search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "basic facilities"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சுமார் 3 தலைமுறைகளாக காலம் காலமாக 150 க்கு மேற்பட்ட மலை கிராம இருளர் இன மக்கள் வசித்து வருகின்றனர்.
    • அடிப்படை வசதிகள் இல்லாமல் தமிழக அரசையும், மாவட்ட நிர்வாகத்தையும் நம்பி எதிர்நோக்கி காத்து கிடக்கின்றனர்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டத்தில் ஏரியூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மலையனூர், மலையூர் காடு, எல்லம்மாள் காடு, மூல பெல்லூர், டேம் கொட்டாய் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன.

    அதே போல் அரூர் ஒன்றியத்திற்குட்பட்ட மலை கிராமங்களான அரசநத்தம், கலசப்பாடி, உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட மலை கிராமங்களும், பென்னாகரம் ஊராட்சியில் கோட்டூர் மலை, அலகட்டுமலை, ஏரிமலை, உள்ளிட்ட மலை கிராமங்களும், ஏரியூர் ஒன்றியத்தில் மலையனூர், மலையூர் காடு, எல்லம்மாள் காடு, உள்ளன. மூல பெல்லூர் டேம் கொட்டாய், உள்ளிட்ட மலை கிராமங்களும் இன்று வரை அடிப்படை வசதிகள் இல்லாமல் தமிழக அரசையும், மாவட்ட நிர்வாகத்தையும் நம்பி எதிர்நோக்கி காத்து கிடக்கின்றனர்.

    அதில் பென்னாகரத்தை அடுத்த ஏரியூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சுஞ்சல்நத்தம் பஞ்சாயத்தில் மூல பெல்லூர் டேம் கொட்டாய் பகுதியில் சுமார் 3 தலைமுறைகளாக காலம் காலமாக 150 க்கு மேற்பட்ட மலை கிராம இருளர் இன மக்கள் வசித்து வருகின்றனர்.

    இவர்கள் கால்நடைகள் வளர்ப்பது, விறகு வெட்டுவது, மலை தேன் சேகரிப்பது, சுண்டைக்காய், கிழங்கு வகைகள், கீரை வகைகள் சாகுபடி செய்து அன்றாடம் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் எளிய கிராம மக்களுக்கும் கிடைக்க கூடிய அடிப்படை வசதிகளான சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சாரம் வசதி உள்ளிட்ட வசதிகள் எதுவும் கிடைக்காமல் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

    மேலும் இந்த கிராமத்தை சுற்றி மலைகள் சூழ்ந்து காணப்படுவதால் விஷப்பூச்சிகள் அதிக அளவில் காணப்படுகின்றன. மேலும் கர்ப்பிணி பெண்கள் பிரசவத்திற்காகவும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உடல்நிலை சரியில்லை என்றாலும் கயிறு கட்டில் மற்றும் புடவையில் தொட்டில் கட்டி மருத்துவமனை தூக்கி செல்லும் அவல நிலையில் உள்ளனர்.

    இதனால் உரிய நேரத்திற்குள் செல்ல முடியாமல் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழப்பு ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

    பெண்கள் பிரசவ காலங்களில் பெரும்பாலானவர் அரசு சுகாதார நிலையங்களை நாடிச் செல்லாமல் பழைய முறையில் மருத்துவச்சி பெண்களைக் கொண்டு பிரசவம் பார்த்து வருகின்றனர்.

     

    அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கும் கிராம மக்கள்.

    அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கும் கிராம மக்கள்.

    மேலும் சரியான சாலை வசதி இல்லாததால் கரடு முரடான ஒருவழி பாதையில் செல்வதால் பள்ளி செல்லும் பள்ளி மாணவ மாணவியர் உரிய நேரத்தில் பள்ளிக்கு செல்ல முடியாததால் படிப்பை பாதியிலேயே நிறுத்தி விடுகின்றனர்.

