search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "demand"

    • 14 ஆண்டு காலமாக நீடித்து வரும் இந்த பிரச்சினைக்கு அரசு தீர்வு காண வேண்டும்.
    • பள்ளி கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த திட்டமிட்டு இருந்தனர்.

    சென்னை:

    பதிவு மூப்பு இடைநிலை ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் பள்ளிக் கல்வி அலுவலகம் முற்றுகை போராட்டம் இன்று 2-வது நாளாக நடந்தது. நேற்று முற்றுகையிட முயன்ற ஆசிரியர்களை கைது செய்து மாலையில் போலீசார் விடுவித்தனர்.

    ஆனாலும் இடைநிலை ஆசிரியர்கள் சென்னையில் பல்வேறு இடங்களில் தங்கி இன்று மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இடைநிலை ஆசிரியர்களுக்கு சமவேலை-சம ஊதியம் என்ற அடிப்படையில் ஊதியம் வழங்க வேண்டும். முரண்பாடுகளை களைய வேண்டும். 14 ஆண்டு காலமாக நீடித்து வரும் இந்த பிரச்சினைக்கு அரசு தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி காலை 9 மணி முதல் ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் கூடத் தொடங்கினர்.

    அங்கிருந்து பள்ளி கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த திட்டமிட்டு இருந்தனர். ஆனால் போலீசார் அதற்கு முன்பாகவே ஆசிரியர்களை மறித்து கைது செய்தனர்.

    கிரீம்ஸ் சாலையில் இருந்து அவர்களை வெளியே வர முடியாமல் தடுத்து மறித்தனர். மாநில பொறுப்பாளர்கள் ராபர்ட், ஆனந்தகுமார், கண்ணன், வேல்முருகன், ஞானசேகரன் ஆகியோர் தலைமை யில் 500-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கைது செய்யப் பட்டனர்.

    போராட்டம் குறித்து சங்க நிர்வாகி கூறியதாவது:-

    எங்களோடு பணியில் சேர்ந்த இளநிலை உதவியாளருக்கும், ஆசிரியருக்கும், ஊதிய முரண்பாடு ரூ.3170 உள்ளது. அதனை சரிசெய்ய வேண்டும் என பல ஆண்டுகளாக போராடி வருகிறோம்.

    எங்களை கைது செய்து சிறையில் அடைத்தாலும் போராட்டம் தொடரும். எங்கள் கோரிக்கையை நிறைவேற்றும் வரை போராடுவோம் என்றார்.

    • காவல்துறையினரைக் கொண்டு அப்புறப்படுத்திய தமிழக அரசு, அவர்களுடன் பேச்சு நடத்த எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை.
    • பார்வை மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கை ஏற்கப்படாதது வருத்தமளிக்கிறது.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    அரசு வேலைவாய்ப்புகளில் 1 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், பார்வையற்றோருக்கு டி.என்.பி.எஸ்.சி மூலம் சிறப்புத் தேர்வு நடத்தி பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 9 கோரிக்கைகளை முன்வைத்து சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பார்வை மாற்றுத்திறனாளிகள் மறியல் செய்திருக்கின்றனர். அவர்களை காவல்துறையினரைக் கொண்டு அப்புறப்படுத்திய தமிழக அரசு, அவர்களுடன் பேச்சு நடத்த எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை.

    மாற்றுத்திறனாளிகள் நலத்துறை முதலமைச்சரின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ளது. முதலமைச்சரை சந்தித்து பேச அனுமதிக்க வேண்டும் என்ற பார்வை மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கை ஏற்கப்ப டாதது வருத்தமளிக்கிறது.

    பார்வை மாற்றுத்திறனாளிகளின் நலன்களை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை ஆகும். அவர்களின் கோரிக்கைகள் கொள்கை முடிவு தொடர்பானவை தான். அதற்காக அரசுக்கு கூடுதல் செலவு எதுவும் ஏற்படப் போவது இல்லை. எனவே, பார்வை மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கை குறித்து அவர்களுடன் தமிழக அரசு பேச்சு நடத்தி, சாத்தியமானவற்றை நிறைவேற்ற முன்வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • அம்பேத்கர் படத்தை வைத்து தங்களது கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள உப்பாறு அணைக்கு திருமூர்த்தி அணையில் இருந்து பி.ஏ.பி. வாய்க்கால் மூலம் உபரி நீரை வழங்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். ஆனால் பொதுப்பணித்துறையினரோ திருமூர்த்தி அணை முழு கொள்ளளவை எட்டிய பிறகுதான் தண்ணீர் திறக்க முடியும் என கூறி வருகின்றனர்.

