என் மலர்
நீங்கள் தேடியது "demand"
- தீ தடுப்பு கருவிகள் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.
- அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்தனர்.
அபிராமம்
ராமநாதபுரம் மாவட்டம். கமுதி வட்டம், அபிராமம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகள், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகள், தொடக்கப் பள்ளிகள், அரசு உயர்நிலை மேல்நிலைபள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் என 100-க்கும் மேற்பட்ட பள்ளிகள் உள்ளன.
பள்ளிகளில் தீ தடுப்பு கருவிகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள், முதலுதவி சிகிச்சைக்கு தேவையான மருந்து வசதிகள் கட்டாயம் இருக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த வசதிகள் பள்ளிகளில் உள்ளதா? என்பதை ஆண்டு தோறும் கல்வித் துறை அலுவலர்கள் உறுதி செய்துகொள்ள வேண்டும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
அபிராமம் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் சில பள்ளிகளிலும் சில தனியார் பள்ளிகளிலும் தீ தடுப்பு கருவிகள் மற்றும் முதலுதவி உபகரணங்கள் இல்லை என்று பெற்றோர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
சில பள்ளிகளில் காலாவ தியான தீ தடுப்பு சிலிண்டர்கள் உள்ளன. இதனால் மாணவ- மாணவிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. வருகிற ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் இங்கு முடங்கியுள்ள பாதுகாப்பு மற்றும் உட்கட்டமைப்பு பணிகளை விடுமுறை நாட்களில் பூர்த்தி செய்ய கல்வித் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்தனர்.
- ரேசன் கடை ஊழியர்கள் 14-ந்தேதி முதல் வேலை நிறுத்தம் செய்கின்றனர்.
- 21 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ராமநாதபுரம்
தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்க மாநில துணைத் தலைவரும், ராமநாதபுரம் மாவட்ட தலைவருமான தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பொதுவிநியோகத் திட்டத்திற்கு தனித்துறை, பொருட்களை பொட்டலங் களாக வழங்க வேண்டும், 60 வயது வரை பணி செய்து விட்டு பணிநிறைவு பெற்று வீட்டிற்கு செல்லும் போது எந்த பண பலனும் கிடைக் காமல் பணியாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.
ஓய்வூதியம் இல்லாமல் அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கு மிகவும் திண்டாடுகிறார்கள். அவர்களுக்கு அரசு ஓய்வூதியம் வழங்க வேண்டும், ஒரு பொருளுக்கு இருமுறை பில் போடும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும்.
விற்பனை முனையங்களில் 4ஜி இணைப்பு வழங்க வேண்டும், பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும், மாவட்டம் விட்டு மாவட்டம் பணியிட மாறுதல் வழங்கப் பட்ட பின்னர் காலிப்பணியி டங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப் பட்டுள்ளது.
இதனை நிறைவேற்ற வலியுறுத்தி சென்னை மாநில பதிவாளர் அலுவலகம் முன்பு வருகிற 9-ந்தேதி மறியல் போராட்டம் நடத்த உள்ளோம். அதன் பின்பும் கோரிக்கைகள் ஏற்கப்படா விடில் வருகிற 14-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் நடத்த உள்ளோம்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- கண்மாய் மடை நீர் செல்ல சாலையில் பாலம் அமைக்க வேண்டும்.
- விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நடந்தது. கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். வட்டாட்சியர் ரங்கசாமி முன்னிலை வகித்தார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் குறுவட்டத்தை சேர்ந்த குருக்கள்குளம், வடக்கு ஸ்ரீவில்லிபுத்தூர், தெய்வேந்திரி, தைலாகுளம், சிங்கம்மாள்புரம் அத்திகுளம் பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பட்டா மாறுதல், நிலப்பதிவு, நில நிர்வாகம், வருவாய்த் துறை தொடர்பான 115 கோரிக்கை மனுக்களை, கலெக்டரிடம் வழங்கினர்.
தெய்வேந்திரி, சோளங்குளம், நொச்சிகுளம் கண்மாய் நீரை பயன்படுத்து வோர் சங்க தலைவர் தேவப்பிரியம் அளித்த மனுவில், 'மதுரை- கொல்லம் 4 வழி சாலை பணிக்காக தெய்வேந்திரி குளத்தின் பாசன நிலங்களை அரசு கைய கப்படுத்தி உள்ளது.
