என் மலர்
நீங்கள் தேடியது "basic facilities"
- செட்டிபாளையம் சாலையில் தனியார் மண்டபத்திலும் பகுதி நகரசபை கூட்டங்கள் நடைபெற்றது.
- பொதுகழிப்பறையை சுகாதாரமான முறையில் அமைத்து தர வேண்டும்.
பல்லடம் :
பல்லடம் நகராட்சியில் வார்டு எண் - 2 சேடபாளையம் நியாய விலை கடை அருகிலும், வார்டு எண் - 3 டி. இ.எல். சி பள்ளி வளாகத்திலும், வார்டு எண் - 5 ல் குலாலர் அங்காளம்மன் கோயில் மண்டபத்திலும், வார்டு -13 ல் செட்டிபாளையம் சாலையில் தனியார் மண்டபத்திலும் பகுதி நகரசபை கூட்டங்கள் நடைபெற்றது. இந்த கூட்டங்களுக்கு நகராட்சி தலைவர் கவிதாமணி ராஜேந்திரகுமார் தலைமை வகித்தார். நகராட்சி ஆணையாளர் விநாயகம், முன்னிலை வகித்தார். நகராட்சி பொறியாளர் ஜான்பிரபு, வருவாய் ஆய்வாளர் பிரகாஷ், சுகாதார ஆய்வாளர் சங்கர், அலுவலக மேலாளர் சண்முகராஜா, தலைமை எழுத்தர் சசிக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டங்களில், அந்தந்த வார்டுகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு அடிப்படைப் பிரச்சினைகளான குடிநீர் விநியோகம், தெருவிளக்கு, தார் சாலை, உள்ளிட்டவற்றை தீர்க்கக்கோரி கோரிக்கை மனுக்களை அளித்தனர். பொதுமக்கள் தரப்பில் கொடுத்த கோரிக்கை மனுக்கள் விபரம் வருமாறு:-
வார்டு எண்3ல் நாரணாபுரம் பகுதிக்கு புதிய ரேசன் கடை அமைத்தல் மற்றும் அங்கன்வாடி மையத்திற்கு சுற்றுச்சுவர் அமைத்தல், பொதுமக்களுக்கு விளையாட்டு மைதானம் அமைத்தல், பொதுகழிப்பறையை சுகாதாரமான முறையில் அமைத்து தர வேண்டும். வார்டு எண்.2ல் அங்கன்வாடி மையம் அருகில் குப்பைகளை கொட்ட அனுமதிக்கூடாது. சேடபாளையம்,தண்ணீர்பந்தல் முதல் அருள்புரம் வரை செல்லும் நெடுஞ்சாலை துறைக்கான தார் சாலையை அகலப்படுத்திட வேண்டும். சேடபாளையம் பள்ளி அருகில் வேகத்தடை அமைக்க வேண்டும். சேடபாளையம் பகுதியில் தெருநாய் தொல்லை இல்லாமல் செய்ய வேண்டும்.வார்டு எண்.5ல் டி.எம்.டி நகர் பகுதியில் மழைநீர் வடிகால் அமைத்தல் மற்றும் பெயர் பலகை அமைத்தல், மண் சாலையை தார் சாலையாக மாற்ற வேண்டும். தெரு நாய் தொல்லையை அகற்ற வேண்டும்.
அரசு கல்லூரி எதிரே பஸ் நிறுத்துமிடத்தில் பஸ்கள் நின்று செல்ல வேண்டும். அம்மாபாளையம் பிரிவில் பேருந்து நிழற்குடை அமைக்க வேண்டும். மங்கலம் சாலையிலிருந்து ராயர்பாளையம் பகுதி வரை பி.ஏ.பி. வாய்க்கால் மண்பாதையை தார் சாலையாக மாற்றி தர வேண்டும். வார்டு எண் 13ல் செட்டிபாளையம் சாலை பாலாஜி நகர் பகுதியில் ரேசன் கடை புதியதாக அமைக்க வேண்டும். அருள்ஜோதி நகர்,ராஜ கணபதி நகர் பகுதியில் தெருநாய் தொல்லைக்கு நிவர்த்தி செய்ய வேண்டும். கோவை -செட்டிபாளையம் சாலை சந்திப்பில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் உள்ளிட்ட குடிநீர் வசதி, மழை நீர் வடிகால் வசதி, தெருவிளக்கு வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் கேட்டு பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
- திருமங்கலம் நகராட்சியில் அடிப்படை வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும்.
