என் மலர்
நீங்கள் தேடியது "hunger strike"
- 44 வது நாளாக விவசாயி தலைவர் ஜக்ஜித் சிங் தலேவால் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்
- உடல்நிலை மோசமடைந்துள்ள போதிலும் பஞ்சாப் அரசு வழங்கும் மருத்துவ உதவியையும் அவர் மறுத்துவிட்டார்.
பஞ்சாப்-ஹரியானா எல்லையில் போராட்டம் நடத்தும் விவசாயிகள் ஜனவரி 26 குடியரசு தினத்தன்று நாடு முழுவதும் டிராக்டர் அணிவகுப்பை அறிவித்துள்ளனர்.
44 வது நாளாக விவசாயி தலைவர் ஜக்ஜித் சிங் தலேவால் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் இந்த பேரணி போராட்டம் அறிவிக்கப்பட்டது.
பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை சட்டப்பூர்வமான உத்தரவாதம் உள்ளிட்ட விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்க வலியுறுத்தி பஞ்சாப் மற்றும் ஹரியானா எல்லைகளுக்கு இடையே விவசாயிகள் கடந்த பிப்ரவரி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சம்யுக்த கிசான் மோர்ச்சா மற்றும் கிசான் மஸ்தூர் மோர்ச்சா தலைமையில் விவசாயிகள் டெல்லி நோக்கி பலமுறை செல்ல முயன்றனர். ஆனால் கண்ணீர் புகைகுண்டுகளை வீசியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் போலீசார் அவர்களை கலைத்தனர். எனவே பஞ்சாப் மற்றும் ஹரியானா இடையேயான ஷம்பு மற்றும் கானௌரி எல்லைப் புள்ளிகளில் முகாமிட்டுள்ளனர்.
விவசாயி தலைவர் ஜக்ஜித் சிங் தலேவால்[70 வயது], நவம்பர் 26 முதல் பஞ்சாப் மற்றும் ஹரியானா இடையேயான கானௌரி எல்லைப் பகுதியில் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார். உடல்நிலை மோசமடைந்துள்ள போதிலும் பஞ்சாப் அரசு வழங்கும் மருத்துவ உதவியையும் அவர் மறுத்துவிட்டார். இந்த நிலையில்தான் விவசாயிகள் குடியரசு தினத்தன்று நாடு முழுவதும் டிராக்டர் பேரணியை அறிவித்துள்ளனர்.
முன்னதாக கடத்த 2021 செப்டம்பரில் மத்திய அரசு இயற்றிய மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் பல சாலைகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தியாவின் பொருளாதாரத்தை நவீனமயமாக்க இந்த சட்டங்கள் அவசியம் என்று அரசு கூறினாலும் , இந்த சீர்திருத்தங்கள் பெரிய நிறுவனங்களின் தயவில் இருக்கும்படி விவசாயிகள் தள்ளப்படுவதாக கூறி அவர்கள் போராட்டத்தை துவங்கினர்.
அவர்களின் ஒரு வருட போராட்டத்தின் பலனாக நவம்பர் 2021 இல் விவசாய சட்டங்கள் திரும்பப்பெறப்பட்டன. 2021 குடியரசு தினத்தை ஒட்டியும் செங்கோட்டையை முற்றுகையிட விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தினர். அப்போது போலீஸ் உடனான மோதலில் வன்முறை வெடித்தது குறிப்பிடத்தக்கது.
- பொதுமக்கள் விவசாயத்தையும், கால்நடைகளையும் நம்பியே வாழ்ந்து வருகின்றனர்.
- உண்ணாவிரத போராட்டம் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா இருக்கூர், மாணிக்கநத்தம், கோப்பணம் பாளையம், வீரணம்பாளையம் ஆகிய 4 ஊராட்சிகளின் எல்லையில் பஞ்சபாளையம் பகுதியில் அமைந்துள்ள காலாவதியான கல்குவாரியில் மழை நீர் தேங்கியுள்ளது.
இந்த தண்ணீர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாயத்திற்கும், குடிநீர் தேவைக்கும் நீர் ஆதாரமாக உள்ளது.