    இந்நிலையில் உப்பாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இது குறித்து திருப்பூர் மாவட்ட உப்பாறு அணை விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிர்வாக குழு உறுப்பினர் சிவக்குமார் கூறும்போது,

    கடந்த 4 ஆண்டுகளாக உப்பாறு அணைக்கு தண்ணீர் வழங்கக்கோரி வலியுறுத்தி வருகிறோம். பலமுறை பி.ஏ.பி. அதிகாரிகளிடம் மனு கொடுத்து உள்ளோம். இது தொடர்பாக 4 முறை பேச்சுவார்த்தைக்கு அழைத்துவிட்டு முந்தையநாள் பேச்சுவார்த்தையை ரத்து செய்கின்றனர். உப்பாறு அணை பகுதி விவசாயிகளுக்கு, கால்நடைகளுக்கு கூட தண்ணீர் கிடைப்பதில்லை. இதே நிலை நீடித்தால் ஊரை காலி செய்துவிட்டு விவசாயத்தை விட்டு விட்டு கூலி வேலைக்கு செல்லும் அவல நிலை ஏற்படும். எங்களுக்கு தண்ணீர் கிடைக்கும் வரை தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.

    இதையடுத்து இன்று 2-வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடக்கிறது. மேலும் விவசாயிகள் அம்பேத்கர் படத்தை வைத்து தங்களது கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

    • ரெயில் நிலையம் அமைக்க பயணிகள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
    • 12 பெட்டிகளை கொண்ட மின்சார ரெயில்கள் நிற்கும் வகையில் நடைமேடை இருக்கும்.

    சென்னை:

    சென்னை நகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய பஸ் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. இந்த பஸ் நிலையத்தில் இருந்து தினமும் 2,310 பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

    தினமும் சுமார் 1.5 லட்சம் பயணிகள் வந்து செல்லும் வகையில் இந்த பஸ் நிலையத்தில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. கிளாம்பாக்கம் பஸ் நிலையத்துக்கு பயணிகள் எளிதாக வந்து செல்வதற்கு வசதியாக பஸ் நிலையத்துடன் மின்சார ரெயில் இணைப்பை ஏற்படுத்தும் வகையில், தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடத்தில் கிளாம்பாக்கம் பஸ் நிலையம் அருகே ரெயில் நிலையம் அமைக்க பயணிகள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

    இதையடுத்து, வண்டலூர் - ஊரப்பாக்கம் இடையே கிளாம்பாக்கத்தில் ரூ.20 கோடி செலவில் புதிய ரெயில் நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி கிளாம்பாக்கத்தில் பஸ் நிலையம் அருகே புதிய ரெயில் நிலையம் அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன.

    இது தொடர்பாக ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-

    கிளாம்பாக்கம் புதிய ரெயில் நிலையத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டு, ரெயில் நிலையத்தின் கட்டுமான பணிகள் தொடங்கியுள்ளன. கிளாம்பாக்கத்தில் புதிய ரெயில் நிலைய கட்டுமான பணிகளை வருகிற ஆகஸ்டு மாதத்துக்குள் முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளோம்.

    ரெயில் நிலையம் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெறுகிறது. இந்த ரெயில் நிலையம் புறநகர் மின்சார ரெயில்கள் நின்று செல்லும் வகையில், 3 நடைமேடைகளுடன் அமைய உள்ளது. 12 பெட்டிகளை கொண்ட மின்சார ரெயில்கள் நிற்கும் வகையில் நடைமேடை இருக்கும். கிளாம்பாக்கத்தில் இருந்து தாம்பரம் ரெயில் நிலையம் சில கிலோ மீட்டர் தொலைவிலேயே இருப்பதால் கிளாம்பாக்கம் ரெயில் நிலையத்தில் விரைவு ரெயில்கள் நிற்கும் வகையில் நீண்ட நடைமேடை அமைக்கவேண்டிய அவசியமில்லை. இந்த ரெயில் நிலையத்தை மேம்படுத்துவது குறித்து ஆய்வு நடத்தி முடிவு செய்யப்படும்.

    மின் தூக்கி, நகரும் படிக்கட்டுடன் கூடிய நடை மேம்பாலம், ரெயில் நிலைய கட்டிடம், நடைமேடையின் மேற்கூரைகள் போன்ற உள்கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மேலும் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தை, ரெயில் நிலையத்துடன் இணைக்க 450 மீட்டர் நீளத்துக்கு ஆகாய நடை பாலமும் அமைக்கப்படுகிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • அண்ணா தொழிற்சங்கம், சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கம் உள்பட 23 தொழிற்சங்கத்தினர் ஸ்டிரைக் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டனர்.
    • தொழிற்சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைக்கு தீர்வு காண தமிழக அரசு முயற்சித்து வருகிறது.