- கிராமசபை கூட்டத்தில் தலைவர் ரம்யா முத்துக்குமார் உறுதியளித்துள்ளார்.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சியில் முதல் பகுதி சபா கூட்டம் 5 மற்றும் 6-வது வார்டுகளை இணைத்து கங்கன் காலனியில் காளியம்மன் கோவில் அருகே நடைபெற்றது.
நகராட்சி தலைவர் ரம்யா முத்துக்குமார் தலைமை வகித்தார். ஆணையாளர் டெரன்ஸ் லியோன், நகராட்சி துணைத்தலைவர் ஆதவன் அதியமான் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக தி.மு.க. நகர செயலாளர் ஸ்ரீதர், நகராட்சி கவுன்சில் குழுத்தலைவர் ஜஸ்டின் திரவியம் கவுன்சிலர்கள் திருக்குமார், வீரக்குமார், நகர தி.மு.க. நிர்வாகிகள் முத்துக்குமார், ஹரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பகுதி சபா கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள் தங்களது வார்டு பகுதியில் கூடுதல் குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும், தெருவிளக்கு வசதி வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி பேசினர். இதற்கு பதில் அளித்து பேசிய நகராட்சி தலைவர் ரம்யாமுத்துக்குமார், கடந்த 10 ஆண்டுகளாக அ.தி.மு.க. ஆட்சியில் போதுமான அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை. நாங்கள் பொறுப்பேற்று 6 மாதங்கள் தான் ஆகிறது. விரைவில் அடிப்படை வசதிகளை உடனுக்குடன் பூர்த்தி செய்வோம் என தெரிவித்தார். இதனை த்தொடர்ந்து பொதுமக்கள் நகராட்சி ஆணையாளர் டெரன்ஸ் லியோனிடம் மனுக்களை கொடுத்தனர்.
இதே போல் 7-வதுவார்டு 8-வது வார்டு மற்றும் 11-வது வார்டு மற்றும் 12-வது வார்டுகளிலும் நேற்று நகராட்சி தலைவர் தலைமையில் பகுதி சபா கூட்டம் நடைபெற்றது. இந்த வார்டுகளிலும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகள் குறித்து பேசினர்.
- அடிப்படை வசதிகள் தயாராக இருப்பதை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும்.
- மழை வெள்ளத்தினால் பாதிக்கப்படும் மக்களை காப்பாற்றுவதற்காக பயன்படுத்தப்படும் பொருட்களின் இருப்பை பார்வையிட்டார்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் குன்னூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ள பாதுகாப்பு உபகரணங்களை கலெக்டர்அம்ரித் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:-
நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது தொடர்பாக வருவாய்த்துறை, காவல்துறை, உள்ளாட்சித்துறை, தோட்டக்கலைத்துறை, மின்சார வாரியம், தீயணைப்புத்துறை, நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை குடிமை பொருள் வழங்கல் உள்ளிட்ட துறைகளின் அலுவலர்கள் இணைந்து பணியாற்ற 24 மணி நேரமும் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
ஊட்டி, குன்னூர் உள்பட 6 தாலுகாக்களுக்கு உட்பட்ட இடங்களில் மழைக்காலங்களில் அதிக பாதிப்பு எற்படக்கூடிய இடங்களை நேரில் பார்வையிட்டு, பாதிப்பு ஏதேனும் ஏற்படும் போது உடனடியாக அலுவலர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தாழ்வான பகுதிகள் மற்றும் நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை தங்க வைக்க நிவாரண முகாம்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.அங்கு பொதுமக்களுக்கு தேவையான உணவு பொருட்கள் இருப்பில் வைத்திருக்க வேண்டும்.மேலும் அடிப்படை வசதிகள் தயாராக இருப்பதை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும். என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக இயற்கை இடர்பாடுகளினால் சாலைகளில் மரம் விழுந்தால், உடனடியாக அகற்ற பயன்படுத்தும் எந்திரங்கள் மற்றும் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்படும் மக்களை காப்பாற்றுவதற்காக பயன்படுத்தப்படும் பொருட்களின் இருப்பை பார்வையிட்டார்.
