search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Biju Janata Dal"

    • பா.ஜனதா வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.
    • 24 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வந்தது.

    ஒடிசா மாநில சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. மொத்தமுள்ள147 தொகுதிகளில் 78 இடங்களை பா.ஜனதா கைப்பற்றியது.

    51 தொகுதிகளில் வெற்றி பெற்ற பிஜூ ஜனதா தளம் ஆட்சியை இழந்தது. அக்கட்சியின் 24 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வந்தது.

    இந்த நிலையில் மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் ஒடிசாவின் பா.ஜனதா முதல்-மந்திரியாக தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்பு உள்ளது.

    ஒடிசாவில் பா.ஜனதா ஆட்சியை பிடிக்க தர்மேந்திர பிரதான் முக்கிய பங்காற்றினார். அக்கட்சி ஒடிசாவில் அமோக வெற்றி பெற தேர்தல் அறிக்கையும் முக்கிய காரணமாகும்.

    அவர் தேர்தல் அறிக்கையை உருவாக்கிய குழுவை வழிநடத்தினார். இதில் நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3,100 வழங்கப் படும், சுபத்ரா யோஜனாவின் கீழ் பெண்களுக்கு ரூ. 50 ஆயிரம் ஆகிய வாக்குறுதிகள் ஒடிசா மக்களை வெகுவாக கவர்ந்தது.

    இதற்காக தர்மேந்திர பிரதானை பிரதமர் மோடி, மத்திய மந்திரி அமித்ஷா பாராட்டி இருந்தனர். மேலும் வி.கே. பாண்டியன் மீது விமர்சனம் மற்றும் பூரி ஜெகன்நாதர் கோவில் விவகாரம் குறித்து தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.

    இதையடுத்து தர்மேந்திர பிரதான் ஒடிசா முதல்-மந்திரி பதவிக்கான முதல் போட்டியாளராக உருவெடுத்துள்ளார்.

    • ஆந்திராவில் மக்களவைத் தேர்தலோடு சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடத்தப்பட்டுள்ளது.
    • ஒடிசாவில் உள்ள 147 தொகுதிகளில் ஆட்சியை பிடிக்க 74 இடங்கள் தேவை.

    ஆந்திராவில் மக்களவைத் தேர்தலோடு சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. இதன்படி 175 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த மே 13-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

    ஆந்திராவில் ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் 175 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது. தேசிய ஜனநாயக கூட்டணியில் சந்திரபாபு நாயுடுதலைமையிலான தெலுங்கு தேசம், ஜனசேனா, பாஜக ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

    இந்தியா கூட்டணியில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட் கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி இடையே நேரடி போட்டி நிலவுகிறது.

    கருத்துக் கணிப்பில் பாஜக கூட்டணி 98-120 தொகுதிகளைக் கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரசுக்கு 55-77 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஒடிசா

    ஒடிசாவில் 147 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் பா.ஜ.க. அதிக தொகுதிகளை பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அக்கட்சிக்கு 62 முதல் 80 இடங்கள் வரை கிடைக்க அதிக வாய்ப்புள்ளது.

    அதேநேரம், பிஜு ஜனதா தளம் (பிஜேடி) கட்சி 62 முதல் 80 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், ஒடிசாவில் அடுத்து யார் ஆட்சி என்பதில் பா.ஜ.க. மற்றும் பி.ஜே.டி. இடையே கடுமையான போட்டி இருக்கும். அதேநேரம், காங்கிரஸ் கட்சிக்கு இந்த தேர்தலில் 5 முதல் 8 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்பது கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

    இன்றைய கள நிலவரத்தை பொறுத்த வரையில் ஆந்திராவில் உள்ள 175 தொகுதிகளில் ஆட்சியை பிடிக்க 88 இடங்கள் தேவை. ஒடிசாவில் உள்ள 147 தொகுதிகளில் ஆட்சியை பிடிக்க 74 இடங்கள் தேவை. எனவே ஆந்திரா மற்றும் ஒடிசா மாநில சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியை அமைக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஏன் இதுபோல ஆதாரமே இல்லாமல் பேசுகிறார்கள்.
    • வி.கே.பாண்டியன் தனது அரசியல் வாரிசு இல்லை.

