search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TDP"

    • குண்டூர் மக்களவை தொகுதியின் தெலுங்குதேசம் கட்சி வேட்பாளர் பெம்மசானி சந்திரசேகர் ஆவார்
    • பெம்மசானி சந்திரசேகருக்கு அமெரிக்காவைச் சேர்ந்த பல நிறுவனங்களில் முதலீடுகள் மற்றும் பங்குகள் உள்ளன.

    அமராவதி:

    நாட்டின் 18-வது மக்களவைக்கான தேர்தல் கடந்த 19-ந் தேதி முதல்கட்ட வாக்குப்பதிவுடன் தொடங்கியது. ஜூன் 1-ந் தேதியுடன் வாக்குப்பதிவு நிறைவடையும் நிலையில், 4-ந் தேதி முடிவுகள் வெளியாக உள்ளது.

    தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்யும் போது வழங்கும் பிரமாண பத்திரத்தின் மூலம் அவர்கள் சொத்து விவரங்கள் வெளியாகின்றன. அப்படி வெளியாகும் வேட்பாளர்கள் சிலரின் சொத்து விவரங்கள் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றன.

    அந்த வகையில் ஆந்திராவில் தெலுங்குதேசம் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரின் சொத்து விவரங்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. தற்போதைய நிலவரப்படி அவர்தான் நாட்டின் பணக்கார வேட்பாளராக உள்ளார்.

    அவர் குண்டூர் மக்களவை தொகுதியின் தெலுங்குதேசம் கட்சி வேட்பாளர் பெம்மசானி சந்திரசேகர் ஆவார். அவரது குடும்பத்திடம் மொத்தமாக ரூ.5,785 கோடி மதிப்புள்ள சொத்துகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அவரது தனிப்பட்ட சொத்துகள் ரூ.2,448.72 கோடியாகவும், அவரது மனைவி ஸ்ரீரத்னா கோனேருவுக்கு ரூ.2,343.78 கோடி மதிப்புள்ள சொத்துகளும், அவரது பிள்ளைகளிடம் கிட்டத்தட்ட ரூ.1,000 கோடி சொத்துகளும் இருப்பதாக பிரமாண பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    டாக்டர், தொழில் அதிபர், அரசியல்வாதி என பன்முகங்களை கொண்ட பெம்மசானி சந்திரசேகருக்கு அமெரிக்காவைச் சேர்ந்த பல நிறுவனங்களில் முதலீடுகள் மற்றும் பங்குகள் உள்ளன. 

    • அடுத்து வரும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவோம்.
    • யாருக்கு ஆதரவு என்பதை உயர்மட்ட தலைவர்கள் முடிவு செய்வார்கள்- செய்தி தொடர்பாளர்.

    ஆந்திராவில் இருந்து தனியாக பிரிந்த மாநிலம் தெலுங்கானா. ஆந்திர மாநிலத்தில் செல்வாக்கு மிக்க மாநில கட்சியாக இருக்கும் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம் கட்சிக்கு தெலுங்கானாவில் மிகப்பெரிய அளவில் செல்வாக்கு இல்லை. இருந்தபோதிலும் 2018 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து 2 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. சந்திரசேகர ராவின் பிஆர்எஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.

    17 தொகுதிகளை கொண்ட தெலுங்கானா மாநிலத்தில் அடுத்த மாதம் 13-ந்தேதி மக்களவை தேர்தல் நடைபெற இருக்கிறது.

    இந்த நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் மக்களவை தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி போட்டியிடாது என அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் ஜோத்ஸ்னா திருநாகரி தெரிவித்துள்ளார். ஆனால் யாருக்கு ஆதரவு என்பதை உயர்மட்ட தலைவர்கள் முடிவு செய்வார்கள் எனவும் தெரிவித்துள்ளார். அதேவேளையில் ஜூன் அல்லது ஜூலையில் நடைபெறும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் எனத் தெரிவித்துள்ளார்.

    தெலுங்கு தேசம் கட்சி பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிப்பது குறிப்பிடத்தக்கது. ஆந்திராவில் பவன் கல்யாண் கட்சி, தெலுங்குதேசம், பா.ஜனதா ஆகிய மூன்று கட்சிகள் இணைந்து மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்கின்றன.

    கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலிலும் போட்டியிடப் போவதில்லை என தெலுங்கு தேசம் முடிவு செய்தது. இதனால் அம்மாநிலத்தின் தெலுங்குதேசம் கட்சி தலைவர் ஞானேஸ்வர் சந்திரசேகர ராவ் கட்சியில் தேர்தலுக்கு முன்னதாக இணைந்தார். அதில் இருந்து தலைவர் இல்லாத அந்த கட்சியின் பல தலைவர்கள், தொண்டர்கள் கட்சியில இருந்து வெளியேறிய வண்ணமாக உள்ளனர்.

    2018 சட்டமன்ற தேர்தலில் இரண்டு இடங்களில் வெற்றி பெற்று 3.51 சதவீத வாக்குகள் பெற்றிருந்தது. காங்கிரஸ் மற்றும் சிபிஐ உடன் கூட்டணி வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • 6 ஆண்டுகளுக்கு பிறகு தெலுங்கு தேசம் கட்சி மீண்டும் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்துள்ளது.
    • இந்தக் கூட்டணியால் ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவு ஏற்படும் என கூறப்படுகிறது.

    அமராவதி:

    ஆந்திர மாநிலத்தில் வரும் ஏப்ரலில் சட்டசபை மற்றும் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்க தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு மற்றும் ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாணுக்கு பா.ஜ.க. மேலிடம் அழைப்பு விடுத்தது.

    இந்த அழைப்பை ஏற்று சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாண் கடந்த வியாழக்கிழமை டெல்லி சென்றனர். அவர்கள் மத்திய மந்திரி அமித் ஷா, தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் பா.ஜ.க.-தெலுங்கு தேசம்-ஜனசேனா கட்சிகள் இடையிலான கூட்டணி ஆந்திராவில் உறுதி செய்யப்பட்டது.

    இந்நிலையில், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தெலுங்கு தேசம் கட்சி மீண்டும் இணைந்துள்ளது என அக்கட்சியின் எம்.பி. கனகமேடலா ரவீந்திர குமார் தெரிவித்துள்ளார்.

    பா.ஜ.க.-தெலுங்கு தேசம் கூட்டணி ஆந்திராவில் உருவாகி உள்ளதால் ஆளும் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவு ஏற்படும் என அரசியல் பிரமுகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    • மக்களவை தேர்தலுடன் ஆந்திராவில் சட்டமன்ற தேர்தலும் நடைபெறும்.
    • ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ்க்கு எதிராக தெலுங்குதேசம், ஜனசக்தி கட்சிகள் களம் இறங்கும் நிலையில் கிண்டல்.

    ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியும், பவன்கல்யாண் ஜனசேனா கட்சியும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு எதிராக சட்டசபை தேர்தலில் களம் காண இருக்கின்றன. மக்களவை தேர்தல் உடன் ஆந்திர மாநில சட்டசபை தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது.

    இதனால் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவரும், முதல்-மந்திரியுமான ஜெகன்மோகன் ரெட்டி தெலுங்கு தேசம் கட்சியை எதிர்த்து பிரசாரத்தை தொடங்கி உள்ளார்.

    நேற்று இரவு அவர் அமராவதி மாவட்டத்தில் நடந்த பிரமாண்ட கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில், "தெலுங்கு தேசம் கட்சியின் சின்னம் சைக்கிள். அதை நாம் வீட்டின் நடு அறையில் கொண்டு வைக்க முடியாது. வீட்டுக்கு வெளியில்தான் வைக்க வேண்டும்.

    ஜனசக்தியின் தேர்தல் சின்னம் டீ டம்ளர். பயன்படுத்திய டம்ளர் சமையறையின் சிங்க்-ல் (sink) வைக்க வேண்டும். ஆனால் ஒய்.எஸ்.ஆர் காங்கிரசின் சின்னம் மின் விசிறி. அது எப்போதும் வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும். அதுபோல ஒய்.எஸ்.ஆர். காங்கிரசை வீட்டுக்குள்ளே வைத்துக்கொள்ள மக்கள் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ்க்கு ஆதரவாக வாக்களிப்பார்கள். தெலுங்குதேசம், ஜனசேனாவிற்கு எதிராக வாக்களிப்பார்கள்" என்று கிண்டல் செய்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தெலுங்கு தேசம் கட்சியினர் திரைப்பட போஸ்டர்களை கிழித்து எரிந்து தீ வைத்து கொளுத்தினர்.
    • சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தெலுங்கு தேசம் கட்சியினை அங்கிருந்து விரட்டி அடித்தனர்.

