை, பனையபுரம் கூட்டுச்சாலையில் போராட்டம் நடத்திய நமது சொந்தங்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தான் ஒரத்தூர் ஜெகநாதன், முண்டியம்பாக்கம் சிங்கார வேலு, கயத்தூர் முனியன், கயத்தூர் முத்து, கயத்தூர் தண்டவராயன் ஆகிய 5 சொந்தங்களும் தங்களின் மார்புகளில் துப்பாக்கி குண்டுகளை வாங்கி உயிர்த்தியாகம் செய்தனர்.

    இவர்களில் சித்தணி ஏழுமலை தவிர மீதமுள்ள 7 மாவீரர்களும் சுட்டுவீழ்த்தப்பட்ட மண் விக்கிரவாண்டி தொகுதியில் தான் உள்ளது. அவர்களின் உயிர்த்தியாகம் ஈடு இணையற்றது. ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 17-ஆம் நாள் அவர்களுக்கு நாம் மரியாதை செலுத்தி வருகிறோம் என்ற போதிலும், இந்த ஆண்டு அதற்கும் முன்னதாக ஜூலை 13-ஆம் நாள் நடைபெறும் வாக்கு எண்ணிக்கையில் வெற்றி பெற்று, அதற்கான சான்றிதழை சமூக நீதிக்காக உயிர்த்தியாகம் செய்தவர்களின் நினைவுச் சின்னங்களில் வைப்பது தான் அவர்களுக்கு செலுத்தும் சிறந்த மரியாதையாக இருக்கும் என்பதை நீங்கள் நன்றாக அறிவீர்கள்.

    தியாகத்தைத் தொடர்ந்து துரோகத்திற்கு வருகிறேன். இதே விக்கிரவாண்டி தொகுதியில் ஐந்தாண்டுகளுக்கு முன் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த திமுகவைச் சேர்ந்த இராதாமணி என்பவர் காலமானதைத் தொடர்ந்து 2019-ஆம் ஆண்டு அக்டோபர் 21-ஆம் நாள் இடைத்தேர்தல் நடைபெற்றது. அதற்கான பரப்புரை தொடங்கும் முன்பே அக்டோபர் 7-ஆம் நாள் அறிக்கை வெளியிட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்தால் வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று வாக்குறுதிகளை அள்ளி வீசினார். அதன்பின் 5 ஆண்டுகள் ஆகி விட்டன; திமுக ஆட்சிக்கு வந்து மூன்றாண்டுகள் நிறைவடைந்து விட்டன. ஆனால், வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு துரும்பைக் கூட கிள்ளிப்போடவில்லை.

    விக்கிரவாண்டி தேர்தல் பரப்புரையின் போது, தாங்களாக முன்வந்து வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவோம் என்று மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார். அப்போது ஏற்பட்ட கருத்து விவாதத்தின் போது நான் விடுத்த சவாலில் வெற்றி பெறும் வகையில், 2020-ஆம் ஆண்டில் தொடங்கி பல கட்ட போராட்டங்களை நடத்தியும், அப்போதைய ஆளும் அதிமுக அரசுக்கு அழுத்தம் கொடுத்தும் வன்னிய மக்களுக்கு 10.50% இடஒதுக்கீட்டை வென்றெடுத்தோம். அதற்கான நடைமுறைகளில் நிகழ்ந்த சில குளறுபடிகள் காரணமாக அந்த இட ஒதுக்கீடு செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதை எதிர்த்து தொடரப் பட்ட மேல்முறையீட்டை விசாரித்த உச்சநீதிமன்றம், உரிய தரவுகளைத் திரட்டி வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கலாம்; அதற்கு எந்தத் தடையும் இல்லை என்று 2022 மார்ச் மாதத்தில் தீர்ப்பளித்தது.

    வன்னிய மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதாக வாக்குறுதி அளித்த மு.க.ஸ்டாலின், அதைக் கூட நிறைவேற்றியிருக்க வேண்டியதில்லை. உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படியாவது உரிய தரவுகளைத் திரட்டி வன்னியர்களுக்கு 10.50% இட ஒதுக்கீட்டை வழங்கியிருக்கலாம். ஆனால், அதைக்கூட செய்ய மனமில்லாதவர் தான் மு.க.ஸ்டாலின். அவர் நினைத்திருந்தால் ஒரே மாதத்தில் தரவுகளைத் திரட்டி இட ஒதுக்கீடு வழங்கியிருக்க முடியும். ஆனால், உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து 10 மாதங்கள் கழித்து தான் 2023 ஜனவரி 12-ஆம் நாள் வன்னியர் உள் இடஓதுக்கீடு பரிந்துரைக்குமாறு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு ஆணையிட்டார். அதன்பிறகு ஒன்றரை ஆண்டுகள் ஆகி விட்டன. இட ஒதுக்கீடு குறித்து பரிந்துரைப்பதற்காக பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அளிக்கப்பட்ட காலக்கெடு 3 முறைக்கும் மேல் நீட்டிக்கப்பட்டு விட்டது. ஆனால், வன்னியர்களுக்கு இன்று வரை சமூகநீதி வழங்கப்படவில்லை.

    வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை நானே நேரில் சந்தித்து வலியுறுத்தினேன்; எட்டு முறை அவருக்கு கடிதம் எழுதினேன். மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தலைமையிலான குழுவினர் 3 முறை முதலமைச்சரை சந்தித்து இட ஒதுக்கீட்டு கோரிக்கையை வலியுறுத்தினர். பா.ம.க. கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, வழக்கறிஞர் பாலு ஆகியோர் அடங்கிய குழுவினர் 50 முறைக்கும் கூடுதலாக அமைச்சர்களையும், அதிகாரிகளையும் சந்தித்து வன்னியர் இட ஒதுக்கீட்டை விரைவுபடுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். ஆனாலும் எந்த பயனும் இல்லை. காரணம்... வன்னியர்கள் மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இருப்பது வன்மம் தானே தவிர, அவர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற எண்ணம் அல்ல.