    பாதியிலேயே பள்ளிக்கு செல்லாமல் நின்று விடுவதாகவும், இதனால் இப்பகுதி மாணவர்கள் பள்ளியை தொடர்ந்து படிக்க முடியாமல் படிப்பை பாதியிலேயே நிறுத்தும் அவல நிலையும் ஏற்படுகிறது. இதனால் பெண் பிள்ளைகள் பூப்பெய்தவுடன் பெண் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைப்பதாக அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

    இது குறித்து மலை கிராம மக்கள் கூறுகையில்;-

    படிப்பறிவு இல்லாததால் தங்களுடைய தேவைகளுக்கு என்ன செய்வதென்று தெரியாமல் இத்தனை ஆண்டுகள் மலை குகைக்குள் இருப்பது போன்றே இருந்து வருகின்றோம். மேலும் எங்கள் குறைகளை தீர்க்க எந்த அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் திரும்பிக்கூட பார்க்கவில்லை. எங்கள் வீடுகளில் அருகே மின்சார கம்பங்கள் இருந்தும் மின் இணைப்பு கொடுப்பதற்கு அதிகாரிகள் மறுத்து வருகின்றனர். மின் விளக்குகள் இல்லாததால் நெருப்பு மூட்டி தீ வெளிச்சத்தில் வாழ்ந்து வருகிறோம்.

    மத்திய மாநில அரசுகள் மலைவாழ் மக்களுக்கு என்று அடிப்படை தேவைகளுக்காக பல கோடி கணக்கில் நிதி ஒதுக்கினாலும் அது எங்கள் அடிப்படை தேவைக்குகூட வந்து சேர்வதில்லை. மேலும் தேர்தல் நேரத்தில் வாக்கு சேகரிக்க வரும் சட்டமன்றம், நாடாளுமன்றம் மற்றும் உள்ளாட்சி தேர்தலுக்கு வரும் வேட்பாளர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றி தருகிறோம் என வாக்குறுதி அளிக்கின்றனர்.

    ஆனால் தேர்தல் முடிந்தால் திரும்பிக்கூட பார்ப்பதில்லை. நாங்கள் கோரிக்கையுடன் சென்றாலும் அவர்களை சந்திக்க முடியவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர். மேலும் இது குறித்து ஏரியூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பழனிச்சாமி கூறும்போது: ஏரியூர் ஒன்றிய பகுதியில் உள்ள மலைவாழ் மக்கள் அனைவருமே புறக்கணிக்கப்படுகிறார்கள் மலைவாழ் மக்கள் கேட்கும் நியாயமான கோரிக்கையான சாலை வசதி, மின்சார வசதி, குடிநீர் வசதி, இதையே எங்களால் செய்து கொடுக்க முடியவில்லை. மாவட்ட நிர்வாகம் நிதி பற்றாக்குறை என கூறி வருகிறது என்றார்.

    சுதந்திரம் பெற்று காலங்கள் கடந்தாலும் மலை கிராம மக்களுக்கு இன்னமும் அடிப்படை வசதிகளுக்காக எதிர்பார்த்து காத்து கிடக்கின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் இந்த மலைக்கிராம மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    • புதியம்புத்தூரில் 75 ஆண்டுகளுக்கு முன்பு வாரச்சந்தை சி.எஸ்.ஐ. சேகர சபையால் தொடங்கப்பட்டது.
    • வாரத்திற்கு ரூ.80 லட்சத்திற்கும் குறையாமல் ஆடு விற்பனை நடைபெற்று வருகிறது.

    புதியம்புத்தூர்:

    புதியம்புத்தூரில் 75 ஆண்டுகளுக்கு முன்பு வாரச்சந்தை சி.எஸ்.ஐ. சேகர சபையால் தொடங்கப்பட்டது.

    வாரம் தோறும் வியாழக்கிழமை கூடும் இச்சந்தையில் எல்லா பொ ருட்களும் பொது மக்கள் வாங்கிசெல்வார்கள். சுற்றுவட்டார கிராமமக்கள் ஒரு வாரத்திற்கு தேவையான பொருட்களை சந்தையில் வாங்கி செல்வார்கள்.

    நாளடைவில் மற்ற பொருட்கள் விற்பனை செய்யாமல் ஆடுகள் மட்டு மே விற்பனைக்கு வந்தன. வாரந்தோறும் இங்கு 2 ஆயிரம் ஆடுகளுக்கு குறை யாமல் விற்பனைக்கு வரும்.

