search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொளஞ்சியப்பர் அரசு கல்லூரி விடுதி  மாணவ- மாணவிகள் திடீர் சாலை மறியல்:   போலீசாருடன் கடும் வாக்குவாதம்
    X

    கொளஞ்சியப்பர் அரசு கல்லூரி விடுதி மாணவ- மாணவிகள் திடீர் சாலை மறியல்  செய்தனர்.

    கொளஞ்சியப்பர் அரசு கல்லூரி விடுதி மாணவ- மாணவிகள் திடீர் சாலை மறியல்: போலீசாருடன் கடும் வாக்குவாதம்

    • 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர்.
    • 1 கிலோமீட்டர் அளவிற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    கடலூர்:

    விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லூரியில் ஆதிதிராவிடர் நல விடுதி மற்றும் பிற்படுத்தப்பட்ட விடுதியில் சுமார் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். இந்நிலையில் விடுதிகளில் உணவு, குடி நீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டு கடந்த சில தினங்களுக்கு முன்பு விருத்தாசலம் சப் கலெக்டரிடம் மனு அளித்தனர், மனுவை பெற்றுகொண்டு விரைவில் தீர்வு காணப்படும் என்று கூறியும் இதுவரை நடவடிக்கை எடுக்காததால் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து விடுதி மாணவ ,மாணவிகள் விருத்தாசலம் உளுந்தூர்பேட்டை சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த காவல்துறையினரிடம் மாணவர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 1 கிலோமீட்டர் அளவிற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின்னர் போலீசார் பேச்சுவார்த்தையைத் தொ டர்ந்து மாணவ,மாணவிகள் கலைந்து சென்றனர்.

    Next Story
    ×