    வன்னியர்களுக்கு திமுக துரோகம் செய்வது இது முதல் முறையல்ல. 1970-ஆம் ஆண்டில் தாக்கல் செய்யப்பட்ட சட்டநாதன் ஆணைய அறிக்கையில், வன்னியர்கள் உள்ளிட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 16% தனி இட ஒதுக்கீடு வழங்க பரிந்துரைக்கப்பட்டிருந்தது. அது செயல்படுத்தப்பட்டு இருந்தால் இப்போது வன்னியர்களுக்கு மட்டும் 15%க்கும் கூடுதலான இட ஒதுக்கீடு கிடைத்திருக்கும். ஆனால், அந்த பரிந்துரையை செயல்படுத்த மறுத்தது அப்போதைய முதலமைச்சர் கலைஞர். 1989-ஆம் ஆண்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று முந்தைய ஆளுனர் ஆட்சியில் 12.12.1988-ஆம் நாள் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதன்படி சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டிருந்தால் கண்டிப்பாக வன்னியர்களுக்கு 16% தனி இட ஒதுக்கீடு கிடைத்திருக்கும். அவ்வாறு இட ஒதுக்கீடு கிடைத்து விடக் கூடாது என்பதற்காகத் தான் 107 சாதிகளுடன் வன்னியர்களையும் சேர்த்து 20% இட ஒதுக்கீடு கொடுத்து அடித்துக் கொள்ள வைத்தார் கலைஞர்.

    தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த மூன்று முறை வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால், அந்த மூன்று வாய்ப்புகளையும் சீர்குலைத்தது திமுக அரசுகள் தான். தமிழ்நாட்டில் திமுக வளர்ந்ததற்கு காரணம் வன்னியர்கள் தான். ஆனால், வன்னியர்களால் ஆட்சிக்கு வந்த திமுக, அதற்கு காரணமான வன்னியர்களுக்கு செய்ததெல்லாம் துரோகம் தான். திமுகவுக்கு உதயசூரியன் சின்னத்தை வழங்கிய முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமிக்கே துரோகம் செய்த கட்சி தான் திமுக. ஏ.ஜி. என்று அழைக்கப்பட்ட ஏ.கோவிந்தசாமிக்கு நூற்றாண்டு விழா கொண்டாடுவதற்கு கூட திமுகவுக்கு மனம் இல்லை. 2019-ஆம் ஆண்டு விக்கிரவாண்டி இடைத்தேர்தலின் போது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஏ.கோவிந்தசாமிக்கு மணிமண்டபம் கட்டுவோம் என்று வாக்குறுதி அளித்த திமுக, ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் ஆகியும் அதற்கான அறிவிப்பை வெளியிட்டதைத் தவிர வேறு எதுவும் செய்யவில்லை. இட ஒதுக்கீட்டு ஈகியர்கள் 21 பேருக்கு நினைவு மண்டபம் கட்டும் அறிவிப்பும் செயல்படுத்தப்படவில்லை.

    திமுகவின் வன்னியர் துரோகம் இத்துடன் நின்று விடவில்லை. திமுகவிலும் வன்னியர்கள் திட்டமிட்டு ஒழிக்கப்பட்டனர். ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்டத்திலும், பின்னர் விழுப்புரம் மாவட்டத்திலும் திமுகவில் கோலோச்சிய செஞ்சி இராமச்சந்திரன், நெல்லிக்குப்பம் கிருஷ்ணமூர்த்தி, ஏ.ஜியின் புதல்வர் ஏ.ஜி.சம்பத் ஆகியோர் திமுகவில் தொடர்ந்து அவமதிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டனர். அண்மையில் மறைந்த விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி அவர்களுக்கு பதிலாக விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக வன்னியர் ஒருவரை நியமிப்பதற்கு கூட திமுகவுக்கு மனமில்லை. வன்னியர்களுக்கு திமுக இழைத்து வரும் துரோகங்களை பட்டியலிட்டால் அதற்கு பக்கங்கள் போதாது.

    வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கக் காரணமாக இருந்த இட ஒதுக்கீட்டுப் போராளிகளின் தியாகத்தை போற்றுவதற்கும், வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு கிடைப்பதை 50 ஆண்டுகளுக்கும் மேலாக தடுத்துக் கொண்டிருக்கும் திமுகவின் துரோகத்திற்கு கணக்குத் தீர்ப்பதற்குமான களம் தான் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஆகும். எத்தனை, எத்தனை துரோகங்கள் செய்தாலும் வன்னியர்கள் நம்மை ஆதரித்துக் கொண்டே இருப்பார்கள் என்று நம்பிக் கொண்டிருக்கும் திமுக தலைமைக்கு இந்தத் தேர்தலில் நாம் பாடம் புகட்ட வேண்டும். அப்போது தான் நமது வலிமை அவர்களுக்குத் தெரியும். இந்தத் தேர்தலில் திமுகவை வீழ்த்தினால் தான் அடுத்தத் தேர்தலுக்கு முன்பாகவாவது வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க திமுக அரசு முன்வரும். அதனால் தான் விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத் தேர்தலை போர் என்று கூறுகிறேன். இதை பாட்டாளி சொந்தங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

    மொத்தத்தில் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை வென்றெடுக்க விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நமக்கு மிகச்சிறந்த வாய்ப்பு ஆகும். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுகவுக்கு கிடைக்கும் தோல்வி தான் வன்னிய மக்களுக்கும் சமூகநீதியை வென்றெடுத்துக் கொடுக்கும். இதை உணர்ந்து பாட்டாளி சொந்தங்களும், பிற சமுதாய மக்களுக்கும் விக்கிரவாண்டி தொகுதி பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் சி.அன்புமணிக்கு மாம்பழம் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்.