    வாரத்திற்கு ரூ.80 லட்சத்திற்கும் குறையாமல் ஆடு விற்பனை நடைபெற்று வருகிறது. இதில் ஆடு ஒன்றுக்கு சந்தை நுழைவு கட்டணமாக ரூ.40 சந்தை குத்தகைதாரர் வசூல் செய்கிறார். இந்நிலையில் இந்த சந்தையில் அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி இல்லை. கழிப்பிட வசதிகள் கிடையாது. குறிப்பாக மழை காலங்களில் சந்தை சேறும், சகதியுமாக உள்ளது என புகார் எழுந்துள்ளது.

    இதுகுறித்து வியாபாரி கள், பொதுமக்கள் சார்பில் கூறுகையில், இந்த சகதி க்குள் நின்று தான் வியா பாரிகள் ஆடுகளை விற்ப னை செய்ய வேண்டும்.

    உடனடியாக சந்தை வளாகத்திற்குள் சரல் மண் அடித்து அங்கு நிலவி வரும் சுகாதாரக் கேட்டை சரி செய்ய வேண்டும். சந்தைக்கு வரும் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி உடனடியாக குடிநீர் மற்றும் கழிப்பிட வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்றனர்.

    • மழைக்காலங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கி இருப்பதால் சுகாதாரமற்ற சூழல் ஏற்படுகிறது.
    • மாநகராட்சி நிர்வாகத்திடம் முறையிட்ட பொழுது நேரில் வந்து பார்த்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.

    கோவை:

    கோவை உக்கடம் 86-வது வார்டு ரேஸ்மா கார்டன் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இது குறித்து அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:-

    எங்கள் பகுதியில் போதிய அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என கூறி மாநகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தோம்.

    உக்கடம் பகுதியில் உள்ள மாநகராட்சி கழிவுநீர் பண்ணையில் இருந்து தண்ணீர் செல்வதற்கான பாதையில் உடைப்பு ஏற்பட்டு, சாலைகளில் அடிக்கடி தண்ணீர் தேங்கி நிற்கிறது.

    மழைக்காலங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கி இருப்பதால் சுகாதாரமற்ற சூழல் ஏற்படுகிறது. இதனால் உடல் பாதிப்பு ஏற்படுகிறது.

    மாநகராட்சி நிர்வாகத்திடம் முறையிட்ட பொழுது நேரில் வந்து பார்த்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். ஆனால் தற்போது வரை அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகள் நடக்காமல் மந்த கதியில் உள்ளது.

    எனவே நிர்வாகம் பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தியும், காலதாமதம் செய்வதை கண்டித்தும் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் புதுநகரில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • ஆர்ப்பாட்டத்தில், புதுநகர், வார்க்கால் ஓடை பகுதியில் பகுதியில் முறையான வடிகால், பல்நோக்கு சமுதாய நலக்கூடம் இல்லாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

    புதுச்சேரி:

    பாகூர் தொகுதிக்குட்பட்ட கன்னியக்கோவிலை அடுத்துள்ள புதுநகர் பகுதியில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    இங்கு கழிவு நீர் வடிகால் வாய்க்கால், சமுதாய நலக்கூடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இந்நிலையில், இக்கோரிக்கையை வலியுறுத்தி, அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், பாகூர் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் புதுநகரில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பாகூர் தொகுதி துணைச் செயலாளர் தாயப்பன் தலைமை தாங்கினார். பாகூர் தொகுதி வட்டார காங்., தலைவர் கோபு, இந்திய மக்கள் பாதுகாப்பு சக்தி கழக தலைவர் அரிக்கி ருஷ்ணன், வார்க்கால்ஒடை முருகன், பழங்குடி விடுதலை இயக்க மாநில செயலாளர் ஏகாம்பரம் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

    ஆர்ப்பாட்டத்தில், புதுநகர், வார்க்கால் ஓடை பகுதியில் பகுதியில் முறையான வடிகால், பல்நோக்கு சமுதாய நலக்கூடம் இல்லாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

    இது சம்பந்தமாக புதுச்சேரி அரசு பொதுப்பணித்துறை, சுகாதாரத்துறை, சட்டமன்ற உறுப்பினர் மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து நிர்வாகம் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பப்பட்டது.

    இந்த போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், காங்கிரஸ் பிரமுகர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.


    • பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளான குடிநீர், உணவு சமைப்பதற்கான இடம் , கழிப்பிட வசதி செய்ய வலியுறுத்தி இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையருக்கு புகார் மனு அனுப்பப்பட்டது.
    • அதன் நகல்களை குற்றாலத்தில் உள்ள உதவி ஆணையர் அலுவலகம் மற்றும் குற்றாலநாதர் சுவாமி கோவில் அலுவலகத்தில் உள்ள உதவி ஆணையரிடமும் வழங்கப்பட்டது.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட பாரதீய ஜனதா கட்சியின் ஆன்மீகம் மற்றும் ஆலயம் மேம்பாட்டு பிரிவு மாவட்ட தலைவர் வெங்கடாசலம் தலைமையில் குற்றாலநாதர் சுவாமி கோவிலுக்கு சொந்தமான காலி யிடங்களில் சபரிமலை அய்யப்ப சீசனை முன்னி ட்டு கடை நடத்து வதற்கான ஏலத்தினை முறைப்படுத்திட வலியுறுத்தியும், ஏற்கனவே தீ விபத்து ஏற்பட்ட பகுதிகளில் மீண்டும் கடை அமைக்க நடவடிக்கை எடுக்க கூடாது என்றும், வரக்கூடிய பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளான குடிநீர், உணவு சமைப்ப தற்கான இடம் , கழிப்பிட வசதி செய்ய வலியுறுத்தியும் இந்து சமய அறநிலை யத்துறை இணை ஆணை யருக்கு புகார் மனு அனுப்பப்பட்டது.

    அதன் நகல்களை குற்றாலத்தில் உள்ள உதவி ஆணையர் அலுவலகம் மற்றும் குற்றாலநாதர் சுவாமி கோவில் அலுவல கத்தில் உள்ள உதவி ஆணை யரிடமும் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் ஆன்மீகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு நிர்வாகிகள் தென்காசி நகர தலைவர் முத்துராஜ், நகரச் செய லாளர் ராஜா, தென்காசி தெற்கு ஒன்றிய தலைவர் பேச்சி முத்து மற்றும் ஊடக ப்பிரிவு மாவட்ட தலை வர் செந்தூர் பாண்டியன், முன்னாள் பேரூராட்சி மன்ற உறுப்பினர் அசோக் பாண்டியன், பாரதீய ஜனதா கட்சி முன்னாள் ஒன்றிய பொதுச்செயலாளர் பிலேவேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு கிராம சபைக் கூட்டம் நடந்தது.
    • ஊராட்சிக்கு தேவையான அடிப்படை வசதிகள் நிறைவேற்றி தரப்படும்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டாரத்திற்குட்பட்ட திருவெண்காடு ஊராட்சியில் காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் சிறப்பு பார்வையாளராக அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கலந்துகொண்டார்.

    இக்கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் மகாபாரதி, மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் செ.ராமலிங்கம் , சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர், உமாமகேஸ்வரி சங்கர் முன்னிலை வகிக்க, திருவெண்காடு ஊராட்சிமன்ற தலைவர்.சுகந்தி நடராஜன் தலைமை வகித்தார்.

    இக்கூட்டத்தில், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தெரிவித்ததாவது:

    முதலமைச்சர் கிராம சாலை திட்டத்தினை செயல்படுத்தி எல்லா சாலைகளையும் மேம்படுத்தி வருகிறார்.

    அந்த அடிப்படையில் முதல்வரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் வனபாதி தாமரைகுளம் ரோடு ரூ.49 லட்சம் மதிப்பிலும், தென்பாதி சாலை ரூ.32 லட்சம் மதிப்பிலும், திருவெண்காடு பாத்தம்பள்ளி சாலை ரூ.40 இலட்சம் மதிப்பிலும், பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது.

    ஊராட்சிக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர மாவட்ட கலெக்டர் மூலமாக தனியாக அலுவலர் நியமிக்கப்பட்டு 6 மாத காலத்திற்குள் நிறைவேற்றி தரப்படும்.

    இந்த கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

    நூறு நாள் வேலை நாட்களை அதிகப்படுத்த நடவடிக்கை மேற்கொ ள்ளப்படும்.

    அதேபோல் ஒவ்வொரு வீட்டிலும் டெங்கு பரவாமல் தடுக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். டெங்கு என்ற பெரிய கொடிய நோய் இன்று எங்கும் பரவக்கூடிய சூழ்நிலை உள்ளது.