இந்த சாலையின் குறுக்கே செல்லும் தெய்வேந்திரி கண்மாய் நடுமடை, வடக்கு மற்றும் தெற்கு மடை ஆகிய 3 மடைகளின் கால்வாய் களில் சிறு குழாய்கள் அமைக்க திட்டமிடப்பட் டுள்ளது. ஆனால் இந்த மடைகள் மூலம் சுமார் 100 ஏக்கருக்கு மேல் தண்ணீர் செல்ல வேண்டியுள்ளது. அதனால் குழாய்கள் அமைத்தால் நீரின் அளவு குறைந்து பாசனம் தடைபட வாய்ப்புள்ளது.
3 கால்வாய்களிலும் உள்ள சிறிய வாய்க்கால்களை அடைத்து விடாமல் பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
தென்னை விவசாயிகள் சங்க கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளைர் முத்தையா அளித்த மனுவில், ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள செண்பகதோப்பு பகுதியில் 500 ஏக்கருக்கு மேல் விவசாய நிலங்கள் உள்ளன. விவசாய நிலங்களுக்கு செல்லும் விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் குலதெய்வ கோவில்களுக்கு செல்பவர்களிடம் வனத்துறை ஒரு நபருக்கு ரூ.20 வீதம் கட்டணம் வசூல் செய்கின்றனர்.
விவசாயிகள் மற்றும் பக்தர்களிடம் கட்டணம் வசூல் செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
- பாட்னா மற்றும் ஷாலிமர் செல்லும் வாராந்திர ரெயில்கள், கோவையில் இரண்டு நிமிடம் கூடுதலாக நிறுத்தப்படுகிறது.
- 600க்கும் அதிகமான வடமாநில பயணிகள் திருப்பூர் வந்திறங்குகின்றனர்.
திருப்பூர் :
பாட்னா மற்றும் ஷாலிமர் செல்லும் வாராந்திர ரெயில்கள், கோவையில் இரண்டு நிமிடம் கூடுதலாக நிறுத்தப்படுகிறது.திருப்பூரிலும் ஒன்று அல்லது இரண்டு நிமிடம் கூடுதலாக நின்று செல்ல வேண்டும் என்று பயணிகள் வலியுறுத்துகின்றனர்.
பீகார் தலைநகர் பாட்னாவில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளத்துக்கு வெள்ளிக்கிழமைதோறும்,மே ற்கு வங்க மாநிலம் ஷாலிமரில் இருந்து கேரள மாநிலம், திருவனந்தபுரத்துக்கு ஞாயிற்றுக்கிழமைதோறும் வாராந்திர ரெயில் இயக்கப்படுகிறது. பாட்னா சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ், ஷாலிமர் எக்ஸ்பிரஸ் ஆகிய இந்த ெரயில்கள் கோவையில், காலை 10:27மணிக்கு வந்து 10:30 மணிக்கு புறப்பட்டு வந்தது. ரெயில் பயணிகள் வசதிக்காக கூடுதலாக இரண்டு நிமிடங்கள் அதாவது காலை 10:25மணிக்கு வரும் ரெயில்கள் 10:30 மணி வரை கோவையில் நிற்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பயணிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
திருப்பூர் ரெயில் நிலையத்திற்கு வரும் இந்த ரெயில்கள் காலை 9:28மணிக்கு வந்து 9:30 மணிக்கு புறப்படும். இரண்டும் வாராந்திர ரெயில் என்பதால், வடமாநிலங்களில் இருந்து 600க்கும் அதிகமான வடமாநில பயணிகள் திருப்பூர் வந்திறங்கு கின்றனர். ரெயில்கள் கூடுதலாக ஒன்று அல்லது இரண்டு நிமிடங்கள் நின்று சென்றால் பயனுள்ளதாக இருக்கும் என்கின்றனர் பயணிகள்.
- பயத்தஞ்சேரி, கொட்டையூர் உள்ளிட்ட 23 வருவாய் கிராமங்களுக்கும் ஜமாபந்தி நடைபெறுகிறது.
- பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் குறித்து மனு அளிக்கலாம்.
நீடாமங்கலம்:
வலங்கைமான் தாசில்தார் அன்பழகன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது :-
வலங்கைமான் தாலுகாவில் 71 வருவாய் கிராமங்கள் உள்ளது.