    புவனேஸ்வரம்:

    ஒடிசா மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலுடன், சட்டசபை தேர்தலும் நடக்கிறது. அங்கு பிஜு ஜனதாதளம் இப்போது ஆட்சியில் இருக்கும் நிலையில், அங்கு பா.ஜனதா கட்சி ஆட்சியை பிடிக்க தீவிரமாக முயன்று வருகிறது.

    ஒடிசாவில் ஆளும் பிஜு ஜனதா தளம் கட்சியில் முக்கிய தலைவராக இருப்பவர் வி.கே.பாண்டியன். தமிழகத்தை சேர்ந்த இவர் ஒடிசாவில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணிபுரிந்து வந்தவர். இவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பிஜு ஜனதா தளம் கட்சியில் இணைந்தார்.

    அதன் பிறகு தொடர்ச்சியாக அரசியலில் ஈடுபட்டு வருகிறார். அவரை குறிவைத்தே ஒடிசாவில் பா.ஜ.க. பிரசாரம் செய்தது.

    தமிழகத்தை சேர்ந்த ஒருவர் ஒடிசா மாநிலத்தை ஆள வேண்டுமா என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள் என்று பா.ஜ.க. அங்கு பிரசாரம் செய்தது. அதாவது நவீன் பட்நாயக்கிற்கு பிறகு பிஜு ஜனதா தளம் கட்சியின் தலைவராக வி.கே.பாண்டியன் தேர்வு செய்யப்படுவார் என்பதே பா.ஜ.க.வின் பிரசாரமாக இருந்தது.

    இதற்கிடையே இந்த விவகாரத்தில் ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக் விளக்கம் அளித்துள்ளார். வி.கே.பாண்டியன் தனது அரசியல் வாரிசு இல்லை என்பதை அவர் அதிரடியாக அறிவித்துள்ளார்.

    இதுகுறித்து நவீன் பட்நாயக் கூறியதாவது:-

    ஒடிசாவில் அனைத்து முடிவுகளையும் வி.கே.பாண்டியன் தான் எடுப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுவது அபத்த

    மானது. ஏற்கனவே இந்த விவகாரத்தில் நான் பல முறை விளக்கமளித்துவிட்டேன். இதில் ஒரு துளி கூட உண்மை இல்லை. வி.கே.பாண்டியனை எனது அரசியல் வாரிசாக சிலர் கூறுகிறார்கள். அது மிகைப்படுத்தப்பட்ட குற்றச்சாட்டு.

    என்ன ஒரு முட்டாள்தனமான பேச்சு. ஏன் இதுபோல ஆதாரமே இல்லாமல் பேசுகிறார்கள் என்பதை என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. அவர் தேர்தலில் கூட இதுவரை போட்டியிட்டது இல்லை.

    ஒடிசாவிலும் சரி, நாடு முழுவதும் சரி, பா.ஜ.க.வுக்கு எதிராக அதிருப்தி அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக விரக்தியடைந்த பா.ஜ.க.வினர் இதுபோல பேசி வருகிறார்கள் என்றே நான் கருதுகிறேன்.

    எனக்கு ஒரு அரசியல் வாரிசை உருவாக்கும் திட்டம் எதுவும் இல்லை. எனக்கு பிறகு யார் என்பதை ஒடிசாவில் உள்ள மக்கள் தான் முடிவு செய்வார்கள். இதை நான் ஏற்கனவே பலமுறை கூறிவிட்டேன். இவை எல்லாம் இயல்பாகவே நடக்கும். இத்தனை காலம் இந்த கட்சி எப்படி மக்களுக்கு சேவை செய்து வந்ததோ, அதுபோல வரும் காலத்திலும் தொடர்ந்து தானாகவே நடக்கும்.

    இந்த தேர்தலில் எங்கள் கட்சி வெற்றி பெற்றால் அடுத்த 5 ஆண்டுகளுக்கு நிச்சயமாக நான் தான் முதல்-மந்திரியாக இருப்பேன். நான் கடந்த 27 ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறேன். 27 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கட்சியின் தலைவர் பதவி எனக்கு வழங்கப்பட்டது. இதுவரை நான் அதை சிறப்பாக நடத்தி வருகிறேன். வரும் காலத்திலும் இதையே நான் தொடர்ந்து செய்வேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மோடி, ஒடிசாவில் பா.ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்.
    • முதல்-மந்திரியாக பதவி ஏற்கும் நிகழ்வுக்கு தற்போதே அழைப்பு விடுக்கிறேன்.