    இது பரவாமல் நாம் கவனமாக இருக்க வேண்டும். வருவதற்கு முன் இதை நாம் தடுக்க வேண்டும். ஆகவே நாம் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

    இந்த கிராம சபை கூட்டத்திலே பிளாஸ்டிக் பயன்படு த்துவ தை தவிர்க்க வேண்டும்.

    அண்ணா பிறந்த நாள் அன்று யாரும் செயல்படுத்த முடியாத 1 கோடியே 6 இலட்சத்து 50 ஆயிரம் குடும்ப தலைவிகளுக்கு மாதா மாதம் ரூ.1000 வழங்குகின்ற கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை செயல்படுத்தி காட்டியவர் நம் முதல்வர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மு.மணிமேகலை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை திட்ட இயக்குநர் ஸ்ரீலேகா தமிழ்செல்வன், மயிலாடு துறை மாவட்ட கூட்டுறவு தலைவர் ஞானவேலன், சீர்காழி ஒன்றியக்குழு தலைவர்.கமலஜோதி தேவேந்திரன், ஒன்றியக்குழு துணைத்த லைவர் உஷா நந்தினி பிரபாகரன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பி னர்கள் ஆனந்தன், தியாக விஜேஸ்வரன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பஞ்சுகுமார், ஜான்சி ராணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சரவணன், இளங்கோவன், பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    • 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர்.
    • 1 கிலோமீட்டர் அளவிற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    கடலூர்:

    விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லூரியில் ஆதிதிராவிடர் நல விடுதி மற்றும் பிற்படுத்தப்பட்ட விடுதியில் சுமார் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். இந்நிலையில் விடுதிகளில் உணவு, குடி நீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டு கடந்த சில தினங்களுக்கு முன்பு விருத்தாசலம் சப் கலெக்டரிடம் மனு அளித்தனர், மனுவை பெற்றுகொண்டு விரைவில் தீர்வு காணப்படும் என்று கூறியும் இதுவரை நடவடிக்கை எடுக்காததால் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து விடுதி மாணவ ,மாணவிகள் விருத்தாசலம் உளுந்தூர்பேட்டை சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த காவல்துறையினரிடம் மாணவர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 1 கிலோமீட்டர் அளவிற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின்னர் போலீசார் பேச்சுவார்த்தையைத் தொ டர்ந்து மாணவ,மாணவிகள் கலைந்து சென்றனர்.

    • சாலை, குடிநீர் உள்பட எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை.
    • ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஆகியவற்றை திரும்ப ஒப்படைப்போம்.

     அரவேணு,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கூக்கல்தொரை ஊராட்சியில் உள்ளது ஜீவா நகர். இந்த பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகிறார்கள்.

    இந்த பகுதியில் சாலை, குடிநீர் உள்பட எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை. இந்த பகுதியானது வனத்தையொட்டி இருப்பதால் வனவிலங்குகள் நடமாட்டமும் உள்ளது. இரவு நேரங்களில் தெரு விளக்குகள் இல்லாதால், வனவிலங்குகள் வருவது தெரியாது. இதனால் சில சமயங்களில் வனவிலங்குகள் தாக்கும் சம்பவமும் நிகழ்கிறது.

    தங்கள் பகுதிக்கு அடிப்படை வசதிகள் கேட்டு, பொதுமக்கள் ஊர் தலைவர் அய்யப்பன் தலைமையில் கலெக்டர் அலுவலகத்திலும் மனு அளித்தனர். ஆனால் மனு அளித்து இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே எங்கள் பகுதிக்கு அடிப்படை வசதி கேட்டு, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஆகியவற்றை திரும்ப ஒப்படைக்க போவதாகவும், இது தொடர்பாக முதல்-அமைச்சரிடம் முறையிட உள்ளதாகவும் மக்கள் தெரிவித்தனர்.

    • ஆண்டிபட்டியில் மாலை நேரத்தில் இருள்சூழ்ந்து காணப்படுவதால் கிராம மக்கள் ரெயில் நிலையத்தை கடந்து செல்ல அச்சம் அடைந்து வருகின்றனர்.
    • இதற்கு தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ஆண்டிபட்டி:

    மதுரை-போடி வரை அகல ரெயில் பாதை பணிகள் முடிந்து கடந்த 15-ந் தேதி முதல் போடியில் இருந்து மதுரை, சென்னைக்கு ரெயில்கள் இயக்கப்படுகிறது.