1432 ஆம் பசலி ஆண்டு வருவாய் தீர்வாய கணக்கு முடிப்பு (ஜமாபந்தி) வலங்கைமான் தாலுக்கா அலுவலகத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் விஜயின் தலைமையில் நாளை (புதன்கிழமை) தொடங்கி வரும் 26-ந் தேதி வரை 3 நாட்கள் நடைபெற உள்ளது.
இதில் நாளை ஆவூர் உள்வட்டத்தைச் சேர்ந்த அன்னுக்குடி, சாலபோகம், உத்தமதானபுரம், மூலாழ்வா ஞ்சேரி, அவிச்சாகுடி, நல்லூர், ரங்கநாதபுரம், கிளியூர், இனாம்கிளியூர், கோவிந்தகுடி, வாணிய க்கரம்பை, சிங்காரம்பாளையம், வீராணம், நல்லம்பூர் ஆவூர் ஊத்துக்காடு, வேலூர் ஏரி, மணலூர், மதகரம்,மாளிகை திடல், வேலங்குடி, வீரமங்கலம், களத்தூர், மணக்கால், சடையங்கால், முனியூர், கிளியூர், அவளிவநல்லூர், 47 ரங்கநாதபுரம், உள்ளிட்ட 31 வருவாய் கிராமங்களுக்கு ஜமாபந்தி நடக்கிறது.
25 ஆம் தேதி வலங்கைமான் உள் வட்டத்தைச் சேர்ந்த சந்திரசேகரபுரம் வலங்கை மான் மேல விடையல், கீழ விடையல், கண்டியூர், சித்த ன்வவாழூர், செம்மங்குடி, தொழுவூர், விருப்பாச்சிபுரம், ஆதிச்சமங்கலம், 18 ரெகுநாதபுரம், வடக்கு பட்டம், தெற்கு பட்டம், புளியகுடி, பாடகச்சேரி, மாத்தூர், மருவத்தூர், கிராமம் உட்பட 17 வருவாய் கிராம ங்களுக்கு நடைபெறுகிறது.26 ஆம் தேதி ஆலங்குடி உள் வட்டத்தைச் சேர்ந்த திருவோணமங்கலம், அமராவதி சாரநத்தம், ராஜேந்திரன் நல்லூர், ஆலங்குடி, பூந்தோட்டம், பெருங்குடி, அரித்துவார மங்கலம், கேத்தனூர், நெம்மேலிகுடி, படுகை நெம்மேலிகுடி, எருமை படுகை, நார்த்தங்குடி, புலவர் நத்தம், பூனாயிருப்பு, ரகுநாதபுரம், மாணிக்க மங்கலம், பாப்பாக்குடி, அரவத்தூர், அரவூர், பயத்தஞ்சேரி, கொட்டையூர் உள்ளிட்ட 23 வருவாய் கிராமங்களுக்கும் ஜமாபந்தி நடைபெறுகிறது.
மேற்கண்ட ஜமாபந்தியில் பொதுமக்கள் பட்டா மற்றும் பட்டா நகல் கோருதல், பட்டா மாறுதல் கோருதல் மற்றும் இதர கோரிக்கைகள் குறித்து மனு அளித்து பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மேலச்செல்வனூரில் தெரு விளக்குகள்-மின் மாற்றிகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ஊராட்சி மன்றத்தலைவர் மகரஜோதி கோபாலகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.
சாயல்குடி
சாயல்குடி அருகே மேலச்செல்வனூர் ஊராட்சி மன்றத்தலைவராக இருப்பவர் மகரஜோதி கோபால கிருஷ்ணன். என்ஜினீயரான இவர் தனது மக்கள் பணி குறித்து கூறியதாவது:-
மேலச்செல்வனூர் கிராமத்தில் கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து அம்மன் கோவில் வரை ரூ.10 லட்சத்திலும், மேலச்செல்வனூர் யாதவர் தெருவில் ரூ.6.56 லட்சத்தி லும், அங்குள்ள அம்மன் கோவில் பகுதியில் இருந்து பிள்ளையார் கோவில் வரை ரூ.4 லட்சத்திலும், மேலச்செல்வனூர் மருது பாண்டியர்நகர் பகுதியில் ரூ.2.70 லட்சத்திலும் பேவர் பிளாக் சாலைகள் அமைக்க ப்பட்டுள்ளது. மேலச்செல்வ னூர் யாதவர் தெருவில் 100 மீட்டரும், ஆதி திராவிடர் காலனி பகுதியில் 100 மீட்டரும் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டுள்ளது.