    பெர்காம்பூர்:

    ஒடிசாவில் பாராளுமன்ற தேர்தலும் (21 தொகுதி), சட்டசபை தேர்தலும் (147 இடங்கள்) இரண்டு கட்டங்களாக வருகிற 13 மற்றும் ஜூன் 1-ந்தேதி நடக்கிறது.

    பிரதமர் நரேந்திர மோடி இன்று ஒடிசாவில் பிரசாரம் செய்து பா.ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார். பெர்காமில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:-

    ஒடிசாவின் கடலோர பொருளாதாரத்தில் எங்கள் கவனம் உள்ளது. முதல் முறையாக மீன்வளத் துறை அமைச்சகத்தை உருவாக்கினோம். படகுகள் தயாரிக்க மானியம் வழங்கினோம். கிசான் கிரெடிட் கார்டுகளை வழங்கினோம். மீனவர்களுக்கு குறைந்த வட்டியில் கடன் உதவி வழங்கிேனாம்.

    ஒடிசாவில் இரண்டு மாற்றங்கள் நடந்து கொண்டு இருக்கிறது. ஒன்று நாட்டில் சக்தி வாய்ந்த அரசு அமைவதாகும். மற்றொன்று ஒடிசாவில் பா.ஜனதா ஆட்சி அமைவதற்கான மாற்றம்.

    ஜூன் 4-ந்தேதியுடன் ஒடிசாவில் பிஜு ஜனதா தளம் அரசு காலாவதியாகி விடும். இங்கு முதல் முறையாக இரட்டை என்ஜின் அரசாங்கம் விரைவில் அமைய உள்ளது. இது உங்களின் உற்சாகத்தில் இருந்து தெரிகிறது.

    பிஜு ஜனதா தளம் அரசு காலாவதி யாகும் நாளில் பா.ஜனதாவின் முதல்-மந்திரி யார்? என்பது அறிவிக்கப்படும்.புவனேஸ்வரில் ஜூன் 10-ந்தேதி அவர் முதல்-மந்திரியாக பதவிஏற்கும் நிகழ்வுக்கு தற்போதே உங்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறேன்.

    ஒடிசாவை பல ஆண்டுகளாக பிஜு ஜனதா தளம் ஆட்சி செய்து வருகிறது. இங்கு தண்ணீர், விவசாயம், நீண்ட கடற்பரப்பு, கனிம தாதுக்கள், வரலாறு, பாரம்பரியம் என அனைத்தும் உள்ளது. இருப்பினும் ஒடிசா மக்கள் ஏழைகளாக இருப்பது ஏன்?

    காங்கிரசும், பிஜு ஜனதா தளமும் கொள்ளையடித்தது தான் மக்களின் இந்த நிலைக்கு காரணம். பிஜு ஜனதா தளம் கட்சியில் சிறிய தலைவர்களும் பெரிய பங்களாக்களுக்கு சொந்தக்காரர்களாக உள்ளனர்.

    பிஜு ஜனதா தளம் அரசு ஆயுஷ்மான் பாரத் யோ ஜனா திட்டத்தை (மத்திய அரசின் பொது சுகாதார காப்பீடு திட்டம்) செயல்படுத் தாததால் ஒடிசா மாநிலம் பலன் அடையவில்லை.

    'ஜல் ஜீவன் மிஷன்' திட்டத்தின் கீழ் ஒடிசாவுக்கு மத்திய அரசு ரூ. 10 ஆயிரம் கோடி வழங்கியது. ஆனால் பிஜு ஜனதா தள அரசு பணத்தை சரியாக செலவழிக்கவில்லை.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

    • ஒடிசாவில் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டசபைக்கும் தேர்தல் நடக்கிறது.
    • முதல்-மந்திரி நவீன்பட்நாயக்கின் சிறந்த மதிப்புகளுக்கு நான் இயற்கையான வாரிசு.