    • அப்பாவின் பங்களிப்புகள், கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றைக் கௌரவிக்கும் நாளாகும்.
    • முதலமைச்சர் தனது தந்தை அவருக்கும் முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

    தந்தை யர் தினம் என்பது ஒவ்வொருவரின் வாழ்வில் அவரது அப்பாவின் பங்களிப்புகள், கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றைக் கௌரவிக்கும் நாளாகும். இந்த நாள் உங்கள் தந்தைக்கு, வாழ்க்கையில் அவர் உங்களுக்காக செய்த தியாகம் மற்றும் அர்ப்பணிப்பை பாராட்டிட்டி நன்றி தெரிவிக்கலாம்.

    இந்நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் தனது தந்தை மு. கருணாநிதிக்கு நன்றி மற்றும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

    முதலமைச்சர் தனது தந்தை அவருக்கும் முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அவரது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது,

    "தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடைய வேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை! தம் மக்கள் அவையத்து முந்தியிருக்க உழைக்கும் அனைத்துத் தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி நவில்வோம்!" என்று கூறியுள்ளார்.

    • பொது வாழ்வில் தனது வாழ்க்கையின் பெரும்பாலான ஆண்டுகள் தமிழகம் மற்றும் தமிழ் மக்களின் வளர்ச்சிக்காக உழைத்தார்.
    • நாங்கள் இருவரும் அந்தந்த மாநிலங்களில் முதலமைச்சராக இருந்தபோது அவருடன் உரையாடியதை நினைவு கூர்ந்து பார்க்கிறேன்.

    மறைந்த தமிழக முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியின் பிறந்த நாள் இன்று. அவரது 101-வது பிறந்த நாளை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் அவரது படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர். மேலும், கருணாநிதியுடன் இணைந்து பயணித்த அரசியில் வாழ்க்கை குறித்து நினைவு கூர்ந்து வருகின்றனர்.

    இந்த நிலையில் பிரதமர் மோடி, கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு புகழாரம் சூட்டியுள்ளார்.

    கலைஞர் கருணாநிதியை அவரது வீட்டிற்கு சென்று சந்தித்த படத்தை பதிவிட்டு எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள செய்தியில் "கலைஞர் கருணாநிதியின் 100-வது பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன்.

    பொது வாழ்வில் தனது வாழ்க்கையின் பெரும்பாலான ஆண்டுகள் தமிழகம் மற்றும் தமிழ் மக்களின் வளர்ச்சிக்காக பாடுபட்டவர். தனது அறிவார்ந்த தன்மைக்காக பெரிதும் மதிக்கப்பட்டவர். நாங்கள் இருவரும் அந்தந்த மாநிலங்களில் முதலமைச்சராக இருந்தது உள்பட பல்வேறு சந்தர்ப்பங்களில் கலைஞர் கருணாநிதியுடன் நான் உரையாடியதை நினைவு கூர்ந்து பார்க்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சோனியா காந்தி "காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி கூறுகையில் "டாக்டர் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளில் திமுகவைச் சேர்ந்த எனது சகாக்களுடன் இங்கு வந்திருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். பல சந்தர்ப்பங்களில் அவரை சந்தித்து, அவர் சொல்வதைக் கேட்டு, அவருடைய ஞான வார்த்தைகளாலும், அறிவுரைகளாலும் பயனடையும் அதிர்ஷ்டம் எனக்கு கிடைத்தது. அவரை சந்தித்ததை அதிர்ஷ்டமாக உணர்கிறேன். இந்த கொண்டாட்ட நாளில் உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்" என்று கூறினார்.

    டெல்லி திமுக அலுவலகத்தில் கலைஞர் கருணாநிதி படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதன்பின் சோனியா காந்தி இவ்வாறு தெரிவித்திருந்தார்.

    • ஹாக்கி விளையாட்டு கருணாநிதிக்கு மிகவும் பிடிக்கும்.
    • தொடர்ந்து 13 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட மாபெரும் சாதனையாளர் கலைஞர்.

    நாகப்பட்டினம் மாவட்டத்தில் `திருக்கோளிலி' என்று அக்காலத்தில் அழைக்கப்பட்ட திருக்குவளை கிராமத்தில் 1924-ம் ஆண்டு ஜூன் மாதம் 3-ம் தேதி முத்துவேல் மற்றும் அஞ்சுகம் அம்மையாருக்கும் 3-வது மகனாகப் பிறந்தார் கலைஞர் என்று உலகம் போற்றும் கருணாநிதி. அவருக்கு முன் பிறந்த தமக்கையர் இருவர், பெரிய நாயகம் மற்றும் சண்முகவடிவு.

    பெற்றோரும், தமக்கையரும் சீராட்டி சீர்மிகு அன்பில் பாராட்டி வளர்த்ததில் போராட்ட குணமும், எதையும் ஆராய்ந்து கேள்வியெழுப்பும் பகுத்தறிவும், ஏற்றத்தாழ்வுகளை விரும்பாத சுயமரியாதை மிக்கவராகவும் வளர்ந்தார். சிறுவயது முதலே மான உணர்ச்சியும், கொண்ட கொள்கையில் பிடிவாதம் மிக்கவருமான கலைஞர், தந்தையார் ஏற்பாடு செய்த இசைப்பயிற்சி வகுப்பில் நிலவிய சாதி ஏற்றத்தாழ்வை கண்டு இனி இசை வகுப்புக்கு செல்வதில்லை என்று தீர்மானமாக தன் தந்தையாரிடம் தெரிவித்தார். 