ேமலும் உபகரணங்கள் இயங்கும் நிலையில் உள்ளதா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின் போது குன்னூர் ஆர்.டி.ஓ. (பொறுப்பு) கண்ணன், குன்னூர் நகராட்சி தலைவர் ஷீலா கேத்ரின், குன்னூர் தாசில்தார் சிவக்குமார், கேத்தி பேரூராட்சி செயல் அலுவலர் நடராஜன் மற்றும் அரசுத்துறை பலர் கலந்து கொண்டனர்.
- ஸ்ரீவில்லிபுத்தூர் 32-வது வார்டு பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தர கோரிக்கை விடுக்கப்பட்டது.
- சாக்கடை நீர் வெளியே செல்ல முடியாதபடி சிக்கலான சூழ்நிலை உள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி 32-வது வார்டு மடவார் வளாகம் பகுதிக்குட்பட்ட தன்யா நகர்பகுதியில் மின்விளக்கு வசதி, குடிநீர் வசதி, மற்றும் சாலை வசதிகள் பிரதான குறைகளாக உள்ளது என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் 500 குடியிருப்புகள் இருக்கும் தன்யா நகருக்கு செல்வதற்கும் தன்யா நகரிலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர்ப்பகுதிக்கு செல்வதற்கும் ஒரே ஒரு பாதை வசதி மட்டுமே உள்ளது. தன்யா நகரில் சில இடங்களில் 20 அடி ரோடு வசதியும், பல தெருக்களில் 16 அடி அகலம் கொண்ட ரோடு வசதியும் மட்டுமே உள்ளது.
குறிப்பாக தன்யாநகர் உள்ளே நுழையும் சுமார் 50 அடி நீளமுள்ள பாதையில் அகலமானது 10 அடிக்கும் குறைவாக உள்ளதால் இந்த பகுதியில் வசிக்கும் குடியிருப்பு வாசிகள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே தன்யா நகருக்கு இப்பாதையை தவிர்த்து வேறு ஒரு மாற்றுப் பாதை வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
தன்யா நகர் உட்புறம் உள்ள பாரதி நகர் மற்றும் குறிஞ்சி நகர் தெருக்களுக்கு பேவர் பிளாக், மின்கம்பம், குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தேவைப்படுகிறது. 500 குடியிருப்பு உள்ள இப்பகுதிக்கு தனியாக ரேஷன் கடை கோரிக்கையும் பொதுமக்கள் விடுத்துள்ளனர்.
பூங்கா மற்றும் உடற்பயிற்சி மைதானம் தேவை என்ற கோரிக்கையும், தன்யா நகர் பகுதி முழுவதிலும் சாக்கடை நீர் வெளியே செல்ல முடியாதபடி சிக்கலான சூழ்நிலை உள்ளதால் அதையும் சரி செய்ய வேண்டும் என்ற வேண்டுகோள் வைத்துள்ளனர்.
- பள்ளி மாணவர்களுக்கான அடிப்படை வசதிகளை காலத்தோடு செய்ய தவறிவிட்டது.
- சீருடை, நோட்டு, புத்தகம் வழங்கும் பணியும் இதுவரை முழுமைபெறமால் உள்ளது.
புதுச்சேரி:
புதுச்சேரி முன்னாள் கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன், நிருபர்களிடம் கூறியதாவது:- புதுச்சேரி மாநிலத்தை மத்திய பாஜக அரசு தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. அதேபோல், புதுச்சேரியை ஆளும் என்.ஆர் காங்கிரஸ் மற்றும் பாஜக அரசு காரைக்காலை அனைத்து வகையிலும் தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. குறி ப்பாக சொல்லப்போ னால், மாநிலம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கான அடிப்படை வசதிகளை காலத்தோடு செய்ய தவறிவிட்டது. மாணவ ர்களுக்கான ஒரு ரூபாய் பஸ் வசதி முற்றிலும் கிடையாது.
