என் மலர்
நீங்கள் தேடியது "தெலுங்கு தேசம்"
- 30 ஆண்டுகளுக்கு பிறகு புலிவேந்துலாவில் உள்ள ஒண்டிமிட்டா உள்ளாட்சிக்கு தேர்தல் நடைபெற்றுள்ளது.
- ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி வேட்பாளர் 700க்கும் குறைவான வாக்குகளைப் பெற்று டெபாசிட் இழந்தார்.
ஜெகன் ரெட்டியின் சொந்த தொகுதியில் நடைபெற்ற உள்ளாட்சி இடைத்தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி டெபாசிட் இழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஜெகன் ரெட்டியின் சொந்த தொகுதியான புலிவேந்துலாவில் நடைபெற்ற ஒண்டிமிட்டா உள்ளாட்சி இடைத்தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி டெபாசிட் இழந்தது.
தெலுங்கு தேச கட்சியின் வேட்பாளர் மாரெட்டி லதா ரெட்டி 6,735 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி வேட்பாளர் 700க்கும் குறைவான வாக்குகளைப் பெற்று டெபாசிட் இழந்தார்.
கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு பிறகு புலிவேந்துலாவில் உள்ள ஒண்டிமிட்டா உள்ளாட்சிக்கு தேர்தல் நடைபெற்றுள்ளது. இதற்கு முன்பு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி இந்த தொகுதியில் போட்டியின்றி வெற்றி பெற்று வந்துள்ளனர்.
- ஆளும் தெலுங்கு தேசம் கட்சி (TDP) உறுப்பினர் எஸ். மணிகப்பா கைதுசெய்யப்பட்டார்.
- மணிகப்பா உடன், அவரது மனைவி மற்றும் அவரது மனைவியின் மைத்துனியும் சிரிஷாவை தாக்கியுள்ளனர்.
ஆந்திரப் பிரதேச மாநிலம் சித்தூர் மாவட்டம் நாராயணபுரம் கிராமத்தில், கணவர் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தாததால், மனைவியை மரத்தில் கட்டி வைத்து அடித்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஆளும் தெலுங்கு தேசம் கட்சி (TDP) உறுப்பினர் எஸ். மணிகப்பா என்பவர், 28 வயதான சிரிஷா என்பவரை, அவரது இரண்டு குழந்தைகள் முன்னிலையில் வீட்டிலிருந்து இழுத்துச் சென்று மரத்தில் கட்டி வைத்து அடித்ததாக போலீசார் தெரிவித்தனர்.
சிரிஷாவின் கணவர் ஆர். திம்மப்பா, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மணிகப்பாவிடம் ரூ.80,000 கடன் வாங்கியுள்ளார். திம்மப்பா பெங்களூரு சென்றிருந்த நிலையில், தவணைகள் நிறுத்தப்பட்டதால், சிரிஷாவை தாக்கியுள்ளனர்.
மணிகப்பா உடன், அவரது மனைவி மற்றும் அவரது மனைவியின் மைத்துனியும் சிரிஷாவை தாக்கியுள்ளனர்.
இந்த கொடூர சம்பவத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, மணிகப்பா உட்பட ஐந்து பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
- இன்று ஆந்திர பிரதேசம் என்ன நினைக்கிறதோ?, அதை இந்தியா நாளை நினைக்கும்.
- இது பலமுறை நிரூபணம் ஆகியுள்ளது.
ஆந்திரா மாநிலத்தில் தெலுங்கு தேசம் கட்சி மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்றது. பாஜக மற்றும் பவன் கல்யாண் கட்சிகளுடன் கூட்டணி அமைப்பு போட்டியிட்டது. மத்தியில் சந்திரபாபு நாயுடு கட்சி ஆதரவு கொடுத்துள்ளதால் பாஜக ஆட்சி அமைத்துள்ளது. தெலுங்குதேசம் கட்சி எம்.பி.க்கள் மத்திய மந்திரிகளாக உள்ளனர்.
