என் மலர்
நீங்கள் தேடியது "hunger strike"
- தூய்மை பணியாளர்களை பணி நிரந்தம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மீண்டும் பழைய நிலையில் மாநகராட்சியிலேயே பணி வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை மாநகராட்சி முன்பு கடந்த ஆகஸ்ட் மாதம் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்தினர்.
சென்னை மாநகராட்சி முன்பாக போராட்டம் நடத்துவதற்கு சென்னை ஐகோர்ட் தடை விதித்ததோடு, அவர்களை அந்த இடத்தில் இருந்து அகற்றவும் உத்தரவிட்டது.
சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகை முன்பு 13 நாட்களாக போராட்டம் நடத்திவந்த தூய்மைப் பணியாளர்களும் அவர்களுக்கு ஆதரவாக போராடியவர்களும் ஆகஸ்ட் 13-ந் தேதி நள்ளிரவில் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.
தூய்மைப் பணியாளர்கள் எதிர்த்தபோதும், அனைவரும் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டு திருமண மண்டபங்களிலும், சமூக நலக்கூடங்களிலும் அடைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
இதையடுத்து தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டத்தில் தூய்மைப் பணியாளர்களின் நலனுக்காக ஆறு சிறப்புத் திட்டங்களை நிறைவேற்ற முடிவு செய்திருப்பதாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
தூய்மைப் பணியாளர்களைப் பொறுத்தவரை, அடுத்தகட்டமாக அனுமதி பெற்ற இடத்தில் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தப்போவதாக உழைப்பாளர்கள் உரிமை இயக்கத்தின் பாரதி தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் சென்னை எழும்பூரில் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தூய்மை பணியாளர்களை பணி நிரந்தம் செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், மீண்டும் பழைய நிலையில் மாநகராட்சியிலேயே பணி வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.
மண்டலம் 5 மற்றும் 6-ஐ சேர்ந்த தூய்மை பணியாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
- மீனவர் பகுதியில் அதிகளவு கடல் அரிப்பு ஏற்பட்டு, கடல்நீர் ஊர் புகுந்து பாதிப்பு ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வந்தனர்.
- அரசு சார்பில் 2023-ல், ரூ.25 கோடி செலவில் கடலில் தூண்டில் வளைவு அமைக்க நிதியும் ஒதுக்கப்பட்டது.
மாமல்லபுரம்:
சென்னை குடிநீர் வாரியம் சார்பில் மாமல்லபுரம் அடுத்த நெம்மேலியில் ரூ.6078.40 கோடி மதிப்பீட்டில் நாளொன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் 3-வது ஆலையின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது.
இப்பணிகளால் அருகில் குடியிருக்கும் மீனவர் பகுதியில் அதிகளவு கடல் அரிப்பு ஏற்பட்டு, கடல்நீர் ஊர் புகுந்து பாதிப்பு ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வந்தனர்.
அரசு சார்பில் 2023-ல், ரூ.25 கோடி செலவில் கடலில் தூண்டில் வளைவு அமைக்க நிதியும் ஒதுக்கப்பட்டது. இன்று வரை பணிகள் ஏதும் தொடங்கவில்லை.
இந்த நிலையில் அப்பகுதியில் குடியிருக்கும் 150 மீனவர் குடும்பத்தினர் இன்று மீன்பிடிப்பை தவிர்த்தனர். பின்னர் தங்களின் உயிர் பாதுகாப்பிற்கு, அரசு விரைவில் தூண்டில் வளைவு அமைத்து தரவேண்டும் என அரசுக்கு கோரிக்கையை வைத்து, நெம்மேலி குப்பம் மீனவர் பஞ்சாயத்து சார்பில் 300-க்கும் மேற்பட்டோர், ஊருக்குள் நுழையும் சாலையில் அமர்ந்து ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
போராட்டம் நடத்தியவர்களிடம் திருப்போரூர் தாசில்தார் சரவணன், நெம்மேலி ஊராட்சி தலைவர் ரமணி சீமான் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
- கோவை, திருப்பூர் மாவட்டங்களில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது.
