என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "துணை ஜனாதிபதி தேர்தல்"

    • துணை ஜனாதிபதி பதவி ஏற்பு பாராளுமன்ற மைய மண்டபத்தில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தொடங்கி உள்ளது.
    • துணை ஜனாதிபதிக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவி பிரமாணமும், அரசியல் காப்பு உறுதிமொழியும் செய்து வைப்பார்.

    புதுடெல்லி:

    துணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்று இருக்கும் சி.பி.ராதாகிருஷ்ணன் பா.ஜ.க. தலைவர்களை சந்தித்து நன்றி தெரிவித்தார்.

    இன்று காலையிலும் அவர் பா.ஜ.க. எம்.பி.க்கள் மற்றும் நிர்வாகிகளை சந்தித்து நன்றி கூறினார். இதற்கிடையே அவருக்கு வாழ்த்து செய்திகள் வந்து குவிந்த வண்ணம் உள்ளன.

    சி.பி.ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதியாக பதவி ஏற்கும் விழா நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) நடைபெறும் என்று தெரிய வந்துள்ளது. இதற்கான ஏற்பாடுகளை பாராளுமன்ற அதிகாரிகள் செய்து வருகிறார்கள்.

    துணை ஜனாதிபதி பதவி ஏற்பு பாராளுமன்ற மைய மண்டபத்தில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தொடங்கி உள்ளது. பதவி ஏற்பு நேரம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதும் அதற்கு ஏற்ப அழைப்பிதழ் வெளியிடப்படும்.

    துணை ஜனாதிபதிக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவி பிரமாணமும், அரசியல் காப்பு உறுதிமொழியும் செய்து வைப்பார். இதைத் தொடர்ந்து சி.பி.ராதாகிருஷ்ணன் பாராளுமன்றத்தில் துணை ஜனாதிபதிக்கு ஒதுக்கப்பட்டுள்ள அறைக்கு சென்று பொறுப்புகளை ஏற்றுக் கொள்வார்.

    தற்போது சி.பி.ராதாகிருஷ்ணன் மகாராஷ்டிரா மாநில கவர்னராக பதவி வகித்து வருகிறார். அந்த பதவியை அவர் ராஜினாமா செய்து கடிதம் அனுப்புவார்.

    • சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
    • தனது ஜனநாயகக் கடமைகளில் சிறந்து விளங்கிட அவரை வாழ்த்தி மகிழ்கிறேன்.

    சென்னை:

    துணை ஜனாதிபதியாக தேர்வாகி உள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு மக்கள் நீதி மய்யத் தலைவரும், எம்.பி.யுமான கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    உலகின் மிகப்பெரிய ஜனநாயக தேசமான நமது இந்தியாவின் துணை குடியரசுத் தலைவராக தேர்வாகி இருக்கும் திரு. சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    நமது அரசியலமைப்பின் விழுமியங்களைப் போற்றிப் பாதுகாக்கும் வகையில், தனது ஜனநாயகக் கடமைகளில் சிறந்து விளங்கிட அவரை வாழ்த்தி மகிழ்கிறேன் என்று கூறியுள்ளார். 

    • துணை ஜனாதிபதி பதவிக்கு இன்று தேர்தல் நடைபெற்றது.
    • வாக்குப்பதிவு காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணியுடன் முடிந்தது.

    புதுடெல்லி:

    நாட்டின் துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர் கடந்த ஜூலை மாதம் 21-ம் தேதி பதவி விலகினார். இதையடுத்து அந்தப் பதவிக்கு இன்று தேர்தல் நடைபெற்றது.

    தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன், எதிர்க்கட்சிகள் அடங்கிய 'இந்தியா' கூட்டணியின் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி ஆகிய இருவரும் தேர்தலில் போட்டியிட்டனர்.

    தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணியுடன் முடிவடைந்தது. பிஜூ ஜனதா தளம், பாரத் ராஷ்ட்ரிய சமிதி ஆகிய கட்சிகள் இந்த தேர்தலை புறக்கணித்தன.

    இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் சி.பி.ராதாகிருஷ்ணன் 452 வாக்குகள் பெற்று துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டார். 15 வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன. அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சுதர்சன் ரெட்டி 300 வாக்குகள் பெற்றார்.