இந்த நிலையில் தெலுங்குதேசம் கட்சி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பேசிய சந்திரபாபு நாயுடு பல்வேறு காலக்கட்டத்தில் மத்திய அரசுகள் எடுத்த பல முடிவுகளில் தெலுங்குதேசம் கட்சி முக்கிய பங்கு வகித்தது எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சந்திரபாபு நாயுடு கூறியதாவது:-
மத்திய அரசுகள் பல்வேறு காலக்கட்டங்களில் எடுத்துள்ள பல்வேறு முடிவுகளில் தெலுங்குதேசம் கட்சி முக்கிய பங்கு வகித்துள்ளது. இன்று ஆந்திர பிரதேசம் என்ன நினைக்கிறதோ?, அதை இந்தியா நாளை நினைக்கும். இது பலமுறை நிரூபணம் ஆகியுள்ளது.
நாட்டில் பல அரசியல் கட்சிகள் உள்ளன. ஆனால் மக்களின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்திய ஒரே கட்சி தெலுங்கு தேசம் கட்சி மட்டுமே. அமைப்பு (organisational) வலிமையைப் பொறுத்தவரை, தெலுங்கு தேசம் நாட்டின் வலிமையான கட்சிகளில் ஒன்றாகும்.
கடந்த 43 வருடங்களாக தெலுங்குதேசம் கட்சி பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ளது. இந்த கட்சி அவ்வளவுதான் (அழிந்து விட்டது) என ஏராளமானோர் கூறினர். ஆனால், தெலுங்குதேசம் கட்சியின் கொடி எப்போதும் உயரே பறந்து கொண்டிருக்கிறது.
இவ்வாறு சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
- இந்தியா கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளும் மசோதாவை எதிர்ப்பதாகத் தெரிவித்துள்ளன.
- முஸ்லிம் மற்றும் சிறுபான்மை நலனுக்கான எங்களின் அர்ப்பணிப்பைக் காட்டுகிறது.
வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவைப் பாராளுமன்ற மக்களவையில் இன்று சிறுபான்மையினர் விவகாரத்துறை மற்றும் பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தாக்கல் செய்து பேசினார். இந்த திருத்த மசோதா மீது 8 மணி நேரம் விவாதம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளும் மசோதாவை எதிர்ப்பதாகத் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் பாஜகவின் என்டிஏ கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.
அக்கட்சியை சேர்ந்த எம்.பி. கிருஷ்ண பிரசாத் தென்னேட்டி இன்று பாராளுமன்ற விவாதத்தின்போது பேசியதாவது, "இந்த மசோதாவை வடிவமைப்பதில் தெலுங்கு தேசம் கட்சியின் பங்கு, முஸ்லிம்களமற்றும் சிறுபான்மையினரின் நலனுக்கான எங்களின் அர்ப்பணிப்பைக் காட்டுகிறது.
எங்கள் கட்சி உருவானதிலிருந்து சிறுபான்மையினரின் நலனை உறுதி செய்வது எப்போதும் முதன்மையான முன்னுரிமையாக இருந்து வருகிறது" என்று மசோதாவை ஆதரித்துப் பேசினார்.
- கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தேர்தலில் வெற்றி பெற்று ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியைப் பிடித்தார்.
- 10,000 மேற்பட்ட விவசாயிகள் அமராவதியில் தலைமை செயலகம் அறிவிக்க வேண்டும் என மாநிலம் முழுவதும் நடைபயணம் சென்றனர்.
திருப்பதி:
கடந்த தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியில் இருந்தபோது ஆந்திராவை, ஆந்திரா, தெலுங்கானா என இரண்டு மாநிலங்களாக பிரிக்கப்பட்டன.