- கடந்த 22 நாட்களாக நடைபெற்று வரும் போராட்டம் காரணமாக ரூ.600 கோடிக்கு மேல் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
நீலாம்பூர்:
கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள சோமனூர், காரணம்பேட்டை, பல்லடம், மங்கலம், அவிநாசி மற்றும் தெக்கலூர் உள்ளிட்ட இடங்களில் விசைத்தறி தொழில் முக்கியத்துவம் வாய்ந்த தொழிலாக இருந்து வருகிறது.
இந்த பகுதியில் சுமார் ஒரு லட்சத்து 25 ஆயிரம் விசைத்தறிகள் மற்றும் 10 ஆயிரம் விசைத்தறி கூடங்கள் உள்ளன.
இந்த தொழில் மூலமாக நேரடியாகவும், மறைமுகமாவும் பல்லாயிரக்கணக்கானோர் பணியாற்றி வருகிறார்கள்.
இந்த நிலையில் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்கள், ஜவுளி உற்பத்தியாளர்களிடம் கூலி உயர்வு கேட்டும், சட்டப்பூ ர்வமாக அடுத்தடுத்த கூலிகளை அமல்படுத்தவும், மின் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வுக்கு தீர்வு காண வலியுறுத்தியும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதிகாரிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையில் சுமூகமான முடிவு எட்டப்படாத நிலையில் தொடர்ந்து போராட்டம் நடக்கிறது. இந்த நிலையில் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வலியுறுத்தி இன்று முதல் 15-ந் தேதி வரை 5 நாட்கள் விசைத்தறியாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்து இருந்தனர்.
அதன்படி கோவை, திருப்பூர் மாவட்டங்களில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது.
கோவை சோமனூரில் உள்ள யூனியன் வங்கி முன்பு இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதில், சோமனூர், அவிநாசி, தெக்கலூர், புதுப்பாளையம், பெருமாநல்லூர், கண்ணம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விசைத்தறியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்த போராட்டத்தில், 2022-ஆம் ஆண்டில் நிர்ணயிக்கப்பட்ட ஒப்பந்த கூலியில் மின் கட்டண உயர்வு மற்றும் விலைவாசி உயர்வைக் கணக்கில் கொண்டு புதிய கூலி உயர்வு வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
மேலும், ஜவுளி உற்பத்தியாளர்கள் ஒப்பந்த கூலி உயர்வை குறைத்து வழங்காத வகையில் சட்ட ரீதியான பாதுகாப்புடன் அமல்படுத்த வேண்டும் என்றும், மாநில, மாவட்ட நிர்வாகங்கள் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து விசைத்தறியாளர் பூபதி கூறும்போது, அனைத்து ஜவுளி உற்பத்தியாளர்களும் முத்தரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்று கூலியை உயர்த்தி வழங்க வேண்டும். கடந்த 22 நாட்களாக நடைபெற்று வரும் போராட்டம் காரணமாக ரூ.600 கோடிக்கு மேல் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான காடா துணிகள் தேக்கமடைந்துள்ளன என்றார்.
இன்று தொடங்கிய போராட்டமானது வருகிற 15-ந் தேதி வரை நடக்க உள்ளது.
- பட்ஜெட்டில் எதிர்பார்த்த அறிவிப்புகள் இல்லாதது ஏமாற்றத்தை கொடுக்கிறது.
- அரசு மவுனம் காத்தால், வருகிற 30-ந்தேதி அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து கூடி முடிவு செய்யப்படும்.
சென்னை:
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ தொடர்ந்து போராடி வருகிறது. சமீபத்திலும் போராட்டம் நடந்தது. அந்த போராட்டத்தின் தொடர்ச்சியாக மறியல் போராட்டம் மேற்கொள்ளப்போவதாக அறிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து சென்னை தலைமை செயலகத்தில், கோரிக்கைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. அந்த பேச்சுவார்த்தையின் முடிவில் சட்டசபை கூட்டத்தொடரில் பட்ஜெட் அறிவிப்பில், கோரிக்கைகள் தொடர்பான அறிவிப்பு இடம்பெறும் என்ற நம்பிக்கையில் மறியல் போராட்டத்தை ரத்துசெய்தனர்.
