என் மலர்
நீங்கள் தேடியது "Kamaraj"
- வெறுப்பை எதிர்கொண்டு அமைதி, சகோதரத்துவம், உண்மை மற்றும் மனிதநேயத்தின் பாதையைப் பின்பற்ற நம்மைத் தொடர்ந்து ஊக்குவிக்கும்.
- நாட்டிற்கு புதிய திசையை வழங்கிய முன்னாள் இந்தியப் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதைக்குரிய அஞ்சலிகள்.
அக்டோபர் 2 ஆம் தேதியான இன்று தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளின் பிறந்தநாள் ஆகும். அதே நேரம் கருப்பு காந்தி என அழைக்கப்படும் கர்ம வீரர் காமராஜரின் நினைவு தினமும் ஆகும்.
இந்நிலையில் மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி காமராஜரை நினைவு கூர்ந்து அவருக்கு நினைவஞ்சலி செலுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதவில், பாரத ரத்னா திரு. கே. காமராஜரின் நினைவு நாளில் அவரை நினைவு கூர்கிறேன்.
அவரது பணிவு, நேர்மை மற்றும் விளிம்புநிலை மக்களின் கல்வி மற்றும் சமூக நீதி மேம்பாட்டிற்காக அவர் ஆற்றிய முன்னோடிப் பணிகள் தலைமுறை தலைமுறையாக ஊக்கமளித்து வருகின்றன." என்று தெரிவித்துள்ளார்.
அதேபோல் மகாத்மா காந்தியை நினைவு கூர்ந்து ராகுல் வெளியிட்ட பதிவில், "உண்மை, அகிம்சை மற்றும் நல்லிணக்கக் கொள்கைகள் மூலம் இந்தியாவை ஒன்றிணைத்த பாபுவின் கொள்கைகள், வெறுப்பை எதிர்கொண்டு அமைதி, சகோதரத்துவம், உண்மை மற்றும் மனிதநேயத்தின் பாதையைப் பின்பற்ற நம்மைத் தொடர்ந்து ஊக்குவிக்கும்.
தேசப்பிதா மகாத்மா காந்தியின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதைக்குரிய அஞ்சலிகள்." என்று குறிப்பிட்டுளார்.
மேலும் முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்த தினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்ட பதவில், "ஜெய் ஜவான், ஜெய் கிசான்" என்ற முழக்கத்துடன் நாட்டிற்கு புதிய திசையை வழங்கிய முன்னாள் இந்தியப் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதைக்குரிய அஞ்சலிகள்.
அவரது எளிமை, பணிவு மற்றும் நமது நாட்டு மக்களின் உரிமைகளுக்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பு எப்போதும் நம்மை வழிநடத்தும்." என்று தெரிவித்துள்ளார்.
- பெருந்தலைவர் காமராஜர் இறந்தபோது அதிகமாக அழுதவர் அறிஞர் அண்ணா என்று சொல்வார்கள்
- 1969 ஆண்டில் உயிரிழந்த அண்ணா, 1975 இல் மறைந்த காமராசருக்காக எப்படி அழுதிருக்க முடியும்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று மாலை நேரில் சந்தித்து பேசியுள்ளார்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஸ்டாலின் வீட்டில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் சகோதரர் மு.க முத்து மறைவுக்கு சீமான் ஆறுதல் தெரிவித்தார்.
இதைதொடர்ந்து, செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சீமான், "நான் பசியால் மயக்கமடைந்தபோது எனது உடல்நலம் குறித்து விசாரித்தவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். எப்படி இருந்தாலும் ஒரு இழப்பு என்பது பெருந்துயரம். கொள்கை முரண் என்பது வேறு, பாசம் என்பது வேறு... பெருந்தலைவர் காமராஜர் இறந்தபோது அதிகமாக அழுதவர் அறிஞர் அண்ணா என்று சொல்வார்கள். அமெரிக்காவுக்கு அண்ணா செல்லும்போது நிக்சனை சந்திக்க விரும்புகிறார்கள். ஆனால் அவர் சந்திக்கவில்லை. அதன்பின்பு நிக்சன் இந்தியா வரும்போது காமராசரை சந்திக்க விரும்புகிறார்கள். அப்போது அண்ணாதுரையை சந்திக்க விரும்பாத நிக்சனை நான் ஏன் சந்திக்க வேண்டும்? என்று காமராசர் கூறியதாக அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், காமராசர் 1975 ஆம் ஆண்டில் தான் உயிரிழந்தார். ஆனால் அண்ணா 1969 ஆம் ஆண்டிலேயே உயிரிழந்து விட்டார். 1969 ஆண்டில் உயிரிழந்த அண்ணா 1975 இல் மறைந்த காமராசருக்காக எப்படி அழுதிருக்க முடியும் என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
- காமராசர் ஏசி இல்லாமல் தூங்கமாட்டார் என்று எம்பி திருச்சி சிவா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
- கல்விக்கண் திறந்த காமராசர் இந்தியாவிற்கே வழிகாட்டியாகத் திகழ்ந்தவர்.
சென்னை பெரம்பூரில் திமுக பொதுக் கூட்டத்தில் பேசிய மாநிலங்களவை எம்.பி. திருச்சி சிவா, காமராஜர் குறித்து பேசியது சர்ச்சைகளை ஏற்படுத்தியது.
அக்கூட்டத்தில் பேசிய திருச்சி சிவா, "தமிழ்நாட்டில் மின்சாரத் தட்டுப்பாடு என காமராசர் மாநிலம் முழுக்க கண்டனக் கூட்டங்கள் நடத்தி வருகிறார். காமராசருக்கு ஏசி வசதி இல்லை என்றால் உடலில் அலர்ஜி ஏற்பட்டுவிடும். அதற்காக காமராஜர் தங்கும் அனைத்து பயணியர் விடுதிகளிலும் குளிர்சாதன வசதி செய்யச் சொல்லி முதல்வராக இருந்த கருணாநிதி உத்தரவிட்டார். திமுக அரசை எதிர்த்துதான் காமராசர் பேசுகிறார். ஆனால், காமராசரின் உடல்நலன் கருதி கருணாநிதி ஏசி வசதி ஏற்படுத்தச் சொன்னார். காமராஜர் உயிர் பிரிவதற்கு முன்னர் கருணாநிதியின் கைகளைப் பிடித்துக்கொண்டு நீங்கள்தான் இந்த நாட்டையும், ஜனநாயகத்தையும் காப்பாற்ற வேண்டும் என்று கூறினார்" என்று தெரிவித்தார். .