இந்நிலையில் இந்த நீர் நிலை தேக்கத்தில் பரமத்தி மற்றும் வேலூர் பேரூராட்சிகளின் சாக்கடை கழிவு நீரை கொண்டு வந்து தேக்கி சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு தேர்வு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டது.
இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள் அப்பணியை தடுத்து நிறுத்த வலியுறுத்தி தொடர்ந்து போராடி வருகின்றனர்.
இந்த நீர்நிலையை சுற்றியுள்ள இருக்கூர், மாணிக்கநத்தம், வீரணம் பாளையம், கோப்பணம் பாளையம் ஆகிய 4 கிராமங்களில் 20-க்கும் மேற்பட்ட ஊர்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் விவசாயத்தையும், கால்நடைகளையும் நம்பியே வாழ்ந்து வருகின்றனர்.
இந்த நீர்நிலையில் சாக்கடை கழிவுநீரை கொண்டு வந்து தேக்கினால் இப்பகுதி நிலத்தடி நீரும், காற்றும் மாசுபடும். மேலும் விவசாய நிலமும் பாதிக்கும்.
எனவே சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதை நிறுத்த வேண்டும் என கூறி மாணிக்கநத்தம், இருக்கூர், கோப்பணம்பாளையம், வீரணம்பாளையம் ஆகிய 4 கிராமங்களை சேர்ந்த சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் பஞ்சபாளையம் மெயின் ரோட்டில் இன்று காலை முதல் உண்ணா விரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். உண்ணாவிரத போராட்டம் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.
பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உத்தர பிரதேச மற்றும் அரியானாவின் டெல்லி எல்லைகளில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த மாத தொடக்கம் முதலே பலமுறை டெல்லி நோக்கி செல்ல முயன்ற விவசாயிகள் மீது போலீசார் கண்ணீர் குண்டுகளை வீசியும் தண்ணீர் பீய்ச்சியும் தாக்குதல் நடத்தினர். இருப்பினும் மத்திய அரசு செவி சாய்க்கும் வரை போராட்டத்தை விவசாயிகள் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில எல்லையான கானௌரியில் பஞ்சாப் விவசாயி தலைவர் ஜக்ஜித் சிங் தலேவால்[70 வயது], நவம்பர் 26 முதல் நடத்தும் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் இன்று [டிசம்பர் 25] 29வது நாளை எட்டியுள்ளது.
உண்ணாவிரதம் தொடங்கியதில் இருந்து அவர் 15 கிலோ வரை வரை எடை குறைந்துள்ளார். புற்றுநோயாளியான தலேவால் விடாப்பிடியாக உண்ணாவிரதம் இருந்து வரும் நிலையில் அவரது உடல்நிலை மிகவும் மோசம் அடைந்துள்ள நிலையில் அவருக்கு எப்போது வேண்டுமானாலும் மாரடைப்பு ஏற்படலாம் என்றும் உறுப்புக்கள் செயலிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். கடந்த வியாழன் அன்று (டிசம்பர் 19) அவர் மயங்கி விழுந்தார்.
இரத்த அழுத்தம் தொடர்ந்து குறைந்து வருவதாலும், எலக்ட்ரோலைட் சமநிலையின்மையாலும் டல்வாலின் நிலை மோசமாக உள்ளது. அவரது நிலைமையைக் கருத்தில் கொண்டு, அவரை மருத்துவமனையில் சேர்க்க வேண்டும். ஆனால் அவர் எந்த வித சிகிச்சையையும் மறுத்து வருகிறார்.
விவசாயிகளின் கோரிக்கைகளை அரசாங்கம் ஏற்கும் அல்லது தனது கடைசி மூச்சு வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடரும் என்ற தனது நிலைப்பாட்டில் அவர் உறுதியாக இருக்கிறார் என்று விவசாய சங்க உறுப்பினரான அவ்தார் சிங் தெரிவித்துள்ளார் . பட்டினியால் அவரது நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடைந்துள்ள அவருக்கு அதிகரித்து வரும் குளிர் காலநிலையும் சவாலாக உள்ளது.