    துணை ஜனாதிபதியாக தேர்வான சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

    • முதல் நபராக பிரதமர் நரேந்திர மோடி தனது வாக்கினை செலுத்தினார்.
    • மாலை 3 மணி நிலவரப்படி 96% வாக்குகள் பதிவாகின.

    நாட்டின் 16-வது துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர் கடந்த ஜூலை மாதம் 21-ந் தேதி பதவி விலகியதை தொடர்ந்து அந்த பதவிக்கு இன்று தேர்தல் நடைபெற்றது.

    தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன், எதிர்க்கட்சிகள் அடங்கிய 'இந்தியா' கூட்டணியின் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி ஆகிய இருவரும் தேர்தலில் போட்டியிட்டனர்.

    இதற்கிடையே ஒடிசாவின் முன்னாள் ஆளுங்கட்சியான பிஜூ ஜனதா தளம், தெலுங்கானாவில் முன்னாள் ஆளுங்கட்சியான பாரத் ராஷ்ட்ரிய சமிதி ஆகிய காட்சிகள் இந்த தேர்தலை புறக்கணித்தன.

    தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 10 மணி தொடங்கியது. வாக்குப்பதிவு தொடங்கியதும் முதல் நபராக பிரதமர் நரேந்திர மோடி தனது வாக்கினை செலுத்தினார்.

    மாலை 5 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. மாலை 3 மணி நிலவரப்படி 96% வாக்குகள் பதிவாகின. அடுத்த துணை ஜனாதிபதி யார் என்ற முடிவுகள் விரைவில் தெரிந்து விடும். சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகம் என்று கூறப்படுகிறது.

    • மாலை 5 மணி வரை பாராளுமன்றத்தின் எப்-101 அரங்கில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
    • அடுத்த துணை ஜனாதிபதி யார் என்ற முடிவுகள் மாலையிலேயே தெரிந்து விடும்.

    புதுடெல்லி:

    நாட்டின் 16-வது துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர் கடந்த ஜூலை மாதம் 21-ந் தேதி பதவி விலகியதை தொடர்ந்து அந்த பதவிக்கு இன்று தேர்தல் நடைபெறும் என தேர்தல் கமிஷன் அறிவித்தது.

    இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 21-ந்தேதி நிறைவு பெற்றதில் ஆளும் கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன், எதிர்க்கட்சிகள் அடங்கிய 'இந்தியா' கூட்டணியின் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி ஆகிய இருவருக்கும் இடையே போட்டி உறுதியானது.

    இதற்கிடையே இந்த தேர்தலில் எவ்வாறு வாக்கு அளிக்க வேண்டும்? என தேசிய ஜனநாயக கூட்டணி தரப்பிலும், 'இந்தியா' கூட்டணி சார்பிலும் தங்களது அணி எம்.பி.க்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. 'இந்தியா' கூட்டணி இதனை ஒரு மாதிரி தேர்தலாகவே நடத்திப் பார்த்தது.

    பழைய பாராளுமன்ற கட்டிடத்தின் மைய மண்டபத்தில் நடைபெற்ற இந்த வாக்களிப்பு ஒத்திகையில் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் காங்கிரஸ் எம்.பி.க்களும், அந்தந்த கூட்டணி கட்சி எம்.பி.க்களும் கலந்து கொண்டனர்.

    முன்னதாக அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்களும் நேற்று டெல்லி வந்தனர். அவர்கள் தேர்தல் பற்றி தனித்தனியாக ஆலோசனை நடத்தினார்கள். பா.ஜ.க. கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சியின் எம்.பி.க்கள், பீகாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி எம்.பி.க்கள் ஆகியோர் தனித்தனியாக கலந்து ஆலோசித்து சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு வாக்களிக்க தயார் ஆனார்கள்.

    இதற்கிடையே ஒடிசாவின் முன்னாள் ஆளுங்கட்சியான பிஜூ ஜனதா தளம் கட்சி, இந்த தேர்தலில் பங்களிக்கப்போவது இல்லை என தெரிவித்து உள்ளது. அந்த கட்சியின் எம்.பி.யான சஸ்மித் பத்ரா இதனை புவனேஸ்வரில் தெரிவித்தாலும், டெல்லியிலும் இதனை உறுதி செய்தார்.