காமராசர் ஏசி இல்லாமல் தூங்கமாட்டார் என்று எம்பி திருச்சி சிவா பேசியதற்கு காங்கிரஸ் கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், காமராசர் குறித்து தான் பேசியது தொடர்பான விளக்கம் அளித்து எம்பி திருச்சி சிவா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அவரது அறிக்கையில், "பெருந்தலைவர் காமராசரின் புகழுக்குக் களங்கம் விளைவிக்கும் தன்மையில் நான் பேசியதாகக் கருத்து கொண்டு விவாதங்கள் வலுத்துக் கொண்டு வருகின்றன. நான் எதிர்வரிசையில் இருக்கும் தலைவர்களைப் பற்றிப் பேசும்போதுகூட கண்ணியத்தோடு விமர்சிப்பதைப் பலரும் அறிவார்கள். கல்விக்கண் திறந்த காமராசர் என்றும், மதிய உணவுத் திட்டத்தின் மூலமாக ஏழை வீட்டுப் பிள்ளைகள் கல்வி கற்க பள்ளிக்கூடம் வருவதற்கு இந்தியாவிற்கே வழிகாட்டியாகத் திகழ்ந்தவர் என்பதையும் பல மேடைகளில் உருக்கமாகவும், உணர்ச்சிகரமாகவும் நான் பேசுவது வழக்கம்.
"குணாளா! மணாளா! குலக்கொழுந்தே! குடியாத்தம் சென்று வா! வென்று வா!" என்று எழுதிய பேரறிஞர் அண்ணா - காமராசரின் மறைவுக்குப் பின் அவருக்கு அனைத்து மரியாதைகளும் செய்ததோடு, சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனையத்திற்கு அவர் திருப்பெயரைச் சூட்டிய முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் வழியொற்றி, அவர் பிறந்தநாளை "கல்வி வளர்ச்சி நாளாக" கடைப்பிடித்து அவரின் புகழுக்கு நாளும் மெருகேற்றும் இன்றைய கழகத் தலைவர் தமிழ்நாட்டு முதலமைச்சர் தளபதி அண்ணன் மு.க.ஸ்டாலின் தலைமையின்கீழ் பணியாற்றும் நான், மறைந்த தலைவர்களின் புகழுக்கு மாசு படிவதை எந்த வகையிலும் யார் செய்தாலும் ஏற்கும் மனநிலை கொண்டவனல்ல.
நாட்டு விடுதலைப் போரில் பல ஆண்டுகள் சிறையேகி, தியாகத் தழும்பேறி, முதலமைச்சராகவும், அகில இந்தியக் காங்கிரஸ் கட்சித் தலைவராகவும் மக்கள் தொண்டாற்றி, எல்லோர் மனதிலும் தனித்த இடம் பிடித்த பெருந்தலைவர் காமராசர் அவர்கள் மீது மிகுந்த மரியாதையும் பெருமதிப்பும் கொண்டவன் நான். அண்ணா, கலைஞர், தளபதி வழியில் - கண்ணியம் காக்கும் கடமை கொண்ட கழகத் தொண்டன்!
இந்த விளக்கத்தினை எல்லோரும் அன்புகூர்ந்து ஏற்று என் உரையில் நான் கூறிய செய்தியினை மேலும் விவாதப் பொருளாக்கிட வேண்டாம் என அனைவரையும் அன்புடன் வேண்டிக் கொள்கிறேன்!
- பள்ளியில் கல்விதான் கொடுக்க வேண்டும்; சோறு போட அது என்ன ஹோட்டலா?
- அன்று பள்ளிகளில் இட்டது மதிய உணவல்ல; நூற்றாண்டுக் கல்விக் கனவுக்கான அடித்தளம்!
முன்னாள் முதலமைச்சர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளான ஜூலை 15 ஆம் தேதியை கல்வி வளர்ச்சி நாளாக தமிழ்நாடு அரசு கொண்டாடி வருகிறது.
இந்நிலையில், காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், "அன்று பள்ளிகளில் இட்டது மதிய உணவல்ல; நூற்றாண்டுக் கல்விக் கனவுக்கான அடித்தளம்!
நல்லவேளை, "பள்ளியில் கல்விதான் கொடுக்க வேண்டும்; சோறு போட அது என்ன ஹோட்டலா?" என்று அதிமேதாவியாய்ப் பேசும் அறிவுக்கொழுந்துகள் இல்லை அன்று. அதனால்தான், எத்தனை நன்மை தமிழ்நாட்டிற்கு இன்று!
கல்விக் கண் திறந்த பெருந்தலைவர் காமராசருக்குப் புகழ் வணக்கம்!" என்று தெரிவித்துள்ளார்.
- கடந்த ஆண்டு கிலோ ரூ.81-க்கு கொள்முதல் செய்யப்பட்ட பருத்தி, இன்று அதிகபட்சமாக ரூ.52-க்கு கொள்முதல் செய்யப்படுகிறது.
- மேட்டூர் அணை குறிப்பிட்ட தேதியில் திறந்தும் இதுவரை திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் வரவில்லை.
