என் மலர்
நீங்கள் தேடியது "Karunanidhi"
- நேற்று முன்தினம் அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
- ராஜாத்தி அம்மாள் வீடு திரும்ப 2 நாட்கள் ஆகும் என தெரிகிறது.
சென்னை:
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாள் சென்னை மயிலாப்பூரில் உள்ள சி.ஐ.டி. காலனியில் உள்ள தனது மகள் கனிமொழி எம்.பி.யுடன் வசித்து வருகிறார். வயது மூப்பு காரணமாக ஓய்வில் இருந்து வரும் ராஜாத்தி அம்மாளுக்கு அண்மை காலமாக அஜீரண கோளாறு-வயிற்று வலி பிரச்சனை இருந்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் குழுவினர் அவருக்கு தொடர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
ராஜாத்தி அம்மாள் வீடு திரும்ப 2 நாட்கள் ஆகும் என தெரிகிறது. அவரை கனிமொழி எம்.பி. உடன் இருந்து கவனித்து வருகிறார்.
- ஏர்போர்ட் மூர்த்தி மீது, டி.ஜி.பி. அலுவலக வாயிலில் வைத்து, வி.சி.க. கட்சி ரவுடிகள் தாக்குதல் நடத்தினர்.
- ஏர்போர்ட் மூர்த்தியை கைது செய்திருக்கிறது தி.மு.க. அரசின் காவல்துறை.
பா.ஜ.க. மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:-
புரட்சித் தமிழகம் கட்சியின் தலைவர், அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி மீது, டி.ஜி.பி. அலுவலக வாயிலில் வைத்து, வி.சி.க. கட்சி ரவுடிகள் தாக்குதல் நடத்தினர்.
தாக்குதலில் ஈடுபட்ட வி.சி.க. ரவுடிகளை விட்டுவிட்டு, தன்னை தற்காத்துக் கொள்ள முயற்சித்த அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தியை கைது செய்திருக்கிறது தி.மு.க. அரசின் காவல்துறை.
மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 2006-2011 ஆட்சிக்காலத்தைவிட, கேடுகெட்ட ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார், அவரது மகன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- ‘தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும்’ ‘இளைய திராவிடம் எழுகிறது’ ஆகிய 2 புத்தகங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதி உள்ளார்.
- கலைஞரின் சிலைகளை நினைவுப் பரிசாக உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
சென்னை:
மறைந்த தி.மு.க. தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதி நினைவு நாளையொட்டி இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கலைஞர் மாணவப் பத்திரிகையாளர் திட்டத்தை தொடங்கி வைத்து அதன் இலச்சினையை வெளியிட்டார். அதை நக்கீரன் கோபால் பெற்றுக் கொண்டார்.
இதைத் தொடர்ந்து திராவிட இயக்க இளம் ஆய்வாளர்களை கண்டறிந்து அவர்களை வளர்த்தெடுத்து ஊக்குவிக்கும் விதமாக கலைஞர் நிதிநல்கை திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன் இலச்சினையை அவர் வெளியிட திராவிட இயக்க ஆய்வாளர் திருநாவுக்கரசு பெற்றுக்கொண்டார். இந்த திட்டத்தின் மூலம் இளம் ஆய்வாளர்கள் 15 பேருக்கு ஆண்டுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும்.
முத்தமிழறிஞர் பதிப்பகத்தின் சார்பில் தயாரிக்கப்பட்ட 8 நூல்களான தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும், தி.மு.க. வரலாறு, இளைய திராவிடம் எழுகிறது, மாநில சுயாட்சி முழக்கம், திராவிட இயக்க வரலாறு கேள்வி பதில், இந்தித் திணிப்பை எதிர்க்கிறோம் ஏன்? இந்தியாவுக்கு வழிகாட்டும் திராவிட மாடல், 'இந்தியாவில் சமூக நீதியும் இட ஒதுக்கீடும்' ஆகிய புத்தகங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட அமைச்சர் துரைமுருகன் பெற்றுக்கொண்டார். இதில் 'தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும்' 'இளைய திராவிடம் எழுகிறது' ஆகிய 2 புத்தகங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதி உள்ளார்.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னெடுப்பில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் கருணாநிதி குறித்த சிறப்பு காணொலியும் ஒளிபரப்பப்பட்டது.