அப்போது ஆட்சியில் இருந்த சந்திரபாபு நாயுடு ஆந்திராவின் தலைநகரமாக அமராவதியை அறிவித்து விவசாயிகளிடம் இருந்து நிலங்களை கையகப்படுத்தி தலைமைச் செயலகம் கட்டுப்பணி நடைபெற்று வந்தது.
அதன் பின்னர் கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தேர்தலில் வெற்றி பெற்று ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியைப் பிடித்தார்.
அவர் ஆட்சிக்கு வந்ததும் ஆந்திராவில் நிர்வாக வசதிக்காக 3 தலைநகரங்கள் அமைக்கப்படும் என அறிவித்தார். அவரது அறிவிப்புக்கு தெலுங்கு தேசம், பாஜக, காங்கிரஸ், ஜனசேனா உள்ளிட்ட அரசியல் கட்சியினர் மற்றும் அமராவதியில் தலைமைச் செயலகம் கட்ட நிலம் கொடுத்த விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும் 10,000 மேற்பட்ட விவசாயிகள் அமராவதியில் தலைமை செயலகம் அறிவிக்க வேண்டும் என மாநிலம் முழுவதும் நடைபயணம் சென்றனர்.
இந்த நிலையில் நேற்று டெல்லியில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் நடந்தது.
வரும் மார்ச் மாதம் 3 அல்லது 4 தேதியில் ஆந்திராவின் தலைநகராக விசாகப்பட்டினம் அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.
அவரது அறிவிப்புக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தெலுங்கு தேசம் கட்சியின் மாநில பொறுப்பாளர் அச்சம் நாயுடு கூறுகையில்:-
கடந்த 2019-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ஆந்திராவில் ஒரே தலைநகரம் அமராவதி என தேர்தல் நேரத்தில் பேசி வந்த ஜெகன்மோகன் ரெட்டி தற்போது விசாகப்பட்டினம் தலைநகரம் என அறிவித்து நாட்டு மக்களிடையே பிளவை ஏற்படுத்தி மாநிலத்தை பிரிக்க பார்ப்பதாக குற்றம்சாட்டினார்.
- அடுத்த ஆண்டு கண்டிப்பாக ஜனசேனா கட்சி ஆந்திர சட்டமன்றத்திற்குள் பெருவாரியான எம்.எல்.ஏ.க்களுடன் நுழையும்.
- பவன் கல்யாணின் முதல்வர் பதவி கனவு, சந்திரபாபு நாயுடு தரப்பை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
திருமலை:
ஆந்திர மாநிலத்தில் அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தலுடன் சேர்த்து சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது.
இந்த தேர்தலில் பா.ஜ.க., தெலுங்கு தேசம் கட்சியுடன் இணைந்து நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி போட்டியிடும் என தெரிகிறது.
அதற்கேற்ப அக்கட்சியின் தலைவரான நடிகர் பவன்கல்யாண் நேற்று முன்தினம் தனது வாராஹி யாத்திரை தொடங்கினார்.
கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் காக்கிநாடா அருகே உள்ள கத்திப்புடி பகுதியில் நடந்த பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் அவரது 'வராஹி' எனப்படும் பிரத்யேக நவீன வசதியுடன் கூடிய வாகனத்தில் நின்றபடி பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் நானும் ஒருவன். சம்பாதிப்பது மட்டுமே நோக்கமாக இருந்திருந்தால் வெறும் நடிகனாக மட்டுமே இருக்க முடியும்.
ஆனால் மக்களுக்கு நல்லது செய்வதற்காகத்தான் அரசியலுக்கு வந்தேன். எனது பிள்ளைகளுக்காக சேர்த்த சொத்துக்களை விற்று கட்சி தொடங்கி நடத்தி வருகிறேன்.
தற்போதைய ஆந்திர முதல்வர், அமைச்சர்கள் மற்றும் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்கள் உட்பட அனைவரும் எனது தனிப்பட்ட வாழ்க்கை முறை குறித்து விமர்சிக்கின்றனர்.
