search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Karunanidhi birthday"

    • பொது வாழ்வில் தனது வாழ்க்கையின் பெரும்பாலான ஆண்டுகள் தமிழகம் மற்றும் தமிழ் மக்களின் வளர்ச்சிக்காக உழைத்தார்.
    • நாங்கள் இருவரும் அந்தந்த மாநிலங்களில் முதலமைச்சராக இருந்தபோது அவருடன் உரையாடியதை நினைவு கூர்ந்து பார்க்கிறேன்.

    மறைந்த தமிழக முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியின் பிறந்த நாள் இன்று. அவரது 101-வது பிறந்த நாளை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் அவரது படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர். மேலும், கருணாநிதியுடன் இணைந்து பயணித்த அரசியில் வாழ்க்கை குறித்து நினைவு கூர்ந்து வருகின்றனர்.

    இந்த நிலையில் பிரதமர் மோடி, கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு புகழாரம் சூட்டியுள்ளார்.

    கலைஞர் கருணாநிதியை அவரது வீட்டிற்கு சென்று சந்தித்த படத்தை பதிவிட்டு எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள செய்தியில் "கலைஞர் கருணாநிதியின் 100-வது பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன்.

    பொது வாழ்வில் தனது வாழ்க்கையின் பெரும்பாலான ஆண்டுகள் தமிழகம் மற்றும் தமிழ் மக்களின் வளர்ச்சிக்காக பாடுபட்டவர். தனது அறிவார்ந்த தன்மைக்காக பெரிதும் மதிக்கப்பட்டவர். நாங்கள் இருவரும் அந்தந்த மாநிலங்களில் முதலமைச்சராக இருந்தது உள்பட பல்வேறு சந்தர்ப்பங்களில் கலைஞர் கருணாநிதியுடன் நான் உரையாடியதை நினைவு கூர்ந்து பார்க்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சோனியா காந்தி "காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி கூறுகையில் "டாக்டர் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளில் திமுகவைச் சேர்ந்த எனது சகாக்களுடன் இங்கு வந்திருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். பல சந்தர்ப்பங்களில் அவரை சந்தித்து, அவர் சொல்வதைக் கேட்டு, அவருடைய ஞான வார்த்தைகளாலும், அறிவுரைகளாலும் பயனடையும் அதிர்ஷ்டம் எனக்கு கிடைத்தது. அவரை சந்தித்ததை அதிர்ஷ்டமாக உணர்கிறேன். இந்த கொண்டாட்ட நாளில் உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்" என்று கூறினார்.

    டெல்லி திமுக அலுவலகத்தில் கலைஞர் கருணாநிதி படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதன்பின் சோனியா காந்தி இவ்வாறு தெரிவித்திருந்தார்.

    • ஹாக்கி விளையாட்டு கருணாநிதிக்கு மிகவும் பிடிக்கும்.
    • தொடர்ந்து 13 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட மாபெரும் சாதனையாளர் கலைஞர்.

    நாகப்பட்டினம் மாவட்டத்தில் `திருக்கோளிலி' என்று அக்காலத்தில் அழைக்கப்பட்ட திருக்குவளை கிராமத்தில் 1924-ம் ஆண்டு ஜூன் மாதம் 3-ம் தேதி முத்துவேல் மற்றும் அஞ்சுகம் அம்மையாருக்கும் 3-வது மகனாகப் பிறந்தார் கலைஞர் என்று உலகம் போற்றும் கருணாநிதி. அவருக்கு முன் பிறந்த தமக்கையர் இருவர், பெரிய நாயகம் மற்றும் சண்முகவடிவு.

    பெற்றோரும், தமக்கையரும் சீராட்டி சீர்மிகு அன்பில் பாராட்டி வளர்த்ததில் போராட்ட குணமும், எதையும் ஆராய்ந்து கேள்வியெழுப்பும் பகுத்தறிவும், ஏற்றத்தாழ்வுகளை விரும்பாத சுயமரியாதை மிக்கவராகவும் வளர்ந்தார். சிறுவயது முதலே மான உணர்ச்சியும், கொண்ட கொள்கையில் பிடிவாதம் மிக்கவருமான கலைஞர், தந்தையார் ஏற்பாடு செய்த இசைப்பயிற்சி வகுப்பில் நிலவிய சாதி ஏற்றத்தாழ்வை கண்டு இனி இசை வகுப்புக்கு செல்வதில்லை என்று தீர்மானமாக தன் தந்தையாரிடம் தெரிவித்தார். 

    திருக்குவளை கிராமத்தில் ஆரம்பக்கல்வியும், பின்னர் திருவாரூர் போர்டு உயர்நிலைப் பள்ளியிலும் கல்வி பயின்ற கலைஞர், பள்ளிப் பருவத்திலேயே நாடகம், கவிதை மற்றும் சொற்பொழிவு ஆகியவற்றில் தீவிர ஈடுபாடு கொண்டவராக விளங்கினார். திருவாரூர் உயர்நிலைப்பள்ளியில் மாணவராக கலைஞர் சேர்ந்ததே வியப்பான நிகழ்வு. வயதின் காரணமாக அனுமதி மறுக்கப்பட, பள்ளியில் இடமளிக்கவில்லை என்றால் எதிரே இருக்கும் குளத்தில் வீழ்வேன் என்று தலைமை ஆசிரியரிடம் போராடி பள்ளியில் சேர்ந்தார். அந்தப் போராட்ட குணமே கலைஞரின் அடையாளமாக இறுதிவரை நிலைத்தது. 1939-ம் ஆண்டு, கலைஞர் 8-ம் வகுப்பு படித்தபோது, பள்ளியில் நடைபெற்ற பேச்சுப் போட்டியில், 'நட்பு' என்ற தலைப்பில் பேசினார். இதுவே, கலைஞரின் முதல் மேடைப் பேச்சு.