மேலச்செல்வனூர் பொது ஊரணியில் ரூ.4 லட்சத்தில் ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டு உள்ளது. ஊருணியில் படித்துறை ரூ.50 ஆயிரத்தில் பழுது பார்க்கப்பட்டுள்ளது. மேலச்செல்வனூர் கிராமத்தில் 1½ கிலோ மீட்டர் தூரத்தில் பைப் லைன் விஸ்தரிப்பு செய்து கிராம மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டுள்ளது.
பொது மயானத்தில் ரூ 17 லட்சத்தில் சுற்றுச்சுவர், எரிமேடை, காத்திருப்போர் கூடம், சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டுள்ளது. மேல செல்வனூர் கிராமத்தில் பஸ் நிறுத்தம், கண்ணன் கோவில், ஆதி திராவிடர் தெரு, கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் தனித்தனியாக பிளாஸ்டிக் தொட்டி அமைத்து குடிநீர் வழங்கப்பட்டுள்ளது.
மேலச்செல்வனூர் கிராமத்திலும், எம். எஸ். புது குடியிருப்புக்கும் தலா ரூ.8 லட்சத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு உள்ளது. எஸ் ஆலங்குளம் கிராமத்தில் பிளாஸ்டிக் தொட்டி அமைத்து குடிநீர் வழங்கப்பட்டு உள்ளது. தேரங்குளம் கிராமத்தில் திறந்தவெளி கிணறு ரூ. 12 லட்சத்தில் அமைக்கப்பட்டு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. பாப்பாக்குளம் கிராமத்தில் ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டு பசுமை ஊராட்சியாக மாற்றப்பட்டுள்ளது.
ஜல் ஜீவன் திட்டத்தில் மேலச்செல்வனூர் கிராமத்தில் 331 வீடுகளுக்கு குடிநீர் வழங்கப்பட்டு உள்ளது. என.பாடு வனேந்தல் கிராமத்தில் 100 மீட்டர் பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டு உள்ளது. கடையக்குளம் கிராமத்தில் குடிநீர் வினியோகம் மற்றும் பைப் லைன் விரிவாக்கம் செய்து குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. தேரங்குளம் கிராமத்தில் குடிநீர் கிணற்றிலிருந்து மின்மோட்டார் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது.
மேலச்செல்வனூர் அரசு உயர்நிலைப்பள்ளி சமையல் அறை கட்டிடம் ரூ.7.40 லட்சம் மதிப்பீட்டில் பணி கள் நடைபெற்று வருகிறது. மாவட்ட நிர்வாகம் மேலச்செல்வனூர் ஊராட்சிக்கு நீதி ஒதுக்கி கீழ்க்கண்ட பணிகள் நடைபெற உதவ வேண்டும்.
மேலச்செல்வனூர் கிராமத்தில் இருந்து மடத்தாகுளம் கிராமத்திற்கு புதிய சாலை அமைக்க வேண்டும். 2007-2008-ம் ஆண்டில் மேலச்செல்வனூர் பள்ளி உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. பள்ளி கட்டிடம் இல்லாததால் அங்குள்ள தொடக் கப்பள்ளி கட்டிடத்திலேயே இயங்கி வருகிறது. உயர்நிலைப்பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும். உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக மாற்றுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குடிநீர் பற்றாக்குறையை போக்க மேலச்செல்வனூர் கிராமத்தில் 60 ஆயிரம் லிட்டர் கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்க வேண்டும். எம்.எஸ்.புதுக்குடியிருப்பு கிராமத்தில் 30 ஆயிரம் லிட்டர் மேல்நிலை நீர்த் தேக்க தொட்டி, தேரங்குளம் கிராமத்தில் 10 ஆயிரம் லிட்டர் நீர்த்தேக்க தொட்டி, பாப்பாகுளம் கிராமத்தில் 30 ஆயிரம் நீர்த்தேக்க தொட்டி அமைக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும்.