    திருக்குவளை கிராமத்தில் ஆரம்பக்கல்வியும், பின்னர் திருவாரூர் போர்டு உயர்நிலைப் பள்ளியிலும் கல்வி பயின்ற கலைஞர், பள்ளிப் பருவத்திலேயே நாடகம், கவிதை மற்றும் சொற்பொழிவு ஆகியவற்றில் தீவிர ஈடுபாடு கொண்டவராக விளங்கினார். திருவாரூர் உயர்நிலைப்பள்ளியில் மாணவராக கலைஞர் சேர்ந்ததே வியப்பான நிகழ்வு. வயதின் காரணமாக அனுமதி மறுக்கப்பட, பள்ளியில் இடமளிக்கவில்லை என்றால் எதிரே இருக்கும் குளத்தில் வீழ்வேன் என்று தலைமை ஆசிரியரிடம் போராடி பள்ளியில் சேர்ந்தார். அந்தப் போராட்ட குணமே கலைஞரின் அடையாளமாக இறுதிவரை நிலைத்தது. 1939-ம் ஆண்டு, கலைஞர் 8-ம் வகுப்பு படித்தபோது, பள்ளியில் நடைபெற்ற பேச்சுப் போட்டியில், 'நட்பு' என்ற தலைப்பில் பேசினார். இதுவே, கலைஞரின் முதல் மேடைப் பேச்சு.

    விளையாட்டிலும் கலைஞருக்கு மிகுந்த ஆர்வம் இருந்தது. ஹாக்கி விளையாட்டு அவருக்கு மிகவும் பிடிக்கும். திருவாரூர் போர்டு உயர்நிலைப் பள்ளி ஹாக்கி அணியில் கலைஞர் பங்கு பெற்றிருந்தார். கிரிக்கெட்டும் கலைஞருக்கு மிகவும் பிடித்தமான விளையாட்டு.

    15-வது வயதில் கலைஞர் மு. கருணாநிதி தனது சொந்த பதிப்பகப் பயணத்தை தொடங்கினார், மாணவநேசன் என்ற பத்திரிகையை உருவாக்கினார்.

    இது தோராயமாக "மாணவர்களின் நண்பர்கள்"என்று மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. 75 ரூபாய் நிதியில், 1941-ல் தமிழ்நாடு தமிழ் மாணவர் சங்கத்தை நிறுவினார். ஒரு வருடம் கழித்து, சங்கம் அதன் ஆண்டு விழாவை நடத்தியது. இதில் பாரதிதாசன், கே.ஏ.அன்பழகன், கே.ஏ.மதியழகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். திருவாரூரில் மு.கருணாநிதி எழுத்துக்கள் பிரபலமடைவதால் தனது பதிப்பகத்தை விரிவுபடுத்துவதற்காக முரசொலியை தொடங்கினார். அண்ணா துரை கருணாநிதியை நேரில் சந்தித்தபோது, அவர் வெறும் 18 வயது பள்ளி மாணவர் என்பதை கண்டு வியப்படைந்தார்.

     

    மு.கருணாநிதி தமிழ் அரசியலில் எழுச்சி பெற உதவிய முக்கிய தருணங்களில் ஒன்று, 1953 -ம் ஆண்டு தனது 29-வது வயதில் கல்லக்குடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது தான். அங்கு சிமென்ட் தொழிற்சாலை வைத்திருந்த இடத்திற்கு "டால்மியாபுரம்" என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

    டால்மியாபுரம் என்ற பெயர் வட இந்திய ஆதிக்கத்தையும், சுரண்டல் வணிக நடைமுறைகளையும் குறிக்கிறது என்று கருதிய கருணாநிதியும் அவரது தோழர்களும் ஊரின் பெயரை மீண்டும் கல்லக்குடி என மாற்ற வேண்டும் என வலியுறுத்தினர்.

    போராட்டத்தின்போது மு.கருணாநிதி மற்றும் அவரது ஆதரவாளர்கள் ரெயில் நிலையத்தில் டால்மியாபுரம் என்ற பெயரை துடைத்தெறிந்ததோடு, ரெயில் தண்டவாளத்தில் படுத்து மறியலில் ஈடுபட்டனர். துரதிர்ஷ்டவசமாக, 6 பேர் உயிரிழந்தனர். கருணாநிதி கைது செய்யப்பட்டு 6 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார்.

    1965 -ம் ஆண்டில், மத்திய அரசு இந்தியை ஒரே அலுவல் மொழியாக அறிவித்தது. இது தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை தூண்டியது. சி.என்.அண்ணாதுரை தலைமையில் தி.மு.க. இந்த முடிவுக்கு எதிராக தொடர் பேரணிகளை நடத்தியது. "இந்தி ஒழிக, தமிழ் வாழ்க" என்ற முழக்கங்கள் மாநிலம் முழுவதும் எதிரொலித்தது. வன்முறை வெடித்தது மற்றும் சிலர் தீக்குளித்தனர்.

    தி.மு.க-வின் இந்தி எதிர்ப்பு இயக்கத்தின் முக்கியப் பிரமுகரான மு. கருணாநிதி 1965-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16-ந்தேதி கைது செய்யப்பட்டு 6 மாத சிறைத் தண்டனை பெற்று பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி பெயரை என்றென்றும் சொல்லும் வகையில் முத்தான திட்டங்களை தந்த கலைஞர் புகழ் கிராமங்கள் வரை நிலைத்து நிற்கிறது.

    இந்தியாவின் 1957-ம் ஆண்டு பொதுத் தேர்தல் நடைப்பெற்றது. தி.மு.க.வின் சார்பில் கலைஞர் திருச்சி மாவட்டம் குளித்தலை தொகுதியில் நின்றார். வென்றார். தனது 33-ம் வயதில் சட்டசபைக்குள் நுழைந்தார். இதற்குப் பின் 2016 ஆண்டு வரை 13 முறை நடந்த சட்டசபை தேர்தலில் ஒன்றில் கூட தோற்காமல் வெற்றி வாகை சூடினார். 1984-ல் மட்டும் அவர் தேர்தலில் நிற்கவில்லை. தொடர்ந்து 13 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட மாபெரும் சாதனையாளர் கலைஞர்.

    முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி தமிழ்நாடு முதலமைச்சராக இருந்தபோது பல திட்டங்கள் செயல்படுத்தினார்.

     

    கலைஞர் என்று அன்புடன் நினைவு கூறப்படும் முத்துவேல் கருணாநிதி தமிழ்நாட்டில் 5 முறை முதலமைச்சராக பதவி வகித்தார். அவர் சமூகத்தின் விளிம்புநிலை பிரிவினரை மேம்படுத்துவதற்கும், பாலின சமத்துவத்தை மேம்படுத்துவதற்கும் அரும்பாடுபட்டார். சாதி அடிப்படையிலான பாகுபாட்டை குறைப்பதற்கும் அனைவருக்கும் சம வாய்ப்புகளைப் பெறுவதற்கும் அவர் பல கொள்கைகளை அறிமுகப்படுத்தினார். அவர் ஒரு சிறந்த எழுத்தாளர், கவிஞர் மற்றும் நாடக ஆசிரியராகவும் இருந்தார். தமிழில் பல இலக்கியப் படைப்புகளை எழுதினார். கலைஞர் கருணாநிதி ஆட்சி காலத்தில் ஏராளமான மக்கள் நலத்திட்டங்களை கொண்டுவந்தார். அதில் உள்ள முக்கிய திட்டங்கள்:

    2-வது காவல் ஆணையம்

    அதிகரித்து வரும் குற்றச்செயல் விகிதங்களை கட்டுப்படுத்தும் நோக்கிலும், காவல்துறையை நவீனப்படுத்தவும் 1989-ம் ஆண்டு 2-வது காவல் ஆணையத்தை கலைஞர் அறிமுகப்படுத்தினார்.

    ஊதியக் குழு, உயர்ந்த சம்பளம்

    தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு நியாயமான ஊதியத்தை மத்திய அரசு தரத்துடன் கலைஞர் சீரமைத்தார். அவர் ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் வழக்கமான சம்பளத் திருத்தங்களை நடைமுறைப்படுத்தினார். பொங்கல் பண்டிக்கைக்கான முன்பணம், பண்டிகை மற்றும் பயணப்படிகள், மருத்துவச் செலவுகளைத் திரும்ப வழங்குதல் போன்றவற்றையும் அவர் அறிமுகப்படுத்தினார்.

    நெல் கரும்பு உற்பத்தி அதிகரிப்பு

    கலைஞரின் பல்வேறு விவசாய நடவடிக்கைகளே நெல் உற்பத்தியை 3.5 மில்லியன் டன்னிலிருந்து 5.6 மில்லியன் டன்னாகவும், கரும்பு உற்பத்தியை 9.5 மில்லியன் டன்னிலிருந்து 29.7 மில்லியன் டன்னாகவும் உயர்த்தியது. மேலும் மலிவு விலை அரசி திட்டம், உணவு பற்றாக்குறையைச் சமாளித்து அரிசி உற்பத்தியில் பஞ்சாபை மிஞ்சியது.

    உழவர் சந்தை

    விவசாயிகள் மற்றும் நுகர்வோர் இடையே பரிவர்த்தனைகளை எளிதாக்கும் வகையில் உழவர் சந்தைகளைக் கலைஞர் அறிமுகப்படுத்தினார். இடைத்தரகர்கள் இல்லாமல் மலிவு விலையில் காய்கறிகளை வழங்க மதுரையில் நவம்பர் 14, 1999-ல் முதல் சந்தை திறக்கப்பட்டது. இந்த முயற்சி பிரபலமடைந்து, நவம்பர் 14, 2000-ல் 100-வது சந்தை சென்னை பல்லாவரத்தில் திறக்கப்பட்டது.

    பெண்களுக்கு இலவச பட்டப்படிப்புத் திட்டம்

    ஈ.வெ.ரா - நாகம்மையார் நினைவு மகளிர் இலவச பட்டப்படிப்புத் திட்டம் தமிழ்நாட்டில் பெண்கள் கல்விக்குப் பெரிய உதவியாக இருந்தது. உயர்கல்வி கிடைப்பதற்கு வழிவகை செய்தார் கலைஞர். இந்த மாற்று முன்முயற்சியானது, பாலின சமத்துவத்தை ஏற்படுத்தி பொருளாதார ரீதியாக பின்தங்கிய பெண்களுக்கு அதிகாரம் அளித்து, தேசிய அளவில் ஏற்கப்பட்டது.

    இளைஞர் நல வாரியம்

    கலைஞர், தமிழ்நாடு இளைஞர் நல வாரியத்தை நிறுவினார். விளையாட்டுக் கழகங்கள் அமைக்கப்பட்டு, இளம் வீரர்களின் திறமைகள் வளர்த்தெடுக்கப்பட்டன. மாநில இளைஞர் விழா நடத்தி விளையாட்டுப்போட்டிகள், கலை மற்றும் கலாசாரத்தில் திறமைகளை ஊக்குவித்தது. "பள்ளியில் கபடி" போன்ற திட்டங்கள் மூலம் மாநிலத்தில் விளையாட்டு மற்றும் உடல் செயல்பாடுகளை மேலும் மேம்படுத்தியது.

    மீன்பிடிப்பு அதிகரிப்பு

    1966-ம் ஆண்டில், மொத்த மீன் பிடிப்பு 1,26,286 டன்களாக மட்டுமே இருந்தது. ஆனால் மீனவர்களுக்குக் கலைஞர் அளித்த தொடர் ஆதரவால் 2010-ம் ஆண்டில் கடல் மீன் பிடிப்பு 3,96,827 டன்களாக அதிகரித்தது.