சீருடை, நோட்டு, புத்தகம் வழங்கும் பணியும் இதுவரை முழுமைபெறமால் உள்ளது. நகர் மற்றும் கிராமப்புற சாலைகள் போக்கு வரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. முதல் கட்டமாக, புதுச்சேரி அரசின் கல்வித்துறையின் அலட்சியப்போக்கை கண்டித்து, காரைக்காலில், மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் சந்திரமோகன் தலைமையில் ஓரிரு நாளில், காரைக்கால் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அல்லது, கல்வித்துறை அலுவலகத்தை காங்கிரஸ் கட்சி, ஒத்த கருத்துடைய அனைத்து கட்சிகளுடன் இணைந்து முற்றுகை போராட்டத்தை நடத்த உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
- மக்களின் அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
- ரூ.1.13 கோடி மதிப்பீட்டில் பல்வேறு புதிய பணிகள்
பெரம்பலூர்:
வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் ரூ.1.13 கோடி மதிப்பீட்டில் பல்வேறு புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்து போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
ஏழை, எளிய அடித்தட்டு மக்களின் நலன்காக்கும் மகத்தான அரசாக தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு திகழ்கின்றது. மக்களின் கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலித்து அவற்றிற்கு தீர்வு காணும் வகையிலான நடவடிக்கைகளில் தனிக்கவனம் செலுத்தி செயல்படவேண்டும் என்று முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
அதனடிப்படையில் பெரம்பலுார் மாவட்டத்தில் மக்களின் தேவை அறிந்து அனைத்து அடிப்படை வசதிகளும் படிப்படியாக நிறைவேற்றப்பட்டு வருகின்றது. இன்றைய தினம் பல்வேறு திட்டங்களின் மூலம் ரூ.1.13 கோடி மதிப்பில் பல்வேறு பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. முடிவுற்ற பணிகள் மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அரசின் திட்டங்களை முழுமையாக முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லலிதா, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ராஜேந்திரன், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் பாண்டியன், பெரம்பலுார் வருவாய் கோட்டாட்சியர் நிறைமதி, வேப்பூர் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் பிரபா செல்லப்பிள்ளை, மாவட்ட ஊராட்சிகுழு துணைத்தலைவர் முத்தமிழ்செல்வி மதியழகன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் கருணாநிதி, வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சின்னப்பையன், செல்வகுமார், ஊராட்சி மன்ற தலைவர்கள் திருமாந்துறை ஒன்றிய குழு உறுப்பினர் பெரு. கருப்பையா , ஒன்றிய கவுன்சிலர் ஆண்டாள் குடியரசு, கீழப்புலியூர் சாந்தி செல்வராஜ், அசூர் செல்வி முருகேசன்,மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.
- பள்ளி மாணவ, மாணவிகள், பெற்றோர் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் சார்பில் பள்ளியை முற்றுகையிட்டு கோரிக்கை வைத்தனர்.
- நிர்வாகிகளுடன் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.
பவானி:
பவானி அருகில் உள்ள மூன்றோடு சின்னப்பெரிச்சி பாளையத்தில் பவானி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
இந்தப் பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். அதேபோல் இந்த பள்ளியின் வளாகத்தில் சத்துணவு மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது.
சத்துணவு மையக் கட்டிடம் பழுதாகிய நிலையில் புதிய கட்டிடம் கட்டித் தரக்கோரியும், அதேபோல் பள்ளியின் வளாகத்தில் உள்ள கிணற்றில் பாதுகாப்பு வசதி செய்து தரக்கோரியும் பள்ளி மாணவ, மாணவிகள், பெற்றோர் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் சார்பில் பள்ளியை முற்றுகையிட்டு கோரிக்கை வைத்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த பவானி இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி, ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்களான கோபாலகிருஷ்ணன், மாரிமுத்து, ஒன்றிய கவுன்சிலர் சதீஷ்குமார் ஆகியோர் சம்பவ இடம் சென்று கூடியிருந்த பெற்றோர் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.
இதனையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
பள்ளியில் உள்ள கிணறு தூர் வாராமல் உள்ளது. பாதுகாப்பு வசதி குறைபாடு உள்ளது. அதை நிவர்த்தி செய்து தர வேண்டும். சமையல் கூடம் புதுப்பித்து தர வேண்டும்.
அங்கன்வாடி மையத்தில் 104 குழந்தைகள் இருந்து வரும் நிலையில் உதவியாளர் ஒருவர் மட்டுமே உள்ளார். அதனால் கூடுதல் பணியாளர் நியமிக்க வேண்டும் என கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என கோரி முற்றுகையிட்டது குறிப்பிடத்தக்கது ஆகும்.