நிகழ்ச்சியில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்பட அனைவருக்கும் கலைஞரின் சிலைகளை நினைவுப் பரிசாக உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி. முதன்மை செயலாளர் அமைச்சர் கே.என்.நேரு, துணை பொதுச்செயலாளர்கள் கனிமொழி எம்.பி., ஐ.பெரியசாமி, திருச்சி சிவா எம்.பி., ஆ.ராசா எம்.பி., அந்தியூர் செல்வராஜ், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தலைமை நிலைய செயலாளர்கள் பூச்சி முருகன், துறைமுகம் காஜா மற்றும் புத்தக எழுத்தாளர்கள், கட்சி நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.
- தந்தை பெரியாரும் பேரறிஞர் அண்ணாவும் தமிழினத்துக்குத் தந்த நெருப்பு!
- எதிலும் தமிழ்நாடு முதலிடம் எனும் இலக்கை நோக்கி வெற்றிப்பாதையில் நடைபோடுவோம்!
சென்னை:
தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
தலைவர் கலைஞர் -
முத்துவேலரும் அஞ்சுகம் அம்மையாரும் பூமிக்குத் தந்த பிறப்பு!
தந்தை பெரியாரும் பேரறிஞர் அண்ணாவும் தமிழினத்துக்குத் தந்த நெருப்பு!
அவரது சாதனைகளால் சிறப்பு பெற்ற தமிழ்நாட்டைக் காத்திட – முன்னேற்றிட உறுதியேற்று, கலைஞரின் ஒளியில் "எல்லார்க்கும் எல்லாம்" – "எதிலும் தமிழ்நாடு முதலிடம்" எனும் இலக்கை நோக்கி வெற்றிப்பாதையில் நடைபோடுவோம்! என்று கூறியுள்ளார்.
- காமராசர் ஏசி இல்லாமல் தூங்கமாட்டார் என்று எம்பி திருச்சி சிவா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
- கல்விக்கண் திறந்த காமராசர் இந்தியாவிற்கே வழிகாட்டியாகத் திகழ்ந்தவர்.
சென்னை பெரம்பூரில் திமுக பொதுக் கூட்டத்தில் பேசிய மாநிலங்களவை எம்.பி. திருச்சி சிவா, காமராஜர் குறித்து பேசியது சர்ச்சைகளை ஏற்படுத்தியது.
அக்கூட்டத்தில் பேசிய திருச்சி சிவா, "தமிழ்நாட்டில் மின்சாரத் தட்டுப்பாடு என காமராசர் மாநிலம் முழுக்க கண்டனக் கூட்டங்கள் நடத்தி வருகிறார். காமராசருக்கு ஏசி வசதி இல்லை என்றால் உடலில் அலர்ஜி ஏற்பட்டுவிடும். அதற்காக காமராஜர் தங்கும் அனைத்து பயணியர் விடுதிகளிலும் குளிர்சாதன வசதி செய்யச் சொல்லி முதல்வராக இருந்த கருணாநிதி உத்தரவிட்டார். திமுக அரசை எதிர்த்துதான் காமராசர் பேசுகிறார். ஆனால், காமராசரின் உடல்நலன் கருதி கருணாநிதி ஏசி வசதி ஏற்படுத்தச் சொன்னார். காமராஜர் உயிர் பிரிவதற்கு முன்னர் கருணாநிதியின் கைகளைப் பிடித்துக்கொண்டு நீங்கள்தான் இந்த நாட்டையும், ஜனநாயகத்தையும் காப்பாற்ற வேண்டும் என்று கூறினார்" என்று தெரிவித்தார். .
காமராசர் ஏசி இல்லாமல் தூங்கமாட்டார் என்று எம்பி திருச்சி சிவா பேசியதற்கு காங்கிரஸ் கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், காமராசர் குறித்து தான் பேசியது தொடர்பான விளக்கம் அளித்து எம்பி திருச்சி சிவா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அவரது அறிக்கையில், "பெருந்தலைவர் காமராசரின் புகழுக்குக் களங்கம் விளைவிக்கும் தன்மையில் நான் பேசியதாகக் கருத்து கொண்டு விவாதங்கள் வலுத்துக் கொண்டு வருகின்றன. நான் எதிர்வரிசையில் இருக்கும் தலைவர்களைப் பற்றிப் பேசும்போதுகூட கண்ணியத்தோடு விமர்சிப்பதைப் பலரும் அறிவார்கள். கல்விக்கண் திறந்த காமராசர் என்றும், மதிய உணவுத் திட்டத்தின் மூலமாக ஏழை வீட்டுப் பிள்ளைகள் கல்வி கற்க பள்ளிக்கூடம் வருவதற்கு இந்தியாவிற்கே வழிகாட்டியாகத் திகழ்ந்தவர் என்பதையும் பல மேடைகளில் உருக்கமாகவும், உணர்ச்சிகரமாகவும் நான் பேசுவது வழக்கம்.