    சென்னை:

    தமிழக அரசின் போக்குவரத்து தொழிலாளர்கள் வருகிற 9-ந் தேதி ஸ்டிரைக் கில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர். அண்ணா தொழிற்சங்கம், சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கம் உள்பட 23 தொழிற்சங்கத்தினர் ஸ்டிரைக் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டனர்.

    இதனால் மாநிலம் முழுவதும் பஸ் போக்குவரத்தில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இது தொடர்பாக தொழிற்சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைக்கு தீர்வு காண தமிழக அரசு முயற்சித்து வருகிறது.

    இதன்படி சென்னை பல்லவன் இல்லத்தில் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர் சிவசங்கர் நேற்று பேச்சு நடத்தினார். பின்னர் அவர் அளித்த பேட்டியில் போக்குவரத்து தொழிலாளர்கள் வைத்துள்ள கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு கூடுதல் நிதி செலவாகும் என்பதால் அதுபற்றிய விஷயங்களை நிதித்துறையுடன் ஆலோசித்து முடிவெடுக்க வேண்டியுள்ளது.

    இதற்கு ஒரு நாள் அவகாசம் தேவைப்படுவதால் நாளை (ஞாயிற்றுக் கிழமை) மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று தெரிவித்தார். இதன்படி பல்லவன் இல்லத்தில் நாளை காலை அமைச்சர் சிவசங்கர் தொழிற்சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

    இதில் அண்ணா தொழிற் சங்கப் பேரவை செயலாளர் கமலக்கண்ணன் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள். இதன் பின்னர் நாளை மறுநாள் (8-ந் தேதி) தொழிலாளர் நல ஆணையாளரும் போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார். இந்த பேச்சு வார்த்தை நாளை மதியம் 12 மணியளவில் நடைபெறுகிறது.

    இதற்கிடையே அமைச்சருடன் நாளை நடைபெறும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படுமா? என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. ஓய்வுபெற்ற போக் குவரத்து தொழிலாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும்.

    பணியில் உள்ள தொழிலாளர்களுக்கு அகவிலை படி உயர்வை வழங்குவதுடன் ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தைக்கான காலக்கெடுவையும் அறிவிக்க வேண்டும் என்று போக்குவரத்து தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஒவ்வொரு ஆண்டும் மழைகாலத்தில் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது தண்ணீரில் மூழ்கி விடுகிறது.
    • ஊராட்சி மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அதிகாரிகளுக்கு அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை.

    பொன்னேரி,ஜன.5-

    மீஞ்சூரை அடுத்த வெள்ளி வாயல் சாவடி பகுதியில் கொசஸ்தலை ஆற்றின் கரைகளை ஒட்டி உள்ள பல ஏக்கர் விவசாய நிலங்கள், செங்கல் சூளை மற்றும் தொழில் நிறுவனங்கள் உள்ளன.

    வெள்ளிவாயல் வரை செல்வதற்கு பயன்படுத்தும் பாதை ஒவ்வொரு ஆண்டும் மழைகாலத்தில் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது தண்ணீரில் மூழ்கி விடுகிறது. இதனால் அவ்வழியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டு கிராமமக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.

    வெள்ளிவாயல்சாவடி கொசஸ்தலை ஆற்றில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடும்போது எதிரே உள்ள விவசாய நிலங்களுக்கு செல்வதற்கும் அருகில் உள்ள வெள்ளிவாயல், சுப்பாரெட்டிபாளையம், விச்சூர் உள்ளிட்ட கிராமமக்கள் 10 கிலோமீட்டர் தூரம் வரை சுற்றி செல்லும் நிலை உள்ளது.

    எனவே கொசஸ்தலை ஆற்றில் உயர்மட்ட மேம்பாலம் அமைத்து தரவேண்டும் என்று சுற்றி உள்ள 10 கிராமமக்கள் கோரிக்கை விடுத்து உள்ள னர். மேலும் மேம்பாலம் அமைத்து தர கோரி ஊராட்சி மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அதிகாரிகளுக்கு அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை என்று கிராமமக்கள் தெரிவித்து உள்ளனர்.

    • பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்த நிலையில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்து வருகிறது.
    • கொசு உற்பத்தி ஆகி சுகாதாரகேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் நகராட்சி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கப், ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை அதிகரித்து உள்ளன.

    மீண்டும் மஞ்சப்பை திட்டம் குறித்து அதிகாரிகள் பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்த நிலையில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்து வருகிறது.