    புவனேசுவரம்:

    ஒடிசா மாநிலத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணியாற்றியவர் வி,கே.பாண்டியன். தமிழகத்தை சேர்ந்தவரான இவர், முதல்-மந்திரி நவீன்பட்நாயக்கின் சிறப்பு ஆலோசகராக பணியாற்றினார். பின்னர் அவரது அழைப்பின்பேரில், விருப்ப ஓய்வு பெற்று பிஜூ ஜனதா தளத்தில் இணைந்தார். தற்போது நவீன்பட்நாயக்கின் அரசியல் ஆலோசகராக உள்ளார்.

    தற்போது ஒடிசாவில் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டசபைக்கும் தேர்தல் நடக்கிறது. இதில் வி.கே.பாண்டியன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். இதனிடையே நேற்று புவனேசுவரத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    முதல்-மந்திரி நவீன்பட்நாயக் எனது குரு. நான் அவருடை சீடன். கட்சியில் நான் எந்த பொறுப்பிலும் இல்லை. சாதாரண வீரன்தான். ஒடிசா மக்களுக்காக நவீன்பட்நாயக் சிறப்பான சேவையாற்றி வருகிறார். அவருக்கு கீழ் பணியாற்றுவதை நான் பெருமையாக கருதுகிறேன். முதல்-மந்திரி நவீன்பட்நாயக்கின் சிறந்த மதிப்புகளுக்கு நான் இயற்கையான வாரிசு. பா.ஜனதாவினர் அரசியல் காரணங்களுக்காக என்னை அந்நியன் என்று கூறுகிறார்கள். ஆனால் ஒடிசா மக்கள் என்னை அப்படி சொல்லவில்லை. நான் ஒடிசாவில் 25 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன். ஒடிசா மக்கள் என்னையும் அவர்களில் ஒருவராகப் பார்க்கிறார்கள். மிகவும் நேசிக்கிறார்கள். என்னை பலவீனப்படுத்த பா.ஜனதாவினர் இதுபோன்று கூறுகிறார்கள்.

    இவ்வாறு வி.கே.பாண்டியன் கூறினார்.

    • மூன்றாவது அணிக்கான முயற்சிகளில் பீகார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தளம் தலைவருமான நிதிஷ் குமார் ஈடுபட்டுள்ளார்.
    • ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், டெல்லியில் இன்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத் தேர்தலில் பாஜகவை தோற்கடிப்பதற்காக எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சியில் பல்வேறு தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் முயற்சிகளுக்கு வலு சேர்க்கும் வகையில் அடுத்தடுத்த சந்திப்புகள் நடக்கின்றன.

    அதேசமயம், மூன்றாவது அணிக்கான முயற்சிகளில் பீகார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தளம் தலைவருமான நிதிஷ் குமார் ஈடுபட்டுள்ளார். அவர் கடந்த சில தினங்களுக்கு முன் ஒடிசா சென்று, அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக்கை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது மூன்றாவது அணி தொடர்பாக பேசியிருக்கலாம் என தகவல் வெளியானது.

    இந்நிலையில் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், டெல்லியில் இன்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், பிரதமரை மரியாதை நிமித்தமாக சந்தித்ததாகவும், புவனேஸ்வரில் உள்ள சர்வதேச விமான நிலையத்தை புரிக்கு மாற்றுவது தொடர்பாக பேசியதாகவும் தெரிவித்தார். டெல்லியில் வேறு எந்த தலைவர்களையும் சந்திக்கும் திட்டம் இல்லை என்றும் கூறினார்.

    நிதிஷ் குமாருடான சந்திப்பு மற்றும் மூன்றாவது அணி குறித்து நிருபர்கள் கேட்டதற்கு, 'என்னை பொருத்தவரை மூன்றாம் அணிக்கு வாய்ப்பில்லை. வரும் 2024 பாராளுமன்றத் தேர்தலில் எந்த எதிர்க்கட்சி தலைவர்களுடனும் பிஜூ ஜனதா தளம் கூட்டணி வைக்காது, தனித்து போட்டியிடும்' என்றார்.