    ஐதராபாத் பிலிம் நகரில் பிரபல திரைப்பட இயக்குனர் ராம் கோபால் வர்மாவின் அலுவலகம் உள்ளது. சமீபத்தில் ராம் கோபால் வர்மா அரசியல் கட்சி தலைவர்கள் குறித்த 'வியூகம்' என்ற திரைப்படத்தை இயக்கினார். அந்த திரைப்படத்தில் சந்திரபாபு நாயுடு மற்றும் அரசியல் கட்சி தலைவர்களை கிண்டல் செய்யும் காட்சிகள் உள்ளதாக கூறப்படுகிறது.


    இதனால் ஆத்திரம் அடைந்த தெலுங்கு தேசம் கட்சியினர் திரைப்பட போஸ்டர்களை கிழித்து எரிந்து தீ வைத்து கொளுத்தினர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தெலுங்கு தேசம் கட்சியினரை அங்கிருந்து விரட்டி அடித்தனர். மேலும் கட்சியினர் பிலிம் நகரில் உள்ள அவரது அலுவலகத்திற்குள் நுழைந்து அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர்.


    வியூகம் போஸ்டர்

    இதுகுறித்து தெலுங்கானா திரைப்பட இயக்குனர் ஒருவர் கூறுகையில் சினிமாவை பொழுதுப்போக்காக பார்க்க வேண்டும். சென்சார் போர்டு சர்டிபிகேட் வழங்கி அனுமதி அளித்த பிறகும் இது போன்ற செயல்களில் ஈடுபடுவது கண்டனத்திற்குரியது. தெலுங்கு தேசம் கட்சியினர் திரைப்படத்தை வெளியிடவிடாமல் தடுக்க இது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர் என்றார்.


    • சந்திரபாபு நாயுடு ஜெயிலில் அடைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் முழுவதும் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் இன்று பந்த் அறிவிக்கப்பட்டது.
    • தெலுங்கு தேசம் கட்சியின் முக்கிய தலைவர்கள் வீட்டு காவலில் வைக்கப்பட்டனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலத்தில் திறன் மேம்பாட்டு கழகத்தில் ஊழல் செய்ததாக முன்னால் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவை சி.ஐ.டி. போலீஸ்சார் கைது செய்தனர்.

    பின்னர் விஜயவாடாவில் உள்ள ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட்டில் சந்திரபாபு நாயுடுவை ஆஜர் படுத்தினர். கோர்ட்டில் இருதரப்பு வாதங்கள் முடிந்த பிறகு சந்திரபாபு நாயுடுவை வரும் 22-ந் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி  உத்தரவிட்டார்.

    இதையடுத்து சந்திரபாபு நாயுடுவை ராஜ மகேந்திரபவரத்தில் உள்ள ஜெயிலில் நள்ளிரவு அடைத்தனர். ஜெயிலில் அவருக்கு 7691 கைதி எண் வழங்கப்பட்டது.

    ஜெயிலில் சந்திரபாபு நாயுடுவுக்கு தனி அறை ஒதுக்கப்பட்டு உள்ளன. மேலும் வீட்டு உணவு வழங்கவும் நீதி மன்றம் அனுமதி வழங்கி உள்ளது.

    இந்த நிலையில் சந்திரபாபு நாயுடு ஜெயிலில் அடைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் முழுவதும் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் இன்று பந்த் அறிவிக்கப்பட்டது.

    இந்த பந்திற்கு ஜனசேனா, இந்திய கம்யூனிஸ்டு மற்றும் லோக் சத்தா கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

    தெலுங்கு தேசம் கட்சி பந்த் அறிவிக்கப்பட்டதால் ஆந்திரா முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் தெலுங்கு தேசம் கட்சியின் முக்கிய தலைவர்கள் வீட்டு காவலில் வைக்கப்பட்டனர்.