    விளையாட்டிலும் கலைஞருக்கு மிகுந்த ஆர்வம் இருந்தது. ஹாக்கி விளையாட்டு அவருக்கு மிகவும் பிடிக்கும். திருவாரூர் போர்டு உயர்நிலைப் பள்ளி ஹாக்கி அணியில் கலைஞர் பங்கு பெற்றிருந்தார். கிரிக்கெட்டும் கலைஞருக்கு மிகவும் பிடித்தமான விளையாட்டு.

    15-வது வயதில் கலைஞர் மு. கருணாநிதி தனது சொந்த பதிப்பகப் பயணத்தை தொடங்கினார், மாணவநேசன் என்ற பத்திரிகையை உருவாக்கினார்.

    இது தோராயமாக "மாணவர்களின் நண்பர்கள்"என்று மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. 75 ரூபாய் நிதியில், 1941-ல் தமிழ்நாடு தமிழ் மாணவர் சங்கத்தை நிறுவினார். ஒரு வருடம் கழித்து, சங்கம் அதன் ஆண்டு விழாவை நடத்தியது. இதில் பாரதிதாசன், கே.ஏ.அன்பழகன், கே.ஏ.மதியழகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். திருவாரூரில் மு.கருணாநிதி எழுத்துக்கள் பிரபலமடைவதால் தனது பதிப்பகத்தை விரிவுபடுத்துவதற்காக முரசொலியை தொடங்கினார். அண்ணா துரை கருணாநிதியை நேரில் சந்தித்தபோது, அவர் வெறும் 18 வயது பள்ளி மாணவர் என்பதை கண்டு வியப்படைந்தார்.

     

    மு.கருணாநிதி தமிழ் அரசியலில் எழுச்சி பெற உதவிய முக்கிய தருணங்களில் ஒன்று, 1953 -ம் ஆண்டு தனது 29-வது வயதில் கல்லக்குடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது தான். அங்கு சிமென்ட் தொழிற்சாலை வைத்திருந்த இடத்திற்கு "டால்மியாபுரம்" என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

    டால்மியாபுரம் என்ற பெயர் வட இந்திய ஆதிக்கத்தையும், சுரண்டல் வணிக நடைமுறைகளையும் குறிக்கிறது என்று கருதிய கருணாநிதியும் அவரது தோழர்களும் ஊரின் பெயரை மீண்டும் கல்லக்குடி என மாற்ற வேண்டும் என வலியுறுத்தினர்.

    போராட்டத்தின்போது மு.கருணாநிதி மற்றும் அவரது ஆதரவாளர்கள் ரெயில் நிலையத்தில் டால்மியாபுரம் என்ற பெயரை துடைத்தெறிந்ததோடு, ரெயில் தண்டவாளத்தில் படுத்து மறியலில் ஈடுபட்டனர். துரதிர்ஷ்டவசமாக, 6 பேர் உயிரிழந்தனர். கருணாநிதி கைது செய்யப்பட்டு 6 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார்.

    1965 -ம் ஆண்டில், மத்திய அரசு இந்தியை ஒரே அலுவல் மொழியாக அறிவித்தது. இது தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை தூண்டியது. சி.என்.அண்ணாதுரை தலைமையில் தி.மு.க. இந்த முடிவுக்கு எதிராக தொடர் பேரணிகளை நடத்தியது. "இந்தி ஒழிக, தமிழ் வாழ்க" என்ற முழக்கங்கள் மாநிலம் முழுவதும் எதிரொலித்தது. வன்முறை வெடித்தது மற்றும் சிலர் தீக்குளித்தனர்.

    தி.மு.க-வின் இந்தி எதிர்ப்பு இயக்கத்தின் முக்கியப் பிரமுகரான மு. கருணாநிதி 1965-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16-ந்தேதி கைது செய்யப்பட்டு 6 மாத சிறைத் தண்டனை பெற்று பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி பெயரை என்றென்றும் சொல்லும் வகையில் முத்தான திட்டங்களை தந்த கலைஞர் புகழ் கிராமங்கள் வரை நிலைத்து நிற்கிறது.

    இந்தியாவின் 1957-ம் ஆண்டு பொதுத் தேர்தல் நடைப்பெற்றது. தி.மு.க.வின் சார்பில் கலைஞர் திருச்சி மாவட்டம் குளித்தலை தொகுதியில் நின்றார். வென்றார். தனது 33-ம் வயதில் சட்டசபைக்குள் நுழைந்தார். இதற்குப் பின் 2016 ஆண்டு வரை 13 முறை நடந்த சட்டசபை தேர்தலில் ஒன்றில் கூட தோற்காமல் வெற்றி வாகை சூடினார். 1984-ல் மட்டும் அவர் தேர்தலில் நிற்கவில்லை. தொடர்ந்து 13 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட மாபெரும் சாதனையாளர் கலைஞர்.

    முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி தமிழ்நாடு முதலமைச்சராக இருந்தபோது பல திட்டங்கள் செயல்படுத்தினார்.

     

    கலைஞர் என்று அன்புடன் நினைவு கூறப்படும் முத்துவேல் கருணாநிதி தமிழ்நாட்டில் 5 முறை முதலமைச்சராக பதவி வகித்தார். அவர் சமூகத்தின் விளிம்புநிலை பிரிவினரை மேம்படுத்துவதற்கும், பாலின சமத்துவத்தை மேம்படுத்துவதற்கும் அரும்பாடுபட்டார். சாதி அடிப்படையிலான பாகுபாட்டை குறைப்பதற்கும் அனைவருக்கும் சம வாய்ப்புகளைப் பெறுவதற்கும் அவர் பல கொள்கைகளை அறிமுகப்படுத்தினார். அவர் ஒரு சிறந்த எழுத்தாளர், கவிஞர் மற்றும் நாடக ஆசிரியராகவும் இருந்தார். தமிழில் பல இலக்கியப் படைப்புகளை எழுதினார். கலைஞர் கருணாநிதி ஆட்சி காலத்தில் ஏராளமான மக்கள் நலத்திட்டங்களை கொண்டுவந்தார். அதில் உள்ள முக்கிய திட்டங்கள்:

    2-வது காவல் ஆணையம்

    அதிகரித்து வரும் குற்றச்செயல் விகிதங்களை கட்டுப்படுத்தும் நோக்கிலும், காவல்துறையை நவீனப்படுத்தவும் 1989-ம் ஆண்டு 2-வது காவல் ஆணையத்தை கலைஞர் அறிமுகப்படுத்தினார்.

    ஊதியக் குழு, உயர்ந்த சம்பளம்

    தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு நியாயமான ஊதியத்தை மத்திய அரசு தரத்துடன் கலைஞர் சீரமைத்தார். அவர் ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் வழக்கமான சம்பளத் திருத்தங்களை நடைமுறைப்படுத்தினார். பொங்கல் பண்டிக்கைக்கான முன்பணம், பண்டிகை மற்றும் பயணப்படிகள், மருத்துவச் செலவுகளைத் திரும்ப வழங்குதல் போன்றவற்றையும் அவர் அறிமுகப்படுத்தினார்.

    நெல் கரும்பு உற்பத்தி அதிகரிப்பு

    கலைஞரின் பல்வேறு விவசாய நடவடிக்கைகளே நெல் உற்பத்தியை 3.5 மில்லியன் டன்னிலிருந்து 5.6 மில்லியன் டன்னாகவும், கரும்பு உற்பத்தியை 9.5 மில்லியன் டன்னிலிருந்து 29.7 மில்லியன் டன்னாகவும் உயர்த்தியது. மேலும் மலிவு விலை அரசி திட்டம், உணவு பற்றாக்குறையைச் சமாளித்து அரிசி உற்பத்தியில் பஞ்சாபை மிஞ்சியது.

    உழவர் சந்தை

    விவசாயிகள் மற்றும் நுகர்வோர் இடையே பரிவர்த்தனைகளை எளிதாக்கும் வகையில் உழவர் சந்தைகளைக் கலைஞர் அறிமுகப்படுத்தினார். இடைத்தரகர்கள் இல்லாமல் மலிவு விலையில் காய்கறிகளை வழங்க மதுரையில் நவம்பர் 14, 1999-ல் முதல் சந்தை திறக்கப்பட்டது. இந்த முயற்சி பிரபலமடைந்து, நவம்பர் 14, 2000-ல் 100-வது சந்தை சென்னை பல்லாவரத்தில் திறக்கப்பட்டது.

    பெண்களுக்கு இலவச பட்டப்படிப்புத் திட்டம்

    ஈ.வெ.ரா - நாகம்மையார் நினைவு மகளிர் இலவச பட்டப்படிப்புத் திட்டம் தமிழ்நாட்டில் பெண்கள் கல்விக்குப் பெரிய உதவியாக இருந்தது. உயர்கல்வி கிடைப்பதற்கு வழிவகை செய்தார் கலைஞர். இந்த மாற்று முன்முயற்சியானது, பாலின சமத்துவத்தை ஏற்படுத்தி பொருளாதார ரீதியாக பின்தங்கிய பெண்களுக்கு அதிகாரம் அளித்து, தேசிய அளவில் ஏற்கப்பட்டது.

    இளைஞர் நல வாரியம்

    கலைஞர், தமிழ்நாடு இளைஞர் நல வாரியத்தை நிறுவினார். விளையாட்டுக் கழகங்கள் அமைக்கப்பட்டு, இளம் வீரர்களின் திறமைகள் வளர்த்தெடுக்கப்பட்டன. மாநில இளைஞர் விழா நடத்தி விளையாட்டுப்போட்டிகள், கலை மற்றும் கலாசாரத்தில் திறமைகளை ஊக்குவித்தது. "பள்ளியில் கபடி" போன்ற திட்டங்கள் மூலம் மாநிலத்தில் விளையாட்டு மற்றும் உடல் செயல்பாடுகளை மேலும் மேம்படுத்தியது.