அடுத்த ஆண்டு கண்டிப்பாக ஜனசேனா கட்சி ஆந்திர சட்டமன்றத்திற்குள் பெருவாரியான எம்.எல்.ஏ.க்களுடன் நுழையும்.
தேவைப்பட்டால் முதல்வராக அமர்வேன். கூட்டணியுடன் வருவேனோ அல்லது தனித்து வருவேனோ என சில மாதங்களில் தெரிந்து கொள்வீர்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
பவன் கல்யாணின் முதல்வர் பதவி கனவு, சந்திரபாபு நாயுடு தரப்பை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
பவன்கல்யாண் மற்றும் பாஜக கூட்டணியுடன் ஆட்சியை பிடிக்க சந்திரபாபு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார். அந்த கட்சிகளுக்கு 80 தொகுதிகளை ஒதுக்க முடிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் இதுபோன்ற பிரசாரத்தால் கூட்டணிக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆந்திர மாநில அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- முன்னாள் துணை முதல்வர் நிம்மகாயல சின்னராஜப்பா உரையாற்றியபோது பலத்த காற்று வீசியது.
- முன்னாள் எம்.பி. மகந்தி பாபுவின் காலில் பலத்த காயம் ஏற்பட்டது.
ஆந்திர மாநிலம் ஏலூரு மாவட்டம் பட்டுலவாரி குடமில் இன்று இரவு தெலுங்கு தேசம் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னாள் துணை முதல்வர் நிம்மகாயல சீனராஜப்பா உரையாற்றியபோது பலத்த காற்று வீசியது. மேடை ஆட்டம் கண்டது. எனினும் அவர் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தார். மேடையில் சிந்தமனேனி பிரபாகர், பீதலா சுஜாதா, மகந்தி பாபு மற்றும் நிர்வாகிகள் அமர்ந்திருந்தனர்.
அப்போது, காற்றின் வேகத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் மேடை மொத்தமாக சரிந்தது. மேடையில் இருந்த சீனராஜப்பா, உள்ளிட்ட அனைவரும் மேடையுடன் விழுந்தனர். இதில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். முன்னாள் எம்.பி. மகந்தி பாபுவின் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. காயமடைந்த அனைவரும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த விபத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- பாதயாத்திரை சென்ற சாலைகளில் கற்கள் மற்றும் கட்டைகள் வைத்து தடுப்பு ஏற்படுத்தப்பட்டு இருந்தது.
- பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்களை கட்டுப்படுத்தினர்.
திருப்பதி:
ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது மகன் நாரா லோகேஷ் பாதயாத்திரை மேற்கொண்டு வருகின்றனர்.
நாரா லோகேஷ் யுவகலம் என்ற பெயரில் பாதயாத்திரை நடத்தி வருகிறார். மேற்கு கோதாவரி மாவட்டம், பீமாவரம் மண்டலம், தாடேரு என்ற இடத்தில் லோகேஷ் மற்றும் தொண்டர்கள் நேற்று பாதயாத்திரையாக நடந்து சென்றனர்.
அப்போது பாதயாத்திரை சென்ற சாலைகளில் கற்கள் மற்றும் கட்டைகள் வைத்து தடுப்பு ஏற்படுத்தப்பட்டு இருந்தது. பாதயாத்திரை சென்ற இடங்களில் தெலுங்கு தேசம் கட்சியினர் லோகேஷை வரவேற்று பேனர்கள் வைத்திருந்தனர்.
பேனர்களை அகற்றும் படி போலீசார் தெலுங்கு தேசம் தொண்டர்களிடம் தெரிவித்தனர். இதனால் தெலுங்கு தேசம் தொண்டர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த ஒய். எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் பேனர்களை கிழித்தனர்.
மேலும் அங்குள்ள கட்டிட மாடிகளில் இருந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் தங்களது கட்சி கொடியை காண்பித்தபடி பாதயாத்திரையில் கற்கள் மற்றும் கம்புகளை சரமாரியாக வீசி தாக்கினர்.