    மாநிலம் முழுவதும் பதற்றமான சூழ்நிலை நிலவுவதால் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    ஆந்திராவில் பந்த் காரணமாக மாநிலத்தில் 50 சதவீதத்திற்கும் மேலான கடைகள் அடைக்கப்பட்டன. வாகனங்கள் வழக்கம் போல் இயங்கி வருகின்றன. ஆங்காங்கே மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

    தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்கள் வாகனங்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் வாகனங்களின் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கியது. வாகனங்களின் டிரைவர்கள் சிலர் காயம் அடைந்தனர்.

    போராட்டத்தில் ஈடுபட்ட தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்களை போலீசார் கைது செய்து திருமண மண்டபங்களில் அடைத்தனர்.

    விஜயவாடா, கர்னூல், கடப்பா உள்ளிட்ட முக்கிய நகரங்களில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். இதனால் ஆந்திராவில் பதட்டம் நிலைவியது.

    ஆந்திர மாநில எல்லையோரம் உள்ள வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இருந்து வழக்கம் போல ஆந்திராவுக்கு பஸ்கள் இயக்கப்பட்டன.

    ஆந்திர எல்லையில் இருந்து முக்கிய பஸ் நிறுத்தங்களில் அந்த மாநில போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    வேலூர் திருப்பதி இடையே இன்று வழக்கம் போல பஸ்கள் இயக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் ஏழுமலையான் கோவிலுக்கு சென்றனர்.

    பந்த் காரணமாக ஆந்திராவுக்கு செல்லும் சரக்கு வாகனங்கள் தமிழக எல்லையில் உள்ள சோதனை சாவடிகள் ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

    பந்தால் பக்தர்கள் அவதி அடையக் கூடாது என்பதற்காக திருப்பதிக்கு மட்டும் பந்த் இல்லை என விலக்கு அளித்துள்ளனர். திருப்பதியில் கடைகள் ஓட்டல்கள் டீக்கடைகள் திறக்கப்பட்டு உள்ளது.

    பஸ்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டன. பக்தர்கள் சிரமம் இன்றி கோவிலுக்கு சென்று வந்தனர்.

    • ஆந்திரா மற்றும் தமிழக பஸ்கள் நிறுத்தப்பட்டது.
    • ஆந்திராவில் போராட்டங்கள் கட்டுப்படுத்தப்பட்டு பஸ்கள் இயக்கப்பட்டது.

    கிருஷ்ணகிரி:

    ஆந்திரா மாநிலத்திற்கு தமிழகத்தில் இருந்து வழக்கம் போல் பஸ்கள் இயக்கப்பட்டன.

    கிருஷ்ணகிரி மற்றும் ஓசூர் பகுதிகளில் இருந்து தினமும் 60க்கும் மேற்பட்ட தமிழக அரசு பஸ்கள் ஆந்திராவிற்கு இயக்கப்படுகிறது. அதே போல் ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு 30-க்கும் மேற்பட்ட ஆந்திர அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. தென்மாவட்டங்களிலிருந்து ஆந்திரா மாநிலம் திருப்பதிக்கு கிருஷ்ணகிரி வழியாக செல்வது வழக்கம்.

    அதே போல் ஓசூரில் பணிபுரியும் ஆந்திரா மாநில தொழிலாளர்கள் விடுமுறை நாட்களான சனி, ஞாயிறு விடுமுறை சென்று வருவார்கள். இந்நிலையில் நேற்று முன்தினம் ஆந்திரா மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டார்.

    இதனை கண்டித்து ஆந்திரா மாநிலத்தில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்தது. இதனால் ஆந்திரா மற்றும் தமிழக பஸ்கள் நிறுத்தப்பட்டது.

    திருப்பதி செல்லும் பக்தர்கள் மற்றும் தொழிலாளர்கள் அவதியடைந்தனர்.

    இந்நிலையில் ஆந்திராவில் போராட்டங்கள் கட்டுப்படுத்தப்பட்டு பஸ்கள் நேற்று இயக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து நேற்று காலை முதல் ஆந்திரா பஸ்கள் ஓசூர், கிருஷ்ணகிரிக்கு பயணிகளை ஏற்றி செல்ல வந்தது. அதே போல் தமிழக பஸ்களும் ஆந்திரா மாநிலத்திற்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றன.

    இதனால் வழக்கம் போல் நேற்று காலை முதல் ஆந்திரா மாநிலத்திற்கு பஸ்கள் சென்று வந்தன.