    தமிழ்த்தாய் வாழ்த்து

    மனோன்மணியம் பெ.சுந்தரனார் எழுதிய நீராருங்கடலுடுத்த என்ற தமிழ் வாழ்த்துப் பாடலை அரசு மற்றும் கல்வி நிகழ்வுகளில் பயன்படுத்த ஆணை பிறப்பித்தார் கலைஞர். தமிழ்மொழியின் மேன்மையை போற்றும் வகையில் இன்றளவும் இந்தப் பாடல் தமிழ்நாட்டில் விழாக்களில் பாடப்படுகிறது.

    பெரியார் சமத்துவபுரம்

    1997-ல் பெரியார் நினைவு சமத்துவபுரம் திட்டத்தை கலைஞர் தொடங்கினார். இது பெரியாரின் சமூக நீதி மற்றும் சமத்துவக் கொள்கைகளை மதிப்பதை நோக்கமாகக் கொண்டது. பெரியாரின் கொள்கைகளை ஊக்குவித்து, தமிழ்நாட்டில் சமூக நீதியை முன்னெடுத்தது.

    கை ரிக்சா ஒழிப்பு

    மனிதனை மனிதன் வாகனத்தில் உட்கார வைத்து இழுத்துச் செல்லும் கை ரிக்சாக்களை கலைஞர் ஒழித்து, அதற்கு மாற்றாகச் சைக்கிள் ரிக்சாக்களை அறிமுகப்படுத்தினார்.

    குடிசைகள் இல்லாத தமிழகம்

    குடிசைகள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க வேண்டுமென்பது கலைஞரின் லட்சியம். இந்தியாவிலேயே முதன் முறையாகக் கலைஞரின் ஆட்சியில் குடிசை மாற்று வாரியம் உருவாக்கப்பட்டது. குடிசை வாழ் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் வகையில் குடிநீர், வடிகால் அமைப்புகள், மின்வசதி போன்ற உள்கட்டமைப்புடன் அடுக்குமாடி குடியிருப்புகள் உருவாக்கி தரப்பட்டன.

    நில உச்சவரம்பு

    நில சீர்திருத்தச் சட்டத்தை முன்மொழிந்து நில உச்சவரம்பு ஒரு நபருக்கு 30 ஏக்கர் என்றிருந்ததை 15 ஏக்கர் என குறைத்தார் கலைஞர். இது நில உரிமை வேறுபாடுகளை குறைத்தது. பலரை நில உரிமையாளராகவும் மாற்றியது.

    • கலைஞர் மு.கருணாநிதியின் 101 வது பிறந்தநாள் இன்று (ஜூன் 3) தமிழகம் முழுவதும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
    • பிரசித்தி பெற்ற டைம்ஸ் சதுக்கத்தில் வகையில் கலைஞரின் புகைப்படம் பிரதிபலிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

    மறைந்த தி.மு.க தலைவரும் தமிழக முன்னாள் முதல்வருமான கலைஞர் மு.கருணாநிதியின் 101 வது பிறந்தநாள் இன்று (ஜூன் 3) தமிழகம் முழுவதும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பெரியாரின் வழிவந்த அண்ணாவின் திராவிட அரசியலை 1969 இல் அவரது மறைவுக்குப் பின் தமிழகத்தில் தீவிரமாக முன்னெடுத்துச் சென்ற கலைஞர் கருணாநிதி பழமைவாதத்தை வேரறுக்கும் பல மகத்தான திட்டங்களை கொண்டுவந்தவர் ஆவார்.

    கை ரிக்ஷா ஒழிப்புத்திட்டம், பிச்சைக்காரர்கள் மறுவாழ்வுத்திட்டங்களை கொண்டுவந்தது, எல்லா மாவட்டங்களிலும் அரசு மருத்துவமனைகள், கலை அறிவியல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களை நிறுவியது, இடஒதுக்கீடு கொள்கையை நடைமுறைப்படுத்தி, கல்வியிலும் வேலைவாய்ப்பிலும், 50 விழுக்காட்டில் 30 விழுக்காடு பிற்படுத்தப்பட்டோருக்கும், 20 விழுக்காடு மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கும், 18 விழுக்காடு தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கும், 3 விழுக்காடு அருந்ததியருக்கும், 3.5 விழுக்காடு இஸ்லாமியருக்கும், 1 விழுக்காடு மலைவாழ் மக்களுக்கும் அளித்து அனைத்து சமூகத்தினருக்கும் சம உரிமை கிடைக்க வழிவகை செய்தது, மகளிர் சுயஉதவிக் குழுக்கள் அமைத்தது, அரசுப் பணிகளில் பெண்களுக்கு 30 விழுக்காடு இட ஒதுக்கீட்டை அளித்தது, விதவைகளுக்கு மறுமண உதவித் திட்டங்களை அளித்தது, கலப்பு திருமணங்களை ஊக்குவிக்க நிதியுதவி அளித்தது என கலைஞர் கொண்டுவந்த திட்டங்களின் பட்டியல் நீளும்.

     

    குமரிக்கடலில் திருவள்ளுவர் சிலையை நிறுவி உலக செம்மொழி மாநாட்டை நடத்திக்காட்டினார். கலைஞரின் சாதனைகளுக்காக இன்றளவும் அவர் நினைவுகூறப்டும் நிலையில் அவரின் 101 வது பிறந்தநாளை திமுக தொண்டர்களும் அவரது அபிமானிகளும் கொண்டாடி வருகின்றனர்.