    ஒடிசா சட்டசபை தேர்தலில் அதிக இடங்களை வென்ற பிஜு ஜனதா தளம் தலைவர் நவீன் பட்நாயக் இன்று கவர்னரை சந்தித்து எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடித்தத்தை அளித்தார்.
    புவனேஸ்வர்:

    ஒடிசா மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஆளுங்கட்சியான பிஜு ஜனதா தளம் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. மொத்தம் உள்ள 147 தொகுதிகளில் 112 தொகுதிகளில் பிஜு ஜனதா தளம் வெற்றி பெற்றுள்ளது.

    பாஜக 23 தொகுதிகளில் வெற்றி பெற்றதுடன், காங்கிரசை பின்னுக்குத் தள்ளி பிரதான எதிர்க்கட்சியாக உருவாகி உள்ளது. காங்கிரஸ் 9 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியது.  

    இந்த தேர்தலில் நவீன் பட்நாயக், ஹிஞ்சிலி தொகுதியில் பாஜக வேட்பாளர் பீதாம்பர் ஆச்சார்யாவை 60,160 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.



    இந்நிலையில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிஜு ஜனதா தளம் எம்எல்ஏக்களின் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் சட்டசபை கட்சி தலைவராக நவீன் பட்நாயக் தேர்வு செய்யப்பட்டார். பின்னர், ஒடிசா கவர்னர் கணேஷி லால்-ஐ சந்தித்த நவீன் பட்நாயக், எம்.எல்.ஏ.க்களின் கையொப்பத்துடன் கூடிய ஆதரவு கடிதத்தை அவரிடம் அளித்தார். ஆட்சி அமைக்க வருமாறு நவீன் பட்நாயக்குக்கு கவர்னர் அழைப்பு விடுத்தார்.

    ஒடிசா முதல்வராக 2000ல் முதல் முறையாக பதவியேற்ற நவீன் பட்நாயக், அதன்பின்னர் நடந்த அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்றுள்ளது  குறிப்பிடத்தக்கது.

    பிஜு ஜனதா தளம் கட்சி பிரமுகர்கள் முன்னர் தெரிவித்திருப்பதைப்போல் நவீன் பட்நாயக் ஐந்தாவது முறையாக வரும் 29-ம் தேதி அம்மாநிலத்தின் முதல் மந்திரியாக பதவியேற்பார் என தெரிகிறது.  
    ஒடிசா மாநில சட்டமன்றத் தேர்தலில் பிஜு ஜனதா தளம் தனிபெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ள நிலையில், நவீன் பட்நாயக் 29-ம் தேதி முதல்வராக பதவியேற்க உள்ளார்.
    புவனேஸ்வர்:

    ஒடிசா மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஆளுங்கட்சியான பிஜு ஜனதா தளம் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. மொத்தம் உள்ள 147 தொகுதிகளில் 112 தொகுதிகளில் பிஜு ஜனதா தளம் வெற்றி பெற்றுள்ளது. பாஜக 23 தொகுதிகளில் வெற்றி பெற்றதுடன், காங்கிரசை பின்னுக்குத் தள்ளி பிரதான எதிர்க்கட்சியாக உருவாகி உள்ளது. காங்கிரஸ் 9 தொகுதிகளை கைப்பற்றியது.

    இந்நிலையில், ஒடிசா மாநிலத்தின் புதிய அரசு வரும் 29-ம் தேதி பதவியேற்கும் என்றும், தொடர்ந்து 5வது முறையாக நவீன் பட்நாயக் முதல்வராக பதவியேற்க உள்ளதாகவும் பிஜு ஜனதா தளம் தலைமை இன்று தெரிவித்துள்ளது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிஜு ஜனதா தளம் எம்எல்ஏக்களின் கூட்டம் நாளை நடைபெறுகிறது. இக்கூட்டத்தில், சட்டமன்ற கட்சி தலைவராக நவீன் பட்நாயக் தேர்வு செய்யப்படுகிறார்.



    இந்த தேர்தலில் நவீன் பட்நாயக், ஹிஞ்சிலி தொகுதியில் பாஜக வேட்பாளர் பீதாம்பர் ஆச்சார்யாவை 60,160 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். ஒடிசா முதல்வராக 2000ல் முதல் முறையாக பதவியேற்ற நவீன் பட்நாயக், அதன்பின்னர் நடந்த அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்றுள்ளது  குறிப்பிடத்தக்கது.