    மீன்பிடிப்பு அதிகரிப்பு

    1966-ம் ஆண்டில், மொத்த மீன் பிடிப்பு 1,26,286 டன்களாக மட்டுமே இருந்தது. ஆனால் மீனவர்களுக்குக் கலைஞர் அளித்த தொடர் ஆதரவால் 2010-ம் ஆண்டில் கடல் மீன் பிடிப்பு 3,96,827 டன்களாக அதிகரித்தது.

    தமிழ்த்தாய் வாழ்த்து

    மனோன்மணியம் பெ.சுந்தரனார் எழுதிய நீராருங்கடலுடுத்த என்ற தமிழ் வாழ்த்துப் பாடலை அரசு மற்றும் கல்வி நிகழ்வுகளில் பயன்படுத்த ஆணை பிறப்பித்தார் கலைஞர். தமிழ்மொழியின் மேன்மையை போற்றும் வகையில் இன்றளவும் இந்தப் பாடல் தமிழ்நாட்டில் விழாக்களில் பாடப்படுகிறது.

    பெரியார் சமத்துவபுரம்

    1997-ல் பெரியார் நினைவு சமத்துவபுரம் திட்டத்தை கலைஞர் தொடங்கினார். இது பெரியாரின் சமூக நீதி மற்றும் சமத்துவக் கொள்கைகளை மதிப்பதை நோக்கமாகக் கொண்டது. பெரியாரின் கொள்கைகளை ஊக்குவித்து, தமிழ்நாட்டில் சமூக நீதியை முன்னெடுத்தது.

    கை ரிக்சா ஒழிப்பு

    மனிதனை மனிதன் வாகனத்தில் உட்கார வைத்து இழுத்துச் செல்லும் கை ரிக்சாக்களை கலைஞர் ஒழித்து, அதற்கு மாற்றாகச் சைக்கிள் ரிக்சாக்களை அறிமுகப்படுத்தினார்.

    குடிசைகள் இல்லாத தமிழகம்

    குடிசைகள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க வேண்டுமென்பது கலைஞரின் லட்சியம். இந்தியாவிலேயே முதன் முறையாகக் கலைஞரின் ஆட்சியில் குடிசை மாற்று வாரியம் உருவாக்கப்பட்டது. குடிசை வாழ் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் வகையில் குடிநீர், வடிகால் அமைப்புகள், மின்வசதி போன்ற உள்கட்டமைப்புடன் அடுக்குமாடி குடியிருப்புகள் உருவாக்கி தரப்பட்டன.

    நில உச்சவரம்பு

    நில சீர்திருத்தச் சட்டத்தை முன்மொழிந்து நில உச்சவரம்பு ஒரு நபருக்கு 30 ஏக்கர் என்றிருந்ததை 15 ஏக்கர் என குறைத்தார் கலைஞர். இது நில உரிமை வேறுபாடுகளை குறைத்தது. பலரை நில உரிமையாளராகவும் மாற்றியது.

    • தி.மு.க. அலுவலகத்தில் அண்ணா, கலைஞர் சிலைக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மரியாதை செலுத்தினார்.
    • கருணாநிதியின் ஞான வார்த்தைகளாலும், அறிவுரைகளாலும் பயனடையும் அதிர்ஷ்டம் எனக்கு கிடைத்தது.

    புதுடெல்லி:

    தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் 101-வது பிறந்தநாள் இன்று. கலைஞரின் 101-வது பிறந்தநாளையொட்டி அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் டெல்லியில் உள்ள தி.மு.க. அலுவலகத்தில் அண்ணா, கலைஞர் சிலைக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மரியாதை செலுத்தினார். கலைஞர் படத்திற்கு சோனியா காந்தி மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

    தொடர்ந்து கலைஞரின் படத்திற்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, திருச்சி சிவா, வில்சன் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி கூறுகையில்,

    டாக்டர் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளில் திமுகவைச் சேர்ந்த எனது சகாக்களுடன் இங்கு வந்திருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

    பல சந்தர்ப்பங்களில் அவரை சந்தித்து, அவர் சொல்வதைக் கேட்டு, அவருடைய ஞான வார்த்தைகளாலும், அறிவுரைகளாலும் பயனடையும் அதிர்ஷ்டம் எனக்கு கிடைத்தது.

    அவரை சந்தித்ததை அதிர்ஷ்டமாக உணர்கிறேன். இந்த கொண்டாட்ட நாளில் உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள் என்று கூறினார்.


    தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, "தமிழ் மக்களின் மொழி, கலாச்சாரத்திற்கு பாதுகாப்பாக விளங்கிய தலைசிறந்த தலைவர் கருணாநிதி. இங்கு வந்ததில் எனக்கு மிகவும் பெருமையான விஷயம்," என்று தெரிவித்தார்.

    • நவீன தமிழ்நாட்டின் வளர்ச்சியின் ஒவ்வொரு சுவடிலும் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் கம்பீரமாக விளங்குகிறார்.
    • முத்தமிழறிஞர் கலைஞர் செய்த சாதனைகள் அனைத்தும் காலத்தை வென்று, நூறாண்டுகள் கடந்தும் மக்கள் மனதில் நிரந்தரமாக நிலைத்து நிற்கும்.