இந்த தாக்குதலில் தெலுங்கு தேசம் கட்சி முன்னாள் எம்.எல்.ஏ. சிவராமராஜு, தொண்டர்கள் மற்றும் போலீசார் காயம் அடைந்தனர். பாதயாத்திரையில் சென்ற வாகனங்கள் கல்வீசி உடைக்கப்பட்டன.
பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்களை கட்டுப்படுத்தினர்.
தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெலுங்கு தேசம் கட்சியினர் குற்றம் சாட்டினர். போலீசார் அனுமதி வழங்கப்பட்ட வழித்தடத்தில் மட்டுமே பாதையாத்திரை சென்றதாகவும் போலீசார் உரிய பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால் போலீஸ் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விளக்கம் அளிக்க வேண்டும் எனக்கூறி பாதயாத்திரையை அப்பகுதியிலேயே நிறுத்தினர்.
இதையடுத்து கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மீண்டும் பாதயாத்திரை தொடங்கியது.
- தெலுங்கு தேசம் கட்சி அலுவலகத்தில் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடந்தது.
- 2 கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
திருப்பதி:
ஆந்திர மாநிலத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தெலுங்கு தேசம் கட்சியுடன் நடிகர் பவன்கல்யாணின் ஜனசேனா கட்சி கூட்டணி அமைத்து உள்ளது.
மாநிலம் முழுவதும் தெலுங்கு தேசம், ஜனசேனா கட்சிகள் இணைந்து அந்தந்த பகுதியில் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடத்தி ஒற்றுமையை நிலை நாட்ட வேண்டும் என கட்சி தலைமை நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தி உள்ளது.
இந்த நிலையில் ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டம் பித்தம் புறத்தில் உள்ள தெலுங்கு தேசம் கட்சி அலுவலகத்தில் நேற்று ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு தெலுங்கு தேசம் கட்சியின் தொகுதி பொறுப்பாளரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான வர்மா தலைமை தாங்கி தொடக்க உரையாற்றினார்.
அப்போது அவர் என்னுடைய தொகுதியில் கடந்த தெலுங்கு தேசம் ஆட்சியில் ரூ.2,800 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகளை செய்துள்ளேன் என பேசினார்.
இதற்கு ஜனசேனா கட்சி தொகுதி பொறுப்பாளர் உதய சீனிவாஸ் இவ்வளவு வளர்ச்சி திட்ட பணிகளை நீங்கள் செய்து இருந்தால் கடந்த தேர்தலில் மக்கள் உங்களை ஏன் தோற்கடித்தனர் என கேள்வி கேட்டார்.
தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியின்போது முறையான வளர்ச்சி பணிகளை செய்யாததால் தான் கடந்த தேர்தலில் தோல்வி அடைந்ததாக கூறினார்.
இதற்கு தெலுங்கு தேசம் கட்சியினர் உங்கள் கட்சி தலைவர் பவன்கல்யாண் மற்றும் ஜனசேனா கட்சி ஒரு இடங்களில் கூட வெற்றி பெறவில்லை. நாங்கள் போட்டியிட்ட இடங்களில் கணிசமான வாக்கு பெற்று உள்ளோம்.
ஆனால் உங்கள் கட்சிக்கு அனுதாப வாக்குகள் மட்டுமே கிடைத்தது இந்த நிலையில் நீங்கள் எங்கள் கட்சியை பற்றி பேசக்கூடாது என்றனர்.
இதனால் 2 கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஜனசேனா கட்சி பிரமுகர் ஒருவர் மேசை, நாற்காலிகளை எட்டி உதைத்தார்.
இதனால் 2 கட்சி நிர்வாகிகள் இடையே கைகலப்பு ஏற்பட்டது.அப்போது ஒருவரை ஒருவர் நாற்காலிகளை வீசி தாக்கி கொண்டனர்.