    பாராளுமன்றத் தேர்தலைப் பொருத்தவரை, ஒடிசாவில் பிஜு ஜனதா தளம் 12 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பாஜக 8 தொகுதிகளையும், காங்கிரஸ் ஒரு தொகுதியையும் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
    ஒடிசாவின் பலசோர் தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய முதல் மந்திரி நவீன் பட்நாயக், என் பதவியேற்பு விழாவுக்கு மோடி கண்டிப்பாக வரவேண்டும் என கிண்டலாக குறிப்பிட்டுள்ளார். #LokSabhaElections2019 #NaveenPatnaik #PMModi
    புவனேஷ்வர்:

    ஒடிசா மாநிலத்தின் பலசோர் பாராளுமன்ற தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், சட்டசபை தேர்தலில் நவீன் பட்நாயக் வீட்டுக்கு சென்ற பின்னரே நான் ஒடிசாவுக்கு வருவேன் என குறிப்பிட்டார்.

    இந்நிலையில், ஒடிசாவின் பலசோர் பாராளுமன்ற தொகுதியில் முதல் மந்திரி நவீன் பட்நாயக் தேர்தல் பிரசார கூட்டத்தில் இன்று பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:



    ஒடிசாவில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் வறட்சியை பார்வையிட பிரதமர் மோடி பார்வையிட வரவில்லை. அதை பார்வையிட அவருக்கு நேரமும் இல்லை.

    நடைபெற்று முடிந்த மூன்று கட்ட பாராளுமன்ற தேர்தலின் நிலவரத்தை வைத்துப் பார்த்தால், மே 23ம் தேதிக்கு பிறகு நீங்கள் ஆட்சியில் இருக்க மாட்டீர்கள். எனவே, நான் மீண்டும் முதல்வராக பதவியேற்கும் விழாவுக்கு நீங்கள் கண்டிப்பாக வரவேண்டும் என கிண்டலாக தெரிவித்துள்ளார். #LokSabhaElections2019 #NaveenPatnaik #PMModi
    ஒடிசாவில் விவசாயிகள் 10 ஆயிரம் ரூபாய் நிதியுதவி பெறும் ’காலியா’ திட்டத்தை தடுக்க கூடாது என அம்மாநில தேர்தல் கமிஷனுக்கு ஆளும்கட்சியான பிஜு ஜனதா தளம் கோரிக்கை விடுத்துள்ளது. #BJD #CEO #KALIAassistance
    புவனேஸ்வர்:

    ஒடிசா மாநில முதல் மந்திரி நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் அரசில் விவசாயிகள் நலனுக்காக 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 'காலியா’ என்னும் சிறப்பு திட்டம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.

    10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தின் மூலம் அம்மாநிலத்தில் உள்ள சுமார் 35 லட்சம் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 10 ஆயிரம் ரூபாய் நிதியுதவி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.

    இந்த அறிவிப்பின்படி சில லட்சம் விவசாயிகளின் வங்கி கணக்குகளில் பணம் செலுத்தப்பட்டுள்ளது. மேலும் பல லட்சம் பேருக்கு பணம் செலுத்தப்படவுள்ளது.



    இதற்கிடையில், பாராளுமன்ற தேர்தல் மற்றும் ஒடிசா மாநில சட்டசபை தேர்தல்கள் நடப்பதால் தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி இந்த நிதியுதவியை நிறுத்தி வைக்க வேண்டும் என பாஜக மற்றும் இதர கட்சிகளின் சார்பில் தேர்தல் கமிஷனுக்கு அழுத்தம் தரப்படுவதாக தகவல்கள் வெளியாகின.

    இந்நிலையில், பாஜகவின் அழுத்தத்துக்கு அடிபணிந்து ’காலியா’ திட்டத்தை தடுக்க கூடாது என அம்மாநில தேர்தல் கமிஷனுக்கு ஆளும்கட்சியான பிஜு ஜனதா தளம் சார்பில் இன்று கோரிக்கை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. #BJD #CEO #KALIAassistance
    ×