search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "trichy siva"

    • தி.மு.க. பாராளுமன்ற குழுத்தலைவர் டி.ஆர்.பாலு, மாநிலங்களவை குழுத் தலைவர் திருச்சி சிவா, கலாநிதி வீராசாமி எம்.பி. உள்ளிட்டோர் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
    • பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் தி.மு.க. எம்.பி. கனிமொழி சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் சந்திப்பு நடைபெறுகிறது குறிப்பிடத்தக்கது.

    சென்னை :

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உடன் தி.மு.க. பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்தனர்.

    தி.மு.க. பாராளுமன்ற குழுத்தலைவர் டி.ஆர்.பாலு, மாநிலங்களவை குழுத் தலைவர் திருச்சி சிவா, கலாநிதி வீராசாமி எம்.பி. உள்ளிட்டோர் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் தி.மு.க. எம்.பி. கனிமொழி சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் இச்சந்திப்பு நடைபெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.

    • நடந்த சம்பவத்திற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என நேரு கூறினார்.
    • திருச்சி சிவாவை சமாதானப்படுத்திவிட்டு வருமாறு முதல் அமைச்சர் அறிவுறுத்தினார்.

    திருச்சி:

    திருச்சியில் அமைச்சா் கே.என். நேருவுக்கு, கருப்புக் கொடி காட்டியதாகக் கூறி அமைச்சரின் ஆதரவாளா்கள் திருச்சி சிவா எம்.பி.யின் வீட்டில் புதன்கிழமை தாக்குதல் நடத்தினா். திருச்சி சிவாவின் கார், வீட்டு வாசலில் இருந்த பொருட்களை நேருவின் ஆதரவாளர்கள் சேதப்படுத்தினர். இருதரப்பு ஆதரவாளர்களும் மோதிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், எம்.பி. திருச்சி சிவாவை அமைச்சர் கே.என்.நேரு இன்று சந்தித்து பேசினார். திருச்சி எஸ்.பி.ஐ காலணியில் உள்ள இல்லத்தில் திருச்சி சிவாவை அமைச்சர் சந்தித்து பேசினார்.

    இந்த சந்திப்புக்கு பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது திருச்சி சிவா கூறியதாவது:

    நடந்தது நடந்ததாக இருக்கட்டும், இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும். முதல் அமைச்சரின் மனம் சங்கடப்பட்டுவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறோம். நடந்த சம்பவத்திற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என நேரு கூறினார். இவ்வாறு திருச்சி சிவா தெரிவித்தார்.

    கே.என்.நேரு கூறுகையில், 'திருச்சி சிவாவை சமாதானப்படுத்திவிட்டு வருமாறு முதல் அமைச்சர் அறிவுறுத்தினார். திருச்சி சிவா வீட்டில் எனக்கு தெரியாமல் நடக்கக் கூடாத சம்பவங்கள் நடந்துவிட்டது. இருவரும் மனம் விட்டு பேசிவிட்டோம். இனி இதுபோன்று நடக்காது' என தெரிவித்துள்ளார்.

    • காவல் நிலையத்துக்குள் அத்துமீறி நுழைந்து பெண் போலீஸ் சாந்தியை தள்ளிவிட்டு சிவா ஆதரவாளர்களை நாற்காலிகளை தூக்கி அடித்து தாக்கியதாக கூறப்பட்டது.
    • போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்தல், அரசு சொத்துக்களை சேதப்படுத்துதல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

    திருச்சி:

    திருச்சி மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று அரசு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் பிராட் டியூர் நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு திருச்சி கண்டோன்மென்ட் எஸ்.பி.ஐ. காலனி பகுதியில் நமக்கு நாமே திட்டத்தில் அமைக்கப்பட்ட இறகு பந்து மைதானத்தை திறந்து வைக்க அமைச்சர் கே.என்.நேரு புறப்பட்டு சென்றார்.

    இந்த விழாவில் அப்பகுதியில் வசிக்கும் மேல் சபை எம்.பி. திருச்சி சிவாவின் பெயர் இடம்பெறவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அவரது ஆதரவாளர்கள் அவரின் வீட்டு முன்பு அமைச்சர் கே.என்.நேரு காரை வழிமறித்து கறுப்பு கொடி காட்டினர்.

    இதனால் ஆத்திரமடைந்த நேரு ஆதரவாளர்கள் திருச்சி சிவாவின் வீடு புகுந்து போர்டிகோவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மற்றும் காம்பவுண்டு சுவர்களில் பொருத்தப்பட்டிருந்த விளக்குகளை அடித்து நொறுக்கினர்.

    இந்நிலையில் கருப்புக்கொடி காட்டிய சிலரை திருச்சி செசன்ஸ் கோர்ட் போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இது பற்றி தகவல் அறிந்த நேரு ஆதரவாளர்கள் காவல் நிலையம் முன்பு திரண்டனர். பின்னர் சிலர் காவல் நிலையத்துக்குள் அத்துமீறி நுழைந்து பெண் போலீஸ் சாந்தியை தள்ளிவிட்டு சிவா ஆதரவாளர்களை நாற்காலிகளை தூக்கி அடித்து தாக்கியதாக கூறப்பட்டது. இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களிலும் பரவியது.