    பல்வேறு கடைகளில் ஓரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் சாலையோரம் கொட்டப்படுவதால் அவை அகற்றப்படாமல் குவிந்து கிடக்கிறது. காக்களூரில் உள்ள மதுக் கடை அருகே பிளாஸ்டிக் கப் மற்றும் பிளாஸ்டிக் கழிவு பொருட்கள் அகற்றப்படாமல் மாதக்கணக்கில் குவியல், குவியலாக உள்ளன. இதனால் அப்பகுதியில் கொசு உற்பத்தி ஆகி சுகாதாரகேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

    மேலும் தூக்கி வீசப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் நீர்நிலைகள் மற்றும் கால்வாய்களில் சேர்ந்து விடுவதால் கடும் சவாலாக மாறி உள்ளது. எனவே தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தி இதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டு உள்ளது.
    • உழவர் உற்பத்தியாளர் சங்கத் தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார்.

    பொன்னேரி:

    மிச்சாங் புயல் காரணமாக கும்மிடிப்பூண்டி, பொன்னேரி பகுதியில் பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி அனைத்து விவசாயிகள் சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. உழவர் உற்பத்தியாளர் சங்கத் தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார். விவசாய சங்க நிர்வாகி ரமேஷ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணத்தொகையை அரசு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. மேலும் கோரிக்கையை வலியுறுத்தி வருகிற 15-ந்தேதி திரளானோர் விவசாய கருவிகளுடன் பேரணியாக சென்று பொன்னேரி சார் ஆட்சியர், வட்டாட்சியரிடம் மனு அளிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

    • இந்த நீர் நிறம் மாறி நேற்றிலிருந்து துர்நாற்றம் வீசுகிறது.
    • இந்த மருத்துவ மனைக்குள் வாகனங்கள் ஏதும் செல்லமுடியாத நிலையும் தொடர்கிறது.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ளது பிரம்மதேசம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம். இங்கு 40-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சிகிச்சை பெறுவது வழக்கம. கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழை நீர் இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை சுற்றி தேங்கி உள்ளது. இந்த நீர் நிறம் மாறி நேற்றிலிருந்து துர்நாற்றம் வீசுகிறது. இந்நிலையில் நேற்று பெய்த மழையினால் ஆரம்ப சுகாதாரத்தின் வாயிலிலும் மழை நீர் தேங்கி நிற்கிறது. இதனால் கிராமப்புறங்களில் வரும் நோயாளிகள் கடுமை யான சிரமத்திற்கு உள்ளா கியுள்ளனர். மேலும், அவசர த்திற்கு இந்த மருத்துவ மனைக்குள் வாகனங்கள் ஏதும் செல்லமுடியாத நிலையும் தொடர்கிறது.

    இதனால் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை பூட்டிவிட்டு டாக்டர்களும், நர்சுகளும் சென்று விட்டனர். எனவே, இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை சுற்றி நிற்கும், மழைநீரை அப்புறப்படுத்த வேண்டுமென நோயாளி களும், பொதுமக்களும் கோரிக்கை வைத்துள்ளா ர்கள். மேலும், டாக்டர்கள் மற்றும் நர்சுகள் மீண்டும் மருத்துவமனைக்கு வர தேவையான நடவடிக்கை களை எடுக்க வேண்டுமென நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது.
    • கழிவறை வசதி இல்லாததால் பெண்கள், கர்ப்பிணிகள், முதியோர் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்

    கோவை. 