- அடிப்படை வசதிகள் இல்லை என புகார்
- ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை ரெயில் நிலையம் தென்னிந்தியாவில் மிகப்பெரிய ரெயில் நிலையங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. இந்த ரெயில் நிலையம் பல்வேறு மாநிலங்களை இணைக்கக்கூடிய முக்கிய ரெயில் நிலையங்களில் ஒன்றாக உள்ளது.
மேலும் நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட ரெயில்கள் இயக்கப்படுகிறது. இதில் நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கானோர் பல்வேறு பணிகளுக்காகவும் வியாபாரம் சம்பந்தமாகவும் பயணிகள் ரெயில் மூலம் பயணம் மேற்கொள்கின்றனர்.
இந்நிலையில் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் பயணிகள் ஓய்வு அறை, கழிவறை, குடிநீர் வசதி, கழிவு நீர் வசதி, பயணிகளின் நட மேடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் போதுமானதாக இல்லாமல் பின் தங்கிய நிலையில் இருந்து வருகிறது.
இதுகுறித்து அடிப்படை வசதிகள் மேம்படுத்த வேண்டும் என ரெயில் பயணிகளும் பொது மக்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று திருவண்ணாமலை சி.என்.அண்ணாதுரை எம்.பி., ஜோலார்பேட்டை தேவராஜி எம்.எல்.ஏ., ரெயில்வே அதிகாரிகள் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது சி.என். அண்ணாதுரை எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-
ஜோலார்பேட்டை ரெயில் நிலையம் தென்னிந்தியாவில் மிகப்பெரிய ரெயில் நிலையங்களில் ஒன்றாக உள்ளது. ரெயில் நிலையத்தில் நிழற்குடை குடிநீர் வசதி கழிவறை நடைமேடை உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் குறித்து பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு ரெயில் நிலையத்திற்கு தேவையான வசதிகள் குறித்து ரெயில்வே நிர்வாகத்திற்கும், ரெயில்வே வாரிய தலைவருக்கும் அறிக்கை சமர்ப்பிக்க ப்பட்டுள்ளது.
இதன் மூலம் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை ரெயில் நிலையங்களில் அடிப்படை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு மேம்படுத்தப்பட உள்ளது.
மேலும் ஆங்காங்கே ரெயில்வே தரைப் பாலங் களில் மழைக்காலங்களில் மழை நீர் தேங்கி பொது மக்களின் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்து வருவதால் இது குறித்த பணிகளும் நடவடிக்கைக்காக ரெயில்வே நிர்வாகத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்கான பணிகளும் ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளனர் என தெரிவித்தார்.
- அடிப்படை வசதிகள் கேட்டு கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டம் வருகிற 9-ந்தேதி நடக்கிறது.
- அடிப்படை தேவைகளை ஊராட்சி நிர்வாகம் செய்வார்களா? என்று நாவினிப்பட்டி கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
மேலூர்
மேலூர் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த நாவினிப்பட்டி ஊராட்சியில் குடிநீர், சாலை, தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தரவில்லை என்று கூறி இந்த பகுதி பொதுமக்கள் ஏற்கனவே நடந்த கிராம சபை கூட்டத்தின் போது வலியுறுத்தினர்.
மேலும் கிராமசபை கூட்டத்தில் இருந்து வெளியேறி மேலூர்- காரைக்குடி சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது பற்றிய தகவலறிந்த அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். அதன் பின்பும் நடத்தி மறியலை கைவிட செய்தனர்.
இருந்த போதிலும் தங்கள் பகுதிக்கு இன்னும் குடிநீர் முறையாக வழங்க வில்லை எனக்கூறி 6 மற்றும் 7-வது வார்டு கிராமமக்கள் சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா குழுவின் செயலாளர் சுரேஷ்குமார் தலைமையில் மாவட்டத் தலைவர் சக்திவேல், மாவட்ட துணைத் தலைவர் மெய்யர் முன்னிலையில் வருகிற 9-ந்தேதி நாவினிப்பட்டி ஊராட்சியில் அனைத்து அடிப்படை தேவைகளும் நிறைவேற்ற கோரி மேலூர் யூனியன் அலுவலகம் முன்பு காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர்.