இந்தநிலையில் நேற்று மாலை ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மாயவன், சேகர், பார்த்தசாரதி ஆகியோர் தலைமையில் நடந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
அதன்படி, பட்ஜெட்டில் எதிர்பார்த்த அறிவிப்புகள் இல்லாதது ஏமாற்றத்தை கொடுக்கிறது. எனவே கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வருகிற 23-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும். அதன்பிறகும் அரசு மவுனம் காத்தால், வருகிற 30-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து கூடி முடிவு செய்யப்படும் என்பது போன்ற முடிவுகள் எடுக்கப்பட்டது.
இதேபோல், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'நீண்ட நாள் கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டம் 2004-2006 தொகுப்பூதிய பணிக்காலம், இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு, ஊக்க ஊதியத்தை பழைய முறைப்படி வழங்குதல், மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 100 சதவீத கட்டணமில்லா சிகிச்சை உறுதிப்படுத்துதல் போன்ற எதிர்பார்த்த அறிவிப்புகள் இல்லாதது ஏமாற்றம். இது மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது' என்று கூறியுள்ளார்.
- சுற்றுலா தளங்களில் சுகாதாரமான முறையில் கழிப்பறைகளை அமைத்து தர வேண்டும்.
- இந்த உண்ணாவிரத போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட டிரைவர்கள் கலந்து கொண்டனர்.
கோவை
கோவை சிவானந்தா காலனி டாடாபாத் பகுதியில், இன்று வாடகை வாகனங்கள் டிரைவர்கள் ஒரு நாள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் வாகன பர்மிட்டை பதிவிறக்கம் செய்வதை அரசு எளிமைப்படுத்த வேண்டும்.
வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் உள்ள அனைத்து பதிவு கட்டணங்களையும் 177 சதவீதம் உயர்த்துவதை தமிழக அரசு பரிசிலிக்க வேண்டும். பெட்ரோல் டீசல் விலை உயர்வை குறைத்து அதனை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வருவதற்கு மத்திய அரசை தமிழக அரசு பரிந்துரை செய்ய வேண்டும்.
மானிய விலையில் டீசல் வழங்குவதற்கு வழிவகை செய்து தர வேண்டும். சுற்றுலா தளங்களில் சுகாதாரமான முறையில் கழிப்பறைகளை அமைத்து தர வேண்டும்.
வாகனங்களை தடுத்து நிறுத்தி டிரைவர்களுக்கு அபராதம் என்ற பெயரில் ரூ.5 ஆயிரம், 10 ஆயிரம் வசூலிப்பதை திரும்ப பெற வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். இந்த உண்ணாவிரத போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட டிரைவர்கள் கலந்து கொண்டனர்.
- நிதி நெருக்கடி காரணமாக தனி அலுவலர் மற்றும் தொடர்பு அலுவலர் உள்பட 634 பேரை தற்போது பதவி இறக்கம் செய்துள்ளனர்.
- பல்கலைக்கழக வளாகத்தின் முன்பு சாலை மறியல் மற்றும் முற்றுகையில் ஈடுபட்டனர்.
கடலூர்:
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நிதி நெருக்கடி காரணமாக தனி அலுவர் மற்றும் தொடர்பு அலுவலர் உள்பட 634 பேரை தற்போது பதவி இறக்கம் செய்துள்ளனர். இதனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னதாக அலுவலர்கள் பல்கலைக்கழக வளாகத்தின் முன்பு சாலை மறியல் மற்றும் முற்றுகையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் தற்போது தனியார் மற்றும் தொடர்பு அலுவலர்கள் பதவி இறக்கம் உள்ளிட்ட5 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பூமா கோவில் அருகே 75 பெண்கள் உள்பட 300 தனியார் அலுவலர்கள் 1 நாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த சிதம்பரம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ரகுபதி போலீசார் உத்தரவின் பேரில் 30-க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாத வகையில் பாதுகாப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அந்த இடம் பெரும் பரபரப்பாக உள்ளது.