    கோவை கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது. இதனையொட்டி கலெக்டர் அலுவலகத்திற்கு ஏராளமான மக்கள் வந்து மனு அளித்தனர். கோவை பேரூர் செட்டிபாளையம் இந்திராநகர் பகுதியை சேர்ந்த மக்கள் கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தனர்.அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    கோவை பேரூர் செட்டிபாளையம், இந்திரா நகர் பகுதியில் 30 ஆண்டுகளுக்கு முன்பு அருந்ததியர் மக்களுக்கு அரசு சார்பில் 25 குடியிருப்புகள் கட்டித் தரப்பட்டது. அந்த குடியிருப்புகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பழுதாகி விட்டது. தற்போது கட்டிடம் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு அரசு அதிகாரிகளிடமும், மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும் பலமுறை மனுக்கள் அளித்தும் தற்போது வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் ஒரு மழை பெய்தால் வீடுகள் இடிந்து விழும் நிலை உள்ளது. மேலும் அப்பகுதியில் கழிவறை வசதி இல்லாததால் பெண்கள், கர்ப்பிணி பெண்கள், முதியோர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.எனவே மாவட்ட நிர்வாகம் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பாளை சீனிவாசன் நகர் பகுதியில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி அனைவரும் அந்த கழிவு நீரின் வழியாகத்தான் சென்று வரும் நிலை உள்ளது.
    • கழிவுநீர் ஓடை சரியான முறையில் இல்லாததால் அங்கு மழைநீர் தேங்கி கொசுக்கள் அதிகமாக காணப்படுகிறது.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி 38-வது வார்டு பொதுமக்கள் நலச்சங்கம் சார்பில் ராமலட்சுமி, சின்னத்துரை, ஜெபமணி, நடராஜன், கந்தசாமி, நாராயணன், தங்கம், கோலப்பன், சுந்தரி, மகாராஜன் ஆகியோர் மாநகராட்சி மண்டல அதிகாரிகளிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    பாளை சீனிவாசன் நகர் பகுதியில் மழைக்காலங்களில் தண்ணீர் அதிகமாக தேங்கி தெருக்களில் பள்ளி குழந்தைகள், முதியோர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் அந்த கழிவு நீரின் வழியாகத்தான் சென்று வரும் நிலை உள்ளது. சீனிவாசன் நகர் பகுதியில் நாங்குநேரி சர்வீஸ் ரோட்டில் அமைந்திருக்கும் ஆதித்தனார் 1-வது தெருவில் கழிவுநீர் ஓடை சரியான முறையில் இல்லாததால் அங்கு மழைநீர் தேங்கி கொசுக்கள் அதிகமாக காணப்படுகிறது. இதனால் சிறு குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை நோய்வாய்ப்படும் நிலை உள்ளது.

    எனவே மாநகராட்சி நிர்வாகம் இப்பகுதியை பார்வையிட்டு தாழ்வாக இருக்கும் கழிவு நீர் ஓடையை உயர்த்தி அமைத்து தர உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். சீனிவாச நகர் தனியார் மஹால் முதல் கோகுலம் நகர் அடுத்ததாக அமைந்துள்ள குளம் வரை ஓடையை நீட்டிப்பு செய்து சரியான முறையில் கழிவுநீர் ஓடை அமைத்து தரவேண்டும். இவ்வாறு அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

    • வாடகை வாகனங்கள் முன்பு போன்று காலாண்டுக்கு ஒரு முறை வரி செலுத்த முடியாது.
    • வாடகை வாகன உரிமையாளர்களுக்கு புதிய வரி இன்னும் சுமையை அதிகரிக்கச் செய்யும்.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.

    இதில் வாடகை வாகன உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்கள் நல சங்கத்தின் மாநில தலைவரான நெல்லை ரெட்டியார்பட்டியை சேர்ந்த சந்தோசம் என்பவர் தலைமையில் வாடகை வாகன டிரைவர்கள் மற்றும் உரிமையாளர்கள் திரண்டு வந்து மனு அளித்தனர்.

    அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசு கொண்டு வந்துள்ள சட்ட திருத்தத்தின் காரணமாக வாடகை கார்கள், வேன்களின் ஆயுள் கால வரி, சாலை வரி மிக அதிகமாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக வாகன உரிமை யாளர்கள், டிரைவர்கள் பாதிக்கப்படு வதோடு பொதுமக்களையும் அது பாதிக்கக் கூடியதாக உள்ளது.

    குறிப்பாக வாடகை வாகனங்களுக்கு இனி அதன் இன்வாய்ஸ் அடிப்படையில் மட்டுமே ஆயுள் கால வரி வசூலிக்கப்பட வேண்டும் என்று திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

    அதன் அடிப்படையில் வாடகை வாகனங்கள் முன்பு போன்று காலாண்டுக்கு ஒரு முறை வரி செலுத்த முடியாது. ஆயுள் கால வரி மட்டுமே செலுத்த வேண்டும். இதனால் உரிமையாளர்கள் கடன்கள் பெற்று வாகனத்தை வாங்கி ஓட்டி வரும் நிலையில் இந்த புதிய வரி அவர்களுக்கு இன்னும் சுமையை அதிகரிக்கச் செய்யும்.

    மேலும் பழைய வாகனத்திற்கான புதிய ஆயுட்கால வரி வாகனத்தை தொடக்கத்தில் வாங்கிய அதே தொகைக்கு கணக்கிட்டு வரி செலுத்த வேண்டும் என்று புதிய திருத்த சட்டம் கூறுவதால் எங்களுக்கு மிகவும் பாதிப்பு ஏற்படும்.

    எனவே அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து வாடகை வாகனங்க ளுக்கான புதிய வரி உயர்வை ரத்து செய்து வாடகை வாகன உரிமை யாளர்கள், டிரை வர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

    ×