அப்போதாவது தங்கள் பகுதிக்கு அடிப்படை தேவைகளை ஊராட்சி நிர்வாகம் செய்வார்களா? என்று நாவினிப்பட்டி கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
- தமிழ்நாடுமுஸ்லிம் முன்னேற்ற கழகம், மனிதநேய மக்கள் கட்சி மாநில தலைவர் ஜவாஹிருல்லாஹ் எம்.எல்.ஏ. உடன்குடி தேர்வு நிலை பேரூராட்சிக்கு உட்பட்ட மனிதநேய மக்கள் கட்சி கவுன்சிலரான16 -வது வார்டை பார்வையிட்டார்.
- கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தி பல்வேறு ஆலோசனைகளை நிர்வாகிகருக்கு வழங்கினார்.
உடன்குடி:
தமிழ்நாடுமுஸ்லிம் முன்னேற்ற கழகம், மனிதநேய மக்கள் கட்சி மாநில தலைவர் ஜவாஹிருல்லாஹ் எம்.எல்.ஏ. உடன்குடி தேர்வு நிலை பேரூராட்சிக்கு உட்பட்ட மனிதநேய மக்கள் கட்சி கவுன்சிலரான16 -வது வார்டை பார்வையிட்டார்.
தொடர்ந்து மக்களிடம் நேரில் சென்று கவுன்சிலரின் செயல்பாடைபற்றி கேட்டறிந்தார்.
புதுமனை மேலத்தெரு வில் உள்ள அங்கன்வாடியை விரைவில் புதுப்பித்து கட்டுவதற்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில் ராஜ் ஆகியோரிடம் கோரிக்கை மனு கொடுத்து, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதை பற்றிகூறினர்.
அப்போது அவர் பொது மக்களின் கோரிக்கையை ஏற்று உடனுக்குடன் பார்வையிட்டு விரைவில் நடவடிக்கை எடுப்பது மக்கள் பிரதிநிதியின் கடமை யாகும், நம்மை தேர்வு செய்துள்ள மக்களுக்கு நாம் என்றும் உறுதுணையாக இருந்து அவர்களது கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்என்று ஜவாஹிருல்லா கூறினார்,
மேலும், உடன்குடி தேர்வுநிலை பேரூராட்சி மன்ற தலைவர் ஹுமைரா அஸ்ஸாப் கல்லாசி சிறப்பான முறையில் உடன்குடி பேரூராட்சி மன்றத்தை செயல்படுத்தி வருவதாகவும் கூறினார்.
தொடர்ந்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தி பல்வேறு ஆலோசனை களை நிர்வாகிகருக்கு வழங்கினார்.
அப்போது, மாநில தலைமை பிரதிநிதி ஜோசப் நொலாஸ்கோ, தூத்துக்குடி மாவட்ட த.மு.மு.க. தலைவர் ஆஸாத், முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் ஆயிஷா கல்லாசி, 16-வது வார்டு கவுன்சிலர் முகம்மது ஆபித், மாவட்ட பொருளாளர் சர்தார், மாவட்ட இளைஞர் அணி செயலாளர்பரகத்துல்லா, உடன்குடி நகரத் தலைவர் அஜீஸ், ம.ம.க. நகர செயலாளர் ஹமீது, த.மு.மு.க. நகர செயலாளர்சாதிக், செய்யாது, புஹாரி, ஆசிக் ரகுமான், அத்தாது, சுஹைல், யாசர், நவாஸ், ஹாலித், தி.மு.க. கிளை செயலாளர்கள் சுபியானசம்சுதீன் மற்றும் மீராசாகிப், ஹரிஷ், அஸர், ஜகுபர், ரியாஸ் ஜாபர், இப்ராஹிம், ஜமாத்தார்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- செல்வ.பூமிநாதன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- நரேந்திரன் மாநில பொதுக்குழு உறுப்பினர் கண்டன உரையாற்றினார்.