முன்னதாக கடந்த டிசம்பர் 2 ஆம் வாரத்தில் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்த தலேவால், தாம் நாட்டின் சாதாரண விவசாயி என்றும், பிப்ரவரி 13-ம் தேதி முதல் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்துக்கு மத்தியில் கனத்த இதயத்துடன் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.
பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்எஸ்பி) சட்டப்பூர்வ உத்தரவாதம் உள்ளிட்ட 13 கோரிக்கைகளை அரசு ஏற்க வேண்டும். இந்த போராட்டத்தில் நான் இறந்தால் மத்திய அரசுதான் அதற்கு பொறுப்பு. போராட்டங்கள் நடக்கும் இடத்தில் போலீசார் ஏதாவது செய்தால் அந்த பொறுப்பும் அரசின் மீதுதான் விழும் என்று எழுதியிருந்தார்.
தற்போது அவரது உடல்நிலை கவலைக்கிடமாகி வரும் நிலையில் தலேவாலின் உயிரைக் காப்பாற்ற விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசுக்கு உத்தரவிடுமாறு ஜனாதிபதியிடம் முறையிடுவது என்று விவசாயிகள் சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் அவருக்கு ஆதராக கனௌரி மற்றும் ஷம்பு எல்லையில் மெழுகுவர்த்தி பேரணி நடந்தது. இதற்கிடையே டிசம்பர் 30-ம் தேதி பஞ்சாப் பந்த் நடத்துவதற்காக, டிசம்பர் 26-ம் தேதி கானௌரி எல்லையில் அனைத்து சமூக, வணிக, கலாச்சார மற்றும் மத அமைப்புகளின் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
- போராட்டத்தில் பஞ்சாப் மக்கள் பங்கேற்க வேண்டும் என்று அழைப்பு விடுத்திருந்தன.
- எல்லைப் பகுதியில் கடந்த மூன்று வாரங்களாக சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உத்தரப் பிரதேசம் , பஞ்சாப்- அரியானா, டெல்லி எல்லைகளில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பிப்ரவரி 13 முதல் பஞ்சாப்- அரியானா எல்லையான ஷம்புவில் விவசாயிகள் முகாமிட்டுள்ளனர். அவர்களை டெல்லி நோக்கி முன்னேற விடாமல் போலீசார் தண்ணீரை பீய்ச்சி அடித்தும் கண்ணீர் புகைகுண்டுகளை வீசியும் தடுத்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில் இன்று [புதன்கிழமை] பஞ்சாபில் பல இடங்களில் ரயில் பாதைகளை மறித்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சம்யுக்த கிசான் மோர்ச்சா மற்றும் கிசான் மஸ்தூர் மோர்ச்சா ஆகிய விவசாய அமைப்புகள் இந்த ரெயில் மறியல் போராட்டத்தில் பஞ்சாப் மக்கள் பங்கேற்க வேண்டும் என்று அழைப்பு விடுத்திருந்தன.
கிசான் மஸ்தூர் மோர்ச்சா தலைவர் சர்வான் சிங் பந்தேர் கூறுகையில், மதியம் 12 மணி முதல் விவசாயிகள் பல இடங்களில் ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து மதியம் 3 மணி வரை அங்கேயே இருப்பார்கள் என்று தெரிவித்தார்.