    இந்த கட்சிக்கு மக்களவையில் எம்.பி.க்கள் இல்லை. ஆனால் மாநிலங்களவையில் 7 பேர் இருக்கிறார்கள்.

    இதைப்போல பாரதிய ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்.) கட்சியும் தேர்தலை புறக்கணிக்கிறது. அந்த கட்சியின் செயல் தலைவரான கே.டி.ராமராவ் இதனை அறிவித்தார். இந்த கட்சிக்கு மக்களவையில் உறுப்பினர்கள் இல்லை. ஆனால் மாநிலங்களவையில் 4 உறுப்பினர்கள் உள்ளனர்.

    தேர்தலின் போக்கு சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெறுவதற்கான சூழ்நிலையை காட்டுகிறது என்றே சொல்லலாம். இருப்பினும் இரு அணிகளும் நேற்று வாக்களிப்பில் வெற்றிகரமாக பங்கேற்பது பற்றி பல்வேறு ஆலோசனைகளை நடத்தின.

    இந்த நிலையில், தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 10 மணி தொடங்கியது. மாலை 5 மணி வரை பாராளுமன்றத்தின் எப்-101 அரங்கில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அடுத்த துணை ஜனாதிபதி யார் என்ற முடிவுகள் மாலையிலேயே தெரிந்து விடும்.

    வாக்குப்பதிவு தொடங்கியதும் முதல் நபராக பிரதமர் நரேந்திர மோடி தனது வாக்கினை செலுத்தினார். 

    • வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் கோவையிலிருந்து இரண்டு முறை மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
    • கருப்புப் பணம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டது போன்றவற்றின் மூலம் நாடு முழுவதும் கவனம் பெற்றவர் ஆவார்.

    நாட்டின் அடுத்த துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று (செப்டம்பர் 9) நடைபெற உள்ளது.

    வாக்குப்பதிவு காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறும். இரு அவைகளிலிருந்தும் எம்.பி.க்கள் ரகசிய வாக்கெடுப்பு மூலம் தங்கள் வாக்குகளை செலுத்துவர்.

    வாக்குப்பதிவு முடிந்த உடனேயே, வாக்கு எண்ணிக்கை மாலை 6 மணிக்கு தொடங்கும். இன்றிரவே முடிவுகள் அறிவிக்கப்படும்.

    வேட்பாளர்கள் பின்னணி?

    தமிழ்நாட்டைச் சேர்ந்த மூத்த பாஜக தலைவரும் ஆர்எஸ்எஸ் புள்ளியுமான சி.பி. ராதாகிருஷ்ணன் (67) என்.டி.ஏ வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார்.

    வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் கோவையிலிருந்து இரண்டு முறை மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது இவர் மகாராஷ்டிராவின் ஆளுநராகப் இருந்து வருகிறார்.

    தெலுங்கானாவைச் சேர்ந்த ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி சுதர்சன் ரெட்டி (79) இந்தியா கூட்டணியின் வேட்பாளராக களமிறங்கியுள்ளார்.

    சத்தீஸ்கரில் நக்சல் எதிர்ப்பு என்ற பெயரில் தனிநபர்களுக்கு ஆயுதங்கள் வழங்கி அரசு ஆதரவுடன் நடத்தப்பட்ட சல்வா ஜூடும் அமைப்பு அரசியலமைப்பிற்கு விரோதமானது என்ற தீர்ப்பு, கருப்புப் பணம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டது போன்றவற்றின் மூலம் நாடு முழுவதும் கவனம் பெற்றவர் ஆவார்.

    எதிர்க்கட்சிகள் இவரை சமூக நீதியின் அடையாளமாக நிலைநிறுத்தியுள்ளன.

    யாருக்கு பலம்?