பின்னர் ஜனசேனா கட்சி நிர்வாகி உதய சீனிவாஸ் இனி உங்களுக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என தனது கட்சி தொண்டர்களை வெளியே அழைத்துச் சென்றார். ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடந்த கூட்டத்தில் 2 கட்சி நிர்வாகிகளும் ஒருவரை ஒருவரை குற்றம் சாட்டி தாக்கி கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
2 கட்சியின் மேல்மட்ட தலைவர்களும் கூட்டணியை அறிவித்து இருந்தாலும் கீழ்மட்ட நிர்வாகிகள் இடையே ஒருங்கிணைப்பு இல்லை என தொண்டர்கள் ஆதங்கப்பட்டு சென்றனர்.
- மக்களவை தேர்தலுடன் ஆந்திராவில் சட்டமன்ற தேர்தலும் நடைபெறும்.
- ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ்க்கு எதிராக தெலுங்குதேசம், ஜனசக்தி கட்சிகள் களம் இறங்கும் நிலையில் கிண்டல்.
ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியும், பவன்கல்யாண் ஜனசேனா கட்சியும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு எதிராக சட்டசபை தேர்தலில் களம் காண இருக்கின்றன. மக்களவை தேர்தல் உடன் ஆந்திர மாநில சட்டசபை தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது.
இதனால் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவரும், முதல்-மந்திரியுமான ஜெகன்மோகன் ரெட்டி தெலுங்கு தேசம் கட்சியை எதிர்த்து பிரசாரத்தை தொடங்கி உள்ளார்.

நேற்று இரவு அவர் அமராவதி மாவட்டத்தில் நடந்த பிரமாண்ட கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில், "தெலுங்கு தேசம் கட்சியின் சின்னம் சைக்கிள். அதை நாம் வீட்டின் நடு அறையில் கொண்டு வைக்க முடியாது. வீட்டுக்கு வெளியில்தான் வைக்க வேண்டும்.

ஜனசக்தியின் தேர்தல் சின்னம் டீ டம்ளர். பயன்படுத்திய டம்ளர் சமையறையின் சிங்க்-ல் (sink) வைக்க வேண்டும். ஆனால் ஒய்.எஸ்.ஆர் காங்கிரசின் சின்னம் மின் விசிறி. அது எப்போதும் வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும். அதுபோல ஒய்.எஸ்.ஆர். காங்கிரசை வீட்டுக்குள்ளே வைத்துக்கொள்ள மக்கள் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ்க்கு ஆதரவாக வாக்களிப்பார்கள். தெலுங்குதேசம், ஜனசேனாவிற்கு எதிராக வாக்களிப்பார்கள்" என்று கிண்டல் செய்தார்.
- 175 இடங்களில் 151 இடங்களில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம் கட்சி போட்டி.
- 24 இடங்களில் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி போட்டியிடுகிறது.
ஆந்திராவில் மக்களவை தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் சேர்த்து நடத்தப்பட இருக்கிறது. ஆந்திர மாநில முதல்வராக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி இருந்து வருகிறார்.
அவரை வீழ்த்துவதற்கு சந்திரபாபு நாயுடு முயற்சி மேற்கொண்டு வருகிறார். இதற்காக பவன் கல்யாண் கட்சியான ஜனசேனா உடன் கூட்டணி அமைக்க முடிவு செய்தார். இது தொடர்பாக தெலுங்குதேசம்- ஜனசேனா கட்சிகள் இடையே பேச்சவார்த்தை நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 175 சட்டமன்ற இடங்களில் 151 இடங்களில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி போட்டியிடவும், பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி 24 இடங்களிலும் போட்டியிடவும் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
அத்துடன் சந்திரபாபு நாயுடு- பவன் கல்யாண் கட்சிகள் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளன.
சந்திரபாபு நாயுடு 94 சட்டமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளார். அதேவேளையில் பவன் கல்யாண் 5 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளார்.