    இந்நிலையில் அமைச்சர் கே.என்.நேருவுக்கு கருப்புக்கொடி காட்டியதாக சிலர் மீது ஒரு வழக்கும், சிவா வீடு மீது தாக்குதல் நடத்தியதாக சிலர் மீது இன்னொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டது. ஆனால் போலீஸ் நிலையத்திற்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதாக பெண் போலீஸ் சாந்தி கொடுத்த புகாரின் பேரில் போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தல், அரசு சொத்துக்களை சேதப் படுத்துதல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

    இதில் திருச்சி மாநகராட்சி கவுன்சிலர்களான மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் முத்துச்செல்வம், தலைமை செயற்குழு உறுப்பினர் காஜாமலை விஜய், ராமதாஸ், அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவரும், மாவட்ட தி.மு.க. பொருளாளருமான துரைராஜ், மாநகராட்சி வார்டு பகுதி துணை செயலாளர் திருப்பதி ஆகிய 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

    பின்னர் திருச்சி காஜாமலை நீதிபதிகள் குடியிருப்பில் திருச்சி நீதிமன்ற குற்றவியல் எண் 2 நீதிபதி பாலாஜி முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அதைத் தொடர்ந்து நீதிபதி வருகிற மார்ச் 29-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து 5 பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    • திடீர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
    • இன்று டிஸ்சார்ச் செய்யப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது.

    திமுக எம்.பி. திருச்சி சிவா உடல்நலக்குறைவு காரணமாக டெல்லியில் உள்ள ஆர்.எம்.எல். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திருச்சி சிவா இன்று வீடு திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது.

    விதவை பெண்களின் நலன்களை பாதுக்காக தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என தி.மு.க. உறுப்பினர் திருச்சி சிவா கொண்டுவந்த தனிநபர் தீர்மானத்தை மாநிலங்களவை இன்று நிராகரித்து விட்டது. #RajyaSabharejects #RajyaSabha #widowswelfare
    புதுடெல்லி:

    பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரான திருச்சி சிவா விதவை பெண்களின் நலன்களை பாதுக்காக தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என தனிநபர் தீர்மானத்தை ஒன்றை தாக்கல் செய்தார்.

    இந்த தீர்மானத்தின் மீது நடந்த விவாதத்தின் மீது பேசிய மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை இணை மந்திரி விரேந்தர் குமார், விதவையர்களின் நல்வாழ்வை பேணிப்பாதுக்காக்க அனைத்து மாநில அரசுகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. 

    சில மாநிலங்களில் விதவையர்களுக்கான காப்பகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் சில மாநிலங்களில் காப்பகங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. எனவே, இதுதொடர்பாக தனியாக சட்டம் இயற்ற வேண்டியதில்லை. உறுப்பினர் திருச்சி சிவா கொண்டுவந்த தனிநபர்  தீர்மானத்தை திரும்பப்பெற வேண்டும் என குறிப்பிட்டார்.

    இதற்கு திருச்சி சிவா மறுத்து விட்டதால் அவர் தாக்கல் செய்த தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. இந்த மசோதாவுக்கு ஆதரவாக 23 உறுப்பினர்களும், எதிராக 35 உறுப்பினர்களும் வாக்களித்தனர். இதைதொடர்ந்து அவர் தாக்கல் செய்த தனிநபர் தீர்மானத்தை மாநிலங்களவை நிராகரித்து விட்டது. #RajyaSabharejects #RajyaSabha #widowswelfare 
    மூன்றாம் பாலினத்தவர்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா முன்வைத்த தனிநபர் மசோதா பாராளுமன்ற மக்களவையில் இன்று நிறைவேறியது. #TransgenderBill #LokSabha
    புதுடெல்லி:

    இந்தியாவில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு நிகராக மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் சமூக அங்கீகாரம் அளித்து சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்த பின்னர் தங்களுக்கான கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவ வசதி ஆகியவற்றை உறுதிப்படுத்தவும், பிற உரிமைகளை பாதுகாக்கவும் சட்டம் இயற்றப்பட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

    இதைதொடர்ந்து, தி.மு.க.வை சேர்ந்த எம்.பி.யான திருச்சி சிவா கடந்த  2-8-2016 அன்று பாராளுமன்றத்தில் தனிநபர் மசோதா ஒன்றை தாக்கல் செய்தார்.

    இந்த மசோதா ராஜ்யசபையில் நிறைவேறிய பின்னர் பாராளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர், பாராளுமன்ற நிலைக்குழு இந்த மசோதா தொடர்பாக 27 பரிந்துரைகளை இணைத்திருந்தது.


    மூன்றாம் பாலினத்தவர்களை வற்புறுத்தி பிச்சை எடுக்கும் தொழிலில் தள்ளுவது, பொது இடங்களில் அனுமதிக்க மறுப்பது, வார்த்தைகளாலும், உடல்ரீதியாகவும் அவர்களை துன்புறுத்துவது போன்றவற்றை குற்றச்செயலாக அறிவித்து அபராதத்துடன் அதிகபட்சமாக இரண்டாண்டுகள் சிறை தண்டனை விதிக்க மூன்றாம் பாலினத்தவர்களுக்கான உரிமைகள் பாதுகாப்பு என்னும் இந்த மசோதா வழிவகை செய்கிறது.