- சத்தியமூர்த்தி பவனில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவம் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி முன்னிலையில் நடைபெற்றது தான் எங்களை போன்ற மூத்த நிர்வாகிகளை கலங்க வைத்துள்ளது.
- நடவடிக்கை எடுக்காவிட்டால் வருகிற 30-ந் தேதி நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டத்ைத சேர்ந்த காங்கிரஸ் தொண்டர்கள் அகிம்சை வழியில் ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்துவோம் என்று அறிவித்திருந்தோம்.
நெல்லை:
தமிழக காங்கிரஸ் விவசாய பிரிவு மாநில பொதுச்செயலாளர் ஆர்.எஸ். ராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சத்தியமூர்த்தி பவனில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்ப ட்ட சம்பவம் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி முன்னிலையில் நடைபெற்றது தான் எங்களை போன்ற மூத்த நிர்வாகிகளை கலங்க வைத்துள்ளது.
இனி இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கவும், நடைபெற்ற இந்த சம்பவத்திற்கு காரணமாகவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், அவர்கள் பதவி விலக வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தும் அகில இந்திய காங்கிரஸ் தலைமையை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம்.
உண்ணாவிரத போராட்டம்
நடவடிக்கை எடுக்காவிட்டால் வருகிற 30-ந் தேதி நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டத்ைத சேர்ந்த காங்கிரஸ் தொண்டர்கள் அகிம்சை வழியில் ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்துவோம் என்று அறிவித்திருந்தோம்.
இதைத்தொ டர்ந்து நடைபெற்ற சம்பவம் குறித்து விசாரிக்க ஒழுங்கு நடவடிக்கை குழு சார்பில் நடவடிக்கை மேற்கொ ள்ளப்பட்டது. ஆனால் அதுவும் சரியாக நடைபெறாமல் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் மாநில பொருளாளர் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. மீது மட்டும் நடவடிக்கை எடுத்து நீதி சாய்க்கப்பட்டது. இந்த குழு விசாரணை நடத்த கூடாது என்றும் டெல்லியில் இருந்து சிறப்பு குழு வந்துதான் விசா ரணை நடத்தப்பட வேண்டும் என்றும் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. மீது எந்த நடவடக்கையும் எடு க்க கூடாது என்றும் நாங்கள் வலியுறுத்தினோம்.
தினேஷ் குண்டுராவ்
இது தொடர்பாக மேல்மட்ட தலைவர்களை தொடர்பு கொண்டு தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம்.
இல்லையென்றால் உண்ணாவிரத போராட்டம் நடத்துேவாம் என்று கூறி வந்ேதாம். இந்நிலையில் தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் மாநில பொருளாளர் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. மீது எடுக்கப்பட்ட தற்காலிக நீக்கம் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார்.
போராட்டம் வாபஸ்
இந்த பிரச்சினையை சுமூகமாக முடித்த காங்கிரஸ் தமிழக மேலிட பொறு ப்பாளர் தினேஷ் குண்டுராவ் வேண்டுகோளுக்கு இணங்க காங்கிரஸ் விவசாய பிரிவு சார்பில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் 30-ந் தேதி நடைபெற இருந்த உண்ணாவிரத போராட்டம் ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர் எட்வர்ட் ராஜதுரை தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடத்த போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
- சாத்தான்குளத்தில் மட்டும் குடிநீர் கட்டணம் கூடுதலாக முன்வைக்கப்பட்டுள்ளதாக எட்வர்ட் ராஜதுரை கூறினார்.
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் பேரூராட்சி பகுதியில் புதிய குடிநீர் இணைப்பு திட்டத்திற்காக வைப்புத் தொகை ரூ. 8,100 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
உண்ணாவிரதம்
வைப்புத் தொகை கூடுதலாக உள்ளதாகவும் இதனை ரத்து செய்ய வேண்டும் என கோரி முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர் எட்வர்ட் ராஜதுரை தலைமையில் சாத்தான்குளம் வாசகசாலை பஜாரில் உண்ணாவிரத போராட்டம் நடத்த போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
போலீசார் அனுமதி மறுத்ததால் தடையை மீறி வாசக சாலை பஜாரில் உண்ணாவிரதம் இருந்தனர். இதைத்தொடர்ந்து அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக எட்வர்ட் ராஜதுரை உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். அப்போது எட்வர்ட் ராஜதுரை போலீசாருடன் வாக்குவாத்த்தில் ஈடுபட்டார். பின்னர் அவர் கூறியதாவது:-
கூடுதல் கட்டணம் புகார்
சாத்தான்குளத்தில் மட்டும் தான் குடிநீர் கட்டணம் கூடுதலாக முன்வைக்கப்பட்டு ள்ளது, உடன்குடி, நாசரேத், தெந்திருப்பேரை பேரூராட்சியில் குடிநீர் வைப்புத் கட்டணம் குறைவாக உள்ளது.