    சென்னை:

    தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதியின் 101-வது பிறந்த நாள் இன்று. கலைஞரின் 101-வது பிறந்தநாளையொட்டி அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி., அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது எக்ஸ் தளத்தில் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளனர்.

    கனிமொழி எம்.பி. தனது எக்ஸ் தளத்தில்,

    நவீன தமிழ்நாட்டின் வளர்ச்சியின் ஒவ்வொரு சுவடிலும் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் கம்பீரமாக விளங்குகிறார். இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் தமிழினத்திற்கு அவர் ஆற்றிய தொண்டும் பங்களிப்பும் காலத்தால் அழியாத வரலாறாக விளங்கும்.

    வாழ்க முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் புகழ்!

    வெல்க தமிழ்நாடு!

    வெல்க இந்தியா! என்று தெரிவித்துள்ளார்.

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில்,

    பெரியாரின் கனவுகளுக்கும், அண்ணாவின் குறிக்கோள்களுக்கும் தன்னுடைய சட்ட-திட்டங்கள் மூலம் செயல்வடிவமளித்து, தாழ்ந்து கிடந்த தமிழ்நாட்டைத் தரணி போற்றும் வகையில் தலை நிமிரச் செய்தவர் நம்முடைய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள். அத்தகைய கலைஞரின் நூற்றாண்டு நிறைவில் இருக்கிறோம்.

    எழுதி, பேசி, தமிழ்நாடு முழுக்க நடையாய் நடந்து, 'ஓய்வெடுக்காமல் உழைத்த' கலைஞர் அவர்களின் நூற்றாண்டை, நம்முடைய கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு மற்றும் கழகத்தின் சார்பாக #கலைஞர்100 என்ற புகழ் பரப்பும் பெரு விழாவாக ஆண்டு முழுக்க நடத்தியிருக்கிறார்.

    இந்த ஒரு நூற்றாண்டில் முத்தமிழறிஞர் கலைஞர் செய்த சாதனைகள் அனைத்தும் காலத்தை வென்று, இன்னும் பல நூறாண்டுகள் கடந்தும் மக்கள் மனதில் நிரந்தரமாக நிலைத்து நிற்கும்.

    கலைஞர் வாழ்க... அவர் புகழ் ஓங்குக! என்று தெரிவித்துள்ளார்.

    அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது எக்ஸ் தளத்தில்,

    • "தமிழர்களே தமிழர்களே நான் தயாரிக்கப்பட்டவன் பெரியாரால் தட்டி தட்டி சீர்செய்யப்பட்டவன்
    • ஆண்டவன் படைப்பில் அனைவரும் சமம் எனில்...

    சென்னை:

    தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதியின் 101-வது பிறந்த நாள் இன்று. கலைஞரின் 101-வது பிறந்தநாளையொட்டி அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில், தி.மு.க. சார்பில் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழா தொடர்பாக தி.மு.க. எக்ஸ் வலைதளத்தில் வீடியோ வெளியிடப்பட்டு உள்ளது. 

    அதில் முன்னாள் முதல்வர் கருணாநிதி மேடையில் பேசிய,

    "தமிழர்களே தமிழர்களே

    நான் தயாரிக்கப்பட்டவன் பெரியாரால்

    தட்டி தட்டி சீர்செய்யப்பட்டவன் அறிஞர் அண்ணா அவர்களால்

    நான் வலுப்பெற்றவன் என்னுடைய கழக கண்மணிகளால்.."

    "ஆண்டவன் படைப்பில் அனைவரும் சமம் எனில்... அவன் உயர் சாதிக்கு மட்டும் தங்கத்தால் மூளை செய்து தலைக்குளே வைத்தானா? மற்ற சாதிக்கெல்லாம் மண்டைக்குள் இருப்பதென்ன களிமண்ணா... சுண்ணாம்பா..."

    "இது உங்கள் பிறந்தநாள் மட்டுமல்ல... உயிரினும் மேலான உங்களின் கோடிக்கணக்கான உடன்பிறப்புக்கள் அனைவரும் புத்துணர்ச்சி பெற்ற நாள்...," உள்ளிட்ட காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதன் பின்னணியில் தமிழ் திரைப்பட பாடல்கள் கோர்வையாக இணைக்கப்பட்டு உள்ளன. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

    • அண்ணா, கலைஞர் கருணாநிதி நினைவிடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
    • கலைஞர் நூற்றாண்டு சிறப்பு புகைப்படக் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.

    சென்னை:

    தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதியின் 101-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை மெரினாவில் உள்ள அண்ணா, கலைஞர் கருணாநிதி நினைவிடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

     மேலும் கலைஞர் நூற்றாண்டு விழா சிறப்பு மலரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்

    இதைத்தொடர்ந்து கலைஞர் நூற்றாண்டு சிறப்பு புகைப்படக் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.

    கலைஞர் நூற்றாண்டு சிறப்பு புகைப்படக் கண்காட்சியை அமைச்சர்கள், கனிமொழி எம்.பி. ஆகியோரும் பார்வையிட்டனர்.