திருவாரூர்:
பருத்தி விவசாயிகளுக்கு ஆதரவாகவும், பருத்தி ஏலத்தில் உள்ளூர் ஏஜெண்டுகளின் நடவடிக்கையை தடுக்காமல் வேடிக்கை பார்க்கும் தி.மு.க. அரசை கண்டித்தும் திருவாரூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ரெயில் நிலையம் முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான காமராஜ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். அமைப்பு செயலாளர்கள் கோபால், சிவா.ராஜமாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஒரு கிலோ பருத்தியை ரூ.100-க்கு கொள்முதல் செய்ய வேண்டும், அனைத்து ஏஜெண்டுகளையும் பருத்தி ஏலத்தில் பங்கேற்க வைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்திற்கு பின் முன்னாள் அமைச்சர் காமராஜ் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-
டெல்டா பகுதிகளில் பருத்தி செடிகள் இளம் பயிராக இருந்தபோது 2 முறை பருவம் தவறி பெய்த மழையால் பயிர்கள் பாதிக்கப்பட்டது. தற்போது பருத்தி சாகுபடி முடிவடைந்துள்ள நிலையில் பருத்தி பஞ்சுகளுக்கு உரிய விலை இல்லை எனக்கூறி விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த ஆண்டு கிலோ ரூ.81-க்கு கொள்முதல் செய்யப்பட்ட பருத்தி, இன்று அதிகபட்சமாக ரூ.52-க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. தமிழ்நாடு அரசின் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் நடைபெறும் பருத்தி ஏலங்களில் கோவை, ஈரோடு போன்ற பெருநகரங்களில் உள்ள பஞ்சு மில் உரிமையாளர்களின் முகவர்கள் கலந்து கொள்வதில்லை. திருவாரூரை சுற்றியுள்ள இடைத்தரகர்களை வைத்தே ஏலம் விடப்படுகிறது.
இதனை கண்டித்தும், பருத்தி விவசாயிகளுக்கு ஆதரவாகவும் திருவாரூரில் இன்று ஆர்ப்பாட்டத்தை அ.தி.மு.க. நடத்தியது. இந்த நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு குடவாசல் பகுதியில் நடைபெற்ற பருத்தி ஏலத்தில் அதிகபட்சமாக கிலோ ரூ.71-க்கு விலை போனது.
மேட்டூர் அணை குறிப்பிட்ட தேதியில் திறந்தும் இதுவரை திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் வரவில்லை. மின் கட்டணம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் பணிகள் துரிதமாக நடைபெறுவதில்லை. கொள்முதல் செய்யப்படும் நெல்லும் பாதுகாப்பான முறையில் இருப்பு வைக்கப்படுவதில்லை. விவசாயிகளின் பிரச்சனைகளுக்கெல்லாம் ஒரே தீர்வு அ.தி.மு.க. ஆட்சி மீண்டும் அமைவது மட்டும் தான்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பள்ளியிலே படிக்கும் பொழுதே மாணவர்கள் மனதிலே தமிழ் பற்று வேரூன்றி நிற்க வேண்டும் என விரும்பினார் காமராஜர்.
- தமிழின் மீது காமராஜர் கொண்டிருந்த பற்றினை தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் அவர் வாழ்ந்து முடித்த திருமலைபிள்ளை சாலை இல்லத்திற்கு சென்றால் தெரிந்து கொள்ளலாம்.
மொழி தான் ஒரு மனிதனுக்கு முகவரி கொடுக்கிறது. அவன் பேசுகிற மொழியை வைத்து தான் இன்னாரென்று அவனை நாம் அடையாளம் கண்டு கொள்கிறோம். தமிழர்களாக பிறந்தவர்களுக்கு எல்லாம் ஒரு தனி பெருமை இருக்கிறது. உலகிலேயே மூத்த மொழி, புகழ் பூத்த தமிழ் மொழியின் புதல்வர்கள் என்பதால் கிடைத்த பெருமை அது. உலகில் ஏறத்தாழ 3 ஆயிரம் மொழிகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. அவற்றிலே முதல் முதலாக தோன்றிய மொழி தமிழ் தான் என்பதனை ஆராய்ச்சியாளர்கள் வலுவான காரணங்களோடு நிரூபித்திருக்கிறார்கள். இதை எண்ணும்போது நாம் தமிழனாக பிறந்ததற்காக என்ன பாக்கியம் செய்தோமோ என்று எண்ணத் தோன்றுகிறது.
தொன்மையும், இனிமையும், எளிமையும், இளமையும், வளமையும், தாய்மையும், தூய்மையும், செம்மையும், தனித்து இயங்கக்கூடிய திண்மையும் நிறைந்தது நமது தமிழ் மொழி மட்டுமே. இன்னும் பல சிறப்பு இயல்புகளை கொண்டு உயிர்ப்போடு உலா வருவதும் நமது தமிழ் மொழி மட்டுமே.
வேறு எந்த மொழிக்கும் இந்த பெருமைகள் எல்லாம் முழுமையாக வாய்க்கப் பெறவில்லை. அதனால் தான் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு தேவையான அத்தனை பண்புகளும் உள்ளது தமிழ்மொழி என்று மன்மோகன் சிங் ஆட்சியில் தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டது.
காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியிடம் தமிழின் அருமை பெருமைகளை எல்லாம் கலைஞர் அவர்கள் முதல்வராக இருந்தபோது எடுத்து சொல்லி கிடைத்திட்ட பெரும் பேறு இது.
உலகுக்கு இதனை அறிவிக்கும் வகையிலே உலக அறிஞர்களை எல்லாம் வரவழைத்து, கோவையிலே செம்மொழி மாநாட்டினை முதல்வராக இருந்து வெகு சிறப்பாக நடத்திக் காட்டினார் கலைஞர் அவர்கள்.
மத்திய அரசிலே உள்ளவர்கள் எல்லோருமே, நமது பாரத பிரதமர் மோடி உட்பட எல்லோருமே தமிழின் பெருமை பற்றி பேசுகிறார்கள். ஆனால் அவர்களின் நெஞ்சிலே நிரம்பி இருப்பது இந்திமொழி தான் என்பது கண்கூடாகத் தெரிகிறது. அதற்காக மத்திய அரசின் ஒவ்வொரு துறையிலும் இந்தி மொழியை அவர்கள் முன்னிலைப்படுத்துகிறார்கள். நம் மீது திணிக்க பார்க்கிறார்கள்.
முத்தமிழ் அறிஞரின் புதல்வர் இங்கே முதல்வராய் இருப்பதால் மத்திய அரசின் முயற்சிகள் எதுவுமே இங்கே எடுபடவில்லை என்பதே உண்மையாகும்.