    இந்நிலையில், மத்திய சமூக நலத்துறை மற்றும் சமூகநீதித்துறை மந்திரி தாவர்சந்த் கெலாட் இந்த மசோதாவை பாராளுமன்ற மக்களவையில் இன்று தாக்கல் செய்தார்.

    இப்படி ஒரு சட்டம் தங்களுக்கு தேவை என மூன்றாம் பாலினத்தவர்களும், அவர்கள் சார்ந்திருக்கும் அமைப்புகளும் நீண்டகாலமாகவே வலியுறுத்தி வந்துள்ளதாக இந்த மசோதாவை அறிமுகம் செய்துவைத்த தாவர்சந்த் கெலாட் குறிப்பிட்டார்.

    இந்த மசோதா மீது பாராளுமன்ற உறுப்பினர்கள் விவாதித்து கொண்டிருந்த நிலையில், பல்வேறு பிரச்சனைகளை மையப்படுத்தி மக்களவையில் ஒருபுறம் அமளியும் நீடித்தது. இதற்கிடையே மூன்றாம் பாலினத்தவர்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா முன்வைத்த தனிநபர் மசோதா பாராளுமன்ற மக்களவையில் இன்று நிறைவேறியது.

    இதன்பின்னர் மக்களவை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது.   #TransgenderBill #LokSabha 
    ஊட்டியில் மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி புகழ் வணக்க கூட்டத்தில் பங்கேற்ற திருச்சி சிவா, நாட்டின் அடுத்த பிரதமரை மு.க.ஸ்டாலின் தான் முடிவு செய்வார் என தெரிவித்தார். #Karunanidhi #MKStalin #TrichySiva
    ஊட்டி:

    மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு நீலகிரி மாவட்ட தி.மு.க. சார்பில் புகழ் வணக்க கூட்டம் ஊட்டியில் உள்ள ஒய்.டபிள்யு.சி.ஏ. அரங்கில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் முபாரக் தலைமை தாங்கினார். தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் திருச்சி சிவா எம்.பி. மற்றும் புலவர் ராமலிங்கம், கவிஞர் நந்தலாலா ஆகியோர் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த கருணாநிதி உருவப்படத்துக்கு நீலகிரியில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி மலர்களை தூவி அஞ்சலி செலுத்தினர்.

    பிறகு திருச்சி சிவா எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-


    மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி ஒரு சகாப்தம். அவர் இல்லாத சூழலில், பல இடங்களில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. கருணாநிதியை போலவே மு.க.ஸ்டாலினும் துணிச்சலுடனும், உறுதியுடனும் செயல்படுவதால் பெரியார் சிலை அவமதிப்பை வன்மையாக கண்டிக்கிறார். அண்மையில் ஆளுக்கொரு சட்டம் என்பது போல சிலர் மீது வழக்குப்பதிந்து விரைவில் கைது செய்வதும், மேலும் சிலர் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்தும் கைது செய்வதை விடுத்து போலீஸ் பாதுகாப்பு அளிப்பதும் நடந்து வருகிறது.

    தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் உறுதி ஏற்றபோது மத்திய அரசு தமிழகத்தை காவி மயமாக்குவதை பா.ஜனதா அரசு என்று சொல்லவில்லை. மோடி என்று குறிப்பிடவில்லை. பன்முக தன்மை கொண்ட இந்தியாவை ஒரே நாடு, ஒரே மதம், ஒரே கலாசாரம் என்று மாற்ற நினைக்கும் மத்திய பா.ஜனதா ஆட்சியை அகற்ற வேண்டும்.

    தமிழகத்தில் ஊழல் புரிந்த அரசை மாற்ற வேண்டும். எச்.ராஜா மத கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் பேசி வருகிறார். போலீஸ் நிலையங்களில் அவர் மீது வழக்குப்பதிவு செய்தும், மத்திய அரசுக்கு பயந்து தமிழக அரசு கைது செய்யவில்லை.

    முற்றிலும் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும். அப்போது நாட்டின் அடுத்த பிரதமரை மு.க.ஸ்டாலின் தான் முடிவு செய்வார்.

    கர்நாடகத்தில் முதல்-மந்திரி குமாரசாமி எதிர்க்கட்சிகளின் தவறுகளை சுட்டிக்காட்டி போராட்டம் நடத்த போவதாக அறிவித்து உள்ளார். இதுகுறித்து பா.ஜனதா எம்.பி. ஒருவர் கவர்னரிடம் ‘எப்படி ஆட்சியில் இருக்கும் அரசை போராட அனுமதிக்கிறீர்கள்‘ என்று கேட்டு மனு கொடுத்து உள்ளார். ஆனால் தமிழகத்தில் அ.தி.மு.க. அரசு அதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடும்போது மத்திய பா.ஜனதா அரசு கண்ணை கட்டி கொண்டு இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #Karunanidhi #MKStalin #TrichySiva #HRaja
    ×