VIDEO | Punjab: Protesting farmers block railway track in Mohali as part of their 'Rail Roko' agitation.#FarmersProtest (Full video available on PTI Videos - https://t.co/n147TvrpG7) pic.twitter.com/DcnLpI2BZt
— Press Trust of India (@PTI_News) December 18, 2024
குர்தாஸ்பூரில் உள்ள மோகா, ஃபரித்கோட், கடியான் மற்றும் படாலா, ஜலந்தரில் பில்லூர்; ஹோஷியார்பூரில் தண்டா, தசுயா, மகில்பூர்; ஃபெரோஸ்பூரில் மகு, தல்வண்டி பாய், லூதியானாவில் சாஹ்னேவால், பாட்டியாலாவில் ஷம்பு, மொஹாலி, மற்றும் சங்ரூரில் சுனம் மற்றும் லெஹ்ரா ஆகிய இடங்களில் போராட்டம் நடத்தப்படும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது அதன்படி விவசாயிகள் ரெயில்வே தண்டவாளத்தில் நின்றும்,படுத்தும் மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அம்மாநிலத்தில் ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே பஞ்சாப் விவசாயி தலைவர் ஜக்ஜித் சிங் தலேவால், பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களுக்கிடையேயான கானௌரி எல்லைப் பகுதியில் கடந்த மூன்று வாரங்களாக சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
Dr. Swaiman Singh's team at 5 Rivers Heart Association has been providing continuous medical support at the Khanauri border. Since Sardar Jagjit Singh Dallewal's hunger strike, his health is being closely monitored with real-time updates on pulse, BP, and sugar levels. pic.twitter.com/meGhhbCy2a
— Gursimran Buttar (@GursimranpreetB) December 10, 2024
- நவம்பர் 26 முதல் நடத்தும் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் நேற்று 17வது நாளை எட்டியது
- 11 கிலோவுக்கும் அதிகமாக எடை குறைந்துள்ளார்
பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உத்தர பிரதேச மற்றும் அரியானாவின் டெல்லி எல்லைகளில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த வார தொடக்கத்தில் டெல்லி நோக்கி செல்ல முயன்ற விவசாயிகள் மீது போலீஸ் கண்ணீர் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இருப்பினும் மத்திய அரசு செவி சாய்க்கும் வரை போராட்டத்தை விவசாயிகள் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில எல்லையான கானௌரியில் பஞ்சாப் விவசாயி தலைவர் ஜக்ஜித் சிங் தலேவால், நவம்பர் 26 முதல் நடத்தும் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் நேற்று 17வது நாளை எட்டியது. அவர் தற்போது மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில்,
தாம் நாட்டின் சாதாரண விவசாயி என்றும், பிப்ரவரி 13-ம் தேதி முதல் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்துக்கு மத்தியில் கனத்த இதயத்துடன் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.
பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்எஸ்பி) சட்டப்பூர்வ உத்தரவாதம் உள்ளிட்ட 13 கோரிக்கைகளை அரசு ஏற்க வேண்டும். இந்த போராட்டத்தில் நான் இறந்தால் மத்திய அரசுதான் அதற்கு பொறுப்பு. போராட்டங்கள் நடக்கும் இடத்தில் போலீசார் ஏதாவது செய்தால் அந்த பொறுப்பும் அரசின் மீதுதான் விழும் என்று எழுதியுள்ளார்.
ஜக்ஜித் சிங் தலேவால் நடத்தும் உண்ணாவிரதத்துக்கு ஆதரவாக அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள புலம்பெயர் இந்தியர்களும் ஒரு நாள் உண்ணாவிரதத்தை கடைபிடிக்க முடிவு செய்துள்ளனர்.
உண்ணாவிரதம் இருக்கும் தலேவால் 11 கிலோவுக்கும் அதிகமாக எடை குறைந்துள்ளார் என்றும் அவரது இரத்த சர்க்கரை அளவு ஏற்ற இறக்கமாக உள்ளது என்றும் அவருடன் இருக்கும் சக விவசாய தலைவர் தெரிந்தார். மருத்துவர்கள் அவரது உடல்நிலையை கண்காணித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
விவசாயிகளின் 13 அம்ச கோரிக்கைகளில், பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்எஸ்பி), கடன் தள்ளுபடி, விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம், மின் கட்டண உயர்வு, போராடிய விவசாயிகளுக்கு எதிரான போலீஸ் வழக்குகளை திரும்பப் பெறுதல் மற்றும் 2021 லக்கிம்பூர் கெரி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குதல் ஆகியவை அடங்கும்.
உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் உள்ள டிகுனியா அருகே உள்ள பன்பீர்பூர் கிராமத்தில் அக்டோபர் 3, 2021 அன்று விவசாயிகள் போராட்டத்தின்போது நடந்த கலவரத்தில் விபத்தில் எட்டு பேர் உயிரிழந்தனர், பத்து பேர் காயமடைந்தனர். அதில் போராட்டத்தில் ஈடுபட்ட நான்கு விவசாயிகள் மற்றும் பத்திரிகையாளர் ஒருவரும் அடங்குவர்.