    மக்களவை மற்றும் மாநிலங்களவையைச் சேர்ந்த மொத்தம் 781 எம்.பி.க்கள் வாக்களிக்க உள்ளனர்

    வெற்றிக்கு 391 வாக்குகள் என்ற மேஜிக் எண்ணிக்கை தேவை. ஆளும் என்.டி.ஏ கூட்டணிக்கு 425 எம்.பி.க்கள் என்ற சொந்த பலம் உள்ளது.

    கூடுதலாக, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 11 எம்.பி.க்களும் தங்கள் ஆதரவை அறிவித்துள்ளனர், இதன் மூலம் அவர்களின் எண்ணிக்கை 436 ஆக உயர்ந்துள்ளது.

    ஆம் ஆத்மி கட்சி எம்.பி. ஸ்வாதி மாலிவாலும் என்.டி.ஏ வேட்பாளருக்கு வாக்களிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மறுபுறம், எதிர்க்கட்சி இந்தியா கூட்டணிக்கு 324 எம்.பி.க்களின் ஆதரவு உள்ளது. எண்ணிக்கை பலத்தின் அடிப்படையில் என்.டி.ஏ வேட்பாளரின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியானாலும், கடந்த தேர்தலை விட இதில் முன்னிலை குறைய வாய்ப்புள்ளது என்று கணிக்கப்படுகிறது.

    2022 இல் ஜக்தீப் தன்கர் 346 வாக்குகள் என்ற மிகப்பெரிய பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றிருந்தார்.

    இந்த முறை முன்னிலை 100 முதல் 125 வாக்குகள் வரை மட்டுமே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • இதுவரை இவிஎம்கள், 5 மக்களவை மற்றும் 130 சட்டமன்றத் தேர்தல்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
    • மீதமுள்ள விருப்ப எண்களை அவர்கள் விரும்பினால் போடலாம் அல்லது விட்டுவிடலாம்.

    நாட்டின் தேர்தல் செயல்முறையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (இவிஎம்) தொடர் சர்ச்சைப் பொருளாக இருந்து வருகிறது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அதன் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பி வருகின்றன.

    இதுவரை இவிஎம்கள், 5 மக்களவை மற்றும் 130 சட்டமன்றத் தேர்தல்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

    இருப்பினும், அவை ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதித் தேர்தல்களில் பயன்படுத்தப்படவில்லை.

    இன்று நாட்டின் துணை ஜனாதிபதியை தேர்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் என்.டி.ஏ. கூட்டணி சார்பில் சி.பி. ராதாகிருஷ்ணன், இந்தியா கூட்டணி சார்பில் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சுத்ர்சன் ரெட்டி போட்டியிடுகின்றனர்.

    இவிஎம் ஏன் பயன்படுத்தப்படுவதில்லை?

    மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில், வேட்பாளரின் பெயருக்கு அடுத்துள்ள பொத்தானை அழுத்துவதன் மூலம் வாக்கு பதிவு செய்யப்படுகிறது.

    ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதித் தேர்தல்கள் வேறுபட்டவை. பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே வாக்களிக்கும் இந்தத் தேர்தல்கள் விகிதாசார பிரதிநிதித்துவ முறையின்படி நடத்தப்படுகின்றன.

    இவற்றில், ரகசிய வாக்குச்சீட்டு முறை பின்பற்றப்படுகிறது. வாக்களிக்கும் உறுப்பினர்கள் தங்கள் விருப்பத்தைக் குறிக்கும் வகையில் வாக்குச்சீட்டில் வேட்பாளர்களின் பெயர்களுக்கு அருகில் எண்களை எழுத வேண்டும்.

    எண்களை 1, 2... என்ற விருப்பத்தின் வரிசையில் இருக்க வேண்டும். வாக்காளர்கள் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து, அவர்கள் விரும்பும் அளவுக்கு விருப்ப எண்களை வாக்குச்சீட்டில் எழுதலாம்.

    வாக்கு செல்லுபடியாகும் வகையில், முதல் விருப்ப எண்ணை வைக்க வேண்டும். மீதமுள்ள விருப்ப எண்களை அவர்கள் விரும்பினால் போடலாம் அல்லது விட்டுவிடலாம்.