"குணாளா! மணாளா! குலக்கொழுந்தே! குடியாத்தம் சென்று வா! வென்று வா!" என்று எழுதிய பேரறிஞர் அண்ணா - காமராசரின் மறைவுக்குப் பின் அவருக்கு அனைத்து மரியாதைகளும் செய்ததோடு, சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனையத்திற்கு அவர் திருப்பெயரைச் சூட்டிய முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் வழியொற்றி, அவர் பிறந்தநாளை "கல்வி வளர்ச்சி நாளாக" கடைப்பிடித்து அவரின் புகழுக்கு நாளும் மெருகேற்றும் இன்றைய கழகத் தலைவர் தமிழ்நாட்டு முதலமைச்சர் தளபதி அண்ணன் மு.க.ஸ்டாலின் தலைமையின்கீழ் பணியாற்றும் நான், மறைந்த தலைவர்களின் புகழுக்கு மாசு படிவதை எந்த வகையிலும் யார் செய்தாலும் ஏற்கும் மனநிலை கொண்டவனல்ல.
நாட்டு விடுதலைப் போரில் பல ஆண்டுகள் சிறையேகி, தியாகத் தழும்பேறி, முதலமைச்சராகவும், அகில இந்தியக் காங்கிரஸ் கட்சித் தலைவராகவும் மக்கள் தொண்டாற்றி, எல்லோர் மனதிலும் தனித்த இடம் பிடித்த பெருந்தலைவர் காமராசர் அவர்கள் மீது மிகுந்த மரியாதையும் பெருமதிப்பும் கொண்டவன் நான். அண்ணா, கலைஞர், தளபதி வழியில் - கண்ணியம் காக்கும் கடமை கொண்ட கழகத் தொண்டன்!
இந்த விளக்கத்தினை எல்லோரும் அன்புகூர்ந்து ஏற்று என் உரையில் நான் கூறிய செய்தியினை மேலும் விவாதப் பொருளாக்கிட வேண்டாம் என அனைவரையும் அன்புடன் வேண்டிக் கொள்கிறேன்!
- சாதனை விளக்க பொதுக் கூட்டங்களிலும் கலந்து கொண்டு பேசுகிறார்.
- கட்சிக்கு உழைக்காதவர்கள் ஓரம் கட்டப்படுவார்கள் என எச்சரிக்கை விடுத்தார்.
தி.மு.க. பொதுச்செயலாளர் பதவியில் இருக்கும் அமைச்சர் துரைமுருகன் கட்சியில் ஓரம் கட்டப்படுகிறார். அவருக்கு இந்த முறை பொதுச்செயலாளர் பதவி இல்லை.
50 ஆண்டுகாலமாக எம்.எல்.ஏ. பதவி வகித்து வரும் அமைச்சர் துரைமுருகன் மீண்டும் காட்பாடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றால் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சட்டசபையில் நீண்ட நாள் உறுப்பினர் என்ற சாதனையை தகர்த்து விடுவார்.
இதனால் இந்த முறை காட்பாடி தொகுதியிலும் அமைச்சர் துரைமுருகனுக்கு போட்டியிட சீட் கிடைக்காது என்றும் பரவலாக பேசி வருகின்றனர்.
ஆனால் இதையெல்லாம் கண்டும் காணாமல் இருக்கும் அமைச்சர் துரைமுருகன் இந்த வயதிலும் கட்சி பணியில் தீவிரம் காட்டி வருகிறார்.
கடந்த சில நாட்களாக காட்பாடி தொகுதியில் முகாமிட்டுள்ள அமைச்சர் துரைமுருகன் அந்த தொகுதியில் உள்ள கிராமங்களில் வீடு வீடாக சென்று உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டு உள்ளார்.
மேலும் சாதனை விளக்க பொதுக் கூட்டங்களிலும் கலந்து கொண்டு பேசுகிறார்.