தமிழகத்தை முதல்வராக இருந்து ஆட்சி செய்த பெருமக்கள் அனைவருமே தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்துள்ளார்கள். இதிலே மாற்று கருத்து இல்லை.
நம் நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்பாகவே அதாவது 1946-லேயே அப்போது கல்வி அமைச்சராக இருந்த அவினாசிலிங்கம் செட்டியாரின் தலைமையிலே தான் தமிழ் வளர்ச்சி கழகம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு, ஒவ்வொரு ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலும் தமிழ் வளர்ச்சி திருநாள் கொண்டாடப்பட்டது. அப்போது தமிழறிஞர்கள் எல்லோருமே கவுரவிக்கப்பட்டார்கள்.
அப்போதுதான் ரூ.14 லட்சம் செலவிலே தமிழ் கலைக்களஞ்சியம் எனும் முதல் தொகுப்பு தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் முயற்சியால் வெளியிடப்பட்டது. இது தொடர்ந்து பத்து தொகுதிகளாக வெளிவந்தது. குழந்தைகள் கலைக்களஞ்சியமும் அப்போதுதான் வெளியிடப்பட்டது. ஆனால் இன்னும் இதற்கு மறுப்பதிப்பு வெளியிடப்படவில்லை என்பது வருத்தமான செய்தியாகும்.
இந்திய நாடு சுதந்திரம் பெற்றதற்கு பிறகு தமிழகத்தின் முதல்வராக இருந்த ஓமந்தூர் ராமசாமி செட்டியார் அவர்கள் மகாகவி பாரதியாரின் பிறந்த நாளை 1948, செப்டம்பர் 11-ம் நாள் எட்டயபுரத்தில் பாரதி பிறந்த மண்ணிலே மிகச் சிறப்பாக கொண்டாடினார்.
இந்த விழாவிலேயே தான் தமிழக அரசவைக் கவிஞர் பதவி அறிவிக்கப்பட்டு நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளை அவர்களுக்கு அது வழங்கப்பட்டு அவர் கவுரவிக்கப்பட்டார். இன்று தலைமைச் செயலகத்தின் ஒரு பிரிவுக்கு நாமக்கல் கவிஞர் மாளிகை எனும் பெயர் சூட்டப்பட்டு பிரம்மாண்டமான செயலகமாக அது செயல்பட்டு வருவது யாவரும் அறிந்ததே.
அப்போதுதான் (1949) முதல்வராக இருந்த ஓமந்தூர் ராமசாமி செட்டியார் பாரதியார் கவிதைகளின் உரிமை பெற்றிருந்த ஏ.வி.எம். மெய்யப்ப செட்டியாரிடம் பேசி, பாரதியார் கவிதைகள் அனைத்தையும் வாங்கி, பாரதியார் குடும்பத்திற்கு ஒரு தொகை கொடுக்கப்பட்டு, அதனை நாட்டுடைமை ஆக்கினார். அதற்கு பிறகு தான் பாரதியார் கவிதைகள் திரைப்படங்களிலும் மேடைகளிலும் சுதந்திரமாக உலா வந்தன.
இந்த வரலாறுகளை எல்லாம் நன்கு உணர்ந்த காமராஜர் தனது ஆட்சிக் காலத்தில் எப்படி எல்லாம் தமிழுக்கு பெருமை சேர்ப்பது என்று சிந்தித்துக்கொண்டே வந்து படிப்படியாக அதனை எப்படி சிறப்பாக அமல்படுத்தினார் என்பதுதான் சுவையான வரலாறு.
ஆரம்ப காலத்தில் இருந்தே நாள், நட்சத்திரம், தேதி இவைகளை எல்லாம் காமராஜர் பார்ப்பதில்லை. செய்ய வேண்டிய கடமையை சரியாக செய்ய வேண்டும் என்பதில் தான் குறியாக இருப்பார். ஆனால் தான் முதலமைச்சராக பதவி ஏற்பதற்கு மட்டும் தமிழ் புத்தாண்டினை தேர்ந்தெடுத்தார் என்ற செய்தி நம்மை வியக்க வைக்கிறது. தமிழ் மீது இருந்த பற்று காரணமாகத்தான் இந்த நன்நாளை அவர் தேர்ந்தெடுத்திருக்க வேண்டும். தமிழ் புத்தாண்டு கொண்டாட்டத்தோடு காமராஜர் முதலமைச்சராக பொறுப்பேற்றதையும் அன்றைய தினம் தமிழ் மக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.
அடிமட்ட தொண்டனாக இருந்த ஒருவர், தனது கடுமையான உழைப்பினால் படிப்படியாக உயர்ந்து, அர்ப்பணிப்பு நிறைந்த தியாகத்தால் சிறந்து, நேர்மையிலும் ஒழுக்கத்திலும் உயர்ந்து, நாட்டினையே ஆளக்கூடிய முதல்வராக வருகிறார் என்றால் அது அனைத்து தமிழ் மக்களுக்கும் பெருமை அல்லவா? இதை எல்லாம் சீர்தூக்கி பார்த்து தான் தந்தை பெரியார், பச்சை தமிழர் காமராஜர் முதல்வராகியிருக்கிறார் என்று பூரிப்போடு பாராட்டி மகிழ்ந்தார்.
ஒரு மாணாக்கரின் அடிப்படைக் கல்வி அவனது தாய் மொழியிலேயே தான் இருக்க வேண்டும் என்பதே காந்தியின் கருத்தாகும். பல்வேறு மொழி அறிஞர்களும் இக்கருத்தையே வலியுறுத்தி வந்துள்ளனர். காமராஜர் ஆட்சி காலத்தில் 5-ம் வகுப்பு வரை தாய்மொழியான தமிழிலே தான் அனைத்தும் பயிற்றுவிக்கப்பட்டது. 6-ம் வகுப்பில் இருந்து தான் ஆங்கிலம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதுவரை ஏ,பி,சி,டி என்பதே எந்த மாணவர்களுக்கும் தெரியாது என்ற நிலைதான் இருந்து வந்தது.