    இதற்காக வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் சிறப்பு பேனாக்களை வழங்கும். வாக்காளர்கள் அந்த பேனாவால் தங்கள் வாக்குகளை குறிக்க வேண்டும். வேறு எந்த பேனாவும் பயன்படுத்தப்பட்டால், அந்த வாக்கு செல்லாததாகக் கருதப்படும். முதல் வாக்கை பிரதமர் மோடி செலுத்துவார். 

    விருப்ப எண்ணின் அடிப்படையில் வாக்குகள் எண்ணப்படும். தற்போதுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் இந்த வேறுபட்ட தொழில்நுட்பம் இல்லை. அதனால்தான் அவை ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி தேர்தல்களில் பயன்படுத்தப்படுவதில்லை.

    • துணை ஜனாதிபதியை பாராளுமன்ற இரு சபைகளின் எம்.பி.க்கள் ஓட்டு போட்டு தேர்ந்தெடுப்பார்கள்
    • பா.ஜ.க. கூட்டணிக்கு இரு அவைகளிலும் மொத்தம் 422 எம்.பி.க்கள் பலம் இருக்கிறது.

    துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் கடந்த ஜூலை மாதம் 21-ந்தேதி திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். உடல் நலக்குறைவு காரணமாக பதவியை ராஜினாமா செய்வதாக அவர் ஜனாதிபதியிடம் விளக்கம் அளித்தார்.

    இதையடுத்து புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கு தலைமை தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்து பட்டியல் வெளியிட்டது. பா.ஜ.க. கூட்டணி வேட்பாளராக தமிழ்நாட்டை சேர்ந்த மகாராஷ்டிரா மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டார். எதிர்க்கட்சிகள் கூட்டணியான இந்தியா கூட்டணி சார்பில் தெலுங்கானாவை சேர்ந்த சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி அறிவிக்கப்பட்டார்.

    கடந்த மாதம் அவர்கள் இருவரும் துணை ஜனாதிபதி பதவிக்கு தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்த னர். அதன் பிறகு அவர்கள் இருவரும் பாராளுமன்ற இரு அவைகளின் எம்.பி.க்களை சந்தித்து ஆதரவு திரட்டினார்கள்.

    பா.ஜ.க. கூட்டணிக்கு இரு அவைகளிலும் மொத்தம் 422 எம்.பி.க்கள் பலம் இருக்கிறது. ஆனால் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கு பெரும்பான்மை பெறும் வகையில் எம்.பி.க்கள் பலம் இல்லை. எனவே நாளை நடக்கும் தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெறுவது உறுதியாகி உள்ளது.

    இந்நிலையில், நாளை நடைபெறவுள்ள துணை ஜனாதிபதி தேர்தலை புறக்கணிப்பதாக சந்திரசேகர ராவின் பாரத் ராஷ்ட்ரிய சமிதி கட்சி அறிவித்துளளது

    முன்னதாக நவின் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் கட்சியும் துணை ஜனாதிபதி தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • துணை ஜனாதிபதியை பாராளுமன்ற இரு சபைகளின் எம்.பி.க்கள் ஓட்டு போட்டு தேர்ந்தெடுப்பார்கள்.
    • பா.ஜ.க. கூட்டணிக்கு இரு அவைகளிலும் மொத்தம் 422 எம்.பி.க்கள் பலம் இருக்கிறது.

    துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் கடந்த ஜூலை மாதம் 21-ந்தேதி திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். உடல் நலக்குறைவு காரணமாக பதவியை ராஜினாமா செய்வதாக அவர் ஜனாதிபதியிடம் விளக்கம் அளித்தார்.

    இதையடுத்து புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கு தலைமை தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்து பட்டியல் வெளியிட்டது. பா.ஜ.க. கூட்டணி வேட்பாளராக தமிழ்நாட்டை சேர்ந்த மகாராஷ்டிரா மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டார். எதிர்க்கட்சிகள் கூட்டணியான இந்தியா கூட்டணி சார்பில் தெலுங்கானாவை சேர்ந்த சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி அறிவிக்கப்பட்டார்.

    கடந்த மாதம் அவர்கள் இருவரும் துணை ஜனாதிபதி பதவிக்கு தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்த னர். அதன் பிறகு அவர்கள் இருவரும் பாராளுமன்ற இரு அவைகளின் எம்.பி.க்களை சந்தித்து ஆதரவு திரட்டினார்கள்.