    மலர் கண்காட்சியின் ஒரு பகுதியாக காய்கறி மற்றும் பழங்களால் உருவாக்கப்பட்ட பகுதி பார்வையாளர்களை கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    கருணாநிதி பிறந்தநாளையொட்டி சென்னை கலைவாணர் அரங்கில் இன்று முதல் 3 நாட்களுக்கு மலர் கண்காட்சி நடக்கிறது.

    தோட்டக்கலை துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த மலர் கண்காட்சியை இன்று காலை உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். பின்னர் மலர் கண்காட்சியை அவருடன் அமைச்சர்கள் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், மா.சுப்பிரமணியன் ஆகியோர் பார்வையிட்டனர்.

    இந்த கண்காட்சியில் 128 வகைகளை கொண்ட 4 லட்சம் மலர்கள் இடம்பெற்றுள்ளன.

    மலர்கண்காட்சி


    இந்த வண்ண மலர்கள் வெவ்வேறு உருவங்களில் வடிவமைக்கப்பட்டுள்ளன. சிங்கம், கரடி, முயல், மான் போன்ற வடிவங்கள் மலர்களால் உருவாக்கப்பட்டுள்ளன. அவ்வைக்கு நெல்லிக்கனி கொடுத்த அதியமான், தமிழ் பாரம்பரிய பண்பாட்டை விளக்கும் வகையிலும் மலர்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

    மலர்களின் அருகில் நின்று செல்பி எடுக்கும் பகுதிகள், மலர் வளைவுகள், மலர்களால் ஆன பஸ், தேர், இருக்கைகள், மலர் தொட்டி அடுக்குகளால் ஆன வடிவமைப்புகள் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன. இந்த மலர்கள் ஊட்டி, ஓசூர், திண்டுக்கல், பெங்களூர், புனே போன்ற இடங்களில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ளன.

    கலைவாணர் அரங்கில் தொடங்கப்பட்டுள்ள மலர்கண்காட்சி


    மலர் கண்காட்சியின் ஒரு பகுதியாக காய்கறி மற்றும் பழங்களால் உருவாக்கப்பட்ட பகுதி பார்வையாளர்களை கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

    மேலும் விவசாய பொருட்களும் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. நறுமணப் பொருட்களான கிராம்பு, ஏலக்காய் மூலம் உருவாக்கப்பட்ட மாடு, விவசாயிகளின் உருவம் போன்றவையும் உள்ளன.

    இந்த கண்காட்சியில் உள்ள மலர்கள் வாடாமல் இருக்கவும், அதன் தன்மை மாறாமல் இருக்கவும் கண்காட்சி அரங்கம் முழுவதும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ளது.

    கலைவாணர் அரங்கில் தொடங்கப்பட்டுள்ள மலர்கண்காட்சி

    இந்த மலர் கண்காட்சியை பொதுமக்கள் பார்வையிடலாம். பெரியவர்களுக்கு ரூ.50-ம், சிறுவர்களுக்கு ரூ.20-ம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வருகிற 5-ந்தேதி வரை 3 நாட்கள் இந்த மலர் கண்காட்சி நடக்கிறது. காலை 9 மணி முதல் இரவு 8 மணிவரை பொதுமக்கள் கண்காட்சியை பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    ‘கலைஞர் எழுதுகோல் விருது’ க்கான தேர்வுக் குழுவின் பரிந்துரையின்பேரில் 2021-ம் ஆண்டிற்கான விருதாளராக மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன் (வயது 87) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

    சென்னை:

    2021-22-ம் ஆண்டிற்கான செய்தி மக்கள் தொடர்புத் துறை மானியக் கோரிக்கையில், இதழியல் துறையில் சமூக மேம்பாட்டிற்காகவும், விளிம்புநிலை மக்களின் மேம்பாட்டிற்காகவும் பங்காற்றிவரும் ஒரு சிறந்த இதழியலாளருக்கு ஆண்டுதோறும் ‘கலைஞர் எழுதுகோல் விருது’ மற்றும் ரூ.5 லட்சம் பரிசுத் தொகையுடன் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    இவ்விருது ஒவ்வோர் ஆண்டும் கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3-ம் நாளன்று வழங்கப்படும்.

    அதன்படி, ‘கலைஞர் எழுதுகோல் விருது’ க்கான தேர்வுக் குழுவின் பரிந்துரையின்பேரில் 2021-ம் ஆண்டிற்கான விருதாளராக மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன் (வயது 87) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

    திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் பிறந்த ஐ.சண்முகநாதன் 1953-ம் ஆண்டு ‘தினத்தந்தி’யில் உதவி ஆசிரியராகப் பொறுப்பேற்று இதுநாள் வரை ஏறத்தாழ 70 ஆண்டுகளாகப் பத்திரிகைத் துறையில் பணிபுரிந்து வருகிறார்.