- சாம்சங் ஊழியர்கள் 91 பேரின் பணி நீக்க உத்தரவையும் ரத்து செய்ய மனுவில் கோரிக்கை.
- மனு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்தது.
சாம்சங் ஊழியர்களின் உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் கருத்து தெரிவித்துள்ளது.
சாம்சங் நிறுவன ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதி கோரி காஞ்சிபுரம் சிஐடியு செயலாளர் முத்துக்குமார் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் முழக்கம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார்.
மேலும், இதில், சாம்சங் ஊழியர்கள் 91 பேரின் பணி நீக்க உத்தரவையும் ரத்து செய்ய மனுதாரர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த மனு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்தது.
இந்நிலையில், உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி வழங்க சட்டத்தில் அனுமதியில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது
மேலும், மனுவுக்கு காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணை நவம்பர் 21ம் தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- மத்திய அரசு கொண்டு வந்த 3 புதிய குற்றவியல் சட்டங்களும் ஜூலை 1 ஆம் தேதி நடைமுறைக்கு வந்தது.
- இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்திய தண்டனைச் சட்டம் (IPC) தற்போது பாரதீய நியாய சன்ஹிதா (BNS) என்ற சட்டமாக மாற்றப்பட்டுள்ளது. குற்றவியல் நடைமுறைச் சட்டத்திற்குப் பதிலாக (CrPC) பாரதீய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (BNSS) என்ற சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இந்திய சாட்சியச் சட்டம் (IE Act) பாரதீய சாக்ஷிய அதினியம் (BSA) என்ற சட்டமாக மாற்றப்பட்டுள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்த 3 புதிய குற்றவியல் சட்டங்களும் ஜூலை 1 ஆம் தேதி நடைமுறைக்கு வந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், 3 குற்றவியல் சட்டங்களை எதிர்த்து திமுக சட்டத்துறை சார்பில் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இப்போராட்டத்தில் அமைச்சர் துரைமுருகன், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
போராட்டத்தில் பேசிய துரைமுருகன், ''ஒன்றிய அரசு 3 சட்டங்களுக்கு பெயர் சூட்டும் விழா நடத்தியுள்ளது. பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா மற்றும் பாரதிய சாக்ஷிய அதினியம் என்று சட்டங்களுக்கு பெயர்கள் சூட்டப்பட்டிருக்கிறது. நாக்கில் தர்ப்பைப் புல்லை தேய்த்தாலும் இந்த வார்த்தைகள் வாயில் வராது. இந்த கொடுமை வேண்டாம் என்பதற்காகதான் ஆதியிலிருந்து இந்தியை நாம் எதிர்க்கிறோம்" என்று பேசினார்.
இதனையடுத்து பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், "பிரிட்டிஷ் காலனிய சட்டங்களை தூக்கி எறிவதாக சொல்லித்தான் இச்சட்டங்களை கொண்டு வந்திருக்கிறார்கள். உண்மையில் காலனிய சட்டங்களை இயற்றிய மெக்காலேவுக்கும் சர் ஜேம்ஸ் ஃபிட்ஸ்ஜேம்ஸ் ஸ்டீஃபன்ஸுக்கும் இவர்கள் அஞ்சலி செலுத்தியிருக்கிறார்கள். 90 முதல் 95 சதவிகிதம் வரை அந்தச் சட்டங்களிலிருந்து copy அடித்து இதில் ஒட்டி வைத்திருக்கிறார்கள்" என்று தெரிவித்தார்.
- கள்ளச்சாராயம் குடித்ததில் இதுவரை 63 போ் உயிாிழந்தனா்.
- கள்ளச்சாராய மரணங்களுக்கு நீதி கிடைக்கும் வரை அஇஅதிமுகவின் போராட்டம் தொடரும்.
கள்ளக்குறிச்சி கருணாபுரம், மாதவச்சோி, சேஷசமுத்திரம் ஆகிய பகுதிகளில் கள்ளச்சாராயம் குடித்ததில் இதுவரை 63 போ் உயிாிழந்தனா். இச்சம்பவம் தொடா்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
இந்நிலையில், கள்ளச்சாராய மரணங்கள் குறித்து CBI விசாரணை கோரி நாளை அதிமுக உண்ணாவிரத போராட்டம் அறிவித்துள்ளது.