காட்பாடி தொகுதி எனக்கு கோவில். இந்த தொகுதி மக்கள் தான் என் தெய்வம் என தொடர்ந்து பேசி வரும் துரைமுருகன் ஒருபோதும் காட்பாடி தொகுதியை விட்டுக் கொடுக்க மாட்டார். அவர் மீண்டும் போட்டியிடுவார் என ஒரு தரப்பினர் சொல்லி வருகின்றனர்.
கட்சிப் பதவியைப் பற்றி கவலை இல்லை. ஆனால் காட்பாடி தொகுதியில் அமைச்சர் துரைமுருகன் மீண்டும் போட்டியிடுவது உறுதி என அவருடைய ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர். இதை உறுதிப்படுத்தும் வகையில் தொகுதியில் உறுப்பினர் சேர்க்கை பணியில் ஈடுபட்டுள்ள துரைமுருகன் அங்குள்ள வார்டு செயலாளர்கள் முதல் கட்சி நிர்வாகிகள் வரை தனித்தனியாக சந்தித்து பேசி வருவதாகவும் கூறப்படுகிறது.
மேலும் சமீபத்தில் நடந்த கூட்டம் ஒன்றில் தேர்தலில் தி.மு.க. வெற்றிக்காக அயராது உழைக்க வேண்டும். கட்சிக்கு உழைக்காதவர்கள் ஓரம் கட்டப்படுவார்கள் என எச்சரிக்கை விடுத்தார்.
இது துரைமுருகன் மீண்டும் காட்பாடியில் போட்டியிடுவதை உறுதி செய்துள்ளது.
- துணை முதல்வர் ஆனபோது முன்வரிசையில் இவருக்கு அருகில் வந்து அமர்ந்தேன்.
- காட்பாடி தொகுதிக்கு வருகை தந்த நினைவுகள் குறித்து பேசினார்.
வேலூர்:
வேலூர் மாவட்டம் காட்பாடியில் நடந்த திருமண விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-
என்னுடைய அரசியல் வாழ்வுக்கு அடித்தளமிட்டு, பிள்ளையார் சுழி போட்டதே இந்த காட்பாடி தொகுதி தான். நமது கழகத்தின் பொதுச்செயலாளர் உள்ள மண் இந்த காட்பாடி மண். அப்படிப்பட்ட பெருமைமிகு மண்ணில் இருப்பதைக் கண்டு பெருமை கொள்கிறேன்.
நான் துணை முதலமைச்சர் ஆன போது பொதுச்செயலாளர் என்னை வாழ்த்தினார். அது எப்படி என்றால்.
நான் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் போது பின் வரிசையில் இருந்தேன், துணை முதல்வர் ஆனபோது முன்வரிசையில் இவருக்கு அருகில் வந்து அமர்ந்தேன்.
அப்போது, இனிமே நீ என் பக்கத்து சீட்டு தானே வா.. வா... உன்னை பார்த்துக்கொள்கிறேன் என பொதுச்செயலாளர் துரைமுருகன் என்னை வாழ்த்தினார் என கூறினார்.
மேலும் இதற்கு முன்பு காட்பாடி தொகுதிக்கு வருகை தந்த நினைவுகள் குறித்து பேசினார்.
இதனைத் தொடர்ந்து அமைச்சர் துரைமுருகன் பேசுகையில்:-
எனது மகன் கதிர் ஆனந்திற்காக முதன் முதலில் எம்.பி தேர்தலில் பிரச்சாரத்திற்கு வந்து பேசியதை துணை முதல்வர் உதயநிதி குறிப்பிட்டார். அது எனக்கே ஞாபகம் இல்லை. ஆனால் அவர் ஞாபகம் வைத்து பேசுகிறார்.
"துணை முதல்வர் உதயநிதிக்கு அவரது தாத்தாவை (கருணாநிதி) போல் ஞாபக சக்தி அதிகம். உதயநிதிக்கு கருணாநிதி போல் கம்ப்யூட்டர் மைண்ட்"என்றார்.
- நாட்டிலேயே சீர்திருத்த திருமணங்களை சட்டப்படி செல்லுபடியாக்கிய முதல் மாநிலம் தமிழ்நாடு தான்.
- உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் தமிழ் ஒலிக்க வேண்டும்.