ஆனால் இப்போதெல்லாம் எல்.கே.ஜி.யிலேயே இன்னும் சொல்லப்போனால் அதற்கு முன்பாகவே ஏ,பி,சி,டி சொல்லிக் கொடுக்கப்படுகிறது. ஆங்கிலேயர்கள் நம்மை விட்டு அகன்றாலும் ஆங்கில மோகம் மட்டும் நம்மை விட்டு அகலமாட்டேன் என்கிறது. தங்கள் பிள்ளைகள் மம்மி, டாடி என்று அழைப்பதிலேயே பெற்றோர்கள் அடையும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
தமிழின் மீது காமராஜர் கொண்டிருந்த பற்றினை தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் அவர் வாழ்ந்து முடித்த திருமலைபிள்ளை சாலை இல்லத்திற்கு சென்றால் தெரிந்து கொள்ளலாம். அவர் படித்து மகிழ்ந்த கம்பராமாயணம், பாரதியார் கவிதைகள், திருக்குறள், சங்க இலக்கிய நூல்கள் எல்லாம் அங்கே வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருப்பதை இன்றும் காணலாம். ஆனால் இதையெல்லாம் ஒருபோதும் அவர் வெளிக்காட்டியதே இல்லை. தேவைப்படும்போது, பொதுக்கூட்டங்களில் பேசும்போது பாரதியார், கவிமணி, நாமக்கல் கவிஞர் போன்ற மூத்த கவிஞர்களின் கவிதைகளை உதாரணம் காட்டி பேசுவார். அவ்வளவுதான்.
பள்ளியிலே படிக்கும் பொழுதே மாணவர்கள் மனதிலே தமிழ் பற்று வேரூன்றி நிற்க வேண்டும் என விரும்பினார் காமராஜர். கல்லூரியிலும் தமிழே பயிற்று மொழியாக இருக்கும்படி உத்தரவு பிறப்பித்து அதனை அமல்படுத்தினார்.
சங்க இலக்கிய நூல்களில் திருக்குறளின் மீது காமராஜருக்கு தணியாத தாகம் இருந்தது. ஒன்றே முக்கால் அடியில் சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் பெருமை உடைய திருக்குறளை எல்லோரும் கட்டாயம் படித்தாக வேண்டும் என்று பள்ளிகளில் திருக்குறளை கட்டாய பாடமாக்கினார்.
தமிழ் இலக்கியங்களை கற்றுக் கொடுக்கும் தமிழ் கல்லூரிகள் காமராஜர் ஆட்சியில் அமருவதற்கு முன்பே இயங்கி வந்தன. கரந்தை தமிழ் சங்க கல்லூரியும், காரைக்குடியில் ராமசாமி தமிழ் கல்லூரியும், தருமபுர ஆதீனம் தமிழ் கல்லூரியும் திருப்பத்தூர், திருவை யாறு, பேரூர் மற்றும் மயிலம் போன்ற இன்னும் பல ஊர்களிலும் தமிழ் கல்லூரிகள் சிறப்பாக செயல்பட்டன. இக்கல்லூரியில் பயின்றவர்கள் அனைவரும் அரசு பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர். காமராஜர் ஆட்சியில் இவை அனைத்தும் நடந்தன. அவர்கள் வித்துவான் என்றும் அழைக்கப்பட்டனர். வித்துவான் என்பது வடமொழியாக இருப்பதால் புலவர் என்று மாற்றப்பட்டது கலைஞர் ஆட்சியில் தான்.
இளங்கலை பட்டம் பெற்று ஆசிரியர் பயிற்சி பெற்றவர்களுக்கு சமமாக புலவர்கள் கருதப்பட வேண்டும், மதிக்கப்பட வேண்டும் என்ற உத்தரவை பிறப்பித்ததோடு, அவர்கள் அனுபவத்தின் அடிப்படையில் தலைமை ஆசிரியராகவும் ஆகலாம் என்ற உத்தரவையும் காமராஜர் தான் பிறப்பித்தார். இந்த உத்தரவு தமிழ் அறிஞர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியது.
பல ஆங்கில சொற்கள் நமது தமிழ் மொழியோடு சேர்ந்து புழக்கத்திலேயே வந்துவிட்டது. அதனை தவிர்க்க முடியவில்லை. தலைமை ஆசிரியரை எல்லோரும் ஹெட் மாஸ்டர் என்றே அழைத்தனர். உடற்பயிற்சி ஆசிரியரை எல்லோரும் டிரில் மாஸ்டர் என்றே அழைத்தனர். ஓவிய ஆசிரியரை டிராயிங் மாஸ்டர் என்றும், தமிழ் ஆசிரியரை தமிழ் பண்டிட் என்றும், இந்தி ஆசிரியரை இந்தி பண்டிட் என்றும் அழைக்கும் பழக்கமே மேலோங்கி இருந்தது.
இதேபோன்று தான் பவுதீகத்தை பிசிக்ஸ் என்றும், விஞ்ஞான பாடத்தை சயின்ஸ் என்றும், சரித்திர பாடத்தை ஹிஸ்டரி என்றெல்லாம் அழைத்தது மட்டுமல்ல, பாடப் புத்தகத்தில் பல சொற்களுக்கு சரியான தமிழாக்கம் இல்லாமலும் இருந்தது. இதற்கெல்லாம் தீர்வு காண வேண்டும் என்ற சிந்தனை அவினாசிலிங்கம் செட்டியார் கல்வி அமைச்சராக இருந்தபோதே வந்துவிட்டது.
அதையொட்டிதான் தமிழ் வளர்ச்சி கழகம் என்ற அமைப்பு தோற்றுவிக்கப்பட்டு அதன் மூலம் தமிழ் கலைக்களஞ்சியம் என்ற அகராதியின் முதல் பதிப்பு 1957-ல் வெளியிடப்பட்டது. அதனை தொடர்ந்து காமராஜர் ஆட்சி காலம் வரை, அதாவது 1963 வரை 9 தொகுதிகள் தமிழ் கலைக்களஞ்சியம் வெளியிடப்பட்டது.
