search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Janasena"

    • மக்களவை தேர்தலுடன் ஆந்திராவில் சட்டமன்ற தேர்தலும் நடைபெறும்.
    • ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ்க்கு எதிராக தெலுங்குதேசம், ஜனசக்தி கட்சிகள் களம் இறங்கும் நிலையில் கிண்டல்.

    ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியும், பவன்கல்யாண் ஜனசேனா கட்சியும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு எதிராக சட்டசபை தேர்தலில் களம் காண இருக்கின்றன. மக்களவை தேர்தல் உடன் ஆந்திர மாநில சட்டசபை தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது.

    இதனால் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவரும், முதல்-மந்திரியுமான ஜெகன்மோகன் ரெட்டி தெலுங்கு தேசம் கட்சியை எதிர்த்து பிரசாரத்தை தொடங்கி உள்ளார்.

    நேற்று இரவு அவர் அமராவதி மாவட்டத்தில் நடந்த பிரமாண்ட கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில், "தெலுங்கு தேசம் கட்சியின் சின்னம் சைக்கிள். அதை நாம் வீட்டின் நடு அறையில் கொண்டு வைக்க முடியாது. வீட்டுக்கு வெளியில்தான் வைக்க வேண்டும்.

    ஜனசக்தியின் தேர்தல் சின்னம் டீ டம்ளர். பயன்படுத்திய டம்ளர் சமையறையின் சிங்க்-ல் (sink) வைக்க வேண்டும். ஆனால் ஒய்.எஸ்.ஆர் காங்கிரசின் சின்னம் மின் விசிறி. அது எப்போதும் வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும். அதுபோல ஒய்.எஸ்.ஆர். காங்கிரசை வீட்டுக்குள்ளே வைத்துக்கொள்ள மக்கள் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ்க்கு ஆதரவாக வாக்களிப்பார்கள். தெலுங்குதேசம், ஜனசேனாவிற்கு எதிராக வாக்களிப்பார்கள்" என்று கிண்டல் செய்தார்.

    சி.பி.ஐ. முன்னாள் இணை இயக்குநர் வி.வி. லக்‌ஷ்மிநாராயணா விஜயவாடாவில் இன்று நடிகர் பவன் கல்யாண் முன்னிலையில் ஜனசேனா கட்சியில் சேர்ந்தார். #FormerCBIJD #Lakshminarayana #Janasena #PawanKalyan
    ஐதராபாத்:

    ஆந்திர மாநிலத்தின் எதிர்க்கட்சி தலைவரும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டிக்கு எதிரான ஊழல் வழக்குகளை விசாரணை செய்த சி.பி.ஐ. சிறப்பு குழுவில் முன்னர் இணை இயக்குநராக பதவி வகித்தவர் வி.வி. லக்‌ஷ்மிநாராயணா.

    பின்னர் தனது பதவியை ராஜினாமா செய்த அவர், சமூகச்சேவைகளில் ஈடுபடப்போவதாக தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், விஜயவாடாவில் இன்று நடிகர் பவன் கல்யானை சந்தித்த லக்‌ஷ்மிநாராயணா, அவரது தலைமையிலான ஜனசேனா கட்சியில் இணைந்தார். இதேபோல், ஸ்ரீ கிருஷ்ணதேவராயர் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தரும் இன்று ஜனசேனாவில் இணைந்தார்.



    இந்த இணைப்பு நிகழ்ச்சியின்போது செய்தியாளர்களிடையே பேசிய பவன் கல்யாண், வரும் தேர்தலில் கூட்டணி தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவித்தார். #FormerCBIJD #Lakshminarayana #Janasena  #PawanKalyan
    ×