பறவைகள் சரணாலயம் உள்ள மேலச்செல்வனூர் சுற்றுலா தலமாக உள்ளதால் அத்துறை சார்பில் இங்கு கழிப்பறை, ஓய்வு அறை, உணவு அருந்தும் கூடம் கட்டித்தர வேண்டும். மேலும் வருவாய் ஆய்வாளர் கட்டிடம் கட்டித்தர வேண்டும். மேலச்செல்வ னூர் ஊராட்சி முழுவதும் தெரு விளக்குகள் விஸ்தரிப்பு செய்ய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
மேலச்செல்வனூர் மற்றும் எம்.எஸ்.புதுக்குடி யிருப்பு கிராமத்தில் திறந்த வெளி கிணறு அமைக்க வேண்டும். மேலச் செல்வனூர் கிராமத்தி ற்கு 2 மின்மாற்றிகள், எம்.எஸ்.புதுக்குடியிருப்புக்கு ஒரு மின் மாற்றி, கடையக்குளம் கிராம த்திற்கு ஒரு மின்மாற்றி அமைத்து கூடுதல் மின்சாரம் கிடைக்க வழி வகை செய்ய வேண்டும்.
மேலச்செல்வனூர் கிராமத்தை பசுமை கிராமமாக மாற்றுவதற்கு பொது ஊரணி மற்றும் பறவைகள் சரணாலயம் கண்மாயில் 300 மரக்கன்றுகள் நடப்பட்டு வளர்க்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- உயிர் நீத்தவர்களின் உருவ படத்திற்கு தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
- எதற்காக அவர்கள் போராடினார்களோ அந்தக் கோரிக்கைகள் நிறைவேற்ற மக்களுடன் துணை நிற்போம்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தின் 5-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த, உயிர் நீத்தவர்களின் உருவ படத்திற்கு தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அவருடன் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, எம்.எல்.ஏ.க்கள் மார்க்கண்டேயன், சண்முகையா , தூத்துக்குடி மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்த சேகரன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டு மலர் தூவி நினைவு அஞ்சலி செலுத்தி மரியாதை செலுத்தினர்.
பின்னர் கனிமொழி எம்.பி. அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தின் போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் 5-ம் ஆண்டு நினைவு தினத்தில் அவர்களின் நினைவுகளை மனதில் ஏந்தி அஞ்சலி செலுத்துகிறோம்.
எதற்காக அவர்கள் போராடினார்களோ அந்தக் கோரிக்கைகள் நிறைவேற்ற மக்களுடன் துணை நிற்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மேலூர் தற்காலிக பஸ் நிலையத்தை அரசு பஸ்கள் புறக்கணித்தன.
- செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலூர்
தமிழகம் முழுவதும் பெரிய மற்றும் சிறிய நகரங்களில் உள்ள பழைய பஸ் நிலையங்களை இடித்துவிட்டு நவீன முறையில் புதிய பஸ் நிலையங்கள் கட்டப்பட்டு வருகின்றன. அதன்படி மதுரை மாவட்டத்தின் முக்கிய பகுதியாக விளங்கும் மேலூரில் உள்ள பழைய பஸ் நிலையத்தை இடித்து ரூ. 7.42 கோடி மதிப்பில் புதிய பஸ் நிலையம் கட்ட தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்தது.
இதையொட்டி பழைய பஸ் நிலையத்தில் இருந்த கட்டிடங்களை இடிக்கும் பணி நடைபெற்றது. இந்த பணிகள் முடிவுற்ற நிலையில் புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகள் விரைவில் தொடங்க உள்ளன.கட்டுமான பணிகள் நடந்து முடியும் வரை மேலூர் பகுதியில் 4 இடங்களில் அரசு பஸ்கள் நிறுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இதற்கு பொதுமக்களும் வியாபாரிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 4 இடங்களில் பஸ்கள் நிறுத்தப்படுவதால் பொதுமக்களுக்கு வீண் அலைச்சலும் சிரமமும் ஏற்படும் என கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து மேலூர் நகர் மன்ற தலைவர் முகமது யாசின் தலைமையில் பொதுமக்கள், காவல்துறையினர், போக்கு வரத்து அதிகாரிகள் பங்கேற்ற கருத்து கேட்பு கூட்டம் நடந்தது.
இதில் புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகள் முடியும் வரை மேலூர்- அழகர் கோவில் ரோட்டில் உள்ள இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான சிவன் கோவில் காலி இடத்தில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.இந்த தற்காலிக பஸ் நிலையம் நேற்று (17-ந் தேதி) முதல் செயல்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து சிவன் கோவில் திடலில் முன்னேற்பாடு பணிகளும் செய்யப்பட்டிருந்தன. ஆனால் தற்காலிக பஸ் நிலையத்தில் எந்த ஒரு அரசு பஸ்களும் வந்து செல்லவில்லை. மாறாக மேலூர் நகர் பகுதியில் உள்ள மெயின் ரோட்டிலேயே ஆங்காங்கே பயணிகளை ஏற்றி இறக்கி அரசு பஸ்கள் சென்றன.