    பெரும் மக்களுக்கான இதழியலில் இவ்வளவு நெடிய பணி அனுபவம் என்பது எளிதில் நிகழ்த்தற்கரிய சாதனை ஆகும். பத்திரிகையின் ஆசிரியர் பிரிவில் செய்தி ஆசிரியராக நீண்டகாலம் பணியாற்றி, சமகால பெருவாரியான மக்கள் இதழியலில் மொழிப் பயன்பாட்டைத் தீர்மானித்தவர்களில் ஒருவராகச் செயல்பட்டிருப்பவர் என்பதோடு, சமகால வரலாற்றைத் தொகுத்து அளிக்கும் பணிகளிலும் சமூகநீதி விழுமியப் பார்வையோடு அப்பணியை மேற்கொண்டிருக்கிறார் சண்முகநாதன். அவருடைய முக்கியமான பங்களிப்புகளில் ஒன்று, ‘தினத்தந்தி’ குழுமத்தினால் வெளியிடப்பட்ட ‘வரலாற்றுச் சுவடுகள்’ நூல் தொகுப்புப் பணி ஆகும். பல்லாயிரம் பிரதிகள் விற்ற இந்நூலானது, சமகால வரலாற்றைப் பார்க்க உதவுகிறது.

    கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு, 2021-ம் ஆண்டிற்கான கலைஞர் எழுதுகோல் விருதினை மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதனுக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (வெள்ளிக்கிழமை) வழங்கி சிறப்பித்தார்.

    உதவி ஆசிரியராக தினத்தந்தியில் பணியை தொடங்கிய ஐ.சண்முகநாதனின் பத்திரிகை பணி முழுவதும் தினத்தந்தியிலேயே இருந்தது. தினத்தந்தி பத்திரிகை ஆசிரியராக நீண்ட நெடிய ஆண்டுகளாக பணியாற்றியுள்ள அவர், தினத்தந்தி பணியிலேயே தொடர்ந்து இருந்து வருகிறார்.

    அகில இந்திய அளவில் இன்று கருணாநிதி பிறந்தநாள் ஹேஷ்டேக்கில் டிரெண்டிங் ஆனது. ஏராளமானோர் அவரது பிறந்தநாளையொட்டி தங்கள் கருத்துகளை பதிவு செய்தனர்.
    சென்னை:

    தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்தநாள் இன்று அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னையில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காலையில் இருந்தே பம்பரமாக சுழன்று பங்கேற்று அசத்தினார்.

    தமிழகம் முழுவதிலும் தி.மு.க. தொண்டர்கள் கருணாநிதி பிறந்த நாளை கொண்டாடி வருகின்றனர்.

    இந்த நிலையில் அகில இந்திய அளவில் இன்று கருணாநிதி பிறந்தநாள் ஹேஷ்டேக்கில் டிரெண்டிங் ஆனது. ஏராளமானோர் அவரது பிறந்தநாளையொட்டி தங்கள் கருத்துகளை பதிவு செய்தனர்.
    திருவாருர் மாவட்டத்தில் பிறந்த ஆரூர்தாஸ் முன்னணி நடிகர்கள், நடிகைகள் நடித்த 1000 திரைப்படங்களுக்கு வசனம் எழுதிய எழுத்தாளர்.
    சென்னை:

    தமிழ் திரையுலகில் சிறந்து விளங்கிய வாழ்நாள் சாதனையாளருக்கு ‘கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது’ தமிழக அரசின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3-ந்தேதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி விருதாளரை தேர்ந்தெடுக்க திரைப்பட இயக்குனர் எஸ்.பி.முத்து ராமன் தலைமையில் நடிகர் சங்க தலைவர் நாசர், திரைப்பட இயக்குனர் கரு.பழனியப்பன் ஆகியோரை உறுப்பினர்களாக கொண்ட குழுவும் அமைக்கப்பட்டது.

    இந்த குழு 2022-ம் ஆண்டுக்கான கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதுக்கான பல நூறு திரைப்படங்களுக்கு வசனங்கள் எழுதி புகழ்பெற்ற வசனகர்த்தா ஆரூர்தாசை (வயது90) தேர்ந்தெடுத்தது.

    திருவாருர் மாவட்டத்தில் பிறந்த ஆரூர்தாஸ் முன்னணி நடிகர்கள், நடிகைகள் நடித்த 1000 திரைப்படங்களுக்கு வசனம் எழுதிய எழுத்தாளர்.

    அவருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று விருதுடன் ரூ.10 லட்சம் பரிசுத்தொகையும் வழங்கி கவுரவிப்பார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை தி.நகரில் உள்ள ஆரூர்தாஸ் வீட்டிற்கு நேரில் சென்றார்.

    அங்கு ஆரூர்தாசுக்கு பொன்னாடை போர்த்தி, ‘கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது’ வழங்கினார். விருதுடன் ரூ.10 லட்சம் பரிசுத் தொகையும் வழங்கி கவுரவித்தார்.

    அப்போது செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் உள்ளிட்ட அமைச்சர்கள், செய்தித்துறை உயர் அதிகாரிகள் உடன் சென்றிருந்தனர்.
    கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி ஒவ்வொரு மாவட்டத்திலும் இன்று நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள் கருணாநிதியின் படத்துக்கு மாலை அணிவித்து, இனிப்புகள் வழங்கினார்கள்.
    சென்னை:

    மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 99-வது பிறந்த நாள் இன்று அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது.

    இதையொட்டி பல்வேறு இடங்களில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்துக்கு தி.மு.க.வினர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    தி.மு.க. தலைவரான முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 8 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கருணாநிதியின் சிலைக்கு மாலை அணிவித்தார். சிலைக்கு முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப் படத்துக்கும் மாலை அணிவித்து மலர் தூவி வணங்கினார்.