    பா.ஜ.க. கூட்டணிக்கு இரு அவைகளிலும் மொத்தம் 422 எம்.பி.க்கள் பலம் இருக்கிறது. ஆனால் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கு பெரும்பான்மை பெறும் வகையில் எம்.பி.க்கள் பலம் இல்லை. எனவே நாளை நடக்கும் தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெறுவது உறுதியாகி உள்ளது.

    இந்நிலையில், நாளை நடைபெறவுள்ள துணை ஜனாதிபதி தேர்தலை புறக்கணிப்பதாக பிஜு ஜனதா தளம் கட்சி அறிவித்துளளது.

    பிஜு ஜனதா தளம் கட்சி மாநிலங்களவையில் 7 எம்.பி.க்களை கொண்டுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் இந்தியா கூட்டணிகளிடம் இருந்து சம தூரத்தில் தாங்கள் இருப்பதாகவும், ஒடிசாவின் வளர்ச்சியில் கவனம் செலுத்துவதே தங்களுக்கு முக்கியம் எனவும் அக்கட்சியின் எம்.பி. சஸ்மித் பத்ரா தெரிவித்தார். 

    • துணை ஜனாதிபதியை பாராளுமன்ற இரு சபைகளின் எம்.பி.க்கள் ஓட்டு போட்டு தேர்ந்தெடுப்பார்கள்.
    • பாராளுமன்ற மக்களவையில் ஒரு இடம் காலியாக இருப்பதால் மொத்தம் 542 எம்.பி.க்கள் உள்ளனர்.

    புதுடெல்லி:

    துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் கடந்த ஜூலை மாதம் 21-ந்தேதி திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். உடல் நலக்குறைவு காரணமாக பதவியை ராஜினாமா செய்வதாக அவர் ஜனாதிபதியிடம் விளக்கம் அளித்தார்.

    நாட்டின் 2-வது மிக உயர்ந்த அரசமைப்பு பதவியான துணை ஜனாதிபதி பதவியை நீண்ட நாட்களுக்கு காலியாக வைத்திருக்க கூடாது என்று சட்ட விதிகளில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இதையடுத்து புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கு தலைமை தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்து பட்டியல் வெளியிட்டது. அதன்படி கடந்த மாதம் 7-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.

    இதையடுத்து பா.ஜ.க. கூட்டணி வேட்பாளராக தமிழ்நாட்டை சேர்ந்த மகாராஷ்டிரா மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டார். எதிர்க்கட்சிகள் கூட்டணியான இந்தியா கூட்டணி சார்பில் தெலுங்கானாவை சேர்ந்த சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி அறிவிக்கப்பட்டார்.

    கடந்த மாதம் அவர்கள் இருவரும் துணை ஜனாதிபதி பதவிக்கு தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்த னர். அதன் பிறகு அவர்கள் இருவரும் பாராளுமன்ற இரு அவைகளின் எம்.பி.க்களை சந்தித்து ஆதரவு திரட்டினார்கள். நேற்று அவர்கள் இருவரும் தங்களது இறுதிக்கட்ட ஆதரவு திரட்டலை நடத்தி முடித்தனர்.

    துணை ஜனாதிபதியை பாராளுமன்ற இரு சபைகளின் எம்.பி.க்கள் ஓட்டு போட்டு தேர்ந்தெடுப்பார்கள். பாராளுமன்ற மக்களவையில் ஒரு இடம் காலியாக இருப்பதால் மொத்தம் 542 எம்.பி.க்கள் உள்ளனர்.

    பாராளுமன்ற மேல்சபையில் 5 எம்.பி.க்கள் இடங்கள் காலியாக உள்ளதால் 228 எம்.பி.க்கள் உள்ளனர். இது தவிர மேல்சபையில் 12 நியமன எம்.பி.க்கள் உள்ளனர்.