கடலூர்:
கடலூர் மேற்கு மாவட்டம் திட்டக்குடி நகர பா.ஜ.க . சார்பில் திட்டக்குடி நகராட்சி மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் எதை யும் செய்து தராத நகராட்சி ஆணையரை பணியிடை மாற்றம் செய்யக்கோரி திட்டக்குடி பஸ் நிறுத்தத்தில் நகரதலைவர் செல்வ.பூமிநாதன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் சுரேஷ் வரவேற்று பேசினார். பொன்.பெரிய சாமி மாவட்ட தலைவர் தொழில் துறை பிரிவு முன்னிலை வகித்தார். நரேந்திரன் மாநில பொதுக்குழு உறுப்பினர் கண்டன உரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் வெளி நாடுவாழ் தமிழ் பிரிவு சேனாதிபதி, முன்னாள் பொதுச் செயலாளர் விவசாய அணி நாகராஜ், ஒன்றிய கவுன்சிலர் கொளஞ்சி, மாவட்ட செயலாளர் ஓபிசி அணிஎஸ்.ஆர். பூமிநாதன், மாவட்ட செயலாளர் கூட்டுறவு பிரிவு சக்திவேல், நகர பொதுச்செயலாளர்கள் ராமு மணிவண்ணன், நகரத் துணைத் தலைவர் அய்யாக்கண்ணு, நகரச் செயலாளர் முல்லை நாதன், நன்றி உரை சிவா மாவட்ட துணை தலைவர் விளையாட்டு மேம்பாட்டு பிரிவு உட்பட ஒன்றிய நிர்வாகிகள், நகர நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- மாதேஸ்வரா நகருக்கும் இத்திட்டத்தின்பயன் கிடைக்காமல் செய்துவிட்டார்.
- வீட்டுவரி எங்களிடம் வாங்கவும் ஆவணம் செய்துகொடுக்க கேட்டு கொள்கிறோம்.
திருப்பூர் :
திருப்பூர் பொங்கலூர் ஒன்றியத்திற்குட்பட்ட மாதேஸ்வரா நகர் கிராம மக்கள் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று ஒரு கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:- எங்களுக்கு ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் 2013-2014ல் அரசு நிலம் விலைக்கு வாங்கி, இடம் இல்லாத எங்களுக்கு வீட்டுமனை ஒதுக்கீடு செய்து பட்டா வழங்கியுள்ளது.
நாங்கள் இந்து அருந்ததியினத்தை சார்ந்த தாழ்த்தப்பட்ட வகுப்பினர் எங்களில் சிலர் சொந்த செலவில் வீடுகட்டியும், சிலர் குடிசையிலும் வாழ்ந்து வருகின்றோம். எங்களுக்கு 2019ல்நடந்த பஞ்சாயத்து தேர்தலில் தனக்கு வாக்களிக்கவில்லை என கருதிபஞ்சாயத்து தலைவர் இதுவரைவீட்டுவரி, வீட்டு எண், குடிநீர் வசதி, தெருவிளக்கு வசதி போன்ற அடிப்படைவசதிகளை செய்து கொடுக்க மறுத்துவருகின்றார். வீட்டுவரி கட்ட சென்றால்வாங்க மறுக்கின்றனர். குடிநீர் வசதி செய்து தரவில்லை.
மேலும் இந்த ஆண்டிற்கான பாரத பிரதமரின் கனவு திட்டமான ஜல் ஜீவன்திட்டத்தில் அலகுமலை பஞ்சாயத்தில் அலகுமலை சிற்றூர் (குக்கிராமம்)சேர்க்க பெற்றிருந்தும் எங்களுக்கும், மாதேஸ்வரா நகருக்கும் இத்திட்டத்தின்பயன் கிடைக்காமல் செய்துவிட்டார்.
இந்த ஆண்டிற்கான அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் குடிசை வீட்டில்வசிக்கும் எங்களுக்கு வீடு ஒதுக்க வேண்டியபோது, நீங்கள் எவனிடம்சென்று சொன்னாலும் உங்களுக்கு வீடு கொடுக்க முடியாது என கடுமையாக திட்டுகின்றார். ஆகவே தாங்கள் தயவு செய்து அரசின் மூலம் நிலம் வாங்கப்பெற்றுபட்டா வழங்கியுள்ள எங்களுக்கு வீடு கிடைக்கவும், ஜல் ஜீவன் திட்டம் மூலம்குடி தண்ணீர் கிடைப்பதற்கும், வீட்டுவரி எங்களிடம் வாங்கவும் ஆவணம் செய்துகொடுக்க கேட்டு கொள்கிறோம்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.