    அவருடன் தி.மு.க. பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., முதன்மைச் செயலாளர் அமைச்சர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., டி.கே.எஸ். இளங்கோவன், ஆ.ராசா எம்.பி., தயாநிதிமாறன் எம்.பி., தலைமை நிலைய செயலாளர்கள் பூச்சி எஸ்.முருகன், துறைமுகம் காஜா, சென்னை மேற்கு மாவட்ட பொறுப்பாளர் நே.சிற்றரசு உள்பட முக்கிய நிர்வாகிகள் கருணாநிதியின் படத்துக்கு மலர் தூவி வணங்கினர்.

    இதன் பிறகு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோடம்பாக்கத்தில உள்ள முரசொலி அலுவலகத்துக்கு சென்றார். அங்கு கருணாநிதியின் சிலை முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் கட்சியின் தலைமை கழக நிர்வாகிகள் மாலை அணிவித்தனர். உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ.வும் மலர்தூவி வணங்கினார்.

    இதன் பிறகு சி.ஐ.டி. காலனியில் உள்ள கனிமொழி எம்.பி.யின் வீட்டிற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றார். அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உருவப்படத்துக்கு மலர் தூவி மரயாதை செலுத்தினார். அவருடன் கனிமொழி எம்.பி. உள்ளிட்ட கட்சியின் மூத்த நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

    இந்த நிகழ்ச்சிக்கு பிறகு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கருணாநிதி வசித்த கோபாலபுரம் வீட்டுக்கு சென்றார். அங்கு வீட்டு வாசலில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உருவப்படத்துக்கு மலர் தூவி வணங்கினார்.

    வீட்டின் உள்ளேயும் கருணாதியின் உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. அந்த படத்துக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி வணங்கினார். மனைவி துர்கா ஸ்டாலின், சகோதரி செல்வி, சகோதரர் மு.க.தமிழரசு, கனிமொழி எம்.பி. உதயநிதி ஸ்டாலின், அமிர்தம் உள்ளிட்ட குடும்பத்தினரும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். கட்சியின் மூத்த நிர்வாகிகள், அமைச்சர்களும் இதில் பங்கேற்றனர்.

    கருணாநிதியின் திருவுருவச் சிலைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்ரோன் மூலம் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    இதன் பிறகு ஓமந்தூரார் தோட்டத்தில் கடந்த 28-ந் தேதி துணை ஜனாதிபதியால் திறக்கப்பட்டிருந்த கருணாநிதியின் திருவுருவச் சிலைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்ரோன் மூலம் மலர் தூவி மரியாதை செலுத்தினார். சிலைக்கு அருகே வைக்கப்பட்டிருந்த உருவப் படத்துக்கும் மலர்தூவி வணங்கினார்.

    அவருடன் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் உள்ளிட்ட அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், செய்தித்துறை செயலாளர் மகேசன் காசிராஜன், செய்தித்துறை இயக்குனர் ஜெயசீலன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

    கருணாநிதியின் சிலையை வடிவமைத்த மீஞ்சூரை சேர்ந்த சிற்பி தீனதயாளனுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கினார்.

    நிகழ்ச்சிக்கு கருணாநிதியின் வேடம் அணிந்து 25 மாணவர்கள் வந்திருந்தனர். அவர்களுடன் நின்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.


    இந்த நிகழ்ச்சிக்கு கருணாநிதியின் வேடம் அணிந்து 25 மாணவர்கள் வந்திருந்தனர். அவர்களுடன் நின்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

    பின்னர் அங்கிருந்து மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்துக்கு சென்றார்.

    அங்கு மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அவருடன் அமைச்சர்கள், மேயர் பிரியா, மண்டல குழு தலைவர்கள், கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் உடன் சென்று மரியாதை செலுத்தினார்கள்.

    அந்த பகுதியில் நடைபெற்று வரும் நினைவிட கட்டுமான பணிகளையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். அதன் பிறகு கோட்டைக்கு புறப்பட்டு சென்றார்.

    கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி ஒவ்வொரு மாவட்டத்திலும் இன்று நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள் கருணாநிதியின் படத்துக்கு மாலை அணிவித்து, இனிப்புகள் வழங்கினார்கள்.

    ஏழைகளுக்கு அறுசுவை உணவு, பிரியாணியும் வழங்கப்பட்டன. கருணாநிதியின் சாதனை விளக்க பாடல்களும் ஆங்காங்கே ஒலிபரப்பப்பட்டன.
    முதலமைச்சரை தொடர்ந்து திமுக அமைச்சர்கள், எம்பிக்களும் மரியாதை செலுத்தினர்.
    சென்னை:

    தமிழகத்தில் இன்று முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 99-வது பிறந்த தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையடுத்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள கருணாநிதி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    டிரோன் மூலமாக கருணாநிதியின் சிலைக்கு பூக்கள் தூவப்பட்டன. முதல்வரை தொடர்ந்து திமுக அமைச்சர்கள், எம்பிக்களும் மரியாதை செலுத்தினர்.

    இதை தொடர்ந்து சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
    ×