எனவே கூடுதல் குடிநீர் கட்டணம் ரூ. 8 ஆயிரத்தை ரத்து செய்ய கோரி தீர்மானம் நிறைவேற்றி கலெக்டருக்கு அனுப்ப வேண்டும். கட்டணத்தை ரத்து செய்யும் வரை போராட்டம் நடத்துவேன் என்றார்.
- அரசின் கலை விழா 2 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு நடைபெறும் நிலையில் பல மாநில கலைஞர்கள் ஏனாமிற்கு வந்துள்ளனர்.
- கடை அடைப்பு போராட்டம் கலைஞர்களையும், மக்களின் இயல்பு வாழ்க்கையையும் பாதித்துள்ளது.
புதுச்சேரி:
புதுவை ஏனாம் பிராந்தியம் ஆந்திர மாநிலம் கோதாவரி ஆற்று பகுதியில் உள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் தட்டாஞ்சாவடி மற்றும் ஏனாம் தொகுதிகளில் முதல்-அமைச்சர் ரங்கசாமி போட்டியிட்டார்.
ஏனாமில் அவர் தோல்வியுற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் கொல்ல பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக் வெற்றி பெற்றார். இருப்பினும் அவர் பா.ஜனதா-என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்.
இந்த நிலையில் அவர் கடந்த மாதம் 7-ந் தேதி சட்டமன்றம் வளாகத்தில் திடீர் தர்ணாவில் ஈடுபட்டார். அவருடன் முதல்-அமைச்சர் ரங்கசாமி பேச்சுவார்த்தை நடத்தி 15 கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்றுவதாக உறுதி அளித்தார்.
இந்த கோரிக்கைகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. இதற்கிடையே ஏனாம் எம்.எல்.ஏ. கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக் முதல்-அமைச்சர் ரங்கசாமி குறித்து அவதூறாக பேசியதாக சமூகவலைதளத்தில் பரவியது. இதனால் கொதித்தெழுந்த புதுவை என்.ஆர். காங்கிரசார் ஏனாம் எம்.எல்.ஏ.வை கண்டித்து பல்வேறு இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மேலும் முதல்-அமைச்சர் ரங்கசாமியை அவதூறாக பேசிய ஏனாம் எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்க கோரி அரசு கொறடா ஏ.கே.டி. ஆறுமுகம் தலைமையில் என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகர் ஏம்பலம் செல்வத்திடமும், போலீஸ் டி.ஜி.பி.யிடமும் மனு அளித்தனர்.
இன்றும் என்.ஆர். காங்கிரசார் ஏனாம் எம்.எல்.ஏ.வை கண்டித்து புதுவையில் பல்வேறு இடங்களில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே கோரிக்கைகளை வலியுறுத்தியும் முதல்-அமைச்சரை கண்டித்தும் நேற்று ஸ்ரீநிவாஸ் அசோக் எம்.எல்.ஏ. மண்டல அதிகாரி அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்.
மேலும் ஏனாமில் அமைச்சர் லட்சுமி நாராயணன் தொடங்கி வைத்த அரசின் 19-வது ஆண்டு கலை விழாவை எம்.எல்.ஏ. கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக் புறக்கணித்தார்.
இன்று 2-வது நாளாக உண்ணாவிரதம் தொடர்ந்தது. இன்று ஏனாமில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என ஸ்ரீநிவாஸ் அசோக் எம்.எல்.ஏ. அறிவித்திருந்தார். இதன்படி இன்று ஏனாமில் கடையடைப்பு போராட்டம் நடந்தது. ஏனாமில் காலை முதல் அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன.