    மொத்தம் 782 எம்.பி.க் கள் நாளை (செவ்வாய்க்கிழமை) வாக்களிக்க தகுதியானவர்களாக உள்ளனர். இந்த 782 எம்.பி.க்களில் 392 வாக்குகள் பெறும் வேட்பாளர் வெற்றி பெறுவார். தற்போது பாராளுமன்ற இரு அவைகளில் பா.ஜ.க. கூட்டணிக்கு அதிக எம்.பி.க் கள் உள்ளனர்.

    பா.ஜ.க. கூட்டணிக்கு இரு அவைகளிலும் மொத்தம் 422 எம்.பி.க்கள் பலம் இருக்கிறது. ஆனால் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கு பெரும்பான்மை பெறும் வகையில் எம்.பி.க்கள் பலம் இல்லை. எனவே நாளை நடக்கும் தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெறுவது உறுதியாகி உள்ளது.

    இதற்கிடையே துணை ஜனாதிபதி தேர்தலில் ரகசிய வாக்குசீட்டு முறை கடைபிடிக்கப்பட இருப்பதால் தற்போதைய எண்ணிக்கையை விட கூடுதல் வாக்குகளை பெற வேண்டும் என்பதில் இரு கூட்டணிகளும் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன. ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் 11 எம்.பி.க்களும், பா.ஜ.க.வுக்கு ஆதரவாக வாக்களிக்கப்போவதாக அறிவித்து உள்ளனர்.

    இதனால் பா.ஜ.க. கூட் டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு 433 வாக்குகள் கிடைப்பது உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது. இது தவிர பிஜு ஜனதா தளத்தின் 7 எம்.பி.க்கள், பாரதீய ராஷ்டீரிய சமிதியின் 4 எம்.பி.க்கள் ஆதரவை பெற இரு கூட்டணிகளும் தீவிரமாக காய்களை நகர்த்தி வருகின்றன.

    பாராளுமன்றத்தில் சிறு கட்சிகளும், 3 சுயேட்சைகளும் உள்ளனர். அவர்கள் உள்பட 23 எம்.பி.க்களின் வாக்குகள் யாருக்கு கிடைக்கும் என்பது தெரியாமல் உள்ளது. அந்த வாக்குகளும் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கிடைத்தால் அவர் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வாய்ப்புள்ளது.



    துணை ஜனாதிபதி தேர்தல் நாளை பாராளுமன்ற வளாகத்தில் அறை எண். எப்.101 என்ற அரங்கத்தில் நடைபெறும். காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ஓட்டுப்பதிவு நடத்தப்பட உள்ளது.

    துணை ஜனாதிபதி தேர்தல் நடத்தும் அதிகாரியாக மேல்சபை செயலாளர் பி.சி.மோடி நியமிக்கப்பட்டு உள்ளார். அவர் ஓட்டுப்பதிவை கண்காணிப்பார். ஓட்டு போடுவதற்காக அனைத்துக் கட்சி எம்.பி.க்களும் டெல்லிக்கு சென்ற வண்ணம் உள்ளனர்.

    இன்று மாலைக்குள் அனைத்து எம்.பி.க்களும் டெல்லிக்கு வந்து விட வேண்டும் என்று பா.ஜ.க. உத்தரவிட்டுள்ளது. நாளை மாலை 5 மணிக்கு ஓட்டுப்பதிவு முடிந்ததும் உடனடியாக ஓட்டுக்கள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படும்.

    • 58 வயது பொறியாளரான ரஷீத் மீது ஜம்மு காஷ்மீரில் பிரிவினைவாதிகள் மற்றும் பயங்கரவாத குழுக்களுக்கு நிதி வழங்கியதாக குற்றச்சட்டு உள்ளது.
    • 2024 மக்களவைத் தேர்தலில் பாரமுல்லா தொகுதியில் உமர் அப்துல்லாவை ரஷீத் தோற்கடித்து எம்,பி ஆனார்.

