என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அடிப்படை வசதிகள் செய்து தர கோரிக்கை
    X

    அடிப்படை வசதிகள் செய்து தர கோரிக்கை

    • அடிப்படை வசதிகள் செய்து தர கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
    • 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஊராட்சிக்குட்பட்ட மாணிக்கவாசகர் நகர், அம்பாள் நகர் உள்ளிட்ட பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதிகளில் முறையான சாலை வசதிகள் இல்லாமலும், வடிகால்வாய்க்கால் தூர்வாரப்படாமல் கழிவு நீர் தேங்கியும் கானப்படுகிறது. மேலும் ஆங்காங்கே குப்பைத்தொட்டிகள் பராமரிக்கப்படாமல் தெரு ஓரம் மற்றும் குளக்கரைகளில் குப்பைகள் கொட்டப்படுவதால் தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.இது தொடர்பாக அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. எனவே சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து எதிர் வருகின்ற மழைக்காலத்திற்குள் சாலைகள் அமைத்தும், வடிகால்வாய்க்கால் மற்றும் குப்பைகளை சுத்தம் செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×