தற்காலிக பஸ் நிலையம் செயல்படும் என நம்பி அங்கு வந்த பொதுமக்கள் பஸ்கள் ஏதும் வராததால் மிகுந்த ஏமாற்றத்துடன் மீண்டும் பழைய பஸ் நிலைய பகுதிக்கு சென்று அரசு பஸ்களில் ஏறி பயணம் செய்தனர்.
நேற்று இரவு வரை எந்த ஒரு அரசு பஸ்சும் தற்காலிக பஸ் நிலையத்திற்குள் வரவில்லை. இதனால் சிவன் கோவில் திடல் வெறிச்சோடி காணப்பட்டது. மாறாக தனியார் வாகனங்கள் சில அங்கு நிறுத்தப்பட்டிருந்தன. நகர் மன்ற தலைவர், போலீசார் போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பேசி தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டது. ஆனால் அதனை பொருட்படுத்தாமல் அரசு பஸ்கள் வழக்கம்போல் நகர் பகுதியில் நின்று சென்றது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி தற்காலிக பஸ் நிலையம் முழுமையாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- நலிவடைந்த நிலையில் உள்ள ராஜபாளையம் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தை மீட்டெடுக்க வேண்டும் என அமைச்சருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- பல ஊழியர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கம் 40 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான சங்கமாகும்.
ஏ.கே.டி.பலராமராஜா தனது வீட்டையே சங்கத்திற்காக வழங்கி முதல் தலைவரானார். இந்த சங்கத்தில் திறமையான அதிகாரிகள், திறமையான தலைவர்கள் இருந்த காலத்தில் தினமும் 15 ஆயிரம் லிட்டர் பால் உற்பத்தி செய்து ராஜ பாளையம் மக்களுக்கு விநியோகித்து வந்தனர்.
இந்த சங்கம் விருதுநகர் மாவட்டத்திலேயே முதல் கூட்டுறவு சங்கமாக தேர்ந்தெடுத்து பல பரிசுகள் வென்றுள்ளது.
திறமை வாய்ந்த அதிகாரி களுக்கு பின்னர் நிர்வாக திறமையின்மையின் காரணமாகவும், தலைவர்களாக வந்தவர்களும் முன்னேற்ற வேண்டும் என்ற நிலையில் இல்லாமல் அதிகமான ஊழியர்களை லஞ்சம் பெற்று பணி அமர்த்தினர்.
பால் உற்பத்தி யாளர்களிடம் முறையாக பேச்சுவார்த்தை, போனஸ், கூலி உயர்வு வழங்காமல் இழுத்தடித்தது போன்ற காரணங்களால் தற்போது தினமும் 8 ஆயிரம் லிட்டருக்கும் குறைவாகவேப பால் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
குறிப்பாக தேவிபட்டினம் கிராமத்தில் இருந்து வரவேண்டிய தினமும் 3 ஆயிரம் லிட்டர் பால் முழுவதும் தடை செய்யப்பட்டுள்ளது. இதற்கு காரணம் இவர்களது கூட்டுறவு சங்கத்தில் இருந்து பெறப்படும் பாலுக்கு சரியான விலை உயர்வு கொடுக்காமல் இருந்ததால் தனியார் பால் நிறுவனங்கள் தேவிபட்டினம் முழுவதும் அதிக விலைக்கு பால் வாங்கி வருவதால் 3 ஆயிரம் லிட்டர் பாலையும் கூட்டுறவு சங்கம் இழந்தது. தற்போது மாடு வளர்ப்ப தற்கான ஆர்வமும் மக்களி டையே இல்லாத நிலையில் பால் உற்பத்தி குறைந்து வருவதும் ஒரு காரணமாகும். மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப பால் ஒரு முக்கியமான உணவு பொருளாக அமைந்து விட்டதால் தரம் வாய்ந்த கூட்டுறவு சங்க பாலுக்கு எப்பவுமே கிராக்கி இருந்து வருகிறது.