- பணி நிரந்தரம் மற்றும் ஊதிய உயர்வு கோரி உண்ணாவிரதம்
- 108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் இன்று காலை போராட்டம்
புதுச்சேரி:
பணி நிரந்தரம் மற்றும் ஊதிய உயர்வு கோரி, காரைக்காலில் 108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் இன்று காலை உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
- புதிதாக கோவில் கட்ட கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் துணை சபாநாயகர் ராஜவேலு தலைமையில் பூமி பூஜை செய்யப்பட்டது.
- நெட்டப்பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் கதிரேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
புதுச்சேரி:
நெட்டப்பாக்கம் அருகே கரியமாணிக்கம் புதுக்காலனியில் பழமை வாய்ந்த மாரியம்மன் கோவில் உள்ளது.
அந்த கோவிலை இடித்து விட்டு புதிதாக கோவில் கட்ட கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் துணை சபாநாயகர் ராஜவேலு தலைமையில் பூமி பூஜை செய்யப்பட்டது.
தற்போது பழைய கோவிலை இடித்து விட்டு புதியதாக கோவில் கட்டுவதற்கான ஆயத்த ஏற்பாடுகள் நடந்து வந்தன. ஆனால் புதிய கோவில் கட்டுவதற்கு கட்டுமான பொருட்களை எடுத்து செல்ல சாலை வசதி இல்லாததால் கோவில் கட்டும் பணியில் இடையூறு ஏற்பட்டது.
இந்த நிலையில் கோவில் கட்டுவதற்கு சாலை வசதி இல்லாததை கண்டித்து கரியமாணிக்கம் புதுகாலனி மக்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள் கரியமாணிக்கம்-புதுவை செல்லும் மெயின் ரோட்டில் இன்று காலை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட னர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் நெட்டப்பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் கதிரேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆனால் அதனை அவர்கள் ஏற்கவில்லை. இந்த பிரச்சினையில் தொகுதி எம்.எல்.ஏ.வான துணை சபாநாயகர் ராஜவேலு தலையிட்டு கோவிலுக்கு செல்ல சாலையை உருவாக்கி தரும்வரை தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவதாக கூறி அவர்கள் தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதனால் அப்பகுதியில் தொடர்ந்து பதட்டம் நிலவி வருகிறது. அங்கு போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
- முத்துக்குமார் கடந்த வாரம் கலெக்டர் அலுவலகம் அருகே ஒரு கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
- இந்நிலையில் ராஜேஷ் என்பவரின் தம்பி ரமேஷ் உள்பட 5 பேர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி சோரீஸ்புரத்தை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 36). இவர் தூத்துக்குடி கோர்ட்டில் வக்கீலாக பணியாற்றி வந்தார். இவர் கடந்த வாரம் கலெக்டர் அலுவலகம் அருகே ஒரு கும்பலால் வெட்டி கொலை செய்யப் பட்டார்.
இதனை கண்டித்து தூத்துக்குடி வக்கீல்கள் சங்கம் சார்பில் இன்று நீதிமன்ற பணிகளை புறக்கணித்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட னர். இதில் தூத்துக்குடியை சேர்ந்த ஏராளமான வக்கீல்கள் கலந்து கொண்டனர்.
இதற்கிடையே வக்கீல் முத்துக்குமார் கொலை வழக்கு தொடர்பாக ராஜேஷ் உள்ளிட்ட 13 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வந்தனர்.
காவலில் எடுத்து விசாரணை
இந்நிலையில் ராஜேஷ் என்பவரின் தம்பி ரமேஷ் உள்பட 5 பேர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.
இதில் ரமேசை போலீஸ் காவலில் எடுக்க கோர்ட்டில் போலீசார் அனுமதி கேட்டனர். கோர்ட்டு அனுமதி அளித்ததை தொடர்ந்து ரூரல் டி.எஸ்.பி.சுரேஷ் தலைமையில் இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் ரமேசை காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