    தேனி மாவட்டத்தின் நுழைவு வாயிலாக உள்ள ஆண்டிபட்டி பகுதி மக்கள் இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 11 ஆண்டுகளுக்கு பின்னர் ரெயில் வசதி ஏற்படுத்தப்பட்டதால் ஆர்வமுடன் பயணித்து வருகின்றனர்.

    மதுரையில் இருந்து தினசரி காலை 9.24 மணிக்கும், சென்னையில் இருந்து வாரம் 3 முறை இயக்கப்படும் குளிர்சாதன விரைவு ரெயில் காலை 8.20 மணிக்கும் ஆண்டிபட்டிக்கு வருகிறது.

    இதேபோல் மதுரைக்கு மாலை 6.34 மணிக்கும், சென்னைக்கு இரவு 9.10 மணிக்கும் ரெயில்கள் திரும்பி செல்கின்றன. இந்தநேரங்கள் தவிர மற்ற நேரங்களில் ரெயில் நிலையம் பூட்டப்படுகிறது. ஆண்டிபட்டி ரெயில் நிலையத்தை கடந்து ஏராளமான பொதுமக்கள் கிராமங்களுக்கு சென்று வருகின்றனர்.

    ஆனால் மின் விளக்கு, குடிநீர் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் இல்லை. குறிப்பாக மாலை நேரத்தில் இருள்சூழ்ந்து காணப்படுவதால் கிராம மக்கள் ரெயில் நிலையத்தை கடந்து செல்ல அச்சம் அடைந்து வருகின்றனர். மேலும் வெளியூர்களில் இருந்து முன்கூட்டியே வரும் பயணிகள் ரெயில் நிலையம் பூட்டப்பட்டு ள்ளதால் வெளியிலேயே காத்திருக்கும் அவல நிலை உள்ளது.

    இது குறித்து ரெயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடம் பலமுறை புகார் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பல ஆண்டுகளுக்கு பிறகு ஆண்டிபட்டி பகுதியில் ரெயில் சேவை தொடங்கப்பட்டது மகிழ்ச்சி அளித்தாலும் ரெயில் நிலையத்தில் பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது.

    எனவே இதற்கு தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மதுரை மாநகராட்சியில் அடிப்படை வசதிகளை உடனுக்குடன் நிறைவேற்ற வேண்டும்.
    • கமிஷனரிடம், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கோரிக்கை மனு அளித்துள்ளார்.

    மதுரை

    மதுரை மாநகராட்சியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தர வலியுறுத்தி முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான செல்லூர் ராஜூ எம்.எல்.ஏ., கமிஷனர் பிரவீன்குமாரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    மதுரை மாநகராட்சி 62-வது வார்டு முதல் 69-வது வார்டு வரை கழிவுநீர் பிரச்சினை உள்ளது. முறையாக பராமரிக்கா ததால் மேற்கண்ட வார்டுகளில் உள்ள சாலை மற்றும் தெருக்களில் கழிவுநீர் ஆறாக ஓடுகிறது. இதே போல் 72-வது வார்டான பைக்காரா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் பொதுமக்கள் கடும் அவதியடைகின்றனர்.

    எனவே முத்துப்பட்டியில் உள்ள கழிவுநீரேற்று நிலையத்தை மேம்படுத்தி புனரமைக்க வேண்டும். அதிக விசைத்திறன் கொண்ட மோட்டார்களை பயன்படுத்தி புதிய பம்பிங் ஸ்டேசன் அமைக்க வேண்டும்.

    காளவாசல் முதல் சம்மட்டிபுரம் பகுதிகளில் கழிவுநீர் பிரச்சினையை சரிசெய்ய வேண்டும். மாநகராட்சியில் உள்ள 5 மண்டலங்களுக்கும் நவீன கழிவுநீர் அகற்றும் வாகனத்தை வாங்க வேண்டும். இதனால் பாதாள சாக்கடை அடைப்பு பிரச்சினை குறையும்.

