search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோரிக்கை"

    பரமத்தி வேலூரில் வெற்றிலை ஆராய்ச்சி மையம் அமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் உள்ள தமிழ்நாடு வெற்றிலை விவசாயிகள் சங்க 45-ம் ஆண்டு பேரவை கூட்டம் தமிழ்நாடு வெற்றிலை விவசாயிகள் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.  கூட்டத்தில் நிறைவேற்ற ப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

     பரமத்தி வேலூரில் 4 ரோடுக்கு அருகில் வெற்றிலை ஏல மார்க்கெட் உள்ளது. அதில் வெற்றிலை விவசாயிகளுடைய வெற்றிலைக்கு நல்ல விலை கிடைக்கவில்லை. மேலும் வியாபாரிகள் மிக அதிகமாக கமிஷன் எடுத்து கொள்கிறார்கள். ஆகவே தமிழ்நாடு அரசு பரமத்திவேலூரில் வெற்றிலை விவசாயிகளுக்கு அரசு சார்பில் ஒரு ஒழுங்குமுறை விற்பனை கூடம் ஏற்படுத்தி நல்ல முறையில் செயல்படுத்த வேண்டும்.

     இச்சங்கம் 1977 -ம் ஆண்டு தொடங்கப்பட்ட பொழுது பொத்தனூரில் வெற்றிலை கொடிக்கால் ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வந்தது . பின்னர் அது சிறுமணி கரும்பு ஆராய்ச்சி நிலையத்திற்கு மாற்றப்பட்டது .அதன் பின்னர் கோவை வேளாண் கல்லூரிக்கு மாற்றப்பட்டது.அதனால் விவசாயிகளுக்கு எந்தவித பலனுமில்லை. 

    முந்தைய அரசு இருக்கூர் கிராமத்தில் உள்ள ஏழு ஏக்கர் புறம்போக்கு நிலத்தில் வெற்றிலை கொடிக்கால் ஆராய்ச்சி மையத்தை நிறுவுவதற்கு அடிக்கல் நாட்டினார்கள். அதனை செயல்படுத்தாமல் தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே தமிழ்நாடு அரசு அந்த இடத்தில் வெற்றிலை ஆராய்ச்சி மையத்தை நிறுவி செயல்படுத்த வேண்டும். 

    தமிழ்நாடு அரசு வெற்றிலை கொடிக்கால் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களுக்கு ஒரு தனி நல வாரியம் அமைத்திட வேண்டும். வெற்றிலை கொடிக்கால் விவசாயிகள் பெரும்பாலும் குத்தகை விவசாயிகள் .அவர்களுக்கு உகந்த வகையில் பயிர் கடன் கிடைக்க வழிவகை செய்யுமாறு மாநில அரசை இப்பேரவை கேட்டுக்கொள்வது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

     கூட்டத்தில் 50 பேர் கொண்ட புதிய பொதுக்குழு உறுப்பினர்களும், அதில் 15 பேர் கொண்ட புதிய நிர்வாகக் குழு உறுப்பினர்களும்  தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதேபோல் புதிய நிர்வாகிகளும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
    ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் மின் ஊழியர் மத்திய  அமைப்பு   மாவட்ட மாநாடு நடந்தது. 

    இதில் ஒய்வுபெற்ற நல அமைப்பு மாவட்ட செயலாளர் விநாயகமூர்த்தி கொடியேற்றினார். மாநில துணைத் தலைவர் குருவேல்  தொடங்கி வைத்தார். மாநில செயலாளர் வண்ணமுத்து சிறப்புரையாற்றினார். வரவேற்பு குழு செயலாளர் கணேசன் வரவேற்றார். 

    சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் சேதுராமன், ஆட்டோ சங்க மாவட்ட செயலாளர் விஜயகுமார், வரவேற்பு குழுத் தலைவர் ராமன் ஆகியோர் பேசினர்.  

    மாவட்ட தலைவராக உமாநாத், மாவட்ட செயலாளராக கருணாநிதி,  பொருளாளராக மோக னசுந்தரம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

    ஒப்பந்த அடிப்படையில் பணி புரியும் தொழி லாளர்களை    நிரந்தரம் செய்ய வேண்டும்.  தொழி லாளர்களுக்கு தினந்தோறும் கூலி ரூ.380 வழங்க வேண்டும்.     பகுதிநேர தொழிலாளர்களை முழு நேர பணியாளராக்கி பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மின் மீட்டர்களை கணக்கீடு செய்யும் மதிப்பீட்டாளர் காலிபணியிடங்களை பூர்த்தி செய்ய வேண்டும்.

    சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி, பூவந்தி ஆகிய மின்வாரிய அலுவ லகங்களை புதிதாக கட்டு வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அலுவலகங்களில் உள்ள  காலாவதியான கணினியை மாற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
    ×