மக்களவை தேர்தலில் பவன் கல்யாண் கட்சி சந்திரபாபு நாயுடு கூட்டணியல் 3 இடங்களில் போட்டியிடுகிறது.
- பா.ஜ.க.வுடன் தொகுதி ஒதுக்கீடு சமரசமாகவில்லை.
- ஜனசேனா கட்சிக்கு 24 சட்டப் பேரவை தொகுதிகளும், 3 பாராளுமன்ற தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளது.
திருப்பதி:
ஆந்திர மாநிலத்தில் 175 சட்டப்பேரவை தொகுதிகள் மற்றும் 25 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது.
பா ஜனதா, தெலுங்கு தேசம், நடிகர் பவன் கல்யாண் ஜனசேனா ஆகியவை கூட்டணி ஏற்படும் சூழ்நிலை உருவானது. தெலுங்கு தேசம் கூட்டணியில் 10 பாராளுமன்ற தொகுதிகள் 40 சட்டமன்ற தொகுதிகளை பா.ஜ.க. கேட்டு வருகிறது. ஆனால் பா.ஜ.க. மற்றும் பவன் கல்யாண் ஆகிய 2 கட்சிகளுக்கும் சேர்த்து 5 பாராளுமன்ற தொகுதிகள் 40 சட்டமன்ற தொகுதிகளை மட்டுமே ஒதுக்க முடியும் என சந்திரபாபு நாயுடு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனாலும் கேட்ட தொகுதிகளை தர வேண்டும் என பா.ஜ.க அழுத்தம் கொடுத்தது.
இந்த நிலையில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம் கட்சியும், நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியும் 118 சட்டப்பேரவை தொகுதிகளில் கூட்டணியாக போட்டியிடுவதற்காக தொகுதி உடன்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான அறிவிப்பை ஜனசேனா கட்சி தலைவர் பவன்கல்யாண், சந்திரபாபு நாயுடுவின் வீட்டில், இணைந்து வெளியிட்டனர். ஜனசேனா கட்சிக்கு 24 சட்டப் பேரவை தொகுதிகளும், 3 பாராளுமன்ற தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளது.

பா.ஜ.க.வுடன் தொகுதி ஒதுக்கீடு சமரசமாகவில்லை. கேட்ட தொகுதிகளையும் பா.ஜ.க.வுக்கு சந்திரபாபு நாயுடு ஒதுக்கவில்லை என கூறப்படுகிறது. இதன் மூலம் ஆந்திர மாநிலத்தில் பா.ஜ.க.வை சந்திரபாபு நாயுடு திணற விட்டுள்ளார்.
பா.ஜ.க கூட்டணிக்கு வராவிட்டால் மீதமுள்ள தொகுதிகளிலும் தெலுங்கு தேசம்-ஜனசேனா கூட்டணி கட்சியினரே வேட்பாளர்களை அறிவித்து போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. முதல் கட்டமாக தெலுங்கு தேசம் கட்சி 94 வேட்பாளர்ளையும், ஜனசேனா வேட்பாளர்களையும் 5 வேட்பாளர்களையும் அறிவித்து உள்ளது.
குப்பம் தொகுதியில் மீண்டும் சந்திரபாபுநாயுடு தெலுங்கு தேசம் கட்சி சார்பில் வெளியிட்ட பட்டியலின்படி சந்திரபாபுநாயுடு குப்பம் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். நகரியில் அமைச்சர் ரோஜாவை எதிர்த்து முன்னாள் எம்.எல்.சி காளி முத்துகிருஷ்ணம்மா மகன் பானுபிரகாஷ், பலமனேரில் முன்னாள் அமைச்சர் அமர்நாத்தும், சித்தூரில் குருஜால ஜெகன்மோகன், கங்காதர நெல்லூரில் வி.என்.தாமஸ் ஆகியோர் நிறுத்தப்பட்டுள்ளனர்.