இந்த தமிழ் கலைக்களஞ்சியத்திலே உள்ள சிறப்பு என்னவென்றால், புழக்கத்தில் உள்ள ஒவ்வொரு ஆங்கில சொல்லுக்கும் அர்த்தமும் சொல்லப்பட்டு அதற்கு சமமான தமிழ் சொல்லும் விளக்கமும் அதிலே இடம் பெற்றிருக்கும் அளவுக்கு இந்த அகராதி தயாரிக்கப்பட்டது. இந்த அகராதி வெளிவந்ததற்கு பின்னாலே தான் பாட புத்தகங்களில் பொருத்தமான சொற்கள் பயன்படுத்தப்பட்டு அவை புழக்கத்தில் கொண்டுவரப்பட்டன.
உதாரணத்திற்கு ஒன்று சொல்ல வேண்டும் என்றால் கணிதத்திலே பித்தாகரஸ் விதி என்று ஒன்று இருந்தது. அதனை பித்தாகரஸ் தேற்றம் என்றும் அதிலே வருகிற ஈக்வேஷன்களை சமன்பாடுகள் என்றும் மாற்றி தமிழ் சொற்றொடர்களை புழக்கத்தில் கொண்டு வந்தனர். இப்படி ஒவ்வொரு பாடத்திலும் செய்தனர்.
ஆசிரியர்களில் தமிழ் ஆசிரியரை மட்டுமே தமிழ் ஐயா என்று அழைத்தனர். மற்ற ஆசிரியர்கள் எல்லாம் அவர்கள் கற்பிக்கும் துறையை சொல்லி மேக்ஸ் டீச்சர் என்றும், ஹிஸ்டரி டீச்சர் என்றும் அழைக்கப்பட்டனர். டீச்சர் என்ற ஆங்கில சொல் நம்மோடு அந்த காலத்தில் இருந்து ஒன்றிப்போய்விட்டது. இன்றைக்கும் பெண் ஆசிரியர்களை டீச்சர் என்று அழைக்கும் வழக்கம் தானே இருந்து வருகிறது.
கிளாசில் அட்டன்டன்ஸ் எடுத்தாச்சா என்று தான் கேட்பார்கள். மாணவர்களும் ஆஜர் என்று பதில் உரைப்பார்கள். ஒரே நாளில் எல்லாவற்றையும் மாற்றிவிட முடியாதல்லவா.
காமராஜர் ஆட்சி காலத்தில் படிப்படியாக அட்டன்டன்ஸ் என்பது வருகை பதிவேடு ஆகவும் ஆஜர் என்று சொல்வதற்கு பதிலாக உள்ளேன் ஐயா என்றும் சொல்லிப் பழக்கப்படுத்தப்பட்டது.
காமராஜர் ஆட்சி காலத்தில் இந்த மாற்றங்கள் ஆரம்பமாகி நடக்கத் தொடங்கின. ஆனால் இவற்றையெல்லாம் கலந்து பேசி நடைமுறைப்படுத்துகிற பணியினை தமிழறிஞர்களிடமே விட்டுவிட்டார் காமராஜர். அவர்களின் ஆலோசனைப்படியே படிப்படியாக தமிழ் சொற்கள் புழக்கத்திற்கு வந்தன.
தமிழ் வளர்ச்சியில் காமராஜர் எத்தனை அக்கறையும் ஆர்வமும் காட்டினார் என்பதற்காக தான் இவைகளையெல்லாம் இங்கே குறிப்பிட்டுள்ளேன். இன்னும் காமராஜர் தமிழ் வளர்ச்சிக்கு என்னென்ன செய்தார் என்பதை அடுத்த வாரத்தில் பார்ப்போம்.
- தி.மு.க. எம்.பி. ஆ.ராசா, தமிழ்நாடு என்று சொல்லாததால் தான் காமராஜர் தோற்றுப்போனார் என்று தவறான கருத்தை பதிவு செய்கிறார்.
- காமராஜரின் மங்காபுகழை சீர்குலைக்கும் வகையில் பேசி வருவது ஏற்புடையதல்ல வன்மையாக கண்டிக்கத்தக்கது.
சென்னை:
பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
காமராஜரை பற்றி தி.மு.க. நிர்வாகிகள் தொடர்ச்சியாக தவறான தகவல்களை நாட்டு மக்களிடம் பரப்பி வருவதை பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்.
தமிழ்நாடு என்று சொல்லாததால் தான் காமராஜர் தோற்றுப்போனார் என்று தி.மு.க. எம்.பி. ஆ.ராசா தவறான கருத்தை பதிவு செய்கிறார்.
காமராஜர் என்றுமே தோற்றவர் அல்ல. அவர் கொண்டு வந்த கே பிளான் படி தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு காங்கிரஸ் கட்சி பணிக்கு வந்தார். அவர் தொடர்ந்து முதல்வராக இருந்திருந்தால் இன்றளவும் தி.மு.க. என்கிற கட்சியே தமிழ்நாட்டில் இல்லாமல் போயிருக்கும் என்பதை ஆ.ராசா போன்றவர்கள் உணர வேண்டும். விருதுநகரில் தோற்கடிப்பட்ட காமராஜருக்கு, நாகர்கோவில் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் மிகப் பெரிய வெற்றியை மக்கள் அளித்தார்கள் என்பதை நாடறியும்.
பெருந்தலைவர் காமராஜர் மறைந்து 47 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்ட நிலையில் அவரது மங்காபுகழை சீர்குலைக்கும் வகையில் தி.மு.க.வினர் பேசி வருவது ஏற்புடையதல்ல வன்மையாக கண்டிக்கத்தக்கது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- காமராஜர் முதல் -அமைச்சராக இருந்த போது பூரணமதுவிலக்கு அமல்படுத்தப்பட்டது.
- மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டு போராட்டத்தில் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி 17 பேர் உயிரிழந்தனர்.
நெல்லை:
பொதுமக்கள் வாராந்திர குறைதீர்க்கும் நாள் கூட்டம் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் இன்று கலெக்டர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமானவர்கள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை வழங்கினர்.
