search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chithra"

    • சின்னத்திரை நடிகை சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் ஹேம்நாத்துக்கு எதிராக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
    • வழக்கின் விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் அந்த விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்று சித்ராவின் தந்தை கூறியுள்ளார்.

    சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 2020-ஆம் ஆண்டு திருவள்ளூர், நசரேத் பேட்டையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் சடலமாக மீட்கப்பட்டார். அவரை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் ஹேம்நாத்துக்கு எதிராக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். திருவள்ளூர் மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கும் இந்த வழக்கை சென்னைக்கு மாற்ற வேண்டும் என்றும் வழக்கு விசாரணையை விரைந்து முடிக்க உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையுடன் சித்ராவின் தந்தை காமராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.


    மேலும், வழக்கின் விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் அந்த விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்றும் வழக்கை இழுத்தடிக்கும் நோக்கில் ஹேம்நாத் அடுத்தடுத்து பல்வேறு மனுக்களை தாக்கல் செய்து வருவதாகவும் 2021-ஆம் ஆண்டில் இருந்து இந்த வழக்கு குற்றச்சாட்டில் பதிவு செய்யப்பட்ட கட்டத்திலேயே இருப்பதாகவும் அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.

    அதுமட்டுமல்லாமல், முதுமை காரணமாக வழக்கின் விசாரணைக்காக திருவள்ளூர் சென்று வருவதற்கு சிரமமாக இருப்பதால் வழக்கை திருவள்ளூரில் இருந்து சென்னைக்கு மாற்றுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

    பத்மவிருதுகள் வழங்கும் விழாவில் பிரதமர் நரேந்திரமோடி, மத்திய மந்திரிகள் அமித்ஷா, ஜெய்சங்கர் மற்றும் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.
    டெல்லியில் 2வது நாளாக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பத்ம விருதுகளை வழங்கினார். இதில் மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது; எஸ்.பி.பி சார்பில் எஸ்.பி.சரண் விருதை பெற்றுக்கொண்டார். அதை தொடர்ந்து பத்மபூஷன் விருதை பிரபல பாடகி சித்ரா பெற்றுக் கொண்டார்.

    பாடகி சித்ரா

    பத்மவிருதுகள் வழங்கும் விழா ஜனாதிபதி மாளிகையில் நடந்தது. இவ்விழாவில் பிரதமர் நரேந்திரமோடி, மத்திய மந்திரிகள் அமித்ஷா, ஜெய்சங்கர் மற்றும் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். 
    ×