இது சம்பந்தமாக தனது எக்ஸ் பக்கத்தில் எடப்பாடி பழனிச்சாமி பதிவிட்டுள்ளார். அதில், "கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் குறித்து நேர்மையான விவாதம் மறுக்கப்பட்டு, அஇஅதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டு இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பது அடிப்படை ஜனநாயகத்திற்கு விரோதமானது
எந்த நடவடிக்கையும் எடுக்காமல், மடைமாற்ற அரசியலால் கடந்துவிட முயற்சிக்கும் திமுக அரசிற்கு எனது கடும் கண்டனம்.
எனவே, கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் குறித்து சட்டமன்றத்தில் பேச அனுமதி வழங்காததைக் கண்டித்தும், கள்ளச்சாராய மரணங்கள் குறித்து CBI விசாரணை கோரியும் எனது தலைமையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் நாளை (27.06.2024- வியாழக்கிழமை) சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் அடையாள உண்ணாவிரத அறப்போராட்டம் மேற்கொள்ளவுள்ளோம்!
கள்ளச்சாராய மரணங்களுக்கு நீதி கிடைக்கும் வரை அஇஅதிமுகவின் போராட்டம் தொடரும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
- டெல்லி நீர்வளத்துறை அமைச்சர் அதிஷி கடந்த 21-ந்தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார்.
- ரத்த சர்க்கரை அளவு குறைந்ததால் அவசர சிகிச்சை பிரிவில் அதிஷிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
டெல்லியில் கடும் வெப்ப அலை நிலவி வருகிறது. அதனால் வரலாறு காணாத தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
அரியானா, இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களிலிருந்து தண்ணீர் சரியான முறையில் கொடுக்காததே டெல்லியில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுவதற்கு காரணம் என டெல்லி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதையடுத்து யமுனை ஆற்றிலிருந்து வரும் தண்ணீர் அளவை குறைக்கும் அரியானா அரசை கண்டித்து, டெல்லி நீர்வளத்துறை அமைச்சர் அதிஷி கடந்த 21-ந்தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்.
உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கி நேற்று 5-வது நாளை எட்டிய நிலையில் அதிஷியின் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது. இதையத்து அவர் டெல்லியில் லோக் நாயக் ஜெய் பிரகாஷ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ரத்த சர்க்கரை அளவு குறைந்ததால் அவசர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் டெல்லி அமைச்சர் அதிஷியை உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் இன்று சந்தித்து நலம் விசாரித்தார்.
- ஊழியர் சங்கம் சார்பில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
- போக்குவரத்து ஊழியர்கள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூரில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு காஞ்சிபுரம் மண்டல தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் சார்பில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
சி.ஐ.டி.யூ காஞ்சிபுரம் மண்டல துணைத் தலைவர் மாயக்கண்ணன் தலைமை தாங்கினார். திருவள்ளூர் முன்னாள் நகர மன்ற தலைவர் சுந்தர்ராஜன், சி.ஐ.டி.யூ மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஊதிய பேச்சு வார்த்தையை உடனடியாக தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் பண பலன், போக்குவரத்து படி, மருத்துவ காப்பீடு உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வுக்கான வேண்டும்.
வாரிசு வேலை, காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஒப்பந்த முறையை கைவிட வேண்டும் என்பது உட்பட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
இதில் கோயம்பேடு, திருவள்ளூர், திருத்தணி, பொன்னேரி, ஊத்துக்கோட்டை பணிமனையில் பணியாற்றும் போக்குவரத்து ஊழியர்கள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
- டெல்லிக்கு சொந்தமான தண்ணீரை 28 லட்சம் மக்களுக்கு பெற்றுத்தர வேண்டும் என்பதுதான் அவரது ஒரே கோரிக்கை.
- காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நிறுத்தப்பட்டாலும் பாராளுமன்றத்தில் குரல் எழுப்புவோம்.
ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
டெல்லியின் நீர்வளத்துறை அமைச்சர் அதிஷி கடந்த 5 நாட்களாக காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்.