    கடந்த 2 ஆண்டுகளில் மதுரை மாநகராட்சியில் ரூ.717.10 கோடி செலவில் பணிகள் மேற்கொள்ளப் பட்டு உள்ளதாக நகராட்சி துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். அதன் விபரங்களை வழங்க வேண்டும். மதுரை மாநகராட்சியில் சாலையில் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விபத்துக்கள் ஏற்படுகிறது. எனவே சாலைகளை செப்பனிட வேண்டும்.

    மாநகராட்சியில் தெருவிளக்குகள் சரிவர எரிவதில்லை. இதனால் இருளில் மூழ்கும் நிலை உள்ளது. எனவே தெரு விளக்குகளை பராமரித்து உடனுக்குடன் சரி செய்ய வேண்டும். சுகாதார பணியாளர்கள் பற்றாக்குறையால் குப்பைகள் மலைபோல் தேங்குகிறது. எனவே உரிய பணியாளர்களை நியமித்து குப்பையில்லா நகரமாக மாற்ற வேண்டும்.

    வைகை ஆற்றில் ஆகாய தாமரையை அகற்ற வேண்டும். பனையூர் வாய்க்காலை சீரமைக்க வேண்டும். மாரியம்மன் தெப்பக்குளத்தில் கழிவுநீர் கலக்காத வண்ணம் பாதுகாக்க வேண்டும். தமுக்கத்தில் உள்ள வளாக கட்டிடத்திற்கு வாடகை பல மடங்கு அதிகரித்துள்ளது. எனவே அதனை குறைக்க வேண்டும். மதுரை மாநகராட்சியில் அடிப்படை வசதிகளை போக்கால அடிப்படையில் உடனுக்குடன் நிறைவேற்ற வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • 5 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் பக்கத்து கிராமத்திற்கு செல்ல வேண்டிய நிலை இருப்பதால் பெ ற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அங்கன்வாடி மையத்திற்கு அனுப்பாமல் உள்ளனர்.
    • அரசின் இலவச ஆடு, மாடுகள் தொடங்கி 100 நாட்கள் வேலைத்திட்டம், அரசின் தொகுப்பு வீடு, முறையான குடிநீர் வசதி செய்யவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

    விளாத்திகுளம்:

    தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ளது தொப்பம்பட்டி என்ற கிராமம். இந்தக் கிராமத்தில் சாலை வசதி, மின்விளக்கு, மயானம், கழிவுநீர் கால்வாய், அங்கன்வாடி மையம் என அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக தொப்பம்பட்டி கிராமமக்கள் கூறியதாவது:-

    எங்கள் ஊரின் பெயர் பலகை கூட இல்லை. மெயின் ரோட்டில் இருந்து தொப்பம்பட்டி கிராமத்திற்கு செல்வதற்கான சாலை பெயர்ந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இந்த சாலையில் தான் கிராம மக்கள் சென்று வருகின்றனர். அதிலும், மின்விளக்கு வசதி எதுவும் இதுவரை செய்து தரப்படாததால் இரவு நேரங்களில் ஒருவித அச்சத்துடனே சென்று வருகின்றனர். இக்கிராமத்தில் கால்வாய் வசதி தற்போது வரை செய்து தரப்படாமல் உள்ளது.

    கிராமத்து குழந்தைகளுக்கு ஒரு அங்கன்வாடி மையம் கூட கட்டப்படாததால், 5 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் பக்கத்து கிராம த்திற்கு செல்ல வேண்டிய நிலை இருப்பதால் பெ ற்றோர்கள் தங்கள் குழந்தை களை அங்கன்வாடி மையத்திற்கு அனுப்பாமல் உள்ளனர். இங்குள்ள மக்கள் ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் வீட்டி லும், ஓட்டு வீடுகளிலுமே தங்களது வாழ்க்கையை நடத்து கின்றனர்.

    தொப்பம்பட்டி கிராம மக்கள் தங்கள் கிராமத்திற்கு கால்வாய் வசதி, மின் விளக்கு, சாலை வசதி, நூலகம், மயானம், பொது குளியல் தொட்டி உள்ளிட்ட மக்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தரும்படி ஊராட்சிமன்றத் தலை வரிடம் பலமுறை கோரிக்கை வைத்தும், நிதியில்லை என கூறி அடிப்படை வசதிகளை நிறைவேற்றாமல் உள்ளார்.