    அந்த வகையில் அமெரிக்காவில் உள்ள தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபரும் நியூ யார்க் தமிழ் சங்கத் தலைவருமான கதிர்வேல் குமாரராஜா தனது குடும்பத்துடன் சேர்ந்து கலைஞருக்கு மரியாதை செலுத்தும் வகையில் தனது காசை செலவுசெய்து, நியூ யார்க் டைம்ஸ் சதுக்கத்தில் முழு அளவிலான விளம்பரப் பலகையில் கலைஞரின் புகைப்படத்தை இடம்பெறச் செய்துள்ளார். அதில் முதல்வர்  மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் மற்றும் கதிர்வேல் ராஜாவின் குடும்பத்தினர் புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன. பிரசித்தி பெற்ற டைம்ஸ் சதுக்கத்தில் வகையில் கலைஞரின் புகைப்படம் பிரதிபலிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    • தி.மு.க. அலுவலகத்தில் அண்ணா, கலைஞர் சிலைக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மரியாதை செலுத்தினார்.
    • கருணாநிதியின் ஞான வார்த்தைகளாலும், அறிவுரைகளாலும் பயனடையும் அதிர்ஷ்டம் எனக்கு கிடைத்தது.

    புதுடெல்லி:

    தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் 101-வது பிறந்தநாள் இன்று. கலைஞரின் 101-வது பிறந்தநாளையொட்டி அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் டெல்லியில் உள்ள தி.மு.க. அலுவலகத்தில் அண்ணா, கலைஞர் சிலைக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மரியாதை செலுத்தினார். கலைஞர் படத்திற்கு சோனியா காந்தி மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

    தொடர்ந்து கலைஞரின் படத்திற்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, திருச்சி சிவா, வில்சன் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி கூறுகையில்,

    டாக்டர் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளில் திமுகவைச் சேர்ந்த எனது சகாக்களுடன் இங்கு வந்திருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

    பல சந்தர்ப்பங்களில் அவரை சந்தித்து, அவர் சொல்வதைக் கேட்டு, அவருடைய ஞான வார்த்தைகளாலும், அறிவுரைகளாலும் பயனடையும் அதிர்ஷ்டம் எனக்கு கிடைத்தது.

    அவரை சந்தித்ததை அதிர்ஷ்டமாக உணர்கிறேன். இந்த கொண்டாட்ட நாளில் உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள் என்று கூறினார்.


    தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, "தமிழ் மக்களின் மொழி, கலாச்சாரத்திற்கு பாதுகாப்பாக விளங்கிய தலைசிறந்த தலைவர் கருணாநிதி. இங்கு வந்ததில் எனக்கு மிகவும் பெருமையான விஷயம்," என்று தெரிவித்தார்.

    • நவீன தமிழ்நாட்டின் வளர்ச்சியின் ஒவ்வொரு சுவடிலும் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் கம்பீரமாக விளங்குகிறார்.
    • முத்தமிழறிஞர் கலைஞர் செய்த சாதனைகள் அனைத்தும் காலத்தை வென்று, நூறாண்டுகள் கடந்தும் மக்கள் மனதில் நிரந்தரமாக நிலைத்து நிற்கும்.

    சென்னை:

    தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதியின் 101-வது பிறந்த நாள் இன்று. கலைஞரின் 101-வது பிறந்தநாளையொட்டி அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி., அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது எக்ஸ் தளத்தில் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளனர்.

    கனிமொழி எம்.பி. தனது எக்ஸ் தளத்தில்,

    நவீன தமிழ்நாட்டின் வளர்ச்சியின் ஒவ்வொரு சுவடிலும் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் கம்பீரமாக விளங்குகிறார். இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் தமிழினத்திற்கு அவர் ஆற்றிய தொண்டும் பங்களிப்பும் காலத்தால் அழியாத வரலாறாக விளங்கும்.

    வாழ்க முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் புகழ்!

    வெல்க தமிழ்நாடு!

    வெல்க இந்தியா! என்று தெரிவித்துள்ளார்.

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில்,

    பெரியாரின் கனவுகளுக்கும், அண்ணாவின் குறிக்கோள்களுக்கும் தன்னுடைய சட்ட-திட்டங்கள் மூலம் செயல்வடிவமளித்து, தாழ்ந்து கிடந்த தமிழ்நாட்டைத் தரணி போற்றும் வகையில் தலை நிமிரச் செய்தவர் நம்முடைய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள். அத்தகைய கலைஞரின் நூற்றாண்டு நிறைவில் இருக்கிறோம்.

    எழுதி, பேசி, தமிழ்நாடு முழுக்க நடையாய் நடந்து, 'ஓய்வெடுக்காமல் உழைத்த' கலைஞர் அவர்களின் நூற்றாண்டை, நம்முடைய கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு மற்றும் கழகத்தின் சார்பாக #கலைஞர்100 என்ற புகழ் பரப்பும் பெரு விழாவாக ஆண்டு முழுக்க நடத்தியிருக்கிறார்.

    இந்த ஒரு நூற்றாண்டில் முத்தமிழறிஞர் கலைஞர் செய்த சாதனைகள் அனைத்தும் காலத்தை வென்று, இன்னும் பல நூறாண்டுகள் கடந்தும் மக்கள் மனதில் நிரந்தரமாக நிலைத்து நிற்கும்.

    கலைஞர் வாழ்க... அவர் புகழ் ஓங்குக! என்று தெரிவித்துள்ளார்.

    அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது எக்ஸ் தளத்தில்,

    • "தமிழர்களே தமிழர்களே நான் தயாரிக்கப்பட்டவன் பெரியாரால் தட்டி தட்டி சீர்செய்யப்பட்டவன்
    • ஆண்டவன் படைப்பில் அனைவரும் சமம் எனில்...

    சென்னை:

    தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதியின் 101-வது பிறந்த நாள் இன்று. கலைஞரின் 101-வது பிறந்தநாளையொட்டி அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில், தி.மு.க. சார்பில் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழா தொடர்பாக தி.மு.க. எக்ஸ் வலைதளத்தில் வீடியோ வெளியிடப்பட்டு உள்ளது. 