    • உண்ணாவிரத போராட்டத்தில் கட்சி தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ள அக்கட்சி தலைவர் வலியுறுத்தல்.
    • தெலுங்கு தேச கட்சியினர் கண்டன ஊர்வலங்கள், சாலை மறியல், தர்ணா போராட்டங்களில் ஈடுபட்டனர்.

    ஆந்திராவில், முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டுள்ளார் என்று தெலுங்கு தேசம் கட்சி குற்றம்சாட்டி இருக்கிறது. மேலும், சந்திரபாபு நாயுடு கைதுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், நாளை உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று அக்கட்சி அறிவித்து இருக்கிறது.

    தெலுங்கு தேசம் கட்சியின் அச்ச நாயுடு உண்ணாவிரத போராட்டத்தில் கட்சி தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார். முன்னதாக சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதை கண்டித்து ஆந்திரா முழுக்க தெலுங்கு தேச கட்சியினர் கண்டன ஊர்வலங்கள், சாலை மறியல், தர்ணா போராட்டங்களில் ஈடுபட்டனர். உருவ பொம்மைகளை தீயிட்டு கொளுத்தினர்.

    மாநிலம் முழுவதிலும் லாரிகள் ஊர்களின் எல்லையில் பல கிலோ மீட்டர் தொலைவுக்கு நிறுத்தப்பட்டன. மாநிலம் முழுவதிலும் பஸ், லாரி, கார் உள்ளிட்ட அனைத்து வாகனங்கள் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர். இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    இதன் காரணமாக ஆந்திர மாநிலம் உய்யூர் வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட 7 மண்டலங்களில் வரும் 15ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதை தொடர்ந்து சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த உத்தரவு போடப்பட்டுள்ளது.

    ஆந்திர மாநிலத்தில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை முதலே பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நடைபெறுகிறது. ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தார். #LokSabhaElections2019 #ChandrababuNaidu
    அமராவதி:

    ஆந்திர மாநிலத்தில் 25 மக்களவை தொகுதி மற்றும் 175 சட்டமன்ற தொகுதிகளுக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு துவங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவினை முன்னிட்டு மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  

    அரக்கு நாடாளுமன்ற தொகுதி, அதற்குட்பட்ட சட்டசபை தொகுதிகளை தவிர்த்து பிற இடங்களில் காலை 7 மணிக்கு தொடங்கிய  வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு முடிகிறது. அரக்கு நாடாளுமன்ற தொகுதி, அதற்குட்பட்ட சட்டசபை தொகுதிகளில் சில இடங்களில் காலை 7 மணி முதல் 5 மணி வரையில் ஓட்டுப்பதிவு நடக்கிறது. அங்கு ஒரு சில இடங்களில் மட்டும் மாலை 4 மணிக்கு ஓட்டுப்பதிவு முடிந்துவிடும்.

    ஆந்திராவில் வாக்குப்பதிவு துவங்கியதும், மக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். அமரவாதியில் உள்ள வாக்குச்சாவடியில் ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கினை பதிவு செய்தார். தனது குடும்ப உறுப்பினர்களுடன் வந்து சந்திரபாபு நாயுடு வாக்களித்தார்.



    இதேப்போல் தெலுங்கு தேசம் கட்சியின் சார்பில் விஜயவாடா தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் கேசினேனி ஸ்ரீனிவாஸ் தனது குடும்பத்தினருடன் சென்று குண்டெல்லா பகுதியில் வாக்களித்தார். ஆந்திராவில் ஆளும்  தெலுங்குதேசம் கட்சிக்கும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே பலத்த போட்டி நிலவி  வருவது குறிப்பிடத்தக்கது.  #LokSabhaElections2019 #ChandrababuNaidu
    தமிழக எல்லையோரம் அமைந்துள்ள சித்தூர் மாவட்டத்தில் தெலுங்கு தேசம் கட்சிக்காக தமிழ் பேசும் மக்கள் அதிகம் உள்ள இடங்களில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய உள்ளார். #LokSabhaElections2019
    நகரி:

    தெலுங்கு தேசம் கட்சிக்காக தேர்தல் பிரசாரம் செய்ய தலைவர்கள் வர இருப்பதாக அக்கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.

    தமிழக எல்லையோரம் அமைந்துள்ள சித்தூர் மாவட்டத்தில் தெலுங்கு தேசம் கட்சிக்காக தமிழ் பேசும் மக்கள் அதிகம் உள்ள இடங்களில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய உள்ளார்.

