என் மலர்
நீங்கள் தேடியது "கருணாநிதி நினைவு நாள்"
- ‘தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும்’ ‘இளைய திராவிடம் எழுகிறது’ ஆகிய 2 புத்தகங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதி உள்ளார்.
- கலைஞரின் சிலைகளை நினைவுப் பரிசாக உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
சென்னை:
மறைந்த தி.மு.க. தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதி நினைவு நாளையொட்டி இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கலைஞர் மாணவப் பத்திரிகையாளர் திட்டத்தை தொடங்கி வைத்து அதன் இலச்சினையை வெளியிட்டார். அதை நக்கீரன் கோபால் பெற்றுக் கொண்டார்.
இதைத் தொடர்ந்து திராவிட இயக்க இளம் ஆய்வாளர்களை கண்டறிந்து அவர்களை வளர்த்தெடுத்து ஊக்குவிக்கும் விதமாக கலைஞர் நிதிநல்கை திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன் இலச்சினையை அவர் வெளியிட திராவிட இயக்க ஆய்வாளர் திருநாவுக்கரசு பெற்றுக்கொண்டார். இந்த திட்டத்தின் மூலம் இளம் ஆய்வாளர்கள் 15 பேருக்கு ஆண்டுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும்.
முத்தமிழறிஞர் பதிப்பகத்தின் சார்பில் தயாரிக்கப்பட்ட 8 நூல்களான தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும், தி.மு.க. வரலாறு, இளைய திராவிடம் எழுகிறது, மாநில சுயாட்சி முழக்கம், திராவிட இயக்க வரலாறு கேள்வி பதில், இந்தித் திணிப்பை எதிர்க்கிறோம் ஏன்? இந்தியாவுக்கு வழிகாட்டும் திராவிட மாடல், 'இந்தியாவில் சமூக நீதியும் இட ஒதுக்கீடும்' ஆகிய புத்தகங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட அமைச்சர் துரைமுருகன் பெற்றுக்கொண்டார். இதில் 'தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும்' 'இளைய திராவிடம் எழுகிறது' ஆகிய 2 புத்தகங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதி உள்ளார்.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னெடுப்பில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் கருணாநிதி குறித்த சிறப்பு காணொலியும் ஒளிபரப்பப்பட்டது.
நிகழ்ச்சியில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்பட அனைவருக்கும் கலைஞரின் சிலைகளை நினைவுப் பரிசாக உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி. முதன்மை செயலாளர் அமைச்சர் கே.என்.நேரு, துணை பொதுச்செயலாளர்கள் கனிமொழி எம்.பி., ஐ.பெரியசாமி, திருச்சி சிவா எம்.பி., ஆ.ராசா எம்.பி., அந்தியூர் செல்வராஜ், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தலைமை நிலைய செயலாளர்கள் பூச்சி முருகன், துறைமுகம் காஜா மற்றும் புத்தக எழுத்தாளர்கள், கட்சி நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.
- அமைச்சர் மனோ தங்கராஜ், மேயர் மகேஷ் பங்கேற்பு
- ஆயிரக்கணக்கான நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டு கருணாநிதி படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினார்கள்.
நாகர்கோவில்:
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 4-வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. இதையடுத்து கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் அமைதி பேரணி இன்று நடந்தது.
வடசேரி அண்ணா சிலை முன்பிருந்து நடந்த அமைதி பேரணிக்கு கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளரும் நாகர்கோவில் மாநகராட்சி மேயருமான மகேஷ் தலைமை தாங்கினார். அமைச்சர் மனோ தங்கராஜ் மற்றும் நிர்வாகிகள் பேரணியில் கலந்து கொண்டனர். பேரணியில் பங்கேற்ற நிர்வாகிகள் சிலர் கருப்பு சட்டையுடன் பங்கேற்றனர். வடசேரியில் இருந்து புறப்பட்ட பேரணி மணிமேடை வழியாக வேப்பமூடு வந்தடைந்தது. அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதி படத்திற்கு அமைச்சர் மனோதங்கராஜ், மேயர் மகேஷ் மற்றும் நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தி னார்கள்.
அமைதிப் பேரணியில் மாவட்ட பொருளாளர் கேட்சன், கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை செயலாளர் தில்லை செல்வம், உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற மாவட்ட தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், நாகர்கோவில் மாநகராட்சி மண்டல தலைவர் அகஸ்டினா கோகிலவாணி, தி.மு.க. பொறியாளர் அணி அமைப்பாளர் ஆர். எஸ். பார்த்தசாரதி, ஒன்றிய செயலாளர்கள் தாமரை பாரதி, மதியழகன், மாணவரணி அமைப்பாளர் சதாசிவம், கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் சுரேந்திர குமார், வர்த்தக அணி அமைப்பாளர் சி.என். செல்வன், தாழக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி துணைத் தலைவர் இ.என். சங்கர், தொண்டரணி அமைப்பாளர் எம்.ஜே. ராஜன் உள்பட ஆயிரக்கணக்கான நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டு கருணாநிதி படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினார்கள்.
நாகர்கோவில் மாநகர பகுதியில் உள்ள 52 வார்டுகளிலும் கருணா நிதியின் படத்திற்கு நிர்வாகிகள் மலரஞ்சலி செலுத்தினார்கள். இதே போல் கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளிலும் கருணாநிதியின் உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. அந்த படத்திற்கு நிர்வாகிகள் மலரஞ்சலி செலுத்தினார்கள்.