டெல்லிக்கு சொந்தமான தண்ணீரை 28 லட்சம் மக்களுக்கு பெற்றுத்தர வேண்டும் என்பதுதான் அவரது ஒரே கோரிக்கை. அரியானா அரசு 613 எம்ஜிடி தண்ணீர் தர வேண்டும் என்பது ஒப்பந்தம். தேர்தலுக்கு பிறகு, 3 வாரங்களுக்கும் மேலாக, டெல்லிக்கு 100 எம்ஜிடி தண்ணீர் குறைவாகவே கிடைத்துள்ளது.
அதிஷி அரியானா அரசு, எல்ஜி சக்சேனா, மற்றும் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார். ஆனால் அவர் கேட்கவில்லை.
அதிஷி 5 நாட்கள் உண்ணாவிரதத்தில் இருந்தார். இதனால் அவரது உடல்நிலை மோசமடைந்தது. மருத்துவர்கள் உண்ணாவிரதத்தை நிறுத்தச் சொன்னார்கள். நேற்று இரவு அவரது உடல்நிலை மோசமடையத் தொடங்கியது. அவரது சர்க்கரை அளவு 43 ஆக இருந்தது. அவரது குறைந்த சர்க்கரை அளவு 36 ஆக இருந்தது. அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் இல்லையெனில் அவரை இழக்க நேரிடும் என்று டாக்டர்கள் பரிந்துரைத்தனர்.
இதனையடுத்து அதிஷி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் இன்னும் ICU-வில் சிகிச்சை பெற்று வருகிறார். டெல்லிக்கு தண்ணீர் திறந்துவிட கோரி நாங்கள் பிரதமருக்கும் கடிதம் அனுப்பி உள்ளோம். காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நிறுத்தப்பட்டாலும் பாராளுமன்றத்தில் குரல் எழுப்புவோம் என்று கூறினார்.
#WATCH | Delhi: AAP MP Sanjay Singh says, "Atishi was on a hunger strike since 5 days. Her health was deteriorating. Doctors had been asking her to break the strike. Her health started worsening yesterday night... Her sugar level was 43... Her lowest sugar level was 36. Doctors… pic.twitter.com/eoBSkhkw3n
— ANI (@ANI) June 25, 2024
- உடல்நிலையில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது.
- அதிஷியின் உடல் நிலை குறித்து மருத்துவர் புது தகவல்.
டெல்லியில் வரலாறு காணாத வெப்பம் காரணமாக கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக டெல்லிக்கு, அண்டை மாநிலமான அரியானா தண்ணீர் திறந்துவிடுகிறது. எனினும், நிர்ணயிக்கப்பட்ட அளவை விட குறைவான நீரை வழங்கி வருகிறது.
இதை எதிர்த்து அரியானா அரசு தண்ணீரை திறந்துவிட வலியுறுத்தி அமைச்சர் அதிஷி கடந்த 22 ஆம் தேதி முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வறுகிறார். இந்த நிலையில் அவரது உடல்நிலையில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
உண்ணாவிரதம் காரணமாக அதிஷியின் உடலில் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு மிக மோசமான அளவுக்கு குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அதிஷியின் உடல் நிலை குறித்து மருத்துவர் புது தகவல் தெரிவித்துள்ளார்.
மருத்துவமனைக்கு கொண்டுவரும் போது அதிஷியின் உடலில் சர்க்கரை அளவு மிகவும் குறைவாக இருந்தது. அவர் மயக்க நிலையில் இருந்தார், சோடியம் அளவும் குறைவாக இருந்தது. அவசர சிகிச்சை பிரிவில் உள்ள ஐ.சி.யூ.வில் அதிஷி அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு நீர்சத்து குறைபாடு ஏற்படுவதை தடுக்கும் திரவம் ஏற்றப்பட்டுள்ளது. தற்போது அவரின் உடல்நிலை சீராக உள்ளது. அவரது இரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக எடுக்கப்பட்டுள்ளன. அவற்றின் முடிவுகளை எதிர்நோக்கியுள்ளோம், என்று தெரிவித்தார்.