திருவையாறு தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகரின் இல்ல திருமணவிழாவில் பங்கேற்று மணமக்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்தினார். இதன்பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
* சீர்திருத்த திருமணங்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் பெற்று தந்தவர் பேரறிஞர் அண்ணா.
* நாட்டிலேயே சீர்திருத்த திருமணங்களை சட்டப்படி செல்லுபடியாக்கிய முதல் மாநிலம் தமிழ்நாடு தான்.
* தமிழ் மொழிக்கு செம்மொழி என்ற அந்தஸ்தை பெற்றுத்தந்தவர் கலைஞர் கருணாநிதி.
* உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் தமிழ் ஒலிக்க வேண்டும்.
* உச்சநீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் என தொடர்ந்து கோருகிறோம்.
* குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயரை சூட்ட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
- நீங்க எப்பவும் எனக்கு ஒரு இடத்தை புன்னகையோடு கொடுத்தீர்கள்.
- சிரிப்பு, அரவணைப்பு, அக்கறை, அப்பா, தலைவர், நண்பர், வழிகாட்டி, சித்தாந்தவாதியை நான் ரொம்ப மிஸ் பண்றேன்.
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. தந்தையர் மற்றும் தந்தையர்களை போற்றும் வகையில் தந்தையர் தினம் உலகம் முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது.
தந்தையர் தினத்தையொட்டி தி.மு.க. எம்.பி. கனிமொழி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
நீங்கள் எப்போதும் என்னை சிரிக்க வைக்கக்கூடிய மனிதர். நீங்கள் மிகவும் புத்திசாலியான மனிதர். நீங்க எப்பவும் எனக்கு ஒரு இடத்தை புன்னகையோடு கொடுத்தீர்கள்.
ஒரு தந்தையால் மட்டுமே ஒரு மகளை பராமரிக்க முடியும் என்பது போல நீங்கள் எப்போதும் என் மீது அக்கறை கொண்டிருந்தீர்கள். என் துணிச்சலை பாராட்டி உள்ளீர்கள்.
நான் ரொம்ப வலிமையானவன்னு நீங்க எப்பவும் குறை சொல்லுவீங்க, ஆனா அதுக்கும் நீங்கதான் காரணம்னு உங்களுக்குத் தெரியுமா?
சிரிப்பு, அரவணைப்பு, அக்கறை, அப்பா, தலைவர், நண்பர், வழிகாட்டி, சித்தாந்தவாதியை நான் ரொம்ப மிஸ் பண்றேன். பாடங்களுக்கும் நினைவுகளுக்கும் நன்றி என்று தனது தந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை அவர் பகிர்ந்துள்ளார்.
- ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது.
- தந்தையாக நவீனத் தமிழ்நாட்டைச் செதுக்கிய தலைவர்!
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. தந்தையர் மற்றும் தந்தையர்களை போற்றும் வகையில் தந்தையர் தினம் உலகம் முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது.
அந்த வகையில் தந்தையர் தினமான இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
தலைவராக வழிகாட்டிய தந்தை! தந்தையாக நவீனத் தமிழ்நாட்டைச் செதுக்கிய தலைவர்!
என்று பதிவிட்டு தனது தந்தை கலைஞர் மு.கருணாநிதியுடன் அவர் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
- முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 102-வது பிறந்தநாள் விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
- கருணாநிதி பிறந்தநாள் செம்மொழி நாளாக கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மறைந்த தி.மு.க. தலைவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 102-வது பிறந்தநாள் விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
கருணாநிதி பிறந்தநாள் செம்மொழி நாளாக கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளதால் அனைத்து மாவட்டங்களிலும் இந்த விழா இன்று சிறப்பாக நடத்தப்பட்டது. அவரது உருவ சிலைக்கு பல்வேறு தரப்பினர் மரியாதை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
தமிழ் மொழிக்கும் தமிழ்க் கலைக்கும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் தமிழர்தம் நலனுக்கும் தன் மொத்த வாழ்வையும் அர்ப்பணித்துச் செயலாற்றிய ஒப்பற்ற தலைவர் கலைஞரை அவர்தம் பிறந்த நாளில் போற்றுவதில் மகிழ்கிறேன் என கூறினார்.
- முரசொலி அலுவலகம் சென்று கருணாநிதியின் சிலைக்கு மாலை அணிவித்து உருவப்படத்துக்கு மலர்தூவி வணங்கினார்.
- செம்மொழி நாள் போட்டிகளில் மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிசுகள் வழங்கினார்.