    விஜயவாடாவில் நாளை அரவிந்த் கெஜ்ரிவால் பிரசாரம் செய்கிறார். 31-ந்தேதி விசாகப்பட்டினத்தில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் மம்தா பானர்ஜியுடன் அரவிந்த் ஜெக்ரிவால் பிரசாரம் செய்ய உள்ளார்.  #LokSabhaElections2019
    வருகிற பாராளுமன்ற தேர்தலில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்குதேசம் கட்சி தெலுங்கானாவில் போட்டியிடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. #LokSabhaElections2019 #TDP
    ஐதராபாத்:

    பாராளுமன்ற தேர்தலில் தெலுங்கானாவில் தெலுங்குதேசம் கட்சி போட்டியிடுவதில்லை என முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது. 1982-ம் ஆண்டு கட்சி தொடங்கியதில் இருந்து முதல் முறையாக இந்த முடிவை எடுத்துள்ளது.

    இதுபற்றி கட்சியின் மாநில தலைவர் எல்.ரமணா கூறும்போது, “பா.ஜனதா மற்றும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி ஆகிய இரு கட்சிகளும் ஜனநாயகத்துக்கும், அரசியல்சாசனத்துக்கும் எதிராக வேலை செய்கின்றன. ஆளும் டி.ஆர்.எஸ். கட்சி எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்க முயற்சிக்கிறது. எனவே இந்த பாராளுமன்ற தேர்தலில் தெலுங்கானாவில் போட்டியிடுவதில்லை என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கட்சியின் பழைய செல்வாக்கை மீண்டும் பெற கட்சி மேலும் கடுமையாக உழைக்கும்” என்று கூறியுள்ளார்.



    2014-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தெலுங்குதேசம் மால்காஜ்கிரி தொகுதியில் மட்டுமே வெற்றிபெற்று எம்.பி.யான மல்லா ரெட்டி, பின்னர் டி.ஆர்.எஸ். கட்சியில் சேர்ந்துவிட்டதும், கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 2 தொகுதிகளில் மட்டுமே தெலுங்குதேசம் வெற்றி பெற்றதும் குறிப்பிடத்தக்கது. #LokSabhaElections2019 #TDP #TeluguDesamParty #ChandraBabuNaidu

    புதிய மற்றும் நல்ல திட்டங்களின் மூலம் ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என முதல்வர் சந்திரபாபு நாயுடு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். #ChandrababuNaidu #TDP
    ஓங்கோல்:

    பாராளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் துவங்கி 7 கட்டங்களாக நடக்கவிருப்பதையடுத்து, அனைத்து அரசியல் கட்சியினரும் கூட்டணி, தொகுதி ஒதுக்கீடு மற்றும் பிரச்சாரம் உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும் பல்வேறு முக்கிய அரசியல் தலைவர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு ஆந்திராவில் உள்ள ஓங்கோல் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஆந்திராவில் 5 ஆண்டுகால தெலுங்கு தேசம் கட்சியின் ஆட்சியில், ஆதாரனா மற்றும் ஆதாரனா 2 திட்டங்களின் மூலம் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த நிதி உதவி உயர்த்தப்பட்டது. அண்ணா உணவகத்தின் மூலம் ரூ.5க்கு சத்தான சிற்றுண்டி உணவு வழங்கப்பட்டு வருகின்றது.



    சமூக பாதுகாப்பு ஓய்வூதியம் ரூ.1000 லிருந்து ரூ.2000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. நல்ல முறையில் நாங்கள் அரசினை வழி நடத்தி வருகின்றோம். கிராமப்பகுதிகளில் வசிக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல உதவி ரூ.1 லட்சமாக உயர்த்தப்பட்டது. அன்னதட்டா சுகிபவா திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு வழங்கும் நிதி உதவியினையும் நீட்டித்துள்ளோம்.

    இதுபோன்ற நல்ல திட்டங்களை அமல்படுத்தி தொடர்ந்து ஆந்திர மக்களின் நலனுக்காக பணியாற்றி வருகிறோம். எனவே, இந்த திட்டங்களின் மூலம்  வரவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் தெலுங்கு தேசம் கட்சி மகத்தான வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #ChandrababuNaidu #TDP
    ×