    அதில் முன்னாள் முதல்வர் கருணாநிதி மேடையில் பேசிய,

    "தமிழர்களே தமிழர்களே

    நான் தயாரிக்கப்பட்டவன் பெரியாரால்

    தட்டி தட்டி சீர்செய்யப்பட்டவன் அறிஞர் அண்ணா அவர்களால்

    நான் வலுப்பெற்றவன் என்னுடைய கழக கண்மணிகளால்.."

    "ஆண்டவன் படைப்பில் அனைவரும் சமம் எனில்... அவன் உயர் சாதிக்கு மட்டும் தங்கத்தால் மூளை செய்து தலைக்குளே வைத்தானா? மற்ற சாதிக்கெல்லாம் மண்டைக்குள் இருப்பதென்ன களிமண்ணா... சுண்ணாம்பா..."

    "இது உங்கள் பிறந்தநாள் மட்டுமல்ல... உயிரினும் மேலான உங்களின் கோடிக்கணக்கான உடன்பிறப்புக்கள் அனைவரும் புத்துணர்ச்சி பெற்ற நாள்...," உள்ளிட்ட காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதன் பின்னணியில் தமிழ் திரைப்பட பாடல்கள் கோர்வையாக இணைக்கப்பட்டு உள்ளன. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

    • அண்ணா, கலைஞர் கருணாநிதி நினைவிடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
    • கலைஞர் நூற்றாண்டு சிறப்பு புகைப்படக் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.

    சென்னை:

    தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதியின் 101-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை மெரினாவில் உள்ள அண்ணா, கலைஞர் கருணாநிதி நினைவிடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

     மேலும் கலைஞர் நூற்றாண்டு விழா சிறப்பு மலரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்

    இதைத்தொடர்ந்து கலைஞர் நூற்றாண்டு சிறப்பு புகைப்படக் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.

    கலைஞர் நூற்றாண்டு சிறப்பு புகைப்படக் கண்காட்சியை அமைச்சர்கள், கனிமொழி எம்.பி. ஆகியோரும் பார்வையிட்டனர்.

    • முத்தமிழ் அறிஞர் கலைஞரால் போற்றப்பட்ட பேரறிஞர் பெருந்தகைக்கு முதல் வணக்கம்.
    • உங்கள் பெயரை காக்கவே எந்நாளும் உழைக்கிறோம்.

    சென்னை:

    தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் 101-வது பிறந்தநாள் இன்று. கலைஞரின் 101-வது பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அதில் கலைஞர் கருணாநிதி அண்ணாவிற்கு எழுதிய கவிதையை வாசித்து அதன் பின்னணியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்ணா நினைவிடம், கலைஞர் நினைவிடத்தில் வணங்குவதுபோலவும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

    தலைவர் என்பார்

    தத்துவ மேதை என்பார்

    நடிகர் என்பார்

    நாடக வேந்தர் என்பார்

    சொல்லாற்ற சுவைமிக்க எழுத்தாற்றல் பெற்றார் என்பார்

    மனிதர் என்பார்

    மாணிக்கம் என்பார்

    மாநிலத்து அமைச்சர் என்பார்

    அன்னை என்பார்

    அருமொழி காவலர் என்பார்

    அரசியல்வாதி என்பார்

    அத்தனையும் தனித்தனியே சொல்வதற்கு நேரமற்றோர்

    நெஞ்சத்து அன்பாலே அண்ணா என்று ஒரு சொல்லால் அழைக்கட்டும் என்றே அவர் அன்னை பெயரும் தந்தார்

    என்று முத்தமிழ் அறிஞர் கலைஞரால் போற்றப்பட்ட பேரறிஞர் பெருந்தகைக்கு முதல் வணக்கம்.

    தலைவர்களுக்கெல்லாம் தலைவர்

    முதல்வருக்கெல்லாம் முதல்வர்

    கலைஞர்களுக்கெல்லாம் கலைஞர்

    நவீன தமிழ்நாட்டை செதுக்கிய சிற்பி

    இந்த பூமிப்பந்தில் வாழும் தமிழருக்கெல்லாம் குடும்பத்தலைவர்

    இந்திய நாடே அண்ணாந்து பார்த்த அரசியல் ஞானி

    முத்தமிழ் அறிஞர் தமிழனத்தலைவர் கலைஞர் அவர்கள் சூல் கொண்ட நாள் ஜூன் 3

    அதிலும் 2024-ம் ஆண்டு என்பது இந்த நூற்றாண்டின் தலைவராம் கலைஞருக்கு நூற்றாண்டு.

    எல்லா ஆண்டும் கலைஞர் ஆண்டே.

    அவர் ஆண்ட ஆண்டும் வாழ்ந்த ஆண்டும் மட்டுமல்ல எல்லா ஆண்டும் கலைஞர் ஆண்டே

    வீழ்ந்து கிடந்த தமிழ் சமுதாயத்திற்கு விடிவெள்ளியால் தோன்றி

    வாழும் காலத்தில் ஒளி தரும் உதயசூரியனாய் வாழ்ந்து

    மறைந்த பிறகும் கலங்கரை விளக்கமாய் வழிகாட்டிக்கொண்டிருப்பவர் தான் தலைவர் கலைஞர் அவர்கள்.

     

    தலைவர் அவர்களே நீங்கள் நினைத்தீர்கள் நாங்கள் செய்துகாட்டி வருகிறோம்

    நீங்கள் பாதை அமைத்தீர்கள் நாங்கள் பயணத்தை தொடர்கிறோம்.

    நீங்கள் இயக்குகிறீர்கள் நாங்கள் நடக்கிறோம்

    உங்கள் பெயரை காக்கவே எந்நாளும் உழைக்கிறோம்

    உழைப்போம்... உழைப்போம்... உழைப்போம்...

    என்று தெரிவித்துள்ளார்.

    ×