சமத்துவ மக்கள் கட்சியினர் மனு
சமத்துவ மக்கள் கட்சியின் நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் அழகேசன் தலைமையில் மானூர் தெற்கு ஒன்றியம் செழியன், மாநில செயற்குழு உறுப்பினர் செபஸ்டின், இனைஞர் அணி செயலாளர் முரளி மற்றும் நிர்வாகிகள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
இந்திய விடுதலை போராட்டம், அகில இந்திய காங்கிரஸ் தலைவர், தமிழ கத்தின் முதல்-அமைச்சர் பதவி என பல்வேறு நிலை களில் மக்களுக்காக பல்வேறு பணிகள், திட்டங் களை தந்தவர் கர்மவீரர் காமராஜர். அவரது பிறந்தநாளை முன்னிட்டு தமிழக அரசு சார்பிலும், பல்வேறு அரசியல் கட்சி சார்பிலும் பெருந்தலைவர் காமராஜர் சிலை மற்றும் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டும் வருகிற 15-ந்தேதி அவரது பிறந்த நாள் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. காமராஜர் முதல் -அமைச்சராக இருந்த போது பூரணமதுவிலக்கு அமல்படுத்தப்பட்டது. எனவே பெருந்தலைவர் காமராஜருக்கு மரியாதை செலுத்தும் வகையில் வருகிற 15-ந்தேதி தமிழ கத்தில் மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மாஞ்சோலை தொழிலாளர்கள்
தமிழக மக்கள் முன்னேற்றக் கழக மாநகர் மாவட்ட தலைவர் கண்மணி மாவீரன் தலைமையில் கொடுத்த மனுவில், கடந்த 1999-ம் ஆண்டு ஜூலை 23-ந்தேதி மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டு போராட்டத்தில் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி 17 பேர் உயிரிழந்தனர்.
அவர்களின் நினைவாக தாமிரபரணி ஆற்றில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாலதத்திற்கு மாஞ்சாலை போராளிகள் நினைவு பாலம் என பெயரிட வேண்டும். தாமிரபரணி ஆற்றங்கரையில் உயிரிழந்த வர்களுக்கு நினைவு தூண் அமைக்க வேண்டும் என 2012-ம் ஆண்டு முதல் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம். எனவே இந்த கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என கூறப்பட்டு உள்ளது.
- காமராஜ் மீது லஞ்ச ஒழிப்புத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
- 6 பேர் மீது 810 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகை திருவாரூர் மாவட்ட ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அ.தி.மு.க. ஆட்சியில் உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சராக இருந்தவர் காமராஜ்.
தற்போது நன்னிலம் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கும் இவர் 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் வரையில் அமைச்சராக இருந்த போது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
அமைச்சராக பதவி வகித்த காலத்தில் அவரது பெயரிலும், அவரது மகன்கள் இனியன், இன்பன் மற்றும் அவரது நண்பர்களான சந்திரகாசன், கிருஷ்ணமூர்த்தி, உதயகுமார் ஆகியோருடன் கூட்டு சேர்ந்து மொத்தம் ரூ.58 கோடியே 44 லட்சத்து 38 ஆயிரத்து 252 அளவிற்கு வருமானத்திற்கு அதிகமாக முறைகேடாக சொத்து சேர்த்ததாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் திருவாரூர் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இது தொடர்பாக 51 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது.
காமராஜர் அமைச்சராக இருந்த கால கட்டத்தில் சந்திரகாசன், கிருஷ்ண மூர்த்தி, உதயகுமார் ஆகியோரின் உடந்தையுடன் தஞ்சாவூரில் என்.ஏ.ஆர்ச் ஓட்டல் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தின் பெயரில் சொத்துக்களை வாங்கி அந்த நிறுவனத்திற்கு சொந்தமான இடத்தில் அவரது மகன்களான இனியன், இன்பன் ஆகியோரின் பெயர்களில் தஞ்சாவூரில் ஸ்ரீ காமாட்சி மெடிக்கல் சென்டர் (ஸ்ரீவாசுதேவ பெருமாள் ஹெல்த் கேர் லிமிடெட்) என்ற பெயரில் நவீன பன்னோக்கு மருத்துவமனையை கட்டியதும் தெரிய வந்தது.
இந்த வகைகளில் ரூ.127 கோடியே 49 லட்சத்து 9 ஆயிரத்து 85 அளவிற்கு தனது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து உள்ளார்.
இந்த வழக்கின் புலன் விசாரணை முடிக்கப்பட்டு கோர்ட்டில் வழக்கு தொடர சபாநாயகரிடம் அனுமதி பெற்று இன்று திருவாரூர் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் சிறப்பு கோர்ட்டில் முன்னாள் அமைச்சர் காமராஜ், அவரது மகன்கள் இனியன், இன்பன் மற்றும் சந்திரகாசன், கிருஷ்ண மூர்த்தி, உதயகுமார் ஆகியோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறும் போது, இது போன்று ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி உள்ள அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் அனைவர் மீதும் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று தெரிவித்தனர்.
- சின்னத்திரை நடிகை சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் ஹேம்நாத்துக்கு எதிராக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
- வழக்கின் விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் அந்த விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்று சித்ராவின் தந்தை கூறியுள்ளார்.
சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 2020-ஆம் ஆண்டு திருவள்ளூர், நசரேத் பேட்டையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் சடலமாக மீட்கப்பட்டார். அவரை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் ஹேம்நாத்துக்கு எதிராக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். திருவள்ளூர் மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கும் இந்த வழக்கை சென்னைக்கு மாற்ற வேண்டும் என்றும் வழக்கு விசாரணையை விரைந்து முடிக்க உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையுடன் சித்ராவின் தந்தை காமராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

மேலும், வழக்கின் விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் அந்த விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்றும் வழக்கை இழுத்தடிக்கும் நோக்கில் ஹேம்நாத் அடுத்தடுத்து பல்வேறு மனுக்களை தாக்கல் செய்து வருவதாகவும் 2021-ஆம் ஆண்டில் இருந்து இந்த வழக்கு குற்றச்சாட்டில் பதிவு செய்யப்பட்ட கட்டத்திலேயே இருப்பதாகவும் அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல், முதுமை காரணமாக வழக்கின் விசாரணைக்காக திருவள்ளூர் சென்று வருவதற்கு சிரமமாக இருப்பதால் வழக்கை திருவள்ளூரில் இருந்து சென்னைக்கு மாற்றுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
- அப்போதைய முதல்-அமைச்சர் காமராஜர் திறந்து வைத்தார்.