சென்னை:
மறைந்த தி.மு.க. தலைவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 102-வது பிறந்தநாள் விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
கருணாநிதி பிறந்தநாள் செம்மொழி நாளாக கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளதால் அனைத்து மாவட்டங்களிலும் இந்த விழா இன்று சிறப்பாக நடத்தப்பட்டது.
சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலையில் வீட்டில் உள்ள கருணாநிதியின் படத்துக்கு மாலை அணிவித்து வணங்கி விட்டு நேராக கருணாநிதி வாழ்ந்த கோபாலபுரம் இல்லத்துக்கு சென்றார்.
அங்குள்ள கருணாநிதி யின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். வீட்டில் இருந்த தாயார் தயாளு அம்மாளை சந்தித்து ஆசி பெற்றார்.
அதன்பிறகு அண்ணா அறிவாலயம் சென்று அங்குள்ள கருணாநிதியின் சிலைக்கு மாலை அணிவித்து அதன் அருகில் வைக்கப்பட்ட உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து முரசொலி அலுவலகம் சென்று கருணாநிதியின் சிலைக்கு மாலை அணிவித்து உருவப்படத்துக்கு மலர்தூவி வணங்கினார்.
பின்னர் அங்கிருந்து மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதியின் நினைவிடம் சென்று வணங்கினார்.
அதன்பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்ணாசாலையில் உள்ள ஓமந்தூரார் தோட்டம் சென்று அங்குள்ள கருணாநிதியின் சிலைக்கு அரசு சார்பில் மாலை அணிவித்து படத்துக்கு மலர்தூவி வணங்கினார்.
அவருடன் அமைச்சர்கள், தலைமைக்கழக நிர்வாகிகள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உடன் வந்திருந்தனர். இதன்பிறகு கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.
தமிழுக்கு செம்மொழித் தகுதி பெற்றுத்தந்த கருணாநிதியின் பெருமையை போற்றிடும் வகையில் அவர் பிறந்தநாளான ஜூன் 3-ம் நாள் (இன்று) தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் ஆண்டு தோறும் செம்மொழி நாள் விழாவாக கொண்டாடப்படும் என்று அறிவித்ததற்கு இணங்க கலைவாணர் அரங்கில் நடைபெற்ற செம்மொழி நாள் விழாவுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமை தாங்கினார். அனைவரையும் தலைமை செயலாளர் முருகானந்தம் வரவேற்றார்.
அங்கு அமைக்கப்பட்டிருந்த தமிழ் செம்மொழி குறித்த கண்காட்சியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பார்வையிட்டார்.
அதன் பிறகு நிகழ்ச்சி தொடங்கியதும் முத்தமிழறிஞரின் முத்தமிழ் கலை பண்பாட்டுத் துறை வழங்கும் இசை மற்றும் நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. எல்லோருக்கும் எல்லாமுமாய் என்ற முத்தமிழறிஞர் கலைஞர் குறித்த ஆவணப்படம் செய்தித் துறை சார்பில் செம்மொழி நாள் குறும்படம் வெளியிடப்பட்டது.
இவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முனைவர் தாயம்மாள் அறவாணன் என்பவருக்கு 2025-ம் ஆண்டுக்கான கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது வழங்கி விருதுத் தொகையாக 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையும், கலைஞர் மு.கருணாநிதியின் திருஉருவச் சிலையும் வழங்கி சிறப்பித்தார்.
மேலும் செம்மொழி நாள் போட்டிகளில் மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் 5 பேருக்கு உயர்த்தப்பட்ட உதவித்தொகை ஒப்பளிப்பு ஆணைகளை வழங்கினார்.
விழாவில் தமிழ்நாடு அரசின் நான்காண்டு சாதனை மலரையும் வெளியிட்டார்.
அதன் பிறகு சுகிசிவம் தலைமையில் பட்டிமன்றம் நடைபெற்றது. செம்மொ ழியின் தனிச்சிறப்பு அதன் தென்மையே-அதன் இள மையே என்று பட்டிமன்ற பேச்சாளர்கள் பேசி னார்கள்.
நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, டி.ஆர்.பாலு எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தாயகம் கவி, பரந்தாமன், ஏ.எம்.வி.பிரபாகர்ராஜா, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அரசு செயலாளர் வே.ராஜாராமன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.