    மேலும் அரசின் இலவச ஆடு, மாடுகள் தொடங்கி 100 நாட்கள் வேலைத்திட்டம், அரசின் தொகுப்பு வீடு, முறையான குடிநீர் வசதி என எதுவுமே செய்துதராமல் தவிர்த்து வருகிறார். அரசு அதிகாரிகளும் எங்கள் கிராமத்தை புறக்கணித்து வருகிறார்கள்.

    குறிப்பாக அடிப்படை வசதிகள் கூட இல்லாத தொப்பம்பட்டி கிராமத்திற்கு திருமண சம்பந்தம் பேச வரும் பிற ஊர்களை சேர்ந்த வர்கள் பெண் கொடுக்கவும், பெண் எடுக்கவும் தயக்கம் காட்டி வருகின்றனர். எனவே அடிப்படை வசதிகளை உடனடியாக நிறைவேற்றி தர அதிகாரிகள் முன் வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினர்.

    • பல்வேறு காய்கறி மற்றும் பழ வியாபாரிகள் மற்றும் விவசாயி கள், தங்களின் பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர்.
    • சேறும்- சகதியிலும், கடும் வெயிலில் வியாபாரம் செய்ய வேண்டியுள்ளது.

    புதுச்சேரி:

    காரைக்காலில் திருநள்ளாறு சாலையில், நகராட்சிக்கு சொந்த மான திடலில் ஞாயிற்றுக்கிழமை தோறும் வாரசந்தை செயல்பட்டு வருகிறது. இந்த வார சந்தை யில், காரைக்கால் மற்றும் நாகப் பட்டினம், தஞ்சாவூர், கும்ப கோணம், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பல்வேறு காய்கறி மற்றும் பழ வியாபாரிகள் மற்றும் விவசாயி கள், தங்களின் பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். இந்த சந்தையில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், காய்கறி, பழம் உள்ளிட்ட பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். மிகப்பெரிய திடலான இங்கு வெளியூர் மற்றும் உள்ளூர் வியாபாரிகள் வாரந்தோறும் கூடுகின்றனர். ஆனால், இவர்களில் சுமார் 80 பேர் மட்டும் நிழலில் வியாபாரம் செய்ய நகராட்சி மேற்கூறை போட்டுள்ளது. மற்றவர்கள் சமம் செய்யப்படாத மண்ணில், சேறும்- சகதியிலும், கடும் வெயிலில் வியாபாரம் செய்ய வேண்டியுள்ளது.

    அதே சமயம், நகராட்சி சார்பில், வியாபாரிகளிடம் ரூ.100 முதல் 400 வரை கடைக்கு ஏற்ப கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. ஆனால், நகராட்சி வியாபாரிகளிடம் வசூல் செய்யும் பணத்தில், அவர்களுக்கு தேவையான நிழல் பந்தல், குடிநீர், கழிவறை, மின்விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதி களை செய்து தருவதில்லை. இதனால், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகி வருகின்ற னர். கடந்த ஆண்டு மழைக்கா லத்தில் வியா பாரிகள் மற்றும் பொதுமக்கள் சேரும், சகதியுமான சந்தையில் சொல்லமுடியாத இன்னலுக்கு ஆளாகினர். இதனால் அரசியல் கட்சி மற்றும் சமூக ஆர்வலர்கள் கண்டன குரல் எழுப்பியதோடு, பல்வேறு போராட்டஙக்ளும் நடைபெற்றது. இதன் எதிரொலியாக, வாரச்சந்தை அருகில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூட்டத்திற்கு, சில மாதங்கள் தற்காலிகமாக மாற்றப்பட்டது. பிறகு மீண்டும் பழைய இடத்திற்கே மாற்றப்பட்டு, தற்போதுவரை எந்தவித மேம்பாடு இல்லாத திடலில்தான் இயங்கி வருகிறது. இன்னும் சில மாதங்களில் மழைக்காலம் தொடங்கவுள்ளது. அதற்குள், வாரசந்தையை, மேடாக்கி அல்லது, சிமெண்ட் தரை மற்றும் நிழல் பந்தலை ஏற்படுத்தி, வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்துதர நகராட்சி நிர்வாகதிற்கு, மாவட்ட நிர்வாகம் அழுத்தம் தரவேண்டும் என்று வியாபாரிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×