- பழமையான நுழைவு வாயில் இடித்து தரைமட்டமாக்கியது பொது மக்களிடையே மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோபி:
ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையம் பகுதி சிறந்த சுற்றுலா தலமாக திகழ்ந்து வருகிறது.
அதே போல் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு கோபிசெட்டி பாளையம் மற்றும் சுற்று வட்டார கிராம பகுதிகளில் பெரும்பாலான திரைப்படங்கள் எடுக்கப்பட்டது. இதனால் இந்த பகுதியை சின்ன கோடம்பாக்கம் என்று பெயர் பெற்று திகழ்ந்தது.
மேலும் கடந்த 1950-ம் ஆண்டுகளில் இருந்தே கோபிசெட்டிபாளையம் பல வரலாற்று சிறப்புகளையும் பெற்று வருகிறது. இதனால் அந்த பகுதிகளில் வரலாற்று சின்னங்களும் கம்பீரமாக இருந்து வருகிறது.
இந்நிலையில் கோபி செட்டி பாளையத்தில் கடந்த 1-12-1958-ம் ஆண்டு 45-வது அரசியல் மாநாடு நடை பெற்றது. இதையொட்டி கோபி கிழக்கு பகுதியிலும் (கரட்டூர்), மேற்கு பகுதியிலும் (குடிநீர் மேல்நிலை தொட்டி அருகிலும்) நகராட்சி சார்பாக அப்போதே 2 நுழைவு வாயில்கள் (ஆர்ச்) கட்டப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது. அதை அப்போதைய முதல்-அமைச்சர் காமராஜர் திறந்து வைத்தார்.
அப்போது முதல் ஈரோடு, சத்தியமங்கலம் ரோட்டில் கோபிசெட்டிபாளையம் என வளைவு அமைக்கப்பட்டு தூண்களுடன் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கம்பீரமாக பொதுமக்களை வரவேற்கும் வகையில் நிலைத்து நின்று வந்தது.
இந்த நிலையில் கடந்த கடந்த 2018-ம் ஆண்டு கரட்டூர் ஆர்ச் மீது லாரி மோதியதில் அது இடிந்து விழுந்தது. அதைத் தொடர்ந்து புதியதாக கிழக்கு பகுதியில் உள்ள ஆர்ச் கட்டப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது.
இந்நிலையில் சித்தோட்டில் இருந்து சத்தியமங்கலம் வரை 4 வழிச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் ரோடுகள் அகலப்படுத்தப்பட்டு வருகிறது. இதையொட்டி அந்த பகுதியில் உள்ள ஆக்கரமிப்புகளும் அகற்றப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் ஈரோடு-சத்தியமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் கோபிசெட்டி பாளையம் மேற்கு பகுதியில் அமைந்துள்ள சுமார் 60 ஆண்டுகள் பழமையான நுழைவு வாயில் (ஆர்ச்) ரோடுகள் வரிவாக்கம் பணிக்காக அகற்ற முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து நேற்று (புதன் கிழமை) இரவு நெடுஞ்சாலைத்துறையினர் சாலை விரிவாக்கப் பணிக்காக எந்திரங்கள் மூலம் பணியாளர்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டு அகற்றினர். இதை கண்டு அந்த பகுதி மக்கள் வேதனை அடைந்தனர்.
கோபியின் பெருமையை நிலை நாட்டும் வகையில் 60 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மிகவும் பழமையான நுழைவு வாயில் இடித்து தரைமட்டமாக்கியது பொது மக்களிடையே மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.
- முள்ளக்காடு உப்பு உற்பத்தியாளர் எல்.ஆர்.பாண்டியன் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு 250 மாணவ- மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்களை வழங்கினார்.
- விழாவில் 55 இளைஞர்கள் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி முள்ளக் காட்டில் காமராஜர் மக்கள் சங்கம் தொடக்க விழா நடைபெற்றது. உப்பு உற்பத்தியாளர் எல்.ஆர்.சிவாகர் தலைமை தாங்கினார். மதசார்பற்ற ஜனதா தள மாநிலத் துணைத் தலைவர் வக்கீல் சொக்கலிங்கம், கோவில் தர்மகர்த்தாக்கள் சேகர், சின்னராஜ், காமராஜ் கல்லூரி வரலாற்றுத்துறை தலைவர் தேவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
காமராஜர் மக்கள் சங்கத் தலைவர் கோகுல், செயலாளர் லிங்க பிரதீஷ், பொருளாளர் சரவணன், ரத்ததான அணி பொறுப்பாளர்கள் விக்னேஷ்,செல்லத்துரை, ராபர்ட் ஜெயபால்,சட்ட ஆலோசகர் ஸ்ரீநாத் ஆனந்த் ஆகியோர் கூட்டாக வரவேற்றனர்.
சிறப்பு விருந்தினராக போலீஸ் தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ராஜபிரபு கலந்துகொண்டு தொடக்க விழாவை முன்னிட்டு நடைபெற்ற ரத்ததான முகாமை தொடங்கி வைத்தார். இதில் 55 இளைஞர்கள் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர்.
தொடர்ந்து முள்ளக்காடு உப்பு உற்பத்தியாளர் எல்.ஆர்.பாண்டியன் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு 250 மாணவ- மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் முள்ளக்காடு ஊராட்சி தலைவர் கோபிநாத் நிர்மல், முகேஷ் சண்முக வேல், மகாராஜன், பொன்ராம் மற்றும் காமராஜர் மக்கள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.