இந்த நிலையில் பால் கிடைக்காத நிலையில் தனியார் பால் விற்பனை யாளர்களிடம் பொதுமக்கள் பால் வாங்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டு கடந்த பல வருட காலமாக தள்ளாடிய நிலையில் ராஜபாளையம் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கம் இருந்து வருகிறது.
தேவையில்லாத ஊழியர்கள் நியமனம், தேவையில்லாத செலவு, கூட்டுறவுத்துறை மேல திகாரிகளின் அலட்சியப் போக்கு போன்றவைகளால் நிர்வாக திறன் பாதிக்கப்பட்டு பல ஊழியர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.
அதிகாரிகள் நடவடிக்கை காரணமாக பல ஊழியர்கள் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டு படிப்படியாக பணியில் அமர்த்தப்பட்டு வருகின்றனர். அதிகாலை 5.30 மணிக்கு வர வேண்டிய பால் தற்போது 6 மணிக்கு மேல் 7 மணி வரை விநியோகம் செய்யும் நிலையில் இருந்து வருகிறது.
இதன் காரணமாக மாதந்தோறும் முன்கூட்டியே பணம் செலுத்தி பால் அட்டை வாங்கும் நிலை தற்போது குறைந்து விட்டது. தனியார் விற்பனை யாளர்களிடம் பால் பெறும் நிலை இருந்து வருகிறது.
எனவே புதிதாக பொறுப்பேற்றுள்ள பால் வளத்துறை அமைச்சர், ராஜபாளையம் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க விஷயத்தில் கவனம் செலுத்தி நலிவடைந்த நிலையில் உள்ள சங்கத்தை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும், பால் உற்பத்தியாளர்கள் சங்க ஊழியர்களும் எதிர்பார்க்கின்றனர்.
- புதிய தார் சாலை பணிகளை மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி அலுவலர்களுடன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
- அப்போது அவர் கூறுகையில், மாநகர் முழுவதும் மக்களின் கோரிக்கைகளை படிப்படியாக நிறைவேற்றி வருகிறோம் என்றார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாநகராட்சியில் கடந்த காலங்களில் மழையினால் மிகவும் பாதிப்படைந்த பகுதிகளான ஆர்.எஸ்.பி.ஆர். நகர ஹவுசிங் போர்டு மற்றும் கே.டி.சி. நகர் ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் புதிய தார் சாலை பணிகளை மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி அலுவல ர்களுடன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறுகையில், தற்போது இந்த பகுதிகளில் சாலை மற்றும் வசதிகள் செய்து கொடுத்து உள்ளோம். இதுபோல மாநகர் முழுவதும் மக்களின் கோரிக்கைகளை படிப்படியாக நிறைவேற்றி வரு கிறோம் என்றார்.
தொடர்ந்து கருத்த பாலம் அருகில் நடைபெற்று வரும் ரெயில்வே பணிகள் நிறைவுற்றதால் சாலைக்கும், பாலத்திற்கும் இடையே கழிவு நீர் செல்லும் ஓடையின் இடையில் ஏதேனும் அடைப்புகள் ஏற்பட்டால் சுத்தப்படுத்தும் விதமாக சிறிய அளவிலான கல்வெட்டு அமைப்பதற்கும், மேலும் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்துவதால் அதனை அகலப்படுத்தி தருவேன் என்று கூறியிருந்தேன்.
தற்போது அந்த பணிகளும் விரைவில் ஆரம்பமாகும் என்று தெரி வித்தார்.இதனையடுத்து தூத்துக்குடி சிவன் கோவில், பெருமாள் கோவில் பகுதிகளில் நடைபெற்று வரும் வடிகால் பணிகளை ஆய்வு செய்தார்.மேயரின் தொடர் நடவடிக்கைக்கு பொதுமக்களும், கட்சி நிர்வாகிகளும் வரவேற்பும், பாராட்டும் தெரிவித்தனர்.
ஆய்வின் போது பகுதி செயலாளரும், மாமன்ற உறுப்பினருமான சுரேஷ், பொது குழு உறுப்பினர் கோட்டு ராஜா, முன்னாள் மாமன்ற உறுப்பினரும், வட்ட செயலாளருமான ரவீந்திரன், மண்டல தலைவர் நிர்மல்ராஜ், மாவட்ட பிரதிநிதி ராஜ் குமார், மாநகராட்சி அதிகா ரிகள், நிர்வாகிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.