    செப்டம்பர் 9 ஆம் தேதி நடைபெற உள்ள துணை ஜனாதிபதி தேர்தலில் பொறியாளர் ரஷீத் வாக்களிக்க டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

    வாக்களிக்க அனுமதி கோரிய ரஷீத்தின் மனுவை நேற்று நடந்த விசாரணையில் கூடுதல் அமர்வு நீதிபதி சந்தர் ஜீத் ஏற்றுக்கொண்டார். வாக்களிக்க நாடாளுமன்றத்திற்குச் செல்வதற்கான செலவுகளை ரஷீத் ஏற்க வேண்டும் என்றும், அதற்காக அவர் ஒரு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

    58 வயது பொறியாளரான ரஷீத் மீது ஜம்மு காஷ்மீரில் பிரிவினைவாதிகள் மற்றும் பயங்கரவாத குழுக்களுக்கு நிதி வழங்கியதாக குற்றச்சட்டு உள்ளது.

    2017 ஆம் ஆண்டு பயங்கரவாத நிதியுதவி வழக்கில், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் தேசிய புலனாய்வு முகமையால் (NIA) அவர் கைது செய்யப்பட்டார்.

    அவர் 2019 முதல் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் இருந்தபடியே 2024 மக்களவைத் தேர்தலில் பாரமுல்லா தொகுதியில் உமர் அப்துல்லாவை ரஷீத் தோற்கடித்து எம்,பி ஆனார்.

    முன்னதாக, பாராளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 4 வரை ரஷீத்துக்கு நீதிமன்றம் காவல் பரோல் வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.  

    • சல்வா ஜூடும்' சட்டவிரோதமானது என்று நீதிபதி சுதர்சன் ரெட்டி 2011 இல் தீர்ப்பளித்தார்.
    • சல்வா ஜூடும் இருந்திருந்தால், நக்சலைட் இயக்கம் 2020 ஆம் ஆண்டிலேயே முடிவுக்கு வந்திருக்கும்.

    செப்டம்பர் 9 அன்று நடைபெற உள்ள துணை ஜனாதிபதி தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சுதர்சன் ரெட்டி போட்டியிடுகிறார். என்டிஏ கூட்டணி சார்பில் ஆர்எஸ்எஸ் பின்னணி கொண்ட மகாராஷ்டிர ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் நிற்கிறார்.

    இதற்கிடையே கேரளாவில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அமித் ஷா, " இந்தியா கூட்டணி, நக்சலைட்டுகளின் தீவிர ஆதரவாளரான சுதர்சன் ரெட்டியை துணை ஜனாதிபதி வேட்பாளராகத் தேர்ந்தெடுத்துள்ளது.

    சத்தீஸ்கரில் நக்சலைட்டுகளுக்கு எதிராகப் போராட பழங்குடி இளைஞர்களைக் கொண்டு அரசாங்கம் உருவாக்கிய 'சல்வா ஜூடும்' சட்டவிரோதமானது மற்றும் அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று நீதிபதி சுதர்சன் ரெட்டி 2011 இல் தீர்ப்பளித்தார்.

    அந்தத் தீர்ப்பை அவர் வழங்கியிருக்காவிட்டால், சல்வா ஜூடும் நடைமுறையில் இருந்திருந்தால், நக்சலைட் இயக்கம் 2020 ஆம் ஆண்டிலேயே முடிவுக்கு வந்திருக்கும்.

    இடதுசாரிகளின் அழுத்தத்தின் பேரில்தான் காங்கிரஸ் கட்சி நீதிபதி சுதர்சன் ரெட்டியை துணை ஜனாதிபதி வேட்பாளராகத் தேர்ந்தெடுத்துள்ளது" என்று குற்றம் சாட்டினார்.

    அமித் ஷாவின் இந்த குற்றச்சாட்டு குறித்து விளக்கம் அளித்த சுதர்சன் ரெட்டி, "அந்த தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தால் வழங்கப்பட்டது, என்னால் தனிப்பட்ட முறையில் வழங்கப்பட்டது அல்ல. விவாதத்தில் கண்ணியம் இருக்க வேண்டும். ஆனால் இந்த விஷயத்தில் உள்துறை அமைச்சருடன் விவாதிக்க விரும்பவில்லை என்றும் கூறினார்.

    இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் சுதர்சன் ரெட்டியை நக்சல் ஆதரவாளர் என விமர்சித்த உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்றங்களின் ஓய்வு பெற்ற 18 நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியை கண்ணியத்துடன் விமர்சிக்க வேண்டும் என 18 முன்னாள் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

    ×